விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி

This entry is part 33 of 33 in the series 19 மே 2013

Viswaroopam_naser

யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது.

“தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உண்டு. இவற்றில் விருமாண்டி தேவர் மகன், ஹே ராம் வரிசையில் “விஸ்வரூபம்” இடம் பெறுகிறது.” என்று என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

விருமாண்டி, தேவர் மகன், ஹே ராம் மூன்று படங்களுமே வன்முறையை முன்வைத்து உரையாடலை நிகழ்த்து கின்றன. அவற்றின் அடிப்படியான கதைக் களன் வன்முறையின் மூலத்தை ஆய்வு செய்கின்றன. தேவர் மகன் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதில் மிக முக்கியமான சேர்க்கையாகும். சாதி என்பதும் , சாதிச் சித்தரிப்புகள் என்பதும் பெருமைக்குரியதாகவும், வீரதீரப் பராக்கிரமங்களை முன்வைப்பதாகவும் திரைப்படங்கள் உண்டு. ஆனால் தேவர் மகன், சாதியத்திற்குள்ளாக செயல்படும் உட்பகைகளை சித்தரிக்கிறது. பங்காளிகளுக்குள் மோதல் என்ற முறையில் மீண்டும் மகாபாரதத்தின் சாயல்கள் தவிர்க்கமுடியாமல் நிழலாய்த் தோன்றுகின்றன. உட்பகைக்குக்காரணம் என்ற ஒன்று தெளிவாய் முன்வைக்கப் படவில்லை . ஆனால் தனக்கு மரியாதை இல்லை என்ற காரணம் மீண்டும் மீண்டும் சுட்டப் படுகின்றது. மரியாதையைப் பெறுவதற்காகவும், அவமரியாதையைக் காட்டி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் எந்த இழிசெயலுக்கும் தயாராக உள்ள மனநிலையை முன்வைக்கிறது. கிராமம் என்ற ரொமாண்டிக் கருத்தாக்கமும், சாதி என்பது ஒருமைப் பட்ட இனக்குழு என்ற பிரமையும் உடைபடுகின்றன. வெளிக் கலாசாரத் தாக்கம் கொண்டு கிராமத்திற்குத் திரும்பும் கமல் ஹாசனின் பாத்திரம் தவிர்க்க முடியாமல் கிராமத்தின் அழிவரசியலில் அங்கம் வகிக்க வேண்டி வருவதும் அதன் உச்சகட்டமாக தான் நம்பியிருந்த அனைத்திற்கும் எதிராக ஒரு கொடூரக் கொலையில் முடிவதும் ஒரு கிரேக்க அவல நாடகத்தின் சிக்கலைக் கொண்டுள்ளது. இருசாதிகளுக்கு இடையே அவ்வப்போது தோன்றும் வெறிச்செயலைக் காட்டிலும், நீறு பூத்த நெருப்பாக என்றும் இயங்கி வரும் உட்சாதிப் பகையை முன்வைப்பதில் ஒரு சுய விமர்சனம் வேண்டி நிற்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாமலாகிப் போன தமிழ்ச் சமூகத்தில் இதன் விளைவுகள் என்று ஒன்றும் நிகழவில்லை. இது பற்றிய விமர்சனங்கள் கூட தேவர் சாதியினை முன்வைத்து பெருமிதம் தேடித்தந்த ஆவணமாக அதைத் தவறாகப் புரிதலினை முன்வைத்தன. சொல்லப் போனால் தேவர் இனக்குழு தான் இந்தப் படத்தை ஒரு சுய விமர்சனத்தின் முன்னுரையாய் மேற்கொண்டிருக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக பாவிக்கும் மனநிலை பற்றிய இந்தச் சித்திரம் தமிழுக்கு மிகப் புதிது.

விருமாண்டியும் கூட இதே மனநிலையை இன்னொரு சந்தரப்பத்தில் வைத்துப் பேசுகிறது. இங்கும் இருவேறு சாதிகளுக்குள்ள மோதல்களை மீறிய இணக்கம் பற்றிப் பேசும் போது, சாதி இணைவு என்பது எப்படி ஒரு சுயநலம் பேணும் வழிவகையாகிவிட்டிருக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. ராஷோமானை நினவு படுத்தும் உத்தி படத்தின் அங்கமாகி விட்டிருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான படம் என்ற முத்திரையில் காணாமல் போனது வன்முறை பற்றிய விசாரணை.

இனி யமுனா ராஜேந்திரனின் விமர்சனத்திற்குத் திரும்புவோம்.

“அரசியல் பயங்கரவாதம் பற்றிப் படமெடுத்த கமல் ஹாசன், இஸ்லாமிய சகோதரகள் என அன்பாக விழித்த கமல் ஹாசன், அதே சகோதரர்கள் முன்வைத்த விமர்சனத்தைகே கலாசார பயங்கரவாதம் என உடனடியாகக் கூசாமல் , தயங்காமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஆங்கிலத்தில் கல்சுரல் டெரரிசம் என்பது எவ்வளவு அழுத்தமான சொல் என்பதை உலக அரசியல் அறிந்த ஒருவர் உணர முடியும். ” என்கிறார் யமுனா ராஜேந்திரன். மிக சாமர்த்தியமான வாசகங்கள். கமல் ஹாசன் சகோதரர்கள் என்று சொன்னது இஸ்லாமிய சமுதாயத்தினரை. ஆனால் இஸ்லாமியரின் தீவிரவாத அரசியல் குழுக்கள் சில தான் விஸ்வரூபம் தடை செய்யவேண்டும் என்று பிரசினையை எழுப்பின. இவர்கள் “அதே சகோதரர்கள்” இல்லை. ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சகோதரர்களை இந்தக் குழுக்கள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கமல் ஹாசனின் மக்களை, உறவினரை ஆபாசமாக விமர்சித்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. மனுஷ்யபுத்திரனை அருவருப்பாக திட்டியவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. இப்படிப் பட்ட குழுக்களை கலாசார பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் இட்டு அழைக்க வேண்டும் என்று, இந்த வகை குழுக்களை சகோதரர்களாக பாவிக்கும் யமுனா ராஜேந்திரன் தான் சொல்ல வேண்டும். அயொதல்லாக்களை யமுனா ராஜேந்திரன் சகோதரர்களாகவே பாவிக்கட்டும். ஆனால் எல்லா இஸ்லாமியர்களையும் இந்த வேலிக்குள் அடைக்க வேண்டாம்.

”இது தமிழக முஸ்லீம்களை, தமிழக பிராம்மணர்களை, தமிழகத்தில் பிறந்த பெண்களை, தமிழக நகரங்களான மதுரை கோயம்புத்தூர் போன்றவற்றை சர்வதேச பயங்கரவாதத்துடனும் தாலிபானியத்துடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்துடனும் இணைக்கும் படம்” என்று கவலைப்படுகிறார் யமுனா ராஜேந்திரன்.

