தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?

This entry is part 19 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

 

ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன்.

எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும்.

ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது.

//
“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”

– என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.
//

ஆனால், இந்த கட்டுரை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுதியது என்று சொல்வது தான் ஒரேயடியாக இடிக்கிறது. ஏனெனில், அடிப்படை ஜர்னலிஸ்ட் ஒழுக்கம் எதுவுமின்றி, தான் தோன்றித்தனமாக, பிரச்சார கட்டுரை போல, ஒரு பக்க சார்புடனும், suppresso veri suugesto falsi என்ற அடிப்படை கருதுகோளுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு தி இந்து இந்த வேலையில் உச்சகட்டத்தில் இருந்தாலும், இவரும் அந்த உச்சகட்ட பிரச்சாரத்துக்கு முயற்சிக்கிறார்.

முதலாவது வரியிலிருந்து பக்கச்சார்புடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை, ஆய்வுக்கட்டுரை என்று அவரே சொல்லமாட்டார். ஆனால், இது போலத்தான் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளின் தலையங்கங்களே இருக்கும்போது, இந்த வகை பிரச்சார கட்டுரைகள் தலையங்கங்களுக்கு ஈடாகவும், ஆய்வுக்கட்டுரை என்றும் தமிழ்நாட்டு அளவில் கூறிவிடலாம்.

//
இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
//

மூன்று பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உடனே கொல்லப்படவில்லை. கடத்தப்பட்டார்கள். ஜூன் 12, 2014 அன்று இவர்கள் கடத்தப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்தை மேற்குக்கரை பகுதியில் அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதால் வரும் பிரச்னை என்று இஸ்ரேல் கூறியது. ஜூன் 14 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள், தங்கள் தேடுதலில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை கைது செய்தார்கள். ஜூன் 15ஆம் தேதி, சுமார் 86 அரபுகளை கைது செய்தது. காஸாவுக்குள் செல்லும் வியாபார வண்டிகளும், மக்களும் நிறுத்தப்பட்டனர். இதனால், ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக எந்த இடத்திலிருந்து ராக்கெட்டுக்கள் வருகின்றனவோ அந்த இடங்களை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. அதாவது இஸ்ரேல் பதிலடியாக காஸாவுக்குள் கண்ட இடத்தில் குண்டு வீசுவதில்லை. எந்த இடத்திலிருந்து ராக்கெட் வருகிறதோ அதனை குறி வைத்து, அந்த இடத்தை மட்டுமே அழிக்க முனைகிறது. அதற்கு முன்னால், அந்த இடத்தில் குண்டு வீசி ராக்கெட் தளத்தை அழிக்கப்போகிறோம் என்று எச்சரிக்கையும் விடுகிறது. (இதனை என் டி டி வி வெளியிட்ட வீடியோவிலும் காணலாம். ஸ்ரீனிவாசன் ஜெயின் என்னும் என் டி டி வி நிருபர் காஸாவிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில், அந்த இடத்தில் குண்டு வீசப்போவதாக இஸ்ரேல் அறிவித்தது என்பதையும் குறிப்பிடுகிறார். கவனிக்கவும்)

ஆகவே இஸ்ரேல் மேற்குக்கரை பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தொடங்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் காணாமல் போன இஸ்ரேலியர்களை தேடி மீட்பதை மட்டுமே செய்தார்கள். காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் அனுப்ப ஆரம்பித்த பின்னாலே, அந்த இடங்களை இஸ்ரேல் அழிக்க முயன்றிருக்கிறது. இதனை இந்த மூத்த பத்திரிக்கையாளர் வசதியாக மறைத்துவிடுகிறார். suppressio veri!

//
கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?
//

இதனை suggestio falsi என்ற வகையில் சேர்க்கலாம். இந்த வரிகளை படித்தால், இஸ்ரேல் அங்கே உருவானதால் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள் மட்டுமே என்பது போலவும், அகதிகளாக்கப்பட்டது பாலஸ்தீன அரபுகள் மட்டுமே என்பது போலவும் உங்களுக்கு தோன்றினால், மூத்த பத்திரிக்கையாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று நிச்சயம் சொல்லலாம்.

உண்மை என்ன? அங்கு நடந்த போர்களில் இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். அரபு நாடுகளில் இருந்த யூதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக இஸ்ரேல் வந்தார்கள்.
முதலாவது 1948- அரபு இஸ்ரேலிய போரில் சுமார் ராணுவ வீரர்களாக 6000 இஸ்ரேலியர்களும், 3700 அரபுகளும் இறந்தார்கள். பொது மக்களாக இருந்த 15000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த போரில்தான் மிக அதிகமாக யூத மக்கள் உயிரிழந்தார்கள்.
அன்றிலிருந்து கணக்கிட்டால், சுமார் 25000 யூதர்கள் இந்த போர்களில் இறந்திருக்கிறார்கள். சுமார் 92000 அரபுகள் இந்த போரில் இறந்திருக்கிறார்கள். இந்த போரினால் சுமார் 10 லட்சம் யூதர்கள் அகதிகளாக அரபு பெரும்பான்மை நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த யூதர்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. இஸ்ரேலின் அங்கமாக எடுத்துகொள்ளப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், அரபு நாடுகள் இந்த பாலஸ்தீனர்களை அகதிமுகாம்களில் இழி நிலையிலேயே வைத்திருக்கின்றன.பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய அரபுகளுக்கு அடிப்படை உரிமைகளை கூட லெபனான், ஜோர்டன், சவுதி அரேபியா, கட்டார், குவாய்த் எகிப்து போன்ற நாடுகள் தர மறுக்கின்றன. ஜோர்டனில் பெரும்பான்மையாக இருக்கும் பாலஸ்தீன அரபுகள், தேர்தலில் நிற்க உரிமை கிடையாது. அகதி முகாம்களில் அடைக்கபப்ட்டிருக்கும் இவர்கள் அந்த அகதி முகாம்களிலிருந்து வெளியேறக்கூடாது, வெளியிடங்களில் அவர்களுக்கு வீடு விற்கக்கூடாது, வாங்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை இந்த அரபு அகதிகள் மீது மற்ற அரபு நாடுகள் விதிக்கின்றன. இந்த செய்திகளை ஏன் இந்த மூத்த பத்திரிக்கையாளர் தமிழக மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார்?

இதுதான் அரபுகள் அரேபியாவிலிருந்து வெளியேறி ஆக்கிரமித்துள்ள நிலங்கள். இதில் இந்த அரபு மக்களுக்கு இடமில்லையா?

map_tinyisrael

இந்த படத்தில் ஈரான், சோமாலியா அரபு நிலங்களாக குறிக்கப்பட்டுள்ளது தவறு. மற்ற நிலங்கள் பெரும்பான்மை அரபு நிலங்களே.

 

//
“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.

ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.

எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.

எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”

– என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.
//

இது போன்ற பிதற்றல் மூத்த பத்திரிக்கையாளர்களிலிருந்துதான் வருமோ என்னவோ? ஆனால், சுமார் 3000 வருட புராணக்கதையையும், 2000 வருட வரலாற்றையும் கலந்துகட்டி நான்கே வரிகளில் பொய்யும் புளுகுமாக சொல்லுவதும் ஒரு திறமைதான்.

ஜியோனிஸம் 1897இல் துவங்கப்பட்டது மத நம்பிக்கையுள்ள யூதர்களால் அல்ல. கடவுள் மறுப்பு யூதர்களால் அது துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் மத நம்பிக்கையுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு போவதை எதிர்த்தார்கள். ஜூலை 1845இல் பிராங்க்பர்ட்டில் நடந்த ரப்பைகள் மாநாடு இஸ்ரேலுக்கு திரும்ப போவதை ஒருமனதாக எதிர்த்தது. ஏனெனில், மெஸியா வராமல், திரும்ப இஸ்ரேலுக்கு செல்வதே மத நம்பிக்கைப்படி தவறானதாகும். இன்றும்கூட தீவிர மத நம்பிக்கையுள்ள யூதர்கள் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பெருந்திரளாக, முக்கியமாக நியூயார்க்கில், போராட்டத்தில் கலந்துகொள்வதை பார்க்கலாம்.

மத நம்பிக்கையற்ற யூதர்களால் துவங்கப்பட்டதாக இருந்தாலும், அந்த தலைவர்கள், பெரும்பான்மை யூதர்கள் மத நம்பிக்கையுடையவர்கள் என்ற உணர்வும், இஸ்ரேலும் யூதர்களும் கலாச்சார ரீதியில் பிணைக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்தே இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் பிரிட்டன் உகாண்டாவில் அவர்களுக்கு ஒரு வாழ்நிலம் தருவதாக சொன்னபோதும் அதனை நிராகரித்தார்கள்.

//

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.

“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.
//

தவறு.
பிலிஸ்தினியர்களும் பாலஸ்தீனர்களும் ஒன்றல்ல. பிலிஸ்தினியர்களை பாலஸ்தீனத்தின் பழங்குடிகள் என்று ஒரு போதும் பாலஸ்தீன அரபுகள் தங்களை கூறிக்கொண்டதில்லை. பிலிஸ்தீனியர்கள் பின்னால், யூதர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களை பாலஸ்தீனர்கள் என்று சொல்வது தவறானது. 2000 வருடங்களுக்கு முன்னால், ரோம அரபு போர் நடக்கும்போது, அரபு இனத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இஸ்ரேல் நிலத்தில் இருந்ததில்லை. சிரியா அரபு நாடுதான் என்று தனது அறிவையும் பறை சாற்றுகிறார். சிரியா நாட்டில் பின்னால் வந்த அரபுகளின் ஆக்கிரமிப்பால் அது இன்றைக்கு அரபு தேசமாக கூறப்படுகிறது. அது முன்பு அஸ்ஸிரிய தேசம். ஜோஸபஸின் வரலாற்றில் சிரியர்களும் அரபியர்களும் தனித்தனியாகவே குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேலுக்கு கீழே இருப்பது அரபு தேசமல்ல. அது எடாம் தேசம். எடாமைட்டுகள் இன்று அரபு மொழி பேசுவதால் அரபியர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம். அல்லது எடாமைட்டுகள் கொல்லப்பட்டு அந்த இடத்தை அரபுகள் ஆக்கிரமித்திருக்கலாம். அதே போல இன்றைய ஈராகும் அரபு நாடு அல்ல. அது முன்பு நபாட்டு தேசம். நபாட்டியர்கள் கொல்லப்பட்டு அங்கு அரபியர்கள் ஆக்கிரமித்திருக்கலாம். இன்றைய ஜோர்டானும் அரபு தேசமாக குறிப்பிடப்பட்டதே இல்லை. அது மோயப் தேசம். அவர்கள் மோயபைட்டுகள் என்றே குறிப்பிடப்பட்டார்கள். இன்று அந்த இடங்களில் இருப்பவர்கள், அரபு மொழி பேசுவதாலேயே அரபிய நிலமாகிவிடுமா?

//
போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.

அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.
//

இன்னொரு பேத்தல். பெல்பார் அறிவிப்புக்கும், பிரான்ஸ் சிரியாவை எடுத்துகொண்ட பின்னாலும், அரபுகள் யூதர்களுக்கு எதிராக கலவரத்தில் இறங்கிய காரணத்தால், யூதர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை கட்டுப்படுத்தியது. இத்தனை யூதர்கள் மட்டுமே வரலாம் என்று வரையறுத்தது. 1000 பவுண்டுகள் பணம் கொடுத்துவிட்டு வரலாம் என்று அதிலும் காசு பண்ணியது. இதனால் யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள யூதர்களிடம் பணத்தை வசூல் செய்து அதனை இவ்வாறு வரும் யூதர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியது. இவ்வாறு சுமார் 82000 யூதர்கள் பாலஸ்தீனம் வந்தார்கள். எவ்வளவு பணத்தை பிரிட்டன் பார்த்திருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு இருக்க, பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியேற்ற பிரிட்டன் தீவிரமாக இறங்கியது என்று திரிக்கிறார் இந்த மூத்த பத்திரிக்கையாளர்.

//
சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………
//

மேலும் ஒரு “மூத்த பத்திரிக்கையாளத்தனமான” வரிகள். இதற்கான பதில்கள் இந்த பதிவிலேயே இருக்கின்றன.

மற்றொன்று,
பாலஸ்தீனத்தை கைவிடலாமா என்ற தி இந்து தமிழ் கட்டுரை

 

இது அதிகாரப்பூர்வமான தி இந்து தலையங்கம். முன்னரே சொன்னது போல ஆங்கில தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.

//காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கான நிலப்பரப்பு மிகவும் குறுகியது. திட்டமிட்டு இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு களால் தங்களுடைய பகுதி நிலத்தை இழந்துவரும் பாலஸ்தீனர்கள் வேறு வழியில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடும் ஹமாஸ் இயக்கமும் இடநெருக்கடி காரணமாகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தபடி இஸ்ரேலியப் பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குகிறது. இதுதான் உண்மை என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும், இதையெல்லாம் சாக்காக வைத்துக்கொண்டு, தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல்.//

 

தி இந்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அப்பாவிகள் தமிழ்நாட்டில் நிறையபேர் இருக்கிறார்கள். இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

இதுதான் கூகுள் மேப்பில் பார்க்கக்கூடிய காஸாவின் விண்கோள் காட்சி.

gazamap

 

இதில் மஞ்சளாக இருக்கும் இடங்களில் யாரும் வசிக்கவில்லை. நரைத்தது போல, இருக்கும் சற்று க்ரேயாக இருக்கும் இடங்கள் மக்கள் வசிக்கும் கட்டிடங்கள். முடிந்தால் நீங்களே gaza , israel என்று போட்டு கூகுள் மேப்பில் பார்க்கலாம். நீங்கள் பார்ப்பது போல, மஞ்சள் இடங்களே அதிகம். க்ரேயாக இருக்கும் இடங்கள் நடுவே திட்டு திட்டாக இருக்கின்றன. மஞ்சள் இடங்கள் ஏறத்தாழ பாலைவனம். அங்கிருந்து ராக்கெட் வீசினால், பதிலுக்கு வரும் இஸ்ரேலிய ராக்கெட்டுகள் அந்த ராக்கெட் தளங்களைத்தான் தாக்கும். ஹமாஸ் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து ராக்கெட்டை அனுப்பி, பதில் ராக்கெட்டுகள் மூலம் இறக்கும் மக்களை காட்டி அனுதாபம் தேட முயல்கிறது. தி இந்து போன்ற இடதுசாரி, இஸ்லாமிய பயங்கரவாத பாசக்கார அண்ணன்கள், உண்மையை மூடி மறைத்து புளுகித்தள்ளுகின்றார்கள்.

கூடவே

//உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட.

//

என்று தர்மத்தை பற்றி பாடம் எடுக்கிறது தி இந்து. களமிறங்குவது என்றால், அது இஸ்ரேலுக்கு எதிராக, அரபுகளுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இறங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகவும், ஈராக்கில் கொல்லப்படும் சிறுபான்மை யாஜிதி மக்களுக்காகவும், கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்க வேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை அப்பாவி என்றுதான் உலகம் சொல்லும். பாகிஸ்தானில் கொல்லப்படும் இந்துக்களுக்காகவும் கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்கவேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை பார்த்து உலகமே நகைக்கும்.

//பொருளாதாரரீதியாக இந்தியாவுக்கு முக்கியமான ஒரு பிராந்தியம் மேற்காசியா. அங்கே தொடர்ந்து அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீனப் பிரச்சினைதான். எனவே, அதை நீடிக்க விடாமல் சுமுகமாகத் தீர்த்துவைப்பதில் முக்கியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு!//

அப்படி போடு! இந்த மாதிரி இந்திய அரசுக்கு ஒரு இந்திய பத்திரிக்கை அறிவுரை செய்யுமென்றால், அதனை என்ன சொல்லலாம்? அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீன பிரச்னையா? அல்லது யூதர்களை அழிக்கத்துடிக்கும் அரபு இனவெறியா? என்றாவது இந்த பத்திரிக்கைகள் அரபுகளின் பிடிவாத குணத்தையும், யூதர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் மத/இன வெறியையும் கண்டித்திருக்கிறார்களா?

வாளாவிருந்தால் எப்படி? என்ற தினமணி தலையங்கம்

 

//ஹிட்லரின் நாசிப் படைகளால் வேட்டையாடப்பட்டு, தங்களுக்கு என்று நாடு எதுவும் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்கிற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உருவாக்க முற்பட்டதே ஒரு சரித்திர மோசடி. //

இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உருவாக்க முற்படவில்லை. இந்த வரியே தவறு. இஸ்ரேலியர்கள்தான் தங்கள் நாட்டை மறுபடியும் உருவாக்கிக்கொண்டார்களே தவிர மற்ற நாடுகள் அதற்கு முடிந்தவரை தடைக்கற்களைத்தான் ஏற்படுத்திகொண்டிருந்தார்கள். 2000 வருடங்களுக்கு முன்னால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டாலும், அவர்கள் அந்த இடத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடமும், அடுத்த வருடம் இஸ்ரேலில் சந்திப்போம் என்றுதான் உறுதிமொழி எடுத்துகொண்டிருந்தார்கள். யூதர்கள் எங்கே தங்கியிருந்தாலும், தங்களை இஸ்ரேலின் மக்கள் என்றுதான் அழைத்துகொண்டார்கள். பணம் இருந்தவர்களும், பலம் இருந்தவர்களும், விரும்பியவர்களும், சமூக, அரசியல் சூழ்நிலை மாறியபோதெல்லாம் இஸ்ரேலுக்கு சென்றுகொண்டே இருந்தார்கள். இரண்டாயிரம் வருடமாக அவர்கள் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறார்கள். 1492இல் கத்தோலிக்க வாடிகனும், ஸ்பெயின் அரச குடும்பமும் இணைந்து யூதர்களை ஸ்பெயினிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றியபோதும், அவர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே இஸ்ரேல் உருவாக்கப்படும்போது அங்கு யூதர்களே இல்லை என்பது போன்ற suggestio falsi விளையாட்டுகள் யாரை குஷிப்படுத்த எழுதப்படுகின்றன? இரண்டாம் உலகப்போர் முடியும்போது, இஸ்ரேலில் 33 சதவீத மக்கள் யூதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் பலவேறு இடங்களிலிருந்து துரத்தப்பட்டு அங்கு சென்றிருந்தார்கள்.
முதலாம் உலகப்போரின் முடிவில் அது பிரிட்டனின் மண்டேட் (mandate) கீழ் வந்தது. 1920இலிருந்து 1948 வரைக்கும் இஸ்ரேல் பிரிட்டனின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில் யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் பெரும் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்ப யூதர்கள் பலர் இஸ்ரேலுக்கு ஓடியபோது, அவர்கள் வரக்கூடாது என்று ஒரு வருடத்துக்கு 15000 யூதர்கள் மட்டுமே இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டம் போட்டது. அதிலும் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்தது. அங்கிருந்து தப்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு மொரீஸியஸ் போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஹிட்லரின் வெறியாட்டம் அதிகரித்தபோது அங்கிருந்து தப்ப அவர்கள் உதவாக்கரை தோணிகளிலும் படகுகளிலும் இஸ்ரேலுக்கு வந்தபோதும், அந்த படகுகளை பிரிட்டனின் கடற்படையும், சோவியத் நீர்மூழ்கி கப்பல்களும் அழித்தன. போருக்கு பின்னால், ஐரோப்பாவில், 2,50,000 யூதர்கள் அகதி முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ருமன் போன்றவர்கள் கேட்டுகொண்டபின்னாலும், சுமார் 100000 பேர்களே பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிரிட்டன் யூதர்கள் இஸ்ரேலுக்கு வரக்கூடாது என்ற தன் தடையை விடவே இல்லை.

இதனால், சில யூதர்கள் பிரிட்டனுக்கு எதிராக வன்முறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். பல பிரிட்டன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான யூத பயங்கரவாதத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சம் பிரிட்டிஷ் போர்வீரர்கள் இஸ்ரேலுக்குள் நிற்கும் நிர்ப்பந்தம் தோன்றியது.

இந்த இடத்தில் யூத பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிட வேண்டும். யூதர்களிலும் பயங்கரவாத அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. 1940களில் lehl அமைப்பும் irgun அமைப்பும் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டிருக்கின்றன. இது வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட பல பிரிட்டிஷ் தலைவர்களை ஜியோனிஸத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. ஆனால், யூதர்களின் முக்கிய அமைப்பான Jewish Agency, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை 1940 முதற்கொண்டு எடுத்து வந்திருக்கிறது. வன்முறைக்கு எதிராக வன்முறை எடுக்கவேண்டாம் என்று இந்த ஏஜென்ஸி தன் உறுப்பினர்களை வெளிப்படையாக கேட்டுகொண்டிருந்திருக்கிறது. அப்படி எடுத்தால் அது உள்நாட்டு போரில்தான் முடிவடையும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், யூத வன்முறை கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளை கொலை செய்ததுதான், இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை தூண்டியது என்று கூறுவார்கள். இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த பின்னாலும், இஸ்ரேலில் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. குஷ் எமுனிம் Gush Emunim (1979-84), கெஸட் (keshet) 1981-89, Bat Ayin (2002), Brit HaKanaim (1950-53), Kingdom of Israel(1950) ஆகிய அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும், கடுமையாக இஸ்ரேலிய அரசால் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிட்டன் தான் இஸ்ரேலிலிருந்து வெளியேற முடிவு செய்ததை ஐநாவுக்கு அறிவித்தது. ஐநா, United Nations Special Committee on Palestine http://en.wikipedia.org/wiki/UNSCOP என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் இந்த பிரச்னைக்கு சம்பந்தப்படாத நடுநிலை நாடுகள் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லாவாகியா, குட்டமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், உருகுவாய், யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்க அழைக்கப்பட்டன. (இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அப்துர் ரஹ்மான், உலக யூதர் பிரச்னையை பாலஸ்தீனத்துக்கு கொண்டுவரக்கூடாது என்று எதிர்பார்ப்பது போல பேசியிருக்கிறார்)
இந்த அமைப்புதான் இஸ்ரேலை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி அரபுகளுக்கும் ஒரு பகுதி யூதர்களுக்கும், ஜெருசலம் நகரை ஐநாவின் கீழும் வைத்துகொள்ள பரிந்துரைக்கிறது. அதனை ஐநாவும் ஒப்புகொள்கிறது.

இப்படி இருக்கையில் இந்த ஐந்து நாடுகளும் ஏதோ சதி செய்து அங்கு யூத அரசை உருவாக்கியிருப்பதாக எழுதியிருப்பது, தினமணிக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று சிந்திக்கவைக்கிறது.

//பாலஸ்தீனியத்திலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பது மட்டுமல்ல இஸ்ரேலின் நோக்கம். இஸ்ரேலிய மக்களவையான “நெஸ்ùஸ’ உறுப்பினர் ஆயிலெட் ஷாகேத் கூறுவதுபோல, ஆண், பெண், குழந்தைகள் என்று ஒருவர்விடாமல் எல்லா பாலஸ்தீனியர்களும் அழிக்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும் என்பதுதான் திட்டம்.//

ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான ஆயிலெத் ஷாகெத்தை இஸ்ரேலின் சர்வாதிகாரியாக மாற்றியிருக்கும் தினமணியை பாராட்டலாம். இதே மாதிரி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உளறுவாயர்களும், குரூரமானவர்களும் எம்பிகளாகவும் எம் எல் ஏக்களாகவும் நிச்சயம் இருக்கிறார்கள். அப்படி உளறும் எல்.எல்.ஏக்கள் , எம்பிகள் உளறுவதெல்லாம், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு ஆகிவிடுமா?

http://en.wikipedia.org/wiki/Ayelet_Shaked
ஆனால் ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான இவரது கருத்தையே இஸ்ரேலின் ராணுவ அரசியல் தலைமையின் கருத்தாக சொல்வது தினமணி என்ற ஒரு பத்திரிக்கை, ஒரு சாதாரண பிரச்சார கந்தல் பத்திரிக்கை நிலைக்கு இறங்கி தாழ்ந்துவிட்டதைத்தான் காட்டுகிறது.

//இந்தியாவின் பொருளாதாரம் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயில்தான் அடங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனிய சர்ச்சையில், சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோல வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.//

இறுதியில் வழக்கம்போல தி இந்து ஸ்டைலில் மேற்கு ஆசியாவிலிருந்துதான் எண்ணெய் வாங்குகிறோம், ஆகவே, அரபுகள் ஆதரவாகவும் இஸ்ரேலின் எதிர்ப்பாகவும் இந்தியா மாறவேண்டும் என்று கோரிக்கை. இதுதான் உண்மையான காரணமாக இருந்தால், அதற்கு ஏன் இந்த சுற்றிவளைத்து பம்மாத்து? நேரடியாக சொல்லவேண்டியதுதானே? இங்கே ஒழிக்கப்படுகிறவர்கள் இஸ்ரேலியர்கள்தான். ஆனாலும் அரபுகள் ஆதரவாக நின்றால்தான் நமக்கு பெட்ரோல் வரும். ஆகவே அரபுகள் சார்பாக நிற்போம் என்று உண்மையை சொன்னால் அது கொஞ்சம் பச்சையாக இருக்குமோ?

சுமுகமான பேச்சுவார்த்தை என்பது நான் முன்னரே குறிப்பிட்டது போலவும், 1948இலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுகொண்டிருப்பது போலவும் ஒன்றே ஒன்றுதான். யூத பெரும்பான்மையான ஒரு இஸ்ரேலை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஒப்புக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. அதற்காக தான் வெற்றிபெற்ற நிலத்தை திருப்பி கொடுக்கவும் இஸ்ரேலிய அரசு முன்வந்திருக்கிறது. அப்படி ஒரு யூத பெரும்பான்மை அரசே இருக்கக்கூடாது, அனைத்து யூதர்களும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கோரிக்கை. இதற்கு நடுவே ஒரு பேச்சுவார்த்தை இருக்கமுடியாது. இதில் யாருக்கு நீங்கள் அறிவுரை சொல்லவேண்டும்?
__

இந்த தலையங்கங்கள் போன்ற பிரம்மாண்டமான பொய்களால் இந்த பத்திரிக்கைகள், இந்திய முஸ்லீம்களை வெறியேற்றுவதை தவிர வேறு எதையும் சாதிக்கப்படப்போவதில்லை.

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இஸ்ரேல்-அரபு பிரச்னைதான் இருக்கிறது. அதனை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையாக அடையாள அரசியலாக ஆக்கி, அதனை பாலஸ்தீன இனம் என்று இருப்பதாக உருவாக்கி, அதற்கு இஸ்லாமை துணைக்கழைத்து, இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வெறியேற்றும் வகையில் எழுதும் இப்படிப்பட்ட கட்டுரைகளால் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சாதிக்க விரும்புவது என்ன?

இதே போன்ற வரிக்கு வரி புளுகும் பொய்யும் பக்கச்சார்புடனும் எழுதப்பட்ட இன்னொரு மூத்த பத்திரிக்கையாள கட்டுரை தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” என்ற பெயரில் வெளிவந்தது. வரிக்கு வரி, அது அரபுகளை விதந்தோதியும், இஸ்ரேலியர்களை பழித்தும் எழுதப்பட்ட வக்கிரமான கட்டுரைத்தொடர்.

கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் யூதவெறுப்பின் காரணம் அது மதத்தில் ஊடுருவிய, மத நம்பிக்கையோடு ஊடுருவிய பிரித்தறியப்பட முடியாத நிலைப்பாடு. கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அல்லாத இடது சாரிகளும், ஏன் இந்த வக்கிர நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? இவர்களுக்கும் பாலஸ்தீனத்துக்கும் என்ன சம்பந்தம்?

பாலஸ்தீனத்தில் இருப்பவர்கள் மனிதர்கள், அதனால் அவர்களுக்கு பரிந்து பேசுகிறோம் என்று பம்மாத்து விடும்போது, அதே இடதுசாரிகள் ஏன், நைஜீரிய கிறிஸ்துவர்களுக்கோ, தாய்லாந்தில் முஸ்லீம்களால் கொல்லப்படும் பௌத்தர்களுக்கோ, அல்லது கிறிஸ்துவர்களால் கொல்லப்படும், அவமதிக்கப்படும் கொரிய பௌத்தர்களுக்கோ, அல்லது முஸ்லீம்களால் விரட்டப்பட்ட காஷ்மீர இந்துக்களுக்கோ, பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்படும் கிறிஸ்துவர்களுக்கோ, அல்லது இந்துக்களுக்கோ, இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட பாலி இந்துக்களுக்கோ, அல்லது ஈராக்கில் அல்குவேதாவாலும் புத்தம்புது ஒரிஜினல் பிராண்டு காலிபேட்டாலும் கொல்லப்படும் ஷியா, யாஜிதி, கிறிஸ்துவர்களுக்கோ, மனித அந்தஸ்தை ஏன் இவர்கள் தருவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ( இந்தியாவின் இந்துக்கள் எல்லோரும் பார்ப்பன பாஸிஸ பயங்கரவாதிகள் என்று நம் அறிவுஜீவிகள் அறிவித்துவிட்டதால், அதனை பற்றி கேள்வி கேட்பதில் ஒரு பயனும் இல்லை. )

உதாரணமாக இந்த செய்திகளை பாருங்கள்.

1) நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கடந்த ஆறு மாதத்தில் 2053 பொதுமக்களை கொன்றிருக்கிறது.

2) பாகிஸ்தான் அரசு பலுச்சிஸ்தானில் நடத்தும் அடக்குமுறை ஆட்சியில் இதுவரை 1628 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,40,000 மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

3) பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியமான பக்தூனிஸ்தானில் கடந்த ஜூன் 15,2014இலிருந்து நடத்தும் ராணுவ நடவடிக்கையில்
570 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்து, அகதிகளாக கையேந்தி வாழ்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் இருக்கும் இந்துக்களுக்கும் பாரபட்சமான உதவி.

4) ஈராக்கில் தோன்றியிருக்கும், இஸ்லாமிய காலிபேட் யாஜிதிகள் எனப்படும் மக்களை படுகொலை செய்யப்போவதாக அறிவித்தே செயல்படுகிறது. இதுவரை 500 ஆண்கள் கொல்லபட்டிருக்கிறார்கள், 500 பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்டவர்கள் சிஞார் என்ற மலையில் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி இந்த படைகள் நிற்கின்றன. அவர்களை பட்டினி போட்டு கொல்வதற்கு.

சுமார் 2 லட்சம் ஈராக்கிய சிறுபான்மை மதத்தினர் இந்த இஸ்லாமிய காலிபேட்டுக்கு பயந்து தப்பி ஓடிகொண்டிருக்கிறார்கள்

உதவிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வந்தட்போது 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார்கள்.

இது போல இன்னும் எவ்வளவோ எழுதலாம்.

இவை எவற்றுக்காகவும் தி இந்து, அல்லது தினமணி, அல்லது மூத்த பத்திரிக்கையாளர்களோ தலையங்கங்கள் எழுதியோ, அல்லது இடதுசாரிகளோ போராடியோ பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கமாட்டீர்கள். அதே போலத்தான், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கீழ் யூதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள் வாய் மூடி இருப்பார்கள். பத்தோடு பதினொன்று என்று யூதர்கள் கொல்லப்பட்டால், நாலாம் பக்கத்தின் மூலையில் புரட்சிகர இஸ்லாமிய போராளிகளால், சதிகார யூதர்கள் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேலில் அமைதி வந்தது என்று எழுதினாலும் எழுதிவிட்டு மறந்துபோவார்கள்.

இது மட்டுமல்ல, இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும், முன்னாள் சிமி போராளிகளின் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும், சமீபத்தில் உதித்த ஆம் ஆத்மி கட்சியும் தமிழகம், டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், அரபுகளுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் ஆதரவாகவும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஷாருக்கான், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற மும்பை இந்தி நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் எவரும் காஷ்மீர இந்துக்களுக்காகவோ, அல்லது ஈழத்தில் இறந்த மக்களுக்காகவோ, அல்லது நைஜீரிய கிறிஸ்துவ குழந்தைகளுக்காகவோ, அல்லது பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்து துரத்தப்படும் இந்துக்களுக்காகவோ பேசியதில்லை. நான் இவ்வாறு இவர்களையும் மனிதர்களாக கருதுங்கள் என்று யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது உண்மை. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸாலும் அல்குவேதாவாலும் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக இந்திய ஷியாக்கள் போராடுவதில்லை. தெருக்களை அடைப்பதில்லை. கல்லெறிவதில்லை. அமர் ஜவான் ஜோதியை காலால் எட்டி உதைத்து உடைப்பதில்லை. ஆகவே ஈராக்கில் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக, இந்திய பத்திரிக்கைகளின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கட்டுரை வரைவதுமில்லை, அல்லது இந்திய அறிவுஜீவிகளோ போராட்டம் நடத்துவதுமில்லை. எவன் பேயாட்டம் போடுகிறானோ, அவனது சார்பினை எழுதத்தானே பத்திரிக்கைகள் இருக்கின்றன. Victim’s human rights are less important than the victimizer’s human rights என்பதுதானே இந்திய அறிவுஜீவிகளின் அடிப்படை கருதுகோள்.

இந்த மூத்த பத்திரிக்கையாளர்களின் இரக்கத்துக்காகவோ, அல்லது அவர்கள் கும்மிடி பூண்டியில் ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் கம்யூனிஸ்டுகள் நடத்தும் போராட்டங்களுக்கோ காத்துகொண்டு, தங்களது குழந்தைகளை ஹமாஸ் கொல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்க தயாராக இல்லை. அவர்கள் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கற்றுகொண்ட ஒரே ஒரு விஷயம், தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திகொள்ளவேண்டும், தங்களை தாங்கள்தான் காத்துகொள்ளவேண்டும் என்பது. (அவர்களது தெய்வமான யாஹ்வே, அவர்களது பைபிளில் சொல்லியுள்ளது போல, மெஸியாவை (மீட்பரை) அனுப்பி அவர்களுக்கு இஸ்ரேலை மீட்டுத்தருவார் என்பதைக்கூட பெரும்பான்மை இஸ்ரேலியர் நம்ப தயாராக இல்லை!) அவர்களுக்கு இரங்கி வருபவர்கள் வரட்டும். உதவுபவர்கள் உதவட்டும். ஆனால், அவர்கள் உதவுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் சொல்லை கேட்டு தங்களை காயப்படுத்திகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பவைதான்.

அந்த அறிவுரைதான் நமக்கும்.

Series Navigationதொடுவானம்  28. திருப்புமுனை ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.
author

சின்னக்கருப்பன்

Similar Posts

39 Comments

  1. Avatar
    Venkat Swaminathan says:

    great. இது தான் முதல் தடவையாக, இந்த யூத அராபிய பிரசினையை தொடக்க காலத்திலிருந்து வரலாறாக எழுதப்பட்டுள்ள முதல் தமிழ் கட்டுரை. இந்தியாவிலும் எந்த ஆங்கில பத்திரிகையையும் இப்படி பிரசினையின் ஆதியோடந்தத்தைச் சொன்னதாக, இரண்டு பக்க விவகாரங்களையும் சார்பு நிலையற்றுச் சொல்லி நான் படித்ததில்லை. சௌதி அராபியாவுக்கும் மற்ற ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளுக்கும் இல்லாத இஸ்லாமிய சார்பு இந்தியாவுக்கும் நம்மூர் முற்போக்குகளுக்கும் மாத்திரம் எப்படி வந்து குடிகொண்டுள்ளது தெரியவில்லை. எல்லோரும் பிரசாரத்துக்கு அடிமையாகிவிடுவது சுலபமாக இருப்பதைக் கண்டு கொண்டுள்ளார்கள்.அதிலும் ஹிந்துவின் க்ண்ணீர்வடிப்பு தான் வேடிக்கை. இந்திய விடுதலைப்போராட்டகாலத்தில் ஹிந்து ஒரு முறைகூட ஆங்கில அரசாங்கத்தின் கெடுபிடிக்கு ஆளாகவில்லைதெரியுமோ? கருணாநிதி ஆட்சியிலிருந்த வரை அவரை விமர்சித்துஒரு வரி எழுதியதில்லை. அவரவர்க்கு தம் பிஸினஸ் ஒழுங்காக நடக்க வேண்டும். நமக்கு நம் மதச் சார்பின்மையைக் காட்டிக்கொள்ளவேண்டும். அதே சமயம் சௌதி அராபியாவையும் சேர்த்து மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய தடையில்லாமல் வந்து கொண்டிருக்க வேண்டும். அதுஎந்த அரசானாலும் சரி. பிஜேபியோ காங்கிரஸோ எதுவானால் என்ன?

    இதிலும் பாப்பனீயம், சாதிவெறி, எல்லாம் கண்டுபிடித்து எழுதும் ஒரு கூட்டம் உண்டே. எங்கே காணோம்.

  2. Avatar
    I I M Ganapati Raman says:

    /இதிலும் பாப்பனீயம், சாதிவெறி, எல்லாம் கண்டுபிடித்து எழுதும் ஒரு கூட்டம் உண்டே. எங்கே காணோம்.//

    ஒரு குறிப்பிட்ட சாரார் யூதர்களின் சார்பாகவே எழுதுவதும் அவர்களுக்கு ஓ போடுபவர்களைப் பார்க்கும் போதும், இன்னொரு சாரார் பாலஸ்தீனர்கள் சார்பாக எழுதுவதையும் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. திண்ணையில் மட்டுமல்ல. அனைத்திடங்களும் இதேதான் நடக்கிறது.

    எங்கெங்கும் ஜாதியடா என்று கண்ணீர் வடிப்பவர்களின் சந்தில் சிந்து பாடும் திறமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

  3. Avatar
    paandiyan says:

    //இதிலும் பாப்பனீயம், சாதிவெறி, எல்லாம் கண்டுபிடித்து எழுதும் ஒரு கூட்டம் உண்டே. எங்கே காணோம்.//

    என்ன அய்யா இப்படி கேட்டுவிட்டீர்கள். மீடியாவை , கருத்துப்போடும் கண்மணிகளை பொருத்தவரை, டமிழர்களை பொருத்தவரை, isralaiyan பார்ப்பான், பாலைஸ்தீனியன் திராவிடன் — அப்படித்தான இங்கு பார்க்கப்படுகின்றது.

  4. Avatar
    paandiyan says:

    அமர்நாத் யாத்திரையில் கல்லடிப்பவன் அப்பாவி , கல்லடி வாங்குபவன் RSS தீவீரவாதி — அப்படித்தான இங்கு நடக்கின்றது. எத்தனை கட்டுரை இங்கு அதை பற்ரி வந்து இருக்கின்றது???

  5. Avatar
    எஸ்.எம்.ஏ.ராம் says:

    மிக மிக நடுநிலையோடு எழுதப் பட்ட கட்டுரை. சின்னக் கருப்பனுக்கு என் பாராட்டுகள். இதே பிரச்சனை பற்றி இரண்டு நாட்களுக்கு முன் என் முகநூல் பக்கத்தில் ஆதங்கம் தாங்காமல் நான் எழுதிய பதிவை, அது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று கருதிக் கீழே தந்திருக்கிறேன்.. கிட்டத் தட்ட திரு சின்னக் கருப்பனின் சிந்தனையின் போக்கிலேயே என் கருத்தோட்டமும் தற்செயலாக அமைந்திருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

    இஸ்ரேல் என்ன பீஷ்மரா?
    *************************
    இஸ்ரேல் காசாவில் போர் நிறுத்த நீட்சிக்குத் தயாராய் இருப்பதாய் அறிவித்தும் ஹமாஸ் அதற்குத் தயாராய் இல்லை. அது தன் முதல் ராக்கெட்டை இஸ்ரேல் மீது வீசி மறுபடியும் போரைத் துவக்கி இருக்கிறது.

    சாமானிய மக்கள் வாழும் ஜன நெருக்கடி மிகுந்த காசா பகுதியிலிருந்து ஹமாஸ் ராக்கெட்களை இஸ்ரேலை நோக்கி வீசுகிறது. இஸ்ரேல் திரும்ப அதே இலக்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தினால் முதலில் அழிவது அப்பாவிப் பொது மக்கள் தான் என்று தெரிந்தே ஹமாஸ் இதைச் செய்கிறது. சர்வ தேச அனுதாபத்தைப் பெறவும், இஸ்ரேல் மீது பெரும்பான்மையோரின் கோபத்தைத் திருப்பி விடவும் ஹமாஸ் இந்த யுத்த தந்திரத்தை மேற்கொள்வதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால், காசா நகரில் கணக்கற்ற அப்பாவி மக்கள் உயிரிழப்பது கவலை அளிக்கும் அதே வேளையில், அந்தப் படு கொலையில் இஸ்ரேலைப் போலவே ஹமாசுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதை நடு நிலையாளர்கள் மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள்.

    ஆனால், தங்களை மத சார்பாற்றவர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளும் ‘இடது சாரி அறிவு ஜீவிகள்’, இஸ்ரேலை மட்டுமே கரித்துக் கொட்டுகிறார்களே அன்றி, மத அடிப்படை வாதிகளான ஹமாஸ் பற்றி ஒரு வார்த்தை கூட வாயே திறப்பதில்லை.நடு நிலையாக, உள்ளதை உள்ளபடியே பேச, நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் உகந்து அணிந்திருக்கும் அவரவருக்குப் பிடித்த சிந்தாந்தக் கண்ணாடியைக் கழற்ற வேண்டியது அவசியமாகிறது.

    சிகண்டியை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு அவளுக்குப் பின்னாலிருந்து அருச்சுனன் அம்பு எய்த போது, யுத்த தர்மம் கருதித் திருப்பித் தாக்காமல், அந்த அம்புகளைத் தன் மீதே வாங்கிக் கொண்டு களத்தில் வீழ பீஷ்மரால் முடிந்தது. ஆனால், ஹமாஸ் விவகாரத்தில், இஸ்ரேல் பீஷ்மராய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

    1. Avatar
      ஷாலி says:

      //சிகண்டியை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு அவளுக்குப் பின்னாலிருந்து அருச்சுனன் அம்பு எய்த போது, யுத்த தர்மம் கருதித் திருப்பித் தாக்காமல், அந்த அம்புகளைத் தன் மீதே வாங்கிக் கொண்டு களத்தில் வீழ பீஷ்மரால் முடிந்தது. ஆனால், ஹமாஸ் விவகாரத்தில், இஸ்ரேல் பீஷ்மராய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?//

      பாண்டவ நாட்டை தர்மர் தலைமையிலான பாண்டவர்களிடம் இருந்து பறிக்க துரியோதனன்தலைமையிலான கெளரவர்கள் சதித் திட்டம் போட்டபோது போர் மூண்டது. பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணர் போர் களம் இறங்கினார். வில்வித்தை வீரனானஅர்ஜூனனுக்கு சாரதியானான் கிருஷ்ணன். இதனால் பார்த்தசாரதி ஆனான்.

      எதிரே நிற்பது என் உறவினர்கள். அவர்களோடு போரிட்டு அவர்களை கொன்று நான் ராஜ்ஜியம் அடைய வேண்டுமா? என்று அர்ஜூனன் மனம் கலங்கி நின்றபோதுஅவனுக்கு கிருஷ்ணன் வழங்கிய அறிவுரை தான் பகவத்கீதை. எந்தக் காலத்துக்கும் பொறுந்தும்,

      சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரைக் கொன்றான் அர்ச்சுனன். இஸ்ரேல் பீஷ்மராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க நமக்கு உரிமை இல்லைதான், ஆனால் அர்ச்சுனனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இருந்த பாண்டவர் பக்கம் (அதாவது தமது இழந்த நாட்டை மீட்கும் பாலஸ்தினியர்களின் பக்கம் ) தர்ம நியாயம் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இதுதானே பகவத் கீதையின் சாரம். எந்தக் காலத்துக்கும் பொறுந்தும், முக்தி தரும் உபதேசம் பகவத் கீதை. மக்களின் எல்லா ஐயங்களும் தீர ஆண்டவன் அருளிச் செய்ததுதான் பகவத் கீதை. இஸ்ரேலுக்காக கீதையை மறுதளிக்கலாமா?

      1. Avatar
        சின்னக்கருப்பன் says:

        அன்புள்ள ஷாலி,
        பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணரை துரியோதனரிடம் அனுப்பும்போது, ஐந்து நாடுகள் அல்லது ஐந்து ஊர்கள், அல்லது ஐந்து கிராமங்கள், அல்லது ஐந்து வீடுகளாவது கேள், கொடுத்தால் போர் இல்லை என்று சொல்லி அனுப்புகிறான் தர்மன்.
        துரியோதனன், ஐந்து ஊசி முனை குத்தும் அளவு கூட நிலம் தரமுடியாது என்று சொல்லிவிடுகிறான் அதனால்தான் போர் உருவாகிறது.
        இன்று அந்த நிலைப்பாட்டை எடுப்பவர்கள் அரபுகள். இஸ்ரேல் என்ற ஒரு தேசமே இருக்கக்கூடாது, ஒரு யூதரும் உயிருடன் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அரபுகள்தான் எடுக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் எடுக்கவில்லை. இஸ்ரேலில் உள்ள அரபுகளுக்கு முழு குடியுரிமையுடனும், ஏன் சொல்லப்போனால், ஒரு யூதர் இஸ்லாமுக்கும் மதம் மாறக்கூடிய சுதந்திரத்துடனும் தான் இஸ்ரேல் இருக்கிறது. இஸ்ரேல் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றுதான். தன்னை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடாக அங்கீகரியுங்கள். இனி எப்போதும் போர் இல்லை என்று ஒப்பந்தம் செய்யுங்கள் என்பதுதான். அந்த போர் நிறுத்தத்தை அங்கீகரிக்க அரபு நாடுகளோ, ஹமாஸோ, ஈரானோ, சவுதி அரேபியாவோ தயாராக இல்லை. ஆகவே இங்கே பாண்டவர்கள் நிலையில் இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள்தான். கௌரவ நிலைப்பாடு கொண்டு நூறு தேசங்களில் ஆள்பவர்கள் அரபுகள்தான். ஆக்கிரமித்த இடம் அனைத்தும் எனக்கு என்று ஆரவாரம் செய்பவர்கள் அரபுகள்தான்.

  6. Avatar
    ஷாலி says:

    //பிலிஸ்தினியர்களும் பாலஸ்தீனர்களும் ஒன்றல்ல….. பிலிஸ்தீனியர்கள் பின்னால், யூதர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களை பாலஸ்தீனர்கள் என்று சொல்வது தவறானது. 2000 வருடங்களுக்கு முன்னால், ரோம அரபு போர் நடக்கும்போது, அரபு இனத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இஸ்ரேல் நிலத்தில் இருந்ததில்லை. //
    A new genetic study shows that many Arabs and Jews are closely related. More than 70% of Jewish men and half of the Arab men whose DNA was studied inherited their Y chromosomes from the same paternal ancestors who lived in the region within the last few thousand years.
    The results match historical accounts that Moslem Arabs are descended from Christians and Jews who lived in the southern Levant, a region that includes Israel and the Sinai. They were descendants of a core population that lived in the area since prehistoric times. And in a recent study of 1371 men from around the world, geneticist Michael Hammer from the University of Arizona in Tucson found that the Y chromosome in Middle Eastern Arabs was almost indistinguishable from that of Jews.
    Other short segments of DNA called microsatellites were similar enough to reveal that the men must have had common ancestors within the past several thousand years. The study, reported here at a Human Origins and Disease conference, will appear in an upcoming issue of Nature Genetics.
    Human Genetics
    December 2000, Volume 107, Issue 6, pp 630-641
    en.wikipedia.org/wiki/Palestinians

    திரு.சின்னக்கருப்பன் ஸார்! 2000 வருடங்களுக்கு முன்னால் இயேசு பேசிய “அரமாயிக்” மொழியும் இன்றைய அரபி மொழியும் Sister Language தான்.ஆனால் அரமாயிக்கு வரி வடிவம் இல்லை.Arabic,Amharic,Tikrinya,Aramaic இவை அனைத்தும் செமிடிக் மொழிகள்தான்.ஒன்றோடு ஒன்று சார்ந்தது.மக்களும் அவ்வாறே!நவீன மரபியல் ஆய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன.

    1. Avatar
      சின்னக்கருப்பன் says:

      இருக்கலாம் ஷாலி அவர்களே,
      நான் சொன்னது 2000 வருடங்களுக்கு முன்னால், யூத ரோம போர் நடக்கும்போது. அங்கு அப்போது அரபுகள் இல்லை.ஆனால், அதற்கும் முன்னால், அரபுகள், யூதர்கள் அனைவரும் ஒரே ஸ்டாக்கிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். அந்த ஜெனடிக்ஸை ஒப்புகொண்டாலும், “ஒரே இனமான” யூதர்களை பரிவுடன் பார்த்து, தங்கள் சொந்தம் என்று கருதி, அவர்கள் ஒரு நாடு வைத்துகொள்ள ”அரபுகள்” அனுமதிக்கலாமே?

  7. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு சின்னக்கருப்பன் அவர்களே,

    //இடதுசாரிகள் ஏன், நைஜீரிய கிறிஸ்துவர்களுக்கோ, தாய்லாந்தில் முஸ்லீம்களால் கொல்லப்படும் பௌத்தர்களுக்கோ, அல்லது கிறிஸ்துவர்களால் கொல்லப்படும், அவமதிக்கப்படும் கொரிய பௌத்தர்களுக்கோ, அல்லது முஸ்லீம்களால் விரட்டப்பட்ட காஷ்மீர இந்துக்களுக்கோ, பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்படும் கிறிஸ்துவர்களுக்கோ, அல்லது இந்துக்களுக்கோ, இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட பாலி இந்துக்களுக்கோ, அல்லது ஈராக்கில் அல்குவேதாவாலும் புத்தம்புது ஒரிஜினல் பிராண்டு காலிபேட்டாலும் கொல்லப்படும் ஷியா, யாஜிதி, கிறிஸ்துவர்களுக்கோ, மனித அந்தஸ்தை ஏன் இவர்கள் தருவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. //

    என் மனத்தில் பலமுறை எழும் கேள்விகளை முன்மைத்தமைக்கு நன்றி!

    “ஈழத்தில் கொல்லப்பட்ட இந்து, கிறித்தவத் தமிழர்களுக்கும்” என்பதையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ சின்னகருப்பன்

    லியான் ஊரி, டோமினிக் லேபியர், ஃப்ரெட்ரிக் ஃபோர்ஸித் போன்றோரின் வரலாற்றுப்புதினங்கள் மூலம் இந்த நிலப்பரப்பின் ரத்தத்தில் அமிழ்ந்த சரித்ரத்தை உள்வாங்கியிருக்கிறேன்.

    அந்தப் பின்னணி விபரம் அறிந்தபடிக்கு, காஸா பட்டியில் நடக்கும் யுத்தம் பற்றி எனக்கிருந்த குழப்பங்களை தங்கள் வ்யாசங்கள் இரண்டும் தெளிவாக துலக்கியிருக்கின்றன.

    பின்னிட்டும் ஒரு சில சம்சயங்கள்.

    ஹிட்லரால் பற்பல வதை முகாம்களில் சொல்லொணா சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் யஹூதிகள்.

    இப்படிச் சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள இதே யஹூதிய சமூஹத்தினர்…………… பாலஸ்தீனியரின் மீது……….. ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா மற்றும் தடுப்புச் சுவர்கள் போன்ற வன்மம் பொருந்திய உத்திகளை கையாள்வது கூட ந்யாயப்படுத்த முடிந்தவையா?

  9. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //பாண்டவர்கள் நிலையில் இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள்தான். //

    சரியான பதில்.

  10. Avatar
    ramasamy says:

    Dear chinnakkaruppan,

    First I read the detailed history of israel and palestine. Thanks for the same. You have presented the article in a beautiful way. You have said that the Israelis want nobodys help in their task, but they are ready to accept others help (but they will not follow or listen to others advice). I could not understand in what way the israel is correct in knowingly killing thousands and thousands of civilians. I am not arguing that the arabs and palestinians are correct in their approach. At least one side must find a solution and put an end to this never ending war. Also, I don’t think that all common people of India will support Israel(since israel was portrayed as a country fighting against arabs for the past four or five decades). Our general public do not know the history behind this war. All they want is that there is no more killing of civilians in Israel and gamas. Let us pray for peace in that area.

  11. Avatar
    ஷாலி says:

    //மூன்று பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உடனே கொல்லப்படவில்லை. கடத்தப்பட்டார்கள். ஜூன் 12, 2014 அன்று இவர்கள் கடத்தப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்தை மேற்குக்கரை பகுதியில் அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதால் வரும் பிரச்னை என்று இஸ்ரேல் கூறியது. ஜூன் 14 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள், தங்கள் தேடுதலில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை கைது செய்தார்கள்.//

    War of Choice – The Real Story of Israel’s War against Hamas
    by Menachem Klein

    A Hamas cell in Hebron kidnapped and murdered three settler boys. The cell acted independently without the approval of the Hamas leadership, in fact the latter denied any relation to the affair. However, from day one it was clear to Israeli authorities that the three poor boys were dead, and it misled its public and world opinion. Israel managed a world wide campaign under the slogan “bring home our boys,” further demonizing Hamas.
    Under this campaign Israel arrested more than 400 Hamas West Bank activists, including political and religious leaders. The Israeli aim was to destroy the new Palestinian coalition and undermine its international legitimacy. Israel wanted to rewind the tape and restore Hamas and Abbas to their previous status dancing to Israel’s tune. During this anti-Hamas campaign, Netanyahu fomented anger in public opinion bordering on racism.
    //logosjournal.com/2014/war-of-choice-the-real-story-of-israels-war-against-hamas/

    1. Avatar
      சின்னக்கருப்பன் says:

      இவை ஹேஷ்யங்கள்.
      // The Israeli aim was to destroy the new Palestinian coalition and undermine its international legitimacy. Israel wanted to rewind the tape and restore Hamas and Abbas to their previous status dancing to Israel’s tune. // இதுதான் இஸ்ரேலிய அரசின் குறிக்கோள் என்பது இவருக்கு எப்படி தெரியும்? இவையெல்லாம் திரும்ப திரும்ப யூதர்களை சதிகாரர்கள் என்று முத்திரை குத்த உபயோகப்படுத்தப்படும் அவதூறு வார்த்தைகள்.
      ஹமாஸ் மட்டுமல்ல, படாவும் இதே போல தங்கள் பிரதேசங்களுக்குள் உள்ள பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதில்லை, தடுப்பதில்லை, தண்டிப்பதில்லை. இத்தனைக்கும் படா ஒரு அரசு போல செயல்படுகிறது. பாகிஸ்தான் போல, non state actors என்று தான் செய்யவிரும்புவதையெல்லாம் ஜெய்ஷ் ஈ முகம்மது, லஷ்கர் ஈ தொய்பா போன்றவற்றை உருவாக்கி அவற்றின் மூலம் பயங்கரவாத செயல்களை செய்கிறார்கள். இதனால் என்ன பயன். இந்தியா மாதிரியே இஸ்ரேலும் ஏமாந்த சோணகிரியாக எவ்வளவு அடிச்சாலும் தாங்கவேண்டுமா?

      ஹமாஸோ, அல்லது படாவோ அரசாள விரும்பினால், ஒரு அரசு எப்படி நடந்துகொள்ளவேண்டுமோ அது போல நடந்துகொள்ளவேண்டும்.

      1. Avatar
        ஷாலி says:

        ///ஹமாஸோ, அல்லது படாவோ அரசாள விரும்பினால், ஒரு அரசு எப்படி நடந்துகொள்ளவேண்டுமோ அது போல நடந்துகொள்ளவேண்டும்.//

        அதாவது இன்றைய இஸ்ரேலின் அரசு பயங்கரவாதம் போன்று. திரு.சின்னக்கருப்பன் வார்த்தையில் சொல்வதனால்,

        //தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திகொள்ளவேண்டும், தங்களை தாங்கள்தான் காத்துகொள்ளவேண்டும் என்பது. (அவர்களது தெய்வமான யாஹ்வே, அவர்களது பைபிளில் சொல்லியுள்ளது போல, மெஸியாவை (மீட்பரை) அனுப்பி அவர்களுக்கு இஸ்ரேலை மீட்டுத்தருவார் என்பதைக்கூட பெரும்பான்மை இஸ்ரேலியர் நம்ப தயாராக இல்லை!) அவர்களுக்கு இரங்கி வருபவர்கள் வரட்டும். உதவுபவர்கள் உதவட்டும்.//

        ஹாமாஸோ,அல்லது படாவோ,தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திக்கொள்ளவேண்டும்.அரபு நாடுகளோ.ஐநா வோ சுதந்திர பாலஸ்தினை மீட்டுத்தருவார்கள் என்று காத்திருக்க தேவையில்லை.//தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திக்கொள்ள வேண்டும்.தங்களை தாங்கள்தான் காத்துக்கொள்ளவேண்டும்.//

        1. Avatar
          சின்னக்கருப்பன் says:

          ஹமாஸ், அல்லது படா எப்போது இஸ்ரேலை ஒரு அங்கீகரிக்கப்பட்ட யூத பெரும்பான்மை நாடாக அங்கீகரிக்கிறார்களோ, அப்போதே பிரச்னை தீர்ந்துவிட்டது. இஸ்ரேல் அந்த அரபுகளை எதிர்த்து போரிடப்போவதில்லை. 1947இலேயே அந்த வேலையை செய்திருந்தால், இன்று இரண்டு சுதந்திர நாடுகள் அங்கே இருந்திருக்கும். இஸ்ரேலில் அரபுகள் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார்கள். அகதிகளாகியிருக்கமாட்டார்கள். இஸ்ரேல் என்ற நாடே இருக்கக்கூடாது என்று அரபு நாடுகள் 1947இல் போர் தொடுத்தன. அப்போது அவை தங்களை அரபு நாடுகளாகத்தான் கருதின. இன்று கூட, பல அரபு நாடுகள் இந்த அகதிகளை கை கழுவி விட்டன. black september in Jordan என்றால் என்ன என்று படித்து பாருங்கள். காரணம் புரியும்.
          இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகள் அங்கே ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழ்வதுதான் சரியான நிலைப்பாடு. அதற்கு இருவருமே தயாராக இருக்கவேண்டும்.

  12. Avatar
    ஷாலி says:

    //சுமுகமான பேச்சுவார்த்தை என்பது நான் முன்னரே குறிப்பிட்டது போலவும், 1948இலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுகொண்டிருப்பது போலவும் ஒன்றே ஒன்றுதான். யூத பெரும்பான்மையான ஒரு இஸ்ரேலை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஒப்புக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. அதற்காக தான் வெற்றிபெற்ற நிலத்தை திருப்பி கொடுக்கவும் இஸ்ரேலிய அரசு முன்வந்திருக்கிறது.//

    2007 Arab League summit
    With the exception of Libya, all leaders from the Arab League’s 22 member states attended the two-day summit in Riyadh, the capital of Saudi Arabia, from March 28, to March 29, 2007.
    The Arab League members unanimously endorsed the peace initiative on March 27 It consists of a comprehensive proposal to end the entire Arab–Israeli conflict.It provides in a relevant part:
    (a) Complete withdrawal from the occupied Arab territories, including the Syrian Golan Heights, to the 4 June 1967 line and the territories still occupied in southern Lebanon; (b) Attain a just solution to the problem of Palestinian refugees to be agreed upon in accordance with the UN General Assembly Resolution No 194. (c) Accept the establishment of an independent and sovereign Palestinian state on the Palestinian territories occupied since 4 June 1967 in the West Bank and Gaza Strip with East Jerusalem as its capital.
    In return the Arab states will do the following: (a) Consider the Arab–Israeli conflict over, sign a peace agreement with Israel, and achieve peace for all states in the region; (b) Establish normal relations with Israel within the framework of this comprehensive peace.
    Israeli Foreign Minister and Deputy Prime Minister Avigdor Lieberman said on April 21, 2009 that the plan is “a dangerous proposal, a recipe for the destruction of Israel.

    On March 26, 2012, on the eve of the 10th anniversary of the proposal, Haaretz’s Akiva Eldar wrote that Israel’s failure to respond adequately to the Arab proposal was part of the country’s “worst missed opportunity.
    //en.wikipedia.org/wiki/Arab_Peace_Initiative.

    1. Avatar
      சின்னக்கருப்பன் says:

      அதனை சரியாக படித்து பாருங்கள்.
      முதலாவது ஹமாஸ் அந்த திட்டத்தை ஒப்புகொள்ளவில்லை. இன்னமும் ஒப்புகொள்ளவில்லை. அந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.
      இரண்டாவது ஈரான், இந்த திட்டத்தில் சேர்த்துகொள்ளப்படவில்லை. ஈரான் இஸ்ரேலை பூண்டோடு அழிக்க உறுதி பூண்டிருக்கிறது.
      மூன்றாவது இந்த திட்டம் “right of return” என்று பாலஸ்தீன அகதிகள் திரும்ப இஸ்ரேலுக்கு செல்லக்கூடிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இவர்கள் திரும்பி வந்தால், இஸ்ரேல் யூத பெரும்பான்மை நாடாக இருக்காது. பத்து லட்சத்துக்கும் மேலான யூதர்கள் அரபியா, ஈராக், எகிப்து, ஜோர்டன், துருக்கி போன்ற இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், அல்லது வெளியேறியிருக்கிறார்கள். அந்த வீடுகளையோ நிலங்களையோ யூதர்கள் திரும்ப கேட்கவும் இல்லை. அந்த வீடுகளில் இவர்களை குடிவைத்தாலே பிரச்னை தீர்ந்திருக்கும். அவற்றை அரபிகள் ஆக்கிரமித்து காணாமலாக்கிவிட்டார்கள். இவர்களை அகதிகளாக வைத்துகொண்டு இரக்கம் தேடுகிறார்கள்.

  13. Avatar
    ஷாலி says:

    //இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இஸ்ரேல்-அரபு பிரச்னைதான் இருக்கிறது. அதனை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையாக அடையாள அரசியலாக ஆக்கி, அதனை பாலஸ்தீன இனம் என்று இருப்பதாக உருவாக்கி, அதற்கு இஸ்லாமை துணைக்கழைத்து, இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வெறியேற்றும் வகையில் எழுதும் இப்படிப்பட்ட கட்டுரைகளால்//

    திரு.சின்னக்கருப்பன் தான் இஸ்ரேல் பாலஸ்தீன் நிலப் பிரட்சினையை மத அரசியலாக மாற்றி திரிக்கிறார்.பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் மட்டும் அகதிகளாக வெளியேற்றப்படவில்லை,கிறிஸ்தவர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவரின் நியாயமான கேள்விக்கென்ன பதில்?

    Israeli Ambassador Michael Oren claimed that Christians in Israel are better off than their brethren anywhere else in the Middle East.

    I am a Palestinian Christian, now a U.S. citizen, and my own experience and that of my family attest to the falsity of Ambassador Oren’s assertion. I was born in East Jerusalem, Jordan in 1952, only a few years after my family and the majority of Palestinians fled from their homes when the newly established Jewish state took over three-quarters of historical Palestine. My family, like almost all the other Palestinians who fled — Christians and Muslims alike — became refugees, losing their fields, orchards, homes and practically everything else, to Israel. Israel defied the international consensus and a U.N. resolution calling on it to allow the Palestinian refugees to return.

    Had Israel allowed the Palestinians to return, it would not have become a majority Jewish state. Israel’s fear of a Palestinian presence within its borders continues to drive its brutal policies of occupation, which victimize Palestinian Christians as well as Muslims. Israel occupied the rest of historical Palestine in 1967, gaining control over a large Palestinian Arab population which many Israelis view as a threat to the “Jewish character” of their country.
    There is a simple test of Ambassador Oren’s claims: I say to him, “Mr. Ambassador: If your country is so good to Christians, why don’t you allow me, my family and thousands of Palestinian Christians to return to our homes in the part of Jerusalem which Israel occupied in 1967 or the western part of the city from which Palestinians were forced out in 1948? Why is it that any Jew from any country in the world can claim full rights of citizenship as soon as he or she sets foot in Jerusalem, while I, whose family roots in Jerusalem go back many centuries, am barred from living with full human rights in my hometown?” –by Philip Farah.

    Philip Farah is the co-founder of Palestinian American Christians for Peace and of the Washington Interfaith Alliance for Middle East Peace, .huffingtonpost.com/philip-farah/palestinian-christians-against-the-occupation_b_1466027.html

  14. Avatar
    சின்னக்கருப்பன் says:

    //Had Israel allowed the Palestinians to return, it would not have become a majority Jewish state.// அவ்வளவுதான்.

    பாலஸ்தீன கிறிஸ்துவர்களுக்கு ஹமாஸ் என்ன மரியாதை தருகிறது என்பதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே? காஸாவில் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஹமாஸ் தடைவிதித்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக விளக்கலாமே?

    1. Avatar
      ஷாலி says:

      Gaza Christians banned from Bethlehem and celebrations even at Christmas.

      The desire of all Gaza Christians to celebrate Christmas in the place where Jesus was born. The Israeli government bans young people between 16 and 35 years from travelling to the West Bank for religious holidays. Hamas makes concessions for Christmas, but only for the secular aspect. The religious festival relegated to churches.

      Gaza (AsiaNews / Agencies ) – Christians living in Gaza are a mere 73 km from Bethlehem, but for most of them it is impossible to celebrate Christmas in the place where Jesus was born. As is now the case every year, in 2013 the Israeli government once again rejected hundreds of visa applications forwarded by Greek – Orthodox and Catholic Churches ..asianews.it/news-en/Gaza-Christians-banned-from-Bethlehem-even-at-Christmas-29903.html
      Christmas trees “offensive to Jewish eyes”
      Shimon Gapso, the mayor of Upper Nazareth, had banned Christmas trees from all public buildings in his northern Israeli city.

      But Gapso is not alone in his trenchant opposition to making even the most cursory nod towards multiculturalism. The city’s chief rabbi, Isaiah Herzl, has refused to countenance a single Christmas tree in Upper Nazareth, arguing that it would be “offensive to Jewish eyes”.
      That view, it seems, reflects the official position of the country’s rabbinate. In so far as they are able, the rabbis have sought to ban Christmas celebrations in public buildings, including in the hundreds of hotels across the country.
      israelandpalestine.org/christmas-trees-banned-in-israel/

  15. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    Please let me know one Muslim country which lets other religions to practice freely, or is secular.

    Let us take Pakistan and Bangladesh — Hindu population there is steadliy decreasing due to atrocities. Hindu marriages are not even recognized in Pakistan. I have never seen you write against that denial of basic freedom of minorities.

    I hope you read news about ISIS and its atrocities against innocent people.

    I do not know in which country you reside. Please go and reside in Saudi Arabia. You cannot take your religious books there (unless, of course, you are a Muslim).

    I also want peaceful solution for Isreal-Palastine conflict. Unless both sides sincerely want peace, it will elude them. Others can try their best! It will not happen.

    Compared to any country in the middle east, which wants to destroy Israel, it treats Muslims very nicely. If those middle east countries stop meddling in Israel’s affairs, stop sending weapons to Hamas, and let the people of Israel live in peace, peace will prevail in that region.

    In India, Muslim would not try to slaughter animals in front of Hindu Temples for celebrating Iftar. Likewise, Hindus will not unnecessarily provoke Muslims near their mosques during prayer hours by beating drums, etc. They show respect towards each other, since it is a secular country. In USA, noone can slaughter any animals in public. However, people can display Christmas lights, or any other decorations representing their religious festivals, because USA is a secular country.

    I have observed your comments. Sorry for Saying this, your comments are generally against Hindus and Jews. You never take a balanced view point. Why?

    Forgive me if I understood you wrongly. I am all ears to hear your balanced explanation, and view points.

    Best regards,

    Oru Arizonan

    1. Avatar
      ஷாலி says:

      //I have observed your comments. Sorry for Saying this, your comments are generally against Hindus and Jews. You never take a balanced view point. Why?//

      அன்பிற்குரிய அரிஸோன அன்பரே! நீங்கள் நினைப்பதுபோல் ஹிந்து,யூதர்களுக்கு நான் எதிரானவன் அல்ல.ஆரிய இனமே அனைத்திலும் உயர்ந்தது என்று கருதும் ஆரிய யூதர்களின் பொய்யான விசம விமர்சனத்தையே நான் மறுக்கிறேன்.அனைத்து மதங்களிலும் ஊடுவிய புரோகிதமே மத நல்லிணக்கத்திற்கும்,பிளவுகளுக்கும் காரணம். புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்!புரோகிதம் ஒழிந்து மனிதம் வளர,மனித நேயம் வளர அனைவரும் பாடுபடுவோம்!

      1. Avatar
        ஒரு அரிசோனன் says:

        உயர்திரு ஷாலி அவர்களே,

        உங்களைப்பற்றி நான் எழுதியதையேதான் நீங்கள் கீழ்க்கண்ட கருத்துக்கள் மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள்.

        //ஆரிய யூதர்களின் பொய்யான விசம விமர்சனத்தையே நான் மறுக்கிறேன்.//

        ஹிட்லர்தான் தன்னையும், கிறித்தவ வெள்ளையர்களையும் “ஆரியர்கள்” என்று அழைத்துக்கொண்டான். யூதர்களை “ஆரியர்கள்” என்று அவன் கருதவே இல்லை. அப்படி இருக்க, “ஆரிய யூதர்கள்” என்று ஒரு பிரிவை உண்டாக்கி இருக்கிறீர்கள். அப்படியானால், “….. யூதர்கள்” வேறு இருக்கிறார்களா? நீங்கள் கதையையே மாற்றி யூதர்களை “ஆரியர்கள்” என்று சொல்வது விவாதம் அல்ல, விதண்டா வாதம்.

        பொய்யையே நூறு தடவை சொன்னால் உண்மை ஆகிவிடும் என்ற கோயபல்ஸின் பிரச்சாரத்தைத்தான் இங்கு நீங்கள் கைக்கொள்வது போல எனக்குத் தோன்றுகிறது.

        // புரோகிதமே மத நல்லிணக்கத்திற்கும்,பிளவுகளுக்கும் காரணம். //

        புரோகிதம் என்று நீங்கள் குறிப்பிடுவது எல்லா சமயங்களுக்கும் பொருந்தினால், ஏன் உங்கள் கணை இந்து சமயத்திற்கும், யூத சமயத்திற்கும் எதிராகவே தொடுக்கப் படுகிறது? மற்ற சமயங்களில் புரோகிதம் இல்லையா? “மற்ற சமயங்கள் பொய், தங்கள் சமயமே உண்மை” என்று கூறும் சமயங்களின் புரோகிதக் கொள்கையால்தானே பல சமுதாயங்கள், சமுதாயக் கொள்கைகள் (culture) அழிக்கப்பட்டன! அழிக்கப்பட்டுக்கொண்டும் வருகின்றன!

        அந்தவிதமான புரோகிதக் கொள்கைகளை எதிர்த்து ஒரு வரிகூட இந்த இணையத்தில் நீங்கள் பதிவு செய்யவே இல்லையே! அதற்கான காரணத்தை அருள்கூர்ந்து எனக்கு விளக்குகிறீர்களா?

        புரோகிதம் இல்லாமல் எந்த சமயத்தாலும் இயங்க இயலாது. புரோகிதத்தை எதிர்க்கும் எந்த ஒருவரும், நாத்திகம் என்னும் ஒருவிதமான “இல்லாச் சமய”ப் புரோகிதத்தைதான் கைக்கொள்ள வேண்டும்.

        குறைந்தபட்சம் நீங்கள் ஒரு நடுநிலைமையான, “உண்மையான நாத்திகரா”க இருந்தால்கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியே! எனக்குப் பல “உண்மையான” நாத்திக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சமயத்தை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாச் சமயங்களும் ஒன்றுதான் — ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள்தான்!

        ஆனால் உங்களது கருத்துக்கள் அப்படியும் இல்லையே! உண்மையிலேயே நீங்கள் யார், உங்கள் கருத்துக்கள் எதைப் பிரதிபலிக்கின்றன என்று அறிய, நீங்கள் எழுதி வரும் கருத்துக்களை அமைதியாகத் திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள். நான் சொல்லும் உண்மை விளங்கும்.

        “நான் இந்துக்களுக்கும், யூதர்களுக்கும் மட்டுமே எதிரானவன்” என்று ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை நான் எதிர்த்தாலும், அது தவறு என்று வாதாடினாலும், உங்கள் துணிச்சலை, கொள்கைப் பிடிப்பைப் பாராட்டுவேன்.

        நாம் அனைவரும் ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணிடமிருந்தே தோன்றியவர்களே என விஞ்ஞான ஆராய்ச்சி விளக்குகிறது.

        இப்படியிருக்க ஆரியனென்ன, திராவிடன் என்ன, தமிழன் என்ன, மலையாளி என்ன, வெள்ளையன், கருப்பன், பழுப்பன் என்ன, நாம் எல்லோரும் ஒருதாயிடமிருந்து வந்தவர்கள்தாம் என்பதை உணர்ந்து, பிரிவினையைத் தூண்டும் வகையில் எழுதாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

        கடைசியில் ஒன்று — திண்ணையில் நீங்கள் எழுதிய கருத்துகள் மீதான என் மன ஓட்டத்தைதான் நான்எழுதி இருக்கிறேனே தவிர, தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மாறுபட்ட கருத்துக்களை கொண்ட பல நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் எனக்கு ஒரு நண்பரே ஆவீர்கள்.

        வணக்கம்.

  16. Avatar
    தங்கமணி says:

    //ஆரிய இனமே அனைத்திலும் உயர்ந்தது என்று கருதும் ஆரிய யூதர்களின் பொய்யான விசம விமர்சனத்தையே நான் மறுக்கிறேன்//
    ஆரிய இனம் உயர்ந்தது என்று எப்போது யூதர்கள் சொன்னார்கள்?

  17. Avatar
    தங்கமணி says:

    ஆனால், அரபு இனமே உயர்ந்தது என்றுதானே இஸ்லாம் கூறுகிறது? முன்பு யூதர்களை உயர்ந்த மனிதர்களாக வைத்திருந்ததாகவும் பிறகு அரபியர்களை உயர்ந்த மனிதர்களாக ஆக்கியதாகவும்தானே இஸ்லாம் கூறுகிறது?

    O Children of Israel(jews), remember My favor that I have bestowed upon you(jews) and that I preferred you(jews) over the worlds.(2:47)

    பிறகு

    This day I have perfected for you(Arabs) your religion and completed My favor upon you (Arabs) and have approved for you Islam as religion. (5:3)

    1. Avatar
      ஷாலி says:

      //ஆனால், அரபு இனமே உயர்ந்தது என்றுதானே இஸ்லாம் கூறுகிறது? முன்பு யூதர்களை உயர்ந்த மனிதர்களாக வைத்திருந்ததாகவும் பிறகு அரபியர்களை உயர்ந்த மனிதர்களாக ஆக்கியதாகவும்தானே இஸ்லாம் கூறுகிறது?//

      ஆம்! தீர்க்கதரிசி மோசசை பின்பற்றிய யூதர்களை அதாவது இறைவனுக்கு வழி பட்ட முஸ்லிம்களை உயர்ந்த மக்களாக கூறியது உண்மைதான்.

      ஆனால் மோசஸ் காலத்திற்கு பிறகு வழிதவறிய ஆடுகளான இஸ்ரவேலர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் பின்பு இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மது தீர்க்கதரிசியையும் யூதர்கள் பொய்ப்படுத்தி கொலையும் செய்ய முயன்றார்கள்.ஆகவேதான் இவ்யூதர்கள் உண்மையை உணராத குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருப்பதாக குர் ஆன்.5:70-71.கூறுகிறது.

      நபிகள் நாயகம் அவர்கள் கலந்து கொண்ட இறுதி ஹஜ்ஜில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.அதில் அவர்கள் கூறிய முக்கிய செய்தி,

      “மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரேபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு ஓர் அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு ஒரு கருப்பரைவிட, ஒரு கருப்பருக்கு ஒரு வெள்ளையரை விட எவ்வித சிறப்பும் மேன்மையும் இல்லை.”

      இந்த உரையை நபிகள் நாயகம் முடித்தபோது, “ இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்.” என்ற குர்ஆன்.5:3.வசனம் இறைவனால் அருளப்பட்டது.இஸ்லாம் குறிப்பிட்ட நாட்டுக்கோ,மக்களுக்கோ,மொழிக்கோ,இனத்திற்கோ அருளப்பட்டதன்று.உலக மானிடர்களுக்கு வழி காட்ட வந்த மார்க்கம்.

      “அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்;பிறகு,அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்;அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு வகைகளை ஜோடி ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில்,ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான்.அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம்,அவனைத்தவிர வேறு நாயன் இல்லை;அவ்வாறிருக்க,(அவனை விட்டும்)நீங்கள் எப்படித் திருப்பப்படுகிறீர்கள்?” -அல் குர்ஆன்.39;6.

  18. Avatar
    I I M Ganapati Raman says:

    இந்த குரானிய வரிகளைத் தேடி இசுலாமியர் வலைபதிவுகளில் சென்று பார்க்கும்போது அவர்கள் சொல்லும் விளக்கமும் இவரின் புரிதலும் வேறாக இருக்கின்றன. ஒரு தேர்ந்த இசுலாமியர்தான் (Muslim scholar)இங்கு வந்து தங்கமணிக்குப் பதில் சொல்லவேண்டும்.

  19. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    // புரோகிதமே மத நல்லிணக்கத்திற்கும்,பிளவுகளுக்கும் காரணம். //

    எப்படி ஒன்று (புரோகிதம்), மத நல்லிணக்கத்திற்கும், அதே சமயம், அதற்கு எதிர்மாறான பிளவுக்கும் காரணமாக இருக்க இயலும்? நீங்கள் எழுத வந்ததை நான் புரிந்துகொண்டாலும், நமது கருத்தைப் படிக்கும் மற்ற பலருக்காக — நீங்கள் கொடுத்த சொற்றொடரைத் திருத்தியோ, அல்லது அதன் விளக்கத்தையோ எழுதுகிறீர்களா?

    வணக்கம்.

  20. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    ??Let us take Pakistan and Bangladesh — Hindu population there is steadliy decreasing due to atrocities. Hindu marriages are not even recognized in Pakistan. I have never seen you write against that denial of basic freedom of minorities.

    I hope you read news about ISIS and its atrocities against innocent people.

    I do not know in which country you reside. Please go and reside in Saudi Arabia. You cannot take your religious books there (unless, of course, you are a Muslim).

    Compared to any country in the middle east, which wants to destroy Israel, it treats Muslims very nicely.//

    நான் எழுதிய இந்தக் கருத்துக்களுக்கு உங்கள் மாற்றுக் கருத்து என்ன? அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். பதில் எழுதவில்லை என்றால் இந்தக் கருத்துக்களை நீங்கள் ஒப்புக்கொலாவது போலத்தானே ஆகும். அப்படியானால், நீங்கள் இஸ்ரேலைப் பற்றி பதிவு செய்த கருத்துக்கள் தவறானதா?

    வணக்கம்.

  21. Avatar
    தங்கமணி says:

    ஷாலி,
    //ஆம்! தீர்க்கதரிசி மோசசை பின்பற்றிய யூதர்களை அதாவது இறைவனுக்கு வழி பட்ட முஸ்லிம்களை உயர்ந்த மக்களாக கூறியது உண்மைதான்.//

    தவறு. யூதர்கள் தங்களை உயர்ந்த மனிதர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் என்று தங்கள் தெய்வம் கூறுவதாக எழுதிகொண்டார்கள். அவ்வளவுதான். என்னாட்டவர்க்கும் இறைவன் என்று ஒன்று இருந்தால், அது ஒரு நாட்டவரை மட்டும் சொல்லியிருந்தால், அது இறைவனா என்ற அய்யத்திற்கே வர முடியும். அது முன்பு சொன்னது, பின்னால் அதனை மாற்றிவிட்டார் என்பதெல்லாம், முக்காலமும் அறியாத ஒரு மனிதனின் கூற்றாகத்தான் இருக்கமுடியும். முக்காலமும் அறிந்த இறைவனின் கூற்றாக இருக்கமுடியாது.

    முகம்மது எழுதிய குரானின் படி “உண்மையென்றால்”, அதற்காக எப்படி நீங்கள் யூதர்கள் தங்களை உயர்ந்த மனிதர்களாக கருதிகொண்டதை தவறு என்று சொல்லமுடியும்?

    //ஆனால் மோசஸ் காலத்திற்கு பிறகு வழிதவறிய ஆடுகளான இஸ்ரவேலர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் பின்பு இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மது தீர்க்கதரிசியையும் யூதர்கள் பொய்ப்படுத்தி கொலையும் செய்ய முயன்றார்கள்.ஆகவேதான் இவ்யூதர்கள் உண்மையை உணராத குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருப்பதாக குர் ஆன்.5:70-71.கூறுகிறது.//

    அது முகம்மது எழுதிகொண்டது. மேலும் இயேசுவின் புராணக்கதைப்படியே யூதர்கள் கொல்லவில்லை. கொன்றது ரோமர்கள். ஆகவே முகம்மதின் புரிதல் தவறு.

    //நபிகள் நாயகம் அவர்கள் கலந்து கொண்ட இறுதி ஹஜ்ஜில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.அதில் அவர்கள் கூறிய முக்கிய செய்தி,

    “மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரேபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு ஓர் அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு ஒரு கருப்பரைவிட, ஒரு கருப்பருக்கு ஒரு வெள்ளையரை விட எவ்வித சிறப்பும் மேன்மையும் இல்லை.”
    //
    இது எந்த ஹதீஸ், குரானிலும் கிடையாது. ஆகவே இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி. சரியான வழி கொண்ட சூனிய ஹதீஸ்களையே பொய்கள் என்றும் இட்டுக்கட்டப்பட்டதென்றும் பிஜே போன்றவர்கள் கூறும்போது, ஹதீஸ் ஆதாரமோ அல்லது குரான் ஆதாரமோ இல்லாத ஒன்றை அவர் சொன்னதாக கூறுவது வெற்று பிரச்சாரமே.

    //இந்த உரையை நபிகள் நாயகம் முடித்தபோது, “ இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்.” என்ற குர்ஆன்.5:3.வசனம் இறைவனால் அருளப்பட்டது.இஸ்லாம் குறிப்பிட்ட நாட்டுக்கோ,மக்களுக்கோ,மொழிக்கோ,இனத்திற்கோ அருளப்பட்டதன்று.உலக மானிடர்களுக்கு வழி காட்ட வந்த மார்க்கம்.//
    இல்லை. இஸ்லாம் அரபுகளுக்காகத்தான் எழுதப்பட்டது. அதன் ஆதாரங்களை குரானிலேயே காணலாம். குரான் திரும்ப திரும்ப, நீங்கள் புரிந்துகொள்வதற்காக பேச்சுநடை அரபியில் சொல்லப்பட்டிருக்கிறது, அரபி மொழியில் சொல்லப்பட்ட குரான், நீங்கள் புரிந்துகொள்வதற்காக அரபி மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படியென்றால் அது அரபியர் அல்லாத மற்றவர்கள்களுக்கு சொல்லப்படவில்லை என்றுதான் பொருள். மேலும் உங்களுக்கு முழுமையாக்கிவிட்டேன் என்று அரபியரிடம்தான் முகம்மது சொல்லுகிறார். இதனை அரபியர்களுக்கு மட்டுமல்ல இது எல்லோருக்கும் தான் என்ற வார்த்தை குரானில் இல்லை. ஆகவே இது முஸ்லீம்கள் இட்டுக்கட்டும் பிரச்சாரம்.

    ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலேயே அல்லா மற்ற நாடுகளை விட அரபு குலத்தை மேம்படை செய்திருக்கிறான் என்ற வரிகள் வருகின்றன. அரபியர்கள் இந்த ஹதீஸ்களை தூக்கி பிடிக்கிறார்கள். மற்ற நாடுகளில் பிரச்சாரம் செய்யும் அரபிகளும், டூப்ளிகேட் அரபிகளும் இதனை அமுக்கி, நீங்கள் சொன்ன பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

    //“அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்;பிறகு,அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்;அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு வகைகளை ஜோடி ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில்,ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான்.அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம்,அவனைத்தவிர வேறு நாயன் இல்லை;அவ்வாறிருக்க,(அவனை விட்டும்)நீங்கள் எப்படித் திருப்பப்படுகிறீர்கள்?” -அல் குர்ஆன்.39;6.//

    வரிக்கு வரி தவறு. அரபியர்களை ஒரே ஒரு நபரிடமிருந்து படைத்தாரா அல்லது மனிதர்களை ஒரே ஒரு நபரிடமிருந்து படைத்தாரா? மனிதர்கள் ஒரே ஒரு நபரிடமிருந்து படைக்கப்படவில்லை. பரிணாமம் குழுவில்தான் நடக்கிறதே தவிர ஒரு நபரிடம் நடைபெறவில்லை. இந்த வரி புரியவேண்டுமென்றால் நீங்கள் ஜெனடிக்ஸ் படிக்கவேண்டும். ஆனால் பரிணாமவியல் குரானுக்கு எதிரானது என்று அறிவியலை மறுக்கிறீர்கள்.

    அடுத்து, முதல் பெண் ஆணிடமிருந்து படைக்கப்படவில்லை.

    கால்நடைகளில் எட்டு வகை இல்லை. கால்நடைகளில் எட்டுவகை என்பதன் வரிசை 6:142-144இல் இருக்கிறது.

    Of the cattle are some for burden and some for meat: eat what Allah hath provided for you, and follow not the footsteps of Satan: for he is to you an avowed enemy.

    Eight in pairs: of sheep a pair, and of goats a pair; say, hath He forbidden the two males, or the two females, or (the young) which the wombs of the two females enclose? Tell me with knowledge if ye are truthful:
    Of camels a pair, and oxen a pair;
    அதாவது இரண்டு செம்மறியாடு, இரண்டு ஆடு, இரண்டு ஒட்டகம், இரண்டு மாடு. இவைதான் கால்நடைகளா? அப்போது, கழுதை குதிரை எல்லாம் என்னவாகும்? அல்லது வெறும் மாடுகளை மட்டும் குறிக்கிறது என்றால், எட்டுவகைக்கும் மேலே மாடுகள் இருக்கின்றன. ஆகவே, முகம்மது அன்று அரபியாவில் இருந்த எட்டு வகை கால்நடைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.

    தாய்மார்களின் வயிற்றுக்குள் மூன்றுவகை இருள்களா? அது என்ன? மூன்று வகை தோல் அடுக்குகளான கர்ப்பப்பைகளா? இது அப்படியே கேலன் Galen என்ற அந்த கால கிரேக்க மருத்துவவியலாளரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதாவது chorion, allantois, and amnion என்பவை அவை. இவைதான் கர்ப்பப்பையின் அங்கங்கள் என்று வரையறுக்கிறார். ஆகவே இதுவும் முகம்மதுவின் சொந்த கதை அல்ல.அன்றைய அறிவியலிலிருந்து எடுத்துகொள்ளப்பட்ட விஷயம். இப்போது இந்த பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் அதே காலனின் பொருளில் அல்ல.

    ஆகவே உங்கள் பதில் வரிக்கு வரி தவறு மட்டுமல்ல, மனதறிந்தே சொன்ன பொய்யாகவும் இருக்கிறது. அரபிகளே முகம்மது உருவாக்கிய இஸ்லாமில் மேம்பட்டவர்கள். அவர்களே உயர்ந்த குலம்.
    Arabs are the most noble people in lineage, the most prominent, and the best in deeds
    Al-Tabari, Vol. 9, p. 69

    when A’isha (Muhammad’s wife) had a maid-slave who was an Arab, Muhammad said to A’isha, `Set this maid free because she is from the children of Ishmael.'”
    Ibn Timiyya, Vol. 31, pp. 376-377

    Ali Ibn Abi Talib, said: Verily the Prophet said: God divided the earth in two halves and placed (me) in the better of the two, then He divided the half in three parts, and I was in the best of them, then He chose the Arabs from among the people, then He chose the Quraysh from among the Arabs, then He chose the children of ‘Abd al-Muttalib from among the Banu Hashim, then he chose me from among the children of ‘Abd al-Muttalib, and from them he chose me.
    Ibn Sa’d, Vol. 1, p. 12

    The fact that Allah Most High has chosen the Arabs over other nations is affirmed in rigorously authenticated hadiths of the Prophet, may Allah bless him and give him peace; related by Bukhari and Muslim in their “Sahih” in the beginning of the chapter of merits, # 5897, on the authority of Wathilah ibn al-Asqa` who said, “I heard the Messenger of Allah, may Allah bless him and grant him peace, say, ‘Verily Allah has chosen Kinanah from the son of Isma`il, and He has chosen Quraysh from among Kinanah and He has chosen Hashim from among Quraysh and He has chosen me from the Bani Hashim.’”
    So this hadith is a primary text about the preference of Arabs over others and the preference of some Arabs over other Arabs. And this is what the Imams have chosen from the………of their books, and even in individual books such as the book of Qurb about the merit of Arabs, authored by the great Imam al-Hafiz Zayn al-din al-`Iraqi. And it was summarized by Shaykh al-Islam Ibn Hajar al-Haytami and others.

    Therefore the preference of Arabs over other nations, and the preference of some Arabs over other Arabs is affirmed in the Sacred Law.

    ஆகவே முகம்மது உருவாக்கிய அரபு மதத்தில் அரபியர்கள் தங்களை உயர்ந்த இனத்தினர் என்று கூறிக்கொள்கிறார்கள்.

    1. Avatar
      ஷாலி says:

      தங்கமணி ஸார்! நீங்கள் அதிகம் விபரம் தெரிந்தவர்.உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை! திண்ணை சபைக்கு மூத்தவர். நீங்கள் எது சொன்னாலும் உண்மையாகத்தான் இருக்கும்,இருக்க வேண்டும்.உங்கள் அளவுக்கு எனக்கு விபரம் போதாது.இஸ்லாத்தை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்.

      //ஆகவே உங்கள் பதில் வரிக்கு வரி தவறு மட்டுமல்ல, மனதறிந்தே சொன்ன பொய்யாகவும் இருக்கிறது//

      சரி அய்யா! நீங்கள் தொடர்ந்து சரியானதை உண்மையை…. எழுதுங்கள்.

  22. Avatar
    E.V.Nandakumar says:

    I think we are all missing an important point. Granted that Hamas are willingly launching rockets from densely populated areas, it does not take the blame away from Israel for the simple reason that their reciprocation is as in-human as the original act. Are they not aware that their act will result in mass killing of innocent civilians including children?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // I think we are all missing an important point. Granted that Hamas are willingly launching rockets from densely populated areas, it does not take the blame away from Israel for the simple reason that their reciprocation is as in-human as the original act. Are they not aware that their act will result in mass killing of innocent civilians including children? //

      So, when Hamas is launching rockets from the residential areas, what do you expect Israel should do ?

  23. Avatar
    TexanFriend says:

    In Jews there are black jews. Case and point, Yemeni and Ethiopian jews. It is a lie that the jews have said that Aryan are superior. With that said, Violence in any form is deplorable be it is jew, Christian, hindu, muslim or Buddhist.

    Any Op-Ed in any news paper or magazine is just that. It is an opinion. Any reader who is rational enough to read an opinion will have to follow the article and find out if there is truth to it or not. To use our own thirukkural, ‘Epporul yaar yaar vai ketpinum, apporul mei porul kanbadhu arivu’.

    Base don the above, there is no concept of senior writer or junior writer. If you have been following the Israel Palestinian conflict, you will find that how people of Palestine have been used and abused by fellow Arabs and other lip service nations.

  24. Avatar
    Harison says:

    அருமையான கட்டுரை, உண்மைகளை சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இஸ்ரேலிய முஸ்லீம் பிரச்சினையில் உண்மையை கூறும் பத்திரிகை தொலைக்காட்சி ஒன்று கூட இல்லை . இவ்வளவு பச்சையாக பொய் பேசும் மீடியா க்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

Leave a Reply to Harison Cancel reply

Your email address will not be published. Required fields are marked *