author

இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்

This entry is part 12 of 12 in the series 4 அக்டோபர் 2020

சின்னக்கருப்பன் அகழ் இதழ் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன். இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை அறிந்துகொண்டேன். போர்களும் அதன் வலிகளும் மிகப்பெரிய உணர்வுந்தலை அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டவரின் உள்ளத்தில் உருவாகிறது. அங்கிருந்து மிகப்பெரிய இலக்கியங்களும், நேர்மையான பதிவுகளும் உருவாகியிருக்கின்றன. இந்த கால கட்டத்தின் தமிழ் இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் […]

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

This entry is part 15 of 16 in the series 20 செப்டம்பர் 2020

சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம். இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை. மெல்லத்தமிழினிச் […]

தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

This entry is part 11 of 11 in the series 13 செப்டம்பர் 2020

. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]

ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

This entry is part 23 of 23 in the series 26 ஜூலை 2020

சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக  துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு,  துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது.  துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா சோபியா இருக்குமிடம், ஒரு வக்ப் நிலம் என்பதால், அவ்வாறு அந்த மசூதியை மியூஸியமாக அறிவித்தது தவறு என்று வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 1934ஆம் வருடத்தில் செய்த மாற்றம் செல்லாது என்று அறிவித்தது. பின்னர் துருக்கிய […]

இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)

This entry is part 16 of 20 in the series 19 ஜூலை 2020

சின்னக்கருப்பன் கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் புதுமைப்பித்தன் பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.உங்கள் கருத்துக்களை அந்த நிகழ்வு பின்னூட்டமாகவும் இடலாம். திண்ணைக்கும் அனுப்பி வைக்கலாம். புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும் பற்றிய கதை பற்றிய கோபால் ராஜாராம் அவர்களின் பார்வை அந்த கதைக்கான ஒரு திறவுகோல். அது மட்டுமல்ல, இந்திய ஆன்மீகம், இந்திய நுண்ணுணர்வு, இந்திய கலாச்சார பின்புலத்தில் கடவுள் எவ்வாறு மனிதனால் பார்க்கப்படுகிறார் […]

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

This entry is part 6 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார். அரசியல் ரீதியில் அவர் இரண்டு விசயங்களை பேசியிருக்கிறார்.ஒன்று தலித் நீதிபதிகள் நியமிகப்பட்டது திராவிட இயக்கத்தின் பிச்சை என்று சொல்லியிருக்கிறார்.இரண்டாவது பத்திரிக்கைக்காரர்கள் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு விலைபோவதாக குறிப்பிட்டிருக்கிறார். இரண்டுமே இன்றைய தமிழகத்தில் “சரியற்ற அரசியல்” politically incorrect. இரண்டையுமே பேச கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் […]

குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

This entry is part 8 of 8 in the series 15 டிசம்பர் 2019

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. […]

பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

This entry is part 7 of 7 in the series 17 நவம்பர் 2019

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தி இன்று அனைத்து ஊடகங்களின் பிரச்சாரம் செய்யப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது திமுக ஆதரவு – அதிமுக அரசு எதிர்ப்பு – பாஜக எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்பு. இந்த திமுக ஊடக கூக்குரல்களின் அரசியலுக்கு எது உதவும் என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே ஊதி பெரிதாக்கப்படுகிறது. எது உதவாது என்று திமுகவினர் கருதுகிறார்களோ அது இங்கே அமுக்கி மூடப்படுகிறது. இது அனிதா மரணம், நீட், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, சுஜித் […]

தமிழ்நாட்டில் திமுக அணி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி எதனை காட்டுகிறது?

This entry is part 7 of 7 in the series 26 மே 2019

விடையை ஏற்கெனவே எழுதிவிட்டேன். http://puthu.thinnai.com/?p=38590 ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள் //நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும் சார் என்று மக்கள் சொல்லும் வீடியோக்கள் பரவலாக இருக்கின்றன. இதனை பார்த்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் காரர்களும், திமுகவினரும் ஸ்டாலினும், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் பரவச நிலையை எய்துகிறார்கள். அதிமுக கூட்டணியினர் மனம் வெம்புகிறார்கள். […]

கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்

This entry is part 11 of 14 in the series 19 மே 2019

2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது. உண்மையா என்று தேடிப்பார்த்தேன். இணையத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. விக்கி இணையப்பக்கம். https://en.wikipedia.org/wiki/Saffron_terror (விக்கி இணையப்பக்கத்தை நான் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் செய்தி தொகுப்பாக எடுத்துகொள்கிறேன்) 2008இல் மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அதில் சம்பந்தப்பட்டவர்களாக சில […]