தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்

This entry is part 8 of 29 in the series 18 நவம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தனியாக, அறியாமல் நீ
தடாகத்தில் அமர்ந்து காரண மின்றித்
ஒவ்வொன் றாய்க்
தாமரை இதழைக் கொய்து எடுத்தாய் !
சில வேளை, அந்தோ நீ
செய்ய மறந்தாய் ! அப்போது நான்
தாமரைப் பூ பறித்து உன் பாதம்
சமர்ப்பித்தேன்
காலைப் பொழுதில் ஏது
காரண மின்றி !
அவ்விடம் விட்டு நான் அகன்ற பின்
அதை எடுத்துக் கொண்டாய்
அறியாமலே நீ !

இதுபோல் எனது நாட்கள்
இழந்து போயின நிரந்தரமாய்,
ஒன்றன் பின் ஒன்றாக
உன் கையால் பறிக்கப் பட்டு !
அந்த உன் திருவிளை யாடலில்
அப்படி நாட்கள் ஓடின !
இதுபோல் ஓய்வுப் பொழுதுகளில்
உன் கவனிப் பற்று
திருப்ப மாகி, அறியாமல்,
ஓரக் கண்ணில்
நீர் துளிர்க்கச் சோக முறுவாய்
ஒரு வேளை
இருள் வேளை வரும் போது !

+++++++++++++++++++++++++
பாட்டு : 284 1922 ஜூலை 4 இல் தாகூர் 61 வயதினராய் இருந்த போது, எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore,
Oxford University Press, Translated from Bengali & Introduced
By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 12, 2012

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2நினைப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *