இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

author
18
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 18 in the series 15 நவம்பர் 2015

அயான் ஹிர்ஸி அலி

bataclanஇஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14 வருடங்களுக்கு பிறகு, இஸ்லாமின் வன்முறைவாத பிரிவு இன்று புற்றுநோய் போல பரவியிருக்கிறது. ஈராக், சிரியாவின் பல பகுதிகள் இன்று ”இஸ்லாமிய அரசு”வின் கீழ் வந்துள்ளன. லிபியாவும் சோமாலியாவும் அராஜகத்தின் கீழ் சென்றுள்ளன. யேமன் உள்நாட்டு போரால் சிதிலமடைந்திருக்கிறது. தாலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானத்தில் தலை தூக்கியிருக்கிறது. நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதத்தை பரப்பிகொண்டிருக்கிறது. இருப்பினும், வன்முறை இஸ்லாமிஸத்தின் அச்சுறுத்தலை நீக்குவதற்கான எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் உலக அரசியல்வாதிகள் திணறிகொண்டிருக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் தொடர்ந்து நாட்டுக்குள்ளேயே வன்முறை தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மிலிட்டரி டிரம்மர் லீ ரிக்ஸ்பியின் கொலையாக இருக்கட்டும், பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடுப்பு 2013இல் நடந்ததாக இருக்கட்டும், பார்லிமண்ட் ஹில் கனடாவில் 2014இல் நடந்த துப்பாக்கிச்சூடாக இருக்கட்டும், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், பாரிஸில் யூதர்களது சந்தையில் கடந்த ஜனவரியில் நடந்த தாக்குதல்களாக இருக்கட்டும், மிகவும் சமீபமாக, சட்டநூகா டென்னஸியில் மிலிட்டரி ஆள்சேர்ப்பு மையத்தில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்குலகு பார்த்துகொண்டிருக்கிறது.

ஆனால் இந்த வன்முறை தீவிரவாதம் இஸ்லாமின் புனித நூற்களிலிருந்து கிளைத்தெழுகிறதா? அல்லது இஸ்லாமின் அடித்தளத்தை திருகி சிதைத்திருக்கும் சூழ்நிலைகளின் உற்பத்தியா?

இதற்கு பதில் சொல்லவேண்டுமெனில், முதலில் இஸ்லாம் என்பதை ஒரு கருத்துதொகுப்பு என்றும், முஸ்லீம்களை அதனை பின்பற்றுபவர்கள் என்றும் முக்கியமான வேறுபாட்டை நாம் இங்கே நினைவுபடுத்திகொள்ளவேண்டும். உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களின் சமூக பொருளாதார, கலாச்சார சூழ்நிலைகள் பலவேறு தரப்பட்டவை. ஆனால், அங்கே, உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்கள் எவ்வாறு தங்களது மதநம்பிக்கையை பார்க்கிறார்கள், பயில்கிறார்கள் என்பதை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

முதலாவது பிரிவு , அடிப்படைவாதிகளால் நிறைந்தது. இவர்கள் ஷரியாவின் அடிப்படையிலான ஒரு அரசைக் கனவுகாண்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் எவ்வாறு இஸ்லாம் இருந்ததோ அதனை தூய இஸ்லாமாக கருதிகொண்டு அதேமாதிரியான இஸ்லாமை எல்லார் மீதும் திணிப்பதை தங்களது மத கடமையாக கருதுகிறார்கள். இவர்களை நான் மெதீனா முஸ்லீம்கள் என்று அழைக்கிறேன். மெதீனாவில் இருந்த முகம்மதுவின் உதாரணத்தை பின்பற்றி, இஸ்லாமின் ஷரியா மதச்சட்டத்தை கட்டாயமாக திணிப்பதை தங்கள் மதக்கடமையாக கருதுகிறார்கள். மற்ற முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தை மதிப்பதை உபயோகப்படுத்திகொண்டு தங்களது மதச்சட்டம், ஒரு நாட்டின் சிவில் சட்டத்தை விட முக்கியமானதாக எடுத்துகொள்கிறார்கள். இந்த அடிப்படையை அவர்கள் உருவாக்கிய பின்னரே, தங்களது ஜிஹாதுக்கு ஆட்களை இவர்கள் சேகரிக்கிறார்கள்.

இரண்டாவது பிரிவு, உலகத்தின் பெரும்பாலான முஸ்லீம்கள், இஸ்லாமின் அடிப்படை கருதுகோள்களுக்கு உண்மையாக இருந்துகொண்டும், தினந்தோறும் தொழுகை செய்துகொண்டிருந்தாலும், முஸ்லீமல்லாதவர்கள் மீது வன்முறையோ அல்லது சகிப்பின்மையையோ செய்யாதவர்கள், செய்யவிரும்பாதவர்கள். இவர்களை நான் மெக்கா முஸ்லீம்கள் என்று அழைக்கிறேன். இந்த பெரும்பான்மை முஸ்லீம்களிடம் இருக்கும் அடிப்படை பிரச்னை, இவர்கள் தங்களது மத நூல்களில் ஆழப் பதிந்திருக்கும், சகிப்புத்தன்மை இன்மையையும், அதிலிருக்கும் வன்முறையையும் நிராகரிப்பதை விடுவோம், அங்கீகரிப்பது கூட இல்லை.

சமீப காலங்களில், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் எழுச்சியோடு கூடவே, மூன்றாவது பிரிவு இஸ்லாமுக்குள்ளேயே எழுந்துவருகிறது. இவர்கள் முஸ்லீம் சீர்திருத்தவாதிகள். இவர்களை நான் “சீர்திருத்த முஸ்லிம்கள்” அல்லது “மாற்றம் கோரும் முஸ்லீம்கள்” என்று அழைக்கிறேன். அரசியலிலிருந்து இஸ்லாமைப் பிரிப்பதையும், மற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதையும், இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். சிலர் இஸ்லாமிலிருந்தே வெளியேறியவர்களாக இருந்தாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் மத நம்பிக்கைகொண்டவர்கள். அரசியல் வன்முறையில் முஸ்லீம்கள் மாட்டிகொள்ளக்கூடாது என்றால், மதமே மாறுதலடைய வேண்டும் என்று உணர்ந்த பலரில் பல இஸ்லாமிய மத அறிஞர்களும் அடக்கம்.

இஸ்லாமின் எதிர்காலமும், முஸ்லீம்களோடு உலகம் கொள்ளும் உறவும், இந்த இரண்டு சிறுபான்மை குழுக்களில், அதாவது மெதீனா முஸ்லீம்களா, அல்லது சீர்திருத்தவாதிகளா, எவர் மெஜாரிட்டியாக இருக்கும் மெக்கா முஸ்லீம்களின் ஆதரவை பெறப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

இஸ்லாமியக் கொள்கையில் வன்முறை ஒரு இன்றியமையாத அங்கமா என்று புரிந்துகொள்ள, நாம் இஸ்லாமை தோற்றுவித்த முகம்மதின் உதாரணத்தையும் குரானில் இருக்கும் வசனங்களையும், முஸ்லீம் நாடுகளில் நாம் பார்க்கும் வன்முறைகளை நியாயப்படுத்தும் இஸ்லாமிய நீதிமுறைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மெக்காவில், முகம்மது தனது ஜாதியினரை அவர்களது தெய்வங்களை வணங்குவதை நிறுத்திவிட்டு தனது தெய்வத்தை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தானங்கள் செய்வதையும், விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவுவதை பற்றியும் பிரச்சாரம் செய்தார். (இப்படி பிரச்சாரம் செய்வது இன்றும் இஸ்லாமின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. இது அரபியில் தாவா என்று அழைக்கப்படுகிறது) இருப்பினும், மெக்காவில் இவரை பின்பற்றியவர்களாலும் இவராலும், பலரை தனது புதிய மதத்துக்கு திருப்பமுடியவில்லை. ஆகவே, முகம்மது தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு பிறகு, அவர் மெதீனாவுக்கு தப்பிச்சென்றார். அங்கு பலரை தனது ஆட்களாக சேர்த்துகொண்டு ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கி போர்நடத்த ஆரம்பிக்கிறார்.

ஆயுதம் தாங்கிய வன்முறை ஜிஹாத் செய்ய விரும்பும் எவரும், முகம்மதின் மெதீனா காலத்தை பற்றிய ஹதீஸ்களிலும், குரானிலும் ஏராளமான ஆதரவைப் பெறலாம். உதாரணமாக 4.95 குரான் வசனம், “நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது. 8.60 குரான் வசனம், உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது. இறுதியாக குரான் வசனம் 9:29, ”வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது.

இந்த வாள் வசனங்கள் என்று அழைக்கப் படும் “sword verses” (9:5 and 9:29) ஆகியவை, குரானில் காணப்படும், சகிப்புத்தன்மை, கருணை, அமைதியை வலியுறுத்தும் வசனங்களை நீக்கி விட்டன என்று மையநீரோட்ட இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

முகம்மதின் உதாரணங்களை எடுத்துகொண்டோமானால், ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சஹீ முஸ்லீம் என்னும் ஹதீஸ் தொகுப்பு சுமார் 19 ராணுவ படையெடுப்புகளை செய்தார் என்றும் அதில் எட்டு ராணுவ படையெடுப்புகளில் தானே கலந்துகொண்டார் என்றும் தெரிவிக்கிறது. கிபி 627இல் அகழிப்போரின் முடிவில், “பானு குரைஸா ஜாதியினரை கடுமையாக ஒடுக்க, அவர்களது ஆண்களையெல்லாம் கொன்று, அவர்களது பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றார்” என்று யேல் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் கெர்ஹார்ட் போவரிங் தனது இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பிரின்ஸ்டன் ஆய்வாளர் மைக்கல் குக், தனது ”புராதன மதங்கள், நவீன அரசியல்” என்ற புத்தகத்தில் ”காபிர்களின் மீதான போர் என்பது இஸ்லாமின் அடிப்படை மத நூற்களில் எழுதப்பட்டுவிட்ட விஷயம்” என்று கூறுகிறார்.

இங்கேதான் இஸ்லாமில் இருமை இருக்கிறது. மெக்காவில் முகம்மதின் உதாரணங்களை வைத்து இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம் என்று கோரவும் இடம் இருக்கிறது. அதே போல இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது போல, மெதீனாவில் முகம்மதின் உதாரணங்களை பின்பற்றி, முஸ்லீம்கள் அனைவரும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்றுகொள்ளவேண்டும் அல்லது அடிமையாக வாழவே வேண்டும் என்று ஜிஹாத் தொடுக்கவேண்டும் என்று முகம்மதுவுக்கு அனுப்பப்பட்ட வெளிப்பாடு இருக்கிறது என்று கோரவும் இடம் இருக்கிறது.

ஆகவே, இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா என்பது முக்கியமான கேள்வி அல்ல. மாறாக, முஸ்லீம்கள் ( சுன்னியோ, ஷியாவோ) மெதீனாவின் முகம்மதை பின்பற்றுகிறார்களா என்பதுதான் கேள்வி.

இன்று, இன்று வளர்ந்துவரும் மெதீனா கொள்கையின் மத நியாயங்களை புரிந்துகொள்ள மேற்குலகம் திணறுகிறது. இஸ்லாம் மதத்திற்குள் இருக்கும் வன்முறைக்கும், அமைதிக்குமான உறவை புரிந்துகொள்ளவும் திணறுகிறது. இஸ்லாமின் வன்முறை தீவிரவாதத்தை பற்றிய விவாதத்தில் இரண்டு முக்கிய பார்வைகள் உருவாகி வந்திருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் என்ன வார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றன என்பது அதில் உள்ள வித்தியாசங்களை உணர ஏதுவானது.

ஜான் எஸ்போஸிட்டோ என்னும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக பேராசிரியர், காரென் ஆர்ம்ஸ்ட்ராங் போன்றோர்கள் இஸ்லாம் என்பது பிரச்னைக்கு வெளியே உள்ளது என்று கருதுகிறார்கள். இஸ்லாமிய வன்முறைக்கு முக்கிய மூலாதாரமான காரணங்கள் என வறுமை, அரசியலில் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டமை, கலாச்சார தனிமை, இன்னும் இது போன்ற அந்நியமாதல்கள் ஆகியவையே முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இஸ்லாமுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்றவர்கள், “தீவிரவாதம்”, “வன்முறை தீவிரவாதம்”, பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளை கொண்டு உலகெங்கும் இஸ்லாமின் பெயரால் நடக்கும் பயங்கரவாதங்களை விவரிக்கிறார்கள். இஸ்லாமின் பெயரை உபயோகப்படுத்தினால், இஸ்லாம் எவ்வாறு வக்கிரப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது கடத்தப்பட்டுள்ளது என்று விவரிக்க உபயோகிக்கிறார்கள். வெகுவேகமாக, இஸ்லாமுக்கும் மற்ற மதங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று அடித்து பேசுகிறார்கள். மற்ற மதங்களிலும் மோசமான அங்கங்கள் இருக்கின்றன என்று எடுத்துகாட்டுகிறார்கள். ஆகவே இஸ்லாம் ஒருவகையிலும் தனித்த வித்தியாசமான மதம் இல்லை என்று பேசுகிறார்கள். இது ஏறத்தாழ எல்லா அரசியல்வாதிகளின் குரலுமாகும். இது அமெரிக்காவின் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மேற்குலகின் அரசியல்வாதிகளும் இதையே பேசுகிறார்கள். (பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேறு ஒரு குரல் எழும்ப ஆரம்பித்திருக்கிறது)

ஆனால், இந்த இஸ்லாமிய வக்காலத்தாளர்களின் நிலைப்பாடு முழுக்க முழுக்க கொள்கைத் தோல்வி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில், இது வன்முறை, பெண் ஒடுக்குமுறை, மற்ற மதத்தினரின் மீதான அடக்குமுறை ஆகியவற்றை நியாயப்படுத்தும் குரானிலும், ஹதீஸிலும் இருக்கும் நிலைப்பாடுகளை நிராகரிக்கிறது.

மாறுபட்ட கருத்தை கூறும், பாட்ரிஸியா க்ரோன், பால் பெர்மான் ஆகியோர், “அரசியல் இஸ்லாம், இஸ்லாமிஸம், சலாபிசம், வஹாபிஸம், ஜிஹாதிஸம் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இவை அனைத்துமே, இந்த வன்முறைச் செயல்பாடுகளின் மத அடிப்படையை உணர்த்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஏன் ஐரோப்பாவிலும், ஷரியா சட்டத்தை மக்கள் மீது திணிக்க கொள்கை நிலைப்பாடு கொண்ட இயக்கங்கள் உருவாகி வந்திருக்கின்றன என்பதையே வாதமாக வைக்கின்றன. கடந்த ஜூலையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான், ”மதத்துக்கும் தீவிரவாதிகளுக்கு இடையேயான உறவை மறுதலிப்பது வேலைசெய்யாது. ஏனெனில் இந்த தீவிரவாதிகள் தங்களை முஸ்லீம்கள் என்றே அடையாளப்படுத்திகொள்கிறார்கள். ஊல்விச்சிலிருந்து துனிஸியா வரைக்கும், ஒட்டோவாவிலிருந்து பாலி வரைக்கும் இந்த கொலைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட மதத்தின் காரணமாகத்தான் செய்கிறோம் என்று அவர்களே கூறுகிறார்கள். அதனை நாம் மறுப்பது வீணான முயற்சி” என்று கூறினார். நான் ஒப்புகொள்கிறேன்.

தீவிரவாத இஸ்லாமின் கொள்கை இஸ்லாமிய மதநூல்களின் வேரில் இருக்கிறது என்ற பார்வை பயங்கரவாதத்தை முழுவதுமாக புரிந்துகொள்ளத்தான். இது மதக் கொள்கையை அதன் தீவிரத்துடன் எடுத்துகொள்கிறது. அது அதன் கீழே இருக்கும் “உண்மையான காரணங்கள்” என்ற புகை மூட்டத்தின் கீழே மறைப்பதில்லை. ஒரு தற்கொலைதாரி தன் தற்கொலை குண்டுகளை தன் உடலின் தரிக்கும் முன்னரே தீவிரவாதம் துவங்கிவிடுகிறது என்று இந்தப் பார்வை புரிந்துகொள்கிறது. இது மசூதிகளிலும் பள்ளிகளிலும் இமாம்கள் வெறுப்பையும், சகிப்புத் தன்மையின்மையையும், மெதீனா இஸ்லாத்தை ஏற்றுகொள்வதையும் பிரச்சாரம் செய்யும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

மேற்கத்திய அரசாங்கங்கள் “மிதவாத முஸ்லீம்களோடு” பேச முயற்சி செய்திருக்கின்றன. பயங்கரவாத செயல்களைக் கண்டிக்கும் இமாம்களும், சமூக தலைவர்களும் உண்மையான அமைதியான இஸ்லாமை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கோருவார்கள். ஆனால், இது ஒரு பொருளார்ந்த கொள்கைரீதியான பேசும் முயற்சி அல்ல. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று பேசும் எந்த இமாமும், குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் வன்முறை போதனைகளை இருப்பதாக அங்கீகரிப்பதில்லை. இஸ்லாமுக்குள்ளேயே நடக்கவேண்டிய மாறுதல்களை பற்றிய எந்த விவாதமும் இல்லை. புராதன காலத்தில் உருவான போதனைகளை மாற்றி நவீன காலத்தின் சகிப்புத் தன்மை, மாறுபட்ட சிந்தனையாளர்களை மதிப்பது என்பதைக் கொண்டுவரும் முயற்சியும் இல்லை.

எதேச்சதிகார அரசாங்கங்கள், உள்நாட்டு போர்கள், அராஜகம், பொருளாதார சீர்கேடு ஆகிய அனைத்துமே இஸ்லாமிஸ்ட் இயக்கங்கள் பரவ நிச்சயமாக காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால், மேற்குலகும் முஸ்லீம்களும் மதக் கொள்கையின் தோல்வியாலேயே இந்த பயங்கர வாத இயக்கத்தின் தோல்வியும் ஏற்பட முடியும் என்பதை அங்கீகரிக்கவேண்டும். இந்தக் கொள்கையை தோற்கடிக்கவேண்டுமெனில், இதன் வன்முறை தீவிரவாதத்தை மட்டுமே குறிவைத்தால் பயனில்லை. ஷரியாவின் வன்முறையற்ற போதனைகளையும், ஜிஹாதுக்கு முன்னால் வரும் வீரச்சாவுகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும்.

தற்கொலைகுண்டுதாரி வெடிக்கும் முன்னர் தடுப்பதன் மூலம் மெதீனா கொள்கையை நாம் தோற்கடிக்கமுடியாது. அவரது இடத்தை வேறொருவர் எடுத்துகொள்வார். இஸ்லாமிய அரசு என்னும் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்குவேதா, அல்லது போகோ ஹராம், அல் ஷபாப் ஆகியவற்றை தோற்கடிப்பதன் மூலம் வெற்றியடைய முடியாது. இன்னொரு தீவிரவாத குழு இன்னொரு இடத்தில் முளைக்கும். இஸ்லாமிய தீவிரவாத கொள்கையின் சாவு, சகிப்புத்தன்மையின்மை, செத்தபின்னால் சுவனத்தின் மீதான ஆசை ஆகியவற்றிற்கு மாற்றாக நமது விலை மதிப்பற்ற வாழ்க்கை, சுதந்திரம், சந்தோஷத்துக்கான தேடல் ஆகியவற்றை முன் வைக்கும்போதுதான் நாம் வெற்றியடையமுடியும்.

Series Navigationசூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
author

Similar Posts

18 Comments

  1. Avatar
    இஸ்மத் says:

    மதக்காழ்ப்பு கட்டுரை என்று படிக்க ஆரம்பித்தேன். அயன் ஹிர்ஸி அலி இந்த கட்டுரையில் எந்த வித காழ்ப்புமில்லாமல், அனைத்து தர்ப்பு வாதங்களையும் நேர்மையுடன் வைத்து பேசியிருக்கிறார்.
    படிக்கப்படவேண்டிய விவாதிக்கப்படவேண்டிய கட்டுரை. மொழிபெயர்ப்பு திணறலாக இருக்கிறது.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    மிகவும் சிக்கலான ஒரு பொருள் பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் வகைஉயில் இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் அயான் ஹிர்ஷி அலி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.
    இது இஸ்லாம் பற்றிய கட்டுரை, இதில் நமக்கு ஏன் வீண் வம்பு என்று பலர் இதைப் படிக்காமல் போகலாம். ஆனால் இன்று உலகில் பெரும் பிரச்னை இந்த இஸ்லாமிய தீவிரவாதம்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இஸ்லாம் தோன்றியதிலிருந்து இன்றுவரை அந்த மதத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வன்முறைகள் வெடித்துக்கொண்டுதான் உள்ளது. இதற்கு உதாரணத்துக்கு நாம் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை. நம் அண்டை நாடான பாகிஸ்தானே போதுமானது. ஒரே நேரத்தில்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் அதிலிருத்து செதுக்கிய பாகிஸ்தானையும் சுதந்திரமாக விட்டுச் சென்றனர். அதன்பின்பு இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள ஆட்சிகளைப் பாருங்கள். தொடர்ந்து இராணுவப் புரட்சியும் குண்டு வெடிப்புகளும் எங்கே அதிகம் கண்டோம்? இதை நான் சொல்லத்தேவையில்லை.
    இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதம் ஏன் இவ்வளவு பயங்கரமான வகையில் தலைதூக்கியுள்ளது என்பதற்கு பலரும் பலவிதமான விளக்கங்கள் கூறிவருகின்றனரேதவிர அதற்கு யாராலும் ஒரு தீர்க்கமான பரிகாரம் கூறமுடியவில்லை.
    எதற்காக ஷியா பிரிவினரும் சுன்னி பிரிவினரும் தீராத பகை கொண்டுள்ளனர் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தக் கட்டுரை அதற்கு ஓரளவு விளக்கம் தருவதாக உணர்கிறேன். அத்துடன் மெக்கா இஸ்லாமியர், மதினா இஸ்லாமியர், சீர்திருத்த இஸ்லாமியர் என்ற பிரிவுகளும் உள்ளதை அறிகிறேன்.
    இஸ்லாம் மத வேத நூலில் உள்ள சில பகுதிகளே வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் அடிப்படையான காரணம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இதை சரிசெய்ய வேண்டுமென்றால் உலக அளவில் இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இல்லை.
    இந்த உலகம் சமாதானமாக இருக்கவேண்டுமென்றால் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது. அது நிறைவேறும் காலம் வருமா அல்லது எல்லா நாடுகளிலும் குண்டுகள்தான் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்குமா? …. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    ஷாலி says:

    //எதற்காக ஷியா பிரிவினரும் சுன்னி பிரிவினரும் தீராத பகை கொண்டுள்ளனர் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தக் கட்டுரை அதற்கு ஓரளவு விளக்கம் தருவதாக உணர்கிறேன். அத்துடன் மெக்கா இஸ்லாமியர், மதினா இஸ்லாமியர், சீர்திருத்த இஸ்லாமியர் என்ற பிரிவுகளும் உள்ளதை அறிகிறேன்.//

    டாக்டர் ஸார்! இஸ்லாத்தில் மக்கா,மதினா,சீர்திருத்த பிரிவுகள் இல்லை.ஆனால் நீங்கள் பாராட்டி புகழும் கட்டுரையாசிரியர் இயான் ஹிர்சி அலி அவர்கள்தான் இப்படிப் பிரித்து சொந்த விளக்கம் கொடுக்கிறார்.

    //உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்கள் எவ்வாறு தங்களது மதநம்பிக்கையை பார்க்கிறார்கள், பயில்கிறார்கள் என்பதை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.//

    //இஸ்லாம் மத வேத நூலில் உள்ள சில பகுதிகளே வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் அடிப்படையான காரணம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.//

    அன்று ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க,பிராட்டஸ்டாண்டு கிருஸ்தவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டது எந்த வேத நூலின் பகுதிகள் காரணம்?

    இஸ்லாத்தின் கருத்தியல்களை இயான் ஹிர்சி அலியின் கட்டுரை மூலமாகவே இன்று அறிந்து
    கொண்டதாக டாக்டர் நண்பர் கூறுவது ஓர் அவலம்.

    எப்பேர்பட்ட அறிஞர் பெருமக்களும் கோயாபல்ஸ் தொடர் பிரசாரத்தில் ஏமாந்து விடுவார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

  4. Avatar
    ஜாஹிர் உசேன் says:

    //அன்று ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க,பிராட்டஸ்டாண்டு கிருஸ்தவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டது எந்த வேத நூலின் பகுதிகள் காரணம்?//

    இவ்வாறு மற்ற மதங்களில் உள்ள பகுதிகளையும், அவர்களது பயங்கரவாத செயல்களையும் காரணம் காட்டி, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் செய்வதை நியாயப்படுத்துவதையும் மேலே அயான் ஹிர்ஸி அலி குறிப்பிட்டிருக்கிறார்.

    நல்லது

    1. Avatar
      ஷாலி says:

      // மற்ற மதங்களில் உள்ள பகுதிகளையும், அவர்களது பயங்கரவாத செயல்களையும் காரணம் காட்டி, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் செய்வதை நியாயப்படுத்துவதையும் மேலே அயான் ஹிர்ஸி அலி குறிப்பிட்டிருக்கிறார்.//

      மேலே உள்ள திண்ணையில் இடம்பெற்ற கட்டுரையில் நியாயப்படுத்தும் இது போன்ற வாசகம் குறிப்பிடப்படவில்லை.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் ஷாலி அவர்களே. உங்களை இங்கு சந்திப்பேன் என்பது தெரிந்துதான் எழுதினேன். இந்த கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாம் பற்றியது. இதை எழுதியுள்ளவர் ஒரு இஸ்லாமியர். அவர் கூறியுள்ள விளக்கங்களை வைத்தே நான் என் கருத்தைக் கூறியுள்ளேன். நீங்கள் அது குறித்து பின்னூட்டம் எழுதும்போது கட்டுரையின் பொருளை விட்டு வேறு எங்கோ இப்படி செல்வீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே அதைத் தவிர்த்து கட்டுரை ஆசிரியர் கூறியுள்ள கருத்துகளுக்கு நீங்கள் இஸ்லாமியர் என்ற முறையில் விளக்கம் தந்தால் என்னைப்போன்ற இஸ்லாம் அல்லாதவர்கள் உங்கள் மதத்தைப் பற்றி புரிந்துகொள்ள இயலும் என்பது என்னுடைய வேண்டுகோள். ..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  6. Avatar
    ஷாலி says:

    டாக்டர் ஸார்! முதலில் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.கட்டுரை ஆசிரியை பிறப்பால் முஸ்லிம்.ஆனால் அவர் தற்போது முஸ்லிம் அல்ல.கடவுள் இல்லை என்னும் ஒரு நாஸ்திகவாதி. தீவிர இல்லாமிய எதிர்ப்பாளர்.

    (In 2002 she read The Atheist Manifesto by Leiden philosopher Herman Philipse, given to her years before by her Dutch boyfriend. It deeply influenced her, giving her strength not only to denounce Islam but to acknowledge her disbelief in God.)
    https://en.wikipedia.org/wiki/Ayaan_Hirsi_Ali

    உண்மையில் உங்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய உண்மையை அறியவேண்டும் என்ற தேடல் இருந்தால்,அந்த உண்மையை இயான் ஹிர்சி அலி மூலமோ,அல்லது ஷாலி மூலமோ விளங்க வேண்டியதில்லை.

    இஸ்லாத்தின் மூல ஆதாரமான குர் ஆன் இன்றும் உள்ளது ஆங்கிலத்தில் அல்லது தமிழில்.சிறிது நேரம் செலவு செய்து படியுங்கள்.நீங்கள் உணர்ந்த உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள்.அது எதிர்ப்போ,அல்லது ஆதரிப்போ எதுவானாலும் சரியே!

    குர் ஆன் படித்தும் உங்களுக்கு தெளிவான வழிகாட்டல் கடவுளால் கிடைக்காவிட்டால் பிறகு எந்த மனிதராலும் கிடைக்காது.உங்கள் வழியிலேயே நீங்கள் செல்லலாம்.

    “கடவுள் நகரத்தைக் காக்காவிட்டால்…அதை விழித்திருந்து காப்பவன் மூடன்.”

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    திண்ணை தளத்தில் மோஹ்தர்மா அயான் ஹிர்ஸி சாஹிபா, ஜெனாப் தாரிக் ஃபதஹ் சாஹேப் மற்றும் ஜெனாப் துஃபைல் அஹ்மத் சாஹேப் இவர்களது வ்யாசங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அயான் ஹிர்ஸி அவர்கள் இஸ்லாத்தை துறந்தவர். மற்ற இருவரும் இஸ்லத்திலேயே ஒழுகுபவர்கள்.

    தாரிக் சாஹேப் இஸ்லாத்தில் புழக்கத்தில் இருக்கும் பற்பல நம்பிக்கைகள் குரான்-ஏ-கரீமின் பாற்பட்டவை அல்ல என்று இஸ்லாமிய அறிஞர்களுடனும் பொருதுகிறார்.

    சில கருத்துக்கள் :-

    \\ அத்துடன் மெக்கா இஸ்லாமியர், மதினா இஸ்லாமியர், சீர்திருத்த இஸ்லாமியர் என்ற பிரிவுகளும் உள்ளதை அறிகிறேன்.// டாக்டர் ஸார்! இஸ்லாத்தில் மக்கா,மதினா,சீர்திருத்த பிரிவுகள் இல்லை.ஆனால் நீங்கள் பாராட்டி புகழும் கட்டுரையாசிரியர் இயான் ஹிர்சி அலி அவர்கள்தான் இப்படிப் பிரித்து சொந்த விளக்கம் கொடுக்கிறார். \\

    தியாலஜியின் ப்ரகாரம் இஸ்லாத்தில் இப்படியெல்லாம் பிரிவுகள் இல்லை ஐயா. செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு புரிதலுக்காக வேண்டி நாம் கணிதச் சமன்பாடுகளில் x,y,z என்று சமன்பாட்டை சால்வ் செய்வதற்கு assume செய்வது போல் இந்த அம்மையார் பிரித்திருக்கிறார் அவ்வளவே.

    பைகம்பர் முஹம்மது சாஹேப் அவர்கள் இறந்த பின்னர் யார் பட்டத்துக்கு வருவது என்பதில் நிகழ்ந்த யுத்தம் இஸ்லாமியரை ஆழ்ந்த பரஸ்பர வெறுப்புடன் ஷியா மற்றும் சுன்னி என்ற வகைகளாகப் பிரித்தது. பிற்காலத்தில் வாழ்வியல் கூறுகளுக்கு வழிகாட்டும் ஹதீதுகளை ஏற்பது மற்றும் மறுப்பதிலும் இவர்களில் பேதங்கள் உண்டு.

    \\ இஸ்லாம் மத வேத நூலில் உள்ள சில பகுதிகளே வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் அடிப்படையான காரணம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். \\

    குரான்-ஏ-கரீம், பைபள் அல்லது ஹிந்து மத சாஸ்த்ரங்கள் (வைதிக, சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, சீக்கிய……………….) இவை எல்லாவற்றிலும் வன்முறை சம்பந்தமான பகுதிகள் உண்டு என்பது நேர்மையின் பாற்பட்ட அவதானிப்பாகும்.

    இறையனுபவத்திற்கு மட்டிலும் தான் ஹிந்து மதத்தின் அனைத்து சமயங்களிலும் பெருமளவு மாறாத நூலாதாரம் ( சிற்சில மாற்றங்கள் காலத்தே உண்டு) . வாழ்வியல் கூறுகளுக்கு ஹிந்து மதத்தில் காலகாலத்துக்கு மாறாத நூலாதாரம் என்று ஏதும் கிடையாது. வாழ்வியல் கூறுகள் மாறிக்கொண்டே வருகின்றன. கால தேச வர்த்தமானத்தை ஒட்டி அற விழுமியங்கள் மாறிக்கொண்டே வருகின்றன.

    ஆப்ரஹாமிய மதங்களில் இறையனுபவம், வாழ்வியல் கூறுகள் இவையனைத்தும் ஒரு நூலில் ஆரம்பித்து ஒரு நூலில் முடிந்து விடுகிறது. அதுவும் காலகாலத்துக்கும் மாறாத என்ற புரிதலுடன். உலகளாவிய ஒரே குரான் அல்லது ஒரே பைபள் புழக்கத்தில் இல்லை எனும் போதிலும் கூட. அற விழுமியங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் வாழ்வியல் கூறுகளுக்காக நூலாதாரத்தில் கட்டுண்ட அல்லது கட்டுவிக்கப்பட்டுள்ள ஆப்ரஹாமியர் காலத்துக்குப் பொருந்தாத விஷயங்களை பிடிவாதமாக அறம் என்று ஒழுக முனையும் போது பிணக்குகளாக ஆரம்பித்து பின்னர் அது பெரும் யுத்தமளவுக்கு சென்று விடுகிறது.

    ஸூஃபி இஸ்லாம் போன்றவை இந்த நூலில் விளிம்பில் இருந்து இறையனுபவத்தை அறிய விழைகின்றன. ஆனால் கட்டுப்பட்டி இஸ்லாமியர்களால் இது மதத்தை மீறிய செயலாக கட்டம் கட்டப்படுகிறது.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    பேதங்கள் ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினரிடையே மட்டிலும் இல்லை. ஸுன்னி முஸல்மானாக இருந்தாலும் பரேல்வி மற்றும் தேவ்பந்தி முஸல்மான் களிடையேயும் பேதங்கள் கடுமையாக உண்டு. முந்தைய பிரிவினர் தர்க்காஹ் ஷெரீஃபில் வழிபாடுகளை ஏற்கின்றனர். பிந்தையவர் ஏற்பதில்லை. பரேல்வி முஸல்மாணிய சஹோதரர்கள் பைகம்பர் மொஹம்மத் சாஹேப் அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். பின்னவர் கொண்டாடுவதில்லை.

