புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன் வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு […]
மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி தந்துள்ளார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203022&edition_id=20020302&format=html ) மதக் கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது – ரிச்சர்ட் டாக்கின்ஸ்- தி இன்டிபென்டென்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம்- மதக் கல்விக்கு அரசின் ஆதரவு கூடாது. மதத்தின் பெயரால் திறக்கப் படும் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தரக் கூடாது. […]
பேரா. க.பஞ்சாங்கம் மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள். ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற நூல் எட்வர்டு ஸெய்த்(1935-2003) எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பாகவும், அவரைக் குறித்து நினைவுக் […]
– ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ் குறுநாவல் – அம்மாவின் ரகசியம் ஆசிரியர் – சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம் விலை – ரூ 55 மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் […]
ஜனவரி 6 2002 அரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html ) XXX தொல்காப்பியம் -ஜெயமோகன் நா.விவேகானந்தன் என்னும் ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை ஆராய்ந்து அது ஆண் பெண் உறவு பற்றிய காமரசம் மிகுந்த நூல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்கு பல ‘தமிழறிஞர்கள்’ வாழ்த்துரை வேறு எழுதி இருக்கிறார்கள். […]
தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப் பித்தனின் ’ சாப விமோசனம் ‘ தொடங்கி இம்முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் இது நவீன இலக்கியப் படைப்பாளிக்கு பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. அந்தச் சவாலில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் […]
முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர,; பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர் சமய வழிபாடுகளில் சிறசில மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.கடவுளர்கள் மற்றும் கடவுளர்களுக்கான அமைப்பிட வரையறைகளில் வகுக்கப்பட்டுள்ள ஆகம சட்டங்களின் இறுக்கம் வழிபாட்டளவில் சற்று நெகிழ்ச்சிகொண்டதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சில அடிப்படை விதிமுறைகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாள் தமது திருப்பாவை பாடல்களின் […]
நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு _ஒரு சிறு அறிமுகம். ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் […]
ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின் அழகு கண்டு அதிலே மொய்க்கும் வண்டின், மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் நிலை கண்டு கவிதை வரைவதற்கு நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல. […]
முனைவர் ந.பாஸ்கரன் உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர். தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும் புதினங்;கள் எண்ணிக்கை அளவினைக் கடந்து உணர்த்தும் உட்பொருளும் உத்தியும் நடையும்வரவேற்பைப் பெற்றுள்ளன.அவ்வகையில் எஸ்ஸார்சியின் கனவுமெய்ப்படும் என்னும் புதினம் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.எஸ்ஸார்சி நவீனஇலக்கியத்தளத்தில் இயங்கிவருபவர்.வாசிப்பு அனுபவத்திலும் படைப்பு அனுபவத்திலும் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார.;கவிதைஇ சிறுகதை புதினம் கட்டுரை மொழிபெயர்ப்பு என்னும் பன்முகங்களில் […]