ஆமென்

This entry is part 17 of 22 in the series 15 செப்டம்பர் 2013

 

 

விலகுங்கள்

எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்

வந்து கொண்டிருக்கிறான்

அவனுக்கு

எது பொய் எது மெய்யென்று

தெரியாது

ரகசியங்களை

சுமந்து கொண்டு திரிபவர்கள்

அவன் பக்கம்

திரும்பிப் பார்ப்பதில்லை

அர்த்தமிழந்த வாழ்க்கையின்

பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான்

மின்மினி வெளிச்சமாவது தேவை

அவன் உறங்குவதற்கு

விடியாத இரவுகள்

அவன் வரப்பிரசாதம்

வாழ்க்கைப் பந்தயத்தில்

கடைசியாகக் கூட

அவன் வருவதில்லை

மேகங்களற்ற

வானத்தின் அழகை

அவன் பருகுவதில்லை

வேலை நிமித்தமாக

வெளியே செல்லும் போது

நடுவழியில்

அவன் பெயரைக் கூட

மறந்து நிற்பான்

அவனைப் போல் யாருமில்லை

அப்படி இருக்க

யாரும் விரும்புவதில்லை

மீண்டும் குழந்தையாகிவிடுங்கள்

அப்போது தான்

சுவர்க்கத்தில்

உங்களுக்கு இடம்

என்று பைபிள் சொன்னது

இவனுக்காகத்தான்

இருக்க வேண்டும்.

Series Navigationஞாநீதுகில்
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

    அர்த்தமிழந்த வாழ்க்கையின்

    பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான்

    மின்மினி வெளிச்சமாவது தேவை

    அவன் உறங்குவதற்கு

    விடியாத இரவுகள்

    அவன் வரப்பிரசாதம்

    அருமையான வரிகள் ஆமென் என்று சொல்ல தூண்டியது

Leave a Reply to ஜி.ஜே.தமிழ்ச்செல்வி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *