பாரதியும் புள்ளி விபரமும்

This entry is part 8 of 11 in the series 8 செப்டம்பர் 2019

-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது  அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம்.  நூறாண்டு  காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம்  எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த விபரம்  எவ்வளவு  மாறியிருக்கிறது,  மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கவும்  தோன்றுகிறது. பாரதி 1908-இல் எழுதிய பாட்டு “எங்கள் தாய்”. […]

ஆகச்சிறந்த ஆசிரியர்

This entry is part 9 of 11 in the series 8 செப்டம்பர் 2019

நவின் சீதாராமன் ஆகச்சிறந்த ஆசிரியர் ! ஆம்… நான், என் முந்திய தலைமுறை, பிறகு எனக்குப் பிந்திய தலைமுறை… ஆக மூன்று தலைமுறையினரும் அன்போடு அழைக்கும் “பொிய சார்” இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியில் நான் உட்பட அனைத்துத் தலைமுறையினரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஏன்… அதெப்படி சாத்தியம் ….. ஓர் ஆசிரியர் தன் வாழ்நாட்கள் முழுக்க சுமார் 35-36 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்ததால் இந்த மூன்று தலைமுறையினரும் அவருடைய மாணாக்கர்கள். இந்த […]

யாவையும் உண்மை

This entry is part 10 of 11 in the series 8 செப்டம்பர் 2019

கௌசல்யா ரங்கநாதன்          —–-1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,மண் சோறு தின்று, அன்னதானம் செய்து, சுமங்கலிப் பெண்டிருக்கு புடவைகள், ஜாக்கெட்டுகள் வாங்கி கொடுத்து, அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் உதவிகள் என்று என்ன, என்னவெல்லாமோ செய்து பிறந்து, மூன்றே மாதங்களான எங்கள் பெண் குழந்தை ரமாவை எப்படியெல்லாம் சீரும், சிறப்புமாய் […]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்

This entry is part 11 of 11 in the series 8 செப்டம்பர் 2019

நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது….. அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை. அறுபது வயதில் நானிருக்கும்போது அந்த ஆறு வயதுச் சிறுமியின் புகைப்படம் எப்படி நானாக முடியும்? எழுதும் ஒரு கவிதை வரியில் நான் முளைத்தெழும் விதையாகிவிடமுடியும்தான்…… நானிலிருந்து நானற்றதையும், நானற்றதிலிருந்து நானையும் பிரித்துக்காட்டிப் பின்னிப்பிணைக்கும் கவிதையில் தெரிவதெல்லாம் நான் மீறிய நான். ஆனால், ஓர் ஆடியிலோ, அல்லது […]

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

This entry is part 7 of 11 in the series 8 செப்டம்பர் 2019

முல்லைஅமுதன் அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம்.அவ்வளவே.காலை,மாலை,இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள்  மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை..விறாந்தை முழுக்க ரத்தம். அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது. அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள். ‘உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் […]

தமிழ் நாடகம் – உள்ளிருந்து

This entry is part 6 of 11 in the series 8 செப்டம்பர் 2019

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நாடக ஆர்வலர்களுக்கும் அறியத் தாருங்கள். உங்கள் வரவும் கருத்தும் எம்மை மேலும் வளப்படுத்தும்.

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் ஒன்று

This entry is part 5 of 11 in the series 8 செப்டம்பர் 2019

அழகர்சாமி சக்திவேல் உலகம் முழுதிலும் இருந்து, அச்சடிக்கப்படும் பணத்தாள்களுக்கு சிவப்பு, நீலம் என பல்வேறு வண்ணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலவே பணத்திற்கும் பல்வகை வண்ணங்கள் இருப்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. ஒரு சிலருக்கு கறுப்புப்பணம் என்றால் தெரியும். சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டிச் சேர்த்து வைக்கும் பணம் எல்லாம் கறுப்புப்பணம்தான். அதே நேரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையாய் சம்பாதிக்கும் பணத்தை, நாம் வெள்ளைப் பணம் என்கிறோம். இத்தோடு பணத்தின் நிறவகைகள் நின்று போகிறதா […]

இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது

This entry is part 4 of 11 in the series 8 செப்டம்பர் 2019

. FEATURED Posted on September 8, 2019 சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில்  தகவல் அனுப்பத் தவறியது.  [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.] ++++++++++++++++ https://youtu.be/q7Omv4EX8RM https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270 https://youtu.be/phN5S9cHeWM https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html https://youtu.be/sd6grEvZn1A https://youtu.be/ANyg9VGSqbY +++++++++++++++++++++ நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி சந்திரயான் -2  மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் […]

மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019

This entry is part 3 of 11 in the series 8 செப்டம்பர் 2019

                நாகரத்தினம் கிருஷ்ணா அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட ……. நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். […]

முடிச்சுகள்

This entry is part 2 of 11 in the series 8 செப்டம்பர் 2019

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது. அந்த ராஜேந்திரபுரம் கிராமத்தில் கிட்டத்தட்ட பாதிக் கிராமம் அருணின் குடும்பச் சொத்து. 5 அண்ணன்மார்கள் , அண்ணிகள் 3 அக்காள் குடும்பம், அப்பா வழி தாத்தா பாட்டி, அம்மா வழிப் பாட்டி,  25 பொடுசுகள், பண்ணையாட்கள், […]