    ஹிந்துஸ்தானத்தில் இது ப்ரச்சனை இல்லை. ஆனால் எல்லைக்கோட்டுக்கு அப்பால் கராச்சியிலும் லாஹோரிலும் இது பெரிய ப்ரச்சினை. பைகம்பரின் பிறந்தநாளைக் கொண்டாடும் பரேல்வி ஸுன்னி முஸல்மாணிய சஹோதரர்களின் கூட்டங்களில் பிந்தைய குழுவினர் குண்டுகளை வீசி படுகொலையில் ஈடுபடுகின்றனர்.

    உத்தர ப்ரதேசத்தின் ஜில்லா பரேலி மற்றும் தேவ்பந்த் என்ற இரண்டு நகரங்களிலிருந்து கிளைத்தவை இப்பிரிவுகள். தாலிபான் என்று சொல்லப்படும் குழுமக் தேவ்பந்த் ஸுன்னி சம்ப்ரதாயத்தைச் சார்ந்தது.

    \\ இதை சரிசெய்ய வேண்டுமென்றால் உலக அளவில் இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இல்லை. \\

    கவலையற்க ஐயா. உலகில் எப்படியோ ஹிந்துஸ்தானத்தில் நிச்சயம் ஒற்றுமைக்கான முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டே வருகின்றன.

    லக்னௌ நகரத்தில் பக்ர்-ஏ-ஈத் (Eid-ul-zuha) சமயத்தில் ஷியா ஸுன்னி பிரிவினர் ஸிப்டைனாபாத்தில் உள்ள இமாம்பராவில் (ஷியா மஸ்ஜித்) ஒருங்கே நமாஸ் ஓதினார்கள்.
    http://timesofindia.indiatimes.com/city/lucknow/Shia-Sunni-stand-together-for-Eid-namaz-in-Lucknow/articleshow/49101036.cms

    ஹிந்து முஸல்மாணியரிடையேயான ஒற்றுமைக்கும் கூட தொடர்ந்த சம்வாதம் நடைபெற்று வருகிறது.

    ஆர் எஸ் எஸ்ஸின் தரப்பிலிருந்து முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற ஸ்தாபனத்தின் மூலம் ஹிந்து….இஸ்லாமிய சஹோதரர்களுடனான சம்வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமிய மதத்தின் ஆகப்பெரிய தேவ்பந்த் சம்ப்ரதாயத்து கல்விக்கூடமான நட்வாட்-உல்-உலேமா வின் இஸ்லாமிய அறிஞரான அலி மியான் என்று அறியப்படும் வாஹிதுத்தீன் கான் சாஹேப் அவர்கள் வழிகாட்டுதலில் இந்த சம்வாதம் தொடர்கிறது.

    ஷியா மற்றும் ஸுன்னி முஸ்லீம்கள் (பரேல்வி மற்றும் தேவ்பந்தி இரண்டு ஸுன்னி பிரிவினரும்) இந்த சம்வாதத்தில் பங்கு பெறுகின்றனர்.

    ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே சண்டை பூசல் என்றால் மட்டிலும் கூடிக்கூடிப் பேசிக்களிப்பார்கள். இரண்டு சமுதாயத்தினரும் இணக்கத்துக்காக சம்வாதம் செய்து வருவது செய்தியாக ஆகாது. ஆனாலும் சம்வாதம் தொடர்கிறது

  9. Avatar
    வஹ்ஹாபி says:

    கடவுள் மறுப்பாளரான அயான் ஹிர்சி அலியின் ஆங்கிலக் கட்டுரைகள் / உரைகள் மிகவும் அக்கறையோடு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகின்றன. பாவம். தமிழாக்கம் செய்பவர் திணறிப் போகிறார்.

    இவ்வளவு சிரத்தையும் எதற்காக? அயான், கடவுள் மறுப்பாளர் என்பதற்காகவா?

    கணபதி ராமனின் கமெண்ட்:
    இசுலாமிய எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் பேச்சு சுதந்திரம். அது எதிர்க்கப்படும்போது அதைப்பற்றிய கட்டுரைகளை மட்டும் மொழிபெயர்த்து திண்ணையில் போடுவோம். வெண்டி டோனிகரின் கருத்துச் சுதந்திரத்தையும், இராமனுஜனின் கருத்துச் சுதந்திரத்தையும், ஜயபாரதனின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்போம்
    – திண்ணை 27.9.2014 http://puthu.thinnai.com/?p=26892

    இறைவசனங்களைப் பதிக்கும்போது முழுமையாகப் பார்வையிட்டுப் பதிக்க வேண்டுகிறேன்.

    முஸ்லிம் கிரந்தம் மட்டுமல்லாது முஸ்லிம்களின் இன்னும் பல பதிவு நூல்களிலும் போர்கள் பற்றிய தனித் தலைப்பில் அத்தியாயங்களே உள்ளன.

    “முஹம்மது நபியவர்களின் காலத்தில் நடத்தப்பட்ட போர்கள் அனைத்தும் தற்காப்புப் போர்கள் என்பது புவியியல் மூலமாகவும் வரலாற்று மூலமாகவும் நிரூபிக்கப்பட்டவை” என்பது அயானுக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். அவரது ஆஸ்தான இதழாவது எடுத்துச் சொல்லக் கூடாதா?

  10. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் ஷாலி அவர்களுக்கும் நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் வணக்கம். இஸ்லாம் பற்றி ஒரு நாத்திகர் எழுதியுள்ள கட்டுரை பற்றி நான் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் தந்துள்ள உங்கள் இருவருக்கும் நன்றி. நான் இஸ்லாம் மதத்தின் தத்துவங்கள் குறித்து எவ்வித ஐயமும் எழுப்பவில்லை. அது இஸ்லாமியர்கள் பிரச்னை. எது உண்மையான போதனை என்பதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன். ஒவ்வொரு மதத்திலும் இதுபோன்று ஆயிரம் பிரிவினைகளும் பிரச்னைகளும் உள்ளது கண்கூடு. இது போதாதென்று இப்போதெல்லாம் ஆள் ஆளுக்கு தங்கள் விருப்பம்போல் கடவுளை வழிபடும் காலம் இது. இதை கடவுள் சுதந்திரம் என்றுகூடக் கூறலாம். புதுமைப்பித்தன் எழுதிய ” கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் ” கதையில் காண்பதுபோல் இந்த மனிதர்களின் மத்தியில் வாழ முடியாது என்று கடவுளே தப்பித்து ஓடிவிட்டது போன்று இன்று ” நீங்கள் எதையாவது சொல்லி அல்லது எதையாவது வைத்து என்னைக் கும்பிட்டுப் போங்கடா ” என்று கடவுள் கைகழுவிவிட்டதாகவே நான் .கருதுகிறேன். அதனால்தான் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு அடித்துக்கொண்டு சாகிறோம். கடவுளாலேயே கூட இதற்கு ஒரு தீர்வு காண முடியவில்லை! நம்மைப் பார்த்துதானே நம் பிள்ளைகளும் வாழ்வார்கள்? அவர்கள மட்டும் எப்படி வேறு மாதிரி கடவுளைக் காண்பார்கள்? எது உண்மையான கடவுள் என்று அவர்களுக்கு மட்டும் தெரிந்துவிடப் போகிறதா என்ன? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தப் பிரச்னை தீராத பிரச்னைதானே! இதை ஷாலியாலோ கிருஷ்ணகுமாராலோ அல்லது என்னாலோ திண்ணையில் எழுதியா தீர்க்கமுடியும்?
    சென்ற வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டில் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 129 பேர்கள் மாண்டுபோன செய்தி உங்களுக்குத் தெரியும். ஐரோப்பியாவிலேயே அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் நாடு அது என்பதையும் அறிகிறேன்.அங்கு 5 மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.அந்த குண்டு வெடிப்புகளுக்கு I S I S என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.இந்த இயக்கம் இஸ்லாம் தீவிரவாத இயக்கம் என்பதை நாமறிவோம். இந்த கட்டுரையும் ( இதை எழுதியவருக்கு கடவுள் மீதே நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் ) இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து எழுதப்பட்டிருந்ததால் நானும் என் கருத்தை எழுதினேன். இதற்கு தக்க பதில் கூறியுள்ள உங்கள் இருவருக்கும் என் நன்றி.
    திரு.ஷாலி அவர்களே. என்னிடம் ஒரு ஆங்கில திருக்குர் ஆன் உள்ளது. முன்பு படித்துக்கொண்டுதானிருந்தேன். இப்போது அதில் சந்தேகங்கள் கேட்கே நீங்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன் என்று கூறிக்கொள்கிறேன்….. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    பைபிளியல் கருத்தாக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக செர்ரி பிக்கிங்க் செய்து மனம் போன போக்கில் பைபிளை வ்யாக்யானம் செய்வதை தாங்கள் ஒரு பதிவில் குறைகண்டிருந்தீர்கள். நினைவிருக்கலாம்.

    அது பைபிளுக்கு மட்டிலும் அல்ல. குரான்-ஏ-கரீம் அல்லது ஹிந்து மத சாஸ்த்ரங்கள் என்று எதாக இருந்தாலும் அதற்கு இது பொருந்தும்.

    ஆங்க்ல வ்யாக்யானாதிகள் ஓரளவு அடிப்படைகளைப் புரிந்து கொள்ள உதவும் தான். ஆனால் ஆழ்ந்து இன்னது தான் சித்தாந்தம் என்று தெளிவுர கசடறக்கற்றலும் அந்தந்த சம்ப்ரதாயத்தின் படி ஒழுகுபவர்களிடம் பாடம் கற்று ஒரு முழுமையான புரிதலை அடைவதும் முறையானது.

    ஆங்க்ல வ்யாக்யானங்கள் அனைத்தும் தப்பு அல்லது மரபியல் வ்யாக்யாதாக்கள் அந்தந்த மதங்களில் எழுதியுள்ளது அனைத்தும் சரி என்பது அல்ல என் புரிதல்.

    மூல க்ரந்தங்களை முழுமையாக வாசித்து அதில் சொன்னவற்றை முழுமையாக புரிந்து கொள்ளல் அவச்யம் என்பதே என் தரப்பு. அதன் பின்னர் எது தவறு எது சரி என்று தெளிவு நிச்சயம் கிட்டும்.

    உலகளாவி ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யுமளவிற்கு பெருகிவரும் இஸ்லாமிய பயங்கரவாதம் ஹிந்துவாகிய எனக்கும் க்றைஸ்தவராகிய உங்களுக்கும் மட்டிலும் விசனம் தருவது அல்ல. எனது பல இஸ்லாமிய சஹோதரர்களும் கூட இதனால் விசனமுறுகிறார்கள். ஹிந்துஸ்தானத்தில் இருந்து பல குடும்பங்களிலிருந்து தவறாக வழிகாட்டப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் / முதிர் குழந்தைகள் சிரியாவுக்கும் ஈராக்குக்கும் கிளம்பி விடுகிறார்கள். கானல் நீரை நாடி ஓடும் தங்கள் பிள்ளைகளை எண்ணி அந்த பெற்றோர்கள் மனதால் படும் பாடு விவரிக்கவொண்ணாதது. இது மிகக் கடுமையாக நிர்தாக்ஷண்யமாக எதிர்க்கப்பட வேண்டியது.

    அதே சமயம் ஹிந்துஸ்தானத்தின் அனைத்து ப்ராந்தியங்களிலும் அந்தந்த ப்ராந்திய பண்பாட்டுக்கும் கலை இலக்கியத்துக்கும் பங்களித்திருக்கும் நமது இஸ்லாமிய சஹோதரர்களின் மாண்பு மறக்கக் கூடாதது. மறைக்கக் கூடாதது. இப்படி பண்பாட்டில் ஊறிய நமது இஸ்லாமிய சஹோதரர்களுக்கு இரண்டு ப்ரச்சினை. ஒரு புறம் க்றைஸ்தவ மற்றும் ஹிந்து சஹோதரர்கள் இவர்களைக் கண்டு கொள்வதும் கிடையாது. மறுபுறம் விஷம் போலப் பரவி வரும் வஹாபியம் என்ற கருத்தாக்கம் இசை, சித்திரம், கலை, பண்பாடு இவற்றுடன் ஒன்றிய செயற்பாடு இஸ்லாத்துக்கு விரோதமானது என்று இவர்களை இடித்துறைத்து இவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்க விழைவது.

    சொந்தமும் சொந்தமில்லை. அன்னியமும் அன்னியமாகி அல்லலுறும் அவலம் இந்த இஸ்லாமிய சஹோதரர்களுக்கு. எதனால்? இந்த தேசத்தில் காலத்தை விஞ்சிய நமது பொதுப்பண்பாட்டை ஒழுகுவதற்கு இவர்கள் கொடுக்க வேண்டிய சுமை மிகுந்த வலி மிகுந்த விலை இது.

    சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அஷ்டாவதானி அபுப்பகர் நயினார் குணங்குடி மஸ்தான் சாஹிபு சதக்கத்துல்லா அப்பா அருளாளர் நாகூர் ஷாகுல் ஹமீரதாஸர் மற்றும் இவர்களையெல்லோரையும் ஒட்டி ஒழுகும் நமது கோடிக்கணக்கான தமிழக இஸ்லாமிய சஹோதரர்களை நாம் மதித்தல் அவர்களை அரவணைத்தல் …………. தவிர முன்னர் சொல்லப்பட்ட உலகளாவிய வஹாபிய பயங்கரவாதத்துக்கு வழிபோகும் அன்பர்களை தடுத்தாட்கொள்ளல் ……………. இரண்டும் ஒரே சமயத்தில் செய்யப்பட வேண்டும்.

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சின் தரப்பிலிருந்து இது நிச்சயமாக செய்யப்படுகிறது. இது பெருமளவில் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பது என் அபிலாஷை. இறையருள் நிச்சயம் கூடும் என்று நம்பிக்கை இருக்கிறது. நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு.

    அன்புடன் க்ருஷ்ணகுமார்

  12. Avatar
    paandiyan says:

    அல் அக்தம் என்ற ஒரு கட்டுரை இத திண்ணையில் மிக பிரபலம் . கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா ..

  13. Avatar
    smitha says:

    Shali,

    You may write reams of paper that Islam is a religion which propogates brotherhood, peace etc., But, what is the reality?

    Islamists kill people mercilessly & justify it as Jehad. Have the right thinking muslims come forward & condemned it? No.

    Casteism is rampant in Islam, but no one dare talk about it. Why, is there consensus on the Koran itself? Can you come forward & show a copy of the Koran which will be undisputed?

    You fight within yourselves, we are not bothered. But stop killing in the name of religion.

    And please stop saying again & again that Islam is a religion of peace etc., It is becoming tiresome.

  14. Avatar
    arun says:

    It is a very good article. If we respect the freedom of speech and writing, then let us take the better side of this article and please, Please, avoid making bad comments on Dr. Jhonson’s writings. Today, in Tamil knowers world, Dr. Jhonson is a rare legend. I am sure Dr. will overlook all these and continue to shower his experience on all those like me who get immensely rich by reading his writings.

    1. Avatar
      ஷாலி says:

      // Please, avoid making bad comments on Dr. Jhonson’s writings. Today, in Tamil knowers world, Dr. Jhonson is a rare legend.//

      திரு.அருண் அவர்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன். ஆகவேதான் நான் ஒரு கமெண்ட்வுடன் எனது பதிலை நிறுத்திக்கொண்டேன்.பொதுவாக இணையதள விவாதங்களில் பங்கெடுக்கும் முகமறிய,அட்ரஸ் தெரியாத என்னைப்போன்ற,திரு.க்ருஷ்ணகுமார் போன்றவர்கள்,எவ்வளவு கடுமையான சொற்களினால் மாறி,மாறி அடித்துக்கொண்டாலும் அவைகள் காற்றோடு கலந்து, கலைந்து விடும்.எவருக்கும் எந்தப்பாதிப்போ,மனக்காயங்களையோ ஏற்படுத்தாது.

      அதேசமயம் நாடறிந்த, முகமறிந்த அறிஞர் பெருமக்கள்,டாக்டர்.ஜான்சன்,மற்றும் பேராசிரியர்.திரு.ஜெயபாரதன் போன்றவர்கள்,முகமறியா மக்களிடம் விவாதிக்கும்போது சில மனவருத்தங்கள், கௌரவ பிரச்சினைகள், மற்றும் தனி நபர் தாக்குதலுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்படத்தான் செய்யும்.இது அவர்களின் இணைய பங்களிப்பை குன்றச் செய்யும்.இதனால்தான் பிரபலமானவர்கள் பின்னூட்ட கருத்திட தயங்குகிறார்கள்.இணைய வழி கல்லேறிதலில் முகமறிந்த பிரபலமானவர்கள் காயப்படுவார்கள்.எறிந்தவனை எவருக்கும் தெரியாது.நிச்சயமாக,இது freedom of speech and writing, அல்ல.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    \\ அட்ரஸ் தெரியாத என்னைப்போன்ற,திரு.க்ருஷ்ணகுமார் போன்றவர்கள், \\

    இணையத்தில் புழங்கும் பலருக்கும் என்னைத் தெரியும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு விட்டால் உலகம் அந்தகாரமாகி விடும் என்று நினைப்பது தவறு.

    நீங்கள் நூறு முறை திருப்பித் திருப்பிச் சொன்னாலும் பொய் பொய் தான் ஆகும். ஒரே ஒரு முறை சொன்னாலும் உண்மை உண்மை தான் ஆகும்.

    பேரும் புகழும் வாய்த்து பெருமை உடைய பெருந்தகையோர்கள் சொன்னாலும் ஆதாரமில்லாத பொய்கள் பொய்கள் மட்டிலுமே. மிக மிகக் காஷ்டமாக கட்டுடைக்கப்பட வேண்டிய பொய்கள் பெருந்தகையோர் சொல்லும் பொய்கள். உரக்கச் சொல்லாவிடினும் அட்ரஸ் இல்லாதவர்கள் சொன்னாலும் கூட ஆதாரத்தின் பாற்பட்ட உண்மை உண்மை தான்.

    விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் ஆக இருந்தாலும் சரி…………. வைத்யர் ஸ்ரீ ஜான்சன் ஆக இருந்தாலும் சரி………. அன்பர் ஷாலி அவர்களாக இருந்தாலும் சரி…………. சொல்லும் விஷயங்கள் ஆதாரங்களின் பாற்பட்டு மட்டிலுமே என்னாலும் உலகத்தாராலும் ஏற்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள விழையுங்கள். ஆதாரங்களுக்கு விரோதமான கூற்றுக்களை யார் கூறினாலும் அது மறுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை.

    இதுவரைக்குமான என் இணையப் பங்களிப்பில் இதை மிக உறுதியாகப் பின்பற்றி வருகிறேன்.

    என்னுடைய புரிதல்கள் ஆதாரங்களின் பாற்பட்டு மேம்படுத்த வகையுண்டு என்றால் …………. அதைச் சொல்லுபவர்கள் பெருந்தகைகளா………… அல்லது அட்ரஸ் இல்லாதவர்களா………… என்று நிச்சயம் பார்க்க மாட்டேன். முன்வைக்கும் ஆதாரம் என்ன சொல்லவரும் விஷயம் என்ன என்று மட்டிலும் பார்ப்பேன். பாத்ம புராணத்தில் வண்ணான் பற்றிய விஷயத்தை நீங்கள் ப்ரஸ்தாபித்த பின்னர் ………….. அதற்கு தன்யவாதங்களை இந்த தளத்தில் நான் பகிர்ந்திருந்தேன்.

    அறியாமலோ அல்லது முன் தீர்மானத்தின் பாற்பட்டோ (அல்லது வக்ரமாகவோ கூட இருக்கட்டுமே) ஒரு பொய்யை சொல்வதில் அவ்வளவு தவறில்லை. ஆனால் முழுமையான ஆதாரங்களை முன்வைத்து……….. அந்தப் பொய்யை கட்டுடைத்த பின்னரும் கூட……….. பொய்யின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குவது ………….. யாராக இருந்தாலும் சரி………… நகைப்பிற்கு மட்டிலுமே இடமாகும்.

Leave a Reply to இஸ்மத் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *