முனைவர் ந.பாஸ்கரன் புதினப்படைப்பு என்பது ஓர் அரிய முயற்சியின் வெளிப்பாடு . இன்றைய தமிழ் இலக்கியப்படைப்புகளில் மிகச்சிறந்தவையாக மிகச்சிலவே என்பதைவிட மிகச்சிலவாகவே புதினங்கள் வெளிவருகின்றன.அவற்றுள்ளும் வாசகனை வளைத்துப்போடும் வேலையை விரல்விட்டு எண்ணும் புதினங்களே செய்கின்றன. கவிதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கையைவிட கதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்ச்சூழலில் மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது. இந்த அளவு கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளிக்கத்தான் செய்கிறது. மிகச்சிலவாக உள்ள புதினப்படைப்பாளர்களிலும் பலர் வாசகர்களை நோக்கி எழுத்துமலையை உருவாக்கிவிட்டேன் வலிமைபடைத்தவர்கள் அதன் மீது ஏறி […]
ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள் தென்படுவதுண்டு. அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல் திருமணம், கலவரம், இளவரசன் சாவு ஆகியவற்றை முன் வைத்து அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருப்பதை திருப்பூர் குணா இந்த நூலில் தகுந்த தரவுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார். இந்நூலில் இளவரசன் திவ்யா விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் மனப்பதிவுகளும் நடவடிக்கைகளும் எவ்வாறு […]
மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work – T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி செய்த சாதனை மற்றும் உயர் வரி வருவாய் அடிப்படையில் ஒரு தொகையை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தால் அப்போது நல்ல விளைவுகள் காணப்படும் என்னும் கட்டுரை. நகைசுவை மற்றும் வித்தியாசமானவை பகுதியில் வந்திருக்க வேண்டிய கட்டுரை. அரசியல் சமூகம் பகுதியில் வந்துள்ளது. கிஷோரும் […]
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் […]
ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002. முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும் அதிகாரம் மற்றும் உரிமைகளுடன் அமைய வேண்டும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வியல் கேள்விக் குறியாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலைக்கான காரணம், இக்காரணம் தொடர்ந்து வளர்ந்து வந்ததற்கான சமூகச்சூழல், ஏற்பட்ட […]
முனைவர் ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை பெரியார் கலைக்கல்லூரி கடலூர்-607 001. கட்டுகள் உடைத்து உருவாகும் கட்டுப்பாடுகளுக்குள் சமுதாயம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மகாகவி பாரதி. தெளிந்த சிந்தனைக ;குள்ளிருந்து கொப்பளித்து வெளிவரும் தனது சொற்களைப் பேச்சு, உரை, கட்டுரை, கதை, வசனம், கவிதை என்ற எவ்வுருவத்தில் அமரவைப்பினும் அதனை ஓர் ஆயுதத்தைக் கையாளும் கவனத்துடனேயே செய்துள்ளார். பேண்ணுக்கான, பெண்ணுக்குரியத் தமது சிந்தனையையும் அதுபோன்ற தளத்திலேயே பதிவு செய்கிறார். சீர்திருத்தம் பிரச்சாரத்தில் பெண்ணுரிமைக்கெ முன்னுரிமையைக் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 34.மரபியலின் தந்தையாக விளங்கிய ஏழை…. என்னங்க கோபமா வர்ரீங்க…என்ன மொகத்தத் திருப்பிக்கிட்டீங்க..ஓஹோ…ஹோ..ஓ..ஒங்கள மெண்டல்னு போனவாரம் சொன்னத மனசுல வச்சிக்காதீங்க…அட அது பெரிய அறிவியல் மேதையோட பேரு தெரியுமா….என்ன வாயத் திறந்து ஆ…ன்னு பாக்குறீங்க மரபியலின் தந்தைன்னு சொல்றோமே அந்த மேதையின் பெயரத்தான் சொன்னேன். அதப் புரிஞ்சுக்காம நீங்கபாட்டுக்குக் […]
எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என் பெற்றோர் பற்றியும் தாறுமாறான கணிப்புக்கும் முடிவுக்கும் சிலர் வந்தது பற்றி அறிய நேர்ந்து நான் தொடக்க நாள்களில் திடுக்கிட்டுப் போனதுண்டு. ஆனால், சராசரி மனிதர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டு சமாதானம் செய்தும் கொள்ளும் பக்குவத்தையும் விரைவிலேயே அடைந்து யாரும் […]
நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். 5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய […]
தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் […]