author

அம்மாகுட்டிக்கான கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ———— கால்களையும் கைகளையும் மெதுவாய் வேகமாய் அசைத்து காற்றில் நீயெழுதும் எழுத்துக்களைச் சேர்த்து வாக்கியமாக்கி ஒழுங்குபடுத்தி வாசிக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டேயிருக்கும் என்னை வெற்றிபெறச் செய்கிறாய் உன் புன்னகையால்… ————— தூக்கத்திலும் விழிப்பிலும் துளியளவும் வேறுபாடில்லை உன் புன்னகை செய்யும் மாயத்தில் —————- உனைத் தூங்க […]

தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை

This entry is part 22 of 26 in the series 24 பிப்ரவரி 2013

– இவள் பாரதி எப்போதும் தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான் வீசப்படுகின்றன எதிர்கொள்கிற என்னிடமிருக்கும் பஞ்சுபோன்ற வார்த்தைகள் பற்றி எரிகிறது பலத்த சத்தத்துடன்.. அந்த நெருப்புப் பொறியில் எல்லோரையும் பற்றும் தீ கடைசியில் சாம்பலாகிறது கொஞ்சம் சமாதானத்துடனும் நிறைய சச்சரவுகளுடனும்

இவள் பாரதி கவிதைகள்

This entry is part 27 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன் எதிராளி அறியாமல் கலைத்து முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ அத்துடன் முடிக்கவோ துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று… ============= நிலத்தில் விழவும் நீரில் விழவும் நிழல் மறுக்கிறது.. காற்றில் பரவவும் உடலெங்கும் விரவவும் சுவாசம் திணறுகிறது ஆயுதம் […]

மரணம்

This entry is part 16 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இவள் பாரதி நான் கொலையுண்ட நேற்றிலிருந்து மழை முகிழ்க்கும் கார் மேகங்கள் கலைந்துவிட்டிருந்தன.. நான் மண் சரிந்த கணத்திலிருந்து பூமித்தாயின் ஓலம் வானமெங்கும் எதிரொலிக்கிறது நான் வெட்டப்பட்ட மாலையிலிருந்து காற்றிலிருக்கும் பிராணவாயு நின்றுவிட்டது.. என் உறுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபோது என்னைக் கடந்து சென்றோருக்கு எந்த குற்றவுணர்வோ இரக்கமோ கூட இருக்கவில்லை.. இதற்கு மேல் ஒரு இனத்தின் மரணம் குறித்து பேச ஒன்றுமில்லை

இவள் பாரதி கவிதைகள்

This entry is part 7 of 40 in the series 12 பிப்ரவரி 2012

இவள் பாரதி நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன் எதிராளி அறியாமல் கலைத்து முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ அத்துடன் முடிக்கவோ துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று… ============= நிலத்தில் விழவும் நீரில் விழவும் நிழல் மறுக்கிறது.. காற்றில் […]