எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். காரியம் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகிறேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக. இந்நூலிடையே திருதிராஷ்டிரனை […]
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பெந்தோங் நகரில் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டுக்கான 7000 மலேசிய ரிங்கிட் பரிசு (1,19,000 இந்திய ரூபாய்) கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் “தேன் கூடு” என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் நடுவர்கள் குழுத் தலைவரான முனைவர் ரெ.கார்த்திகேசு நிகழ்த்திய உரை வருமாறு: இந்த ஆண்டு மரபுக் […]
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும் அடிகளை எச்சரிக்கையுடன் கவனச் சிதறல்களின்றி எடுத்துவைப்பேன். தவறுகளும் செய்வதுண்டு. அதனைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு என்னைத் திருத்திக் கொள்வேன். இப்பகுதியில் நான் எழுதப் போகும் விஷயங்கள் இப்பொழுதே என் மனத்தை வருத்துகின்றது. ஆனால் என் […]
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , […]
பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந ாயனே நாயனே என வரும் பாடல்களும் ,நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும். ஏகப்பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற காகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே.. ……. ஊனெடுத்த நாள்முதலாய் உபயோகமற்ற நான் கானில் நிலவானேன் கண்ணே ரஹ்மானே… …… வேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக் காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே.. ……… […]
”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?” என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை […]
நான் ரசித்த முன்னுரைகளிருந்து…… ————————————————— 1. இராஜாஜி – வியாசர் விருந்து. ========================= – வே.சபாநாயகம். “கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமும் நாகமும் கூடிய நன்னிலமான” நமது பாரத நாட்டில் தோன்றிய முனிவர்களும், ஞானிகளும், பக்த கவிஞர்களும் வாயிலில் காத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அவர்களை வாயிலில் காக்கச் செய்துவிட்டு நாம், உத்தியோகஸ்தர்களையும் பணக்காரர்களையும், இன்னும் அற்பர்களையும் காணவேண்டி, அவர்களது வாயிலில் காத்துக்கொண்டு நிற்கிறோம். இது என்ன மடமை! நான் புதிதாகச் சொல்லவில்லை. ஒரு […]
மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனின் மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்கிற 80 வயதான சாஸ்திர நிபுணர் பாடம் கற்பிப்பதற்காக அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவர் பெயரும் விஷ்ணுசர்மன். அவருக்கு 80 வயதா? முட்டாள் அசரகுமாரர்களுக்குப் பாடம் சொல்லித்தர முதல் கதையை ஆரம்பிக்கிறார் விஷ்ணு சர்மன். அந்த கதை நடக்கும் இடத்தின் பெயர் மகிளாரூப்யம். இதுவே ஒரு நவீன இலக்கியம் போல ஆரம்பிக்கிறது. எதிர் எதிர் கண்ணாடியின் பிரதிபிம்பம் போல […]
சீதாலட்சுமி பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. அர்த்தநாரீஸ்வரர் அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் தரும் காட்சி Positive and negative இரண்டும் ஒன்று கலந்தால் சக்தி… உருவமாய்க் காட்ட இரு பாகங்களாய்க் காட்சி. இல்லறத்தில் இணை கோடுகளாக இருத்தல் கூடாது. ஆனந்தமும் அமைதியும் பெற ஒன்று கலந்து ஓர் புள்ளியாய் மாறவேண்டும். வாழ்வியலுக்கு விதிகள் வகுத்த பொழுது “கற்பு” புகுத்தினான். அதுகூட வாழ்க்கையில் ஒன்றியவளுக்கு மட்டும் கற்பு நிலை வலியுறுத்தப்பட்டது. […]
தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி […]