கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க மூலிகை வாசம். உச்சிக் கிளையில் அடைந்து கிடக்கிற தேனடை முழுக்க என் மலையின் இரகசியம். அந்திப்பொழுதில் கூடு விரையும் பறவையின் கீச்சொலிகள் என் மலையின் அன்றைய முனகல்கள். உதிரும் இலைகளின் நிசப்தம் எனதிந்த மலையின் […]
கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு. -கோவிந்த் பகவான்
ஆர் வத்ஸலா அலுத்து தான் போய் விட்டது எனக்கு ஆண்டுகள் ஆகியும் தினமும் ஞாபகக் குப்பையை கிளறி என் மனம் அவன் தொடர்பான ஏதாவது ஒரு சோக சம்பவத்தை நினைவு கூறுவது என் செய்வேன்? அதை தடுக்க முடியவில்லையே! இன்றும் அப்படித்தான் பல் ஒன்று சற்று வலித்ததும் நினைவுக்கு வந்து விட்டது இன்னொரு குப்பை சம்பவம் அவனுடன் வாழ்ந்த நாட்களில் ஒரு முறை பல் வலி பொறுக்க முடியாமல் நான் அழுத சப்தம் கேட்டு பக்கத்து வீட்டு […]
ஆர் வத்ஸலா பல்லியை நம்பி வாழ்கிறான் அவன் ஏதோ ஒரு நப்பாசையில் முன்பு அப்படி இல்லை காத்துக் கொண்டிருக்கிறான் என்றாவது அது தன் தலையில் விழும் என்று உச்சந்தலையில் விழுவது அசாத்தியம் ஆகவே இரண்டாம் பட்சமாக நெற்றியில் விழலாம் எந்த பாகமும் சரி சாஸ்திரம் எல்லாவற்றிலும் கொஞ்சம் முன்பின் தானே பலிக்கிறது மனைவி வருகிறாள் தினமொரு முறை கண்ணீர் வடிக்க மகன் அவ்வப்போது ஆயாசத்துடன் அவனுக்கு பணி பளுவாம் மகளுக்கு மனசு தாங்க முடியாததால் மருமகன் […]
வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத் தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும் இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண். கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை காகம் அறியாது. வாலால் அடிக்க இயலாமல் முடிந்தமட்டும் தலையை ஆட்டிப் பார்க்கிறது காளை. விலகி விலகிப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொத்தி வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது காக்கை.
வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே. அருகருகே தோளுரசி நடக்கும்போது இருவரும் கைகள் கலந்தும் கலக்காமலும் போனதையும் கவிதையாக்கி இருக்கிறாய். ஆனால் கல்லிலிருந்து தலை நீட்ட மறுக்கும் பாம்புக் குட்டியாய் நீ பரிதவிப்பது தெரிகிறது. நீ ஒப்புக் கொள்ளாவிடினும் உன் உள்மன […]
கோவிந்த் பகவான் பொம்மைகளைக் கொண்டாடி மகிழும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது நாம் நம்மீது கொண்டது அழுக்கடர்ந்து சட்டை கிழிந்தலையும் பைத்தியத் தனமாய் இருக்கிறது காலம் நம்மீது கொண்டது நான் உன்னை அன்பு செய்கிறேன் என பகிரியிலும் உரையாடல்களிலும் எவ்வளவு அபத்தமாய் சொல்லியிருக்கிறேன் நீயில்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதென நான் சொன்னதை இப்போது நீ நினைத்திருந்தால் ஏளனமாய் சிரிப்பாய் தானே அதனதன் போக்கில் காலத்தை நாம் பழிவாங்கியது போல் அதுவும் நம்மைப் பழி கொண்டது. […]
கோவிந்த் பகவான் நீங்கள் யாரென்றே தெரியாத என்னிடம் தானாய் வந்து கைக்குலுக்கி உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர் சுய புராணத்தை புகழ விட்டீர் தோள்மீது கை போட்டு உடன் வந்தீர் சூடாய் தேநீர்ப்பருக கூட்டிச்சென்றீர் கோப்பையின் வெதுவெதுப்பாய்ப் பேசத்தொடங்கினீர் இடது கையின் இரண்டு விரல்களுக்கிடையில் புகைச் சுருட்டை புகைத்துத் தள்ளினீர் எதற்கும் நினைவாய் இருக்கட்டுமேயென சிரித்த முகத்துடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டீர் தூரத்தில் யாரோ காணத்தெரிந்ததும் கைத்தட்டி இருக்கச்சொன்னீர் இதோ வருகிறேன் என ஓடிப்போய் கைக்குலுக்கினீர் பழைய பாக்கி சொச்சத்துடன் […]
ஆதியோகி நிழல்களைப்பாதிப்பதேயில்லை,நிஜங்களின்உணர்வுகள்…!***நிர்வாணம் என்கிறஒற்றை நிஜத்தைமறைப்பதற்குத்தான்விதவிதமாய்எத்தனை ஒப்பனைகள்…!***என்னதான் கடந்துவந்துவிட்ட போதிலும்அவ்வப்போதுஉணர்வுகளின் ஊடாய்முகம் காட்டி விட்டுத்தான்போகின்றன,முந்தைய பல பரிமாணங்கள்…! – ஆதியோகி +++++++++++++++++++++++
கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள். -கோவிந்த் பகவான்