ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் தற்போதைய திறனை ஆராய்ந்து, தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படும் “லென்ஸ்” களுக்குக் கிட்டத்தட்ட இணையான லென்ஸ்களை உருவாக்கி ஒருவரை வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடத்தைக் கூடத் துல்லியமாகப் பார்க்க வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை […]
சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில் காவியம் படைத்த பெண்டிர் மிக மிகச் சிலரே. பொதுவாகப் பெண்டிர் காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல மாட்டார், சொல்லக் கூடாது, சொன்னால் பலருக்குத் தாங்காது, மனம் உடைவார். பெரும்பான்மைப் பெண்டிர் விரும்பினாலும் சொல்லத் தயங்குவார். […]
– சிறகு இரவிச்சந்திரன் எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை.. அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை.. அம்மா வளர்ப்பு. கல்லூரி படிப்பில் தங்கப் பதக்கம்.. வேலை கிடைத்து சென்னைக்கு வரும் அவனுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு படுக்கை அறை வீட்டை ஏற்பாடு செய்து தரும் வீடு தரகர் நாராயணன், அதே குடியிருப்பை, லண்டன் வாழ் அஞ்சலிக்கும் வாடகைக்கு […]
– சிறகு இரவிச்சந்திரன் துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு! ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும். ஓரளவுக்கு காமெடிக்கு உத்திரவாதம் தரக்கூடிய கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா போன்றோரை சரியான பாத்திரத்தில் லாக் செய்ததும் இயக்குனரின் புத்திசாலித்தனம். காமெடி அம்மா பாத்திரத்தில் உமா பத்மநாபன் வித்தியாச நடிப்பைத் தந்திருக்கிறார். இயக்குனர் கோட்டை விட்டதெல்லாம் நாயகன் தேர்வில் தான். […]
பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா […]
மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன் ( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்து ’சங்கு’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார். தொடக்கக்காலத்தில் மரபுக்கவிஞராகவும் […]
சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க […]
அ.சத்பதி முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் மலையாள மொழிக்கு உருவாக்கப்பட்ட முதல் இலக்கண நூல் லீலாதிலகம் ஆகும். இந்நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. லீலாதிலகம் மலையாள மொழியில் தனிமொழியின் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய மலையாள மொழியின் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் வேற்றுமையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் மலையாள வேற்றுமை உருபுகளின் வருகை, அவற்றின் பொருள்பாகுபாடுகள், அமைப்பு முறைகள் ஆகியவற்றைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். லீலாதிலகம் அறிமுகம் லீலாதிலகத்தைப் […]
– சிறகு இரவிச்சந்திரன் பலமுறை பார்த்து சலித்த பாத்திரத்தில், தனுஷ். புதுத் தென்றலாக, நஸ்ரியா. மகுடம் பறி போன ராஜாவாக, இயக்குனர் சற்குணம். நமுட்டுச் சிரிப்பு கூட வராத, நய்யாண்டி. நாற்பது வயதாகும் மூத்த பிள்ளை பரஞ்சோதி (ஸ்ரீமன் ), முப்பத்தெட்டு வயதாகும் இரண்டாவது மகன் பரந்தாமன் ( சத்யன் ), ஆகிய இருவருக்கும், இன்னமும் கல்யாணம் ஆகவில்லையே என்கிற கவலையுடன் இருக்கும் அம்மா ( மீரா கிருஷ்ணன்), குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் அப்பா ( பிரமிட் […]
சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்றசின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி […]