வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். […]
கம்போங் புக்கிட் கூடா
வே.ம.அருச்சுணன் -மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் […]
அப்படித்தான்
வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை இரசித்தவாறு நடந்து செல்லும் அவர், அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் […]
மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை அவர்களின் ஆலோசனையுடன் ஏற்பாட்டுக்குத் குழுத்தலைவராக முன்னாள் சங்கத் தலைவரும், இன்றைய அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான திரு.பெ.இராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வின் செயலாளர் திருமதி.விஜயராணி செல்லப்பா நிகழ்வு தடையின்றி நடைபெற […]
பெண்டிர்க்கழகு
வே.ம.அருச்சுணன் மலேசியாமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்குமணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்தஉணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்குவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்குபெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல். மருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம்வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச்செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் […]
தைப்பூசமும் சன்மார்க்கமும்
வே.ம.அருச்சுணன் – மலேசியா தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம். அவரது பணி தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இனிதே அமைய வாழ்த்துவோம். இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு தரப்புகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.குறிப்பாக தைப்பூசத் திருவிழா தொடங்கிய நாள் முதல் அவ்விழா இனிதே முடியும் வரையில் […]
தண்ணீரிலே தாமரைப்பூ
சிறுகதை: 29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில் இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச் செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. நேற்றிரவு பெய்த கடும் மழையினால் சுமார் இரண்டு மீட்டர் அளவிற்குத் தோட்டமெங்கும் வெள்ளக் காடு. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த […]
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
வே.ம.அருச்சுணன் – கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா……….! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்…….! அக்கினி பூக்களாய்க் கருத்துக் கருவூலங்கள் நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய் நாட்டின் தலைமகன் தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன் ஆணவம் காணா அறிஞன் மனிதரில் மாமனிதர் மனுக்குலத்தின் பிதாமகன் முத்தானக் கருத்துக்கு மட்டுமே முகம் காட்டும் முகமூடி அணியா […]
பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே…..! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டது உனது பேனா முனைதான் கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது……….! வரம் பெற்ற உன் எழுத்தால் தமிழர் மனம் குளிர்ந்தது தமிழன் வீரம் உலகுக்குத் தெரிந்தது மருத்துவத்தால் உயிர்கள் காத்தாய் எழுத்தால் தமிழர் மானம் காத்தாய் அடக்கமாய் ஆயிரம் செய்தாய் அறிவால் உண்மைகள் பல் தந்தாய்………! உனை நினைத்தால் வீரம் பொங்கும் பெருமையுடன் இங்கே […]
மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே…..! இதுவென்ன கொடுமை…..? நாங்கள் என்ன குறை செய்தோம்……? பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்புதானே கொண்டாடினீர்………? நேற்று இருந்தோர் இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….! கிள்ளான் வாசகர் எழுத்தாளர் இயக்கம் இந்நாட்டு இலக்கியவாதிகளின் அரவணைப்பு இல்லம் அவ்வில்லத்தின் வரவேற்பு […]