அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,

author
23
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

வீரபாண்டி

 

நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம்.

உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல…

மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது.

புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும்.

 

ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு உண்டு.

பாடிப் பரிசு பெறும் புலவன் முன் காலத்தால் வெல்லும் கருத்துக்களை மட்டுமல்ல மாற்றத்தையும் தர முடிந்தவனே கவிஞன்.

அதுவும் நீங்கள் கவிப்பேரரசு…

 

உங்கள் பேரரசுவில் நடக்கும் ஒரு அக்கிரமத்தை நீங்கள் அரம் பாடி அழிக்க வேண்டும்…

மீண்டும் அறம் தளைக்க எழுத வேண்டும்.

 

நீங்கள் நீராகாரத்தில் வாழ்வு தொட்ங்கியவர்.

 

நீரின்றி அமையாது உலகு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், உங்கள் மூதாதையர் வாழ்வோ நீரால் அழிந்தது வரலாறு.

ஆம், வைகை அணையில் கட்டுமானத்தில் மூழ்கடிக்கப்பட்ட கிராமங்கள் பலதில் உங்கள் ஊரும் ஒன்று.

 

அப்படியெனில் உங்கள் வெறுப்பு நீருடன் தானே இருக்க வேண்டும்…?

ஏன், கரிசக்காட்டு மேல்..? புஞ்சைக் காடுகள் மேல்..?

உங்கள் கண் முன்னே… உங்கள் மண் தோண்டப்படுகிறது…

பாறைகள் உடைக்கப்படுகின்றன்..

 

பொக்லைன் எனும் பூதத்தால் மலைகள் விழுங்கப்படுகின்றன….

 

கண்மாய்களோ வெட்டிய கற்களின் மிச்சத்தால் கண் முன் மாயமாகின்றன…

 

பஞ்சமா பாதகர்கள் நமது பூமித்தாயை மதுரை கொத்து புரோட்டா மாதிரி கொத்தி கொத்தி போடுகிறார்களே..

அது உங்கள் கண்ணில் படவில்லையா..?

 

எந்தக் கவிஞனுக்கும் கிடைக்காத அளவு அதிகாரமட்டத்துடன் உங்களுக்கு தொடர்பு உண்டே…

 

நீங்கள் ஒரு வரி எழுதினால் அது அரசாணையாக ஆக்க ஒரு ஆட்சி இருந்தது…

நீங்கள் இந்த மதுரை நில அழிப்பிற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை…?

உலகம் என்பது என்ன “ஹல்திராமில்” விற்கும் லட்டு உருண்டையா..?

அது உள்ளூரையும் அடக்கியது தானே…?

உள்ளூரில் ஒரு தெருவில் ஒருவனோ அல்லது ஒருத்தி கண்ணீர் துளியோ தொடங்கி வைப்பது தானே உலகப்போராய் மாறுகிறது…

 

இதோ நாசம் செய்யப்பட்ட மதுரை பூமி ,

கண்ணீரும் கம்பலையுமாய் கதறிக் கொண்டு…

எங்கிருந்தோ வந்த ஒரு பிள்ளை சகாயம்

கலெக்டர் உருவத்தில் காக்க வந்த போது

கயவர்கள் அவனை தூக்கி அடித்த போது,

அவன் எழுதி வைத்துச் சென்ற ஓலை ஒன்று

 

இன்று–

 

யாதுமாகி நிற்கும் காளி – ஜெயலலிதாவால்

கட்டளையாக மாறி ,

விரட்டி விரட்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டு…

 

இதில், மதுரை மண்ணின் பொக்கிஷம் நீங்கள்

உங்கள் மண் காக்க என்ன செய்யப் போகிறீர்கள்…????

 

கிரானைட் அதிபர்களின் விருந்துகளில்

உங்கள் கோப்பைகளில் நிரப்பப்படுவது

மதுரை மண் கிழிக்கப்பட்ட போது வந்த

பூமித்தாயின் ரத்தம்..

 

உங்கள் தட்டுக்களில் போடப்படுவது

மதுரை புரோட்டா அல்ல,

கொத்திக் குதறப்பட்ட அவளின் தேகம்…

 

காலையில் கூழ் குடிக்கும் போது அதில் அதிகமாய் தெரிவது உப்பு அல்ல

அவளின் கண்ணீர்…

 

வாருங்கள், இந்த கயவர்கள் மேல் அரம் பாடுங்கள்…

மூன்றாம் உலகப் போர் புத்தகம் முப்பது பதிவுகள் காண்பதை விட,

நீங்கள் பாடும் அரத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், எல்லா திசை மனிதர்களும் துணையிருப்பர்.

 

உங்கள் தமிழின் சத்தியம் உலகறிய இதோ உங்களுக்கு ஒரு விண்ணப்பம்…

ஒரு தனி மனித விருந்து சுகத்திற்கு

பலியாகும் புலவனில்லை நீங்கள்..,

 

பொது மனித வர்க்கத்திற்கு நீங்கள்

காலம்காக்கும் கவிஞன் என்று அழைக்கிறோம்…

இயற்கையை அறுத்துத் தள்ளும்

அவர்கள் மேல்

அரம் பாடுங்கள்…

Series Navigationமுன் வினையின் பின் வினைவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
author

Similar Posts

23 Comments

  1. Avatar
    venkates says:

    the complimenting adjectives given by the essayist do not have any pleasure if these are entitled to such a person like vairamuthu ,he is a cunning fox like karunanithy.if there is any possibility to make money ,they are ready to slain anything ,whatso if it is mothertown or.?????

  2. Avatar
    arkswamy says:

    Very effectively brought the feelings of common persons like us. Please email to Mr. Vairamuthu making him to wake up from the sleep and join hands to expose the culprits and save our mother land from the ongoing onslaughts.

  3. Avatar
    Kavya says:

    கட்டுரையாளர், ‘யாதுமாகி நின்றாய் காளி!’ என்று ஜெயலலிதாவைப் புகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்?

    மதுரை கிரானைட் கொள்ளை என்பது மக்களனைவருக்கும் தெரியும் ஆனால் சஹாயம் கடிதத்துக்குமேல் கடிதம் ஜெயலலிதாவுக்கு வரைந்தார் என்பது தெரியாது. ஜெயலலிதா ஒன்றுமே செய்யவில்லை. அக்கொள்ளையருக்கு உடந்தை அரசியல்வாதிகள்.

    இதற்கிடையில் திண்ணையில் மலர்மன்னன் கட்டுரையில் பின்னூட்டம் போட்ட இந்துத்வாவாதி, சஹாயம் கிருத்துவர் எனவே ஊழல் பேர்வழி என்றெல்லாம் வசைமாறி பொழிந்திருக்கிறார்.

    சஹாயம் இரு விடயங்களுக்காக பழிவாங்கப்பட்டார்: ஒன்று கிரானைட் கொள்ளையர்களைப்பற்றி ஜெக்கு கம்பிளெயிண்ட் போட்டது, இரண்டாவது, மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றி விதியை மீறி எழுப்பப்பட்ட பல்லடுக்கு அக்கட்டிடங்களை இடிப்பேன் என நோட்டிஸ் விட்டது. அக்கட்டிடங்கள் பெரும் ஜுவல்லர்களுக்கு சொந்தமானவை.

    சஹாயத்தின் கடிதங்கள் வெளிதெரியாமலிருந்து கொண்டிருக்க, அரசும் கொள்ளையர்களை ஒன்றும் செய்யாமலிருக்க‌, யாரோவொருவர் அக்கடிதத்தை செய்தித்தாள்களுக்கனுப்ப எல்லாருக்கும் தெரிய வந்து நாற்றமடிக்க ஆரம்பித்த பின்னர்தான் ஜெ டேமேஜ் கன்ட்ரோல் பண்ண, இன்று கண்டிப்பாக ஆக்ஷன் எடுத்தே தீரவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டதனாலே இக்கொள்ளை சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சஹாயம்தான் 1600 கோடி ஊழல் என்றார் அவர் கடிதத்தில். அதைத்தான் பத்திரிக்கைகள் பெரிது படுத்தின.

  4. Avatar
    Veerapandi says:

    காவ்யா, குறிக்கோள் வைரமுத்து உணரவேண்டும் என்பதே.. இவ்வளவு தெரிந்த உங்களுக்கு வைரமுத்து – பி ஆர் பி சிநேகம் தெரியும். மூன்றாம் உலகப்போர் என்று எழுதி விட்டு அந்த மாதிரி ஆட்கள் விருந்தில் வைரமுத்து சிரிப்பது தான் தாங்க முடியவில்லை… எல்லோரையும் பகைத்து என்ன செய்வது. ஜெயால் முடியும் – நினைத்தால். பன்னீர் வாசனையும் அவருக்கு தெரியும்… சிக்கலான அரசியல் பரமபதத்தில் தமிழக முதல்வர் எனும் முறையில் ஜெக்கு துணை நிற்போம். மற்றபடி சகாயம் மீ.கோவில் விஷய கட்டிட இடிப்பு நோட்டீஸ் சரியே… தயவு செய்து உங்கள் வாதத்திறமையால் ஒரு நல்ல நோக்கத்தை சிதறடித்து விடாதீர்கள். முடிந்தால், வைரமுத்துவிற்கு இதை அனுப்புங்கள்>>>

    1. Avatar
      Kavya says:

      கவிதை படிப்போர் எத்தனை பேர்? அட, இங்கு திண்ணையில் வரும் கவிதைக்ளைப் படிப்போர் எத்தனை பேர்? சொற்பமே.

      கவிதை எதற்காக எழுத்ப்படுகிற்து? புரட்சிக்கருத்துக்களைக்கவிதைகளாகக்கொண்டு மக்களை உசுப்பவா? அப்படியே சரியென்றாலும், கவிதையாவது மண்ணாங்கட்டியாவது, உருப்படியான வேலைகள் இருக்க உருப்படாதவேலையை பார்க்கனுமா? என்று கேட்கும் மக்களிடையே புரட்சி பண்ணமுடியுமா?

      அப்படி பண்ணலாமென்றாலும், வவுத்துப்பொழப்புக்காக எழுதிவாழும் கவிஞர் புரட்சிக்கருத்துக்களை எழதினால் படிப்பவர் நம்புவரோ? ஜெயலலிதாவோ கருனாநிதியோ, எளிமை வாழ்க்கையைப்பற்றி – சிறுகக்கட்டி பெருக வாழ்- என்று ஊருக்கு உபதேசம் பண்ணினால் நம்புவரோ?

      வைரமுத்து ஒரு அரசியல் வாதிக்குச்சாமரம் வீசி தன்னைப்பிரபலபடுத்திக்கொண்டவர். அவர் தன் கவிதைகளில்னால் மட்டுமே உயர்ந்தவரன்று. தமிழ்க்கவிஞர்களுள் எத்தனை எத்தனை பேர் காணாமல் போனார்கள் ஆதரவின்றி!

      வைரமுத்து ஒரு வியாபாரி என்றுதான் சொல்லலாம். தமிழை வைத்து தமிழகத்தில் பிழைப்போர் ஏராள்ம்.

      திரைப்படக்கவிஞர்கள்.
      பள்ளித் தமிழ் ஆசிரியர்கள்
      பதிப்பாளர்கள்.
      எழுத்தாளர்கள்.

      இவர்களுள் எவரேனும் தமிழே என் மூச்சு. அதன் சேவையே என் குறிக்கோள் என்றிருப்பதில்லை. எல்லாருமே தன் நூற்கள் எப்படியாஇனும் விற்காதா என்று ஏங்குபவர்கள்தான்.

      ஆக வைரமுத்து எழுதினால் புரட்சி வரும் என்பது சுத்த கப்சா.

      கிரானைட் ஊழல்போன்று எல்லா ஊழல்களை வெளிக்கொண்டு மக்களை உசுப்ப் ஊடகங்களினால் மட்டுமே முடியும். அவ்வூடகங்களிலும், இன்று தமிழ் நாளிதழகள், ஜனரஞ்சகமான் வாரப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி. இப்படி. மற்றும் அரசியல்வாதிகள், என் ஜி ஓக்க‌ளின் தெருப்பிரச்சாரத்தினாலும் முடியும்.

      1. Avatar
        Veerapandi says:

        காவ்யா, இந்த விடயத்தில் திமுக ஆட்சியில் பி ஆர் பிக்கு மீடியேட்டராக இருந்து நடவடிக்கை வராமல் பார்த்துக் கொண்டதே வைரமுத்து தான். இப்பவும் அவர் முயற்சிக்கிறார். விடயம், அவர் மூன்றாம் உலகப்போர் என்று எழுதிவிட்டு இந்த மாதிரி செய்வது தான்.

  5. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே…….

    மீடியாக்கள் அவ்வப்போது சிலரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும்……நாம் அதை நம்பிவிட்டால் முட்டாள்களாகி விடுவோம்……ஒரு காலத்தில் மீடியாக்களால் பிரபலமானவர் உமாசங்கர் ஐ.ஏ. எஸ் ……அவரை ஏதோ உலகத்தை உய்விக்க வந்தவர் போல் மீடியாக்கள் சித்தரித்தன……அவர் நியாயமான காரணத்துக்காக சஸ்பென்ட் செய்யப்பட்டபோது கூக்குரலிட்டன……[தன் அதிகாரத்தை பயன் படுத்தி மனைவிக்கு வேலை வாங்கியதும், போலி சான்றிதழ் கொடுத்தது அவர் மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகள் ] மீடியாவின் அழுத்தம் தாங்காமல் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்…அவர் இப்போது வேலையில் இருந்து கொண்டே கிறித்தவ மத மாற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்….அதை எவரும் கண்டுகொள்வதே இல்லை…..இதே ஒரு ஹிந்து அதிகாரி இவ்வாறு செய்திருந்தால் உங்களைப்போன்ற ஹிந்து விரோதிகள் பொங்கி எழுந்திருப்பீர்கள்….. அலுவலகத்தில் கடவுளை வழிபட்டால் பொங்கி எழும் திராவிட இயக்கத்தவர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?
    இது சகாயத்தின் சீசன்…..அவரும் ஒரு மத வெறியர் தான்…..உத்தப்புரத்தில் தலித்களுக்கும் , பிள்ளைமார்களுக்கும் சமாதானம் செய்ய ஹிந்து இயக்கங்கள் முற்பட்ட போது அவர்களை கண்டித்தார்……மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களுக்கு பல இடையூறுகள் செய்தார்,…..பிரச்சினை நீண்டு கொண்டே போனால் தானே மத மாற்ற அறுவடை செய்ய முடியும்? பொறுத்துப்பார்த்த ஹிந்து இயக்கங்கள் மாவட்ட எஸ்.பி திரு. ஆஸ்ரா கர்க் அவர்கள் உதவியோடு போலீஸ் மூலம் பிரச்சினையை பேசித்தீர்த்தனர்…தலித்கள் முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த போது பிள்ளைமார்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச்சென்றனர்……இந்த மாற்றத்தை எந்த ” முற்போக்கு” பத்திரிக்கையாளரும் கண்டு கொள்ளவில்லை…..
    எஸ் .பி இந்த பிரச்சினையை தீர்த்ததால் கடுப்பான சகாயம் , அவர் மீது வேறு ஒரு வழக்கில் குற்றம் சுமத்தி அறிக்கை அனுப்பியுள்ளார்……
    இந்த கிரானைட் ஊழல் பிரச்சினையில் கூட சகாயம் குறிப்பிட்ட சில குவாரிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் தான் இட மாற்றம் செய்யப்பட்டதாக நேர்மையான வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்……
    அனுபவ் , சிநேகம் போன்ற நிதி நிறுவனங்களும் , தற்போது மோசடியில் ஈடுபட்டுள்ள ஈமு கோழி நிறுவனங்களும் மீடியா மூலம் பிரபலமானவைதான்……சகாயம் பற்றிய பில்டப்புகளும் இந்த வகையை சேர்ந்தவைதான்……

  6. Avatar
    Veerapandi says:

    இது சகாயத்திற்கு சகாயம் கேட்கும் பகுதி அல்ல.. இது ரணபூமி ஆகிக் கிடக்கும் மதுரையை மீட்க கோரிக்கை. பன்னீர்தெளித்து விவரமாக வைரமும் முத்தும் இழைத்து மீடியேஷன் நடக்கிறது. ஓரளவாவது நல்லது நடக்க துடிக்கும் எண்ணம் இது. இவ்வளவு களேபரத்திலும் பன்னீர் தெளித்து ஒரு ஹோட்டல் அந்த ஊரில் 4மடங்கு விலையில் வாங்கப்பட்டுள்ளது. சகாயம் சிலருக்கு சாதகமாக நடந்திருந்தால் அதுவும் வெளிவரச் செய்யலாம்… ஆனால், இங்கு நல்லவர் சகாயமா ..?இல்லையா எனப்தல்ல… புத்திசாலி காவ்யா வழக்கம்போல் தனது ஆசான் கருணாநிதிக்காக திசை திருப்புகிறார். ஜெ கரு இருவருமே ஊழல் செய்திருக்கலாம்… நடவடிக்கை எடுக்க ஜெக்கு ஆண்மை இருக்கிறது… ஆனால், இந்த விடயத்தில் கருணாநிதியின் மௌனம் பற்றி காவ்யா சொல்லலாமே..? இது சாதாரண விடயம் அல்ல…. மேலூரில் ஒரே கொண்டாட்டம் தான்… இந்த நடவடிக்கைக்கு… இதை இந்து பார்பான் கிறிஸ்துவன் என்ற தளத்திற்குள் காவ்யா கொண்டு போவது அவரது தலைவர் கலைஞர் வழி நடப்பதைக் காட்டுகிறது…

  7. Avatar
    Kavya says:

    சான்றோனுக்குப்பதில் போட்டால் கவிதை விமர்ச்னம் ஜாதி, மதம் என்று திசை திரும்பி விடும். அவர் ஜெயலலிதாவே கிரானைட் ஊழலை எதிர்த்து நடவடிக்கையெடுக்க காரணமெனும்படி ‘யாதுமாகி நின்றாள் காளி’ என்னும் பாரதியாரின் வரியைத்துர்பிரயோஹம் பண்ணியிருக்க, நான் அதைச்சுட்டிக்காட்டவேண்டியதாயிற்று. ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரிடமிருந்து திருடக்கூடாது.

    சஹாயம் ஒரு கிருத்துவ மத வெறியர் என்ற சான்றோனின் குற்றச்சாட்டுக்கு அவரை நன்கு தெரிந்தவர்கள்தாளன் பதில் போடமுடியும். என்னைப்பொறுத்தவரை, அவர் மாற்றலுக்குக்காரணம் அவர் சில பெரிய அரசியல்வாதிகள், பணமுதலைகளுக்கு வேண்டாதவரானபடியாலே.

    ஒரு அரசு ஊழியன் தன் மதத்தைப்பற்றிப்பிறருக்குச்சொல்லலாமா? மத மாற்றம் பண்ணலாமா? என்றால், “நான் சொல்லத்தான் செய்தேன்; அவர்களை என் மதத்துக்கு வாருங்கள் எனச்சொல்லவில்லை! ” யென்று அவர் வாதிடலாம். மதத்தைபபற்றி ஒரு அரசு ஊழியன் சொல்லலாமா கூடாதா என்பதை அரசு ச்ட்டத்தைப்பார்த்துத்தான் சொல்ல முடியும்.

    டி ஜி தினகரன், சிண்டிகேட் வங்கு ஆஃபிசராக இருந்துகொண்டேதான் சுவிசேஷ ஊழியம் செய்து பிரபலமானார். பாலகிருஸ்ண சாஸ்திரிகள் என்னும் பிரபலமான இந்து உபன்யாசகர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிசராக உழைத்து ஓய்வு பெற்றவர். பணியிலிருக்கும்போதுதான் உபன்யாசங்கள் ஊர் ஊராகச்சென்று செய்தார். இப்படி பலர்.

    இதைத்ததவறென்கலாமா? அவர்கள் வேலைச்சடடம் அனுமதிக்காமல் அவர்கள் செய்திருக்கமுடியாது. உமா சங்கர் சட்டம் தெரியாமலா பிரச்சாரம் பண்ணுகிறார்/ சட்டத்துக்குப்புறம்பென்றால் அரசு இன்னேரம் தடுத்திருககும். இதற்குபதில் சாண்றோன் இப்படிப் போடுவார்: “இந்து என்றால் தடுத்திருப்பார்கள். கிருத்துவம், இசுலாம் என்றால் அரசு விட்டுவிடும்!”

  8. Avatar
    Kavya says:

    அறம் பாடுதல், அறச்சீற்றம் என்பதுதான் தமிழ்.

    அரம் என்று பிழை போட்டு எழுதியிருக்கிறார் கவிஞர்.

  9. Avatar
    Veerapandi says:

    காவ்யா, நிச்சயம் உங்களின் ”அறம் பாடுதல், அறச்சீற்றம் என்பதுதான் தமிழ்” திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எழுதும் போது எனக்கு ர வா ற வா எனக் குழப்பம் இருந்தது. மேலும், எழுதியிருப்பது கவிதை அல்ல கடிதமே… நான் கவிஞனும் அல்ல… நன்றி… சான்றோன், நீங்கள் சகாயம் பற்றி நேர்மையான ரெவின்யூ ஆட்கள் சொன்னது என சொல்வது நம்பதகுந்ததல்ல…

    1. Avatar
      Kavya says:

      ஜெயலலிதாவை ‘யாதுமாகி நின்றாள் காளி!’ என்றதுதான் தவறு. அவருக்கு மதுரையிலும் கிருஷ்ணகிரியிலும் கிரானைட் குவாரிகளின் நடவடிக்கைத் தெரியாமலா இருக்கும்? அப்படியே தெரியாம்லிருந்தது என்றாலும் சஹாயம் கடிதம் போட்ட பின்னுமாவது நடவடிக்கையில் இறங்கியிருக்கலாமே? அக்கடிதங்கள் வெளியே தெரிந்தவுட்னதானே ‘யாதுமாகி நின்றாள் காளி!”? சஹாயத்தை மதுரையிலிருந்து மாற்றக்காரணம்?

      போகட்டும். வைரமுத்துவுக்கு வருவோம். கருனாநிதிக்கு மேடைமேடையாக ஏறி வாழ்த்துப்பா பாடுமிவர், எப்படி கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தி ஊரைக்கூட்டுவார்? கருனநானிதியின் பேரனும் மதுரை குவாரி அதிபர்களில் ஒருவர்தானே? வைரமுத்து எழுத வேண்டுமென்று நீங்கள் சொல்வது எப்படி சாத்தியாமாகும்? அவரென்ன தீடீரென்று பொதுநல வாதியாகி தன் தானைத் தலைவரை பகைத்துக்கொள்வாரா? எனவே உங்கள் கவிதை பொருட்பிழை கொண்டது.

      கருநானிதியின் மவுனம் என்ன சிதம்பர இரகசியமா? எல்லாருக்கும் தெரியுமே!

      அரம் என்று ஒருதடவையன்று பலதடவைகள் எழுதியிருக்கிறீர்கள். சுட்டிக்காட்டினால், அஃது ‘ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என்றெழுதுகிறீர்கள். தமிழ்க்கவிஞர்களின் பண்பாடு போலும்.

      கவிதையில் இன்னொரு கவிஞரின் சொற்களைக்கையாளலாம். அல்லது கருத்துக்களை விரிவுபடுத்தலாம். அல்லது கோடிட்டுக்காட்டலாம். நம்மாழ்வாரின் பாசுரமொன்றில், திருக்குறள் சில அசைகள் வரும். ஆனால் வரியை எடுத்து அப்படியே போடுவதில்லை.

      பிற கவிஞர்களின் வரியை அப்படியே எடுத்துப்போடும் வழக்கத்தை இங்கேதான் காண்கிறேன். பாரதியாரின் வரி அப்படியே எடுத்து, அதுவும் பொருந்தா இடத்தில், போடப்படுகிறது. அவர் தன் தெய்வத்தைப்பற்றிப்பாடுவது இங்கே ஒரு மனுஷிக்குப்போடப்படுகிறது.

      பொருட்பிழை, எழுத்துப்பிழை, பிறகவிஞரிடமிருந்து எடுத்துப்போட்ட பிழை – ஆக இவைகளுக்கும் ‘ஏற்றுக்கொள்ளப்படுகின்றன’ என்று பதில் போட்டு உங்கள் பண்பாட்டை நிலை நிறுத்துங்கள்.

  10. Avatar
    Sona Panneer Selvam says:

    ஆஹா, என்ன அருமையான விவாதங்கள்.
    அடிப்படை குற்றச்சாட்டிலேயே இப்படியொரு விவாதம் துவங்கியுள்ளதே, அதிலும் பிஆற்பி பற்றியோ அவரது செயல்பாடு பற்றியோ அதிகம் பேசாமல், வைரமுத்து மேல் வீரபாண்டி ஏன் அதிகமாக கோபம் கொள்கிறார். அவரை ஏன் கட்டாயப் படுத்தி கவிதை (அறம்) பாடச் சொல்லவேண்டும். குற்றச்சாட்டு இப்போதான் கோர்ட்டுக்கு போயிருக்கு.
    வீரபாண்டி, பல ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கு நீடித்து வருகிறதே? அதுபற்றி யாரைய்யா கவிதை எழுதுவது. உங்கள் பேனாவில் வாய்மையை நிரப்புங்கள், அது கயமைகளை கலையட்டும். காவ்யா குறிப்பிடுவதுபோல் எதை எதோடு ஒப்பிடுவது என்பதையாவது இனி பார்த்து செய்யுங்கள். காவ்யாவிற்கு வேண்டுகோள்: விவாதம், விதண்டாவாதமானால் நாம் நிறுத்திக்கொள்வது நமக்கு நல்லது.

  11. Avatar
    Veerapandi says:

    அரம், அறம் தவிர வேறெந்த பொருட்பிழையும் இல்லை. நான் கவிதை இல்லையென்று சொன்ன பின்னும் ஏன் டென்ஷன். வைரமுத்து இங்கு மீடியேட் பண்ணுவதும், அவர் ஊர்காரர் என்பது தாண்டி பணத்தால் நடக்கும் டீலிங் என்பதும் யாவரும் அறிந்தது. ஜெ மாதிரி காளியாகி துவம்சம் பண்ணும் தைரியம் வேறு யாருக்கு இங்கு இருக்கு…? பன்னீர் சொம்பு பக்கத்தில் இருந்தாலும், ஜெ என்ன ஆ… வீராச்சாமி சொல்லியாச்சு என்று வீரமிழக்கும் நிலை காண்பதில்லை… ஜெக்கு ஜெ… ஆயிரம் சகாயம் வந்தாலும் ஒரு ஜெ வேண்டும்…

    1. Avatar
      MANI says:

      annan veerapandi avarhale, itharku pathul j’ku vazhthupa nerave yezhithi irukalam…unga karuthu yellarukum purinthathu…

  12. Avatar
    லெட்சுமணன் says:

    ///அரம், அறம் தவிர வேறெந்த பொருட்பிழையும் இல்லை.///

    இது சொற் பிழையா இல்லை பொருட் பிழையா?

  13. Avatar
    Veerapandi says:

    நெற்றிக்கண் வார இதழ்.21092012ன் அட்டைப்படத்தில் கவிப்பேரரசு “வேலூர் மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை”யின் பங்குதாரர் எனும் விடயத்துடன், உள்ளே… “..கரிக்கால் கிராமத்தில் வைரமுத்து மருமகன் பெயர்கில் ஒதுக்கீடும் அதில் பங்குதாரராக பி ஆர் பி இருப்பது பற்றியும் செய்தி விவரமாக வந்துள்ளது. தினபூமி இதழுடன் நெற்றிக்கண் இதழும் சில வருடம் முன்பு மதுரை கிரானைட் கொள்ளை பற்றி எழுதின…. அதனால், இது விசாரிக்கப்படவேண்டியதே… இதில் அரம்.. அறம் என்ற விடயம் இருக்கட்டும்… இந்தக் கொள்ளைக்க்கு “மூன்றாம் உலகப் போர்” நாயகன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்…

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *