
(Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம்
ஆடவன் கடமை
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.
அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.
****************
(ஈரேழ் வரிப்பா – 11)
++++++++++++++++
ஆடவன் கடமை
++++++++++++++++
தேய்வது நீ எந்த விரைவிலோ சந்ததி விருத்தி அந்த வேகத்தில்
சேய் ஒன்றை உன் வடிவில் படைத்து விட்டு நீ மரிக்கிறாய்
புது இரத்த வாரிசு தன்னை வாலிபன் நீ பெற்றுத் தருகிறாய்
உனக்குப் பின்வரும் சந்ததி உறவெனக் கூறுலாம் உன் வாரிசாய்,
அவ்விதம் ஏற்கும் முதிர்ச்சி அறிவு, அழகு மிகும் வளர்ச்சி
அவ்விதி மீறல் அறிவீனம், ஆயுள் வீணாய்த் தேயும் வயது.
அப்படி யாவரும் உன்போல் இருப்பின் காலமும் நின்று விடும் !
முப்ப தாண்டு ஆயுள் முடிவு கட்டும் மக்கள் உலகை !
எதிர்காலச் சந்ததிப் படைப்பு இயற்கைக் கொரு சேமிப்பு
தீவிரம், குறிக்கோள் இன்மை, கடுமை சூனியமாகி அழியும்
எவர்க்கு அளிக்கும் இயற்கை உயர்ந்த பண்பபை மிகுந்த அளவில்
பரிவொடு கொடுக்கும் இயற்கை வாலிப ருக்கு வெகுமதி
மாதிரிக் குன்னைத் தன் முத்திரை ஆக்கிடும் இயற்கை
உன் வாரிசுப் பதிப்புகள் மிகுப்பாய், மூலப் பிரதி மாளாது !
+++++++++
Sonnet : 11
As fast as thou shalt wane, so fast thou growest
In one of thine, from that which thou departest;
And that fresh blood which youngly thou bestowest
Thou mayst call thine when thou from youth convertest.
Herein lives wisdom, beauty and increase:
Without this, folly, age and cold decay:
If all were minded so, the times should cease
And threescore year would make the world away.
Let those whom Nature hath not made for store,
Harsh featureless and rude, barrenly perish:
Look, whom she best endow’d she gave the more;
Which bounteous gift thou shouldst in bounty cherish:
She carved thee for her seal, and meant thereby
Thou shouldst print more, not let that copy die.
++++++++++++++
Sonnet Summary : 11
This takes up the same argument as sonnet I, and indeed it is a sonnet that can hardly stand on its own because ‘if all were minded so’ implies that we know already how the youth is minded to behave, information which we only derive from what has gone before.
‘Youth rapidly wanes, but this decrease may be made up by the children that a young man may beget. Otherwise all are doomed to age and decay. Since you are manifestly so beautiful, let the fate of dying out be left to barren, harsh and sullen souls. You are so well endowed by nature, that it is clear she intended you to be a seal, from the impress of which many copies should be made’.
++++++++++++++++
Information :
1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-
3. http://www.sparknotes.com/
4. http://www.gradesaver.com/
5. http://www.gradesaver.com/
6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)
+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 14, 2012
+++++++++++++
- இந்த வார நூலகம்
- இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)
- ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘
- கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..
- காய்க்காத மரம்….
- அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்
- ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்
- ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்
- மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை
- கூந்தல்
- நன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- பாதியில் நொறுங்கிய என் கனவு
- வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்
- அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை
- மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:
- “நிலைத்தல்“
- பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்
- சாதிகள் வேணுமடி பாப்பா
- முன்னணியின் பின்னணிகள் – 32
- ‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- வளவ. துரையனின் நேர்காணல் – 2
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று
- பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்
- சத்யசிவாவின் ‘ கழுகு ‘
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்
- நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?
- அன்பளிப்பு
- நவீன புத்தன்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55