அம்மா

This entry is part 11 of 11 in the series 14 மே 2017

பிச்சினிக்காடு இளங்கோ

எல்லார்க்கும் போலத்தான்
எனக்கும் அம்மா
ஆனால்
என் அம்மா
என் அம்மாதான்

தைரியத்தின் படிமம்
பன்முகச்சிந்தனையின் வடிவம்
இரக்கத்தின் குறியீடு

உலகத்திற்காகவும்
உலகமாயும் சிந்தித்தவள்
சிந்திக்கச்சொல்பவள்

சகோதரப்பாசம், பற்று
உறவினர்மீது பரிவு ,அக்கறை
உதிரத்தில் கலந்தவள்
செயலில் காட்டியவள்

கொடுத்துதவுவதில்
அப்பாவுக்குப்போட்டி

சொல்லில் செயலில்
நேர்மையற்றவரை
நேர்நின்று பேசாதவள்

வாழ்க்கை இலக்கணம்
வகுத்தவள்
வாழ்ந்துகாட்டியவள்

லட்சுமி மவனா
என்றுதான் என்னை
பெண்சமூகம் விளித்தது
ஆறுமவத்தண்ணன் மவனா
என
ஆண்சமூகம் அழைத்தது

குழந்தைகளில்
பேதம்பார்க்காத தெய்வம்
வயிற்றுக்குச்சோறிடல்வேண்டும்
என்ற
பாரதி எண்ணத்தின்
நிஜம் அம்மா

தலைமைப்பண்பு
மிக்க தாய்
கூர்த்த
சிந்தனைக்குச்சொந்தம்

தொலைநோக்கு
மிக்கவர்

அம்மா இலக்குமியின்
மகன் என்பதே
என் முகவரி

(20.3.2014 எழுதியது. அம்மா
25.10 2016 மரணமெய்திய நாள்)

Series Navigationஅம்மா
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *