ஒன்றுகூடல்

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

                                 சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ” டைகர் ஏர்வேஸ் ” விமானம் இரவு பத்து மணிக்கு புறப்பட்டது. மனைவியும் நானும் ஹைதராபாத் செல்கிறோம். எங்களைப்போல் இன்னும் முப்பது ஜோடிகள் உலகின் பல நாடுகளிலிருந்து புறப்பட்டுள்ளனர் – ஹைதராபாத் நோக்கி. அவர்கள் என்னுடைய மருத்துவக் கல்லூரியின் வகுப்புத் தோழர்களும் தோழியருமே. ஆச்சரியமாக உள்ளதா? நாங்கள் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் வருடம் முதலாம் வருட எம். பி. பி . எஸ். வகுப்பில் […]

பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

சிறுகதை, நாவல் வடிவங்களைக் கையாளும் பெருமாள் முருகன் (1966) தந்துள்ள மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் ‘நீர் மிதக்கும் கண்கள்’.  இதில் 52 கவிதைகள் உள்ளன.  இவற்றுள் சில காலச்சுவடு, தீராநதி, கவிதாசரண், குதிரைவீரன் பயணம், உயிர்மை, உலகத்தமிழ் . காம் ஆகிய இதழ்களில் பிரசுரமானவைஃ வாழ்க்கை அனுபவங்கள் மொழியில் கிடந்து ஊறிக் கவிகைளாய் வெளிவந்துள்ளன.  வுpத்தியாசமான கருப்பொருட்கள் பாடு பொருளாகியுள்ளன.  புதிய சிந்தனை, கோட்பாட்டுத்தாக்கம் எனக் கவிதைப் பரப்பு விரிகிறது. ‘அப்பாவின் வேலி’ வித்தியாசமானது ; பாசயிழைகள் […]

டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

க.சுதாகர் டாக்ஸி டிரைவர் , திரு.ஆனந்த் ராகவ் பல இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு.. பல கதைகள் என்பதால் வேறு சுவை, வேறு தளங்கள் என்றாலும் அடியோடும் மனித உணர்வுகள், உறவுகளின் இழைகளை அவர் நன்கறிந்திருக்கிறார். கதை என்ற பெயரில் அவர் இழைகளை மேலும் சிக்கலாக்கவில்லை. மாறாக இயற்கையாக அவை பின்னிக்கொள்வதை வெகு இயல்பாக, உறுத்தாத வண்ணம் நம்மை அனுபவிக்க விடுகிறார். இரு சாரைப்பாம்புகள் இணைந்து நெளிவதை தொலைவிலிருந்து வியப்பது போன்ற உணர்வு. அபத்த உணர்வுகள், அனுமானங்களை […]

விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி – 01 நூல் அறிமுகம் பக்தியை ஊட்டும் நூலாகத் தோன்றிய தூது இலக்கியம் பின்னர் சிற்றின்பச் சுவையைக் கொடுக்கும் தூது இலக்கியமாக மாறியது. பக்தி இலக்கியங்களில் நாயகன் நாயகி பாவம் என்ற நிலையிலிருந்து மாறி. கி.பி  16-ம் நூற்றாண்டில் சிற்றின்பச் சுவையைப் புலவர்கள் கலந்தார்கள். இந்தக் காதல் சுவை காலப்போக்கில் காமச் சுவைiயாக மாறத் தொடங்கியதால் தூது விடும் பொருள்கள் அஃறிணையிலிருந்து […]

அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான். இதைத் “தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்” என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு […]

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்  மருகோனே   பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்  (அசோகவனத்தில்) (சீதாபிராட்டியை) சிறை வைத்தபோது,  அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமபிரான்.   அந்த ராமபிரானின் மருமகன்,   ராமாயண காவ்யத்தை வால்மீகி முனிவர் உரைத்தபடி என் சென்னியிலிருத்த இறைஞ்சுகிறேன்.     […]

முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

  புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன் வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு […]

திண்ணையின் இலக்கியத் தடம் -16

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி தந்துள்ளார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203022&edition_id=20020302&format=html ) மதக் கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது – ரிச்சர்ட் டாக்கின்ஸ்- தி இன்டிபென்டென்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம்- மதக் கல்விக்கு அரசின் ஆதரவு கூடாது. மதத்தின் பெயரால் திறக்கப் படும் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தரக் கூடாது. […]

அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

பேரா. க.பஞ்சாங்கம் மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள். ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற நூல் எட்வர்டு ஸெய்த்(1935-2003) எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பாகவும், அவரைக் குறித்து நினைவுக் […]

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

– ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்   குறுநாவல் – அம்மாவின் ரகசியம் ஆசிரியர் – சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம் விலை – ரூ 55   மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் […]