இப்படிப் பட்ட அபத்தத்தை யமுனா ராஜேந்திரன் தவிர வேறு யாரும் எழுதி விட முடியாது. 60 வருடங்ளாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் பொய்மை என்பது இதன் பொருளா? பாலஸ்தீனப் பிரசினைக்கும் தமிழ் நாட்டிற்கும் தொடர்பு உண்டு என்றால், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லாமல் போகுமா? இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிகழும் தனிமைப் பட்ட சம்பவம் அல்ல. உலகு தழுவிய ஒரு நோக்கம் அதற்கு உண்டு. அதனால் தான் கோவை தொடங்கி, ஜாவா வரையில், இந்தோனேசியா தொடங்கி, ரஷ்யா வரையில், ஸ்பெயின் தொடங்கி அமேரிக்கா வரையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நிகழ்கின்றன.

கவனமாக எழுதப்பட்டிருக்கும் இந்த வரிகளில், கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவைதான் என்பதை வேண்டுமென்றே தவிர்த்து, அவ்வாறு தவிர்ப்பதற்கு. தமிழர்களை சர்வதேச பயங்கரவாதத்துடன் கமலஹாசன் சம்பந்தப்படுத்துகிறார் என்று தாவுகிறார்.

தேசம் என்ற கட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வருவதில்லை. அவர்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டு பயங்கரவாதம், கர்னாடகா பயங்கரவாதம், மும்பை பயங்கரவாதம், கோரக்பூர் பயங்கரவாதம் காஷ்மீர் பயங்கரவாதம், கராச்சி பயங்கரவாதம், பெஷாவர் பயங்கரவாதம் என்றெல்லாம் தனித்தனியாக இருக்கிறதாக யமுனா ராஜேந்திரன் கருதுகிறார் போலிருக்கிறது.

ஒருவேளை, கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்துடனும் சம்பந்தமில்லை என்று யமுனா ராஜேந்திரன் நினைக்கிறாரோ என்னவோ? இஸ்லாமிய பயங்கரவாதத்தை தமிழ்நாட்டுடன் சம்பந்தப்படுத்தியது கமலஹாசன் மட்டும்தானோ என்னவோ? இல்லையென்றால், தமிழ்நாட்டில் முஸ்லீம் பயங்கரவாதிகளே இல்லை என்று அவர் சொல்ல, நாமும் நம்பிவிடலாம்.

முள்ளிவாய்க்கால் பற்றிய படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று கொளுத்தி போட்டிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். எடுத்த படத்திற்கு விமர்சனம் எழுதிக் களைத்து விட்ட யமுனா ராஜேந்திரன் எடுக்காத படத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். அப்படி அது எடுக்கப் பட்டால் அதற்கு விமர்சனமும், படம் வருவதற்கு முன்பேயே யமுனா ராஜேந்திறன் தயார் செய்திருப்பார் என்று நம்பலாம்.

இது கமிஸார் கட்டளையோ என்னவோ! கம்யூனிஸ்ட் நாட்டில் தான் இது பற்றி எடு, இந்த விஷயம் பற்றி எடுக்காதே என்று கட்டளை பிறக்கும். என்ன ஆச்சரியம் – யமுனா ராஜேந்திரனும் ஒரு கம்யுனிஸ்ட் கட்சியாளரின் மேற்கோள் தான் காட்டுகிறார்.

ஈழம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை எந்த திசையிலிருந்து யமுனா ராஜேந்திரன் விமர்சனம் செய்திருக்கிறார், எவற்றை போற்றி பாராட்டியிருக்கிறார் என்று பார்த்தால், எப்படிப்பட்ட பிரச்சார படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் விரும்புகிறார் என்று அறிந்துகொள்ளலாம்.

இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கும் என்று தெரிந்துதான், கமல் போன்றவர்கள் விவரமாக ஈழம் பற்றிய படங்களை தவிர்க்கிறார்களோ என்னவோ.

ஈழம் பற்றி படம் எடுப்பதற்கு இருக்க வேண்டிய நேர்மையோ அல்லது அந்த நேர்மை மூலம் சொல்ல வேண்டிய விஷயங்களோ, சொல்லப்படக்கூடிய விஷயங்களோ யமுனா ராஜேந்திரன் போன்றவர்களுக்கு வேண்டியதில்லை. ஒரு கலைஞனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை கூட மறுக்கிற குணம் கொண்ட யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள், ஏன் இவர் இதனை பற்றி படம் எடுக்கவில்லை, அவர் ஏன் அதனை பற்றி படம் எடுக்கவில்லை என்று கேட்பதற்கு கூட அருகதை அற்றவர்கள்.

விஸ்வரூபம் படத்தில் அமைதிப்புறாவான இஸ்லாமின் காலில் அணுகுண்டை கட்டிகொண்டிருக்கிறார்கள் என்று இஸ்லாமின் சார்பாகவே எடுத்திருக்கும் கமலஹாசனையே, இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் கண்டித்த காரணத்தினால், எதிர்க்கிற யமுனா ராஜேந்திரன், ஈழம் பற்றி எப்படிப்பட்ட படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று புரிந்துகொள்ளுதல் கடினமானது அல்ல.
————-

Series Navigationஎன்னால் எழுத முடியவில்லை
author

கோபால் ராஜாராம்

Similar Posts

22 Comments

  1. Avatar
    smitha says:

    Gopal rajaram qualifies to be the president of the all india kamal fans association.

    He has spewed venom against Yamuna Rajendran.

    In thevar magan, kamal openly sided with the thevar community. After the release of the film, there were many cases of caste clashes. The lyrics were also provocative.

    Maybe gopal is unaware of all this.

    Virumandi was a classic case where kamal pleads for life imprisonment instead of death penalty after having killed more people than the villain himself.

  2. Avatar
    Indian says:

    It is funny that Thinnai finds it fit to publish comments written in English by certain individuals ( I totally agree with Smitha’s views) but rejects my comments because it is in English!

  3. Avatar
    புனைபெயரில் says:

    இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு அனுமதியா? தேவர் மகன் என்று பெயர் வைத்து விட்டு, தேவர்கள் சூழலில் படமெடுக்காமல் என்ன செய்ய வேண்டும். ஏன் செட்டியார் மகன், தலித் மகன், கோனார் மகன் என்று பிறர் எடுக்கலாமே? யார் வேண்டாம் என்றது. அந்த படத்தில் பிற ஜாதி துவேஷம் கிடையாது. தமிழகத்தில் இருந்து சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியன் நேஷனல் ஆர்மிக்கு அதிக ஆட்களை அனுப்பிய “போற்றி பாடப் படவேண்டிய தேவரை தந்த இனம்” பெருமை பாடுவதில் என்ன தவறு.?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சரியாகச்சொன்னீர்கள். நானும் சிலவேளைகளில் இப்படி நினைப்பதுண்டு.

      தேவர் மகனுக்குப்பின் எடுக்கப்பட வேண்டிய திரைப்படங்கள்:

      ஐயர் மகன்
      ஐயங்கார் மகன்
      முதலியார் மகன்
      மூப்பனார் மகன்
      செட்டியார் மகன்
      நாடார் மகன்
      நாயக்கர் மகன் (நாயக்கர் மகள் என்ற படம் வந்தது. நாயக்கர் மகன் வரவில்லை. நினைவில் வைத்துக்கொள்ளவும்)
      நாயுடு மகன் (இந்தப்படத்திலே டயலாக் தமிழ்+தெலுங்கிலே)
      படையாச்சி மகன்
      கொங்கு வேளாளக்கவூண்டர் மகன்
      பறையர் மகன்
      பள்ளர் மகன்
      அருந்ததியர் மகன்
      மருத்துவர் மகன் (மருத்துவர் என்பது நாவிதரின் இன்றைய ஜாதிப்பெயர்)
      குறவர் மகன்
      குறத்தி மகள் ஏற்கனவே வந்ததால் இப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
      பரதவர் மகன்
      லெப்பை மகன்
      மரக்காயர் மகன் (இந்த ரெண்டு படங்களும் ராம்நாடில் நல்லா ஓடும் தியேட்டரில். கள்ள சிடியை முன்பாகத் தடுத்துவிட்டால் கண்டிப்பாக நடக்கும்)

      வன்னியர் மகன் (இது வடமாவட்டங்களில் பரபரப்பாக ஓடும். ஜெயின் பலத்த போலிசு பந்தோபஸ்தோடு. மருத்துவர் ஐயா அவர்களும் தன் குடும்பத்தினரோடு முதற்காட்சிக்கு வந்து ப்ரொஜொக்டரை ஆன் பண்ணி வைத்து ஆசிர்வாதம் நல்குவார்கள்)

      ஒரு ஜாதிக்குள் பலபிரிவுகள் உளதென்பதால், எல்லாவற்றையும் தனித்து எழுதவியலவில்லை. ஆனால் அவரவர் தனித்த‌னியே திரைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

      ஒவ்வொருவரும் ஒரு பாட்டை தீம் பாட்டாக வைத்துக்கொள்ளவேண்டும்.

      எடுத்துக்காட்டாக:

      செட்டியார் காலடி மண்ணே, போற்றிப்பாடடி பெண்ணே.
      ஐயங்கார் காலடி மண்ணே, போற்றிப்பாடடி பெண்ணே.
      படையாச்சி காலடி மண்ணே போற்றிப்பாடடி பெண்ணே

      (மத்தவாள்ளே கோபப்பட்டிராதீங்கோ. எல்லார் பேரையும் எழுதயிடமில்லாததால் விட வேண்டியதாயிற்று. ச் மிக்கவும்)

      இப்படியாக தமிழர்கள் அவரவர்தம் இனப்பெருமை பாராட்டிச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கல்தோண்டி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடியாக நம் தமிழ்க்குடியின் வீரமாண்பை உலகுக்கு பறைசாற்றவேண்டும்.

      புனைப்பெயரில் சாருக்கு நன்றிகள் உரித்தாகுக..

      வாழ்க தமிழகம்.

      1. Avatar
        புனைபெயரில் says:

        இதென்ன தமிழக கல்வித்துறை 509 ஜாதியிருக்கென்று லிஸ்ட் போட்டிருக்கு.. நீங்க இப்படி கொஞ்ச பேரை மட்டும் கணக்கிலெடுத்தால்?

  4. Avatar
    பூவண்ணன் says:

    ஐயாமாரே இந்தியன் நேஷனல் ஆர்மி என்ன ,யாரால் உருவாக்கப்பட்டது என்று கொஞ்சம் பாருங்களேன்
    கமல் திரைபடத்தில் வைத்த ஒரு வசனத்தை உண்மை போல பலர்(லட்சகனக்கானவர்) நம்பி கொண்டு இருப்பதால்,இது போன்ற பொய்யை பரப்பியதற்காக தேவர் மகன் படத்தை எவ்வளவு திட்டினாலும் தகும்

    http://en.wikipedia.org/wiki/Indian_National_Army

    Initially composed of Indian prisoners of war captured by Japan in the Malayan campaign and at Singapore, it later drew volunteers from Indian expatriate population in Malaya and Burma. The INA also was at the forefront of women’s equality and the formation of a women’s regiment,
    பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்த அன்றைய இந்திய(பாகிஸ்தான் உட்பட்ட)ராணுவ வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஆர்மி தான் INA .இதற்கும் முத்துராமலிங்க தேவருக்கும் துளி கூட தொடர்பு கிடையாது
    அதில் வெள்ளையர் கூட இருந்தனர்.அதிக அளவில் இஸ்லாமியர்கள்.
    பின்பு பர்மா,மலேசியா போன்ற இடங்களில் இருந்த தமிழர்கள் பலர் சேர்ந்தனர் .அதில் அனைத்து சாதியினரும் உண்டு.அவர்கள் அதிக அளவில் சேர்ந்தும் தமிழர்களின் எண்ணிக்கை சில ஆயிரத்தை தாண்டாது

    1940-1945 காலகட்டத்தில் தேவர் சிறையில் இருந்தார். இங்கு இருந்த தமிழருக்கும், குறிப்பாக முக்குலதோருக்கும் INA விற்கும் தொடர்பு கமல் படத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று

    The growing popularity in Thevar as a leader of elements opposing the official Congress leadership in Tamil Nadu troubled the Congress-led government. Thevar was also increasingly associated with labour militancy. A criminal case, the so-called Madura Security Case, was proceeded against him. He was banned from leaving Madurai. When travelling to his birthplace, Pasumpon, in September 1940 he was apprehended and jailed for 18 months at the Central Jail in Tiruchirapalli. His capture sparked wide condemnation in Tamil Nadu.

    Soon after his release he was arrested again under the Defense of India Rules. He was released from prison on September 5, 1945.[10]

    வெள்ளைகாரர்கள் கூட பலர் இருந்த ராணுவம் தான் INA .ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு கைப்பற்றப்பட்ட ராணுவத்தில் பயன்படுத்தபடுவதர்க்கும் ,அப்படி பயன்பட ஒரு இந்திய தலைவரை தலைமை பொறுப்பில் ஜப்பான் ராணுவம் உட்கார வைத்ததற்கும் முத்துராமலிங்கதிர்க்கும் என்ன தொடர்பு

    By November, around 12,000 INA prisoners were held in these camps, from which they were released according to the “colours”.[25] By December, around 600 whites were released per week. From amongst the rest, the selection for those to face trial started.[25]

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    ஐ என் ஏ விற்கு நேதாஜி அவர்கள் ஆட்களைத் திரட்டிய போது, அதிகமாக சென்றவர்கள் இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த தேவமார்கள். அந்தக் காலத்தில் வெறுமனே அவரை எதிர்த்த கூட்டங்களுக்கிடையே, விமானத்தில் சென்று நேதாஜியை சந்தித்தவர். அவர் மேல் ஈர்ப்பு கொண்டு, பார்வேர்டு பிளாக் கட்சியில் இணைந்தவர் , தேவர் திருமகனார். தனது பல்லாயிரமான ஏக்கர் நிலங்களை பகிர்ந்தளித்தவர். காமராஜருக்கு தேர்தல் தகுதி வர ஆட்டுக்குட்டி தானம் கொடுத்து அதைப் பின் காமராஜர் விற்று வரி கட்டி தேர்தலில் நிற்க தகுதி பெற்றார். இது வரலாறு, அதனால் தான் மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் கேட்டால், அண்ணாந்து கூட விமானத்தை பார்த்தறியாதவர்கள் கூட தங்கள் பக்கத்து ஓர் ஆள் பெயரை சூட்டச் சொல்கிறார்கள்.

  6. Avatar
    புனைப்பெயரில் says:

    விக்கிபீடியா தனி நபர்களால் உருவாக்கப்படுவது. போய் வரலாற்றைப் படியுங்கள். பர்மா, சிங்கை தமிழர்களில் ராணுவத்திற்காக சென்றது தேவர் இன மக்கள். பிழைப்புக்கு சென்றவர்களையும், இவர்களையும் போட்டுக் குழப்பி அடிக்க வேண்டாம்.

  7. Avatar
    பூவண்ணன் says:

    ஐயா நான் INA பற்றி எழுதப்பட்ட விக்கிபீடியா வைத்து மட்டும் கூறவில்லை.பிடிபட்ட பிறகு தரப்பட்ட தண்டனைகள்,மன்னிக்கப்பட்டவர்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு.அதில் தமிழ் பெயர்கள் எங்காவது தான் தென்படும்

    அதற்க்கு ஆள் எடுப்பது என்று எழுதுவதே சரியான ஒன்று அல்ல
    தமிழகத்தில் இருந்து மக்கள் யாரும் கப்பல் ஏறி போய் ஜப்பான் காரன் உருவாக்கி வைத்து இருந்த ராணுவத்தில் சேரவில்லை.
    மலாயா,சிங்கையில் இருந்து ராணுவத்தில் சேர்ந்தவர்களும் enlisted சிவிலியன்ஸ் என்ற முறையில் போர் கைதிகளாக பிடிபட்டு ராணுவமாக மாற்றப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவியாக உருவாக்கப்பட்ட குழு தான். கடிதம் போட்டு அங்கு இருந்த தேவர் இன மக்களை சேர சொன்னார் என்று கூட சொல்லலாம்.இல்லை,அவர் தான் முதன்முதலில் கைபேசியை கண்டுபிடித்து பயன்படுத்தியவர் என்றும் சொல்லலாம்.மலையா,சிங்கையில் வாழ்ந்த தமிழர்களில்,இன்றும் வாழும் தமிழர்களில் அதிக எண்ணிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும்,வன்னியர்களும் தான்

    எந்த கிராமத்தில் இருந்து மக்கள் சென்றார்கள் என்று கூற முடியுமா.அதில் இருந்த மக்களுக்கு சலுகைகள் பெற்று தர பலர் போராடினார்கள்.அந்த ஆவணங்களும் உண்டு
    இங்கிருந்து மக்கள் எளிதாக தேவர் கூறியதால் சில ஆயிரம் மைல் தூரம் சென்று வேறு ஆட்சியின் கீழ் உள்ள ராணுவத்தில் சேர்ந்தார்கள் என்ற கதையை உண்மை போல இன்றும் நம்புவது வேதனை தரும் ஒன்று

  8. Avatar
    IIM Ganapathi Raman says:

    விக்கிப்பீடியாவை நம்ப முடியாதென்றால் சரி. நம்பக்கூடிய ஆதாரத்தைக் காட்டலாமே?

    கள்ளர், மறவர், பிறன்மலைக் கள்ளர், அம்பலம், உடையார் சேர்வை, அகமுடையார் போன்ற குலத்தோர் (தேவர் என்பது ஜாதிப்பெயரன்று) இராணுவத்தில் அதிகமாகச் சேர்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமிருக்கிறதா? காட்டினால்தான் நம்பலாம். இல்லாதபட்சத்தில் பூவண்ணன் காட்டும் ஆதாரத்தைத்தான் நம்ப வேண்டும்.

  9. Avatar
    IIM Ganapathi Raman says:

    // தேவர் திருமகனார். தனது பல்லாயிரமான ஏக்கர் நிலங்களை பகிர்ந்தளித்தவர். காமராஜருக்கு தேர்தல் தகுதி வர ஆட்டுக்குட்டி தானம் கொடுத்து அதைப் பின் காமராஜர் விற்று வரி கட்டி தேர்தலில் நிற்க தகுதி பெற்றார். இது வரலாறு, அதனால் தான் மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் கேட்டால், அண்ணாந்து கூட விமானத்தை பார்த்தறியாதவர்கள் கூட தங்கள் பக்கத்து ஓர் ஆள் பெயரை சூட்டச் சொல்கிறார்கள்.//

    //பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப்//

    என்பது அரசியல் மேடைப்பேச்சில்தான் அனுமதிக்கப்படும். த. பல்லாயிர்க்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒருவரிடம் இருந்தால் மதுரையில் பெத்தானியாபுரத்தையே வாங்கிவிடலாம். மிகைக்காக எழுத ஆசைப்பட்டாலும் நூற்றூக்கணக்கான என்றால் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.

    பல்லாயிரக்கண்க்கான ஏக்கர்கள் நிலத்துக்குச் சொந்தகார்ர் என்றால் அவர் ஒரு மாபெரும் பணக்கார்ர். அப்பணத்தை வைத்து வறுமையில் இன்றூம் உழலும் அவர் இன மக்களுக்கு உதவியிருக்கலாம்.

    ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தார் தேர்தல் டெபாசிட் கட்ட; ஏக்கர் நிலங்களை கொடுத்தார் என்பதெல்லாம் ஒரு விமான நிலையத்துக்கு அவர் பெயரை வைக்க தகுதியென்றால், அதைச்செய்ய டாட்டாக்கள் பிர்லாக்கள் நம்மிடையே பலருண்டு.

    ஒரு பொது இட்த்துக்கு ஒருவர் பெயரை வைக்க பணம் தகுதி கிடையாது. ஒரு பொது நலத் தொண்டனை அவ்னிடம் எத்தனை ஏக்கர் நிலங்க்ள் இருந்தன என்று பார்த்து மதிக்கமாட்டார்கள். காமராஜர் கணக்கில் ஒன்றுமே இல்லை; அவருக்கென சொந்த வீடுமில்லை. ஆனால் அவர் பெயரைத்தான் சென்னை விமான நிலையத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

    அனைத்து மக்களாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது நலத்தொண்டர் ஒருவரின் பெயரை வைப்பதற்கு எந்த சலசலப்பும் வராது. காமராஜாரின் பெயரை வைத்த்தற்கு ஏதாவது சலசலப்பு வந்த்தா?

    முத்துராமலிங்கனாரின் பெயரை வைப்பதற்கு மதுரை மக்கள் ஒருமனதாக முன்வந்தார்களா? தூத்துக்குடி துறைமுகத்துக்கு போனவாண்டுதான் வ உ சியின் பெயரை வைத்தார்கள். தூத்துக்குடி மக்கள் ஒரு மனதாக – அவர் பிள்ளை ஆனால் அம்மக்களால் எப்படி மதிக்க்பட்டார் என்பதை அ.ச ஞானசம்பந்தனின் சுயசரிதையின் ஒருபக்கத்தில் படித்துப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்- சரியென்றார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றும் கோடிக்கணக்கான பிள்ளைகள் பிறந்து மறைந்தார்கள். ஆனால் பிள்ளைவாள் என்றால் அது தூத்துக்குடியில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். ‘பிள்ளைவாள் வீட்டுக்கு வந்தவனா நீ சென்னையிலிருந்து?’ என்று சொல்லி ஒரு ஏழை மீனவன் 16 வயது அ ச ஞான சம்பந்தனை தன் படகில் வைத்து துறைமுகத்தைச் சுட்டிக்காட்டிய போதுதான் தனக்குத் தெரிந்த்து வ உ சியை அவ்வூர் மக்கள் எப்படி வைத்திருந்தார்கள் என்றெழுதியிருக்கிறார்.

    அதே ஊரில் இன்னொருவரும் உண்டு. அவர் பெயரை எதற்கு வைத்தாலும் அனைவரும் சரியென்பார்கள். அவர்கள் எச்சாதியினரென்றலும் எம்மத்த்தவர் என்றாலும். தூத்துக்குடி நகராட்சி மண்டபத்துக்கு அவர் பெயர்தான்; அவர் சிலைதான். காரணம் அவர்தான் தாமிரவருணித்தண்ணிரைத் தூத்துக்குடியை நோக்கி வெள்ளைக்காரனிடம் கெஞ்சி வல்லநாட்டில் தேக்கிவைத்து தூத்துக்குடி மக்களுக்குக் குடிநீரைத் தந்தவர். The person is from fishermen community.

    ஆக, புனைப்பெயரில், ஒருவர் – அவர் எச்சாதி, எம்மதம் – என்று மக்கள் கேட்கமாட்டார்கள் அவர் அப்பழுக்கற்ற மாசற்ற பாரபட்சமற்ற பொதுநலத்தொண்டனாக அவர்களிடையே வாழ்ந்து மடிந்தவராக இருந்தால்.
    முத்துராமலிங்கனார் அப்படிப்பட்டவரென்றால், ஏன் சலசலப்பு?

    A leader should enjoy unanimous approval of all people. Like Ceaser’s wife, he should be above board.

    Muthuramalinganaar was severely criticised by then leaders for fomenting caste clashes. If such leaders were from one caste that is hostile to his caste, ok. But they come from all parties and all castes. Finally, he ends up as just a leader for his own caste people.

    The group which wants the name of their hero to the airport is only reacting to the demand for naming it after Muthuramalinganaar. That is to say, if there had been no that demand, there would have been no this demand.

  10. Avatar
    IIM Ganapathi Raman says:

    //தாமிரவருணித்தண்ணிரைத் தூத்துக்குடியை நோக்கி வெள்ளைக்காரனிடம் கெஞ்சி வல்லநாட்டில் தேக்கிவைத்து தூத்துக்குடி மக்களுக்குக் குடிநீரைத் தந்தவர்//

    An error of fact has crept in. அதாவது வல்லநாட்டில் தாமிரபருணி நீரை தேக்கிச் சுத்தப்படுத்தி பெருங்குழாய்களில் தூத்துக்குடிக்கு கொணர்ந்து மக்களுக்கு சேவை செய்யப்பட்ட காலம் நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், குரூஸ் பர்ணாந்து தூத்துக்குடி நகரசபையின் முதல் சேர்மனான காலத்தில்.

  11. Avatar
    IIM Ganapathi Raman says:

    //இருசாதிகளுக்கு இடையே அவ்வப்போது தோன்றும் வெறிச்செயலைக் காட்டிலும், நீறு பூத்த நெருப்பாக என்றும் இயங்கி வரும் உட்சாதிப் பகையை முன்வைப்பதில் ஒரு சுய விமர்சனம் வேண்டி நிற்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாமலாகிப் போன தமிழ்ச் சமூகத்தில் இதன் விளைவுகள் என்று ஒன்றும் நிகழவில்லை. இது பற்றிய விமர்சனங்கள் கூட தேவர் சாதியினை முன்வைத்து பெருமிதம் தேடித்தந்த ஆவணமாக அதைத் தவறாகப் புரிதலினை முன்வைத்தன. சொல்லப் போனால் தேவர் இனக்குழு தான் இந்தப் படத்தை ஒரு சுய விமர்சனத்தின் முன்னுரையாய் மேற்கொண்டிருக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக பாவிக்கும் மனநிலை பற்றிய இந்தச் சித்திரம் தமிழுக்கு மிகப் புதிது.//

    ஒரு சாதியினரைபபற்றி ஒரு திரைப்படம். அதாவது அவர்களின் உட்பகை, உரசலகள், கொலைகள் பற்றி. பின்னர் ஏன் எடுக்கப்பட்டது? அவர்களை சுய விமர்சனம் செய்யவைத்து அவர்களின் காலங்காலமாகத் தொடரும் வாழ்க்கைக்கலாச்சாரத்தை மாற்றவாம். That is what Gopal Rajaram wants us to believe!

    கேள்வி. ஏன் ஒரு சாதியினரின் மீது இத்தனை கரிசனம் கமலுக்கு? அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு அவர்கள் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவேண்டுமெனப்தில் கமலுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?

    அச்சாதியினர் அனைவருமே குழந்தைகளா? அவர்களுக்கென்ன உயிர்களைக்கொல்லுதல் பாவம் எனத்தெரியாதா? எனினும் உட்பகைகள் எப்போதுமே அவர்களிடம் இருக்கக்காரணம்? இக்கேள்வியே தவறு. அஃது இருந்தே தீரும். அங்குதான் அவர்கள் குணம் வெளிபபடுகிறது. இக்குணம் பிறவிக்குணமன்று. கட்டமைக்கப்பட்டது. ஒரு கற்பனைக்காதலை அடிககல்லாகவைத்து. அஃதென்ன?

    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்டார்கள். அரசன் ஒருத்தந்தான். ஆனால் சாதிக்காரகள் ஒவ்வொருவரும் தான்அரசன் என நினைத்து கற்பனை வீரம் கொள்கிறார்கள். இதைப்ப்யனபடுத்தியே அன்று அவர்கள் சாதித்தலைவர்கள் தோன்றி அவர்களை இன்னும் கீழே கற்பனைக்குழியில் தள்ள, (நான் மறவன்டா? எனக்கு அடிமை செய்தவர்கள் என் முன்னே கால்மேல் கால்போட்டு அமர்கிறான். பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே? உங்களிடம் மறவர் இரத்தம் பாய்கிறதா?) இப்படிப்பட்ட டயலாகால் அசந்து போய் இன்புற, இன்றைய அவர்கள் சாதித்தலைவர்கள் சுவரொட்டிகளில் முரட்டு விழிகளோடு ‘நாம் ஆண்ட பரம்பரை மறக்கலாமா ? என மாட்டுத்தாவணியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைப்பார்த்து மற்றவர்களும் ஆண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்கிறார்கள். Surprising but a happy thing to know: in TN, everyone is a master; and everyone wants others to keep under his feet as bonded slaves. ஆதிக்கவாதிகளால நிரம்பி வழிகிறது தமிழகம்.

    தெரிந்தே அறிந்தே தங்கள் வாழ்க்கைக்கலாச்சாரத்தை இருண்ட காலத்திற்குள்ளேயே வைத்து அஃதே இன்பம் என இருமார்ந்து போகும் போலிமனிதர்களை அப்படி போகிறார்கள் என்று காட்டித்தானே படம் எடுத்திருக்க வேண்டும்? அத்தைரியம் இல்லை. மாறாக, அவர்கள் அடித்துக்கொள்வதைக்காட்டி, அவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கமல விரும்புகிறார்.. யமுனா இராசேந்திரனைக்காட்டிலும் கோபால் இராஜாராமின் விமர்சனம் புரட்சிகரமானது.

    வாழ்க புரட்சி!

  12. Avatar
    IIM Ganapathi Raman says:

    //இனம்” பெருமை பாடுவதில் என்ன தவறு.?// – கேட்டவர் புனைப்பெயரில். அவர் மட்டுமல்ல பலரும் இக்கேள்வியைக்கேட்டுவிட்டு ஏதோ நம் வாயை அடைத்துவிட்டதாக ஒரு இருமாப்பு அடைகின்றனர்.

    தவறு. ஏன்?

    போதைகள் பலபல. குடி போதை, புகழ் போதை, பணப்போதை, என்று. ஆனால் குடிகாரனோ, புகழ் பெருகி ஆழ்ந்து கிடப்பவனோ, பணத்தைப்பெருக்கிக்கொண்டு கிடப்பவனோ, எவருமே ‘போதை’ என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடித்தல் என்ற ரெஃப்ரஷ்மென்ட் என்பான்; புகழ் எனக்கு தானே வருகிறதெனபான்; லட்சுமியே கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறாள் என்பான்.

    சரிதான். ஆனால் அவை அளவைவிட்டுத்தாண்டும்போது போதையாகிறது. அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சன்பார்கள் இல்லையா? குடிபோதையில் இருந்துதான் பாலியல் கொடுமைகள் நடாத்தப்படுகின்றன. பேருந்தில் பாண்டேவைக் வன்புணர்ந்து கொன்றவர்கள் நல்ல குடி; தூத்துக்குடி பவானியை அப்படியே கொன்றவன் நல்ல குடி. இதைப்போல புகழ்போதையில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றவர்கள் பணப்போதையில் இருப்பவர்கள் (ஐபிஎல்) செய்யும் குற்றங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சுஜாதாவின் ‘பதவிக்காக’ என்ற நாவலைப்படிக்கவும். பதவிக்காக மனைவியை அதிகாரிகளுக்கு கூட்டிக்கொடுத்த கப்பல படை அதிகார்களைப்பற்றிய ஊழல் இப்போது பிரசித்தம் என நீங்கள் அறிவீர்கள். அப்படியே புகழுக்காகவும் செய்வான். மனைவி குழந்தைகளைப் பட்டினி போட்டு பட்டங்களுக்கு அலைபவர்கள் ஏராளம்.

    இனப்பற்று என்பது இதே வகை. அஃது இருக்கலாம். ஏனென்றால் சைகலாஜிப்படி கொஞ்சம் வேண்டும். புருஷன் மேலே கொஞ்சம் பொசசிவ் பற்று இருக்கணும். அதைப்போல. மீறும் போது ட்ராஜடி. அவனின் கோர்டு சர்டில் ஏதேனும் பெண் தலைமுடி இருக்கிறதா எனச் சோதிக்கச்செய்யுமில்லையா?

    மீறும்போது போதை. அதைத் திறமையோடு செய்கிறார்கள் ஜாதித்தலைவர்கள். ஆண்ட பரம்பரை வீழ்வோமா? என்ற சுவரொட்டிகள் மட்டுமல்ல வீடுகளிலும் குழந்தைகள் வளர்க்கப்பட்டு அப்போதை அவர்களுக்குத் திணிக்கப்பட்டு, ஜாதித்தலைவர்கள் தம் முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். இதன் விளைவு: ஜாதிக்கலவரங்கள்.

    இனப்பெருமை = > இனப்போதை = > ஜாதிக்கலவரங்கள் = > பதவி பணம் ஜாதித்தலைவனுக்கு

    தமிழ்நாட்டில் இன்னொரு ஜாதியோ தாம் பிறரை விட அறிவில் சிறந்தவர்கள் எனப்து நம் ஜீன்ஸ்களில் இருக்கின்றது என்று தம் குழைந்தைகளுக்குப் போதை ஏற்றுகிறார்கள்.

    சமூகம் சீரழிந்து நாறுகிறது.

    கற்ற கல்வி போதைகளை அகற்றவே; அப்போதைகளின் காரணிகளை முளைக்கவிடாமல் தடுக்கவே. மக்களுக்கு எடுத்துச்சொல்லவே.

    புனைப்பெயரின் வாசகங்கள் அக்கல்விக்கு எதிரான வேலையைச்செய்யும்.

  13. Avatar
    புனைபெயரில் says:

    கேள்வி. ஏன் ஒரு சாதியினரின் மீது இத்தனை கரிசனம் கமலுக்கு? -> கமலின் தந்தை சிவகங்கையில் வக்கீலாக அந்த மக்களின் வாழ்வைப் பார்த்து வளர்ந்தவர். உ.முத்துராமலிங்கத் தேவரை காவல் துறை கைது செய்த போது, அவருக்கு ஆஜராக மறுத்தவர் – கமலின் தந்தை திரு. சீனுவாச ஐயங்கார் அவர்கள். ஆனால், தேவருக்காக ஆஜரான வழக்கறிஞர் கமலின் அண்ணன் திரு. சாருஹாசன் அவர்கள். அந்த இன மக்களின் முரட்டு வீர நிலை பற்றி தெரிந்ததால் அந்த படம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மமுண்டு. மருத்துவர் படிப்பில் முதல் நாளிலேயே அத்தர்மத்தை (ஹிப்பாகிரட்ஸ் ஓத்) சொல்லிக்கொடுப்பார்கள். அஃதாவது, உனக்குப்பிடிக்கா உன் எதிரியே உடற்காயங்களோடு உன்னிடம் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்படும்போது உனக்கும் அவனுக்கும் உள்ளே ஒரே உறவு – மருத்துவர் – நோயாளி – எனப்து மட்டுமே. அவனின் உயரை முதலில் காப்பாற்றிவிட்டு பின்னரே போலீசிடம் ஒப்படைக்கலாம். நீ சிகிச்சை அளிக்கும் போது போலிசு கூட உள்ளே நுழையக்கூடாது. புதியபூமி படத்தில் முதற்காட்சியைப்பார்க்கவும்.

      அதைப்போலவே வழக்குரையர் தொழில் தர்மமும். கட்சிக்காரன் – வழக்குரைஞர் என்ற தொடர்பே அங்கு முதலும் கடைசியுமாகும். மேலும் ஒருவன் என்னைக்காப்பாற்றுங்கள் என்று வழக்குரைஞரிடம் செல்லும் போது மறுக்கக்கூடாது. செய்துதான் ஆகவேண்டும். கவுரம் படத்தை மீண்டும் பார்க்கவும்.

      சீனிவாசன் பரமக்குடியில் பெரிய வக்கீல். அவரிடம் போய்க்கேட்டால் அவர் வக்கிலாக ஆகித்தானே தீரவேண்டும். அதே வழக்கில், இராமலிங்கனாருக்கு எதிரிகள் சென்று எங்களுக்கு வாதிடுங்கள் என்று கேட்டால் அவர் எவர் முதலில் வருகிறாரோ அதைத்தான் செய்திருப்பார். அத்தருமத்தின் படி, சீனிவாசன் ஒரு ஜாதித்தலைவருக்கு வழக்குரைத்தால்,அஜ்ஜாதியின் செய்யும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாகவும். அஜ்ஜாதியின் மேல் அதீதித கரிசனம் கொண்டவராகவும் ஏற்க முடியாது. If a lawyer defends a rape accused, it does not follow he like women to be raped. It is his dharma to defend his client. Therefore, don’t link Srinivasan or his son Charu hasan with his clients.

      ஒரு திரைப்படமெடுத்தவன் அதே தர்மத்தைக் கொண்டான் என்றால் ஏற்கலாம். ஆனால் ராஜாராம், என்ன சொன்னார்: அஜ்ஜாதியினரை சுயபரிசோதனை செய்து தங்கள் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள என்றும் சொன்னதால். எழுதவேண்டியதாயிற்று.

      ‘முரட்டு வீரம்’ என்று சொல்லிப்பாராட்டுகிறார் புனைப்பெயரில். இது மிக்மிக ஆபத்தானது. முரட்டு வீரமென்பது முட்டாள்தனமான வீரம். உண்மையில் அது வீரமாகாது.

      வீரம் விகேமாகவே இருக்கட்டும். முரட்டு வீரம் சரியே என்றால், ஊரே வாழமுடியாது. ஜாதித்தலைவர்கள் அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நல்ல தலைவன்: கத்தியைத்தீட்டதே; உன் புத்தியைத்தீட்டு என்றுதான் சொல்லிக்கொடுப்பான். ‘நாம் ஆண்ட பரமபரைடா…நமக்கு எதிராக அவன் எப்படிடா உடகாரலாம்’ என்பது முட்டாள்தனமான போலி வீரம்.

      புனைப்பெயரில் பாராட்டும் ஜாதியினரிடம் விவேகமான வீரமிருந்திருந்தால், அல்லது அது போற்றப்பட்டிருந்தால், அவர்கள் இன்று விமர்சனத்துக்குள்ளாக மாட்டார்கள். தலித்துகளை உடன்பிறவாச் சஹோதர்களாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

      //அந்த இன மக்களின் முரட்டு வீர நிலை பற்றி தெரிந்ததால் அந்த படம்.//

      The film (not vishwaroopam, but his other films) should not glorify such idiotic courage. It does. So, it is criticized harshly here.

      தலைக்கட்டு சுமப்பவனெல்லாம் விருமாண்டி படத்தையும் தேவர்மஹன் படத்தையும் பார்த்து பெருமை கொண்டால் அவன் வீட்டுப்பானையில் சோறுவருமா? அவன் குழந்தைகள் கல்வி பெறுவார்களா? மற்றவரெல்லாம் முன்னேறிக்கொண்டு செல்ல இவன் பிள்ளைகள் க்டைசியிலின் ஜெயிலுக்கல்லவா போவார்கள் முரட்டு வீர்த்தைக் காட்டி?

  14. Avatar
    அரு.நலவேந்தன் says:

    உண்மைதான்,இது புரட்ச்சிகரமான படைப்புதான்.சாதியம் அழிய வேண்டும்.ஆண்டோர் சாதியத்தைப் பேசியே அழியட்டும்.இளையோர் சாதியத்தை மிதித்தே ஒழியட்டும்.இதுவே எதிர்காலத்தின் முடிவாகும்.மலேசியாவில் தாழ்ந்தப் பட்ட சமூகம் என்று இல்லவே இல்லை.இங்கு எல்லோரும் ஒரு குடையின் கீள்.அக்குடை ஒற்றுமையே ஆகும்.எங்கள் தேசத்திலும் சாதி சங்கள் உண்டு.ஆனால்,அவையெல்லம் நாளை வேக போகும் கட்டைகள் மற்றுமே.இளையோரிடையே இப்பிரச்னை துளிக்கூட இல்லை.சாதியை முதலில் ஒழிக்க வேண்டும்.அதுவும் முதலில் தமிழகத்தில்.தாய் தமிழ் மண்ணின் இளைய வைரங்களே மண்டியிட்டு கெஞ்சிக்கேற்கிறேன்.இளையோர்களே…!தயவு செய்து இந்த வேண்டுகொளை செவி சாய்யுங்கள்.தமிழ் மண்ணில் சாதியக்கருத்தை ஒழியுங்கள்.தமிழ் இரத்தங்கள் உண்மையென்றால் சாதியின் அழிவு நிச்சயமே.இது உங்களின் ஒருவனின் குரல்.கமல் ஒரு பகுத்தரிவாளர்.என்னை பொருத்த வரையில் விஷ்வரூபம் சிறந்த படைப்பே.இது எனது கலைக்கண்ணின் பார்வை.இந்த படைப்பை மலேசிய நாட்டு முஸ்லீம்களும் எதிர்த்தனர்.ஆனால்,நாம் பெருமைபட வேண்டும் இப்படைப்பு ஒரு தமிழனால் உருவாக்கப்பட்டது.தமிழகத்தில் இப்படைப்புக்கு தடை விதித்தது வருதம் தான்.மேலை நாட்டவர்கள் இதே கதையை படம் எடுத்தால் புகழ்ந்து தள்ளும் மனிதர்களும் இந்த உலகில் உண்டு.விஷ்வரூபத்தில் சில காட்சிகள் குறிப்பிட்ட சமுகத்திற்கு கோபத்தையும் வருத்ததையும் தந்திருக்கும்,ஆனால்,ஒரு கேள்வி.அவை அனைத்தும் உண்மையை தானே வலியுறுத்துகிறது.எனவே,வாசகர்களே ,நன்றாக கூர்ந்ந்து கவனியுங்கள்.வாழ்க்கையில் மாற்றம் மிகவும் முக்கியம்.நன்றி.

  15. Avatar
    புனைப்பெயரில் says:

    இப்படைப்பு ஒரு தமிழனால் உருவாக்கப்பட்டது. –> அப்படியா… அய்யங்கார்கள் தமிழர்களா? இது என்ன புதுக் கரடியா இருக்கு… ஆரியர்கள் என்று சொல்லித்தானே ராஜாஜி போன்றோர் அம்பது வருடம் முன் சொல்லிய பிராக்டிகல் டிரய்னிங் என்றதை குலக் கல்வி என்று சொல்லி ஒழித்த திராவிட சிகாமணிகள், டாக்டர் திராவிடர்கள் தங்களின் வாரிசுகளை டாக்டர்களாகவும் -காசு கொடுத்தாவது, அங்காள பரமேஸ்வரி அல்லது தூய வளனார் அல்லது முகமது சதக் (இங்கேயும் குத்தா? ) மருத்துவக்கல்லூரியில் படிக்க முடியாத மூளைக்கு பை பாஸ் ரோடு போட்டு குலக்கல்வி காண்கின்றனர்… இப்போ கமல் தமிழராயிட்டார்…அப்போ ராஜாஜி எப்போ ஆவார் ?

  16. Avatar
    அரு.நலவேந்தன் says:

    செய்திக்கு நன்றி.கமல் ஒரு பகுத்தரிவாளர்.பெரியாரின் பொன்மொழிகளில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்றுதான் எனக்கு தெரியும்.இன்னும் தெளிவாகச்சொன்னால்,தான் ஒரு திராவிடர் என்று கூறக் கூடியவர்.14 ஆவது அகவையிலே தனது தெய்வ நம்பிக்கையை எதிர்த்து வந்தவர் என்று அவரே கூறியுள்ளார் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில்.இதுநாள் வரை தான் ஒரு தமிழன் என்றுதான் சொல்லிவருகிறார்.விஷ்வரூபத்தில் கூட தமிழர்களை இழிசெய்யும் வண்ணம் எந்த காட்ச்சியும் இல்லை.குறிப்பிட்ட சில சமுகத்தினரின் பெயர் கொண்ட திரைப்படம் எடுத்தால்,அவர் என்ன சாதியத்தை வளக்கும் ஆசாமியா….,ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.சாதியத்தை அவரும் வளக்கவில்லை தாங்களும் வளக்கவில்லை.பிறகு ஏன் இன்னும் கமலையும் சாதியக்கருத்துகலையும் பிசைந்து கொள்கிறீகள்.இது ஒரு உண்மையைச்சொல்லும் நம்மில் ஒருவர் எடுத்தப் படம்.அதற்க்கு நாமே இப்படி விமர்சித்தால்…..பிற சமூகம் நம்மை இழிவாகத்தான் பாக்கும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      உண்மையில் இதற்கு மாறு கருத்து வைக்கவேண்டியது புனைப்பெயரில் என்பவரே.

      However, I can rebut the following:

      //ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.சாதியத்தை அவரும் வளக்கவில்லை தாங்களும் வளக்கவில்லை.பிறகு ஏன் இன்னும் கமலையும் சாதியக்கருத்துகலையும் பிசைந்து கொள்கிறீகள்.//

      என்றெழதப்பட்டதற்கு ஒரு பொதுக்கருத்தை வைக்கலாம்..

      ‘நான் பனைமரத்தில் உச்சியில் இருந்த பனம்பழத்தைப்பறிக்கத்தான் கல்லெறிந்தேன். ஆனால் அக்கல் அப்பனைமரத்துக்குப்பால் விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தையின் தலையில் பட்டு அது மாண்டது என் குற்றமா?” இதற்கு நம் பதில் எப்படியிருக்கும்? பெரியவர்கள் இப்படி பேசுவார்களா? நானா நினைத்துச்செய்யவில்லை. அதாகவே செத்தது என்றா?

      அதைப்போலத்தான் ஒரு பொதுச்செயல். தான் சாதீயக்கருத்துகளை விளைக்கவில்லையென வாதிடலாம். ஆனால் படம் திரையில் வந்து ஓடும்போது எடுத்தவனை மீறித்தான் விளைவுகள். அதுவும் சுயசிந்தனையில்லா எடுப்பார் கைப்பிள்ளைகளாக வாழும் தமிழர்களிடையே நிச்சயம் விளைவுகள் உண்டாகும். ஒலிஒளி ஊடகங்கள் பார்ப்பவகளின் சிந்தனைத்திறத்தை அவை ஓடும் வரையில் நிறுத்திவைக்கின்றன என்பது உளவியலாளர் கண்டது.

      எனவே விருமாண்டியும் தேவர் மஹனும் ஏற்படுத்திய விளைவுகள் தான் நினைத்தவை அல்ல என்று வாதிட முடியாது. இப்படங்களைப் பார்த்து பார்த்து, பிறவியிலேயே வீரம்; முரட்டு வீரம்; ஆண்ட வர்க்கம்; பிறர் தமக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும்; பெண்கள் ஆண்களின் அடிமைகள் – என்ற சிந்தனைகளை மேலும் மேலும் வளரும் தலைமுறை மீது திணிக்கப்பட்டால், அதற்கு தான் பொறுப்பல்ல என்று வாதிட முடியாது. எப்படி ஒரு நூல் வெளிவந்தபின் எழுத்தாளன் அந்நூலின் விளைவுகளை தடுத்து நிறுத்தமுடியாதோ அப்படி ஒரு சினிமாக்காரனாலும் முடியாது. Finished. The matter is beyond control. நடப்பது நடந்தே தீரும் !

      நம் கல்வி முறை; நம் பாரம்பரிய கலாச்சாரம், அஃது ஈந்த வாழ்க்கை முறைகள்; பெரியோர் சொன்னா பெருமாள் சொன்னமாதிரி என்று வாயையடைத்து கேள்வியே கேட்காதபடி பழமையை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை; பழமை என்றால் 100/100 சரி; புதுமை என்றால் இகழ்; விரட்டு. ஒரு சிலர் கேட்க துணிந்தால் அவர்களை உலகமஹா அறிவு ஜீவிகள் என்றும் பகுத்தறிவு சிஹாமணிகள் என்றும் எள்ளி நகையாடு – இப்படிப்பட்ட‌ மனப்போக்கு – இவையனைத்தையும் கொண்ட தமிழர்வாழ்க்கையில் சினிமாக்காரருக்கும் அரசியலாளருக்கும் மற்றும் பலருக்கும் செம மழை. எனவேதான் வெகு எளிதாக மக்களை மக்களோடு மோதவிட்டு அதை சமூக நீதிப்போராட்டமெனலாம். மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் எதையும் செய்யலாம். செய்து விட்டு அதிலென்ன தவறு என சாவகாசமாக கேட்டு தன்னைச் சொறிந்து கொள்ளலாம். சுயசிந்தனைக்காரன் ஊரைக்கெடுப்பவன் எனற மாயையை உருவாக்கி மக்களை அடிமைச்சங்கிலியில் கட்டிவைக்கலாம்.

      சட்டத்தின்படி இப்படிப்பட்ட சினிமாக்காரர் குற்றவாளியன்று; ஆனால் சட்டமே வாழ்க்கையன்று. அதன் எல்லை குறுகியது. அதையும் மீறி எழுதாச்சட்டங்களின்படி இப்படிப்பட்ட சினிமாக்காரன் குற்றவாளியே.

      Such a cinema artist is guilty of creating casteist – oriented cinema to excite evil passions among a particular community people of TN !

  17. Avatar
    punaipeyaril says:

    தான் ஒரு திராவிடர் என்று கூறக் கூடியவர் -> சொல்வதால் வருவதில்லை இன குறீயீடு. பிறப்பால் வருவது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர்க்கு உள்ளத்தனைய உயர்வு” என்பார் பழந்தமிழர். அதன்படி, நினைப்பே வேண்டும். தன்னைத் தமிழர் என்றவர் வீட்டுக்குள் நுழைந்தால் பெற்றோரும் பிள்ளைகளும் ஆங்கிலத்திலும் அல்லது ஹிந்தியிலும் உரையாடிக்கொண்டு, தமிழ் என் குழந்தைகளுக்குத் தெரியாது எனப்பெருமையோடு என்னிடம் கூறியவர்களையும், திராவிடரன்று எனவிகழப்படுபவர் தம் குழந்தைக்குத் தமிழை விட்டால் ஹிந்தி தெரியாது எனச்சொல்லிய‌லும் பெற்றொரைகளையும் நான் கண்ட போது பழந்தமிழர் சொன்னதுதான் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.

      இவர்களிருவருள் எவர் தமிழர்?

      கமலஹாசன் தன்னைத் தமிழர் எனக்கூறினால் அதுவே போதும். உள்ளத்தால் உயர்வீர். ட்ராமா வேண்டா.

Leave a Reply to பூவண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *