ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)

This entry is part 25 of 38 in the series 10 ஜூலை 2011

ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது.

இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் பார்க்கும் போது கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் ஞான யோகத்தில் நாம் ஜென் மரபை அடையாளப் படுத்திக் கொள்ளலாம.

வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் மதம் சம்பந்தப் பட்ட எண்ணற்ற நிறுவனங்களும் குரு பீடங்களும் ஒருவனுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆன்மீகம் பற்றிய தேடலை கொழுந்து விட்டு எரியச் செய்யவில்லை. தேடல் வசப்பட்டவருக்கு வழிகாட்ட எந்த ஒரு கைகாட்டியும் ஊன்றப்படவில்லை. அப்படி ஒரு சூழல் இருந்திருந்திருந்தால் இன்று வாழ்க்கை இத்தகைய வெறுமையைச் சுமக்காது. உலகம் மனித நேயம் தழைத்தோங்கும் பூங்காவாக இருந்திருக்கும். மாறாக ஆன்மீகம் என்பது நிகழ்காலமோ அல்லது வாழ்நாளோ சம்பந்தப்பட்டது அல்ல. மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை சம்பந்தப் பட்டது என்னும் கருத்தை நிறுவதை மட்டுமே இந்நிறுவனங்கள் செய்து வந்தன.

ஆன்மீகம் என்றால் என்ன என்னும் கேள்விக்கான விடையை மத நிறுவனங்களுக்கு வெளியே வடக்கே கபீரும் தமிழகத்தில் சித்தர்களும் தேடித் தமது கவிதைகளில் பதிவு செய்தனர். ஆன்மீகம் என்பது ஒரு மனிதன் தன்னைப் பிரபஞ்சத்துடன் இணைக்கும் புள்ளியை உணர முயலும் முடிவற்ற தேடல் ஆகும். அது துறவறம் மேற்கொண்டோரின் ஏகபோகப் பணி என்றும் அவர்களை வழிபட்டால் போதும் என்றும் மலினப் படுத்திச் சிந்திக்க நாம் பழக்கப் படுத்தப் பட்டு விட்டோம். ஆன்மீகம் ஒன்றே மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தரும் என்பதும் அன்றாட வாழ்வில் ஆன்மீகத் தேடல் உறுதுணையாகும் என்பதும் ஏனோ உணரப்படவில்லை.

அர்ச்சுனன் கையில் வில்லை ஏந்தி எதிரிகளை நோக்கும் போது அவனது ஆன்மீகம் விழித்தெழுந்தது. சுதந்திரப்போராட்டத்தின் போது அரவிந்தருக்கு அது நிகழ்ந்தது. அமேரிக்காவின் பில் கேட்ஸிடம் ஆன்மீகத் தேடலைக் காண இயலுகிறது. மனிதனின் மேம்பட்ட வாழ்க்கைச் சுகங்களுக்கு மட்டும் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் உதவவில்லை. உலகமே அஞ்சும் ஆயுதக்குவிப்பும் அதிகார வேட்டையும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் தான். இன்று மனித வாழ்வின் மிகப் பெரிய வெற்றிடத்தை ஆன்மீகம் மட்டுமே இட்டு நிறப்ப இயலும்.

ஜென் பற்றிய அறிமுகத்திற்கு சுஜூகி (Daisetz Teitaro Suzuki) என்னும் ஜப்பானிய சிந்தனையாளரின் கருத்துக்கள் முக்கியமானவை. 20ம் நூற்றாண்டில் ஜென் பற்றிய புரிதலுக்கு அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது.

சுஜூகி ஜென் எல்லா சடங்குகள், சொர்க்கம், நரகம் என்னும் உருவாக்கங்கள் எல்லாவற்றையுமே ஜென் நிராகரிப்பதை முன் வைக்கிறார். ஜென் கோயில்களில் உள்ள கடவுட் சிலைகள் வெறும் காட்சிப் பொருட்களே. மதங்கள் உருவாக்கிய எந்தக் கோட்பாட்டுக்கும் ஜென்னில் இடமில்லை. கடவுளை நோக்கி நீ மேற் செல்ல வேண்டும் என்றால் உன்னுள் ஆழ்ந்து அகழ்ந்து செல். தன்னிலிருந்து வேறுபட்ட புறவயமான எல்லாவற்றையுமே ஜென் ஆன்மிகத்துக்கு அன்னியமானதாய்க் கருதுகிறது. மனத்தைக் கொன்றழி என்பதே ஜென் என்னும் மேலோட்டமான ஒரு கருத்து ஜென்னைப் பற்றி சொல்லப் படுகிறது. தன்னை ஒரு போதையிலும் மனம் கட்டமைத்த கோட்பாடுகளின் வழி செல்வனாகவும் கொண்ட ஒருவனது கண்கள் கட்டப் பட்டவை. முதலில் இன்று உள்ள எல்லா கோட்பாடுகளும் பாரம்பரியங்களும் மனங்கள் உருவாக்கியவை எனபதை உணர வேண்டும். மனம் மரித்து எல்லையற்ற சூனியத்தை உணரும் தேடலுடன் மறுபிறவி எடுக்க வேண்டும். நிர்வாணம் என்னும் விடுதலையின் தொடக்கம் மனம் மரித்தால் மட்டுமே சாத்தியம். மனம் மற்றும் புத்தி ஜென்னைப் பொருத்த அளவில் பிறரோடு கருத்துப் பரிமாற மட்டுமே தேவை அல்லது பயனுள்ளது.

ஆன்மாவை உள்ளாழ்ந்து உணருவது மிகவும் அந்தரங்கமானதும் அனுபவபூர்வமானதும் ஆகும். அனுபவம் அசலாக இருக்க ஏற்கனவே நிலை நிறுத்தப் பட்டு போதிக்கப் பட்ட எல்லாவற்றையும் நிராகரிப்பது அவசியம். இந்த அனுபத்தின் தொடக்கத்தில் ஜென் அறிமுகமாகி நிறுவன மதங்கள் பின்னே தங்கி விடுகின்றன. உண்மையை உணருவது தனிமனித ஆன்மீகத் தேடல். இதில் பிறர் சென்ற வழி அல்லது நிறுவனங்கள் சொன்ன வழி என்று எதுவுமே இல்லை. பிரபஞ்சத்தின் இயங்குதல் நம் அடையாளத்திலிருந்து அன்னியமானது அல்ல. நாம் நம்மை அந்த இயங்குதலுடன் அனுபவம் வாயிலாக மட்டுமே இணைத்துக் கொள்ள இயலும். இந்தத் தேடல் பற்றிய ஒரு புரிதல் மட்டுமே சாத்தியம். அது பற்றிய உரையாடலாக அந்த அனுபவம் தொடர்பான செய்திகளாக சம தளத்தில் பீடங்கள் இன்றி ஜென் தத்துவ சிந்தனையாளர்கள் பல பதிவுகளைச் செய்தார்கள். ஜென் கதைகள் ஜென் பற்றிய புரிதலுக்கு அதிகம் அறியப் பட்ட வழியாகும்.
.

எளிய கதைகள். ஆனால் மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளவை. ஜென் கதைகள் சிந்தனையைத் தூண்டுபவை. நமது மனம் என்பது எது? நம் அறிவின் தன்மை என்ன? இந்தக் கதை நமக்கு விடை அளிக்கக் கூடும்.

துரதிஷ்ட வசமாக கண் பார்வை இல்லாமற்போன ஒரு மாற்றுத்திறனாளி பாதைகளைப் பழகி இருப்பதால் தாம் நிறைய நடமாடிய பாதைகளில் ஒரு குச்சியின் உதவியுடன் நடப்பார். அவ்வாறான தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு வீட்டிலிருந்து “தம்பி நில்லுங்கள்” என்றார் ஒரு பெரியவர் ” இந்த இருட்டில் எப்படி நடக்கிறீர்கள்?”

“ஐயா! தாங்கள் சொல்லித்தான் எனக்கு தற்போது இருட்டு என்பதே தெரியும். கண் பார்வை அற்ற நான் பழக்கத்தின் அடிப்படையில் நடந்து சென்று விடுவேன்”

” இல்லை. இந்த விளக்கைக் கையில் நீங்கள் எடுத்துச் சென்றால் எதிரே வருபவர் ஒதுங்கிச் செல்ல ஏதுவாயிருக்கும்.”

“வேண்டாம். குச்சியை ஒரு கையிலும் விளக்கை மறு கையிலும் கொண்டு செல்வது சிரமமே”

“வெளிச்சம் இருக்கும் போது குச்சி மட்டும் போதலாம். ஆனால் இப்பொது விளக்கு அவசியம்”

வேறு வழி இன்றி அந்த விளக்கை வாங்கிக் கொண்டு மறு கையில் குச்சியையும் சரியாக ஊன்ற முடியாமல் அந்த இளைஞர் தடுமாறிச் சென்றார். ஒருவர் அவர் மீது மோதினார். “என் கையில் விளக்கு இருக்கிறதே. நீங்கள் கவனிக்க வில்லையா?”

“விளக்கா? அது அணைந்தது கூடத் தெரியாமல் நீ நடக்கிறாயே? நீ இதை ஏற்றும் போது கவனம் கொண்டிருந்தால் நீண்ட நேரம் வந்திருக்கும்.”

“ஐயா. இது என்னுடையது இல்லை. இரவல்’

“இரவலா ? அதான் துன்பப் படுகிறாய்”

ஜென் நமது மனம் அதன் எண்ணங்கள் எல்லாமே அடிப்படையில் இரவல் வாங்கப் பட்டவை என்கிறது. சுகமும் துக்கமுமாகத் தோன்றுபவை நமக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட அல்லது பாரம்பரியமாக நம் மனம் பழக்கப் படுத்தப் பட்ட மேற்பூச்சுக்களே. தன்னை உணரும் தேடலின்றி புறவயாமான நோக்கில் சுகமும் துக்கமுமாய், பெருமையும் சிறுமையுமாய் அலை பாய்ந்து ஒரு ஊடாடும் வெறுமையைச் சுமக்கிறது மானுடம்.

காலம் காலமாக ஜென் இந்த வெறுமையை எப்படி எதிர் கொண்டது என்பதை ஜென் மரபுச் சிந்தனையாளரின் கவிதைகள் சுட்டுகின்றன. ஜென் வழி ஆன்மீகத் தேடலை புரிந்து கொள்ள ஜென் கவிதைகள் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியுடன் வழிகோலுகின்றன. கால வரிசைப்படி இக்கவிதைகளையும் ஜென் கவிஞர்களையும் இக்கட்டுரைத் தொடரின் வாயிலாகத் தரிசிப்போம்.

Series Navigationநினைவுகளின் தடத்தில் – (72)பூமராங்
author

சத்யானந்தன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    அனானி says:

    {ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம்.}
    தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு என்றெல்லாம் இருக்கலாம், அது என்ன இந்திய மொழிபெயர்ப்பு?

  2. Avatar
    ramani says:

    It is remarked in the 3rd para that neither the religeons nor the conventions nor the mutts have helped the spiritually inclined to have a serious pursuit on ‘Aanma’, furhter lamenting that there have been no ‘sign boards’ planted which, if done, would have obviated life’s burden of immeasurable vaccuum.
    But while attempting to define zen taking help from Suzuki, it is said that zen is digging deep in to oneself duly ‘rejecting’ all the religeon-created doctrines.
    If this so, for one who is in a rejection mode, how the sign board etc would have helped him and how his world would have been a garden of love for the humankind?
    Even the present zen himself will be pushed into oblivion by the tomorrow’s zen as a zen is a perpetual rejector!
    We can reject something only on fully understanding the uselessness of that something. Ironically, history is full of proof that rejected materials have happened to be the foundation for the rejector’s own castles.
    It has become a fad to blindly discard all our ancient treasures. The best service one can do is to find out the “forced entries” that have crept into the original pristine thoughts.

    1. Avatar
      P Srinivasan says:

      I think the author is not rejecting the traditional paths but merely airs his own personal perception that there is no tangible effect of the prevalent practices and religions on the individuals search of ‘Aanma’

Leave a Reply to P Srinivasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *