அடைமழை!

This entry is part 10 of 37 in the series 18 செப்டம்பர் 2011


அடைமழை பெய்து

அப்போதுதான்

ஓய்ந்திருந்தது!

 

அலுவலகம் முடிந்து

வீடு திரும்புவதற்காய்

சாலையோரமாய் நடந்தேன்!

 

என் கைகுலுக்கிவிட்டு

தேநீர் அருந்தச் சொன்னது

தென்றல்!

 

ஸ்ட்ராங்காய்

ஒரு டீ குடித்தவுடனே

மீண்டும் கிளம்பினேன்

சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த

நடராஜா சர்வீசில்…!

 

பூக்கடைப் பெண்மணி

உரக்கக் கூவினாள்

‘நான்கு முழம்

பத்து ரூபா…

நான்கு முழம்

பத்து ரூபா…’

என்று!

 

கடந்து போகயிலே

அவள் முகம் பார்த்தேன்

கூவியபடியே

அவள் கண்கலிளிருந்து

மீண்டும் வலுத்தது

அடைமழை…!!

Series Navigationஅகஒட்டு( நாவல்)விமர்சனம்தேடல்
author

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

Similar Posts

Comments

  1. Avatar
    முனைவென்றி நா சுரேஷ்குமார் says:

    கண்களிலிருந்து என்பதற்குப் பதிலாக கண்கலிளிருந்து என பிழையாக type செய்து அனுப்பி விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *