பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

This entry is part 20 of 29 in the series 3 நவம்பர் 2013
    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்
    நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்
     குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணும் நிலையில்  பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் அதன் அடிப்படையில் அரசியலில் உருவாகும் முழக்கங்களும்
     பல லட்சம் பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்வதில் முன்னணி வகிக்கும் மாநிலம் தான் நல்லாட்சியின் எடுத்துகாட்டு என்று போர் முழக்கங்கள் உரக்க கொட்ட துவங்கி விட்டன
     பெண் சிசுகொலை பற்றிய கேள்விகளே எழும்பாதவண்ணம் நல்லாட்சி நல்லாட்சி என்ற கூக்குரல்கள் இந்தியா முழுவதும் எழுப்பபடுகின்றது.
      மக்கள் ஆட்சியோ,மன்னர் ஆட்சியோ,சர்வாதிகாரமோ,எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சியின் அடிப்படையான மக்கள் தொகை வளர்ச்சியில்  இயற்கையாக அமையும் பாலியல் சமநிலையை மாற்றும் செயற்கையாக பாலியல் சமமின்மையை உருவாக்கும்  பாலியல்ரீதியான சிசுகொலைகளை தடுப்பதில் இந்தியாவில் கடைசி இடங்களில் உள்ள ஆட்சி நல்லாட்சி என்று புகழப்படுவதில் இருந்தே சங்க பரிவாரங்கள் பெண்களுக்கு தரும் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
     Child Population and Decadal Growth by Residence – Persons
censusindia.gov.in/2011-prov-results/…/Gujrat/7-child29-45.pdf – Cached – Similar

மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/

Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011

 2001 ஒ 2011 ஒ ஆண் பெண் சதவீதத்தில் சில லட்சம் பெண் குழந்தைகள் குறைவதில் என்ன மாற்றமும் இல்லையே
    மோசமான ஆட்சிகள் என்று தூற்றப்படும் மாநிலங்களில் கூட இவ்வளவு பெண் குழந்தைகள் குறைவது இல்லையே.அதுவும் மோடிக்கு மிகவும் ஆதரவு இருக்கும் குஜராத் நகர்ப்புறம் கிராமங்களை விட பெண் சிசுக்களை கொல்வதில் இந்தியாவில் முதலிடத்திற்கு மிகவும் அருகில் தான்
http://censusindia.gov.in/…/profiles/en/IND024_Gujarat.pdf
  ஹிந்துத்வா ஆதரவாளர்கள் எதனால் குஜராத் மிக சிறந்த ஆட்சி நடைபெறும்  முதன்மை மாநிலம் எனும் வாதத்திற்கு ஆதரவாக பல புள்ளி விவரங்களை (உண்மையை பற்றி கவலைப்படாமல்)அள்ளி வீசுவார்கள்
  விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்

இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

  எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூட மாநிலங்களில்  சில லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
   சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
     பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
   மற்ற மாநிலங்களோடு  ஒப்பிடும் போது/மதமாற்றிகள் வெற்றி பெற்ற மாநிலம் என்று அவர்களால் தூற்றப்படும் கேரளம்,அவர்களின் கைக்கூலிகள் என்று ஏசப்படும் திராவிட கட்சிகளின்  தாக்கம் உள்ள தமிழகத்தில் ஆண்-பெண் சதவீதங்கள் பெண் சிசுகொலைகள் நடக்காத நாடுகளின் சதவீதங்களுக்கு அருகில் இருப்பது எதை காட்டுகிறது  ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஹிந்துத்வா கட்சிகள்  வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.

http://www.youngmuslimdigest.com/society/06/2008/census-of-india-reading-between-the-lines/

சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா

  லட்சக்கணக்கில் பெண் கரு/சிசுகொலைகள் நடைபெறும் மாநிலமும்,அதை கண்டு கொள்ளாத ஆட்சியும் தான் சிறந்த மாநிலமும்,நல்லாட்சியுமா
   இந்த நிலை நாடு முழுவதும் ஏற்பட தான் அந்த மாநிலத்தை எடுத்துகாட்டாக எடுத்து கொள்ள சொல்லி கூக்குரல் எழுப்பபடுகிறதா

பெண் கருகொலைகளை பற்றி கவலைப்படாத,லட்சக்கணக்கில் பெண்கள் பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் அழிக்கபடுவதை தடுக்க இயலாதவர் தான் இந்தியாவை உய்விக்க வாராது வந்த மாமணி என்று வாய்கூசாமல்  போர்குரல் எழுப்ப எப்படி தான் மனசு வருகிறதோ

Series Navigationஅணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்நினைவலைகள்
author

பூவண்ணன்

Similar Posts

9 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //பெண் கருகொலைகளை பற்றி கவலைப்படாத,லட்சக்கணக்கில் பெண்கள் பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் அழிக்கபடுவதை தடுக்க இயலாதவர் தான் இந்தியாவை உய்விக்க வாராது வந்த மாமணி என்று வாய்கூசாமல் போர்குரல் எழுப்ப எப்படி தான் மனசு வருகிறதோ….//
    என்று கேள்வி கேட்கும் திரு.பூவண்ணன் அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்க ஒரு ஹிந்து மத காவலர்கள் கூட வரவில்லையே ஏன்? ஒரு வரி கல்லடித்து ஓடும் நம்ம பாண்டியன் ஸாரைக்கூட இந்தப்பக்கம் பார்க்க முடியவில்லை! அப்ப பூவண்ணன் சொல்வதெல்லாம் உண்மையைத்தவிர வேறில்லை.குஜராத்தில் ஊதிப்பெருக்கப்படுவது காங்கிரஸ் சொல்வதுபோல் பாப்பா பலூன்.கோயாபல்ஸ் தத்துவப்படி தொடர்ந்து பொய்யைச் சொன்னால் அது உண்மையாகிவிடும். மாங்கொட்டையை புதைத்தவுடன் மரமாகி கனிதரும் மோடி வித்தை, செங்கோட்டை போக எல்லா பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடத்தான் செய்யும். “ இந்தியா ஒளிர்கிறது” என்று வாய் கூசாமல் உளரியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // திரு.பூவண்ணன் அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்க ஒரு ஹிந்து மத காவலர்கள் கூட வரவில்லையே ஏன்? //

      தான் புடிக்கிற முயலுக்கு மூணு காலுதான்-ன்னு சாதிக்கிற பேர்வழிகளிடம் என்ன பேசியும் பயனில்லை என்ற காரணமாக இருக்கலாம் ;

      வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு எதுவுமே இல்லை என்ற தெளிவாக இருக்கலாம்.

  2. Avatar
    paandiyan says:

    அட இதை விடுங்கள். நான் சொல்லப்போவது வேறு. என் நண்பன் மூலமாக எனக்கு ஒரு ஆஃபர் வந்தது.. என்ன வென்றால் போது தேர்தல் வரை குஜராத் , மோடியை குறை சொல்லி கொண்ட எல்லா இணயத்திலும் வம்பு இழுக்க வேண்டும் என்று. இதற்க்கு குறிப்பிட்ட பின்புலம் கொண்டவர்கள் நெறைய கூலி தருவதா சொன்னான். காறி துப்பி அனுப்பி விட்டேன்

  3. Avatar
    paandiyan says:

    டெல்லி கற்பழிப்பில் சாதனை படைத்த ஒரு மாநிலம் முக்கியமாக காங்க்ரெஸ் ஆட்சி நடக்கும் மாநிலம் — ஆகையால் கற்பழிக்க வந்தால் அடங்கிவிடுங்கள்.

    தமிழ்நாடு குடிய்யில் நம்பர் ஒன்று — முக்கியமாக BJP இல்லாத ஒன்று – ஆகவா குடிப்பதில் தவறு இல்லை .
    ஆனால் குஜராத் ! குஜராத்.. அய்யோ…….. குஜராத்.. அய்யோகோ

  4. Avatar
    paandiyan says:

    ஷாலி – பரந்த வாசிப்பு அனுபவம் உங்களுக்கு இருக்கா என்று எனக்கு தெரியாது. இது வயிறு எறிட்சலின் உட்சகட்டம் என்று மட்டும் புரியும் எனக்கு . இதோ உங்களுக்கு;
    http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_2.html
    * மறக்காமல் பின்னோட்டத்தில் சட்னி ஆனதையும் பாருங்கள் . முடித்தால் லல்லு விசயத்திலும் அங்கு

  5. Avatar
    poovannan says:

    பாண்டியன் சார்

    பெண்கள் எல்லோரும் இப்போது டெல்லிக்கு படிக்க,வேலைக்கு செல்ல விரும்பாமல் குஜராத்திற்கு செல்கிறார்களா

    டெல்லியில் படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கு கூட குஜராத்தில் கிடையாது.

    மேலே குஜராத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் பற்றிய தரவும் இருக்கிறது.பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கொல்லபடுவதில் முதலிடத்திற்கு போட்டி போடும் மாநிலம், பெண்கள் படிப்பு,வேலைவாய்ப்பு போன்றவற்றில் கடைசிக்கு அருகில் உள்ள மாநிலம் பற்றிய உங்கள் பெருமிதம் வியக்க வேண்டிய ஒன்று

    இல்லை குஜராத்தில் பெண் சிசுக்கள் அதிகம் பிறக்கின்றன.மோதியின் மாயாஜாலத்தால்,நல்லாட்சியால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்திற்கு முன்னேறுகிறது குஜராத் என்று ஏதாவது தரவுகள் இருந்தால் தூக்கி வீசுங்களேன்

    கல்வியில் ,வேலைவாய்ப்பில் 2001 மற்றும் 2013 இடையே மோடியின் நல்லாட்சியின் காரணமாக அதிகமான பெண்களின் சதவீதத்தை விட்டு எறிந்தால் அவரின் புகழ் குறையவா போகிறது

    வீட்டினுள் நடக்கும் வன்கொடுமைகளை பற்றி புகார் தெரிவிக்கும் அளவிற்கு,உறவினர்களால் நடத்தப்படும் கொடுமைகளை மூடி மறைக்காமல் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் இன்னும் மாறவில்லை.அந்த நிலையிலும் பெண் வேலைவாய்ப்பு ,கல்வியில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் நிலையை கூட எட்டாத குஜராத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு குறைவு கிடையாது

  6. Avatar
    paandiyan says:

    //பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கொல்லபடுவதில் முதலிடத்திற்கு போட்டி போடும் மாநிலம்//

    ஒரு சொலவடை உண்டு. தன் முதுகு அழுக்கு முதலில் பாராப்பா என்று, இனி நேற்ரய அழுக்கு :-

    09 November 2013 02:54 PM IST
    பெண் குழந்தை பிறந்தததால் மணம் உடைந்த தந்தை சிதம்பரம் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த 5 வருடம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது 2வது முறையாக பானுமதி கர்ப்பமாகி பிரசவத்திற்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பானுமதிக்கு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மணம் உடைந்த கணவர் செல்வம் மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  7. Avatar
    பூவண்ணன் says:

    பெண் சிசுக்களை கொல்லும் வழக்கம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.அதை குறைத்த மாநிலங்கள் எவை என்பதை பாருங்கள்.ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் குஜராத்தில் குறையும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றிய தரவுகளை எடுத்து வைத்தால் அதற்கு இது தானா பதில்

    முத்துகுமார் சார் தரவுகளுக்கு பதிலாக தரவுகளை தருவதில் என்ன தயக்கம்.தேர்தலில் முன் நிறுத்தப்படும் ஒருவரை,அவரின் ஆட்சியை பற்றிய கருத்துக்களை எழுதுவது தவறா

    குஜராத்தில் தான் பெண் சிசுகொலை மிகவும் குறைவு.அங்கு பெண்களின் சதவீதம் அதிகம் என்று தரவுகளை எடுத்து விட்டால் இன்னும் பல வோட்டுக்கள் அவருக்கு ஆதரவாக விழாதா

  8. Avatar
    பூவண்ணன் says:

    பாலியல் வன்முறையை எதிர் கொண்டு தைரியமாக வாழுங்கள்.அதற்கு பயந்து கொண்டு படிப்பை,வேலைவாய்ப்பை,கனவுகளை முடக்கி கொள்ளாதீர்கள்.வீட்டிற்குள் அடங்கி கிடப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வராதீர்கள்.
    நிர்வாணப்படுத்தப்பட்டு,ஆணுறுப்புகளில் பலரால், பலரின் முன் அடிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கைக்கு குறைவு கிடையாது.இதை காரணமாக் கொண்டு அவர்கள் முடங்குவதில்லை என்று தானே ஐயா கூறினேன்.
    இதற்க்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு

    குடியில் முதல் மாநிலத்திற்கு கேரளத்திற்கும்,பஞ்சாபிற்கும் கடும் போட்டி.அடுத்து மகாராஷ்டிரம்.தமிழக அரசுகள் அதன் மூலம் வரும் வருவாயை சீர் செய்ததால் அதிக வருமானம் வருகிறது.அது கண்ணை உறுத்துவது சரியான ஒன்றா எனபது தவறா

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *