தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !

This entry is part 19 of 26 in the series 17 மார்ச் 2013

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உனக்குத் தெரியாமல் போனது

என்னைப் பற்றி !

அதுவும் நல்லதே ! அதுவும் நல்லதே !

அப்பால் நீங்குவ தற்குப் பதிலாய்

அருகி லிருந்து நீ யெனக்கு

அளிப்பது வேதனை !

திக்கு முக்காடச் செய்வதேன் நீ

பக்கத்தில் அமர்ந்து !

என் வசந்த காலம்

ஈர்த்துக் கொள்ளும் மெய்யாக

இசைத் தொனியை !

மூங்கில் மரத் தோப்பு நிழல்

ஓங்கி வளர்க்கும் இனிய உணர்ச்சி !

ஏனிந்த மாதிரி தீவிர வாசனை

இருந்து விடக் கூடாது ?

பயணத் தோப்பாய்க் காதல ருக்கு

தயாராய் இருக்கும் இது !

உன்னாசை விழிகளிலே

ஓடி விளையாடும் குசும்புத்தனம்

எனக்கு

இரகசிய மாய்த் தெரியுது !

புயல் வருவதற்கு முன்னே உன்

புடவை முந்தானை

படபடப் பதைப் பார்க்கிறேன் !

தாறு மாறாய்ப் பறக்கும்

உனது கூந்தல் !

எனக்கும் உனக்கும் இடையே

இருப்பதை

உரைக்க முடியாது !

என் ஆத்மாவில்

ஒளிந்திருக்கும் அந்த அறிவுரை !

எனது

புல்லாங்குழல் பொழிந்திடும்

சொல்ல முடியாத

சுவையை !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 190 1926 ஏப்ரல் மாதம் தாகூர் தன் 64 வயதில் சாந்திநிகேதனத்தில் எழுதி [19-21 Chaitra 1332 BS] வெளியானது.

+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 12, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமூக்குவிட்டில் பூச்சிகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *