தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத் திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம் வெளிப்படும். சான்றோர் கவிதைகளைக் கவிஞர் ஆராய்ந்தால் என்ன வெளிப்படும்? கவிதைகளில் சொற்கள் இருக்கும். பொருள், அணி, யாப்பு இருக்கும். இவற்றைத் தாண்டி, கவிதைகளில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் போன்ற பல அறியப்படாதன புதைந்திருக்கலாம். இவற்றை எல்லாம் வெளிப்படுத்தி நிற்கும் எழுத்திற்கு […]
தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல். அவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமர்சனங்கள் ஆகிவிடும். ஆனாலும் எழுதத் தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கிய ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் […]
எஸ் ஜெயலட்சுமி கண்ணன் என்றாலே நம் நினை வுக்கு வருவது அவனுடைய கள்ளவிழிப் பார்வையும் அவனு டைய மாயச் செய்ல்களும் தான். ஆழ்வார்கள், தங்களுடைய பாசுரங்களிலே அவனுடைய பால லீலைகளைப் பலவிதங்க ளில் பாடி அனுபவித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் யசோதை யாகவே மாறி கண்ணனுடைய லீலைகளை யெல்லாம் பாடி அனுபவித்திருக்கிறார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழுக்கு இவரே முன்னோடி என்றும் சொல்லலாம். […]
படைப்பு வாசிக்கிற வாசகனின் வாசிப்பு அனுபவம், அவனளவிலான சூழல் இவற்றைக் கொண்டு இன்னொரு பிரதி¨ உற்பத்தி செய்கிறது. அல்லாதபட்சத்தில் பிரதிக்கான குறிப்புகளை ¡வது வாசகனின் மனதில் உருவாக்குகிறது. அந்தவகை ¢ல் ப.க. பொன்னுசாமி அவர்கள் தான் படித்ததில் சில புத்தகங்கள் ஏற்படுத்தி பாதிப்பை குறிப்புகளாக வைத்திருந்ததை எளிமை ¡ன சிறு சிறு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுத்திருக்கிறார். அவரை பாதித்த சில மனிதர்களை முன்வைத்து அவர்கள் இலக்கி ம் குறித்து எழுப்பி க் கேள்விகளும் அதன் அழு¢த்தமும் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 13. சாதனைகள் படைத்த ஏழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு சொல்லிக்கிட்டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு சொன்னீங்க. நானும் என்னென்னமோ பேருகளச் சொல்லிப் பாத்துட்டேன் நீங்க எதுவுமே இல்லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு சொல்லிக்கிட்டே வர்ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே… நீங்கதான் விவரமாச் […]
– சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில தொகுப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவா;களின் ‘உரிய நேரம்’ படித்துவிட கட்டாயப்படுத்தும் தொகுப்புதான். 1971-ஆம் ஆண்டிலிருந்து கவிதைத் தளத்தில் இயங்கி வரும் இவா;-தமது 66-ஆம் வயதினில் ‘உரிய நேரம்’ தொகுப்பினைத் தந்துள்ளார். தனது முதல் தொகுதியான ‘கவசம்’ நூலிலிருந்த கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பதால் சற்றொப்ப, இவரின் ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்பாகவும் இதைக் […]
தபால்-தந்தி இலாகா என்று வழங்கி வந்த இலாகாவைப் பிரித்துத் தபால் இலாகா, தொலைத் தொடர்பு இலாகா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துறைகளாய்ப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தந்தித் துறை என்பதையே இந்தியாவில் ஒழித்துவிடப் போகிறார்களாம். இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. மின்னஞ்சல், தொலைக்குறுஞ்செய்திகள் என்று முன்னேறிய பிறகு தந்தியின் இன்றியமையாமை குறைந்து விட்டது உண்மைதான். இருப்பினும் அதை அடியோடு நீக்குவதைப் பலர் ஏற்கவில்லை. சில நாடுகள் தந்தியை ஒழித்துவிட்ட போதிலும், வேறு […]
எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். […]
எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை, திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து […]