வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16

This entry is part 21 of 41 in the series 10 ஜூன் 2012

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் நினைவலைகள் 60 ஆண்டுகளுக்குமுன் செல்கின்றது. சுதந்திரம் பெற்றவுடன் என்ன மகிழ்ச்சி ! என்ன பெருமை. திருவிழாக்களின் உற்சாகம். புதிய ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதுபோல் புதிது புதிதாக திட்டங்கள் வகுத்து, செயலாற்றத் தொடங்கினோம். கட்டப்பட்ட அணைக்கட்டுக்களின் காலத்தைப் பாருங்கள். ஆட்சிகள் மாற்றத்தில் அணைகள் இடிக்கப்படவில்லை. பராமரிப்பும் நிற்கவில்லை. மின்வசதியில்லா கிராமங்களைப் பார்த்துப் பார்த்து இணைப்புகள் கொடுக்கப்பட்டன (இன்று இணைப்பு இருந்தும் கரண்ட் வரவில்லையே என்று இருக்கின்றதா? இதற்கு […]

நினைவுகளின் சுவட்டில் – 88

This entry is part 12 of 41 in the series 10 ஜூன் 2012

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின் எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் […]

சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி

This entry is part 7 of 41 in the series 10 ஜூன் 2012

பீர்முகமது அப்பாவின் படைப்புலகம் யதார்த்தமும் கனவும் ஒருங்கே உருப்பெற்ற தரிசனமாகும். யதார்த்தம், வாழ்வின் இருப்புகுறித்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், கனவுலகம் விரும்புகிற நேசிக்கிற வாழ்க்கையைப் பற்றிய படிமமாகவும், அமையப் பெற்றுள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றும் ஒன்றில் ஒன்று கலந்து காட்சி சித்திரங்களாக உரு மாறி இடம் பெயர்கின்றன. பீரப்பாவின் மொழியில் வாழ்வின் இருப்பு திருப்திகரமானதாக இல்லை. துன்பதுயரங்களின் புதர்க்காடாக கிடக்கிறது. இருள் நிறைந்த துக்கத்தின் சாயல்களை அதில் நிறையக் காணலாம். இத்தகைய பிம்பங்களிலிருந்து விடுபடவேண்டி இறையிடம் வேண்டுகிற […]

ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..

This entry is part 5 of 41 in the series 10 ஜூன் 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. மே மாத நிகழ்வில் கனடாவில் வாழும் அகிலின் “ கூடுகள் சிதைந்த போது..” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டமாக அமைந்திருந்தது. ஞானி, யுகமாயினி சித்தன், செல்வி, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அந்த நூலை பற்றிப் பேசினர். பொதிகைச் சித்தர் சோலை சுந்தரப் பெருமாளின் “ தாண்டபுரம்” நாவலிப்பற்றி விரிவான […]

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை

This entry is part 13 of 41 in the series 10 ஜூன் 2012

அர.வெங்கடாசலம் (விளம்பரக் கட்டுரை) என் நண்பன் மிகவும் கொதித்துப் போயிருந்தான். ”எவ்வளவு தூரம் அவனை நம்பி இருந்தேன். இப்படிச்செய்துவிட்டானே. அவனுடைய அப்பா அம்மா எல்லாம் எவ்வளவு நல்லவர்கள். அவர்களுக்குப்போய் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையா? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டானே.” என்றெல்லாம் மற்றொரு நண்பனைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தான் அவன். “எனக்கொரு சந்தேகம் அவன் உண்மையில் அத்தாய் தந்தையருக்குப் பிறந்தவனா அல்லது ஏதாவது தத்து எடுத்த பிள்ளையா?” அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னை அவன் கேட்ட கேள்வி தூக்கி வாரிப்போட்டது. […]

இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை

This entry is part 20 of 28 in the series 3 ஜூன் 2012

உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி     காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின்  சுவடுகளைப்  பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும்.  – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில்  கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும்  ஒரு வட்டமான அறை.  அந்தக் கண்ணாடி அறையில்  என் கைகளைத் தட்டி நான்  களித்து விளையாடுவதை என் மனக்கண்களால்  காண்கிறேன்.   அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை.  இன்று […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)

This entry is part 15 of 28 in the series 3 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை விதைத்த கவிஞர்கள் எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் கூடாது. அவ்வாறு படைத்தால் அப்படைப்பாளன் அச்சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். விரக்தியான நிலையில் மனச்சோர்வடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் படைப்புகளைப் படைத்து, மக்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும். இது ஒவ்வொரு படைப்பாளனுடைய கடமையாகும். நல்ல கவிஞர்களுக்கான அடையாளமாக நம்பிக்கை […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15

This entry is part 8 of 28 in the series 3 ஜூன் 2012

நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.   இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு அடையாளம் பெற்றுத்தர வேண்டுமென நினைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரால். அகில இந்திய மாதர்சங்கம் தோன்றியது அதன்மூலம் ஓட்டுரிமை பெற்றுத் தந்தனர்.. இதனை யாரும் மறத்தல் கூடாது 100 ஆண்டுகளுக்கு முன்னரே விழிப்புணர்வு முயற்சியை மேற்கோண்ட வைகளை […]

நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..

This entry is part 5 of 28 in the series 3 ஜூன் 2012

அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் […]

என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்

This entry is part 9 of 33 in the series 27 மே 2012

திருக்குறளைப்பற்றி ஒரு புத்தகம் எழுதப்போகிறேன் என்றேன். என்ன திருக்குறளைப் பற்றி எழுதப்போகிறீர்களா? ஏற்கனவே ஏகப்பட்டபேர் எழுதிவிட்டார்கள். சொல்லப்போனால் புத்தகம் எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப்பற்றித்தான். நீங்கள் வேறு எழுதவேண்டுமா? அதிர்ந்து போனேன். நண்பர் தமிழாசிரியர் அவர் கூறுவதில் உன்மையில்லாமல் போகாது. சிறிது நேரம் அமைதி நிலவியது. நண்பர் என்பால் இரக்கப்பட்டு சரி என்னதான் எழுதப்போகிறீர்கள்? ஒரு குறளைக்கூறி அதற்கு என்ன பொருள் கூறப்போகிறீர்கள் எனக்கூறுங்கள் என்றார். நான் சுதாரித்துக்கொண்டு நான் கூறுவதை விடத் தாங்களே கூறுங்கள் […]