தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !

This entry is part 5 of 31 in the series 2 டிசம்பர் 2012

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

வெகு நாட்க ளுக்கு முந்தி
இருண்ட பல
நடுநிசிகளில் முணுமுணுத்தேன்
நானுன் காதிலே
பல்வேறு சம்பவங்கள்;
பற்பல ரகசியப் பாடல்கள் நான்
படைத்து வைத்தவை !
“நினைவில் உள்ளதா அவை ?” யென்று
வினாவ மட்டும் தான் நான்
வந்துள்ளேன் மீண்டும் .
இந்த நள்ளிரவின் இதயத்திலே
இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன
எனது பாடல்கள் !

 

ஆதலால் காலை எழும் போது எனது
காதில் பாடலைக் கேட்கிறேன்
என் பலகணி வழியே !
அணைந்து போனது என் விளக்கு !
கனவுக் காட்சியில் ஈரக் காற்று என்னைக்
கலக்கி அடிக்குது இக்கணம் !
மீண்டும் புயல்களில் பாடல் கேட்கும் !
சரமாறிப் பொழியும் பேய்மழை
அரவத்தின் ஊடே கேட்கும் !
சதுப்பு நில வாடைப் பூத மரங்களின்
சல சலப்பில் கேட்கும் !
ஈர மண்ணின் வாசனையில் வெளிவரும் !
திடீரென அவை அனைத்தும்
ஓடிவரும் என் நினைவில் !

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 73 தாகூர் 61 வயதினராய் இருந்த போது 1922 நவம்பரில் அவரது மனைவி மிரினாளினி தேவி (1873-1902) மரித்து 20 ஆவது மரண நினைவாண்டு நிறைவில் எழுதியது.
+++++++++++++++++++++++++

Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 27 , 2012

Series Navigationமரண தண்டனை- நீதியின் கருநிழல்பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

    இந்தக் கவிதை….ஒரு சோகத்தை சுகமாகச் சொல்கிறது..

    “நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே…நீந்கிடாத துன்பம் பெருகுதே..
    அணைந்த தீபமாய் ஆகிப் போனதேன்….உடைந்து போன சிலையானதே..!”

    இந்தப் பாடலின் இறுதி வரிகள் வரை நினைவுக்கு இழுத்து வந்தது இந்தக் கவிதை…!

    அழகான மொழியாக்கம். மிக்க நன்றி.

    திண்ணையில் அநேகமாக அனைத்துத் தலைப்பிலும் தங்களின் படைப்புகள்
    பளிச் பளிச் சென்று மின்னுகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க ஜெயஶ்ரீ,

    அணைந்த விளக்கில் மீண்டும் வெளிச்சம் உண்டாகும். ஒரே கல்லில் பல மாங்கனிகள் விழ வைத்ததற்குப் பாராட்டு, நன்றிகள்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply to ஜெயஸ்ரீ ஷங்கர். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *