author

இந்த கிளிக்கு கூண்டில்லை

This entry is part 18 of 25 in the series 3 மே 2015

  மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று இடைவெளி கொடுத்திருந்தது. இருண்ட மேகங்கள் சற்றே நகர்ந்தில் பகல்; பளிச்சென்றிருந்தது. மரங்களின் இடையே புகுந்த காற்று சிலிர்ப்பான அசைவுகளாய் வெளியேறிக் கொண்டிருந்தது. தோட்டத்துடன் கூடிய வீடு.  கதவை திறந்து வெளியே வந்தாள் வினயா. கனத்திருந்த […]

பிரசவ வெளி

This entry is part 31 of 31 in the series 11 ஜனவரி 2015

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு புறங்கை நரம்பின் வழியே குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் […]

அவனும் அவளும் இடைவெளிகளும்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின் ஒவ்வோர் இடமும் தூய்மையால் நிறைந்திருந்தது. சிறிய அளவிலான தோட்டம் பராமரிப்புகளால் நிரம்பியிருந்தது. முன் வராந்தாவில் செருப்புக்கென ஒதுக்கியிருந்த சின்ன ரேக்கில் ஒரேயொரு ஜோடி பெண்களுக்கான செருப்பு மட்டுமே இருந்தது. கூடியிருந்த கூட்டத்தின் செருப்புகள் சிதறல்களாக […]

கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 6 of 25 in the series 14 செப்டம்பர் 2014

அமுதசுரபி – மே 2013 “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா…” வீட்டுக்கு பக்கத்திலேயே பெட்டிக்கடை இருப்பது ரொம்ப சவுகரியமாக போய் விட்டது. “நேத்து இட்லிக்கு மாவு அரைக்கலைன்னு தங்கச்சி சொல்லுச்சு… இந்தாப்பா… இட்லி மாவு ஃபிரெஷ்ஷா இருக்கு.. எடுத்துட்டு போப்பா…” உரிமையோடு இட்லி மாவு […]

நீர் வழிப்பாதை

This entry is part 18 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி.. மதம்.. இனம்.. மொழி.. மாநிலம்.. என்ற எந்த பாகுபடுதலுமின்றி தார்மீக நியாயங்களின் அடிப்படையில் நியாயம் செய்திருக்கிறேன் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு. அதை எந்நாளும் தொடர செய்ய வேண்டும் என்பதில் ஏற்பட்ட பதட்டம் தான் இந்த நெருடலோ என எண்ணிக் […]

கிழவியும், டெலிபோனும்

This entry is part 18 of 20 in the series 23 பெப்ருவரி 2014

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..” “அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு…” பட்டணத்துல இருக்குற மூத்தவளுக்கும் பக்கத்து டவுன்ல இருக்குற பெரியவனுக்கும் சின்னவன் அழகேசு வீட்லேர்ந்து தகவல் சொல்லியாச்சு. சின்னவ தனம் இந்தூருலயே வாக்கப்பட்டுருக்கா.. அவ தான் அம்மா செத்ததுலேர்ந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு கெடக்கிறவ.. “நாலு புள்ள பெத்து போட்டு… நல்லா தான் வாழ்ந்தீயே..                                            நேத்து […]

மயிரிழையில்…

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின் சந்தோஷமெல்லாம் இந்த முயற்சியிலேயே வடிந்து விட்டது. இது ஒரு விருந்துக்கான ஏற்பாடு என்றில்லாமலேயே விருந்தாகி இருந்தது. வெள்ளிக்கிழமை. மதிய உணவு நேரம். அலுவலக நண்பன் சந்துருவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலு. கத்தரிக்காய் சாம்பார், பீர்க்கங்காய் […]

வலி

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

(தினமணி – நெய்வேலி புத்தக்கண்காட்சி – முதல்; பரிசுக் கதை – 14.07.2013_ சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலுக்குள் ஐக்கியமாகியது. பெண்கள் ஆங்காங்கே இருந்த அறைகளில் பரவினர். நடுக்கூடத்தில் மாமியாரின் உடலருகே சூன்யத்தை வெறித்தப்படியே உட்கார்ந்திருந்தாள் புவனேஸ்வரி. திருமணமாகி வந்த நாளிலிருந்தே அதிகாரங்கள் மையப்படுத்தப்படாததால் மாமியாருடன் சொல்லிக் கொள்ளும்படியான எந்த பிணக்கும் […]

நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது. ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக […]

கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 19 of 27 in the series 29 செப்டம்பர் 2013

கலைச்செல்வி “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா…” வீட்டுக்கு பக்கத்திலேயே பெட்டிக்கடை இருப்பது ரொம்ப சவுகரியமாக போய் விட்டது. “நேத்து இட்லிக்கு மாவு அரைக்கலைன்னு தங்கச்சி சொல்லுச்சு… இந்தாப்பா… இட்லி மாவு ஃபிரெஷ்ஷா இருக்கு.. எடுத்துட்டு போப்பா…” உரிமையோடு இட்லி மாவு பாக்கெட்டை எடுத்து வைத்த […]