ஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்

This entry is part 1 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஐ-ராக்கன்  கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் படங்களும் வீடியோக்களுமாக வந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. மனித நாகரிகத்துக்கே சவால் விடும் வகையில் கொடூரமாகத் தலையை வெட்டுவதும், கழுத்தை அறுத்துக்கொல்வதும், துப்பாக்கியால் போவோர் வருவோரைச் சுட்டுக்கொல்வதுமாக இருக்கும் படங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.  ராணுவ உடைகளிலும், சிவில் உடைகளிலும் ஈராக் மற்றும் சிரியா அரசாங்கத்துக்கு எதிராகத் தோன்றியுள்ள […]

வானம்பாடிகளும் ஞானியும்

This entry is part 2 of 24 in the series 13 செப்டம்பர் 2015

  வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து அறிமுகமானது. அன்று என் இருப்பிடம் என்னவென்று அறிந்த யாரோ ஒரு அன்பரின் சிபாரிசில். முழுக்க முழுக்க கவிதைக்கெனவே   வெளியாகும் இலவச இதழ் என்று சொல்லப்பட்டது. அதில் கவிதை எழுதி கவிஞர்களாக அறிமுகப்படுத்தப்பட்ட யாரையும் நான் அதற்கு முன் அறிந்தவன் இல்லை. அதன் […]

உள்ளிருந்து உடைப்பவன்

This entry is part 3 of 24 in the series 13 செப்டம்பர் 2015

  சேயோன் யாழ்வேந்தன்   வைத்தது யார்? அடைகாத்தவள் எங்கே? வளர்ந்துவிட்டேனா இல்லையா? வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது? எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் – அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்! seyonyazhvaendhan@gmail.com

பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’

This entry is part 4 of 24 in the series 13 செப்டம்பர் 2015

வளவ. துரையன் [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’ உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது அதன் காலடிகளில் சிக்கி நசுங்கித் தம் வாழ்வை இழப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுமே அறியா அப்பாவிகளாகவும் கிராமத்து மக்களாகவும்தாம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு  வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் சோகம் […]

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி

This entry is part 5 of 24 in the series 13 செப்டம்பர் 2015

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் அது. அப்போது அரசு பால் பண்ணையிலிருந்து கண்ணாடி பாட்டில்களில் பால் வரும். நீல/சிகப்பு கோடு போட்ட தகடு மூடி வைத்து பால் நிரப்பப் பட்டிருக்கும். தகர மூடிகளை எடைக்கு வாங்கிக் கொள்ள பழைய தகர வியாபாரி காத்திருப்பார். ஆனாலும் கறந்த மாட்டுப்பாலின் மவுசு போகாத காலம் […]

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்

This entry is part 6 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும் இரா. நாகேஸ்வரன்_ eswar.quanta  @ gmail.com   பஞ்சரத்தினம் யார்? சிவராமகிருஷ்ண பஞ்சரத்தினம், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ஒரு இயற்பியலாளர் ஆவார், அடிப்படையில் தமிழ் குடும்பமான அவர்கள், பஞ்சரத்தினத்தின் தந்தையின் வேலை நிமித்தம் வங்காளத்தில் வாழ்ந்தனர்.  இவர் சர் சி. வி. இராமனின் தங்கையின் மகனும் ஆவார்.  மிகச்சிறிய வயதில் சில ஒளியியற் சோதனைகளைச் செய்து அதில் மிக […]

BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES

This entry is part 7 of 24 in the series 13 செப்டம்பர் 2015

Jythirlatha Girija’s book in English titled BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES has been published by Cyberwit.net Publishers, Allahabad.. For information.

குப்பி

This entry is part 8 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம். அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம் மனமெங்கும் நிறைந்தது. குழந்தையையும், அக்காவையும் அறைக்கு கொண்டு வந்ததும், நான் குழந்தையை அருகில் சென்று […]

நாக்குள் உறையும் தீ

This entry is part 9 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி நெருப்பாக்குகின்றன சில நாக்குகள் கனலை அணைப்பதாய் எண்ணி தவறிப் போய் பெரும் நெருப்பை வருத்துகின்றன.. சில நாக்குகள் தீயை உமிழ முடியாமல் விழுங்கி தம்மையே எரித்துக் கொள்கின்றன மொத்தத்தில் எல்லா நாக்குகளிலும் உறைந்து கிடக்கின்றது தீ … —————————-

கண்டெடுத்த மோதிரம்

This entry is part 10 of 24 in the series 13 செப்டம்பர் 2015

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா? ஓர் ஆசரீரி கேட்கிறது என் தேவைகளைச் செய்ய தேவதை எனக்குத் தந்ததாம் இப்போது மனவெளி மேய்வது மோதிரம் மட்டுமே தெரியவந்தது உண்மை அது வைரமில்லையாம் வெறும் கண்ணாடித் துண்டாம் மோதிரத்தைக் கேட்டேன் ‘என் தேவைகளைச் செய்ய தேவதை தந்ததென்றது பொய்யா?’ மோதிரம் பேசியது தேவதை […]