பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

This entry is part 29 of 30 in the series 20 ஜனவரி 2013

  [ Gravity is an Illusion ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI [General relativity & Gravity] கட்டுரை : 92 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அஞ்ஞான உலகிலே இன்று விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு ! நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி பியூட்டி இழந்தது ! நிறைப் பளுவுக்கு ஏற்ப கோளின் காலவெளி வளைவு தான் ஈர்ப்பு விசை யென்று புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியும் இப்போது பொய்யாகப் […]

சொல்லித் தீராத சங்கிலி

This entry is part 28 of 30 in the series 20 ஜனவரி 2013

    எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை   கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி தாங்கும் தட்டு தடயங்களைக் காக்கிறது   ஒரு தண்ணீர்க் குவளை தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு என்னவோர் எழில் […]

பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்

This entry is part 1 of 30 in the series 20 ஜனவரி 2013

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் […]

ஒரு ஆன்மாவின் அழுகுரல்..

This entry is part 9 of 30 in the series 20 ஜனவரி 2013

  எஸ். ஹுசைன் மௌலானா 17வயதுச் சிறுமி அவள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் மரணதண்டனை வழங்கி சவூதி அரசாங்கம் சரிஆ சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை வழங்கி தீர்ப்புச் சொன்ன போது அவளுக்கு வயத 18 பூர்த்தியாகி இருக்கும். சவூதியின் சரிஆ( இஸ்லாமிய சரீஆ அல்ல அது) அதிகபட்சத் தண்டனையான மரணதண்டனையை வழங்கிய போது அது, ரிஸானாவின் வயதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. எத்தனையோ மனித உரிமை அமைப்புக்கள் வேண்டி நின்ற போதும் அத்தனையையும் வெகு சாதாரணமாக […]

தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்

This entry is part 27 of 30 in the series 20 ஜனவரி 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம் அமுதம் போல் நினைவுகள்  பொங்கி ! திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு சோகக் கண் ணீருடன் மௌனமாய்க் கூடி இணைந்த கோலா கலத்தில் ! அதன் பலாபலன் அந்தரங்க மாய் உதிக்கட்டும் இதயத்தின் புதுக் குரலாய் !   இனிப் போகும் பாதையில் நீ தனித்து விடப் படுவாய் ! கண்ணெதிரில் இருள் மயமாய் இருக்கும் பிரதிபலிக்கும் […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2

This entry is part 25 of 30 in the series 20 ஜனவரி 2013

​   வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி] ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” […]

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

This entry is part 24 of 30 in the series 20 ஜனவரி 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன். மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் […]

அக்னிப்பிரவேசம்-19

This entry is part 23 of 30 in the series 20 ஜனவரி 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com தன் தாயின் இரண்டாவது கணவனுடைய இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த பிறகு சாஹிதி தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள். தாங்க முடியாத அவமானம் என்ற புயலில் சிக்குண்டு அலைந்தது அவள் மனம். எவ்வளவுதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், ராஜலக்ஷ்மியின் வார்த்தைகளே செவியில் சுழன்று வந்து கொண்டிருந்தன. மம்மிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வேதனைப் படுவாள்? […]

வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்

This entry is part 22 of 30 in the series 20 ஜனவரி 2013

கோவிந்த் கருப் விமர்சனம் அல்ல.. படிக்க வேண்டிய சில புத்தகங்களின் அறிமுகமே… புத்தகம் 1: திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும்.. முதலில் மலர்மன்னனின் நிர்பந்தமற்ற, எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற எழுதும் முறைக்கு வந்தனம். கடந்தகால பக்கங்களை புரட்டிப்பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவற்றை எழுத்தில் வடிப்பவர்கள் மிக மிகச் சிலரே.. அதிலும், பாப்புலர் சிண்ட்ரோம் ஆட்டிப் படைக்காமல் எழுதுபவர்கள் மிக மிக மிக சிலரே.. அதில் ஒருவர் மலர்மன்னன்… காலத்தில் தான் கடந்து வந்த பாதையின் […]