தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.

This entry is part 1 of 13 in the series 22 ஜனவரி 2017

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன்           154. இறுதித் தேர்வுகள்.           ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் வந்தன. தேர்வு என்றாலே யாருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். அதை ஆவலோடு யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் என் நிலைமையே வேறு. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடன் ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்ற ஆவலே அதற்குக் காரணம். திருப்திகரமாக தேர்வுக்கு தயார் செய்திருந்தேன். பாட நூல்களை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்கவில்லையென்றாலும் வரக்கூடிய […]

65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.

This entry is part 2 of 13 in the series 22 ஜனவரி 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  ! பரிதிக்கு அப்பால் நகன்று பூமி சூடு தணியும் ! டைனசார்ஸ் மரித்தன நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் ! புதுவித உயிரினம் தோன்றும்  முதல் மானிடம் உதிக்கும் டைனசார்ஸ் மீண்டும் தோன்றவில்லை ! பிழைத்தவை பறவை இனம் ! பூமியின் ஆட்டத்தில் பொங்கி […]

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17

This entry is part 3 of 13 in the series 22 ஜனவரி 2017

கம்பன் கழகம், காரைக்குடி புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பழ. பழனியப்பன் தம் பெற்றோர் நூற்றாண்டு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை திரு கம்பன் அடிசூடி […]

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு

This entry is part 4 of 13 in the series 22 ஜனவரி 2017

முனைவர். மு.பழனியப்பன் பொருளர் கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்து் உள்ளோம்.அதன் தொடர்பான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன். ஏற்றுப் பிரிசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். செட்டிநாடும் செந்தமிழும் கருத்தரங்க அறிவிப்பு மடல்

இது கனவல்ல நிஜம்

This entry is part 5 of 13 in the series 22 ஜனவரி 2017

மு.ப. பாரத தேசம் பழம் பெரும் தேசம். நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் அவர் பெயர் அத்வான் பிகார் மாடிபாய். அவரின் செயல்கள் அமைதியும் ரகசியமும் பொதிந்தன. ஒருமுறை ஓர் ஊர் செல்வார். திரும்புவதற்குள் இன்னொரு ஊருக்கு அறிவிக்காமல் சென்றுவிடுவார். காவல் காப்பவர்களுக்கும் தூதர்களுக்கும் பெருத்த விழிப்புணர்வை அவர் தந்தார். வங்கிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவருக்கும் தலைமுறைக்காலப் பகை. எப்பொழுதோ ஒரு முறை அவர்வங்கிக்குச் சென்று கால்கடுக்க நின்றுவிட்டார். இதன் காரணமாக எல்லோரையும் வங்கிக்கு முன் நிற்க […]

ஏக்கங்களுக்கு உயிருண்டு

This entry is part 6 of 13 in the series 22 ஜனவரி 2017

சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் நான் இறங்கிய போது இரவு மணி 8. கிட்டத்தட்ட 24 மணிநேரம் பறந்து பூமியின் சுற்றளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்திருக்கிறேன். கழிந்து போன ஒரு நொடி மீண்டும் கிடைக்காதாம். கடிகாரம் பின்னோக்கி ஓடாதாம். யார் சொன்னது? என் கடிகாரத்தை 16 மணிநேரம் பின்னோக்கித் திருப்பிக் கொண்டேன். கனமான கம்பளிச் சட்டையை ஜாக்கெட் என்று சொல்கிறார்கள். கம்பளித் தொப்பி, தேவையானால் கையுரை. குளிரை எதிர்த்துப் போராடவே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் வாழ்க்கைப் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 7 of 13 in the series 22 ஜனவரி 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 19. கூறுவதவர்: சிங்கம், முதலை நடத்திடும் நீதி மன்றம் ! ஜாம்சையத் புகழெய்திக் குடித்தவர் ; பேராசை வேடன் பஃஹ்ராம் உளான்; காட்டுக் கழுதை தலைமேல் மிதிப்பினும், கலையா தவன் தூக்கம்! 19. They say the Lion and the Lizard keep The Courts where Jamshyd gloried and drank […]

இளஞ்சிவப்பு கோடு !

This entry is part 8 of 13 in the series 22 ஜனவரி 2017

அருணா சுப்ரமணியன் ஒரு நாள் தப்பினாலும் சோதித்துப் பார்க்கிறாள் கர்ப்ப சோதனை கருவியில் இரு கோடுகள் காண……. “இப்போதேவா ” என்று அலட்சியமாய் அழித்த அந்த இளஞ்சிவப்புக் கோட்டை கோடிகளைக் கொட்டியும் மீண்டும் வரைய “இப்போது வரை” முடியவில்லை… -அருணா சுப்ரமணியன்

‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக

This entry is part 9 of 13 in the series 22 ஜனவரி 2017

அன்புடையீர், ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்புத் தருணத்தில் ‘ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது. வெளியீட்டு விழாவிலும் பவளவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். காணோளி (Video) அழைப்பிதழை இணைப்பில் காண்க. […]

உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 10 of 13 in the series 22 ஜனவரி 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி; புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை அமைத்தல் ; சில இடங்களில் இருண்மையும் காணப்படுகிறது.சுயமான மொழிநடை சாத்தியமாகியுள்ளது. கவிதைகள் தலைப்புடன் உள்ளன. சில தலைப்பற்றவை. தலைப்பில்லாத முதல் கவிதை ‘ நினைவின் திரிகள் ‘ என்று தொடங்குகிறது. இக்கவிதை காதலின் இனிமையைப் பேசுகிறது. நினைவின் திரிகள் தனிமையிற் சுடரேறும். மௌனத்திலிருந்து திரள்கிறது உன் உரு — தொடர்ந்து இரண்டு படிமங்கள் பளிச்சிடுகின்றன். […]