கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5

This entry is part 20 of 30 in the series 15 ஜனவரி 2012

இந்த பகுதியில், எவ்வாறு டெம்போரல் லோப் வலிப்பு நோய், ஒரு புதிய மதத்தை உருவாக்கியது என்பதை பார்க்கலாம். அதே நேரத்தில் எவ்வாறு ஒரு புதிய மதம், அதற்கு முன்னால் வந்த மதங்களின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதன் தூய வடிவாகவும் தன்னை தகவமைத்துகொள்கிறது என்பதையும் காணலாம்.

தற்போதைய அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களில் முதலாவதாக வந்துகொண்டிருப்பவர் மிட் ராம்னி என்ற மோர்மன் பிரிவைச் சேர்ந்தவர். மோர்மன் பிரிவு என்பது என்ன? மோர்மன் பிரிவு என்பது கிறிஸ்துவ அடிப்படைவாதத்தில் தோன்று மருவி தனியொரு மதமாக பரிணமித்த ஒரு அமெரிக்க மதம். இன்று அமெரிக்காவை தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கிறது. இந்த மதத்தை தோற்றுவித்தவர் ஜோஸப் ஸ்மித் ஜூனியர்.

அமெரிக்காவில், வெர்மாண்ட் மாநிலத்தில், 1805 ஆம் ஆண்டு, ஜோஸப் ஸ்மித் சீனியர் என்பவருக்கும், லூசி மாக் ஸ்மித் என்பவருக்கும் ஐந்தாவது குழந்தையாக ஜோஸப் ஸ்மித் ஜூனியர் பிறந்தார்.

அவருக்கு 17 வயதாக இருக்கும்போது அவருக்கு ”காட்சிகள்” தோன்ற ஆரம்பித்தன.

அவரிடம் மொரோனி (moroni) என்ற ஒரு தேவதை வந்து புதைக்கப்பட்டிருக்கும் தங்க ஏடுகளை காண்பிப்பதாகவும், அதன் மூலம் கிறிஸ்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூற ஆரம்பித்தார். 1830இல் (அவருக்கு 25 வயதாக இருக்கும்போது) மோர்மன் புத்தகம் (Book of Mormon) என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரசுரித்தார். (அதாவது அந்த தங்க ஏடுகளில் இருந்தது ஒரு எகிப்து மொழியும், எபிரேயமும் கலந்த ஒரு புராதன மொழி என்று கூறிகொண்டார். அந்த மொழியை மொழிபெயர்க்க அவருக்கு அந்த தேவதை வலிமை கொடுத்தது என்றும் அந்த தங்க ஏடுகளை மொழிபெயர்த்து அவர் ஆங்கில புத்தகமாக வெளியிடுகிறார் என்றும் கூறினார்). அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகே இருந்த குமோரோ என்ற மலையில் ஒரு கல்லாலான பெட்டியின் உள்ளே இந்த ஏடுகள் இருந்தன என்று இவர் கூறினார். இன்று அந்த மலை மார்மன் கிறிஸ்துவர்களின் தீர்த்தஸ்தலமாக இருக்கிறது.

மீண்டும் ஆரம்பகால தூய வடிவில் சர்ச்சை நிறுவனப்படுத்த தன்னை கடவுள் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இந்த சர்ச்சுக்கு சர்ச் ஆஃப் லேட்டர் டே செயிண்ட்ஸ் அல்லது சர்ச் ஆஃப் மோர்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த காலகட்டம் ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட, அல்லது வெளியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஏற்கெனவே ஒரு இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கும், புதியதாக வந்து சேர்பவர்களுக்கும் இடையே சண்டைகள் அவ்வப்போது நடந்தன.
1831இல் இவரிடம் கணிசமான சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். ஆகவே ஸ்மித் இவர்களை கூட்டிக்கொண்டு ஒஹையோ மாநிலத்தில் கிர்ட்லாந்த் என்ற நகரில் ( Kirtland, Ohio ) ஜியான் (Zion) என்னும் புனித நகரை ஸ்தாபிக்க அழைத்துச் சென்றார். ஆனால், அங்கே ஏற்கனவே இருந்தவர்கள் இந்த புதிய வரவாளிகளை துரத்திவிட்டனர். ஏற்கெனவே வடக்கு மிஸோரி மாநிலத்துக்கு இவர்கள் சென்றனர். இந்த காலகட்டத்திலேயே, மோர்மன்களின் அதிகரிப்பை கண்டு பயந்தவர்களும் மோர்மன்களும் போர் புரிந்தனர். இது 1838 மோர்மன் போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் மோர்மன்கள் தோற்றனர். அதனால், மிசோரியிலிருந்து மோர்மன்கள் துரத்தப்பட்டனர். ஸ்மித் சிறைபிடிக்கப்பட்டார்.
மிசோரி சிறையிலிருந்து தப்பிய ஸ்மித் அங்கிருந்து சென்று, மோர்மன்களுடன், இல்லினாய் மாநிலத்தில் நாவோ பகுதியில் (Nauvoo, Illinois) குடியேறினார்கள். அங்கு அவர் மேயராகவும், பிறகு மோர்மன்களின் மிகப்பெரிய போர்ப்படைக்கு தலைவராகவும் இருந்தார். 1844இல் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். நாவோ எக்ஸ்போஸிடர் என்ற பத்திரிக்கை ஸ்மித் பலதார மணம் புரிந்திருப்பதை விமர்சித்தது. இதனால், நாவோ நகர கவுன்ஸில் அந்த பத்திரிக்கை அழிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
இதனால் நடந்த குழப்பத்தின் இறுதியில், நாவோ பகுதியில் ராணுவ சட்டம் என்று (martial law) அறிவித்தார். பிறகு இல்லினாய் கவர்னரிடம் சரண்டைந்தார். வழக்கை எதிர்பார்த்து இருக்கும்போது அவர் இல்லினாய் மாநிலத்தில் கொல்லப்பட்டார்.
ஸ்மித்தின் சீடர்கள், அவர் எழுதியது எல்லாவற்றையும் இறைவனால் கொடுக்கப்பட்டவையாக கருதுகிறார்கள். கடவுளின் தன்மை, குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அரசியலமைப்பு, மதம் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போல இருக்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் இறை வாக்குகளாக கருதுகிறார்கள். மோஸஸ், எலிஜாவுக்கு நிகராக அவரையும் ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்கள். அவரது மறைவுக்கு பின்னால், மோர்மனிஸம் பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. அதன் முக்கிய பிரிவு சர்ச் ஆஃப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆஃப் லாட்டர் டே செயிண்ட்ஸ் ( Church of Jesus Christ of Latter-day Saints ) என்று அழைக்கப்படுகிறது. மிசோரியில் ஒரு பிரிவு தன்னை கம்யுனிட்டி ஆஃப் கிறிஸ்ட் என்று அழைத்துகொள்கிறது. அதிகாரப்பூர்வமான இந்த இரண்டு சர்ச்சுகளும் பலதார மணத்தை தாங்கள் இனி போதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசாங்கத்திடம் உத்தரவாதம் கொடுத்ததினால், இதிலிருந்து பல மோர்மன்கள் பிரிந்து சென்று பலதார மணத்தை ஆதரிக்கும் பல மோர்மன் உப பிரிவுகளை உருவாக்கிக்கொண்டனர்.
– ஜோஸப் ஸ்மித்தின் பெற்றோரும் அவரது தாய்வழி தாத்தாவும், அடிக்கடி தங்களிடம் கடவுள் பேசுவதாக கூறிகொண்டனர். இந்த டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாகவும் வரலாம் என்பதை கருத்தில் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த ஸ்மித் தனக்கும் இந்த டெம்போரல் வலிப்பு வந்ததை இறைவனின் வசனம் தன்னிடமும் இறங்குவதாக கூறிகொண்டதில் ஆச்சரியமில்லை. தன்னிடம் இறைவனின் தூதரும் இறைவனும் வந்து பேசியதாக ஸ்மித் எழுதியிருக்கிறார்.
இவரிடம் மோரோனி என்ற தேவதை கொடுத்த தங்க ஏடுகளை அவர் ஒரு பாதுகாப்பான அறையில் பூட்டி வைத்ததாக கூறிக்கொண்டார். மோரோனி தேவதை அந்த ஏடுகளை யாரிடமும் காட்டக்கூடாது என்றும், அதன் மொழிபெயர்ப்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக கூறிக்கொண்டார். இவரது வார்த்தையை நம்பி பலர் இவரிடம் மொழிபெயர்ப்பு வேலை செய்ய வந்தனர். நடுவில் இவரது மனைவி குறைப்பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையை பெற்றார்.
அப்போதிலிருந்து அந்த பழங்கால ஏடுகளிலிருந்து மொழிபெயர்க்கும் திறன் போய்விட்டதாக கூறினார். பிறகு 1828இல் இவருக்கு மீண்டும் அந்த திறன் கொடுக்கப்பட்டதாகவும் கூறிகொண்டார். பலர் இந்த தங்க ஏடுகளை பார்க்க விரும்பினர். ஆனால், மோரோனி தேவதை மற்றவர்கள் பார்க்ககூடாது என்று கூறிவிட்டதால் காண்பிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் 11 பேர் அந்த தங்க ஏடுகளை பார்த்ததாக சாட்சியமளித்தனர். இவை இப்போதும் பிரசுரிக்கும் மோர்மன் புத்தகம் என்ற இந்த பிரிவின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு முடிந்ததும், அந்த தங்க ஏடுகளை மோரோனி எடுத்துகொண்டு சென்றுவிட்டதாக ஸ்மித் கூறிவிட்டார்.
தான் வன்முறையை விரும்பவில்லை என்று ஸ்மித் அடிக்கடி கூறிகொண்டாலும், மோர்மன் மதத்தை காக்கவும், மோர்மன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ராணுவப்போருக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்றும் விரும்பினார்.
இவரது சில போதனைகள் பல முன்னுக்குப் பின் முரணாக இருப்பவை. ஒரு காலகட்டத்தில் வந்த போதனைகளை பின்னொரு காலத்தில் அதனை மறுத்து வேறொரு கருத்தை கடவுள் தன்னிடம் சொன்னதாக கூறிவிடுவார்.
உதாரணமாக அடிமைமுறையை ஆதரித்து 1836ல் பேசினார். பின்னர் கடுமையாக அடிமைமுறையை எதிர்த்திருக்கிறார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது, 1850ஆம் ஆண்டில் அடிமைமுறையை ஒழிக்கப்போவதாகவும், ஏற்கெனவே அடிமைகளை வைத்திருந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக, பொது நிலங்களை விற்று பணம் தரப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மோர்மன் மதத்துக்குள் அடிமைகள் வரலாம். ஆனால், அந்த அடிமைகளின் எஜமானர்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கருப்பினத்தவரும், வெள்ளையினத்தவரும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஜனநாயகமே சரி என்று ஒரு சமயத்தில் கூறியிருக்கிறார். பின்னர் மோர்மன் மத அடிப்படையிலான மத அரசாங்கமே ஒரு நாட்டை அரச வம்சத்தால் ஆளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா பல நாடுகளையும் ஆக்கிரமித்து ஆள வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னால், அந்த ஆக்கிரமிப்பு என்பது சகோதரத்துவ ஆக்கிரமிப்பு என்று அழைத்திருக்கிறார்.
மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தை விட கடவுள் கொடுக்கும் சட்டமே உன்னதமானது என்றும், இறைவசனத்தின் மூலம் வரும் சட்டத்தையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இது அவரது கருத்து.
”that which is wrong under one circumstance, may be and often is, right under another. God said thou shalt not kill—at another time he said thou shalt utterly destroy. This is the principle on which the government of heaven is conducted—by revelation adapted to the circumstances in which the elders of the kingdom are placed. Whatever God requires is right…even things which may be considered abominable to all those who do not understand the order of heaven.”
”ஒரு இடத்தில் கொல்லக்கூடாது என்று கடவுள் சொல்லியிருக்கிறார்(பைபிளில்). மற்றொரு இடத்தில் அழித்து முடி என்றும் சொல்லியிருக்கிறார். நேரத்துக்கு தகுந்தாற்போல வரும் இறைவசனங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூத்த தலைவர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். கடவுள் என்ன கேட்கிறாரோ அதுவே சரி. மற்றவர்கள் இந்த கட்டளைகளை என்ன கேவலமாக கருதினாலும்….” என்று கூறுகிறார்.

பலதார மணமே சிறந்த மணம் என்றும் அதுவே மனிதனை கடவுளாகக்கூட ஆக்ககூடிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார்.

அவருக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய்க்கான ஆதாரங்கள்.

அவருக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்பதை பல வரலாற்றாசிரியர்கள் குறித்துள்ளனர்.
. A voice from above reveals “the same messenger” from earlier, who commands Smith to go tell his father what’s been going on.
“I obeyed; I returned to my father in the field, and rehearsed the whole matter to him. He replied to me that it was of God, and told me to go and do as commanded by the messenger.” அவரது முதலாவது பிரமை பற்றி அவரே எழுதியது.
“‘. . . I was seized upon by some power which entirely overcame me, and had such an astonishing influence over me as to bind my tongue so that I could not speak. Thick darkness gathered around me, and it seemed to me for a time as if I were doomed to sudden destruction.'” (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 15) ”ஒரு சக்தி என் மீது படர்ந்து என்னை அமுக்கியது. என்னால் பேசவே முடியாதது போல என் நாக்கை கட்டிப்போட்டது. என்னைச் சுற்றிலும் கருமை சூழ்ந்தது. நான் அந்த கணமே உடனே அழியப்போகிறவனாக உணர்ந்தேன்” “Joseph Smith described the remarkable vision he saw and then went on to say: ‘When I came to myself again, I found myself lying on my back, looking up to heaven. When the light had departed, I had no strength; but soon recovering in some degree, I went home.’ (ibid., v. 20) நான் என் சுய உணர்வுக்கு வந்தபோது மல்லாக்க வானத்தை பார்த்து படுத்திருந்ததை அறிந்தேன். ஒளிவெள்ளம் என்னை விட்டு நீங்கியபோது என்னிடம் உடல் வலிமையே இல்லாதிருந்தது. சற்று நேரத்தில் என் வலிமையை திரட்டிக்கொண்டு வீடு சென்றேன்” “While Joseph Smith claimed that he saw an actual vision, there is a similarity to his grandfather’s experience in that both of them were overpowered and passed out. Interestingly, both Joseph and his grandfather used the expression, ‘When I came to myself’ (compare v. 20 with Solomon Mack’s account cited above).
அவரது தாத்தாவும் ஜோஸப் ஸ்மித்தும் ஒரே மாதிரியாக தங்களது அனுபவங்களை விளக்கியுள்ளார்கள். அவர்கள் சுயநினைவுக்கு வந்ததை இருவருமே ‘When I came to myself’ என்று கூறுகிறார்கள் “Another account of the [First] [V]ision appears in Joseph Smith’s 1835 dairy. This account contains some eerie material about a strange noise Joseph heard that was not published in the official version: “‘My tongue seemed to be swol[l]en in my mouth, so that I could not utter. I heard a noise behind me like some person walking towards me.
I strove again to pray but could not. The noise seemed to draw nearer. I sprung up on my feet {page 23} and looked around, but saw no person or thing that was calculated to produce the noise of walking.’ (“An American Prophet’s Record: The Diaries and Journals of Joseph Smith,” edited by Scott H. Faulring, 1987, p. 51) என்னுடைய நாக்கு என் வாய்க்குள் வீங்கிப்போனது போல உணர்ந்தேன். என்னால் பேசமுடியவில்லை. எனக்கு பின்னால் ஒருவர் நடந்து என்னை நோக்கி வருவது போல சத்தம் கேட்டது. நான் மீண்டும் பிரார்த்தனை செய்ய முனைந்தேன். ஆனால் முடியவில்லை. சத்தம் என்னை நெருங்கி வந்தது.
நான் எழுந்து நின்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். என்னை நோக்கி நடந்து வந்த உருவத்தையோ அல்லது யாரையுமோ பார்க்கவில்லை.” இதே அனுபவத்தையே டெம்போரல் லோப் தூண்டப்படுபவர்களும் அடைகிறார்கள், டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவர்களும் அடைகிறார்கள் என்பதனை முன்னரே பார்த்தோம்.
தங்க ஏடுகளை கொடுத்த மொரோனி என்ற தேவதையை பார்த்த நிகழ்ச்சி பற்றி ஜோஸப் ஸ்மித் எழுதுகிறார் “‘I shortly after arose from my bed, and, as usual, went to the necessary labors of that day; but, in attempting to work as at other times, I found my strength so exhausted as to render me entirely unable. My father, who was laboring along with me, discovered something to be wrong with me, and told me to go home. I started with the intention of going to the house; but, in attempting to cross the fence out of the field where we were, my strength entirely failed me, and I fell helpless on the ground, and for a long time was quite unconscious of anything.
“‘The first thing that I can recollect was a voice speaking unto me, calling me by name. I looked up, and beheld the same messenger . . .’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 48-49) “Joseph Smith wrote that after he had his First Vision, he was severely tempted: “‘. . . I was left to all kinds of temptations; and mingled with all kinds of society, I frequently fell into many foolish errors, and displayed the weakness of youth, and the foibles of human nature; which, I am sorry to say, led me into divers temptations, offensive in the sight of God. . . .
on the evening of the above-mentioned twenty-first of September, after I had retired to my bed for the night, I betook myself to prayer and supplication to Almighty God for forgiveness of all my sins and follies . . .
“‘While I was thus in the act of calling upon God, I discovered a light appearing in my room, which continued to increase until the room was lighter than at noonday, when immediately a personage appeared at my bedside . . . The room was exceedingly light . . . He called me by name . . . He said there was a book deposited, written upon gold plates . . .
“‘After this communication, I saw the light in the room begin to gather immediately around . . . the room was left as it had been before the heavenly light had made its appearance.
“‘I lay musing on the singularity of the scene . . . when in the midst of my meditation, suddenly discovered that my room was again beginning to get lighted, as it were, the same heavenly messenger was again by my bedside.’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 28-30, 32-34, 43-44) “Joseph Smith, of course, also asserted that when he had his [F]irst [V]ision he ‘saw a pillar of light exactly over my head, above the brightness of the sun . . . .’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 17) . . .
அவருக்கு முதலாவது காட்சி வந்தபோது அவரது தலைக்கு மேல் ஒளி தூண் நின்றுகொண்டிருந்ததையும் அது சூரியனை போன்று பிரகாசித்ததையும் பார்த்ததாக கூறியிருக்கிறார்.
1835இல் அவர் பார்த்த காட்சிகளில் இருந்த இரண்டு பேரை அவரால் அடையாளம் காணமுடியவில்லை என்றும், பல தேவதைகளை இந்த காட்சிகளில் பார்த்ததாகவும் அவர் எழுதியுள்ளார் “In the version written in 1835, Smith maintained that there were two persons whom he did not identify. In addition, however, he also said that he ‘saw many angels in this vision . . .’ (ibid., p. 51) “In his book, ‘Hearts Made Glad: The Charges of Intemperance Against Joseph Smith the Mormon Prophet,’ LaMar Petersen wrote the following: “‘Joseph’s associates sometimes spoke of his paleness when “in vision” or when receiving a revelation. A daughter of Adaline Knight Belnap recorded her mother’s impression of the Prophet in an instance of spiritual (spirituous?) passivity. “How well she remembers one day before her father died (Vinson Knight) of a little excitement in school. The children were busy when the school room door was carefully opened and two gentlemen entered, carrying the limp form of Joseph Smith. The children all sprang to their feet, for Brother Joseph lay helpless in their arms, his head resting on his brother’s shoulder, his face pale as death, but his eyes were open, though he seemed not to see things earthly. The teacher quieted them by telling them that Brother Joseph was in a revelation, and they were carrying him to his office above the schoolroom.”‘ (Peterson, “Hearts Made Glad,” 1975, p. 206) ஜோஸப் ஸ்மித்துக்கு இறைவசனம் வரும்போது எப்படி இருந்தார் என்பதை அவருடன் படித்த பெண்மணி நினைவுபடுத்தி கூறுவதையே மேலே காண்கிறீர்கள். இது டெம்போரல் வலிப்பு நோய்வாய்ப்பட்டவர்கள் அடையும் ”காட்சிகள்” போலவே இருப்பதை பார்க்கவும்.
Persecutionally Paranoid “. . . Lucy Smith . . . claim[ed] that one evening when Joseph ‘was passing through the door yard, a gun was fired across his pathway, with the evident intention of shooting him. He sprang to the door much frightened. We immediately went in search of the assassin . . . The next morning we found his tracks under a wagon, where he lay when he fired . . . We have not as yet discovered the man who made this attempt to murder, neither can we discover the cause thereof.’ (“Biographical Sketches of Joseph Smith,” p. 73) அவரை கொல்ல முனைகிறார்கள் என்ற பயம் அவரிடம் ஆரம்பகாலத்திலிருந்தே இருப்பதையும் மேலே காண்கிறோம். இதுவும் டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பக்கவிளைவு. இது அவர் மோர்மனிஸம் பிரச்சாரம் ஆரம்பித்த பின்னால் வந்தது அல்ல.இது அவர் தனது முதலாவது காட்சியை காணும் முன்னால் நடந்தது என்பதை நினைவில் கொள்ளுவோம்.


மோர்மன் கிறிஸ்துவ பிரிவின் அசுர வளர்ச்சி.
மோர்மன்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என்றே கூறிகொள்கின்றனர். கத்தோலிக்க மதத்தாலும், மற்ற பிராடஸ்டண்ட் பிரிவினராலும் கெடுக்கப்பட்ட கிறிஸ்துவத்தை புனரமைத்து, தூய கிறிஸ்துவத்தை நிலை நாட்ட வந்ததாகவே ஜோஸப் ஸ்மித்தும் கூறியுள்ளார். இவ்வாறு பழங்கால தூய நிலைப்பாடுக்கு செல்வது என்பது பல revivalist மதங்களின் பொது நிலைப்பாடு. இயேசு கிறிஸ்து அமெரிக்காவுக்கு பழங்கால யூதர்களை அழைத்து வந்ததற்கோ, அல்லது அமெரிக்காவில் முதலாம் நூற்றாண்டில் ஒரு யூத சமுதாயம் இருந்ததாக சொல்லப்படுவதற்கோ, இங்கிருக்கும் செவ்விந்தியர்கள் யூதர்களிலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கோ எந்த வித ஆதாரமும் கிடையாது. வரலாற்றாய்வாளர்கள் இவை எல்லாமே ஜோஸப் ஸ்மித்தின் கட்டுக்கதைகள் என்றேசொல்கிறார்கள். ஆனால், மார்மன் மதம் வளர்வது நிற்கவில்லை.

இதன் ஆதரவாளர்கள், மோர்மன் புத்தகத்தில் உள்ளவை எவ்வாறு உண்மையானவை என்றும், அவற்றில் உள்ளவை உண்மை என்று எதிர்கால விஞ்ஞானிகள் உணர்வார்கள் என்றும் எழுதி வருகிறார்கள். எவ்வாறு பைபிளில் கூறப்பட்டுள்ளவை பரிணாமவியலுக்கு எதிராக இருப்பதால், பரிணாமவியல் பொய் என்று அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் கூறுகிறார்களோ, அதேபோல மோர்மன் புத்தகத்தில் உள்ளவற்றுக்கு எதிராக இருக்கும் அறிவியல் ஆய்வுகளை மறுக்கவும், மோர்மன்புத்தகத்தை நிரூபிக்க இவர்களே அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் ஆய்வுகளை வெளியிடுவதையும் செய்து வருகிறார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவில் 20 மில்லியன் மோர்மன் பிரிவினர் இருக்கிறார்கள். இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு மோர்மன் மதத்தினர் போட்டியிட்டிருக்கிறார். மோர்மன் மதத்தினரான மிட் ராம்னி. ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பலத்த ஆதரவு இருக்கிறது. இது ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா இந்தியா கொரியா போன்ற நாடுகளில் மோர்மன் மிஷனரிகள் மோர்மன் மதத்தை பரப்புகிறார்கள்.

மோர்மன் மதத்தினர் பெரும்பாலான கிறிஸ்துவ பிரிவுகளை போலவே tithing என்னும் தசமபாகத்தை அளிக்க வேண்டும்.  அதனை மோர்மன் சர்ச் எவ்வாறு செலவழிக்கிறது என்று எந்த மோர்மனும் கேட்கக்கூடாது என்றெல்லாம் சட்டம் வைத்துகொண்டுள்ளார்கள்.

http://mormonthink.com/tithing.htm

 

டெம்போரல் லோப் வலிப்பு நோயை பற்றி ராமச்சந்திரனின் உரை

Series Navigationதமிழகக் கல்வி நிலை பற்றிரம்யம்/உன்மத்தம்
author

ஆர் கோபால்

Similar Posts

2 Comments

  1. Avatar
    அப்துல் ஹக் says:

    அருமையான தொடர். பல விஷயங்களை சொல்லாமலேயே தெளிவு படுத்துகிறது.

    இது ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்க படங்களுடன் புத்தகமாக வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்

  2. Avatar
    தங்கமணி says:

    முகம்மது நபிக்கும் ஜோஸப் ஸ்மித் ஜூனியருக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கூட கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறதே.

Leave a Reply to தங்கமணி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *