தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு

This entry is part 25 of 25 in the series 28 செப்டம்பர் 2014
 jeyalalitha

மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் கம்யூனிஸ்ட் நாகரிகத்தையே ஒழித்துவிடுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்து, மனிதர்களை மிருகங்கள் நிலைக்கு கொண்டுசென்றால்தான் கம்யூனிஸம் மலரும் என்று நாட்டில் பாதிக்கும் மேல் கொன்றொழித்து மீதிப்பேரை மிருகங்களாக்கினான்.

அழிவு உடனே வந்துவிடுவதில்லை. அது கட்டியம் கூறுகிறது. இதோ வருகிறேன் என்று அடையாளம் காட்டுகிறது. புரிந்துகொள் என்று கோடிடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இந்த வாரம் பார்த்தேன். 18 வருட காலம் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு ஒரு வழியாக வந்தது. கால தாமதமானாலும் தீர்ப்பு நல்லதே என்று நல்லதை பார்த்தார்கள் பல யுதிஷ்டிரர்கள். நானோ அங்கே, நகுலன் போல, வரப்போகும் அழிவின் அடையாளத்தை பார்த்தேன்.

ஒரு மாநிலமே அச்சத்தை உண்டு, அச்சத்தை உமிழ்ந்து, அச்சத்தில் ஆழ்ந்து வீடுகளுக்குள் ஒடுங்கி கிடந்தது.

அந்த மாநில மக்களின் சொத்துகள்தான் சுரண்டப்பட்டன. அந்த மாநில மக்களின் வரிப்பணமே ஒரு தனி மனிதரின் சொத்தாக மாற்றப்பட்டது. அந்த மாநில மக்கள் கொடுத்த அதிகாரமே துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ஆனால், அதே மக்களே அந்த தனி நபருக்கு பெருவாரியான வாக்களித்து தேர்ந்தெடுக்கவும் செய்திருந்தார்கள் சில மாதங்களுக்கு முன்னால். அந்த தனிநபரின் வரலாற்றில் நடந்த கொலைகளும், அச்சுருத்தல்களும், ஆட்டோக்களும், கொள்ளைகளும், அந்த தனி நபரின் கீழ் இருந்த கட்சி என்ற பெயரில் இருந்த மாபியாவும் நடத்திய அனைத்தையும் எழுத பக்கங்கள் போதாது. அந்த மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்காக 18 வருடம் விசாரணை செய்து, பல தரப்பு வாதங்களை கேட்டு, நீதிமன்றம் அந்த தனிநபருக்கு தண்டனை அளித்தற்கு இந்த அச்சம்.

இரண்டு சமூகங்கள் அடித்துகொள்ளும்போது இரண்டு சமூக மக்களுமே வீட்டுக்குள் அடங்குவது எதிர்பார்க்கக்கூடிய அச்சம். ஆனால், இது அதுவல்ல. எந்த அரசாங்கம் பொதுமக்களை காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் உறுதி மொழி எடுத்திருக்கிறதோ அந்த அரசாங்கத்தை கண்டே அச்சம். அந்த அரசாங்கத்தின் தூண்களையும், அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மாபியா கும்பலையும் கண்டு அச்சம்.

தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளுமே மாபியாக்கள்தான். அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். மாபியாவின் அனைத்து குணங்களும், அனைத்து வக்கிரங்களும் இந்த இரண்டு கட்சிகளிடமும் உண்டு. இங்கே ஆளும் கட்சி மாபியாவுக்கு ஹஃப்தா வெட்டாமல் ஒரு காரியமும் தமிழ்நாட்டில் நடக்காது. நடக்கவும் விட மாட்டார்கள். வீடு கட்ட வேண்டுமா? வீடு வாங்க வேண்டுமா? நிலம் வாங்க வேண்டுமா? கடை ஆரம்பிக்க வேண்டுமா? எல்லாவற்றுக்கும் ஹஃப்தா. இது அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் அல்ல. அங்கிருக்கும் ஒரு அதிமுக, அல்லது திமுக வட்டசெயலாளருக்கும், உதிரி அரசியல் ரவுடிகளுக்கும் கொடுக்கும் ஹஃப்தா. ரோடு போடவேண்டுமென்றாலும் சரி, அல்லது ரோட்டில் போக வேண்டுமென்றாலும் சரி ஹஃப்தா.

அந்த மாபியா கட்சியாக உலாவருகிறது. என்றாலும் அது மாபியாதான். இந்த மாபியாவில் இருப்பதும், காட்டப்படுவதும் தலைமைக்கு விசுவாசம். எது மிகவும் முதுகு வளைந்து தரையை தொட்டு, விசுவாசத்தை காட்டுகிறதோ அது அங்கீகரிக்கப்படும். அதற்கு காசுகளும் பதவிகளும் செல்வாக்கும் தூக்கி எறியப்படும். அதனை விசுவாசிகள் காலில் விழுந்து நக்கி எடுத்துகொள்வார்கள்.

அதனால்தான், அலங்காரமாக உடை உடுத்தி பட்டுப்புடவை அணிந்து, அழுக்கில்லாத வேட்டி அணிந்து காரை உடைக்கிறார்கள் இந்த விசுவாசிகள். ஒரு சமூக விரோத செயலை, தனக்கு சொந்தமில்லாத ஒரு காரை உடைக்கும் செயலை செய்யும்போது, ஒரு சமூக விரோதிக்கு இருக்கும் முகமற்ற தன்மையை விரும்பும் முகமூடி அணிந்துகொள்ளும் ஒரு குணமில்லாது, தான் உடைப்பதை புகைப்பட காரர் படமெடுக்கவேண்டும் அது எப்படியோ தன் தலைமைக்கு சென்று தான் தகுந்த வெகுமதி அளிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி விசுவாசத்தை காட்ட முனைகிறார்கள். புதியதலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை மறைக்க விரும்பாததை பாருங்கள்.

இது போன்று நடக்கும் என்று எல்லா தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைவரும் தங்கள் உடைமைகளை பாதுகாத்துகொண்டு, உயிரை பாதுகாத்துகொண்டு வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். இந்த கட்சியில் உள்ளவர்கள், இந்த கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள், எதிர்கட்சியினர், கடசி சாராதவர்கள் என்று அனைவருக்குமே அது தெரிந்திருக்கிறது.

அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று ஒரு விசுவாசி கூறலாம். அப்படித்தான் சில விசுவாசிகள் எழுதுகிறார்கள். ஆனால், அவர்களும் அப்படி ஒன்று நடக்கலாம் என்று தாங்களும் கருதினோம் என்பதை மறுக்கமாட்டார்கள். அப்படி ஒன்று நடந்தால் எதிர்கட்சி மீது பழி சொல்லலாம் என்றும் அவர்கள் விரும்பியிருப்பார்கள்.

இது ஜெயலலிதாவின் கட்சி என்று மட்டுமல்ல, நாளை கருணாநிதிக்கு இதே போல நான்கு ஆண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வந்தாலும் அதே போல மக்கள் நிச்சயம் வீடுகளுக்குள் முடங்கியிருப்பார்கள். அதுதான் உண்மை. அதுதான் இந்த சமூகத்தின் அழிவின் ஆரம்ப அடையாளம்.

லல்லு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்றபோது பிகார் கொந்தளிக்கும் என்று கருதி பிகார் மக்கள் முடங்கவில்லை. அன்றைய முதல்வராக இருந்த அந்துலே பதவி விலகியபோது மகாராஷ்டிரம் பயந்து போய் முடங்கவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகியபோது கர்னாடகம் கலவரத்தில் ஈடுபடும் என்று அஞ்சி மக்கள் வீட்டில் முடங்கவில்லை.

ஆனால், பல்லாயிரம் ஆண்டு காவியங்கள், கவிதைகள், காப்பியங்கள் என்றும், கருத்து சுதந்திரத்துக்கு கொடிபிடிக்குமாறு கடவுளர்களையே கிண்டல் செய்யும் கவிதைகள் எழுதிய வரலாறு கொண்டதும், நுண்கலைகளின் உச்சங்களையும், உரத்த சிந்தனையின் தீப்பொறிகளையும் கொண்ட கவிதைகளையும் காப்பியங்களையும் வடித்து போற்றி வந்த தமிழகத்தின் இன்றைய நிலை, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் 18 ஆண்டு நடந்த ஒரு நீதி விசாரணையின் முடிவில் தண்டிக்கப்பட்டபோது, அந்த மாபியாவின் எதிர்வினை அஞ்சி, அந்த மாபியாவின் கையில் இருக்கும் அரசு இயந்திரத்தின் கோபவெறிக்கும், அதன் பாரபட்ச நடைமுறைக்கும் அஞ்சி வீட்டில் முடங்குகிறது. இதுதான் அந்த அழிவை நோக்கி போகும் பாதையில் நாம் பார்க்கும் ஒரு மைல்கல்.

நான் முன்னரே ஒரு முறை எழுதியிருந்ததுபோல, திராவிட இயக்கத்தின் விளைவை மட்டுப்படுத்தியிருப்பது காந்தியும், நேருவும் இங்கே விதைத்துள்ள ஜனநாயக உணர்வும், இந்தியாவின் ஒரு அங்கமாக கலாச்சார வரலாற்று ரீதியிலும் மனத்தளவிலும் இணைந்திருப்பது மட்டுமே. இன்று, ஒரு கட்சி ஆட்சியிலிருந்தால், மற்றொரு கட்சியினர் மீது கஞ்சா வழக்கும், அவதூறு வழக்குமே போட முடிகிறது. தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தாலோ, அல்லது மாநில சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்திருந்தாலோ, இங்கே நடந்திருக்கக்கூடியது ஒரு உள்நாட்டு கலவரமே. தெருவுக்குத் தெரு குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையுமே பார்த்திருப்போம்.

Series Navigation
author

சின்னக்கருப்பன்

Similar Posts

48 Comments

  1. Avatar
    பெருமாள் தேவன் says:

    ஹாஹாஹாஹா

    நிலைமையை சரியாக எழுதியுள்ள எழுத்தாளர் ஏனோ பழியை தமிழர் மீது போடுகிறார்.

    அவர் குறிப்பிட்டதைப் போல வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திராவிடக் கட்சிகளின் அடிமைகள், மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், விசுவாசிகள்.

    சுதந்திரமான தமிழர்கள் ஆட்சி நடைபெறும்போது தமிழரின் நாகரீகம் தெரியவரும். இது திராவிடம் பேசியவர்கள் உருவாக்கிய அடிமை நாகரீகம். இதற்கும் தமிழருக்கும் தொடர்பில்லை.

    காலம் அதை உணர்த்தும்.

    1. Avatar
      ஓகை நடராஜன் says:

      காலம் உணர்த்துமா? எது காலம்? நிகழ்ந்து கொண்டிருப்பது காலமில்லையா? அது எதையும் உணர்த்தவில்லையா? நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம் உணர்த்துவதைத்தான் கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      >> சுதந்திரமான தமிழர்கள் ஆட்சி நடைபெறும்போது …

      அலை எப்போது ஓய்வது ? எப்போது குளிப்பது ?

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    படிக்கையில் நெஞ்சம் பதைத்துத்தான் போகிறது. எப்போதுதான் விடியுமோ தெரியவில்லை.

  3. Avatar
    ஜடாயு says:

    சாட்டையடியான கட்டுரை. உண்மையில் இந்தக் கட்டுரை அல்லது இது போன்ற கருத்துச் சிதறல்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு நாளிதழிலும், வெகுஜன ஊடகங்களிலும் வந்திருக்க வேண்டும். அதற்கான அறிகுறியே இல்லை. ஒரு இணைய இதழில் மட்டுமே இப்படிப் பட்ட கருத்துக்கள் வர முடிகிறது என்பதே கட்டுரை நமக்கு உணர்த்திச் செல்லும் *அழிவு*க்கான சாட்சியம்..

  4. Avatar
    சும்மா says:

    “சுதந்திரமான தமிழர்கள் ஆட்சி நடைபெறும்போது தமிழரின் நாகரீகம் தெரியவரும். இது திராவிடம் பேசியவர்கள் உருவாக்கிய அடிமை நாகரீகம். இதற்கும் தமிழருக்கும் தொடர்பில்லை”

    இது போன்ற மடத்தனமான பின்னூட்டங்கள் என்னவோ ”தமிழர்” என்ற பதமானது அமானுஷ்யமானது போலவும், ”உயர்தர” சிந்தனைகளை மட்டுமே குறிப்பது போலவும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி வைக்கின்றன. அதனால் தான் தமிழை சரியாகப் படிக்க / எழுதத் தெரியாத தறுதலைகள் கூட “டமிலண்டா !..” என்று மார்தட்டிவிட்டு, டாஸ்மாக்கின் சரக்கடித்துவிட்டு நமிதாவின் மார்பை பார்த்துக்கொண்டே மண்ணோடு ஐக்கியமாகி விடுகின்றன.

    தமிழ் பேசுகிறவன் தமிழன் – அவ்வளவு தான். அடிமையும் தமிழன்தான். அடிப்பவனும் தமிழன்தான். தமிழர் என்று பீற்றிக் கொள்வதினால் மட்டும் ஒன்றும் பிடுங்கிவிட முடியாது. தமிழன் எல்லாரையும் போல சாதாரண மனிதன் தான். சொல்லப் போனால் இப்போது நடக்கின்ற அக்கிரமங்களையும் அரஜகங்களையும் பார்க்கும்போது தமிழன் என்பவன் ஒரு சாதாரண மனிதனையும் விட கேவலமானவன் என்பதே உண்மை. இல்லை என்றால் தன் நாட்டை ஆள கருங்கலிகளையும் கபட வேடதாரிகளையும் தேர்ந்தெடுப்பானா ? முட்டாள் வர்க்கம்தான் இப்போதைய ஓட்டு போடும் தமிழன். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்தே இல்லை.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    //தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளுமே மாபியாக்கள்தான். அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்//

    எனக்கு ஒரு ஐயம் வருகிறது. ஏன் மற்ற கட்சிகள் மாஃபியாக்கள் இல்லையென்கிறார். பா ம க, மரஙகளை வெட்டியதையும் பேருந்துகளையும் குடிசைகளையும் கொழுத்தியது மாஃபியா இல்லையென்கிறாரா? விடுதலைச்சிறுத்தைக்கட்சி மாஃபியா இல்லையா? தே.தி.மு. க மாஃபியா இல்லையா?

    கட்டுரையாளர் சொல்லும் இரு கட்சிகள் பெரிதான பின்பு மாஃபியாக்கள். நான் குறிப்பிட்ட‌ கட்சிகள் சின்ன கட்சிகளிலிருந்தே மாஃபியாக்கள். திராவிடக்கட்சிகள்தான் மாஃபியாக்கள் என்கிறார். நான் சொன்ன கட்சிகள், குறிப்பாக, பா ம க, தாங்கள் திராவிட்க்கட்சிகள் இல்லையென்கிறார்களே!

    எந்தவொரு கட்சியும் மாஃபியாவாக மாறிவிடும் அது ஒரு பெரிய கட்சியாக மாறும்போது. இவரே சொல்லிவிட்டார்: இரு பெரும் கட்சிகள் என்று. ஆக, மாஃபியாக மாற பெரிதினும் பெரிது கேள். கூடிய சீக்கிரம் பி ஜே பி ஆகும் ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் சிலவருடங்கள் ஆகும். அதுவரை பொறுத்துக்கொண்டிருக்கலாமே வட நாட்டின் ஆகி விட்டதே பிஜேபி! அவர்களென்ன எந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்?

    பம்பாயில் வசித்தவரா? 60 களில் தமிழர்களை ஓட ஓட விரட்டியவர்கள்! 90 களில் பீஹாரிகளில் கார்களை எரித்தவர்கள்? இசுலாமியர் மீது தாக்குதலகளைத்தூண்டியவர்கள். இவர்களெல்லாம் மாஃபியாக்கள்தானே?

    ஆக, சின்னக்கருப்பன் அண்ணாச்சி! மாஃபியாக்கள் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் – அளவுக்கதிகமான ஆள்பலம்; பணபலம். தங்களைத் தட்டிக்கேட்க எவராலும் முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலமைந்த நம்பிக்கை. சிவ சேனைக்கு இவை இருக்கின்றன: எனவே அவர்கள் மாஃபியாக்கள்.

    இவையிருந்தால் மாஃபியாக்களாகலாம். திராவிட இயக்கத்தைச்சேர்ந்ததனால் மட்டுமே மாஃபியாக்கள் என்பது அவலை நினைத்து உரலை இடித்த கதைத்தான். If you personalise sociological problem, you will never get the right answer.

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    //அந்த மாநில மக்களின் சொத்துகள்தான் சுரண்டப்பட்டன. அந்த மாநில மக்களின் வரிப்பணமே ஒரு தனி மனிதரின் சொத்தாக மாற்றப்பட்டது. அந்த மாநில மக்கள் கொடுத்த அதிகாரமே துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ஆனால், அதே மக்களே அந்த தனி நபருக்கு பெருவாரியான வாக்களித்து தேர்ந்தெடுக்கவும் செய்திருந்தார்கள் சில மாதங்களுக்கு முன்னால். //

    There you go again !

    ஜெயலலிதா சேர்த்ததாக கூறப்படும் சொத்துக்கள் மக்களிடமிருந்து சுரண்டப்படவில்லை. அவை தனியார்கள் சிலரின் சொத்துக்கள். வாங்கப்பட்டவை. நோ லான்ட் கிராபிங். பதிவு செய்யப்பட்டு வாங்கப்பட்டவை.

    அழகிரியைப்போல கோயில் சொத்தை வளைத்துப்போடவில்லை. கணமாய் (பொதுச்சொத்து) மேல் மண்ணைப்போட்டு கல்லூரி கட்டவில்லை. தனியாரின் சொத்துதான் கோட நாடு எஸ்டேட். தனியார் சொத்துதான் சிறிதானூர் பங்களா. தனியார்களின் சொத்துக்கள்தான் ஜெயலலிதாவின் தோழியால் வாங்கப்பட்டவை. தனியார்கள் மிரட்டப்பட்டிருக்கலாம். அது வேற கதை. மாநில மக்களின் வரிப்பணம் தனிமனிதர் சொத்தாக மாற்றப்பட்டது என்று நீங்கள் சொல்வது பூச்சாண்டியைக்காட்டும் வேலை. கவலைபபடவேண்டாம்: ஒரு சிலர் பயப்படுவார்கள் :-)

    மக்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டதனால், நம்பிக்கையைக்கொடுத்தார். எனவே ஆட்சி கொடுத்தார்கள்.

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    //டு கட்ட வேண்டுமா? வீடு வாங்க வேண்டுமா? நிலம் வாங்க வேண்டுமா? கடை ஆரம்பிக்க வேண்டுமா? எல்லாவற்றுக்கும் ஹஃப்தா.//

    எங்கேயும் உண்டு. அது இந்தியாவின் வாழ்க்கை. தில்லியிலும் உண்டு, திருனெல்வேலியிலும் உண்டு. இலஞ்சம் கொடுத்தால் நடக்கும். அரசியல்வாதிகளே சேரி நிலங்களை வளைத்துப்போட்டு வீடுகட்டி வாடகைக்கு விட்டிருப்பதை தில்லியில் காணலாம்.

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதை ஒழிக்க முடியாது. இப்போ அதிமுக செயலாளருக்கு. பிஜேபி வந்தால் பிஜேபி செயலாளருக்கு கொடுக்கப்போறோம். இல்லையா?

    காஞ்சிபுரத்தில் பேருந்தைக்கொழத்திய அதிமுக நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள். விட்டுவிட்டார்கள் என்று எழுதியிருக்கிறீர்களே?

  8. Avatar
    IIM Ganapathi Raman says:

    //லல்லு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்றபோது பிகார் கொந்தளிக்கும் என்று கருதி பிகார் மக்கள் முடங்கவில்லை. அன்றைய முதல்வராக இருந்த அந்துலே பதவி விலகியபோது மகாராஷ்டிரம் பயந்து போய் முடங்கவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகியபோது கர்னாடகம் கலவரத்தில் ஈடுபடும் என்று அஞ்சி மக்கள் வீட்டில் முடங்கவில்லை.//

    That is why I have said: if you personalise social problem, you won’t see things in their correct perspective.

    அண்ணாச்சி சின்ன கருப்பன்! பீஹாரில் எவருமே charismatic leader இல்லை. charismatic leader என்றால் என்ன பொருள்? A leader who infuses hope and confidence in people of all sections of society, more so, with the lower strata of society. ஜெயபிரகாஸ் நாராயணனுக்கு அப்புறம் பீஹாரில் அப்படிப்பட்ட தலைவராக எவரும் வரவில்லை . ஜெபி அப்படிப்பட்ட தலைவராக இருந்தபடியால் அவர் பின் பீஹாரிகள் மட்டுமல்ல, வடவிந்தியாவே நின்று இந்திராவை வீட்டுக்கனுப்பியது.

    லாலுவுக்கோ நிடிஸ் குமாருக்கோ அப்படிப்பட்ட பின்புலம் இல்லை. இவர்கள் டெம்பரரி தலைவர்கள். இவர்கள் ஜெயிலுக்குப்போனால் அது வெறும் செய்தி தான். அந்துலே ஒரு காங்கிரஸ் தலைவர் மட்டுமே; மக்கள் தலைவரன்று. ஹெக்டே ஹை சொசைட்டி ஆள்.

    அதே நேரத்தில் கருநாநிதியையோ, ஜெயலலிதாவையோ, ஜெபி லெவலில் நான் சொல்லவில்லையென்றாலும், அவர்களது mass base is complete in TN. Their arrest and incarceration will definitely create waves of emotions. In respect of Jeyalalitha, it is wider. Don’t compare TN with other States.

    தமிழ்நாட்டு மக்களைப்புரிந்த பின்னர்தான் அவர்கள் அரசியலையும் புரியமுடியும். உணர்ச்சிவசப்படல் பெருங்குற்றமன்று. அது அநாகரிகமன்று. அழிவை நோக்கிப்போகிறார்கள் எனபதெல்லாம் சுத்த பூச்சாண்டி வேலை.

    தமிழ்நாட்டு பிஜேபிக்கு ஏகமா குறைகள் உண்டு. அதில் பெருங்குறை கரிஷ்மாட்டிக் லீடர் இல்லாதது. தமிழக காங்கிரசு கீழே போனதற்கு காரணம் காமராஜருக்குப் பின் கரிஷ்மாட்டிக் லீடர் வராமல் போனது.

    ஆக, கரிஷ்மா இருந்தால்தான் தமிழ்மக்கள் மனங்களில் இடம் கிடைக்கும். அதன்ன தப்பாமா?

  9. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // அந்த மாநில மக்களின் சொத்துகள்தான் சுரண்டப்பட்டன. அந்த மாநில மக்களின் வரிப்பணமே ஒரு தனி மனிதரின் சொத்தாக மாற்றப்பட்டது. …. அந்த மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்காக 18 வருடம் விசாரணை செய்து, பல தரப்பு வாதங்களை கேட்டு, நீதிமன்றம் அந்த தனிநபருக்கு தண்டனை அளித்தற்கு இந்த அச்சம். //

    அநேகமாக மக்களாட்சி நடக்கும் எந்த வேறெந்த தேசத்திலும் நடக்காத அவலம் இதுவென நினைக்கிறேன். மன்னனுக்கென மண்டியிட்டு தன்தலை கொய்யும் “பாரம்பர்யம்” சார்ந்த நமக்கெல்லாம் மக்களாட்சி எதற்கு ?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      Again a shallow thought.

      மக்களாட்சி இருக்கும்போதும் இல்லாதபோதும் தனிமனித ஐகானிக் (iconic) தலைவர்கள் வந்து கொண்டேயிருப்பர். அது இல்லாதபோது இன்னும் பெரிய பிரச்சினை வரும்: அதாவது ஐகானிக் தலைவன் என்று என்னை ஏற்றுக்கொள் என்று மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவர். மன்னர்கள் பலர் அப்படித்தான் செய்தார்கள். அவர்கள் கூலிக்கு ஆடகளை வைத்து தங்கள் சுய புராணத்தை ஆஹோ ஓஹோ என்றெழுதச்சொல்லியும் பேசச்சொல்லியும் மக்களை மூளைச்சலவை செய்தனர். அப்படிப்பட்ட தமிழ்மன்னர்கள் ஏராளம். மன்னனுக்கு முதுகு சொறிந்துவிட்டே வயிறுகளை நிரப்பிய கூட்டத்தில் நம் புலவர்களும் பண்டிதர்களும் உண்டு. //திருவுடை மன்னனைக்கண்ட போது திருமாலைக்கண்டேனே//

      ஆக, மக்களாட்சியைவிட மன்னராட்சி கேடானது. மக்களாட்சியில் மக்களின் வேதனை ஒரு ஐந்தாண்டு காலம்தான். பின்னர், மக்கள் தங்கள் தலைவிதியை மாற்ற முடியும். மன்னராட்சியில் முடியவே முடியாது.

      மன்னனுக்கு மண்டியிட்டு தலைகளைக்கொடுக்கும் விசயம் ஏதோ மக்களே விரும்பிச்செய்ததாக இவர் எழுதுகிறார். அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று (பழனிக்கு அருகில்) விஜய நகர ஆட்சியில் மக்கள் தங்கள் தலைகளை மன்னனுக்காகக் கொடுத்தார்கள் என்று சொல்கின்றது. மேலும் ஆராயும் போது, அம்மககள் யாரார் எனத் தெரிந்தது. அவர்கள் தலித்துக்களும் மற்றும் கீழ்நிலை மனிதர்களுமே. அதாவது மன்னனுக்காக தலைகளைக்கொடுக்க இவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களால் எதிர்க்க முடியாது.ஊருக்குள் சிலர் விலைப்பெண்டிர். (I shall give the reference shortly) இன்னும் சிலர் தலையைக்கொடுக்கவே வளர்க்கப்பட்ட‌ பேச்சில்லா ஜீவன்கள். இதுதான் தமிழகத்தின் இருண்ட வரலாறு.

      ஜெயலலிதாவுக்காக‌ விரலை வெட்டுவதும், தற்கொலை பண்ணிக்கொள்வதும் ஒரு சிலர் செய்கிறார்கள் அவை உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்டவை. அவர்கள் பிறரால் நிர்ப்பந்தப்படுத்தப்படவில்லை. மன்னனுக்காக தலைகள் கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டன தமிழகத்தில்.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        உங்களது “deep thought” கண்டு வெறும் “shallow thought” கொண்ட எனது அகக்கண்கள் திறவுற்று புறக்கண்கள் பனித்து மெய்சிலிர்த்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன். புத்தனடைந்த மெய்ஞ்ஞானம் நிகர்த்தது அது.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          அந்த கல்வெட்டை முதலில் படியுங்கள். மன்னர்கள் தங்களைக் கடவுளர்களாக்க என்னென்ன புரட்டு பண்ணினார்கள் என்று தெரியும். திருவுடை மன்னரைக்காணின் திருமாலைக்கண்டேனே என்று மஹான்கள் எனப்போற்றப்படும் சாமியார்களே சொல்லுமளவுக்கு ஏமாற்றினார்கள். எளியோர் தலைகளைக் கொய்தார்கள். (ஐ எஸ் எஸைக்கெல்லாம் இவனுகள்தான் முன்னோடிகள்) வலியோர் அவனுக்கு ஜால்ராத்தட்டி நன்கு வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மன்னராட்சி வேண்டும்; மக்களாட்சி கூடாது என்பது ஷாலோ தாட் மட்டுமன்று. கொடூரமான‌ எண்ணம் ஆகும். மக்களாட்சியில் தற்கொலைகளும் விரலகளை வெட்டிக்கொள்வதும் கட்டாயப்படுத்தப்படவில்லை.

          கட்டுரை எழுதிய சின்னகருப்பன் இவற்றைப்பற்றியெல்லாம் சிந்திக்கவேயில்லை. தனிநபராக தன்னுடைய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதியிருக்கிறார்.

  10. Avatar
    arumugamsaravan says:

    தயவு செய்து நீதிபதியின் நேர்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டாம். சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட புடவை நகை மட்டுமில்லாமல், ஐந்தாண்டுகளில் அரசாங்கத்தில் பெற்ற சம்பளம் வெறும் ரூ60, ஒரு முதல்வர் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்பது நெறி முறை, இதற்கு மாறாக ஐந்தாண்டுகளில் மட்டும் 55கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியது எவ்வாறு என்பது தான் வழக்கின் முக்கிய அம்சமாகும். கொடநாடு பங்களா, 3,000 ஏக்கர் நிலம், பல புதிய தொழில்கள். இதையெல்லாம் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். என்பதை மறந்து விட்டு, முக நூலில் பதவிரக்கம் செய்ய வேண்டாம்.

  11. Avatar
    Anandg says:

    I enjoyed the style of the narration that started lightly, picked up the gloom in the middle, and ended up ‘indicating’ the doom.

    I wonder how many would be picking up the predicted doom. I am always proved wrong on this account by some reader correctly finding out what the author is really saying.

    I enjoyed the following phrases:

    //வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது

    // இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது

    // நாட்டில் பாதிக்கும் மேல் கொன்றொழித்து மீதிப்பேரை மிருகங்களாக்கினான்.

    // அழிவு உடனே வந்துவிடுவதில்லை. அது கட்டியம் கூறுகிறது. இதோ வருகிறேன் என்று அடையாளம் காட்டுகிறது. புரிந்துகொள் என்று கோடிடுகிறது.

    //பல யுதிஷ்டிரர்கள். நானோ அங்கே, நகுலன் போல

    //ஒரு சமூக விரோதிக்கு இருக்கும் முகமற்ற தன்மையை விரும்பும் முகமூடி அணிந்துகொள்ளும் ஒரு குணமில்லாது

    The only idea that I find odd is that assigning democratic values of modern India to Gandhi ji and Nehru.

    Both of their ideology touted democracy, but neither of them practised it in their life.

    That is exactly what the colonial DK parties and group repeat along with other Nehruvian socialists and communists.

    What you see now is the fruit of the Nehruvian seed that the colonizers have sowed before they delegated the subjugation, and departed to remotely rule from their cozy houses

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இருபெருங்கட்சிகள்தான் மாஃபியாக்கள்; திராவிட இயக்கமே மாஃபியாக் கலாச்சாரத்துககு காரணமென்றெல்லாம் அவிழ்த்து விட்டிருக்கிறார் சின்னகருப்பன். அதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிலைச்சொன்னால் நன்று.

      1. சிவசேனையில் அராஜக மாஃபியாக்கலாச்சாரத்துக்கு தமிழர்களும் பலிகடா ஆனார்களே! அந்த மாஃபியாக்கலாச்சாரத்துக்கு திராவிட இயக்கத்தின் தூண்டுதலா அடிப்படை?

      2. முத்தாலிக்கின் (வன சேனை) மாஃபியாக்கலாச்சாரத்துக்கும் எது அடிப்படை? திராவிட இயக்கமா? பி ஜேபியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டாரே?

      3. மசூதியின் மேலேறி உடைத்த மாஃபியாக்கும்பலில் கலாச்சாரத்துக்கு எது அடிப்படை? திராவிட இயக்கமா?

      4. 1984ல் இந்திரா கொலைசெய்யப்பட்டவுடன் காங்கிரசு மாஃபியாக்கும்பல் சீக்கியர்களின் கடைகளையும் வீடுகளையும் கொழுத்தியதும், தில்லி இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் வண்டிப்பெட்டிகளிலிருந்து சீக்கியப்பயணிகளை வெளியே இழுத்துப் போட்டு எரித்ததே! 10 நாட்களுக்கு தில்லி மாநகரம் எரிந்ததே? அந்த மாஃபியாக்கலாசாரத்துக்கும் திராவிட இயக்கமா அடிப்படை?

      நீங்கள் சொல்லலாமே! சின்னகருப்பன் சொல்லலாம். ஜடாயு சொல்லலாம். பொ முத்துக்குமார் சொல்லலாம். அதாவது திராவிட கட்சிகளை அடியோடு வெறுக்கும் எவருமே சொல்லலாம். மாஃபியாக்கலாச்சாரத்துக்கு எது அடிப்படை?

      எதை நான் shallow thought என்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் நடப்பதை தன் சொந்த வெறுப்பின் அடிப்படையில் ஆராய்வதையே சொல்கிறேன். தவறான சிந்தனை தவறான முடிவுக்கு இழுத்துச்செல்கிறது. ஒரு அஜண்டாவைத் தள்ள ஒரு கட்டுரை. கைதட்ட ஒரு கூட்டம்! :-)

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        வார்த்தைக்கு வார்த்தை மறுத்து விளக்கலாம். விளக்கத்துக்கும் விதண்டாவாதமே உங்களிடமிருந்து வரும். ஒன்றே ஒன்று மட்டும் : ’தமிழகத்தில் மாஃபியா கலாச்சாரத்துக்கு இருபெரும் திராவிட கட்சிகளே காரணம்’ என்று சொல்லும்போது ’சிவசேனையின் மாஃபியா கலாசாரத்துக்கும் திராவிட கட்சிகள்தான் காரணமா ?’ என்று கேட்பதுதான் ’ஆழமான சிந்தனை’ என்றால் நான் ’மேலோட்ட சிந்தனை’-க்காரனாகவே இருப்பதில் மகிழ்கிறேன்.

        தொடருங்கள்.

      2. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        >> கைதட்ட ஒரு கூட்டம்! :-)

        கைத்தட்ட வேண்டிய விஷயத்திற்கு கைத்தட்டாமல் போவதற்கு எனக்குத்தெரிந்து ஒருசில காரணங்கள்தான் இருக்க இயலும்.

        புகைச்சல், அறிவார்ந்த வக்கிரம் அல்லது புலன்களின் செயலின்மை.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          பொன்.முத்துக்குமார்!

          Lets be honest in what we write here.

          இன்றைய தமிழகத்து மக்கள் சரியான பாதையில் பயணிக்கவில்லையென்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மாஃபியாக்கலாச்சாரத்துக்கு இரு திராவிட கட்சிகள் மட்டுமே காரணம் என்பதைத்தான் மறுக்கிறேன். என் கருத்தின்படி, மாஃபியாக்கலாச்சாரம் எங்கும் எப்போதும் வரும்; அதற்கான காரணிகள் அமையுமெனில், தமிழகத்தில் பிஜேபி தனிப்பெரும் மெஜாரிட்டியில் வந்து ஆட்சியைப்பிடித்தால், எல்லாக்கட்சியிலிருந்தும் பணமுதலைகள் தங்கள் பணத்தைப்பெருக்க பிஜேபியில் வந்து சேர்வார்கள். அவர்களுடன் ரவுடிகள் கூட்டமும் அரசியல்வாதிகள் போர்வையில் வந்து சேரும். பின்னர் என்ன ? மாஃபியா கலாச்சாரம்தான்.

          ஒரு கட்சி தன் கொள்கையிலேயே மாஃபியாக்கலாச்சாரத்தை ஆதரித்தால் மட்டுமே அக்கட்சியை சுட்டிக்காட்டலாம். அதற்குத்தான் சிவ சேனையைக் காட்டினேன். வன்முறைதான் அவர்கள் கொள்கை. பீஹார்களின் டாக்சிக‌ளையும் அவர்கள் வீடுகளையும் அடித்து நொறுக்கவேண்டும் என்று அவர்கள் தலைவர் மேடையில் பேசுகிறார். இப்படி, ஒரு கட்சியே தன் கொள்கையாக வன்முறை சரியென்று கொள்ளும்போது மட்டுமே அக்கட்சிதான் காரணமெனலாம். அயோக்கியர்களே நிறைந்த அரசியலில், நாங்கள் மட்டும் யோக்கியர்கள் எனபது an example of black humour.

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            IIM Ganapathi Raman,

            இதுவரையில் தமிழகத்தை ஆண்ட கட்சிகளில் மாஃபியா கலாச்சாரத்தை முன்னெடுத்தது திராவிட கட்சிகளே என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கவனிக்கவும் வன்முறை/சட்டவிரோத வழிகளை சொல்லவில்லை. அது எல்லா கட்சிகளுமே கையாண்டவை. ஆனால் அவற்றை மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அங்கீகரித்து ஜன நாயகப்படுத்தியவை திராவிட கட்சிகளே. “தேனெடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்” என்று ஊழலை நியாயப்படுத்தியவர் திராவிட கட்சித்தலைவர்தான்.

            இணையாக ஒரே ஒரு சம்பவம் : கள்ளக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை மாவட்ட ஆட்சித்தலைவர் பிடித்து தண்டனை வழங்குகிறார். ஆனால் நீதிமன்றத்தில் பொய்சாட்சிகள் மூலம் தண்டனை இல்லாமல் வெளியே வருகிறார் கடத்தல்காரர். வெறுத்துப்போன மாவட்ட ஆட்சித்தலைவர் பதவி விலகுகிறார். விஷயம் கேள்விப்பட்ட முதல்வர் மாவட்ட ஆட்சித்தலைவரை அழைத்து விசாரித்து, விபரம் அறிந்து, மனம் நெகிழ்ந்து போய் “நீ பதவி விலகுவது என்பது நியாயம் தோற்பது போலல்லவா” என்று அந்த பதவி விலகலை நிராகரித்து அந்த கடத்தல்காரருக்கு சட்ட ரீதியான நியாயமான தண்டனை வாங்கித்தருகிறார். இது நிகழ்ந்தது ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்த சமயத்தில்.

            பதினெட்டு ஆண்டுகள் இழு இழுவென இழுத்து – அவர்கள் இழுத்தடித்ததற்கான காரணங்களுள் இரண்டை பார்த்தாலே அவர்களது நேர்மை மீது அவர்களுக்கே இருந்த நம்பிக்கை புரியும் : ஒன்று, 1500 பக்க நீதிமன்ற தீர்ப்பை தமிழில் மொழிபெயர்த்துத்தரவேண்டும் என்றது; இன்னொன்று, அப்படி மொழிபெயர்த்துத்தரப்பட்டபிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றது – இப்போது தீர்ப்பு வந்திருப்பதும் ஒரு திராவிட கட்சியின் தலைவர் மீதுதான்.

            சிவசேனையை குறித்து உங்களது வாதங்களை நான் மறுக்கவே இல்லை. அவர்கள் உத்தம சிரோன்மணிகள் என்று நான் சொல்லவும் இல்லை. ஆனால் நாம் உரையாடிக்கொண்டிருப்பது தமிழகத்து நிலை. ’இங்கே இப்படி நிகழ்ந்திருப்பதற்குக்காரணம் இவர்கள்’ – அவ்வளவே.

  12. Avatar
    Ramki says:

    சின்ன கருப்பன்,
    2007ல் காவிரி ஆணையத் தீர்ப்பு வந்ததயொட்டிய கலவரங்கள் பெங்களூருவை செயலிழக்கச் செய்தன. ஒரு மாதத்திற்கு மேல் தமிழ் ஒளிபரப்பிற்கு தடா (டை)! பொது இடங்களில் தமிழ் கிசுகிசுத்தது. அப்போது பா ஜ க கூட்டணி அரசு!
    இந்த பட்டியல் தமிழக அவலத்தை நியாயப் படுத்த அல்ல. “தேசிய சிந்தனை” உள்ளவர்கள் தமிழகத்தை இது போன்ற குற்றச்சாட்டுகளில் தனிமைபடுத்த வேண்டாம்.
    உண்மையில் உங்களைப் (நம்மைப்) போன்றவர்கள் கண்டிக்க முடிகிறது. கிரீஷ் கார்நார்ட் வெகுஜன கருத்தை மறுத்ததால் மிரட்டப்பட்டார்.
    IIM Ganapathi Raman,
    தி மு க அரசு நில அபகரிப்பு இப்போதும் தொடருகிரதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் எனில் விவாதிக்க ஏதுமில்லை!

  13. Avatar
    Dr.G.Johnson says:

    தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு என்று இந்த காரசாரமான கட்டுரையை எழுதியுள்ள திரு சின்னக்கருப்பன் அவர்களின் ஆவேசம் புரிகிறது. இந்தச் சூழலில் இத்தகைய கட்டுரை வெளிவந்துள்ளது சாலச் சிறந்ததே. இது நம்மை நாமே ஒருவகையில் தற்சோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறது.

    காவியங்களும், கவிதைகளும், காப்பியங்களும் படைத்தவன் தமிழன் என்று சொல்லி அந்தத் தமிழன்தான் இன்று ஒற்றுமை இல்லாமல் கட்சி அரசியலில் ஒருவரையொருவர் பழிவாங்கிக்கொண்டும் தாக்கிக்கொண்டும் தமிழகத்தை பாதுகாப்பு இல்லாத இடமாக மாற்றிவிட்டான் என்று அங்கலாய்த்துள்ளார். அதற்கு திராவிடக் கட்சிகளைக் காரணம் கூறுவதோடு அவற்றை மாபியாக்கள் என்றும் வர்ணித்துள்ளார்.

    காந்தியும் நேருவும் இங்கு விதைத்த ஜனநாயக உணர்வும்,இந்தியாவின் ஒரு அங்கம் என்ற கலாசார வரலாற்று ரீதியிலான உணர்வுகளே இந்த திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.

    ஆனால் அத்தகைய உணர்வுகள் அனைத்தும் காமராஜர் காலத்துடன் போய்விட்டது என்பதை அதன்பின்பு தமிழக மக்கள் அளித்த வாக்குகளே சான்று பகர்கின்றன. இன்று திராவிடர் பெயரில் உள்ள கட்சிகளை ஒன்றுகூட்டினால் எஞ்சி இருக்கும் காங்கிரஸ், பா.ஜா.கா., பாட்டாளி மக்கள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு ஈடாக முடியுமா? தேர்தல் என்பது ஜனநாயகப்படி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பது. ஒருவேளை , ஏன் பலவேளைகளில் அவற்றில் குறைபாடுகள்,கள்ள வாக்குகள், பணம் கொடுத்து வாங்கிய வாக்குகள் ,பொய்யான வாக்குறுதிகள் தந்து பெற்ற வாக்குகள், மிரட்டி பெரும் வாக்குகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது ஜனநாயகத்தில் உள்ள குறைபாடு.

    உண்மை நிலை இதுதான்:

    தமிழக மக்கள் காவியங்களும், காப்பியங்களும், கவிதைகளும் படிக்கும் நிலையில் இன்று இல்லை. அவர்களுக்கு திரைப்படங்களும் சின்னத்திரை சீரியல்களும் பார்க்கவே நேரம் போதவில்லை. இளைஞர்கள் நூல்கள் வாங்குவதைவிட குறுந்தட்டுக்கள் வாங்குவதிலும் வேறு விதமான கேளிக்கைகளில் நேரத்தை செலவிடவே விரும்புகின்றனர். திராவிட இயக்கம்தான் இந்த சினிமா காலாச்சாரத்தின் மூலம் பிரச்சாரம் செய்து மக்களைக் கவரும் பாணியை உருவாக்கியது. எம்.ஜி.ஆர். என்ற நடிகரை புரட்சி நடிகராக்கி, மக்கள் திலகமாக்கி, இதயக் கனியாக்கி, இதய தெய்வமாக்கியது தி. மு. க. தான். அந்த வழியில் அவர் தனிக் கட்சி அமைத்து புரட்சிச் தலைவராகி தமிழக முதல்வரும் ஆகிவிட்டார். Charismatic personality என்றால் அது எம்.ஜி.ஆர்தான். அவர் முகத்தைக் காட்டினாலே போதும், ஓட்டுகள் விழுந்துவிடும் என்று அண்ணாவே அவருக்கு மகுடம் சூட்டினார். அவர் மறைந்தபோதும் அவர் பெயரை வைத்து அரசியல் தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. அது போன்றுதான் அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு பல அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன. இன்று தமிழக மக்கள் இந்த சினிமா மாயையில் இன்னும் மூழ்கியுள்ளனர்.தமிழர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்ட இன்றைய் பிரதமர் மோடி அவர்களும் அதனால்தான் விஜயகாந்த் பக்கமும் ரஜினிகாந்த் பக்கமும் தன்னுடைய பார்வையத் திருப்பியுள்ளார்.( முடிந்தால் இன்னும் தொடருவேன் ) அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  14. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஜான்சன் அவர்களே,

    //தமிழர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்ட//

    தங்கள் உள்ளத்து வேதனை எனக்குப் புரிகிறது. என்று தமிழ்க் கல்வி பள்ளிகளை விட்டு நீங்கியதோ, பெரியதிரை, சின்னத்திரை, மற்றும் பல ஊடகங்களே அறிவுக்கூடங்கள் என்ற நிலை ஏற்பட்டதோ, அப்பொழுதே, “மெய்ப்பொருள் காணும் அறிவை” எழுதுவிட்டான் அய்யா, தமிழன்!

    தனக்குழைக்காமல், மக்கள் முன்னேற்றத்திற்குக் கல்வியே தலைசிறந்தது என்று இளந்தலைமுறையினரின் அறிவுக்கண்ணைத் திறந்து வைக்க முற்பட்ட தலைவர் காமராஜரையே தூக்கி எறிந்து, மனம் வெதும்பிச் சாகடித்த தமிழனால் எப்படி ஐயா, அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்க இயலும்?

  15. Avatar
    ஷாலி says:

    திரு.சின்னக்கருப்பன் அவர்களின் திராவிட காழ்ப்பு ஊரறிந்த ஒன்று.தமக்கு சாதகமாக சம்பவங்களை திசைதிருப்பி ஜோடித்து கை தட்டல் வாங்குவதில் இவர் எப்போதுமே வெற்றி பெற்று விடுவார். உண்மையில் அரசு பயங்கரவாத மாபியாக் கும்பல் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளதா?

    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குஜராத்தில் நடந்த மாபியாக்களின் கூட்டு படுகொலைகளுக்கு காரணம் யார்?திரு.சின்னகருப்பனின் ஆதரவு பெற்ற கட்சித் தொண்டர்கள்தான் அதை வழிநடத்தினர்.

    // எந்த அரசாங்கம் பொதுமக்களை காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் உறுதி மொழி எடுத்திருக்கிறதோ அந்த அரசாங்கத்தை கண்டே அச்சம். அந்த அரசாங்கத்தின் தூண்களையும், அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மாபியா கும்பலையும் கண்டு அச்சம்.//

    அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மாபியா கும்பலால் குல்பர்க் சொஸைட்டி குடியிருப்புகளில் வசித்த முஸ்லிம்கள் தீ எரிப்பும்,காங்கிரஸ் எம்பி ஜாப்ரி யின் உயிரும் தப்பமுடியவில்லை. தமிழ்த் திராவிடக்கட்சிகளுக்காக அழிது ஒப்பாரி வைக்கும் சின்னக்கருப்பன், இந்த குஜராத் மாபியாக்களுக்காக இவர் அழுத கணக்கெங்கே? ஊமை வெயிலுக்கு உருகும் இந்த வெண்ணை, அக்கினி மழைக்கோ அடக்கி வாசிக்கும்.
    திரு.சின்னகருப்பன்,ஜடாயு வகையாராக்களை இனியாவது புரிந்து கொள்வோம்.

  16. Avatar
    என்.செல்வராஜ் says:

    உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் தமிழ்நாட்டில் நிலை அப்படி துணிந்து நிற்கும் நிலையில் இல்லை. நீதிபதிகளும் தீர்ப்புக்களும் அரசியல்வாதிகளால் பகிரங்கமாக விமர்சிக்கப்படுவது இங்கு மட்டுமே நடக்கும்.ஊழல்வாதிகள் சரியாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்த சமூகம் சரியாகும்.

  17. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஷாலி

    த்ராவிட டம்ளர்களை குறை சொன்னால் ஆகவே ஆகாதே.

    இந்த த்ராவிட டம்ளர்கள் தமிழகத்தில் தமிழுக்காக செய்த ஒரே உபகாரம் தமிழில் இருந்த சம்ஸ்க்ருத சொற்களை பொதுவழக்கில் கூடுமான வரை விலக்கி……… ( குறித்துக்கொள்ளுங்கள் கூடுமானவரை மட்டிலும்)………… தமிழை கூடுமானவரை சம்ஸ்க்ருத கலப்பு (சம்ஸ்க்ருத கலப்பு மட்டிலும் தான் ….. ஆங்க்ல கலப்பு வெளுத்து வாங்குதுண்ணேன்) இல்லாமல் செய்தது. ஆனால் கருணாநிதிக்குடும்பத்தினரின் பெயர்கள் இவர்களது வ்யாபார ஸ்தாபனங்களின் பெயர்கள் மிகப்பெரும்பாலும் சம்ஸ்க்ருதம், ஆங்க்ல கலப்பு கொண்ட சமாசாரமே.

    தங்களை தமிழர்களாக முன்வைத்து இந்த த்ராவிட டம்ளர்கள் கும்பல் தமிழகத்தை நாசப்படுத்தியதை அளவிடவே முடியாது.

    ஊரில் இருக்கும் ஏரி, கண்மாய், ஆறு, குளம், குட்டை எல்லாவற்றையும் எங்கெல்லாம் முடியுமோ தூர்த்து விட்டு ப்ளாட் போட்டு தமிழகத்தை கட்டடக் காடாக மாற்றி வருவது இந்த த்ராவிட டம்ளர்களின் கைங்கர்யம். தமிழகத்திலுள்ள கோவில்கள் எல்லாம் ……. தமிழகத்துக் கலை, இலக்கியம், சில்பம், சித்திரம் சார்ந்த சரித்ரத்தின் தடங்கள் ஆயிரமாயிரம் காலங்களாக இருந்திருக்கின்றன. இந்த த்ராவிட டம்ளர்கள் கோவில்களை புனருத்தாரணம் செய்கிறேன் பேர்வழி என்று கோவிலில் மணல் வீச்சடித்து இருக்கும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் சிதைத்து நொறுக்கி…………….இருக்கும் கலை நயமிக்க தூண்கள், கல்தரை போன்றவற்றைப் பேர்த்து…………. தமிழகப் புராதன கோவில்களில் பார்க்க இயலாத மார்பிள்களை ஜபர்தஸ்தியாக கோவில்களில் நுழைத்து காசு பார்த்த கந்தறகோளத்தை என்னவென்று சொல்வது……………………

    இந்த த்ராவிட டம்ளர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்ததற்குப்பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் சரக்கு ஊரெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் அவலத்தை என்னவென்று சொல்வது…………….. திக்கற்ற பார்வதி கதை எழுதிய ராஜாஜி இன்று இருந்தாரானால் இந்த கண்றாவியைப் பார்த்து நொந்து நூலாக இருப்பார். கேரளத்தில் கூட மதுவிலக்கு அமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த த்ராவிட டம்ளர்களை ஒழித்தால் தமிழகத்திலிருந்து மது ஒழியும்.

    த்ராவிட டம்ளர்கள் தமிழில் படைத்த இலக்கியம் என்பது மிகப்பெரும் குப்பை மலை என்று மூத்த இலக்கிய விமர்சகர் ஸ்ரீ வெ.சா ஐயா சொல்லியிருக்கிறார். இவர்கள் மேடையில் பேசும் தமிழ் எவ்வளவு சாரமற்ற தரம் தாழ்ந்த தமிழ் என்பதை மதிப்பிற்குரிய அன்பர் ஒத்திசைவு ராமசாமி அவர்கள் துவைத்து வெளுத்து காயப்போட்டிருக்கிறார்கள்.

    ஆதிக்க ஜாதி வெறியைத் தூண்டி விட்டு தலித் சஹோதரர்களுக்கெதிராக இந்த த்ராவிட கும்பல்கள் ஊக்குவித்த வன்முறைகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது.

    திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருமுறை, நாலாயிரத்திலிருந்து அத்தனை தமிழ் இலக்கியங்களையும் வாயில் வராதபடி வைது தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ப்புலவர்களையும் மட்டற்று இகழ்ந்தவர்கள் த்ராவிட டம்ளர்கள். இவர்கள் தமிழிலக்கியமாகக் காட்ட விழைவது நெஞ்சுக்கு நீதி, பஞ்சுக்குபீதி, ……….. இத்யாதி இத்யாதி கண்றாவி கந்தறகோளங்களையே.

    ஈழத் தமிழர்கள் விஷயமாக இந்த த்ராவிட டம்ளர்கள் செய்த த்ரோஹங்களை பட்டியலிட வேண்டுமானால் தனி வ்யாசமே எழுத வேண்டும். காலை நாஷ்டாவுக்கும் மதியம் சாப்பாட்டுக்கும் இடையே உண்ணாவ்ரதம். ஒரு பக்கம் ராஜபக்ஷேவுடன் ஃபோட்டு எடுத்துக்கொண்டு மறுபக்கம் ஈழத்தமிழர்களுக்காகப் பாடுபடுவதாக ஊரெல்லாம் டெஸோ புஸோ என்று புலம்பல்.

    ஆமாம். தமிழகம் தமிழர்களது.

    தமிழையும் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் இந்த த்ராவிட டம்ளர்களை வேரும் வேரடி மண்ணுமாக பெயர்த்தெறிய வேண்டும். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதி மட்டிலும் குற்றவாளியாக ந்யாயாலயத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 2ஜி த்ராவிட ஊழல் பெருச்சாளிகள் அத்துணை பேரையும் காராக்ருஹ்த்தில் தள்ளினால்………….. ஊழல் செய்தால் காராக்ருஹத்துக் களி நிச்சயம் என்று இந்த அரசியல் வ்யாதிகளுக்கு பயமாவது வரும். மத்த அரசியல் கட்சிகளை துணைக்கழைப்பீர்கள். ஊழல் பெருச்சாளிகள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி காராக்ருஹத்துள் தள்ளப்பட வேண்டும்.

    சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தால்……… அந்தோ………………. ஒரு டிக்கட்டை காராக்ருஹத்துக்கு அனுப்பி விட்டீர்கள்………… பல பெரும் டிக்கட்டுகள் வரிசையில் நிற்கின்றன.

  18. Avatar
    anjaan says:

    சின்ன , பெரிய கருப்பர்களே, வெள்ளையர்களே!

    ஆக, நீங்கள் அனைவருமே, ஒரு சில அரசியல் கட்சிகளையே குற்றம் சொல்லி, நேரத்தை வீணடிக்க முடிவு செய்து வீட்டீர்கள். யாரும், பொது மக்களையோ, எந்த அரசியல் சாக்கடையிலும் வீழாத , சட்டத்திற்கு மதிப்பளித்து, ஒரு உண்மையான இந்திய குடிமகனை பற்றியே கவலை இல்லாமல் போய்விட்ட காலத்தை எண்ணிதான், கோடான கோடிமக்கள் இன்று, ஒரு பயத்துடந்தான் வாழவேண்டிய கட்டாயத்தில் ,மாட்டிக்கொண்டோம். இந்த நாட்டில், நீதி ஒன்றுதான், உண்மையான ஒரு தூணாக இருக்கின்றது என்றும், அதில், ஒரு சில நீதிபதிகள், இன்றும், உண்மையாக செயல் படுகின்றனர் என்றும், மேற்சொன்ன பொது மக்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

    ஆரோக்கியமான அரசியல் ஒருவாக உங்கள் அறிவுக்களஞ்சியத்தில்,எஞ்சியுள்ள முத்துக்களை உதிர்த்தால், பொதுமக்கள், அறிவுக்கண்களை, திறக்க வழிசெய்யுங்கள்.

    அஞ்சான்

  19. Avatar
    IIM Ganapathi Raman says:

    I agree with most of what he says but not with this:

    தமிழையும் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் இந்த த்ராவிட டம்ளர்களை வேரும் வேரடி மண்ணுமாக பெயர்த்தெறிய வேண்டும்

    Another:

    த்ராவிட டம்ளர்கள் தமிழில் படைத்த இலக்கியம் என்பது மிகப்பெரும் குப்பை மலை என்று மூத்த இலக்கிய விமர்சகர் ஸ்ரீ வெ.சா ஐயா சொல்லியிருக்கிறார். இவர்கள் மேடையில் பேசும் தமிழ் எவ்வளவு சாரமற்ற தரம் தாழ்ந்த தமிழ் என்பதை மதிப்பிற்குரிய அன்பர் ஒத்திசைவு ராமசாமி அவர்கள் துவைத்து வெளுத்து காயப்போட்டிருக்கிறார்கள்.

    Second is first.

    வெ சா, ஒத்திசைவு இராமசாமியோடு, ஜயமோஹனையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்கள் நன்கறியப்பட்ட திராவிட இயக்கத்து எதிரிகள். இவர்களிடமிருந்து அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் வந்தால் எப்படியிருக்கும் எனத் தெரிந்ததே. ஒருதலைப்பட்சமாக எழுதும் விமர்சனங்கள் நிலைக்கா. மதிக்கப்படுவதில்லை. திராவிட இயக்கத்தைச்சேர்ந்த பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் என்றும் நின்று நிலவும். எவருக்காவது ஜயமோஹன் ஒரு தமிழ் இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறாரென்று தெரியுமா? வெ சாவுக்கு தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ் பழந்தமிழ் இலக்கியம் என்றாலே பொத்துக்கொண்டு வரும்போது இவர் எழுதும் விமர்சனம் எப்படியிருக்கும் கிருஸ்ணகுமார்?

    First is now:

    போனதலைமுறையில் தமிழுக்காகப்போராடியவர்கள் ஏராளம். இத்தலைமுறையில் அவர்கள் அருகிவருவதால், ஹிந்தியும் வடமொழியும் கிட்டத்தட்ட நுழைந்துவிட்டன. கிருஷ்ணகுமாரால் திண்ணையிலேயே வடமொழி விடாப்பிடியாகப் பரப்பபடும்போது, இவரைப்போன்றோரை அவிழ்த்து சமூகத்தில் விடும்போது என்னவாகும்? மோடி அரசு இருக்கும்போது தங்கள் எண்ணத்தைச்செயல்படுத்தி விடலாமென நினைக்கிறார்கள். இவர்களைத் தடுக்க திராவிட இயக்கத்தைச்சேர்ந்தவர்களால் மட்டுமே முடியும். தமிழை அழிக்கத்துடிக்கும் கிருஸ்ணகுமார் தமிழைக்காப்பாற்றுவதைப்பற்றிப்பேசுவது நல்ல நகைச்சுவை.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // வெ சா, ஒத்திசைவு இராமசாமியோடு, ஜயமோஹனையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்கள் நன்கறியப்பட்ட திராவிட இயக்கத்து எதிரிகள். //

      அதற்கொன்றும் தனிப்பட்ட சொத்துத்தகறாரோ வாய்க்கால் வரப்பு தகராறோ காரணம் அல்ல. அவர்களது விமர்சனம் தமிழ் சமூகத்தில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து. வெ.சா அவர்களது எழுத்துக்களை படித்ததில்லை, எனவே அதுகுறித்து தெரியவில்லை. ஜெயமோகன் திராவிய இயக்கம் குறித்து மிக விரிவாக, ஆழமாக எழுதியிருக்கிறார். முதலில் அதன் நேரிய பங்களிப்பை மறுக்காமல், அங்கீகரித்து, பிறகு ஒரு அறிவியக்கம் எப்படி இருக்கவேண்டும் என்று நாராயணகுரு இயக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார். இப்படிப்பட்ட கட்டுரைகள் ஒருதலைப்பட்ச விமர்சனம் என்பதெல்லாம் வெறும் மட்டையடி, ச்சப்பக் ச்சப்பக் என்று முத்திரை குத்த மட்டுமே உதவும், அவ்வளவே. திராவிட இயக்கம் பற்றி காய்தல் உவத்தலின்றி தெரிந்துகொள்ள ஆசைப்படும் என்போன்றவர்கள் மனதில் அக்கட்டுரைகள் பெருமதிப்பையே பெற்றிருக்கின்றன.

      // திராவிட இயக்கத்தைச்சேர்ந்த பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் என்றும் நின்று நிலவும். எவருக்காவது ஜயமோஹன் ஒரு தமிழ் இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறாரென்று தெரியுமா? //

      அப்போதுகூட உங்களால் பாரதிதாசனை மட்டும்தான் சுட்டிக்காட்ட இயல்கிறது பாருங்கள்.

      ஜெமோ ”நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்” என்றொரு அற்புதமான நூல் எழுதியிருக்கிறார் என்பது பொதுமக்களுக்குத்தெரியவில்லை என்பது ஏன் என்று ஒரு கணம் சிந்தித்திருக்கிறீர்களா ? ஒரு கல்லூரிப்பேராசிரியர் செய்யவேண்டிய செயலை புனைவு எழுத்தாளன் செய்யவேண்டிய அவல நிலை ஏன் ஏற்பட்டிருக்கிறது ? இப்படி கல்வித்துறையில் பேராசிரியர்கள் செய்யவேண்டிய செயல்களை எல்லாம் (உ-ம். நடு நாட்டுச்சொல்லகராதி – கண்மணி குணசேகரன்; இந்த வார இதே திண்ணை இதழில் எழுத்தாளர் கோணங்கி குறித்தான பாவண்ணனின் கட்டுரையையும் பார்க்கவும்) எழுத்தாளர்கள் தன்னலம் கருதாது, பிரதிபலன் பாராது, தமது மிக எளிய வாழ்வின் இடையிலும் கடும் உழைப்பையும் பொருளையும் செலவு செய்து, முடித்துக்காட்டுகிறார்கள், அவையும் பொதுப்பார்வைக்கு வராமல் ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே அடங்கிப்போகிறதே, ஏன் ? அவர்களென்ன பொதுமக்கள் பார்வைக்கு வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டா எழுதுகிறார்கள் ?

      யோசித்திருக்கிறோமா ?

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        ஜயமோஹன், ஒத்திசை இராமசாமி, வெ சா இவர்கள் திராவிட இயக்கத்தை/ அவ்விய‌க்கத்தைச்சேர்ந்த எழுத்தாளர்களை (நிறைய கவிஞர்கள், பாரதிதாசன் மட்டுமன்று) விமர்சனம் செய்வதும் இன்னொருவர் விமர்சனம் செய்வதற்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு. இவர்கள் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் அயோக்கியத்தனமானது என்ற அடிப்படையின் மேல் எழுப்பப்ப‌டுகின்றன‌. எந்தவொரு விமர்சகரும் ஒரு நீதிபதியைப்போல. ஆங்கிலத்தில் சொல்வார்கள்; நீதி கொடுக்கப்படுவது மட்டுமன்று; கொடுக்கப்படுகிறது என்று நம்பும்படியும் இருக்க வேண்டும். Justice should not only be done; but seems to be done. இவர்கள் அந்த நம்பிக்கையைத் தருவதில்லை.

        காய்தல் உவத்தல் இன்றி ஒருவர் எழதும்போது, அவரின் நிலைபாடு இவர்களின் முடிவுக்கு நேர்மாறாக இருந்தால், இவர்களும் இவர்களைச்சார்ந்தோரும் அவரைத் தூற்றுவர். எடுத்துக்காட்டாக, ஆஷிஸ் நந்தி, அமார்த்தியா சென், அண்மையில் மறைந்த கன்னட எழுத்தாளர், U R Ananda Moorthy போன்றவர்களின் மோடி பற்றிய விமர்சனம். மோடி ஆதரவாளர்களால் அவர் வீடு தாக்கப்பட்டது. கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டாலும் அவர்கள் கன்ன்ட இலக்கியத்துக்கு மாபெரும் தொண்டைச்செய்த அவ்வெழுத்தாளரின் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்களாம்.அம்மா வேண்டும். காவிரி நீர் வேண்டாம் என்று பேனர் போடுவதைப்போல! சென்னிடமிருந்து பாரத் ரத்னா அவார்டு பிடுங்கப்படவேண்டுமென குரலிட்டார் ஒருவர்.

        வெ சாவின் பார்ப்பனர் சார்பு நிலை, இந்துமதச் சார்பு நிலை, திராவிட இயக்கத்து எதிர்ப்பு நிலை – இவை திண்ணைக்கட்டுரைகளிலேயே தெரியும். அவர் எழுதிய ஒரு விமர்சனக்கட்டுரைத்தொகுப்பபு என்னிடம் இருக்கிறது. எந்த எழுத்தாளனரை விமர்சிக்கும்போதும் அங்கு ஏதாவது ஓர் அல்லது பலவிடங்களின் திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள்; இயக்கம் இவற்றைத்தூற்றுவது வழமையாகக்கொண்டுள்ளார். கட்டுரைக்கே தொடர்பு இல்லையென்றாலும் அவர் விடுவதில்லை. ஜயமோகனின் கட்டுரைகளும் அப்படிச்செய்கின்றன. இவர்களிடம் எப்படி ஒரு objective விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும்? When a writer loses his credibility of fair stand, he wont be regarded seriously even if he has many points worthy of accepting. ஓநாய் வருகிறது என்று ஏமாற்றிய பையன் உண்மையில் வந்த போது கத்தினான். எவரும் நம்பவில்லை என்று சொல்வது ஈசாப்பின் கதையொன்று. வாழ்க்கையின் பொது உண்மையும் அதுதான். I have read a lot of Jeyamohan’s essays in his blog. They are an outlet for his partisan views.

        தமிழில் நான் படித்த இலக்கிய விமர்சகர்களுள் நம்பகத்தன்மையுடைய சிறப்பான ஒருவர் க நா சுப்பிரமணியன். அவரின் கட்டுரைத்தொகுப்புக்களை படித்தால். நான் சொல்லும் கருத்துக்கள் நன்கு புரிய வரும். ஜாதி, மத, கட்சி வெறிகள் அவரை அண்டவில்லை. He did not even belong to a particular place. He was above all.

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          // இவர்கள் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் அயோக்கியத்தனமானது என்ற அடிப்படையின் மேல் எழுப்பப்ப‌டுகின்றன‌. //

          ஜெயமோகன் அப்படி எழுதவில்லை என்று சொல்லிவிட்டேன். திராவிட இயக்கத்தை விமர்சிக்கும்போது துவக்கத்தில் அவர்களது சமூக பங்களிப்பை விளக்கி, அதை அங்கீகரித்து பிறகே விமர்சிக்கிறார். இவரது விமர்சனம் நம்பத்தகுந்ததாக இல்லை என்றால் தவறு ஜெ-விடம் இல்லை என்பது எனது தெளிவு.

          ஜெ.மோ-வின் தளம் அவரது ஒருதலைப்பட்ச கருத்துக்களுக்கான வடிகால் என்று உமக்குப்பட்டால் இதற்குமேல் உம்மிடம் விவாதிக்க எனக்கு ஒன்றுமில்லை.

          1. Avatar
            IIM Ganapathi Raman says:

            //திராவிட இயக்கத்தை விமர்சிக்கும்போது துவக்கத்தில் அவர்களது சமூக பங்களிப்பை விளக்கி, அதை அங்கீகரித்து பிறகே விமர்சிக்கிறார்.//

            அது ஒரு திறமையான பாணி. முடிவு முதலிலேயே எடுத்துவிடப்படுகிறது. பின்னர் நம்பகத்தன்மை உருவாக்க முயற்சி மெல்லமெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நடக்கும். பின்னர் வாசகர்கள் கைப்பாவைகள்தான். முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிவர். மோடியின் இன்றைய‌ ஸ்டைல் இது. காந்தியை முன்வைத்து தூய்மை இயக்கம். பால் தாக்கரேயைப் புகழந்து மராட்டியர்களிடையே வாக்குசேகரிப்பு. நேருவை சச்சா நேரு எனப்புகழ்வது. இதை நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா: He is poaching leaders of Congress and Siva Sena. இது ஒரு ராஜ தந்திரம் தாக்கரே இதைக்கண்டித்து பேசியிருக்கிறார். .

            ஜயமோகனின் அரசியல் சமூக மதம் பற்றிய எழுத்துக்கள் ஒரு தலைபட்சமானவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. விவாதமே தேவையில்லை. //ஏன் இதற்கு மேல் உம்மிடம் விவாதிக்க ஒன்றுமில்லை// என அலட்டிக்கொள்கிறீர்கள்? Remain a steadfast fan of Jeyamohan. Good luck to you !

        2. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          // முடிவு முதலிலேயே எடுத்துவிடப்படுகிறது. பின்னர் நம்பகத்தன்மை உருவாக்க முயற்சி மெல்லமெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நடக்கும். பின்னர் வாசகர்கள் கைப்பாவைகள்தான். முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிவர். //

          உமக்கும் இதையே சொல்லலாம். நான் இதை மட்டும்தான் நம்புவேன் என்று முடிவெடுத்தபின் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் எடுக்கலாம்.

          இறுக தாளிடப்பட்ட கதவை அர்த்தமில்லாமல் தட்டிக்கொண்டே இருக்கமுடியாதல்லவா ? அதனால்தான் அப்படி “அலட்டிக்”கொண்டேன் ;)

          நண்பரே, ஜெ.மோ-வுக்கு வியர்த்தும் கொட்டவில்லை, எனக்கு விசிறிவிடவேண்டிய தேவையுமில்லை. உமக்கு அப்படி தோன்றினால் வாழ்க. உமது வாழ்த்துக்கு நன்றிகள் :))

  20. Avatar
    ஷாலி says:

    // தமிழை அழிக்கத்துடிக்கும் கிருஸ்ணகுமார் தமிழைக்காப்பாற்றுவதைப்பற்றிப்பேசுவது நல்ல நகைச்சுவை.//

    ஆடு நனைகிறதென்று இங்கு ஓநாய் அழுகிறது. தமிழ் மொழியைக் காப்பாற்ற முதலைகள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.அவுக முதலைத் தமிழையும் கொஞ்சம் பார்ப்போமா? …வ்யாபார ஸ்தாபனங்களின்…. சஹோதரர்களுக்…., த்ரோஹங்களை … நாஷ்டாவுக்கும்…., ந்யாயாலயத்தால் …., காராக்ருஹ்த்தில்…,கணபதி ராமன் ஸார்! ஆரிய டம்ளர்களை அடையாளம் காட்டி, நீங்க என்ன அடி அடிச்சாலும் முரட்டுத்தோல் முதலைகள் தாங்கிக்கொள்ளும். போட்டுத் தாக்குங்கோ!

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஷாலி

    அவ்வப்போது விதி விலக்காக உங்களாலும் கூட அறிவு பூர்வமாக வாதம் செய்ய முடியுமே.

    க்ருஷ்ணகுமார் ஆகிய நான் மிக வெளிப்படையாக என்னால் தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ கலந்த கலப்பு மொழிநடையில் தான் எழுத முடியும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் தான் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறேன் என்று எங்கும் பொய் சொன்னதில்லை.

    ஆனால் த்ராவிட டம்ளர்கள் தாங்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ மணலைக்கயிறாக திரித்தது போல பொய்யுரை பரப்பி வருகிறார்கள். கன்னடிகர் ஈ.வெ.ராமசாமி நாயக்க வாள்ளு முதல் அண்ணாத்துரை முதலியாரிலிரிந்து தெலுகு பிட்ட தக்ஷிணாமூர்த்திகாரு எனும் சம்ஸ்க்ருத பெயரைத் தாங்கியுள்ள கருணாநிதி வரை …………திருக்குறளிலிருந்து சிலப்பதிகாரம் கம்பராமாயணம் வரை அத்துணை தமிழ் இலக்கியங்களையும் இழித்துப்பழித்தமைக்கு உங்கள் யாரிடமிருந்தும் பதில் இல்லை என்பதால் வாதத்தை திசை திருப்பப் பார்க்கிறீர்கள். ஈழத் தமிழ்ப்புலவரை தமிழ் விரோதியான ராமசாமி நாயக்கர் இழிவு செய்ததற்கு உங்களிடமிருந்தெல்லாம் ஏன் பதில் வரும்.

    அடுத்தவர் எழுதும் மொழிநடையைப் பழிக்கும் அன்பர் ஷாலியின் பெயர் தூய தமிழ்.
    மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞர் எல்லாம் இருந்த இந்த இடத்தில் ஷாலி, IIM எல்லாம் தமிழ் என்று சாதிப்பது ………… உலகத்துக்கே புரிகிறது :-)

    இந்த த்ராவிட கும்பலில்ன் அனைத்து வ்யாபார ஸ்தாபனங்களின் பேரும் குடும்பத்தினரின் பேரும் சம்ஸ்க்ருதம் / ஆங்க்லத்தில் உள்ளது என்பதற்கு பதில் இல்லை. எங்கே இருக்க முடியும்?

    தமிழர்கள் விழித்துக்கொண்டு விட்டதன் அடையாளமே த்ராவிடர்கள் தமிழர்கள் இல்லை என்று புற்றீசல் போல் கிளம்பியுள்ள தமிழ்க்கட்சிகள் தமிழகம் முழுதும் உரத்துப் பேசிவருவது தான்.

    த்ராவிடம் என்பது தமிழ் வார்த்தையா? த்ராவிடம் என்ற சொல் எங்கு சொல்லப்பட்டுள்ளது என்ற விஷயத்தை அறிவு பூர்வமாக வைத்யர் ஸ்ரீ ஜான்சன் அவர்களுக்கு நான் முன்னமேயே விளக்கமாக இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

    தமிழகத்தை இந்த த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனார்கள் கள்ளச்சாராயக்காடாகவும் கட்டிடக்காடாகவும் ஆக்கி தங்கள் குடும்ப சொத்துக்களை விஸ்தரித்துக்கொண்ட கந்தறகோளக் கண்றாவியை……. நீங்கள் மறைக்க விழைந்து ……..இவர்களை குற்றம் சாட்டுபவர்கள் எல்லாரும் த்ராவிட எதிரி என்று சொல்லி விட்டால் தமிழர்கள் அனைவரும் ஏமாந்து விட மாட்டார்கள்.

    த்ராவிடத்த்தின் முடிவு ஆரம்பமாகி விட்டது தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்றால் த்ராவிட சொம்புதூக்கிகளுக்கு மட்டிலும் தனியாகச் சொல்ல வேண்டுமாக்கும்?

    சங்கே முழங்கு சங்கே முழங்கு என த்ராவிடக்கட்சிகளுக்கு அந்த்யேஷ்டி செய்ய கர்நாடகத்திலிருந்து சங்கூதப்பட்டுள்ளது. மூழ்கும் கப்பலில் த்ராவிட பொன்னாடே என்று பாட்டுப்பாடிக்கொண்டே முழுகுவேன் என்று ஹடம் பிடிப்பவரை காப்பாற்றவா முடியும்?

    போங்க போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க :-)

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //க்ருஷ்ணகுமார் ஆகிய நான் மிக வெளிப்படையாக என்னால் தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ கலந்த கலப்பு மொழிநடையில் தான் எழுத முடியும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் தான் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறேன் என்று எங்கும் பொய் சொன்னதில்லை.//

      இலக்கியத்தில் ஒரு எழதப்படா சட்டமொன்று; உண்மையில் அச்சட்டமே இலக்கியத்தை வாழவைக்கிறது. அதாவது, எவரும் எந்நடையிலும் எழுதலாம். ஒரே நடையிலே எல்லாரும் எழுதினால் இலக்கியம் செத்துப்போய்விடும். அதைப்போலவே இங்கும் அவரவருக்கு ஒத்த நடையில் எழுதலாம். அதே வேளையில் அந்நடை பிறருக்குப்புரியும்படி இருக்கவேண்டும். இலக்கியத்திலும் அவ்வாறே. Whatever literature may be, communication it must be: NO COMMUNICATION, NO LITERATURE (Lascelles Abercrombie). எவருக்குமே புரியாதபடி கவிதை எழுதப்பட்டிருந்தால், அது விரைவில் குப்பைக்கூடைக்குப்போய்விடும் என்று அபர்கிராம்பி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இல்லையா?

      அதையே இங்கும் நினைத்துக்கொள்ளுங்கள். பிறருக்கும் புரியவேண்டும் என்றவாக் கொள்ளுங்கள். தனக்கு மட்டுமே புரிந்தால் தனக்குத் தானே பேசிக்கொள்ளல். வடமொழிச்சொற்களை எழுதுக: ஆயினும் புரியாச் சொற்களைத் தவிர்க்க. அதுவே நாம் படிப்போருக்குக் காட்டும் மரியாதை.

      முத்தும் பவளமும் கலந்தது போன்ற அழகுச்செரிவுடையது மணிப்பிரவாள நடையென்பார் தமிழறிஞர். அப்படி எழுதப்பட்ட நூல்கள் என் வீட்டில் நிறைய இருக்கின்றன. (related to religion) ஆனால், நீங்கள் எழுதும் மணிப்பிரவாளம் இரண்டும் கெட்டான்.

      நான் கேட்டுக்கொள்வதெல்லாம் திண்ணைவாசகர்கள் எல்லாருக்கும் வடமொழி தெரியும் என்று எழுதி அவர்களைக் கொல்லவேண்டாம் எனபதே. முயற்சி திருவினையாக்கும். தமிழ்ச்சொற்களையறியத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். செந்தமிழும் நாப்பழக்கம். சித்திரமும் கைப்பழக்கம். வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

  22. Avatar
    paandiyan says:

    திராவிட இயக்கம் என்று இங்கு வருகின்றது. அப்படி என்றால் என்ன. என் கன்னட, தெலுங்கு நண்பர்கள் இந்த வார்த்தை கேட்டால் பின் புறம் சிரிப்பு வருவதாக சொல்லுகின்றார்கள். என்னக்கு விளக்க தெரியவில்லை. திராவிட இயக்கம் என்றால் என்ன?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கன்னடர்கள் சிரிக்கின்றார்களா அல்லது தெலுங்கு நண்பர்கள் சிரிக்கின்றார்களா எனபதை விட தமிழர்கள் சிரிக்கின்றார்களா என்பதுதான் வேண்டும். திராவிட இயக்கம் என்பது அவ்வியக்கத்தார் வைத்துக்கொண்ட பெயர். அதை சமூகவியலார் அழைப்பது பிராமண எதிர்ப்பு இயக்கம். ஆங்கிலத்திலும் தமிழிலும் பலர் இவ்வியக்கத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். தேடிப்பார்த்துப் படித்துவிட்டு பின்னர் எழுதவும்.

  23. Avatar
    ஷாலி says:

    //அடுத்தவர் எழுதும் மொழிநடையைப் பழிக்கும் அன்பர் ஷாலியின் பெயர் தூய தமிழ்.
    மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞர் எல்லாம் இருந்த இந்த இடத்தில் ஷாலி, IIM எல்லாம் தமிழ் என்று சாதிப்பது ………… உலகத்துக்கே புரிகிறது :-)//

    அன்பர் க்ருஷ்ணகுமார் மீண்டும் திசை திருப்பும் வேலையை ஆரம்பித்து விட்டார். க்ருஷ்ணாஜி அவர்களே! உங்கள் பெயரை தூய தமிழில் கிருட்டின குமார் என்று ஏன் வைக்கவில்லை என்று நான் கேள்வி எழுப்பினால்தான் என்பெயர் ஷாலியின் தூய தமிழைப்பற்றி நீங்கள் பேசமுடியும். உங்கள் பெயரில் தூய தமிழ் உள்ளதா சம்ஸ்கிருத தமிழ் உள்ளதா என இதுவரை நான் கேட்கவே இல்லை.எந்த பெயரை வைத்தும் இணையத்தில் எவரும் உரையாடலாம். பிரச்சினை அது வல்ல. சொல்லக்கூடியக் கருத்தை முடிந்தவரை அனைவருக்கும் எளிதில் புரியும்படி கலப்பட மொழியை தவிர்த்து எழுதவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

    //க்ருஷ்ணகுமார் ஆகிய நான் மிக வெளிப்படையாக என்னால் தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ கலந்த கலப்பு மொழிநடையில் தான் எழுத முடியும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.//

    “தமிர்ஸ்க்ருது” என்னும் முக்கலப்பு மொழியில் தான் உங்களால் எழுத முடியும் என்றால்,தாராளமாக எழுதுங்கள்.மற்றபடி இங்கு யாரும் திராவிடத்திற்கு சொம்பும் தூக்கவில்லை.கிண்ணமும் தூக்கவில்லை.

  24. Avatar
    Dr.G.Johnson says:

    திராவிடர் இயக்கம் என்றால் கன்னட, தெலுங்கு, மலையாள மற்றும் இதர மாநிலத்தவர் கேலியாக சிரிக்கிறார்களா? அப்படி தெரியலையே? இந்திய தேசிய கீதம் அகில இந்திய, உலக ரீதியில் இசைக்கும்போது அனைவரும் நின்றுதானே மரியாதை செலுத்துகிறார்கள்? இந்திய தேசிய கீதத்தில் ” திராவிட ” என்ற சொல் உள்ளதே! அதை ஏன் மாற்றாமல் இன்னும் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்? திராவிடம் என்ற ஒன்று இல்லாவிடில் அதை எடுத்துவிட்டு புதிய தேசிய கீதம் எழுதி பாடலாமே?…டாக்டர் ஜி.ஜான்சன்.

  25. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    தேசிய கீதத்தில் த்ராவிடம் என்பது ஒரு ப்ராந்தியமாகவே முன்வைக்கப்படுகிறது.

    சம்ஸ்க்ருத இலக்கியங்களில் த்ராவிடம் எங்கெங்கு பேசப்பட்டுள்ளது என்ற குறிப்பை உங்களுடன் முன்னமேயே பகிர்ந்திருக்கிறேன்.

    தமிழை மட்டிலும் முன் வைத்து (ம்ஹும் முன் வைப்பதாக நாடகம் நடித்து) தமிழகத்தில் செயல்பட்ட ஒரு இயக்கம் தன்னை த்ராவிட இயக்கம் என்பது நகை முரண் தான்.

    \\ எனபதை விட தமிழர்கள் சிரிக்கின்றார்களா என்பதுதான் வேண்டும். \\

    பாருங்கள் மேற்கண்ட கருத்து அன்பர் ஜோ அவர்களிடமிருந்து விதிவிலக்காக சாரமுள்ள கருத்தாயிற்றே.

    தங்களை தமிழர்களாக இன்று தமிழகத்தில் அடையாளம் காண விரும்புபவர்கள் இந்த த்ராவிட இயக்கங்களிலிருந்து தங்களை வேறுபட்டவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விழைகிறார்கள்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      தாகூரில் பாடலில், பஞ்சாபம், சிந்து, மராத்தியம், திராவிடம், உத்கலம் (ஒடிசா), வங்காளம், விந்தியம், ஹிமாசலம் குறிக்கப்படுகின்றன. பாடல் எழுதப்பட்ட காலத்தில், மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்கள் இல்லை. எனவே திராவிடம் என்பது தென் மாநிலங்களையே குறிக்கிறது.

      திராவிடப்பல்கலைக்கழகம் ஆந்திராவில் குப்பம் என்ற ஊரில் இயங்குகிறது. தமிழ்நாடு, கேரளா, கருநாடகா அரசுகள் கொடுத்த உதவியால், திராவிட மொழிகள் மற்றும் திராவிடப் பண்பாடு (கலாச்சாரம்) வளர்ச்சிக்காக இப்பலகலைக்கழகம் ஆந்திர அரசால் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

      இப்போது திராவிடம், திராவிட மொழிகள், திராவிடக்கலாச்சாரம் என்றால் எவை? தாகூர், திராவிடம் என்று எதைக்குறிக்கிறார்?

      1. Avatar
        paandiyan says:

        அவர்கள் குருப்பிடுவது ஒரு வகை நிலப்பரப்பு. அதற்ககு மேல் ஒன்றும் இல்லை. அதை மொழியில் வைத்து மக்களை முட்டாளாக்கி விளையாடியவர் யாரு?

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          அந்த நிலப்பரப்பு இன்றைய தென்மாநிலங்கள். ஆங்கிலேய அரசு அதை மெட்ராஸ் பிரசிடென்ஸி என்றழைத்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகம் நான்கும் மெட்ராஸ் பிரசிடென்ஸி ஆகும். இப்படி ஒன்றாக்கியதுதான் தலைவலியாகப்போய் விட்டது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரும் கொள்ளாதாரும் தமிழ்ப்பார்ப்ப்னரை எதிர்த்தனர். அதாவது அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தனர். அதுதான் திராவிட இயக்கம் அல்லது பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் எனவழைக்க்ப்படுகிறது. மக்கள் ஒரு கட்டத்தில் ஒன்றை விரும்புவார்கள் தங்கள் ஆதாயத்துக்காக. அந்த ஆதாயம் அவர்களுக்கு கிடைத்தவுடன் அதைப்பற்றி கவ்லைபடமாட்டார்கள். திராவிட இயக்கத்தின் பலனை இன்றை ஓபிசிக்கள் அனுபவிக்கிறார்கள். மக்கள் குருடர்கள் அல்ல சும்மா சொன்னதையெல்லாம் நம்ப. இன்று கொதித்தென்ன‌ இலாபம் ?

          குப்பம் பல்கலைக்கழகத்தைப்பற்றி யாதேனும் கூறல் நன்று. மஹாசயர் கிருஸ்ணகுமார் சொல்லுங்கோ.

          1. Avatar
            paandiyan says:

            அப்படியா ? மக்கள் இருக்கட்டும், உங்கள் வாதம் படி உங்கள் ஆதாயம் என்ன? உங்கள் வார்த்தைப்படி ஆதாயம் இல்லாமலா இப்படி பொங்க முடியும்?

  26. Avatar
    paandiyan says:

    திராவிடர் இயக்கம் என்று எந்த பாடல் இருக்கின்றது? ஏன் comment படிக்காமல் இப்படி ஒரு பதிலடியா?

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *