அழியாச் சித்திரங்கள்

This entry is part 2 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

அம்மாவிடம் பால் குடித்து

உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன்

விளையாடத் தவழ்ந்து வரும்

நடைபாதைக் குழந்தையை

துள்ளிக் குதித்து வரவேற்கிறது

தெருவில் அலையும்

பசுவின் கன்றொன்று….!

***     ***     ***

கை நீட்டும் பிச்சைக்காரிக்கு

ஏதும் தர அவகாசமில்லாமல்

மின் இரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்

கடந்து போகிறவர்களுக்கும்

கைகளை ஆட்டிச் சிரிக்கிறது

பிச்சைக்காரியின் தோளில் தொங்கும்

பச்சிளங் குழந்தை……!

***     ***     ***

சோறு குழம்பு கூட்டென்று

மண்ணைக் குழைத்து பரிமாறி

அவுக் அவுக் என ராகமிட்டு

பாவணைகளில் தின்று முடித்து

சிதறி ஓடும்

நடை பாதைக் குழந்தைகள்

அம்மாவிடம் போய்

அழுகின்றன பசிக்கிறதென்றபடி….!

***     ***     ***

செப்பு வைத்து சமைத்து

சிறுகுழந்தைகள் பரிமாறும்

மண் சோற்றை மறுக்காமல்

வாங்கிப் புசியுங்கள்;

நட்சத்திர உணவங்களிலும் கிடைக்காத

அபூர்வ உணவு அது…..!

***     ***     ***

காரை பெயர்ந்திருந்தாலும்

வண்ணங்கள் உதிர்ந்திருந்தாலும்

குட்டிக் குழந்தைகள் குடியிருக்கும்

வீட்டின் சுவர்கள் அழகானவை

அவை

குழந்தைகளின்

கரும்பென்சில் கிறுக்கல்களால்

ஆசீர்வதிக்கப்பட்டவை …..!

Series Navigationசிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்முரண்களால் நிறைந்த வாழ்க்கைஇந்தியாவின் ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்திறவுகோல்கோணங்கிக்கு வாழ்த்துகள்கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்புதந்தையானவள் அத்தியாயம்-3தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…தேவதாசியும் மகானும் (2)அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்குளத்தங்கரை வாகைமரம்முத்தொள்ளாயிரத்தில் மறம்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95பாவண்ணன் கவிதைகள்வள்ளுவரின் வளர்ப்புகள்வெண்சங்கு ..!பாரதியின் காதலி ?காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலிவாழ்க்கை ஒரு வானவில் – 23பொன்வண்டுகள்ஆங்கில மகாபாரதம்
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *