ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்

This entry is part 8 of 36 in the series 18 மார்ச் 2012

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு […]

ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘

This entry is part 4 of 36 in the series 18 மார்ச் 2012

தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘ திம் ‘என்று இருக்கும். அப்புறம் கலக்கும். அப்படி இருக்கிறது படம். ‘ காக்க காக்க ‘ வெற்றிக்குப் பிறகு, போலீஸ் என்கவுண்டர் கதைகள், புற்றீசல் போல் வரத் தொடங்கி விட்டன. கௌதம் மேனனே மீண்டும் […]

செல்வாவின் ‘ நாங்க ‘

This entry is part 23 of 35 in the series 11 மார்ச் 2012

அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்? 1985 கல்லூரிக்கால நண்பர்கள். பாஷா, தயா, சந்துரு, பாலா, பாண்டி என்பது போன்ற அந்தக் காலகட்ட பெயர்கள். அவர்களின் காதலிகள். ரெயில்வே வேலைக்காக பாடகனாகும் ஆசையை தியாகம் செய்யும் ஒருவன். அவன் ஆசையை ஈடு செய்ய […]

தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்

This entry is part 13 of 35 in the series 11 மார்ச் 2012

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘ கீழத்தெரு தலித்துகளால் செருப்பு போட முடியாத அவலம். மேட்டுத்தெரு வாசிகளின் அதிகாரம், அகங்காரம். கதை நாயகன் செருப்பு போட முடியாத வெறுப்பில், கோயில் வாசலில் கிடக்கும் செருப்புகளை, யாரும் பார்க்காத போது லவட்டி, பொட்டல் காட்டில் திசைக்கொன்றாய் […]

ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )

This entry is part 9 of 35 in the series 11 மார்ச் 2012

சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம். கொஞ்சம் வேர்வுல்ப், கொஞ்சம் கிங்காங், எழுபதுகளில் காட்டப்பட்ட கிராமம், பெல் பாட்டம், பியட் கார், சின்ன வயது ஹாரிஸ் ஜெயராஜ் போல ஒருவன், சின்ன வயது மனோபாலா போல ஒருவன், அதீத மேக்கப்புடன் ஒரு நடிகை, மேக்கப்பே இல்லாமல் ஒரு நடிகை, பாக்யராஜ் பாணி பாடல்கள், ஹிட்ச்காக் பின்னணி இசை. இதையெல்லாம் மிக்சியில் போட்டுக் கலக்கினால், மொக்கையாக ஒரு படம் வரும். […]

பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .

This entry is part 8 of 35 in the series 11 மார்ச் 2012

எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. அவர் அதிகம் உலகத் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். நன்றாக ஊதியம் வரக்கூடிய வங்கி வேலையை விட்டு விட்டு, புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ‘ என்று சற்று விசித்திரமான தலைப்பு கொண்ட புத்தகத்தை, அவர் வெளியிட முயன்று கொண்டிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட, இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் […]

காதலில் கதைப்பது எப்படி ?!

This entry is part 41 of 45 in the series 4 மார்ச் 2012

படத்துல வர்ற ஒவ்வொருத்தரும் ஆயிரம் பக்கம் வசனம் பேசறது தான் செமசொதப்பலா இருக்கு,ஒரு வேள ஜெயமோகன் தான் வசனம் எழுதுனாரோ படத்துக்கு..?  இத எழுதினவுடனே என்னால சிரிப்ப அடக்கவேமுடியல, கொஞ்சம் இருங்க , அடுத்த பாராவுக்கு கொஞ்ச நேரம் ஆகும் எனக்கு வர்றதுக்கு.. :-) அமலா பாலின் முடிக்கற்றைகள் முன் நெற்றியில் கண்களை மறைத்துக்கொண்டு எப்போதும் விழுந்து கிடந்தாலும் அவர் சித்தார்த்தை சீரியஸாக பார்த்து லவ் பண்ணத்தான் செய்கிறார். ஒரு இடத்துல கூட தன்னோட முடிக்கற்றைகளை […]

வசந்தபாலனின் ‘ அரவான் ‘

This entry is part 28 of 45 in the series 4 மார்ச் 2012

வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம். கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், மதுரைக் கோட்டை, காவானிகாவல் என்று பழக்கத்தில் இல்லாத பெயர்களில் ஊர்கள். கதை நடைபெறும் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னராட்சிக் காலம். கொம்புலி ( பசுபதி ) கள்ளர்களின் தலைவன். வரிப்புலி ( ஆதி ) காவல்காரனாக இருந்து கள்ளனாக மாறியவன். ராணியின் வைர அட்டிகையை, தனி ஒரு ஆளாக திருடியிருக்கும் வரிப்புலியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் […]

கன்யாகுமரியின் குற்றாலம்

This entry is part 21 of 45 in the series 4 மார்ச் 2012

நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் படையில், அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ‘ மன்னவன் வந்தானடி ‘ கல்யாணி என்று படித்ததாக ஞாபகம். பூபாளம் உதயத்திற்கும், முகாரி சோகத்திற்குமான ராகங் கள் என்கிற அளவில் இருக்கிறது எனது இசை அறிவு. சின்ன வயதில் ஒற்றைத் தந்தியில் கொட்டாங்கச்சி பிடிலில் ‘ அன்று ஊமைப் பெண்ணல்லோ ‘ வைத் திரும்பத்திரும்ப வாசித்த ரோட்டோர […]

வியாசனின் ‘ காதல் பாதை ‘

This entry is part 19 of 45 in the series 4 மார்ச் 2012

பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். முடிச்சுகளாகப் போட்டு, அவிழ்க்க முடியாமல் திணறும் இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வியாசனுக்கு முடிச்சுகளே இல்லை அவிழ்க்க. எல்லாம் அம்மன் கோயில் வேப்ப மரம்போல, ஏராளமான கயிறுகள். நேர்ந்து கொண்டு கட்டிய கயிறுகள் என்ன ஆயிற்று என்று எந்த பக்தையும் மரத்தைப் போய் பார்ப்பதில்லை. அப்படியே இயக்குனரும். சாலையில் பங்க் வைத்து, செருப்பு தைக்கும் தனசேகர் […]