ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்

author
57
0 minutes, 19 seconds Read
This entry is part 1 of 33 in the series 11 நவம்பர் 2012

அபூபக்கர் சித்திக்கி

ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார்.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது.

பிரேம் நகர்- சிதிலமடைந்த இந்து கிராமம்

1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து – சீக்கிய சமூகத்தினரின் தலைவர்களாக இருக்கும் சங்கர் லால் மற்றும் இதர தலைவர்கள் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக கோஸ்த் நகரத்தின் தலைவர்களிடம் அந்த ஊரில் விட்டுவந்த சொத்துக்களை திரும்ப பெற மனு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஊரின் தலைவர்கள் கொடுக்கும் வாக்குறுதியும் ஆதரவும், சங்கர் லால் போன்றவர்களுக்கு தங்களது பேரப்பிள்ளைகள் மீண்டும் கோஸ்த் நகரத்தில் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

தூரத்திலிருந்து லால் போன்றவர்கள் தங்களது தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனித்துகொண்டுவருகிறார்கள்.

”ஆப்கானிஸ்தானை பற்றி ஏதேனும் நல்ல செய்திகளை கேட்டால், திருவிழா போல கொண்டாடுவோம். ஏதேனும் அழிவுச்செய்திகளை ரேடியோவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ கேட்டால், மிகுந்த மனவருத்தம் அடைவோம். ஏனெனில் அது எங்களது தாய்நாடு. எங்கள் மூதாதையரின் பூமி” என்று சங்கர்லால் கூறுகிறார்.
புது தில்லி அருகே வாழ்ந்துவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்களும் இந்துக்களும் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதற்காக சங்கர் லால் மற்றும் இதர தலைவர்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது உடனடி குறிக்கோள் மீண்டும் பிரேம்நகரை புனருத்தாரணம் செய்து அங்கே ஒரு மாபெரும் கோவிலை திரும்ப கட்டுவதுதான்.
அடுத்து, கோஸ்த் நகரத்தில் முன்னர் செய்து கொண்டிருந்த தொழில்களை மீண்டும் உருவாக்கி, மருந்து கடைகள், துணிக்கடைகள், பலசரக்கு கடைகளை முன்னர் போல திறந்து நகரத்தை செழிப்பாக்க விழைகிறார்கள்.

சங்கர் லால்

சங்கர் லால் தொழில்ரீதியாக ஒரு பார்மஸிஸ்ட் (மருந்து விற்பனையாளர்). சில வருடங்களுக்கு ஒருமுறை தன் சொந்த நகரத்துக்கு சென்று வருகிறார். அங்கிருந்து வெளியேறியபோது அவர் காபூலுக்கு சென்றார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். இப்போது அவர் திரும்பி சென்று கோஸ்த் நகரத்திலேயே தங்கிவிட விரும்புகிறார். அவரது பேரக்குழந்தைகள் அங்கிருக்கும் மற்ற பஷ்டுன் சிறுவர்களோடு நட்புடன் இருப்பதை விரும்புகிறார்.

பிரேம் நகர், கோஸ்த் நகர முஸ்லீம்களால் இந்து கலா (இந்து கோட்டை) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இவர்கள் அருகாமையிலுள்ள பஷ்டூன் சமூகத்தினரோடு நட்புறவில் இருக்கிறார்கள். சுமார் 150 இந்து , சீக்கிய குடும்பங்கள் அங்கே 25 ஏக்கர் கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி மண்ணாலான பெரும் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மண் சுவர்கள் பஷ்டூன் கட்டட அமைப்பை சார்ந்தவை.

போருக்கு முன்னாள், அமைதியாக வாழ்க்கை இருந்ததை சுகமாக நினைவில் அசைபோடுகிறார்கள். சரண் சிங் என்ற 48 வயதான இந்து, இந்த இந்து சீக்கிய சிறுபான்மையினர் அங்கிருந்த முஸ்லீம்களுடன் சகோதரர்களாக வாழ்ந்துவந்ததை நினைவுகூர்கிறார்.
போர் கோஸ்த் நகரத்தை நெருங்கியபோது, அங்கிருந்த இந்துக்களும் சீக்கியர்களும் காபூல் நகரத்துக்கு சென்றார்கள். பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு சென்றார்கள். ஆனால் சரண் சிங் காபூலில் மருந்துகடையை வைத்து அங்கிருந்து நகரவில்லை. இதனால், தன் சொந்தக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துகொள்வதும் சாத்தியமானது.
அவரது சமூகம் அங்கு வாழும் பஷ்டூன்களுடன் தங்களது இணக்கமான வாழ்க்கையை மீண்டும் கட்டமுடியும் என்கிறார். ஆனால் அதற்கு முன்னால், முழுமையாக அழிக்கப்பட்ட அவரது கிராமத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்கிறார்.

தற்போது எங்களது எந்த குடும்பமும் பிரேம்நகரில் வாழவில்லை. அங்கே வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த விஷயமும் இல்லை” என்று சிங் கூறுகிறார். “அந்த முழு கிராமமும் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கே சிதிலங்களே கிடக்கின்றன. எங்களது புனிதமான கோவில் டாங்கிகளால் குண்டு வீசி அழிக்க்கப்பட்டுவிட்டது. எங்களது வீடுகளும் அதே போல அழிக்கப்பட்டுவிட்டன”

இடிக்கப்பட்ட கோவில்

Ruins of the Hindu temple in Prem Nagar.

80 வயதாகும் சுதால் சிங் எவ்வாறு இந்து மையமாக பிரேம் நகர் இருந்தது என்பதை நினைவுகூறும் அளவுக்கு வயதானவர். பலசரக்கு கடை வைத்திருந்த இவர் இந்தியாவிலிருந்து சென்ற குழுவின் பகுதியாக இருந்தார். 70 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அரசாங்க அதிகாரி கோஸ்த் நகரத்தை சுற்றி அங்கங்கு சிதறிக்கிடந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் கோஸ்த் அருகே ஒரே இடத்தில் வாழ கேட்டுகொண்டதை நினைவு கூர்ந்தார்.

பிரேம் நகர் உருவாக்கம் சமூக வாழ்க்கையையும் அங்கிருந்த இந்து சீக்கியர்களுக்கு வளமையையும் கொணர்ந்தது என்கிறார். இவர்களே அங்கிருந்த பெரும்பான்மையான வியாபாரங்களை கவனித்து வந்தனர்.
இப்போது விஷயங்கள் பெருமளவு மாறிவிட்டன. பஷ்டூன் பழங்குடியினர் ஒரு காலத்தில் வியாபாரத்தை வெறுத்தார்கள். இப்போது அவர்களே முக்கியமான வியாபாரிகளாக உள்ளனர். 15000 கடைகளுக்கும் மேல் அங்கே இப்போது கடைகளை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், சிங் தன் பழைய நண்பர்களை பார்த்தபோது அவர்கள் இந்துக்களும் சீக்கியர்களும் திரும்ப வருவதை அவர்கள் வரவேற்பதாக கூறினார். புதிய போட்டி வந்தாலும், ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
அவரை பொறுத்தமட்டில் கோஸ்த் நகரம் சொந்த வீட்டுக்கு வந்த உணர்வை தருகிறது. ”உண்மையை சொல்கிறேன். கோஸ்த் நகரத்துக்கு வரும்போது நலமாகிவிட்டது போல உணர்கிறேன். என்னுடைய வயதின் காரணமாக ஏராளமான தொந்தரவுகள். கோஸ்த் நகரத்துக்கு வந்தால் அவை குறைந்துவிடுகின்றன. நானும் சந்தோஷமாக, என் ஆன்மாவும் சந்தோஷமாக இருக்கின்றது” என்கிறார்.

எல்லாம் நல்லபடி சென்றால், பிரேம்நகர் இந்து சமூகத்திடம் இந்த மாத இறுதியில் தரப்படும். எல்லாம் நல்லபடி நடக்கும் என்று சங்கர்லால் நம்புகிறார்.

“கடந்த காலத்தை விட நிலைமை இப்போது முன்னேறி வருகிறது. பிரேம் நகர் கிராமம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்று சங்கர்லால் கூறுகிறார்.

 

http://www.rferl.org/content/hindus_sikhs_seek_to_reclaim_afghan_house_of_love/24388591.html

http://www.pajhwok.com/en/2011/11/05/khost-hindus-want-back-their-land

http://www.thefreelibrary.com/Hindu,+Sikh+children+bullied+out+of+school.-a0247679585

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
author

Similar Posts

57 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஆஃப்கனிஸ்தான ஹிந்துக்களின் புலம் பெயர நேர்ந்த துயரம். வைதிக மற்றும் சீக்கிய சமயத்தைச் சார்ந்த ஹிந்துக்கள் தாலிபானின் அடக்குமுறை சர்க்கார் நடந்து கொண்டிருந்த சமயம் முஸல்மான் அல்லாதவர்களுக்கு அவர்கள் கொடுத்த தொல்லை காரணமாக தில்லி மாநகரில் அடைக்கலம் புகுந்தார்கள். என்னுடைய நண்பர்களில் கூட புலம் பெயர்ந்த பஷ்டூன் கள் உண்டு. பிண்ட் பலோசி போன்ற உணவகங்கள் ராஜதானியைச் சுற்றிய சிறு நகரங்களில் பஷ்டூன் களால் நடத்தப்பட்டு வருகிறது. ப்ரேம் நகர் என்ற இவர்களது பிறந்து வாழ்ந்த இடத்துக்கு மீண்டும் குடி புக இவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக அங்கு வ்யாபாரம் செய்துவரும் முஸல்மான் சஹோதரர்கள் புலம்பெயர்ந்து ஆனால் மீண்டும் குடியமர வரும் ஹிந்து சஹோதரர்களை இருகை கொண்டு வரவேற்பது மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சா, ஹஷிஷ், கொலைவெறி, குண்டு தாக்குதல்கள், மதவெறி இவற்றினூடே மானுடம் மற்றும் அன்பு போன்றவை மக்கிப்போகாமல் வாழையடி வாழையாய் துளிர்த்து உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காண்கையில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை மிகவும் குறைகிறது.

    இந்த ப்ரதேசத்தில் இருக்கும் வைதிக சமயம் சார்ந்த ஹிந்துக்களுக்கு பலோசிஸ்தான் ஹிங்க்லஜ் எனும் இடத்தில் உள்ள சக்தி பீடமாம் ஹிங்க்லஜ் மாதா கோவில் மிகவும் புனிதமானது. சீக்கிய சஹோதரர்களுக்கு லாஹோர் குருத்வாரா. இத் தீபாவளித் திருநாளில் ஹிங்கலஜ் மாதாவும் வாஹேகுருவும் இவர்களுக்கு நிறைந்த மன அமைதியையும் ப்ரேம் நகர் புனருத்தாரணம் பெற உத்வேகமும் அளிக்க இறைஞ்சுகிறேன்.

    தங்கள் வேர்களுக்குத் திரும்பவரும் வைதிக மற்றும் சீக்கிய ஹிந்துக்களால் தங்களது வ்யாபார வர்த்தகங்களில் போட்டி ஏற்பட்டு வாய்ப்புகள் குறையும் என்ற போதும் இவர்களை ப்ரேம் நகருக்கு இருகரம் கொண்டு வரவேற்கும் இஸ்லாமிய சஹோதரகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் சுபானவதாலா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் மனிதநேயம் மிக்க இவர்கட்கு அளிக்கட்டும்.

  2. Avatar
    வைரமுத்து says:

    வெகுவிரைவில் முழு ஆப்கானிஸ்தானும் இந்து மதத்தை தழுவி அமைதியையும் சமாதானத்தையும் அடைய பிரார்த்திப்போம்.

  3. Avatar
    தங்கமணி says:

    இந்த கட்டுரை, முஸ்லீம்கள் இந்துக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.
    உண்மை வேறு விதமாக இருக்கிறது.
    http://www.thefrontierpost.com/news/12446/

    காபூலிலேயே இந்துக்களது பழக்க வழக்கங்களை இந்துக்கள் சீக்கியர்கள் பின்பற்றுவதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    A minority representative in the Senate, Anar Kali Honaryar, also participated in the protest. She explained residents, not security forces, had prevented the cremation ceremony in Qalacha.

    The lawmaker claimed winning a promise from the security personnel regarding an early solution to the problem. She demanded the arrest of the elements stopping Hindus from burning their dead relatives.

    அன்புள்ள வைரமுத்து,
    அது நடக்க வேண்டுமென்றால், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் போல இந்துக்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் செய்யும் இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.

    1. Avatar
      ஆனந்தன் says:

      அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்க்க வேண்டும். அப்படியே கால்பதித்து ரஷியாவையும் இணைக்க வேண்டும்.

      1. Avatar
        ஆனந்தன் says:

        அபின் தின்றால் யானைக்கு மதம் அடங்குமாம். மனிதனுக்கு மதம் அடங்க என்ன கொடுக்கலாம்?

  4. Avatar
    தங்கமணி says:

    பெண் வயதுக்கு வந்துவிட்டதால் படிப்பை நிறுத்துவது என்பது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பழக்கமல்ல. தமிழ்நாட்டில் புதுக்கோட்டையிலேயே நடக்கிறது.
    http://tamil.oneindia.in/news/2012/11/15/tamilnadu-daughter-forced-drop-of-school-education-164700.html

    ”பூப்பெய்திய பெண்ணுக்கு படிப்பெதற்கு”?: 9ம் வகுப்பு மாணவியின் படிப்பை நிறுத்த வைத்த ஜமாஅத்

    மமக ஆதரவுடன் நடக்கும் இந்த ஆட்சியில் எப்படி அந்த பெற்றோரின் வேண்டுகோள் மிதிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

    “ஹாஜிரம்மாளின் மனுவை கலெக்டர் அலுவலகம் தலைமை கல்வி அதிகாரிக்கு அனுப்ப அவர் அதை எஸ்.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு அந்த மனு வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பதால் அந்த மனு கலெக்டர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று தலைமை கல்வி அதிகாரி என். அருள் முருகன் தெரிவித்துள்ளார்.”

  5. Avatar
    தங்கமணி says:

    பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர்.

    அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் டி.சியை வாங்கிய பிறகு ஊருக்குள் வந்தால் போதும் என்று ஜமாஅத் உறுப்பினர்கள் எனது கணவரிடம் தெரிவித்துள்ளனர். அதில் இருந்து எனது கணவர் ஊருக்குள் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நாங்கள் பணக் கஷ்டத்தால் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். அதன் பிறகு நான் வீட்டு வேலைக்கு சென்றேன் என்றார்.

    இதற்கிடையே பூப்பெய்த பெண்ணை விதிகளை மீறி பள்ளிக்கு அனுப்பியதற்காக ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15,000 அபராதம் விதித்தார். ஹாஜிரம்மாள் வீட்டுக்கு அருகில் வசி்ப்பவர் ஒருவர் அபராதத்தைக் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் தனக்கு உதவிய நபருக்கு அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களிலும் ஜமாஅத்தால் இதே பிரச்சனை உள்ளது என்று ஹாஜிரம்மாள் தெரிவித்தார்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்புள்ள தங்கமணி,

    முன்னர் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது ஹிந்துக்களை சமூஹத்திலிருந்து பிரித்து வைக்க ஸ்வஸ்திகா கைப்பட்டை அணிய வேண்டும் என சட்டம் வைத்திருந்தனர். எப்படி யஹூதிகளை க்றைஸ்தவர்களிடமிருந்து பிரிக்க Star of David கைப்பட்டை அணிய வேண்டும் என ஜெர்மானிய நாஜி அரசு சட்டம் இயற்றியதோ அப்படி.

    ஆனாலும் இன்றைய ஆஃப்கானிஸ்தானின் மோசமான சூழ்நிலையிலும் ஒரு சில முஸல்மான் களாவது ஹிந்துக்களது மீள்வரவை ஆதரிக்கிறார்கள் என்பது போற்றப்படவேண்டியதே.

    மிக முக்யமான விஷயம் சூழ்நிலை என்ன என்பது திண்ணமாகத் தெரிந்த பின்னும் மிகுந்த தீரத்துடன் தங்கள் தாயகம் திரும்புவதற்கு விழையும் ஹிந்துக்கள். இவர்களுக்கு உலகமுழுதும் இருக்கும் ஹிந்துக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது அவசியம்.

    அவ்வளவு தூரம் ஆஃப்கனிஸ்தானம் ஏன் செல்ல வேண்டும். எவ்வளவு தான் துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஆளானாலும் காஷ்மீர ப்ராந்தியத்தை விட்டு செல்ல மாட்டோம் என பிடிவாதமாய் அங்கு இருக்கும் சீக்கியர்கள் ஒருபுறம் (முக்கியமாக பாராமுல்லா, ஸ்ரீ நகர், சோபோர் ஜில்லாக்களில்). சொல்லொணாத் தொல்லைகளைத் தாங்காது அப்ராந்தியத்தை விட்டு ஹிந்துஸ்தானத்தின் மற்ற இடங்களுக்கு குடி புகுந்த ஹிந்துக்களான காஷ்மீர பண்டிதர்கள் ஒருபுறம்.

    இது எதில் முடிகிறது என்றால் ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்திலும் கூட காஷ்மீர ப்ராந்தியத்தில் காணப்பெறும் கம்பிச்சிறைகளுக்கு மத்தியில் இருக்கும் மூர்த்தியில்லா இடிக்கப்பட்ட ஆலயங்கள், மூர்த்தி இருந்தும் பூசாரி இல்லாத ஆலயங்கள், மூர்த்தி மற்றும் பூசாரி இருந்தும் தொழ மக்கள் இல்லாது வெறிச்சோடி இருக்கும் ஆலயங்கள். எல்லைப்புறமான அமன்சேதுவிலிருந்து, சலாமாபாத், கண்டாமுல்லா, பாராமுல்லா, ஸ்ரீ நகர், சோபோர், சங்க்ராமா, பாண்டிபோரா, அனந்த்னாக், படன் என காஷ்மீர ப்ராந்தியத்து பல நகரங்களிலும் இதே நிலை. ஜம்மு, லே மற்றும் கர்கில் பகுதிகளில் நிலை சற்று வேறு.

    வேறு வழியின்றி உத்யோக நிமித்தம் இவ்விடங்களில் இருக்கும் ஹிந்துக்களைத் தவிற உள்ளூர் ஹிந்துக்கள் தங்கள் தாயகம் விட்டு மற்ற இடங்களில் சரண் புகும் நிலை.

    இந்த வ்யாசத்தில் உள்ள ஹிந்துக்கள் போல ஹிந்துஸ்தானத்திலும் உலகின் மற்றெப்பகுதிகளிலும் ஆப்ரஹாமியர்களால் துன்புறும் ஹிந்துக்கள் தங்கள் தாயகத்துடன் உறுதியாகப் பிணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

    முயற்சி திருவினையாக்கும்.

  7. Avatar
    Arulgnanasekaran says:

    இந்துக்கலானாலும், சீக்கியரானாலும் இவர்கள் ஆப்கானிஸ்தானியர்களே , தங்களுக்கு தங்கள் நாட்டில் எவ்வளவு துண்பங்கள் வந்தாலும், வாழ்வதற்கு இடம் இல்லை என்றாலும். ஒருவன் பிறந்த மண்ணே தாய் நாடாகும். இவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பிரேம்நகரில் மீண்டும்வாழ்வதற்கு இடம்கிடைத்தால் அதுவே அவர்களுக்கு சொர்க்க பூமியாகும். இதேஉணர்வுகள்தான் (நிலை) தமிழ்நாட்டில் அகதிகலாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும். எப்போது தங்களை இலங்கை அரசு திரும்ப அழைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொந்தநாட்டில், சொந்த ஊரில் வாழவேண்டும், இதை அந்தநாடுகள் புரிந்துகொண்டு வாழ வைக்கவேண்டும்.

  8. Avatar
    மலர்மன்னன் says:

    இங்கே மத்தியில் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கே முகமதியருக்கோ கிறிஸ்தவருக்கோ எதிர்வினையாக லேசாய் ஏதும் நடந்துவிட்டால் கூட மகா பெரிய பாதகம் நிகழ்ந்துவிட்டதுபோல் ஒரு மாயையை அனைத்துல அரங்கில் தோற்றுவித்து ஆர்ப்பாட்டம் செய்வதும், மத்திய ஆட்சியாளர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு தலை குனிந்து சமாதானம் சொல்வதும் எதில் சேர்த்தி? ஹிந்துக்களுக்கு அவர்களின் தாயகத்திலேயே கேட்க நாதியில்லை என்று ஆகிவிட்ட பிறகு வெளியில் உள்ள ஹிந்துக்கள் படும் துன்ப துயரங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற சொரணை அவர்களுக்கு எப்படி இருக்கும்?
    இன்றைக்கு ஆஃகானிஸ்தான் என்று ஆகிவிட்ட பூமியெல்லாம் ஹிந்துக்கள் வாழ்ந்த இடங்களே. ஒருமுறை ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் அவதிப்படுகிறார்கள் என்று சொன்ன போது, வெளியுறவுத் துறையில் இருந்த மணி சங்கர ஐயர் என்கிற மகா மேதாவி, ஹிந்துக்கள் என்று ஏன் மத அடிப்படையில் குறிப்பிடுகிறீர்கள், இந்தியர் என்று சொல்லுங்கள் என்று திருத்தினார். அது ஒரு செய்தியாளர் கூட்டம். நான் உடனே எழுந்து நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் தொழில் நிமித்தமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ ஆஃப்கானிஸ்தானம் சென்ற இந்தியர்கள் அல்ல, அனாதி காலம் தொட்டு அங்கு பல வற்புறுத்தல்களையும் மீறி ஹிந்துக்களாக நீடித்து இருந்து வருபவர்கள். பாரசீகம் வரை ஹிந்துக்களே வாழ்ந்து வந்த காலம் ஒன்று இருந்தது என்று சொன்னேன். அன்று நமது வெளியுறவுத் துறையில் அதிகாரியாக இருந்த மணி சங்கர ஐயரின் லட்சணமே இந்த அளவுக்குத்தான் இருந்தது. மலேசியா, பங்களா தேஷ், பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் இங்கெல்லாம் கேள்விமுறையில்லாமல் ஹிந்துக்கள் ஹிந்துக்களாக இருப்பதாலேயே பலவாறாகத் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று மனம் பொருமிய காலம் போய் இப்போது ஹிந்துஸ்தானத்திலேயே ஹிந்துக்கள் நாதியில்லாமல் வாழ வேண்டியுள்ளது. கேரளம், தமிழ் நாட்டில் கன்னியா குமரி மாவட்டம், வேலூர், தஞ்சை வட்டாரங்கள், நெல்லை மாவட்டம் இங்கெல்லாம் நேரில் போய்ப் பார்த்தால் நிலைமை புரியும். போதாக்குறைக்கு இங்கே ஒரு முகமதிய அடாவடிக் கட்சிக்கு ஜயலலிதா புண்ணியத்தில் அரசியல் அந்தஸ்து வேறு கிடைத்து விட்டது. காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் அமெரிக்க துணைத் தூதர் அலுவலகம் எதிரில் அவர்கள் செய்த அட்டகாசம் சொல்லி மாளாது. காவல் துறைக்கு சுதந்திரமாக இயங்கும் உரிமை இருந்திருந்தால் ஐந்தே நிமிடங்களில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டிருக்கும். ஆனால் காவல் துறை அதுகாரிகள் கல்லடியும் பட்டு வாயைப் பொத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      punaipeyaril says:

      நன்றி அய்யா…. உரக்க உண்மையைச் சொல்வதற்கு. தாலிபான் பற்றி படமெடுத்தால் கூட இங்கே கொதிக்கிறாங்க… என்ன ரத்த பாசமோ…

  9. Avatar
    மலர்மன்னன் says:

    கஷ்மீரை ஒரு சர்வ தேச விவகாரமாக்கியபோது கஷ்மீர் பள்ளத்தாக்கு ஹிந்துக்கள் விவகாரம் மட்டும் சர்வ தேச விவகாரம் ஆக்கப்படாதது ஏன்? உலகளாவிய மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் கவனத்துக்கு அவர்களின் நிலைமை எடுத்துச் செல்லப்படாதது ஏன்? இதில் ஹிந்து இயக்கங்களும்கூட கவனம் செலுத்தத் தவறுவது ஏன்? 2004 வரை மத்தியில் கூட்டணி ஆட்சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய பா.ஜ.க. கூட இந்த விஷயத்தில் தூங்கியது ஏன்? இஸ்லாமிய வழிபாடு ஏதும் நடைபெறாத ஒரு பாப்ரி வெற்றி நினைவு மண்டபம் நெடுங்காலப் பொறுமைக்குப் பின்னரும் நீடித்ததால் ஹிந்துக்களே அதை அப்புறப் படுத்தியதை ஏதோ பெரிய அனர்த்தம் நிகழ்ந்து விட்டதைப்போல சில ஹிந்துக்களே அங்கலாய்த்தனர். அவர்களும்கூடக் கஷ்மீரத்தில் வழிபாட்டில் இருந்த பல ஹிந்து ஆலயங்கள் இடிக்கப் பட்டது பற்றி ஏதும் பேசாது வாய் மூடிக் கிடப்பது ஏன்? ஆயிரம் வருட அடிமைத்தனத்தால் சராசரி ஹிந்துவின் ரத்தமே சுண்டிப் போய் விட்டதா?
    -மலர்மன்னன்

  10. Avatar
    K A V Y A says:

    காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கியது பாகிஸ்தானே. இந்தியா விரும்பவில்லை. இன்றும் கூட. அது இந்தியாவின் உள்ளாட்டு பிரச்சினகளில் தலையிடுவதாகும் எனப்து இந்தியாவின் நிலைபாடு.

    காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினகள் சர்வதேச பிரச்சினையாக்கப்படுமானால், காஷ்மீர் பிரச்சினையும் சர்வதேச பிரச்சினையாக்கப்படும். உலக நாட்டு சபை அப்பிரச்சினைக்குத் தீர்வு காணும். அதை ஏற்றுத்தான் தீரவேண்டும். அத்தீர்வு இந்தியாவுக்கு சாதகாமாக வரும் என்பது என்ன நிச்சயம்? காஸ்மீர்களுக்கு எங்கு சேர விருப்பமோ அங்கு சேரலாம்; அல்லது தனி நாடாகி விடலாமென உலக நாடுகள் தீர்மானம் போட்டால்?

    காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பிரச்சினையும் காஷ்மீரின் பிரச்சினையும் ஒன்றுக்கொன்று இணைந்தது. ஏன் விரட்டப்பட்டார்கள்? எவரால்? என்ற கேள்விகள் எழும்.

    மலர்மன்னன் சொல்லைகேட்டால், ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல இந்தியா மாட்டிக்கொள்ளும். உண்மையில் பாகிஸ்தானுக்குச் சாதகாமகப்போகும். மேலும் காஷ்மீர்ப்பிரச்சினையை உலகரங்கில் வைக்கவேண்டுமென்பது காஸ்மீர்பிரிவினை வாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். Malarmannan is playing into their hands

  11. Avatar
    K A V Y A says:

    //ஒரு பாப்ரி வெற்றி நினைவு மண்டபம் நெடுங்காலப் பொறுமைக்குப் பின்னரும் நீடித்ததால் ஹிந்துக்களே அதை அப்புறப் படுத்தியதை ஏதோ பெரிய அனர்த்தம் நிகழ்ந்து விட்டதைப்போல சில ஹிந்துக்களே அங்கலாய்த்தனர்//

    It is wrong to demolish it. The Hindus, who protested that demolition, are true to their own faith and conscience. A true Hindu won’t watch gleefully the demolition of the workplace of another ppl. A pretender Hindu will who are a tiny fraction of Hindu population.

    இது பல்லாற்றான் பல்லாண்டுகள் பல பத்திரிக்கைகளும் மன்றங்களிலும் பேசப்பட்டுவிட்டது. இப்போது தேவையில்லை.

    1. Avatar
      தங்கமணி says:

      நிராத் சி சவுத்ரி எழுதுகிறார்.
      ““Muslims do not have the slightest right to complain about the desecration of one mosque in Ayodhya. From 1000 AD every temple from Kathiawar to Bihar, from the Himalayas to the Vindhyas has been sacked and ruined. Not one temple was left standing all over northern India. They escaped destruction only where Muslim power did not gain access to them for reasons such as dense forests. Otherwise, it was a continuous spell of vandalism. No nation with any self-respect will forgive this. What happened in Ayodhya would not have happened had the Muslims acknowledged this historical argument even once.”

      என்ன தேவையில்லை? தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் பிரம்மாண்டமான கோவில்கள் இருக்கின்றன. வட இந்தியாவில் அப்படி பிரம்மாண்டமாக நான்கைந்து கோவில்களே இருக்கின்றன.

      1. Avatar
        K A V Y A says:

        இந்த சர்ச்சை தேவையில்லை. இம்மசூதி இடிக்கப்பட்டு அதன் பின்னர் என்னென்னவோ நடந்தும் விவாதங்கள் மேடை மேடையாக ஏறியும் நீதிமன்ற வழக்குகளும் பின்னர் தீர்ப்புக்களும் வந்து விட்டன. இப்போது இச்சர்ச்சை ஏன்? என்பதுதான் என் கேள்வி. 1909 க‌ட்டுரையை மொழிபெய‌ர்த்து விவாத‌ம் ப‌ண்ணிய‌தைப்போல‌.

        ஆயிர‌மாயிர‌மாண்டுக‌ளுக்கு முன் ம‌ன்ன‌ர்க‌ள் செய்த‌ த‌வறுக‌ளுக்காக‌ இன்று வாழும் ம‌க்க‌ள் வாழ்க்கையைச் சிதைப்ப‌து ச‌ரியென்றால், எல்லாருக்கும் ஒரு முன்னோர் உண்டு; அவ‌ர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ளை இன்றும் ச‌மூக‌ம் வேத‌னையுட‌ன் அனுப‌வித்துக்கொண்டிருக்கிற‌து. அத‌ற்காக‌ இன்று வாழும் அவ‌ர்க‌ள் ச‌ந்த‌திக‌ளைக் குற்ற‌ம் சொல்ல‌லாமா?

        நிராத் சவுத்ரி, ‘முசுலீம்கள்” என்று பொத்தாம் பொதுவாக எழுதியது தவறு. முசுலீம் மன்னர்கள் என்றுதான் எழதியிருக்க வேண்டும். Whoever desecrates the places of worship of other ppl, should be condemned whether they were Muhghal kings, or the lumpen elements who climbed on the Babri Masdij and vandalised it. Saying that it is not a Mosque but only a grave wont wash the crime clean coz the Muslims respected it in different ways and to demolish it is to mock at their way of life. Absolutely wrong and inhuman ! Rather, it is anti-Hindu practice as I already stressed.

        Nirad Chaudhry condemned India, Indian way of life and Indians in General. He left India and took British citizenship, from there he wrote a lot about India in bad words. But as usual with such persons, they are neither here nor there. He is nostalgic for the Hindu way of life about which he is panygeric. Bengalis are known for patriotism and love of India. He is India hater – an exception.

        He lives in a country where the Hindus cant cremate their dead as the State bars it legally on the grounds of pollution. He praises the country.

        What a shame !

        1. Avatar
          punaipeyaril says:

          ஆயிர‌மாயிர‌மாண்டுக‌ளுக்கு முன் ம‌ன்ன‌ர்க‌ள் செய்த‌ த‌வறுக‌ளுக்காக‌ இன்று வாழும் ம‌க்க‌ள் வாழ்க்கையைச் சிதைப்ப‌து ச‌ரியென்றால்—>>>> சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன… 9/11 யார் செய்தது… உலகில் எல்லோரும் பயப்படுவது எதை பார்த்தை… பூதத்தை பார்த்துக் கூட இல்லை…

          1. Avatar
            K A V Y A says:

            99/11 ஐச்செய்தது ஒசாமா பின் லேடன். அதற்கு அமெரிக்கா லேடனை அழித்துவிட்டது. இப்போது உங்கள் பிரச்சினையென்ன? லேடனில் செயலுக்கு எல்லா முசுலீம்களையும் குற்றச்சாட்டுகிறீர்களா? அதைச்சொல்லுங்கள் !

  12. Avatar
    punaipeyaril says:

    இப்படியெல்லாம் எழுதாதீர்கள்… அப்புறம் அவர்கள் 24 சங்கமாக சேர்ந்து மிரட்டப் போகிறார்கள்.அவர்களுக்கு வன்முறை என்பதே என்னவென்று தெரியாது.

  13. Avatar
    மலர்மன்னன் says:

    கஷ்மீர் மீது நடந்த பாகிஸ்தானின் அத்து மீறிய திருட்டுத்தனமான ஆக்கிரமிப்பை அடியோடு ஒழிக்க மிகச் சிறந்த வாய்ப்பு இருந்தும் அதை ஒரு பிரச்சினையாக்கி சர்வ தேச அரங்கிற்கு எடுத்துச் சென்றது நேரு. உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த வல்லபாய் பட்டேலையோ, ராணுவத் தளபதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் ஜனநாயகவாதி என்று தவறாக அழைக்கப்படும் நேரு தன்னிச்சையாக முடிவு செய்து ஐநாவுக்கு கஷ்மீர் நிலவரத்தை எடுத்துச் சென்றது சரித்திரம். அதனால் ஸீஸ் ஃபயர் என்னும் பரஸ்பரத் தாக்குதல் நிறுத்தம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த கஷ்மீரின் பகுதி அதனிடமே மாட்டிக் கொண்டது! அச்சமயம் நமது ராணுவம் ஆக்கிரமிப்பாளர்களை முற்றிலும் விரட்டி ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்கும் நிலையில் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது என்பதுதான் இதில் சோகம். எல்லாம் நேருவின் கைங்கரியம்தான்! அதனால்தான் ஆஜாத் கஷ்மீர் என்ற போலிப் பெயரில் காஷ்மீரின் ஒரு பெரும் பகுதியை பாகிஸ்தானால் வசப்படுத்திக் கொள்ள முடிந்தது. உண்மையாகவும் நியாயப்படியும் கஷ்மீர் பிரச்சினை என்றால் பாகிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்ட பகுதி பற்றிய தீர்வுதான். அங்கிருந்து பாகிஸ்தான் விலகிக் கொண்ட பிறகு மொத்த கஷ்மீர் மாநிலத்திலும் கருத்துக் கேட்பு நடத்தலாம் என்று வேண்டுமானாலும் வாதிக்க முடியும். பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் பாரதத்தின் அங்கமாக உள்ள கஷ்மீருடன் இணையவே விரும்புவர். காரணம் பாக் வசம் உள்ள கஷ்மீர் உண்மையில் ஆஜாதி கஷ்மீர் அல்ல, அடிமைப்பட்ட கஷ்மீர்தான். இதெல்லாம் சமீப கால சரித்திரம், நேரில் கண்ட உண்மை நிலவரம். கஷ்மீர் பள்ளத்தாக்கு ஹிந்துக்கள் சொத்து அபகரிப்பு, வன்புணர்வு உள்ளிட்ட பலவாறான கொடுமைகளுக்கு இலக்காகி மாநில அரசின் பாதுகாப்பும் இன்றி மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வீடு வாசல்,சொத்துகளைத் துறந்து வெளியேற நேர்ந்தது. கஷ்மீர் விடுதலை இயக்கம் என்ற பெயரால் பல போக்கிரிகள் நடத்திய கட்சியின் வெறியாட்ட விளைவு அது. கஷ்மீரிகளின் ஆதரவு பிரிவினைக்கு இல்லை. பாரதத்தின் அங்கமாக இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் உள்ளூர் போக்கிரிகளூம் பயங்கரவாத அழிவு சக்திகளும் போடும் ஆட்டம் அவர்களை மெளனம் சாதிக்க வைக்கிறது. இது இயற்கைதான். நாலு ரவுடிகள் சேர்ந்து கல் எறிந்தால் போதும். உடனே கடைகள் அடைக்கப்படும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும். கடை அடைப்புக்கு மக்கள் பேராதரவு என்று மார் தட்டலாம். இதுதான் கஷ்மீரிலும் நடக்கிறது. மக்கள் அமைதியான அன்றாட வாழ்க்கையையே விரும்புகிறார்கள். அரசியல் காரணங்களால் அதற்குப் போதிய உத்தரவாதம் அளிக்க பாரத அரசால் இயலவில்லை. இதுதான் அங்குள்ள உண்மை நிலவரம். இன்று நிலைமை பலவாறாக மாறியுள்ளது. ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாடு என்பது தொடக்கத்தில் முஸ்லிம்கள் மாநாடு என்றுதான் பெயர் வைத்துக் கொண்டு இருந்தது. இன்றளவும் அது கஷ்மீரைத் தனது பிதுரார்ஜிதமாகக் கருதிக்கொண்டு சூறையாடி வருகிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கு ஜம்முவைவிடச் சிறியது. ஆனால் கஷ்மீர்தான் ஜம்முவைவிட அதிக சட்டமன்றத் தொகுதிகள் பெற்றுள்ளது. இதைப் பற்றியெல்லாம் இன்னும் பேச முடியும். எதுவானாலும் விவரம் தெரிந்து பேச வேண்டும். கஷ்மீர் நிலவரம் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மேலதிக விவரங்கள் தர வேண்டுகிறேன். ஏனெனில் 1990 க்குப் பிறகு கஷ்மீர் செல்ல எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அங்குள்ள எனது நண்பர்களின் தொடர்பும் அறுந்துபோயிற்று. க்ருஷ்ணகுமார் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய அனுபவஸ்தர். அவர் தமது கஷ்மீர் அனுபவங்கள் குறித்து திண்ணையில் ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டுகிறேன். அது சரியான ஆவணமாக இருக்கும். நான் ஏற்கனவே திண்ணையில் சில ஆண்டுகளுக்கு முன் கஷ்மீர் விவகாரம் பற்றி ஆதாரங்களுடன் தொடர்ந்து எழுதி வந்தேன். ஆனால் அது போதாது. இன்றைய நிலையை கஷ்மீர் ஏன் ஒரு விவகாரமாக்கப்பட்டது என்ற முன்கதைச் சுருக்கத்துடன் க்ருஷ்ணகுமார் எழுதினால் அது பெரிய தொண்டாக இருக்கும். பிறர் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுதுவது நீர் மேல் எழுத்தாய் காணாமல் போய்விடும்.
    -மலர்மன்னன்
    -மலர்மன்னன்

  14. Avatar
    punaipeyaril says:

    காவ்யா என்ன சொல்ல வருகிறீர்கள்… தாலிபான்கள் புத்த சிலைகளை இடித்தது தவறல்ல… அவனது நாட்டில் இவர்கள் போல் மலையுயர சிலை வடித்துள்ளதை அவர்கள் சிதைத்தது மாதிரியே இதுவும்… பாப்பான்கள் மந்திரம் சொல்லி, தயிர் சாதம் தின்னாமல், மரக்கறியும் மாமிசமும் தின்று புணர்ந்து திடத்தாள்களுடன் வாள் சுழற்ற இந்த சமூகத்தை பயிற்சி கொடுத்திருந்தால், பின் தெரிந்திருக்கும் திப்பு சுல்தான் வீரனா இல்லை வாஞ்சி நாதனா என்று… ஜிகாத் என்பது இனி கிறிஸ்துவன், இந்து, பௌத்தன் எல்லாருக்கும் ஆன பொது மொழி… சாவு அடுத்தவன் கையில் தான் என்ற நிலைக்கு தள்ளப்படும் போது… பூனை கூட சீறிப் பாயும்…

  15. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ தங்கமணி, வடக்கே கூட காசி விசுவநாதர், மதுரா ஸ்ரீ க்ருஷ்ணர், சோமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்கள் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டவையே. காரணம் அங்கிருந்த புராதன ஆலயங்களும் முகமதியரால் இடிக்கப் பட்டவையே. தமிழ் நாட்டிலும் மதுரை மீனாட்சி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் சுல்தான்களால் சிதைக்கப்பட்டு, பல ஆண்டுகள் மூடியே கிடந்தன. வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலய சிவ லிங்க விக்கிரகம் சேதமடைய இடந்தரலாகாது என்பதற்காக ஹிந்துக்களே ஆலயத்திலிருந்து அகற்றி எடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மூல விக்கிரகம் அத்தி (மரத்தால் ஆன) வரதரைக் கிணற்றில் போட வேண்டியதாயிற்று. இதெல்லாம் அறியாமல் ஹிந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்! சரியான சரித்திரம் சொன்னால் மதவெறியன் என்கிற பட்டம் தருகிறார்கள்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      K A V Y A says:

      எல்லாம் சரிதான் மலர்மன்னன். அவை நடந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவையெற்றெல்லாம் தூசி தட்டி கோயில்களை மீட்கப்போகிறீர்களா?

      சரி அப்படியே மீட்க விரும்பினால், அதற்கு மஜீதிகளை இடிக்கவேண்டுமென்பது மதவெறித்தனமாகாதா? அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்து- முசுலீம்க‌ள் க‌ல‌வ‌ர‌ங்க‌ள் வ‌ர‌வேண்டுமென்று விரும்புகிறீர்க‌ளா?

      அவை உங்க‌ள் கோயில்க‌ள் என்றால் அது பிராப‌ர்டி டிஸ்ப்யூட். நீதிம‌ன்ற‌ங்க‌ளில் வ‌ழ‌க்கு போடுங்க‌ள். அதுவே ச‌ரி.

      1. Avatar
        punaipeyaril says:

        முஸ்லீம்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்த நாட்டின் மண்ணை மண்டியிட்டு முத்தமிட்டு அந்த வாழும் பூமிக்கு விசுவாசமாக இருப்பார்களா..? என்பதே கேள்வி. பணம் என்பது தவிர எதுவுமே இல்லாத அந்த பாலவனக் கண்டுபிடிப்புக்காக உலகத்தையே பாலைவனம் போல் வெட்ட வெளியாக்கும் வெறி நிறைந்த அணுகு முறையை விடுவார்களா என்பதே கேள்வி..

  16. Avatar
    மலர்மன்னன் says:

    ஆண்டு தோறும் டிசம்பர் 6 ஆம் தேதி சில முகமதிய அமைப்புகள் தவறாமல் கறுப்பு தினம் என அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஏதோ வழிபாட்டில் இருந்து வந்த மசூதி இடிக்கபட்டதுபோல் கதை கட்டி அந்த நிகழ்ச்சியை நினைவூட்டி வருகின்றன. அப்புறம் நாம் மட்டும் அதைப் பற்றிப் பேசுவதை ஏன் தவிர்க்க வேண்டும்? மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி தோன்றுவதற்கு முன்பிருந்தே அயோத்தி ஹிந்துக்களின் ஏழு புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்று. அங்கே ஜன்மஸ்தான் என்கிற இடத்தில்தான் பாப்ரி நினைவு மண்டபம் இருந்தது. ஜன்மஸ்தான் என்றால் யாருடைய ஜன்மஸ்தானம்? பாபருடையதா? அங்கு ஏன் பாபருக்கு நினைவு மண்டபம்? கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? ஐநூறு ஆண்டுகளுக்கு முன் முகமதியரே இல்லாத அயோத்தியில் மசூதிக்கு என்ன அவசியம்? அது மசூதி அல்ல வெற்றி நினைவுச் சின்னம்தான் என்பதற்கு அதுவே சாட்சி. மேலும் அதை அமைத்த மீர் பாக்கி ஒரு ஷியா. அதைப் பின்னர் சுன்னிகள் அபகரித்துக் கொண்டனர்!
    ஹிந்துக்களை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே ஹிந்துக்களின் புண்ணியத் தலங்களில் எல்லாம் வீம்புக்காக மசூதியும் வெற்றிச் சின்னமும் அமைப்பது இஸ்லாமியர் சம்பிரதாயம்.
    -மலர்மன்னன்

  17. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \க்ருஷ்ணகுமார் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய அனுபவஸ்தர். அவர் தமது கஷ்மீர் அனுபவங்கள் குறித்து திண்ணையில் ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டுகிறேன். அது சரியான ஆவணமாக இருக்கும்.\ கஷ்மீர் ஏன் ஒரு விவகாரமாக்கப்பட்டது என்ற முன்கதைச் சுருக்கத்துடன் க்ருஷ்ணகுமார் எழுதினால் அது பெரிய தொண்டாக இருக்கும்.\

    அன்பார்ந்த ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய, தங்களது அன்புக்கு மிக்க நன்றி. கஷ்மீர் விஷயமாக தற்சமயம் ஒரு வ்யாசம் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. கஷ்மீர் வ்யவஹாரம் மற்றும் எனது அனுபவங்கள் எழுத எண்ணமுண்டு தான். இன்னும் ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு எழுதுவது உசிதம் என நினைக்கிறேன்.

    எனக்கு இந்த வ்யாசத்தில் பேசப்படும் கருப்பொருள் சார்ந்து மனதில் முள்ளாகத் தைக்கும் விஷயம் கஷ்மீரத்திலிருந்து பெயர்ந்து சென்ற கஷ்மீர பண்டிதர்கள் நிலை. மிகப்பல பகுதிகளில் சீக்கியர்கள் கஷ்மீரத்தில் தங்குகையில் கஷ்மீரப்பண்டிதர்கள் பெயர்ந்து சென்றதன் மூலம் அவர்கள் இழந்தது அதிகம் பெற்றது சொல்பம்.

    ஜம்மு மற்றும் தில்லி NCR ப்ராந்தியத்தில் புலம் பெயர்ந்த கஷ்மீரப்பண்டிதர்கள் பலர் உள்ளனர். எனக்குப் பல நண்பர்களும் உண்டு.

    புலம் பெயர்ந்தவர்களின் முதல் இழப்பு பாஷை. தமிழர், கன்னடிகர், மலையாளி, மற்றும் தெலுகு மொழி பேசுவோர் குடும்பங்களில் என்ன தான் பாஷைக்கலப்பு என்ற ப்ரச்சினை இருப்பினும் குடும்பத்தவர் அனைவரும் தங்களிடையே மற்றும் தங்களது மொழி நண்பர்களிடையே பேசுகையில் கலப்புள்ள அவரவர் பாஷையே பேசுவர்.

    கஷ்மீரப்பண்டிதர்களின் குடும்பங்களில் சில குடும்பங்கள் விடுத்து மிகப்பெரும்பாலும் அடுத்த தலைமுறையைச்சார்ந்த குழந்தைகள் கஷ்மீரி அறவே பேசுவதில்லை. மற்றவர் பேசினால் புரிந்து கொள்வர். அவ்வளவே. பின் அதற்கடுத்த தலைமுறை?ஆனால் பஷ்டூன், சிந்தி குடும்பங்களில் பஷ்டூன், சிந்தி மொழி தான் பேசுகிறார்கள். அதே போல் விவாஹங்களும் மிகப்பெரும்பாலும் வேறு மாகாணங்களைச்சார்ந்தவருடன். கஷ்மீரப்பண்டிதர்கள் இழந்து வருவது தங்கள் பாஷை, உணவுவகைகள், உடை, தங்களது நில புலன் கள் முடிவாக தங்களது வேர். இதை எழுதும் போது மனதுமிகவும் கனக்கிறது. ஆனால் நிதர்சனம்.

    மனதில் ஒரு ஓரத்தில் நான் ஏன் தமிழகம் விட்டுப் பெயர்ந்தேன் என்றும் அவ்வப்போது கேழ்வி எழுவதுண்டு தான்.

  18. Avatar
    தங்கமணி says:

    //நிராத் சவுத்ரி, ‘முசுலீம்கள்” என்று பொத்தாம் பொதுவாக எழுதியது தவறு. முசுலீம் மன்னர்கள் என்றுதான் எழதியிருக்க வேண்டும். //
    அவர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்.
    முஸ்லீம்கள் அந்த மசூதிகளை நிராகரித்திருந்தால், கோவில்கள் மீது மசூதிகளை கட்டியவர்கள் முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் மன்னர்கள் என்றும், அவர்கள் செயலுக்கு முஸ்லீம்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் கூறி, அந்த மசூதிகளை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறியிருந்தால்,நீங்கள் சொல்லுவது சரி.
    முஸ்லீம் மன்னர்கள் கட்டிய மசூதிகள தங்களுடைய மசூதிகளாகவும் அதற்கு சொந்தம் கொண்டாடியும், அப்படி மசூதிகளை திருப்பி தருவதற்கு கடும் எதிர்ப்பு காட்டும் முஸ்லீம்கள் அந்த பிரச்னைகளுக்கு சொந்தக்காரர்களாகத்தான் காட்டமுடியும்.

    1. Avatar
      K A V Y A says:

      எவருமே பொதுவாக முசுலீம்கள் என்று ஒட்டு மொத்த சமுதாயத்தைச் சொல்லக்கூடாது. நிராத் சவுத்ரியோ எவராகவிருந்தாலும் தவறான நடத்தை.

      ஒரு சில சீக்கியர்கள் இந்திராவை சுட்டதனால் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தினர் மீது 1984 தில்லியில் தாக்குதல் நடந்தது.

      முகலாயர்கள் கோயில்களை இடித்திருந்தால், இன்று அதை எவரேனும் சரியென்றால், அவர்களைக்கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக முசுலிம்கள் அனைவருமே காரணம் என்பது ஒரு கொலைபாதகச்செயல்.

      நேற்றைய கசாப் தூக்கிலிடப்பட்டதற்கும் நிறைய முசுலீம் மும்பாய் பொதுமக்கள் வரவேற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முசுலிம் அமைப்பு இன்று வரவேற்றிருக்கிறது.

      ஒரு பைத்தியக்காரக்குமபல் மஜூதியெலேறி உடைத்ததற்கு அவர்கள்தான் காரணம். எல்லா இந்துமக்களும் இல்லை. அப்படி உண்டு என்று எவரேனும் சொன்னால் என் பதில் தங்கமணிக்குக்கொடுத்ததே.

      மலர்மன்னன், கிருஸ்ணகுமார், தங்கமணி போன்றோரின் கொளகையை ஒட்டுமொத்த இந்துசமூகம் ஏற்றுக்கொண்டதாக இல்லை. அவர்கள் கற்பனை பண்ணலாம். அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று இந்து அமைப்பு ஒன்று ஆட்சிபீடத்திலே ஏறி, இந்தியாவை தியாக்கிரசியாக்கி விட்டிருக்கலாமே?

      மன்னர்கள் கோயிலை இடித்து மஜூதி கட்டினார்கள் என்றால், அவை திரும்பத்தரப்படவேண்டும்ன்றால், நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு ஆதாரங்களைக்காட்டி வெற்றிபெறுங்கள். அதுவே சரி. மாறாக மசூதிலேறி உடைப்பது ரவுடித்தனம்.

      முசுலிம் மக்கள் அனைவரின் மேல் வெறுப்பைத்தூண்டும் வண்ணம் எழுதுவது மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் எல்லாருக்கும் தெய்வம். வடநாட்டு இசுலாமியர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் எப்படி இராமரை மதிக்கிறார்கள் என்று தெரியும்.

      நீங்கள் நாங்கள் இந்துக்கள் என்றாலும் அவர் நியாயத்தைத்தான் பார்ப்பார். அதன்படி அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே அவர் நினைப்பார். இல்லாவிட்டால் அவர் தெய்வமில்லை.

  19. Avatar
    suvanappiriyan says:

    //முஸ்லீம்கள் அந்த மசூதிகளை நிராகரித்திருந்தால், கோவில்கள் மீது மசூதிகளை கட்டியவர்கள் முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் மன்னர்கள் என்றும், அவர்கள் செயலுக்கு முஸ்லீம்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் கூறி, அந்த மசூதிகளை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறியிருந்தால்,நீங்கள் சொல்லுவது சரி.//

    சமண கோவில்களையும் பவுத்த கோவில்களையும் சைவ கோவில்களாக அன்று அரசர்கள் மாற்றிய பொழுது அதற்கு சைவ மக்கள் ஆதரவளித்தனர். இன்று தமிழகத்தில் 80 சதமான கோவில்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் அது ஆதியில் ஒரு சமண கோவிலாகவோ அல்லது பவுத்த கோவிலாகவோத்தான் இருந்ததாக ஆய்வுகள தெரிவிக்கின்றன. ஐயப்ப சுவாமியே முன்பு பவுத்த கோவிலா இருந்ததாம். அனைத்தையும் தங்கமணி பவுத்தர்களிடமும், சமணர்களிடமும் திருப்பி தந்து விடத் தயாரா?

  20. Avatar
    தங்கமணி says:

    // லேடனில் செயலுக்கு எல்லா முசுலீம்களையும் குற்றச்சாட்டுகிறீர்களா?//

    ஒன்று செய்யுங்கள்.
    சும்மா
    https://www.google.com/search?q=bin+laden+rally&hl=en&safe=active&tbo=d&source=lnms&tbm=isch
    என்று கூகுளில் bin laden rally என்று போட்டு தேடிப்பாருங்கள்.
    எவ்வளவு முஸ்லீம்கள் பின் லாடனின் புகைப்படத்தை போட்டு பின் லாடனுக்கு ஆதரவாக ஊர்வலம் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

  21. Avatar
    தங்கமணி says:

    ஐயா சுவனப்பிரியன்,
    அவுரங்கசீப் போன்ற முஸ்லீம் அரசர்கள் இந்துக்கோவில்களை இடித்ததே இல்லை என்பதுதானே உங்கள் வாதமாக இருக்கும்? அந்த ஆவணங்கள் எல்லாம் யூதர்களும் ஆங்கிலேயர்களும் முஸ்லீம் அரசர்கள் மீது பழிவரவேண்டும் என்பதற்காக மாற்றிவிட்டார்கள் என்றுதானே சொல்வீர்கள்?
    இப்போது என்ன மாற்றிவிட்டீர்களா?

  22. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    ஒளரங்கசீப் விவகாரம் பின்னால் நடந்தது. அதற்கு முன்னால் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றீர்களே! தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியதாக வரலாறு. அப்படி ரத்த ஆறை ஓட்டி ஒரு நல்ல சிறந்த கொள்கையையாவது கொடுத்தீர்களா? மாற்றாக சைவம் என்ற பெயரிலும் வைணவம் என்ற பெயரிலும் தமிழகத்தில் புதிய கலாசார்தை புகுத்தி இந்த மக்களை சாதி வேற்றுமையால் பிரித்து வைத்தீர்கள். அது இன்று வரை தர்மபுரியையும் ராமநாதபுரத்தையும் எரித்து சாம்பலாக்கி வருகிறது. நீங்கள் செய்த சாதி கொடுமையை தாங்க முடியாமல் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி ஓடியவர்கள்தானே எங்களின் முன்னோர்கள்? பாரத மண்ணில் இஸ்லாமும் கிறித்தவமும் வேரூன்ற முக்கிய காரணமே உங்களின் சாதி வெறிதானே! மறுக்க முடியுமா?

  23. Avatar
    Indian says:

    “எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றீர்களே!”
    @suvanappiriyan, this has been discussed extensively in Thinnai/Tamil Hindu in the past and was proved to be just a propaganda.No use flogging a dead horse YET AGAIN. It is tiresome and please get over it. The problem is you are an unfortunate victim of Islam and suffer from ” Stockholm syndrome”. I urge you to get back to your Hindu roots,at least for your forefathers sake, for they were the first VICTIMS of Islam.

      1. Avatar
        தங்கமணி says:

        தற்கொலை செய்துகொள்பவர்களை தடுத்தல் இயலாது. தற்கொலை படையாக இந்த காலத்திலும் பல முஸ்லீம்கள் அப்பாவி ஷியா பிரிவினர் மசூதிகளிலும், கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் தற்கொலை செய்துகொண்டும், மற்றவர்களை கொன்று சாகிறார்கள். தடுக்க முடிந்தால் தடுக்கலாமே?
        இவர்களை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்களே?
        சுவனப்பிரியன் இவர்களை தடுக்கலாம். ஆனால் தடுப்பதாக தெரியவில்லையே?

        1. Avatar
          K A V Y A says:

          ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் பல்லாயிரக்கணக்கான சமணர்கள்? மதுரையிலும் தமிழகத்தில் எங்கு நோக்கிலும் அவர்களாகவேயிரந்து தமிழில் ஏராளமான நீதிநூல்களை அழகுதமிழில் படைத்த சமணர்கள் தற்கொலைப்பண்ணிய காரணம்? தெரிந்தால்தான் ஒப்பீடு செய்ய முடியும். ஆதாரத்தோடு சொல்லவும்.ஜெயமோஹன் சொன்னார் என்று சொல்லாதீர்கள். அவர் வரலாற்றாய்வாளரன்று.

        2. Avatar
          K A V Y A says:

          //தற்கொலை செய்துகொள்பவர்களை தடுத்தல் இயலாது. //

          சினேகா என்றமைப்பு சென்னையில் தடுக்கிறது. எவராவது தற்கொலை செய்யும் மன்ப்பானமையிருந்தால் அவர்கள் அவர்களை நாடலாம்.

          அதைப்போல சமணர்கள் அனைவரும் மதுரையில் தற்கொலை செய்யுமளவுக்குத் தூண்டப்பட்டிருந்தால், அல்லது அவர்களாகவே முடிவெடுத்திருந்தால் அது கண்டிப்பாக வெளித்தெரிந்திருக்கும். அவர்கள் ஓரிருவரல்ல. பல்லாயிரக்கணக்கானவர்கள்.

          அதைத் தடுத்திருந்திருப்பது நல்லோர் கடமை. அதிலும் சமணர்கள் பிறயுயிர்களைக் கொல்லாமை போற்றியவர்கள். அஹிம்சையே அவர்கள் கொள்கை. தமிழுக்குப் பெருங்கொடை அளித்தவர்கள். அவர்கள் அழிவில் இன்பம்டைந்தோரிந்தால் அவர்கள் கயவர்கள்.

  24. Avatar
    தங்கமணி says:

    திரு சுவனப்பிரியன்
    இப்படி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் உங்களுக்கு பதில் சொல்லிகொண்டிருக்கிறேன். வாயை மூடிக்கொள்கிறீர்கள். ஒரு சில மாதம் கழித்து திரும்பவும் அதே உளறலை சொல்லுகிறீர்கள்.

    http://puthu.thinnai.com/?p=6639#comment-2276

    இதில் உங்களுக்கு எழுதிய பதில் இருக்கிறது. அதுவும் வேறொருவர் உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்னால் சொன்ன பதில்.

    சமணர்கள் செய்துகொண்டது தற்கொலை. அது கொலை அல்ல.சமணர்கள் செய்துகொண்டது தற்கொலையாகத்தான் ஆவணமாக்கப்பட்டுள்ளது. கொலை கொலை என்று உங்கள் ஆட்கள் கொலைகள் செய்வதை நியாயப்படுத்த இந்திய வரலாற்றை கேவலப்படுத்தாதீர்கள். திரிக்காதீர்கள்.

    சரி அவுரங்க சீப்பு விவகாரம் பின்னால் நடந்துதான். ஆனால் நீங்கள்தான் நாகரீகமற்ற தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லிக்கொடுக்க வந்தவர்களாயிற்றே. ஏன் அப்படி அவுரங்கசீப்பும், எல்லா முஸ்லீம் மன்னர்களும் அப்படி நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டார்கள்?

    1. Avatar
      K A V Y A says:

      ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயம் தற்கொலை பண்ணக்காரணம்?

        1. Avatar
          K A V Y A says:

          அதன் சுருக்கத்தை ஓரிரு வரிகளில் போடவும். ஏன் தற்கொலை? ஒரிருவர் அல்ல. பல்லாயிரக்கணக்கானவர் ஒரே சமயத்தில். ஏன்?

  25. Avatar
    punaipeyaril says:

    கசாப் ஒரு ஞானி, அமைதி மார்க்கத்தின் தென்றல் , பச்சிளம் மனம் கொண்டவர், அம்மாவின் கை பேசி என்று கொஞ்ச நாள் கழித்து இவர்கள் சொல்வார்கள்…

  26. Avatar
    suvanappiriyan says:

    //கசாப் ஒரு ஞானி, அமைதி மார்க்கத்தின் தென்றல் , பச்சிளம் மனம் கொண்டவர், அம்மாவின் கை பேசி என்று கொஞ்ச நாள் கழித்து இவர்கள் சொல்வார்கள்…//

    சாது பிரக்யாசிங், புரோகித், நரேந்திர மோடி, அவரின் பெண் அமைச்சர் இவர்களுக்கெல்லாம் புனை பெயரிலும், தங்கமணியும் சேர்ந்து பிற் காலங்களில் சிலை வைக்கலாம். பூஜைகள் கூட நடக்கலாம்: அதற்கு நமது அரசு அங்கீகாரமும் தரலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம். :-(

  27. Avatar
    suvanappiriyan says:

    //சமணர்கள் செய்துகொண்டது தற்கொலை. அது கொலை அல்ல.சமணர்கள் செய்துகொண்டது தற்கொலையாகத்தான் ஆவணமாக்கப்பட்டுள்ளது. கொலை கொலை என்று உங்கள் ஆட்கள் கொலைகள் செய்வதை நியாயப்படுத்த இந்திய வரலாற்றை கேவலப்படுத்தாதீர்கள். திரிக்காதீர்கள்.//

    சமீபத்தில் தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரத்தில் பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாக தலித்களில் ஒரு காவலரும் வன்னியர்களில் அவரது உறவினர்களும் காரணமாக்கப்படுகின்றனர். ‘உன் பெண்ணை அவன் இழுத்துக்கிட்டு போயிட்டான். நாண்டுக்குட்டு சாவுடா’ என்று உசுப்பேற்றியதாலேயே அந்த முதியவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு தூண்டுவது கொலைக்கு சமம்தானே தங்கமணி. அந்த முதியவரின் தற்கொலை அவராக ஏற்படுத்திக் கொண்டதா? சிந்திக்க மாட்டீர்களா!

    அதையே சமணர்களின் கழுவேற்றத்திலும் பொருத்திப் பாருங்கள்.

    1. Avatar
      தங்கமணி says:

      மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.
      சமணர்கள் தற்கொலை செய்துகொண்டது அவர்களது விவாத பந்தயத்தின் காரணமாக. நாங்களே வெற்றிபெறுவோம். தோற்றால் கழுவேறி இறப்போம் என்றார்கள்.
      தோற்றவர்களில் அனைவரும் கழுவேறி இறக்கவில்லை. ஒரு சில சமண தலைவர்களே இறந்தார்கள். மற்றவர்கள் சம்பந்தரிடம் திருநீறு பெற்று சைவர்களாகி எண்ணாயிரம் பிராம்மணர்களாக அஷ்டசஹஸ்ரம் என்ற பெயரில் இருக்கிறார்கள். இருப்பினும் தேசபிரஷ்டம் சாவுக்கு சமானம் என்பதால், அவர்கள் தாங்களாக வெளியேறி சேரநாடு சென்றார்கள்.
      மேலும் சமணர்கள் யாரும் கட்டாயமதமாற்றமும் செய்யபப்டவில்லை. தமிழ்நாட்டில் ஏராளமான சமணர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நாயனார் என்ற பெயரில் காஞ்சிபுரம் அருகே இன்னமும் சமணர்கள் இருக்கிறார்கள்.

      இதற்கும் வன்னியர் தலித் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம்?

      வேண்டுமானால், டார்பர் கருப்பின முஸ்லீம்களை சூடான் அரபு முஸ்லீம்கள் கொன்றதை கை கொட்டி வரவேற்று நீங்கள் எல்லோரும் அரபு முஸ்லீம்களின் வெற்றியை கொண்டாடியதை பற்றி கூறலாமே?

  28. Avatar
    suvanappiriyan says:

    //சரி அவுரங்க சீப்பு விவகாரம் பின்னால் நடந்துதான். ஆனால் நீங்கள்தான் நாகரீகமற்ற தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லிக்கொடுக்க வந்தவர்களாயிற்றே. ஏன் அப்படி அவுரங்கசீப்பும், எல்லா முஸ்லீம் மன்னர்களும் அப்படி நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டார்கள்?//

    இது அந்த கால வழக்கம். வெற்றி பெற்ற அரசன் தோல்லியடைந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிப்பதும், அங்கு தனது கலாசாரத்தை பரப்ப நினைப்பதும் அன்றைய அரசுகள் செய்த வழமையான ஒரு பழக்கம். ஏன் நம் தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்கள் குடி மக்களின் ரத்தத்தை ஓட்டவில்லையா? ஆதாரமாக தமிழ் காப்பியங்கள் இன்றும் உள்ளனவே! கோவில் கருவூலங்களை கொள்ளையடித்தது இந்து மன்னர்கள்தானே! ஆதாரம் வேண்டுமா? பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டனரே! சுட்டி தரட்டுமா?

    1. Avatar
      தங்கமணி says:

      என்னது அது அந்த கால வழக்கமா? உலகத்தையே சீர்திருத்த வந்த்தாக சொல்லப்படும் இஸ்லாம் ஏன் ஜஹிலியா வழக்கத்தை காபிர்களை விட மிக அதிகமாக பின்பற்றியது?

  29. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!
    //தற்கொலை படையாக இந்த காலத்திலும் பல முஸ்லீம்கள் அப்பாவி ஷியா பிரிவினர் மசூதிகளிலும், கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் தற்கொலை செய்துகொண்டும், மற்றவர்களை கொன்று சாகிறார்கள். தடுக்க முடிந்தால் தடுக்கலாமே?//

    சுதந்திர இந்தியாவின் முதல் கொலையான காந்தியை கொன்றவர்கள் உங்கள் இனத்தவர். அந்த கோட்சே மகான் என்று கொண்டாடுபவர்களும் உங்கள் இனத்தவர். பாபரி மசூதியிலிருந்து குஜராத் கலவரம் மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வரை நிகழ்த்தியது உங்கள் இனத்தை சேர்ந்த இந்துத்வாவினர். அவர்களிடம் உங்களின் பிரசாரத்தை முதலில் ஆரம்பிக்கலாமே!

    குல்தீப் நய்யாரின் பேட்டியை கொஞ்சம் பாருங்கள்.

    ஆனந்தவிகடன் இதழில் (3.10.2012) பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
    கேள்வி: இந்திய ஜனநாயகத்துக்குச் சவா லான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?
    பதில்: “பசி இன்றைய இந்தியாவில் அரங்கே றும் அத்தனைப் பயங்கரங்களுக்குப் பின்னணி யில் பட்டினியோடு தூங்கப் போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்டவற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினை வாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித் தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும். இன் னொரு முக்கிய காரணம் இந்துத் தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந் தியையே பழி வாங்கியது. திட்டமிட்டு அரங் கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான் களால் உருவாக்கப்பட்டவைதானே. சமீப காலமாக திரைக்குப் பின்னால் தென்படும் இந்துத் தாலிபான்

    //இவர்களை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்களே?//

    இந்துத்வாவை ஆதரிக்கும் மலர்மன்னன், க்ருஸ்ணகுமார், புனை பெயரில், தங்கமணி, ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இந்து மதத்திலும் இருக்கிறார்களே! அவர்களை திருத்துவது யார்?

    //சுவனப்பிரியன் இவர்களை தடுக்கலாம். ஆனால் தடுப்பதாக தெரியவில்லையே?//

    நாங்கள் கடந்த 25 வருடங்களாக உழைத்து தீவிரவாத எண்ணம் உடைய எத்தனையோ இளைஞர்களை மாற்றியுள்ளோம். வஹாபியத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று.

    ஆனால் வளர்ந்து வரும் இந்து தீவிரவாதத்தை கட்டுப் படுத்த தங்கமணி இதுவரை என்ன செய்தார் என்பதை விளக்கினால் நலமாக இருக்கும்.

  30. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள சுவனப்பிரியன்.
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் வழக்கம்போல முடிச்சு போடுகிறீர்கள்.
    இந்தியாவில் வளர்ந்துவரும் இந்து தீவிரவாதத்தை துவக்கியவர்கள் முஸ்லீம்கள்தான்.
    இதனை முன்னரே எழுதியிருக்கிறேன்.

    மாப்ளா கலவரம் என்று கேரளாவில் இந்துக்கள் மீது வெறியாட்டம் நடந்தது. அதற்கு முன்னால் எதாவது ஒரு கலவரம் இந்துக்கள் முஸ்லீம்கள் மீது கலவரம் நடத்தியிருக்கிறார்களா? அல்லது இந்து தீவிரவாதம் இருந்ததா?

    பிரிட்டிஷ் இந்தியாவில் பாகிஸ்தான் என்று தனி நாடு வேண்டும் என்பதற்காக இந்துக்களை லுங்கி அவிழ்த்து பார்த்து கொலைகளை செய்த ஜின்னாவின் டைரக்ட் ஆக்‌ஷன் டேவில் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களில் யார் தீவிரவாதிகள்?

    முழு இந்து சமூகமும் காந்தியின் பின்னால்தானே இருந்தது, இன்னும் இருக்கிறது?

    முப்பது கோடி இந்துக்களில் எத்தனை பேர் தீவிரவாதியாக ஆகி முஸ்லீம்களை கொன்றார்கள்?
    ஆனால் அதுவரை எத்தனைமுறை இந்துக்கள் மீது முஸ்லீம்கள் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள் என்று படித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ளுங்களேன்.

    முஸ்லீம்கள் பாட்டுக்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டே இருப்பார்கள். இந்துக்கள் வாயையும் கையையும் மூடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூட நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அப்படி நடப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.

    Muslims are bullies and Hindus cowards என்று திருவாய் மலர்ந்தது காந்தியடிகள்தான். அது இன்னமும் ஏறத்தாழ சரியாகத்தான் இருக்கிறது.

  31. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //பிரிட்டிஷ் இந்தியாவில் பாகிஸ்தான் என்று தனி நாடு வேண்டும் என்பதற்காக இந்துக்களை லுங்கி அவிழ்த்து பார்த்து கொலைகளை செய்த ஜின்னாவின் டைரக்ட் ஆக்‌ஷன் டேவில் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களில் யார் தீவிரவாதிகள்?//

    பிரிவினை நேரத்தில் இரண்டு பக்கமும் உயிர் பலி நடந்தேறியது. இதற்கு காரணமாக ஜின்னா, ராஜாஜி, பட்டேல் என்று பலர் காரணமாகின்றனர். ஒரு வகையில் ஜின்னாவை மடையன் என்று கூட கூற தயங்க மாட்டேன். ராஜாஜி போன்றவர்கள் விரித்த வலையில் வீழ்ந்தவர். இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது சுய நலத்தோடு நாட்டை பிரித்து கொண்டு போனார். நாடு ஒன்றாக இருந்திருந்தால் பல கசப்புகள் மாறி இந்து முஸ்லிம் ஒற்றுமை சிறப்பாகியிருக்கும். அதை கெடுத்தது ஜின்னாவின் நாடாளும் ஆசை.

    //முஸ்லீம்கள் பாட்டுக்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டே இருப்பார்கள். இந்துக்கள் வாயையும் கையையும் மூடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூட நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அப்படி நடப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.//

    ஆஹா..என்ன அருமையாக பூசி மொழுகுகிறீர்கள்? இது வரை நடந்த கலவரங்கள் அனைத்திலுமே பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தான். சுதந்திரத்திற்கு பிறகு சொத்துக்களை இழந்ததும், உயிர்களை இழந்ததும் முஸ்லிம்கள் தான். வெள்ளைக் காரன் எவ்வாறு நம்மை பிரித்தாண்டான் என்பதை மார்க்கண்டேய காட்ஜூவின் சமீபத்திய கட்டுரையை பாருங்கள்..

    பிரித்து ஆளவேண்டும்!
    ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’
    ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’
    இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.
    • மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.
    • மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.
    • தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
    மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரை

    http://www.thehindu.com/opinion/lead/rid-our-body-politic-of-communal-poison/article3985402.ece

    அவன் விதைத்த விதை இன்று வரை அறுவடை செய்து கொண்டிரு;கிறோம்.

  32. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்
    //ராஜாஜி போன்றவர்கள் விரித்த வலையில் வீழ்ந்தவர்.//

    நீங்கள் எழுதிய உளறலுக்கு காவ்யா பதிலெழுதுகிறாரா என்று பார்க்கிறேன்.
    உங்கள் பக்கமிருந்து வரும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகுக்கெல்லாம் பதிலெழுதமாட்டார் என்று தெரியுமாதலால் இங்கே பதிலும் எழுதுகிறேன்

    முஸ்லீம் லீக் எந்த வருடம் பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறது? எந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
    எந்த வருடம் இது சம்பந்தமாக ராஜாஜி பேசுகிறார் என்று பார்க்கலாமா?

    1932ஆம் வருடம் முஸ்லீம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை கவிஞர் இக்பால் வைக்கிறார்.
    1940ஆம் வருடம் அதிகாரப்பூர்வமாக முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னா அதனை தனது முக்கிய குறிக்கோளாக அறிவிக்கிறார்
    1944ஆம் வருடம், முஸ்லீம் லீக் கோரிக்கையை எதிர்கொள்ள சி ஆர் பார்முலா என்ற பார்முலாவை ராஜாஜி தெரிவிக்கிறார். அந்த பார்முலாவின் படி காந்தி ஜின்னாவிடம் பேசுகிறார்

    அந்த பார்முலாவையும் ஜின்னா நிராகரித்துவிட்டார்.

    இதுதான் கதை. இதில் எங்கே ஜின்னாவை ராஜாஜி “தான் விரித்த வலையில்” வீழ்த்துகிறார்?

    1946இல் தனது பாகிஸ்தான் கோரிக்கைக்காக இந்துக்களை ஜின்னா படுகொலை செய்ய ஆணையிடுகிறார். அதுதான் டைரக்ட் ஆக்‌ஷன் டே.
    அந்த வன்முறை அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் உலுக்குகிறது. முஸ்லீம் தலைவர்கள் குதூகலிக்கிறார்கள்.

    ஜின்னா போன்றவர்களின் முரட்டுத்தனத்தையும் வன்முறையையும் பார்த்துவிட்டுத்தான் ராஜாஜி அவர்கள் தனிநாடு என்று போனால் போகட்டும் என்று காந்தியிடம் கூறினார்.

    இந்த லட்சணத்தில் யார் திண்ணையில் வந்து வரலாறு பாடம் எடுக்கப்போகிறார்கல் என்று நினைத்துகொண்டு இப்படி முஸ்லீம்களை அப்பாவிகளாகவும் இந்துக்களை சதிகாரர்களாகவும் காட்ட இஸ்லாமிய வழியில் ஒரு முயற்சி!

  33. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //ஜின்னா போன்றவர்களின் முரட்டுத்தனத்தையும் வன்முறையையும் பார்த்துவிட்டுத்தான் ராஜாஜி அவர்கள் தனிநாடு என்று போனால் போகட்டும் என்று காந்தியிடம் கூறினார்.
    இந்த லட்சணத்தில் யார் திண்ணையில் வந்து வரலாறு பாடம் எடுக்கப்போகிறார்கல் என்று நினைத்துகொண்டு இப்படி முஸ்லீம்களை அப்பாவிகளாகவும் இந்துக்களை சதிகாரர்களாகவும் காட்ட இஸ்லாமிய வழியில் ஒரு முயற்சி!//
    கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பீன்”என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.

    “பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
    மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
    ‘1917 முதலே வி.டி.சாவர்க்கர் இந்து ராஷ்ட்ரா கொள்கையை தெளிவாகவே பேசி வந்தார். அவர் இந்துக்களை அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்திங்கான அடிப்படைகளை அமையுங்கள் என ஆலோசனை வழங்கினார். அவர் சொன்னார்: இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்த வொரு அதிகாரமும் இல்லை.’
    R.N.AGARWAL QUOTED IN THE DIALOGUEBETWEEN HINDUS AND MUSLIMS.
    வீர சவர்க்காரின் கூற்றை கவனியுங்கள். இந்தியா ஒற்றை தேசமல்ல. அதோடு முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் என்ன அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று 1917 லேயே முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறார்.

    ‘பாகிஸ்தான் இயக்கத்தின் உண்மையான ஆதரவு எங்கிருந்து வந்தது என்பதை ஆராயும் போது அதிகாரம் தங்கள் கைகளில் வந்த போது தங்கள் நடத்தைகளால் முஸ்லிம் மனங்களில் மிகப் பெரிய அவ நம்பிக்கையை ஏற்படுத்திய காங்கிரஸிடமிருந்துதான் என்பது தெளிவுபடத் தெரியும்’

    மிகப் பரந்த எண்ணமுள்ள சிமன்லால் ஸிட்டர்டு தனது (RECOLLECTION AND REFLECTION) என்ற நூலின் CONGRESS PARENTAGE OF PARTITION என்ற அத்தியாயத்தில் பக்கம் 414ல் விவரிக்கிறார்.

    ‘திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார்கள். அதனை எற்றுக் கொண்டிருந்தால் பாகிஸ்தான் தோன்றியே இருக்காது’

    கலைஞர் மு. கருணாநிதி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, பாட்னா, (3-2-1996) பக்கம் 6

    எனவே முதலில் ஜின்னாவுக்கு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை கேட்கும் அளவுக்கு தள்ளியது காங்கிரஸ் காரர்கள் தான் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் ஜின்னாவைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை என்பதை முன்பே கூறி விட்டேன்.

    //1946இல் தனது பாகிஸ்தான் கோரிக்கைக்காக இந்துக்களை ஜின்னா படுகொலை செய்ய ஆணையிடுகிறார். அதுதான் டைரக்ட் ஆக்‌ஷன் டே.//

    இதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இந்த செய்தி புதிதாக இருக்கிறதே?

  34. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள சுவனப்பிரியன்,

    நீங்கள் ஆதாரப்பூர்வமாக ராஜாஜியின் சதித்திட்டத்தை காட்டுங்கள். ஜின்னா ஏமாளி, ராஜாஜியின் சதிவலையில் விழுந்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள்.

    இல்லையேல் நீங்கள் உளறியதை ஒத்துகொள்ளுங்கள்.

    அதன் பின் பேசலாம்.

  35. Avatar
    admin says:

    அன்பர்களுக்கு,

    பிறர் எழுதிய நீண்ட கட்டுரைகளை காபிபேஸ்ட் செய்வதை தவிருங்கள்.

  36. Avatar
    சான்றோன் says:

    ”நேரடி நடவடிக்கை ” என்ற பெயரில் வெளிப்படையாக அறிவித்து ,அதை நடத்திக்காட்டியவன் வங்க‌த்தை சேர்ந்த இஸ்லாமிய வெறியன் சுஹ்ரவர்த்தி……..இவனது தலைமையில் நவகாளியில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்…….ஹிந்துப்பெண்கள் கூட்டம் கூட்ட்மாக கற்பழித்து கொல்லப்பட்டனர்…….

    ஹிந்துக்கள் எதிர் நடவடிக்கைக்கு தயாரானவுடன், சுஹ்ரவர்த்தி , காந்தியிடம் சரண‌டைந்தான்…. அவனையும் உடன் வைத்துக்கொண்டு நவகாளி சென்ற காந்தி தனது வழக்கமான பிளாக் மெயில் யுக்தியான உண்ணாவிரதத்தை பயன் படுத்தி முஸ்லீம்களை காப்பாற்றினார்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *