ஒற்றன்

This entry is part 3 of 4 in the series 23 ஜூன் 2019

கு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள் திறக்கும் என் கண் வளர்க்கும் கனவுகளில் ஒரு கனவாய் நுழைந்து காணாமல் போகிறாய் நீ. ஒளிக்காது ஒரு முகத்தின் ஆயிரம் முகங்கள் காட்டும் என் அகக் கண்ணாடியில் ஒரு முகமும் காட்டாது ஏமாற்றி மறைந்து போகிறாய் நீ. என் குரலின் எத்தனையோ கிளைகளில் ஒலிக்கும் கூற்றுப் பறவைகளில் ஒலிக்காத ஒரு கூற்றாய்ப் பறந்து போகிறாய் நீ. என்னுள் என்னைப் போல் ஒளிந்திருக்கும் ஒற்றன் நீ யார்? கு. அழகர்சாமி

தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

This entry is part 4 of 4 in the series 23 ஜூன் 2019

மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ] Minjur Desalination PlantTamil Nadu [Click to Enlarge]   +++++++++++++++++++++ 1. https://www.slideshare.net/DrMuhammadNawaz/desalination-importance-challenges-opportunities.2.  https://www.aquatechtrade.com/news/aquatech-news/worlds-largest-desalination-plants/3. https://youtu.be/F8HcoXAuavk4. https://www.advisian.com/en-us/global-perspectives/the-cost-of-desalination#++++++++++++++++++++++++ நெம்மேலி, சென்னை உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையம்[ Nemmeli Desalination Plant, Chennai, Tamil Nadu ] +++++++++++++++++++++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் […]

இருள் கடந்த வெளிச்சங்கள்

This entry is part 2 of 4 in the series 23 ஜூன் 2019

மஞ்சுளா                             மதுரை ஒரு விளக்கை  ஏந்தியபடி  நின்று  கொண்டிருக்கிறேன் . யாருடைய  முகமும்  தெரியவில்லை . ஒரு நிழல்  மட்டும்  அசைந்தது அதுவும்  என்  சாயல்  விளக்கு  என்னை  விளக்கவில்லை  அது  பிறரின்  முகம் காண  மட்டுமே  வெளிச்சங்கள்  அவர்களுக்கான  போது இருள்  எனக்கானது                         -மஞ்சுளா     […]

இதற்கு பெயர்தான்…

This entry is part 1 of 4 in the series 23 ஜூன் 2019

மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை  நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது  எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர் இது சிதறுகிறதல்லவா.. அவன் விடாது கேட்டான்.. எவ்வளவு வேகத்தில் சிதறி விழும்.. மிதமானது முதல் மிகவேகமானது வரை.. கிடைமட்டமாகவா.. செங்குத்தாகவா.. செங்குத்தாக.. சில சமயம் சாய்வாக.. மேலே எப்படி நீர் செல்லும்.. யார் தூக்கிப் போவார்கள்.. அவன் விடுவதாயில்லை.. கதிரொளியால் உறிஞ்சப்பட்டு […]