தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணைக் கமிஷனர்  உள்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.   வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான் போலும். சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகாரத்தைத் […]

கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

மணி.கணேசன் அக்கால மகளிர் அறிவிலும்,உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகவே விளங்கி இருந்தனர்.பெண் மீதான உடைமைச்சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடும் பட்சத்தில் அவள் அவளது தாய்,தந்தை,உடன்பிறந்தோர் மற்றும் உற்றார், உறவினர்களால் அலர் தூற்றப்பட்டு இற்செறிப்பிற்கு ஆட்பட்டுத் தவித்துப் போனாள். நூழை_நுழையும் மடமகன் யார்கொல்?என்று அன்னை புழையும் அடைத்தாள் கதவு (59:2-4) இவ்வாறாக,கதவில் தென்படும் சிறுதுவாரத்தையும் மூடி கடுஞ்சொல் கூறி கடுங்காவலுக்கு உட்படுத்திட்டப் போதிலும் பெண்ணானவள் தமக்குரிய துணையைத் தாமே தேர்ந்து தன்னுடைய விருப்பத்தினைச் சுதந்திரமாக வெளியிடும் திறம் பெற்றிருந்தாள் என்பது […]

நீங்காத நினைவுகள் – 38

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட  அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான அறிமுகமன்று. கடிதம் வாயிலாகத்தான். அவரது கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியதற்கு அவர் மிகுந்த அன்புடன் பதில் எழுதியிருந்தார். மிகப் பிரபலமான பெரியவர் பதில் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி தெரிவித்த பதில் கடிதமாக மட்டுமின்றி, அவரும் சில […]

திண்ணையின் இலக்கியத் தடம் -26

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110610&edition_id=20031106&format=html ) திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்- எச். பீர் முகம்மது- இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷீஆ) நவீனப் போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆராயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டரீதியான கண்ணோட்டம் உடையவை. […]

நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

  காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், […]

தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்   கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com):   கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் […]

பெரியவன் என்பவன்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் […]

தினம் என் பயணங்கள் – 8

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தைக் கற்றுக்கொண்டேன். Fantasy –[மனப்புனைவு] கற்பனை  என்பது தான் அது. இந்த வார்த்தையைக் கூகுள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.   அனுதினமும் புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டால் புத்துணர்ச்சியோடு இருப்போம் என்று என் நண்பர் சொல்வார். இதை நான் உணர்ந்ததும் உண்டு நாம் கற்றுக் கொள்ளத் தலைப்படும் போது நம் கவலைகளுக்காக கவலைப்பட நேரம் இருக்காது. […]

திண்ணையின் இலக்கியத்தடம் – 25

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- அக்கினிபுத்திரன் – சிங்கப்பூர் – (பாய்ஸ் படம் போன்ற) ஒரு மஞ்சளை சங்கரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309049&edition_id=20030904&format=html ) கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் – சி.ஜெயபாரதன் […]

தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

            வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது. தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் […]