அந்த நொடி

This entry is part 12 of 38 in the series 20 நவம்பர் 2011

அந்த நொடி
எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது
அந்த நொடி
எதை கொண்டு நிரப்ப அதை
நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு
அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை

கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும்
கொண்டு நிர்ப்பிவிடலமா?
மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது!

பதற்றமான பல பொழுதுகளில்
உன்னை நிரப்பும்
அந்த நொடியை நினைத்தே
மலைத்து போகிறேன்

தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை
தேடாத பொழுதுகலால் உன்னை நிரப்பும் சாத்தியமும் இல்லை
களவாடவும் முடியாது போனதால்

எப்போதும் என்னை பின்தொடர்கின்றது
அந்த நொடி
அடர்ந்த சூன்யத்தின் வெறுமையாக

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 19முள் எடுக்கும் முள்
author

உமா ஹரிஹரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *