இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்

This entry is part 6 of 28 in the series 27 ஜனவரி 2013

kamal

சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். நான் வேறு கோணத்தில் இந்த விவகாரத்தை பார்க்க விரும்புகிறேன்.
பொதுவாகவே கமல் ஹே ராம் மாதிரியான படங்களை எடுக்கும் போது இந்து சமய அடிப்படைவாதிகள், கமல் இந்துக்களை புன்படுத்துகிறார் என்றும், முசுலீம்களை பெரிதாகக் காண்பித்து இந்துக்களை மட்டம் தட்டி முசுலிம்களை கவர நினைக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலர் படத்திற்கு தடை விதிக்கக் கூறி வன்முறையில் இறங்குவார்கள் (போஸ்டரை கிழிப்பது, திரையிடும் தியேட்டர் மீது கல் எறிவது போன்றவை ஹே ராம் வெளியான சமயத்தில் நடந்தன).
அதே போல, கமல் உன்னை போல் ஒருவன் மாதிரியான படங்களை எடுக்கும் போது இசுலாமிய சமய அடிப்படைவாதிகள், கமல் எல்லா முசுலீம்களையும் தீவிரவாதி என்று சித்தரிக்கிறார் என்று கோஷம் எழுப்புவது வழக்கம். வன்சொற்களை பயன்படுத்தி கமலை திட்டுவது வழக்கம்.
இப்போதும் இது தான் நிகழ்ந்திருக்கிறது. தான் முசுலிம்களுக்கு எதிரான படத்தை எடுக்கவில்லை என்று சொன்ன கமல் இந்த இரு எதிர்ப்புகழையும் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையே நான் இந்தக் கட்டுரையின் மூலம் காண விரும்புகிறேன்.
இந்து மத அடிப்படைவாதிகள் எதிர்த்த போதும் கமல் சட்ட ரீதியான வழிகளை நாடினார். சில நேரங்களில் அவருடைய தரப்பு ஞாயம் வென்றிருக்கிறது. சில நேரங்களில் சூழ்நிலைகளின் கட்டாயத்திற்கு அவர் பணிந்து போயிருக்கிறார்.
இப்போதும், இத்தனை கடுமையான சூழ்நிலையிலும் சட்ட ரீதியான தீர்வை தான் நாடியுள்ளார் கமல். அவர் கொடுத்துள்ள பேட்டியில், “விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் ஒரு முசுலிம் இருந்தார். அந்தக் குழு இந்தப் படத்தை பார்த்து, ஆலோசனை செய்து, இதில் எந்த ஒரு மாற்றமும் தேவை இல்லை என்று கத்தரிப்பு இல்லாமல் வெளியிட அனுமதி அளித்தது. இது போன்ற முசுலிம்களுக்கு ஆதரவான படம் சமீபத்தில் வரவில்லை. தேச பக்தி மிக்க எந்த முசுலிமும் இந்தப் படத்தை தங்களுக்கு எதிரானது என்று எண்ண மாட்டார்கள். இந்தப் படத்தில் உண்மைகளை உள்ளபடியே சொல்லி இருக்கிறேன். எந்த விதமான பிரசங்கமும் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த எதிர்ப்பு தேவையற்றது. கலைஞர்களுக்கு எதிரான கலாச்சார தீவிரவாதம் தடுக்கப் படுவேண்டும்’, என்று தயக்கமில்லாமல் கூறியுள்ளார்.
கமல் முசுலீம்களை கவர நினைக்கிறார் என்று சொன்ன இந்து அடிப்படைவாதிகள், இப்போது, ”பார்த்தீர்களா? முசுலிம்களுக்கு எதிராக ஒரு படம் வந்தால் என்ன நடக்கும் என்று தெரிகிறதா? இனிமேலாவது இந்த ஒரு தலைபட்சமான பகுத்தறிவை கமல் விட வேண்டும். இந்துக்களை புன்படுத்துவதை விட வேண்டும்” என்று சொல்லி இந்து மத வெறிக்கு எதிரான கருத்துக்களை அமிழ்த்தப் பார்க்கிறார்கள்.
முசுலிம் அடிப்படைவாதிகளோ, “தமிழ் சினிமாவில் ஏன் இந்து மதவெறியை இசுலாமிய மதவெறிக்கு இணையாக விமர்சிப்பதில்லை? எங்களை மட்டுமே குறிவைப்பது ஏன்?” என்று கேட்கிறார்கள்.
இவ்விரு அடிப்படைவாதமும் முன்னுக்குப் பின் முரணாகவும், விவரங்களை, உண்மைகளை, அறியாமலும் முன்வைக்கப் படுகின்றன.
உண்மையில் இந்து அடிப்படைவாதிகள் சொல்வது போல எல்லா முசுலிம்களும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் ஒரு முசுலிம் அமைப்பு இந்தப் படத்தை வெளியே வர விடவேண்டும் என்று அறிக்கையே விட்டிருக்கிறது!
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை என்ற முசுலிம் அமைப்பு ஜனவரி ஆறு, 2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்படம் மலேஷியாவில் போட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். படம் பார்த்த பல இசுலாமிய நண்பர்கள் கமலை பாராட்டியும் இருக்கின்றனர். துப்பாக்கியை போல விஸ்வரூபம் முசுலீம்களை காயப்படுத்தாது என்று இசுலாமிய தணிக்கை குழு உறுப்பினர்களே சொல்கின்றனர். ஆகவே படம் வெளிவருவதற்கு முன்னதாகவே பல பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது தேவையற்றது தான்” என்று எழுதப்பட்டு, அதன் தலைவர் திரு. மேலை நாசர் அவர்களின் கை எழுத்தோடு வெளிவந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இணையத்தில் இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் முசுலிம் நண்பர்களும் அடக்கம். சொல்லப் போனால் ஒரு முக்கிய வேடத்தில் திரைப்பட நடிகரும், முசுலிமும் ஆன, நாசரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த ஒரு மலேஷிய முசுலிம் சகோதரர், எதிர் தரப்பு முசுலிம் அமைப்பின் வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். “படம் ஆப்கானின் அமரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முசுலிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை. எந்த தமிழ் முசுளிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை.
கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும் போது ‘எப்படி தமிழ் பேசுறீங்க என் கேட்கும் போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும், மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார். இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை.
அடுத்து உமர் கமலை வைத்துக் கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார். அவர் அதை சரியாக சொல்வார். இந்த இரண்டு காட்சிகளை பார்த்து முசுலிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை”, என்று தன்னுடைய வலை தளத்தில் எழுதி இருக்கிறார் மொகமது பரூக்.
இவர்களுக்கேல்லாம் முசுலிம் தீவிரவாதமும், முசுலிம் மார்க்கமும் வேறு வேறு என்று தெரிந்திருக்கிறது. முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால், முசுலிம் மதத்தை எதிர்த்தாகாது என்று புரிந்திருக்கிறது.
முசுலிம் அமைப்பினரின் வற்புறுத்தலில் பேரில் அவர்களுக்கு படத்தை திரையிட்டுள்ள கமல், படத்தை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆனால், மேற்குறிப்பிட்ட காட்சிகளை முசுலிம் அமைப்பினர் எதிர்த்த போது, “இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவற்றை நீக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். இதை அந்த முசுலிம் அமைப்பின் தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, தன்னுடைய அறிக்கையில், எதிர்க்கும் இந்த சிறு அமைப்புகள் எல்லோரும் தேச பக்தியை முன்னிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதுவே அவர் முசுலீம்களை கவர நினைக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
மறு புறம், இசுலாமிய அடிப்படைவாதிகள் பேசுவது போல தமிழ் சினிமாவும் கமலும் ஒன்றல்ல! விஜயகாந்த்-உம், அர்ஜூனும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த காலம் ஒன்று இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டது. இந்த கருத்து பரவியதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் பெரியது. ஆனால், அந்த காலக் கட்டத்தில், தைரியமாக இந்துத்வ வெறித்தனங்களை நேரடியாக சாடியவர் கமல் ஹாசன் ஒருவர் தான்.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், 1993-ல் நடந்த மும்பை கலவரத்தின் போது, அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்-இடம் சென்று ஒரு இந்தியனாக கமல் முறையிட்ட சம்பவத்தை சொல்லலாம். இதை பற்றிய முழு நீளச் செய்தி, 7-2-93 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது (விவரத்தை கேட்பவர்களுக்கு மின் அஞ்சலில் நான் அனுப்பி வைக்கிறேன்).
தன்னுடைய ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் கல்கத்தா, குஜராத் இந்துத்வ தீவிரவாதத்தை கடுமையாக சாடியுள்ளார் அவர். எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்ற கருத்தை தசாவதாரத்தில் சொல்லி இருக்கிறார். இதை நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய கட்டுரையில் விளக்காமாக கூறியுள்ளேன். தமிழ் சினிமா நடிகர்கள் எல்லோரும் கூத்தாடிகள் என்று நா கட்டுப்பாடில்லாமல் பேசும் அடிப்படைவாதிகள் தான் தமிழ் சினிமாவிலிருந்து தனித்து நிற்கும் கமல் போன்ற கலைஞர்களை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தேச பக்தி மிக்க முசுலிம்களும், பகுத்தறியத் தெரியும் இந்துக்களும் கமலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
கமல் உன்னை போல் ஒருவனில் கூறியது போல, இப்போது நடக்கும் இந்த சண்டை மற்றுமொரு இந்து-முசுலிம் விளையாட்டு. இந்து அடிப்படை வாதிகள், கமலை முசுலிம் அபிமானி என்று சொல்லி பந்தை(கமலை) எதிர் திசை நோக்கி தட்டிவிடுகிரார்கள். அவர்கள், இவர் முசுலிம் எதிர்ப்பாளர் என்று சொல்லி வேறு பக்கம் தட்டி விடுகிறார்கள். நடுவில், விசிலை வைத்துக் கொண்டு நீதி மன்றம் நிற்கிறது. படத்தை பார்த்துவிட்டு, இதில் எந்த முசுலிம் எதிர்ப்பும் இல்லை என்ற தீர்ப்பு வந்தால், இவர்கள், நீதிபதி ஒரு இந்து. அவர் முசுலிம்களுக்கு எதிராகத் தான் தீர்ப்பு எழுதுவார் என்று சொல்வார்கள். தணிக்கை அதிகாரியாக இருந்த நேர்மையான முசுலிமிற்கு துரோகி என்ற பட்டம் தான் மிஞ்சும். நாசரும், துரோகி! உண்மையைச் சொல்லும் அனைவரும் துரோகிகள்!

கண்ணன் ராமசாமி
Writer.kannan@gmail.com

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

84 Comments

  1. Avatar
    smitha says:

    Kannan,

    I think you have selective amnesia. When I pointed out that vishwaroopam is being opposed by the muslims at the start itself, you pooh poohed it. Now you say U expected it.

    Secondly, there is a difference bewieen hindus & muslims opposing his films. When the hindu activists wanted the objectional song in “manmadhan ambu” to be deleted, kamal did so, but in a statement claimed that if he had been the producer, he would not have done it.

    Why this arrogance?

    Also, the muslim organisation that u say, supported kamal is in a minority.

    He should not have in the first place agreed to show the muslim outfits the film.

    That is the 1st mistake. Also, before the screening, kamla told them that if at all, anyone would object, it would be rama gopalan since his film is against hindu munnani.

    U have conveniently left out this part of the talks that he had with the muslim outfits.

    He even went to the extent of saying that this film is the most muslim friendly film he has seen in rcent times & that they would give him biriyani after watching the film. He said that if they found anything objectionable, he would make up for it by acting as a “good” muslim in his next film.

    Kamal has all along been anti hindu in many of his films & has got away with it. He knows that hindus are tolerant.

    During Hey Ram, there were a few disturbances but not to the extent that wewe are seeing jow in Viswaropam.

    So, pls do not compare the two.

    U need not go to town proclaiming that kamal is not anti muslim. We all know it. He is only anti hindu.

    This is the case with Viswaroopam also. U see the film & will know.

    1. Avatar
      Rahman Ali says:

      I would like to share my opinion about kamal movie. First of all, if this movie is released, we Muslims fear that this may create communal fights. We want peace .we are peace loving people.also majority of Hindus are very innocent and peace loving people.we don’t want any movies,by any director to insult any other religions. Some bloody politicians from both community will take advantage of it. My view is to stop screening this movie at present.
      If suppose any Muslims with their family comes out of a theatre after watching movie, we fear that ,these bad people may throw stone on us. We cannot blame the common Hindu people.

      1. Avatar
        paandiyan says:

        //we don’t want any movies,by any director to insult any other religions. //

        muslims should stop acting, direction or music field as a hindu we dont like. in various ways they are trying to destroying our hindu values in various forms. you should take action on this.

      2. Avatar
        punaipeyaril says:

        rahman ali, please go tour to afkhanistan, pakistan, iraq, iran with your family… then u will know how good and stupid are hindus. u cant watch a movie that is neutral… but ur muslim hawala people sells english dvd that shows the true color of terrorists. viswaroopam will come in internet and can be thru out the world. in the coming election, all non muslims should not vote for a muslim candidate..let the muslim go to afkhanistan and live peacefully… do not exploit of the hindu’s innocence… and dont tell joke like muslims are peace loving people… if u say so, even muslims will hate u

      3. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        Why do you fear that it’ll create communal fights ? On what basis ? Has there been any such precedents ? What has been described in the movie are the Al-Qaeda’s terrorists activities in the Afghan soil. Do you think it’s going to create communal fights in TN ?

        This movie is in no way insulting Islamic religion. In fact this movie has been made by Kamal – who’s known for his Islamic support, which even angers the Hindus, which’s quite obvious in the feedbacks of this very article itself.

        – No “bad people” had thrown stones at the corrupt officials after watching “Indian” ;
        – No ‘bad people’ had thrown stones at the corrupt doctors after watching “Ramana” ;
        – No ‘bad people’ had thrown stones at corrupt politicians after watching hundreds of Tamil movies which depict most of the politicians as corrupt.

        Please don’t be so childish.

  2. Avatar
    paandiyan says:

    //தன்னுடைய ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் கல்கத்தா, குஜராத் இந்துத்வ தீவிரவாதத்தை கடுமையாக சாடியுள்ளார் அவர்//

    //பொதுவாகவே கமல் ஹே ராம் மாதிரியான படங்களை எடுக்கும் போது இந்து சமய அடிப்படைவாதிகள், கமல் இந்துக்களை புன்படுத்துகிறார் //

    //நான் வேறு கோணத்தில் இந்த விவகாரத்தை பார்க்க விரும்புகிறேன்.
    //
    — படிப்பவன் எந்த கோணத்தில் இதை பார்ப்பது ? அது என்ன இந்துத்வ தீவிரவாதம் ?? கொஞ்சம் விளக்கவும். அட்மின் இதை எல்லாம் சரி பார்க்கவில்லை என்றால் இணயதள தீவிரவாதம் வெகு சீக்கிரம் பரவும் . திண்ணைதான் அதற்கு முதல் காரணம் என்று பெருமை படலாம்!!!!

  3. Avatar
    ஷாலி says:

    //– படிப்பவன் எந்த கோணத்தில் இதை பார்ப்பது ? அது என்ன இந்துத்வ தீவிரவாதம் ?? கொஞ்சம் விளக்கவும். அட்மின் இதை எல்லாம் சரி பார்க்கவில்லை என்றால் இணயதள தீவிரவாதம் வெகு சீக்கிரம் பரவும் . திண்ணைதான் அதற்கு முதல் காரணம் என்று பெருமை படலாம்!!!!//

    அது என்ன இந்துத்தவ தீவிரவாதம்?? என்று கேள்விகேட்ட paandiyan அதுக்கு அடுத்த வரியிலேயே பதிலும் கொடுக்கிறார். “ இதை அட்மின் சரிபார்க்கவில்லை என்றால்….” அட்மினை ரொம்ப மிரட்டாதிங்க பாண்டியன்.அதுசரி இணையதள தீவிர வாதம் என்றால் என்ன? இதற்க்கு விளக்கம் கொடுத்திட்டு மேலே போங்க! உங்களுக்கு தெரியாதது ஒன்னும்மில்லே!

    1. Avatar
      paandiyan says:

      //அதுசரி இணையதள தீவிர வாதம் என்றால் என்ன? இதற்க்கு விளக்கம் கொடுத்திட்டு மேலே போங்க! //
      Read article in dinamani;
      “விஸ்வரூபம் எடுப்பது தமிழன் ஆட்சியா தாலிபான் ஆட்சியா?.By பால கௌதமன் ”
      Your star is paying heavy price now. dont turn into இந்துத்வ தீவிரவாதம் . i hope you would unerstand better now.

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நானும் இந்த படத்தை நேற்று திரை அரங்கில் பார்த்தேன். சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம். நல்ல தொழில் நுட்பம். கமலே எழுதிய வசனங்கள் சிறப்பாக இருந்தன. நுண்ணிய கிண்டல்கள், நகைச்சுவை எல்லாமே நன்றாக இருந்தது.

    நான் ஒன்றும் தீவிர நிலைப்பாடு கொண்ட இந்து அல்ல. இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் அநீதிகளுக்கும் சவாலாக இஸ்லாமின் நீதியுணர்வும் கிறித்துவத்தின் எளிமையும் தியாகமும் இருக்க வேண்டும் என்னும் ஜெ.மோ அவர்களது தரப்புத்தான் எனக்கும்.

    அப்படிப்பட்ட எனக்கு தடை செய்யப்படும் அளவுக்கு இப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கிஞ்சித்தும் புரியவில்லை.

    கதை நடப்பது ஆப்கானிலும் அமெரிக்காவிலும். கதைப்படி கமல் அல்-கொய்தாவில் ஊடுருவி இருக்கும் இஸ்லாமிய ரா அதிகாரி. அவரது வேலை அல்-கொய்தா அமைப்பினர் நியூ யார்க்-ல் ஏற்படுத்த இருக்கும் அணு ஆயுத விபத்தை தடுப்பது. இதில் இஸ்லாத்தையோ இஸ்லாமியரையோ தவறாகவோ கேவலமாகவோ சித்தரிக்க என்ன இருக்கிறது ? சொல்லப்போனால் சித்தரிக்க அல்ல, ஒரு விமர்சனம் கூட இல்லை இஸ்லாமியரை / இஸ்லாம் மதத்தினரை நோக்கி.

    குரான் படித்துவிட்டு தீவிரவாதம் புரிவதாக காட்டுகிறார் ; தொழுகை நடத்திவிட்டு கழுத்தருப்பதாக காட்டுகிறார் என்றெல்லாம் உப்புக்கு சப்பாணி போல வாதங்கள். ஆப்கானில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் தங்களை இஸ்லாம் மதத்தோடு அடையாளப்படுத்திக்கொள்வதில்லையா ? தொழுகை புரிவதில்லையா ? குரான் ஒதுவதில்லையா ?

    அப்படி ஏதும் இல்லை என்றால் கமல் செய்வது அவதூறு என்று ஒப்புக்கொள்ளலாம்.

    படத்தில் அல்-கொய்தா அமைப்பினர் செய்வதாக காட்டப்பட்டுள்ளதெல்லாம் உண்மையில் நடந்தவற்றில் மிகச்சிறு சதவீதமே. எனவே ‘இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியர்’ என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது அபத்தமே.

    கமல் தனது திரைப்படத்தில் வைத்திருக்கும் சில காட்சி அமைப்புகளால் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடும் அளவுக்கா இஸ்லாம் என்னும் மார்க்கம் பலவீனமாக இருக்கிறது ?

    சொல்லப்போனால் கமலின் திரைப்படம் அல்ல, தணிக்கைத்துறை அனுமதி அளித்த பிறகும் ‘தங்களுக்கு அந்த திரைப்படத்தை தனியாக திரையிட்டு காட்ட வேண்டும், தங்களது அனுமதி பெற வேண்டுமானால் தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’ என்று கும்பல் வலிமை காட்டி கமல் மாதிரியான சினிமா பித்தர்களை மண்டியிட வைக்கும் கேவலமான மனோபாவமே இஸ்லாம் மதத்தை ஆபாசப்படுத்துகிறது.

    மக்களாட்சியில் நம்பிக்கை கொண்ட உண்மையான இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் நாட வேண்டிய இடம் நீதிமன்றம். தசை வலிமை காட்டி ஒருவனை மண்டியிட வைப்பது என்ன தனம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

  5. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இதில் அபாயகரமானதும் மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதும் தமிழக அரசின் நடவடிக்கை.

    இஸ்லாமிய அமைப்பினரது போராட்டமாவது ஒருவகையில் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் தணிக்கை துறை சான்றிதழ் வழங்கிய பின்னும் இஸ்லாமிய அமைப்பினரது எதிர்ப்பை பார்த்ததும் சம்பந்தமே இல்லாமல் தமிழக அரசு தனது மூக்கை நுழைத்து படத்துக்கு தடை விதித்தது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

    விளம்பர அரிப்பு கொண்ட சில சுயநல கும்பல்களது மிரட்டலுக்கு ஒரு அரசானது பணிந்து போய் பாத பூஜை செய்யவும் துணிவது (சுஜாதாவின் வார்த்தைகளில் ‘அமரச் சொன்னால் மல்லாந்து படுத்து நான்கு கால்களையும் தூக்கிக்காட்டுவது’) அபாயகரமான போக்கல்லவா ? இதே நிலை நீடித்தால் நாளை கும்பல் வலிமை கொண்ட ஒவ்வொரு அமைப்பும் இதே பாணியில் ‘தங்களது அனுமதி பெற்றே வரமுடியும்’ என்ற நிலையை எந்த திரைப்படத்துக்கும் ஏற்படுத்த முடியுமே ? இது போன்ற நிகழ்வை முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய நிலையில் இருக்கும் ஒரு அரசானது தனது ‘ஓட்டுபொறுக்கி அரசியல்’ நிலைப்பாட்டால் அதற்கு மாறாக திரைத்துறையினரின் சுதந்தரத்தையா காவு கொடுப்பது ?

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ?

  6. Avatar
    Indian says:

    “இந்து சமய அடிப்படைவாதிகள்,”
    Usual rubbish touted at every opportunity by these pseudo secularists, like the author of this article. Mr Kannan, Give us solid proof that you can back up on the existence of this Hindu fundamental terrorist group. You can be a fundamentalist only if you have dogma. Hindus do not have dogmas. Only the desert religions have dogmas, hence the associated violence and terrorism.
    I am having fun watching this drama unfolding.This scene of Kamala Hasan squirming before his beloved Islamists brings a wry smile to us ordinary Hindus. All the insults KH heaped on Hindus for yonks are coming back to haunt him.
    Deivam nindru kollum.

  7. Avatar
    சான்றோன் says:

    மத நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்…..இந்திய அரசியல் ச‌ட்டம் அதை அங்கீகரிக்கிறது……ஒருவரது மத நம்பிக்கையை விமர்சிப்பது சட்டப்படி குற்றம்……..

    ஹிந்துக்களையும் , ஹிந்துமத பழக்க வழக்கங்களையும் இழிவு செய்வதையே வழக்கமாகவே கொண்டிருந்தவர் கமல்……… ஏன்யா இப்படி செய்றீங்க ? என்று கேட்டால் அவன் ஹிந்து அடிப்படைவாதியா?

    இப்ப வலிக்குதில்ல? எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்……..இப்போது புலம்பி என்ன பயன்?

  8. Avatar
    பூவண்ணன் says:

    ரெஹ்மான் அலி சார் எந்த மதத்தையும் பற்றி படம் எடுக்க கூடாது என்று மற்ற மதத்திற்கு கூட கவலைபடுவதை நினைத்தால் புல்லரிக்கிறது ஆனா மொத்தமாக காவல்துறையினரை மிகவும் ஒழுக்கம் கெட்டவர்களாக,ஊழல்வாதிகளாக தான் 99 சதவீத படங்கள் வருகின்றன
    அரசியல்வாதிகளை 100 சதவீதம் கொடூரக்காரர்கலாக,மக்களை அழிக்க வந்தவர்களாக தான் படங்கள் காட்டுகின்றன
    அதை எதிர்க்கிறார்களா .
    இஸ்லாமியரை எப்படி காட்ட வேண்டும் என்று போராடும் இயக்கத்தினர் விரும்புகிறார்கள்
    தீவிரவாதிகளுக்கு பெயர் வைக்க கூடாது அ ,ஆ ,இ ,ஈ என்று தான் அவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்களா
    நல்லவர்கள்,வல்லவர்கள் என்று காட்டும்நூறு படங்களை எடுங்கள்.யார் தடுத்தது
    அரசியல்வாதி கெட்டவன்,காவல்துறை ஊழல்வாதிகள் ,இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் மிக பயங்கரமானவர்கள் என்று தொடர்ந்து நூறு படங்கள் எடுக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு

  9. Avatar
    பூவண்ணன் says:

    மத மாற்றம் என்று வரும் போது இஸ்லாமிய குழுக்கள் தனி மனிதனுக்கு தானே முழு உரிமையும் குடுக்கின்றன
    எத்தனை எதிர்ப்பு,கலவரம் வந்தாலும் இஸ்லாமியனாக ஆக விரும்பும் வேறு மதத்தில் பிறந்தவர்களை மதம்,பெயர் மாற்ற தயங்குவதில்லையே
    அப்போது சமூக அமைதி கெடும் என்று அதை வேண்டாம் என்கிறார்களா இஸ்லாமிய இயக்கங்கள்
    மத மாற்றத்தை பற்றி நான் ஒரு படம் எடுக்கிறேன் என்றால் எந்த சமூகத்தை காட்டி எடுப்பது.மகாராஷ்டிரத்தில் திருமணத்திற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறிய வேறு மதத்தில் பிறந்த பெண்கள் 2400 பேர்,இஸ்லாமில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் இரண்டு என்று புள்ளிவிவரங்கள் எதை காட்டுகின்றன .அதனால் அவரை சேர்ந்தவர்களின் குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள்,மதம் மாறியவரின் உணர்வு கொந்தளிப்புகள் பற்றி படம் எடுத்தால் அது மனதை புண்படுத்துகிறது என்று போராடுவதை விட பைத்தியகாரத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா
    தனிப்பட்ட இந்துவின் வாழ்க்கையில் மத குருக்களும்,மத இயக்கங்களும் தலையிடும் வாய்ப்புகள் குறைவு .ஆனால் இஸ்லாத்தில் அப்படியா
    நீ உன் மதத்தை பின்பற்றி கொள்,நான் என் மதம் என்று மனம் புரிந்து கொள்பவர்கள் முடிவு செய்தால் கூட அதை மாற்ற இஸ்லாமிற்கு கண்டிப்பாக மாற வேண்டும் என்று கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிக்கும் கூட்டங்கள் மனம் புண்படுகிறது என்று போராடுவதை எப்படி எடுத்து கொள்வது
    உணர்வுகள் எல்லாருக்கும் ஒன்று தான். உங்களுக்கு சரி என்று படுவது அடுத்தவரின் மனதை புண்படுத்தினால் அதற்க்கு நீங்கள் என்ன செய்ய முடியும்
    மத மாற்றங்களை நான் எதிர்க்கவில்லை.ஆதரிக்கிறேன்.பல மதங்களும்,மத மாற்றங்களையும் விட கடவுள் இல்லை என்பதற்கான வேறு ஆதாரம் எது

  10. Avatar
    பூவண்ணன் says:

    பெரியார் தாசன் அப்துல்லா ஆகி விட்டார் என்று கூட்டம் போட்டு கொண்டு குதித்த போது எங்கள் மனம் புண்படுகிறது என்று குதித்தொமா என்ன
    அந்த நிகழ்வை விட பெரியாரை ,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை யாரும் புண்படுத்த முடியாது
    என் உயர் அதிகாரியின் பெண் கல்லூரியில் தன்னோடு படிக்கும் இஸ்லாமிய தோழரை காதலித்தார். இவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை தன்னை போல பெரிய அதிகாரியாக வருவாள் ,பெரிய பொறுப்புகளை ஏற்று கொள்வாள் சாதனைகள் புரிவாள் என்று எண்ணிய அவர் மதம் எதுவும் மாறாதே,மேலே படி,வேலைக்கு போ என்று தான் சொன்னார்
    ஆனால் இவர் வைத்த பெயரை மாற்றி தான் திருமணம் செய்வோம் ,வேலைக்கு செல்ல கூடாது என்று அந்த நல்ல மனிதரின்,அவர் குடும்பத்தினரின் மனதை புண்படுத்துவதை விடவா ஒரு சினிமா புண்படுத்த போகிறது .இதை செய்யும் போது ஒரு பெருமிதம் கொண்டு வாழும் கூட்டம் இங்கு எங்கள் மனது புண்பட கூடாது என்று கூறுவதை நினைத்தால் கோவம் கலந்த வேதனை தான் வருகிறது.யார் மனம் என்ன புண்பட்டாலும் மதம் மாற ஒருவருக்கு எப்படி உரிமை இருக்கிறதோ,அதே போல ஒரு மதத்தை திட்டுவதற்கும்,அதனால் ஏற்படும் தீமைகளை சுட்டி காட்டுவதர்க்கும்,கதை எழுதுவதற்கும் அடுத்தவருக்கு உரிமை இருக்கிறது
    இதில் எனக்கு மட்டும் தான் உரிமைகள் உண்டு,உனக்கு கிடையாது என்று வாதிடுபவர்களை என்ன சொல்லி திட்டுவது

  11. Avatar
    smitha says:

    one comment on facebook

    விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தடை செய்திருப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால் அவர்கள் இதை முதல் முறையாகச் செய்யவில்லை. இது கடைசி முறையாக இருக்கவும் போவதில்லை. சென்ற சில மாதங்களாக எல்லையில் நம்மைக் காவல் காக்கும் நம் வீரர்களின் தலைகள் கொய்யப் பட்ட பொழுதும், சென்னையில் சாலைகள் மறியல் செய்யப் பட்டு அராஜகம் நடந்த பொழுதும், ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போதும் இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள். சரி இப்பொழுதாவது உணர்ச்சி வந்திருக்கிறதே என்று ஆறுதல் பட வேண்டியதுதான். ஒரு சினிமாவையும், சினிமா நடிகரையும், படைப்புச் சுதந்திரத்தையும் விட நம் தேசமும், அதன் வீரர்களும், சுதந்திரமும் முக்கியம் என்ற உணர்வு இப்பொழுதாவது அனைவருக்கும் வரட்டும். கமலஹாசன் இந்துக்களின் உணர்வுகளை பல முறை புண்படுத்தியுள்ளார். இப்பொழுதாவது அவர் இந்து மதத்தினரின் சகிப்புத்தன்மைக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

  12. Avatar
    smitha says:

    சென்னையில் உள்ள லலித் கலா அகாதமியில் 2008-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 3-ம் தேதி மாலையிலிருந்து 9-ம் தேதி வரை ஃபிரான்ஸு நாட்டிலிருந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு ஃபிரான்ஸ்வா கோதியே அவர்களின் அமைப்பான (FACT – Foundation Against Continuing Terrorism) ஃபேக்ட் ”அவுரங்கசீப் – அவர் இருந்த படியே” (Aurangazeb – As he was) என்கிற ஓவியக் கண்காட்சியை நடத்தியது. 4-ம் தேதியும் 5-ம் தேதியும் பிரச்சனை இல்லாமல் நடந்த கண்காட்சிக்கு ஆற்காடு நவாப் மூலம் 6-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டது.

    “ஹார்மனி-இந்தியா” என்கிற “மத நல்லிணக்க” அமைப்பை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் என்ற இந்த மனிதர் 6-ம் தேதி மாலை 3 மணியளவில் கண்காட்சி அரங்கிற்கு வந்து அங்கிருந்த கண்காட்சி அமைப்பாளர்களிடம் விதண்டாவாதம் செய்தார். பின்னர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூறிச் சென்றவர் “தௌஹீத் ஜமாத்”, “மனித நீதி பாசறை” “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” போன்ற இயக்கத்தவரை அரங்கிற்கு அனுப்பி வைத்தார். பிறகு அப்போதைய திமுக அரசிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கச் செய்தார்.

    ஒரு பக்கம் முஸ்லிம் அமைப்பினர் கூட்டம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட மறுபக்கம் அரசு மூலம் அழுத்தம் தொடர, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் படை சூழ வந்து ஓவியங்களைப் போட்டு உடைத்து கண்காட்சியை மூடிச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஃப்ரான்ஸ்வா கோதியே அவர்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த நான்கு பேரைக் கைதும் செய்தனர். அதில் மூன்று பேர் 50-வயதுப் பெண்மணிகள். பிறகு சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் தில்லி அருங்காட்சியக ஆவணக் காப்பகத்தில் இருக்கும் இஸ்லாமிய நூல்களின் படி வரையப் பட்ட ஓவியங்களே. இதே கண்காட்சி தில்லி, மும்பை, பெங்களூர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசும், காவல்துறையும் அத்து மீறி நடந்துகொண்டன.

    சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக அவர்களின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவைகளை ஊக்குவிக்கவும் செய்வதில் திமுக அரசும் அதிமுக அரசும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் கண்காட்சியை இழுத்து மூடியது திமுக அரசு. விஸ்வரூபம் படத்தைத் தடை செய்துள்ளது அதிமுக அரசு. ஆளும் கட்சிகள் தான் வேறே தவிர அவற்றின் அணுகுமுறையிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் அராஜகத்திலோ எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    இப்போது கமலஹாசனுக்கு வரிந்து கொண்டு வரும் கருத்துச் சுதந்திரப் போராளிகள் அப்போது வாய் மூடி மௌனம் சாதித்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் இந்த விவகாரம் கருத்து சுதந்திரம், ஆனால் அது கருத்து சுதந்திரம் அல்ல; அது ஹிந்துத்துவ வெறியர்களின் செயல்பாடு மட்டுமே. நல்ல அறிவு ஜீவிகள், நல்ல போராளிகள்!

    வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களை தூற்றவும் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தவும் சற்றும் தயங்காத பேர்வழி கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு இதோ ஒரு பரிசு – கமலின் பரிசு:

    மூன்று தினங்களுக்கு முன்னால் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தபோது கமலஹாசன் சொன்னது: “விநாயகர் என்ற ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்ட கடவுள் விநாயகர்”

    இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கும் எல்லா கலையுலக பிரமுகர்களும் ”கருத்து சுதந்திரம், நூறு கோடி பட்ஜெட், உலக நாயகன்” என்று அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் அஜித் மட்டுமே வித்தியாசமாக தனது அறிக்கையில் பிரசினையின் ஆணிவேரைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் – ”இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும், இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி, உரிமை மற்றும் சமத்துவம் என்றும் உத்தரவாதம் அளிக்கின்றது . ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா? இந்த உத்தரவாதங்கள் திரிக்கப் பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநல போக்கும் தான் என்றாகி விட்டது. நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் வாக்கு வங்கி அரசியலை பார்க்கும் போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது… நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும் நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்து பார்க்க இதுவே சரியான தருணம்!” என்கிறார். போலி மதச்சார்பின்மையே இந்தப் பிரசினைக்கு மூல காரணம் என்பதை வெளிப்படையாக பேசிய அஜித்துக்கு நமது பாராட்டுக்கள்

    thanks to tamilhindu.com

  13. Avatar
    smitha says:

    தான் “கலாசார தீவிரவாதத்திற்கு” உட்படுத்தப் படுவதாக புலம்பி கமலஹாசன் எழுதும் கடிதத்திலும் சரி, அவரது அடுத்தடுத்த அறிக்கைகளிலும் சரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அராஜக இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்களையும் கண்டித்து ஒரு வாசகம் இல்லை. மாறாக, ”நான் என்றைக்குமே இஸ்லாமியர்களின் நலனை விரும்புபவன் தான்; நான் உங்கள் சேவகன்; ரொம்ப காசு செலவழிச்சு படம் எடுத்து விட்டேன்; மன்னிச்சு கருணை காட்டுங்க கனவான்களே” என்ற ரீதியில் கூழைக் கும்பிடு போடுகிறார் இந்த சுயமரியாதைக் காகிதப் புலி

  14. Avatar
    smitha says:

    Director Bejoy Nambiar has decided to remove Lucky Ali’s song ‘Ya Hussain’ from his new film ‘David’ after some groups objected to it. However, he has retained the tune in the movie.

    A section of the Muslim community had urged Nambiar to remove the song as they felt it does not befit their definition of propriety. The song accompanied a sequence in the film, which showed a Moharram procession.

    “The song ‘Ya Hussain’ has now been deleted from my film. Only the music has been kept,” said Nambiar

    “They (Muslim groups) objected to the song. But they were kind enough to accept my invitation to discuss the matter. After a lengthy discussion, it was decided that it would be better if I didn’t hurt anyone’s sentiments. So I’ve decided to remove the song,” he added.

    Nambiar invited the members of the community to view the song sequence, following which the director took the decision to remove the song.

    “If one doesn’t extend a hand of friendship, they would just go on protesting. It is better to sort it out through discussion rather than risk protests that could harm the release of the film,” he said.

    The director admits feeling frustrated at the moral censorship of cinema in the country.

    “Sadly this is the state of the nation that we are living in. Personally, I am anguished at being restricted at even the idea level. When I was writing ‘David’ I had no intention of offending anyone. Then why am I am being put through this,” he said.

    Nambiar says there was no time to put up a fight.

    “I know I could fight it out. But I can’t delay my film’s release. If ‘David’ was a star-studded film I could take that risk. But I can’t afford to lose my release window. The smartest thing I could do was find a compromise,” he said.

    “So before the protests could get out of hand I invited the disgruntled section to see the portion of my film where the song ‘Ya Hussain’ occurs. Then we had a long discussion. And we decided to remove the vocals,” he added.

    He reveals that the artists involved with the song were under stress.

    “Lucky Ali was being hounded with messages. He being Muslim offending his own community was something that I couldn’t deal with. Lucky requested I do something about the situation. Neil was also being hounded. I didn’t want my artists to suffer for my creativity,” said Nambiar.

    The film featuring Neil Nitin Mukesh, Vikram and Vinay Virmani, releases Feb 1.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஆனால் தணிக்கை துறை சான்றிதழ் வழங்கிய பின்னும் இஸ்லாமிய அமைப்பினரது எதிர்ப்பை பார்த்ததும் சம்பந்தமே இல்லாமல் தமிழக அரசு தனது மூக்கை நுழைத்து படத்துக்கு தடை விதித்தது அதிர்ச்சி தருவதாக உள்ளது.\

    அப்படியா?

    \மக்களாட்சியில் நம்பிக்கை கொண்ட உண்மையான இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் நாட வேண்டிய இடம் நீதிமன்றம். தசை வலிமை காட்டி ஒருவனை மண்டியிட வைப்பது என்ன தனம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\

    ஏற்கனவே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட படத்தினை ந்யாயாதிபதி பார்த்துவிட்டு பின்னர் வழக்கின் நிறைகுறைகளை தராசிலிட்டு ந்யாயம் சொல்வதற்கு பதில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னது??????????????

    \நான் ஒன்றும் தீவிர நிலைப்பாடு கொண்ட இந்து அல்ல.\

    நானும். உலகில் உள்ள எந்த சமயமும் போல புழக்கத்தில் உள்ள ஹிந்து சமயத்திலும் சீர்திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன என்பது என் புரிதில்.

    \இஸ்லாமின் நீதியுணர்வும் கிறித்துவத்தின் எளிமையும் தியாகமும்\

    நல்ல ஹாஸ்யம்.

    சவூதியில் சுன்னி அரசாங்கம் ஷியா முஸல்மான் மஸ்ஜிதுகளை இடித்துத் தள்ளுவது, ரிசானா நபீக் என்ற பெண்ணை முறையாக விசாரிக்காது (சரியான மொழிபெயர்ப்பு உதவி வழங்காது) தலையை துண்டித்தது, பாக்கி ஸ்தான் மற்றும் பாங்க்ளாதேசம் போன்ற தேசங்களில் ஹிந்துப்பெண்களின் வாழ்க்கையை பாலியல் வன்முறை மூலம் சூறையாடுதல்,அமேரிக்காவில் இஸ்லாமை அவதூறாக படமெடுத்ததற்கு ஹிந்துஸ்தானத்தில் பஸ்களை கொளுத்தி சூறையாடுதல் இவையெல்லாம் நீதியுணர்வு!!!!!!!!!

    எனக்கு ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்தில் பரிச்சயமான பல உஸ்தாதுகள் முறையாக ஐந்து முறை தொழும் அன்பர்கள். இந்த அன்பர்கள் எனக்கு பரிச்சயம் செய்வித்துள்ள இஸ்லாமிலிருந்து பெரும்பாலும் வேறு படுவது வஹாபிய மற்றும் அடிப்படை வாத இஸ்லாம். இந்த அன்பர்களின் சங்கீத உணர்வு மதங்களையும் கடந்த அனுபவத்தை அவர்களுக்குக் கொடுப்பதால் அடிப்படைவாத இஸ்லாமியரால் அவர்கள் எப்படி துச்சமாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் அறிவேன். ஹிந்துஸ்தானத்தைப் பார்க்கையில் பாக்கி ஸ்தானத்தில் இந்த துர்புத்தி அதிகம். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் மற்றும் மற்றைய சமூஹத்தின் இணைந்து வாழும் அன்பர்களை பற்றி பேசப்படும் எவையும் எமக்கு ஏற்புடையவையே. பொதுப்படையாக இல்லாத ஒன்றை இருப்பது போல் பறைசாற்றப்படுவதை ஏற்க இயலாது.

    க்றைஸ்தவத்தின் எளிமை – த்யாகம்.

    ஏசுபிரான் என்ற தேவ மைந்தனை க்றைஸ்தவ அன்பர்கள் போற்றுவதை நான் மிகவும் மதிக்கிறேன். அவரைக் கடவுளாக போற்றி அதன்மூலம் தங்கள் வாழ்வில் உன்னதம் தேடும் அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

    ஆனால் சரித்திரத்தில் இருந்திராத (க்றைஸ்தவ அறிஞர்களாலேயே கேள்விக்குறியாக்கப்பட்ட) ஏசுபிரானை சிலுவையில் அறைந்தார்கள் யஹூதிகள் என்ற பொய்யான கோட்பாட்டுக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களாக மிக எளிமையாக திட்டமிட்ட pogroms மூலம் அவர்களை க்றைஸ்தவம் ஹிம்சை செய்ததை சொல்வதா. அல்லது நாற்பது ஐம்பது லக்ஷம் யஹூதிகளை ரூம்பு போட்டு யோஜித்து வித விதமாக அடால்ஃப் ஹிட்லரும் அவரது சகாக்களும் க்றைஸ்தவ மத பீடத்தின் ஆசிகளுடன் எளிமையாகப் போட்டுத் தள்ளியதைச் சொல்வதா. உலக முழுதும் அரங்கேற்றப்பட்ட எளிமையான inquisitions பற்றி சொல்வதா? அரசியல் சாஸனம் மத வழிபாட்டுக்கு உரிமை கொடுத்திருப்பதை மதமாற்ற உரிமை என்று ஆகாத்தியம் செய்து soul harvesting என்ற படிக்கு சுவிசேஷக் கூட்டங்கள் போட்டு முடவனை நடக்க வைக்கிறேன் குருடனை பார்க்க வைக்கிறேன் வ்யாதிகளை மருந்தில்லாது குணப்படுத்துகிறேன் என்று தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொண்டு எளிய அப்பாவிகளை ஏமாற்றும் எளிய வித்தைகளை நடாத்தும் க்றைஸ்தவ கும்பலகளைச் சொல்வதா. ரோம் எரிகையில் நீரோ பிடில் வாசித்தான் என்று சொல்லாடல் உண்டு. அல்பேனியாவில் முஸல்மான் களை ஸ்லோவெக் க்றைஸ்தவர்கள் ஓசைப்படாது ஹிம்சை செய்கையில் மிகவும் த்யாக உள்ளம் கொண்டு உலக போதை மருந்து விற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட போக்கிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஹிந்துஸ்தானத்தில் த்யாகத்தின் உருவமாக எளிமையாக தொண்டு என்ற போர்வையில் மத அறுவடை செய்ததை சொல்வதா? லிஸ்ட் நீளும்.

    \U need not go to town proclaiming that kamal is not anti muslim. We all know it. He is only anti hindu.\Kamal has all along been anti hindu in many of his films & has got away with it. He knows that hindus are tolerant.\

    Thats still an understatement. Supporters of the pseudo intellectual and pseudo secular egoist kamal hasan like that of Sh.Kannan are very adept in comparing chalk with cheese. There is good lot of difference between the ways and upon issues Hindus opposing this man and Islamic zealots opposing this person. You know that very well. But it is politiclly convenient for you to place them on a level playing ground. Isn’t it?

    A compilation of misdeeds of this pseudo intellectual is available under the following url :-

    http://www.tamilhindu.com/2013/01/viswaroopam-movie-controversy-some-views/

    Sh. Kannan may go through the same if at all he wants to deliberate on the issue on facts.

    Don’t say that Kamal hasan is “doodh say dula hua hai” – that he (is pure as he) is washed of by milk.

    He is the most unprincipled money oriented ruthless profiteer.

  16. Avatar
    uthayam says:

    தொடர்ந்து தீவிரவாதிகளை முஸ்லிம்களோடு இணைத்து வந்த வினையின் உச்சமாக “துப்பாக்கி” படம், சாதாரண முஸ்லிமைக் கூட தீவிரவாத கும்பலோடு ஒருவனாக சித்தரித்து பொது நீரோட்டத்தல் உள்ள முஸ்லிமை தனிமைப்படுத்த உதவியது என்றால், விஸ்வரூபமோ தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்புபடுத்தி, தீவிரவாதத்திற்கு ஆதரவாக இஸ்லாமியமே இருப்பதாக சித்தரித்து ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறது என்கிறார்கள்.

    இந்த தொடர்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முஸ்லிம்களின் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி தான் முஸ்லிம்களின் விஸ்வரூபம். தவறான முஸ்லிம் சித்தரிப்பின் மையப்புள்ளியிலிருந்து இப்பிரச்சினையை அணுகினால் இச்சமூகம் ஏன் இப்படி தங்களது நிஜ அடையாளங்களை தக்க வைக்கவும் தவறாக உருவாக்கப்படும் பிம்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள் என்பது புரியும். ஒரு சமூகம் நிஜமான அடையாளத்தை நிலை நிறுத்தவும் போலியான சித்தரிப்புகளை அம்பலப்படுத்தவும் வீதிக்கு வந்து போராடினால் என்ன தவறு?

    இந்து ராஷ்டிராவை நோக்கி நகரும் இந்தியாவில் முஸ்லிம்களின் அடையாளம் நாலாந்திர குடிமக்களாகவும் தீவிரவாதியாகவும் தான் இருக்கப்போகிறதா? அல்லது முஸ்லிம்களை தீவிரவாதி என்று பொது சமூகத்திற்கு காட்டி விட்டு ,இங்கே இன்னொரு வகையான காவி தீவிரவாதத்தை வளர்தெடுக்க திட்டமா? ஏனெனில் முஸ்லிம்களின் மேல் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் எல்லாம் சங்பரிவார்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதையும் நாம் மேலோட்டமாக பார்க்க முடியாது.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சித்தரிக்கப்பட்டது எதுவும் போலியானது அல்ல. அப்படியெனில் ஆப்கானிஸ்தானில் நடப்பது எதுவும் உண்மையல்ல, அங்கே தீவிரவாதமே இல்லாமல் அமைதி தவழ்ந்துகொண்டிருப்பதாக மனப்பால் குடிக்கிறீர்களா ? அங்கே தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை இஸ்லாமியராக சொல்லிக்கொள்வதில்லையா ?

      உண்மையில் இஸ்லாமியர் தங்களது நிஜ அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டுமென்றால் முதலில் தீவிரவாத செயல்கள் புரிவோர் இஸ்லாமிய மதத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை தடுக்கவேண்டும். அதை விடுத்து இந்த ‘திரைப்படத்துக்கு தடை’ என்பது போன்ற நாலாந்தர காரியங்களில் ஈடுபடுவதன்மூலம் மென்மேலும் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறீர்களோ என்றுதான் ஐயுற தோன்றுகிறது.

      ‘நாலாந்தர குடிமக்களாக’ இருப்பதாக மேதகு ஐயன்மீர் பூச்சாண்டி காட்டும் அதே இஸ்லாமிய சமூகத்து மக்கள் பிரதிநிதியான ஒவைசி என்ற ஒரு அமைதிவிரும்பி புண்ணியாத்மா “யார் பலசாலி என்று 100 கோடி இந்துக்களுக்கு காட்ட 15 நிமிடம் போதும் 25 கோடி இந்திய முஸ்லிம்களுக்கு” என்று பேசி இருக்கிறார். இன்னும் என்னென்னவெல்லாம் யார் யாரை எல்லாம் எப்படி எப்படியெல்லாம் மேற்படி பெருமானார் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் என்பதை இணையத்தில் தட்டி தெரிந்து கொள்ளுங்கள் மேதகையீர்.

      உலகில் எந்த தேசத்திலாவது – மிகக்குறிப்பாக இஸ்லாமிய தேசங்களில் – , முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதாக நீங்கள் பூச்சாண்டி காட்டும் ‘நாலாந்தர குடிமக்கள்’ என்ற நிலையில் இருக்கும் குடிமகன் ஒருவனால் மேற்படி பொதுவில் பேசிவிட முடியுமா ? மனசாட்சியை – அப்படி ஒன்று உங்களுக்கு இருப்பதாக நினைத்தால் – தொட்டு பதில் சொல்லுங்கள்.

      நாலாந்தர குடிமக்கள் ? காவி தீவிரவாதம் ?? நல்ல நகைச்சுவை போங்கள் !!!

  17. Avatar
    punaipeyaril says:

    முஸ்லீம் தீவிரவாத தமிழ்க்குழுக்கு ஒன்று புரியவில்லை.. இது ஒன்றும் கஜினி கில்ஜி காலமில்லை… நூலகத்தை எரித்து வென்றதாக கொண்டாட… விஸ்வரூபம் இனி என்றும் இணையத்தில் இருக்கும்.

  18. Avatar
    punaipeyaril says:

    இந்தக் கட்டுரையாளர் முட்டாள்தனமாக எழுதியிருக்கிறார். மகேந்திரன் என்பவரும் ஆடிட்டர் சண்முகமும் சேர்ந்து மீடியேட் பண்ணுகிறேன் என்று ஜெ டிவி, விஜய் என்று பண ஆசையில் நடத்திய குழப்பத்தில், ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட, அகப்பட்டது சில முஸ்லீம் இயங்கங்களின் தடை கோரிக்கை… பிடிப்பது புலிவால் என்று தெரியாமல் ஜெ அதை உபயோகித்து அது இன்று தமிழகத்தில் மிகப்பெரிய முஸ்லீம்-இந்து பிரச்சனையாக மாறுகிறது. ஒரு நல்ல விஷயம் தாலிபானின் சுயரூபத்தை காட்டினால் இங்கிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு ஏன் கோபம் வருகிறது… தமிழக முஸ்லீம் தீவிரவாதம் இங்கு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இணையத்தில் கமலை சப்போர்ட் செய்த பாரதிராஜா, பார்த்திபன் ஆகியோரை மிக மிக கேவலமாக் பேசி வெளிவந்திருக்கும் விடியோவைப் பார்த்தால், தீவிரவாத முஸ்லீம்கள் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…

  19. Avatar
    punaipeyaril says:

    இந்தியாவில் முஸ்லிம்களின் அடையாளம் நாலாந்திர குடிமக்களாகவும் தீவிரவாதியாகவும் தான் இருக்கப்போகிறதா?–> முஸ்லீம்களின் புத்தி இப்படியே போனால், உலகால் ஒதுக்கப்பட்டு நாலாந்தர குடிமக்களாக ஆகத் தான் போகிறார்கள். குண்டு வெடிக்கும் இடமெல்லாம் யார் இருக்கிறார் என்று கூகுளிடம் கேளுங்கள். ஆப்கானில் என்ன நம்ம ஜாம்பஜார் ஜக்குவா இருக்கினான். பின்லேடன் என்ன கிறிஸ்துவரா..? அப்சல்குரு என்ன மௌனகுருவா…? கசாப் என்ன புத்த பிட்சுவா… உலகின் அதிகான நபர்கள் பயப்படும் சொல்லாக இன்று – இஸ்லாம் – மாறி வருகிறது…

  20. Avatar
    smitha says:

    Author Salman Rushdie’s visit to Kolkata has been cancelled at the last minute, allegedly because of pressure from the state government and police.

    Mr Rushdie has been touring India with director Deepa Mehta who has turned his famous book Midnight’s Children into a movie. The movie is scheduled to release on February 1. Mr Rushdie has visited Mumbai and Delhi already. In Kolkata, he was to address a press conference at a five-star hotel along with Ms Mehta, organized by the film’s distributors.

    A report in the Telegraph says that ” The intelligence branch and the city police told PVR, the Indian distributors of Midnight’s Children, that if Rushdie came to Calcutta, he would be sent back on the next flight, according to the sources.” Read full article

    Most Recent
    Amazon posts record sales of $21.27 billion in Q4 2012
    Jatin-Lalit identify skull, bones as remains of missing sister
    A group of about 200 muslims protested his scheduled arrival at the Kolkata airport this morning.

  21. Avatar
    R Venkatachalam says:

    நீங்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு எழுதிக்குவிக்கிறீர்கள். நான் இன்னமும் படம் பார்க்க வில்லை.கமலின் பரம ரசிகன் நான். என் மகளோ என்னை இன்னமும் படம் பார்க்க அழைத்துச்செல்ல நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். எப்பப் பார்த்து ஹும் . . .

    1. Avatar
      paandiyan says:

      இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

      இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

      படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்
      //— இது இன்றைய மெகா பல்டி — சீக்கிரம் பார்த்துவிடுங்கள் அப்பறோம் அவர இந்த படம் வேண்டாம் பார்ட் 2 வெளிவிடுகின்ரன் என்று உங்களை கடுபேத்த போகின்றார் . அதுசரி இதைதான கோர்ட் சொன்னது அப்போது எங்க போனார் . உள்ள ஒரு பேச்சு வெளியில் ஒரு பேச்சு உண்மையில் உலக நாயகந்தான்ய

  22. Avatar
    மலர்மன்னன் says:

    இந்தக் கட்டுரையையோ எதிர்வினைகளையோ நான் படிக்கவில்லை. ஆகவே இதில் பங்கேற்கும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். இங்கு அடிக்கடி ஹிந்து அடிப்படை வாதம் என்ற பதப் பிரயோகம் காணப்படுகிறது. ஹிந்து அடிப்படை வாதம் என்று ஒன்று இருக்குமானால் அது ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து, உலகில் உள்ள யாவரும் சுகமாக வாழ்வதாக என்பதாகும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்பதுவும், கொல்லா விரதம் குலயமெல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை என்பதுவும் எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்குதலுமே ஹிந்து அடிப்பபடை வாதமாகும். இந்த அடிப்படை வாதத்தை மேற்கொண்டு ஒழுகியதால்தான் இங்கு ஆபிரகாமிய மதங்கள் அத்து மீறி உள்ளே நுழைய முடிந்ததோடு அதிகாரம் செலுத்தித் திரியவும் முடிகிறது. இன்று வாக்கு வங்கி அரசியல் காரணமாக எல்லா அரசியல் கட்சிகளூம், எங்கே பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்கிற அச்சத்தால் கமல ஹசன் என்கிற என் பழைய அறிமுக வியாபாரியும் முகமதியர் முன் மண்டியிடுவதைக் காணும்போது மிகவும் அருவருப்பாயிருக்கிறது. ஆபிரகாமிய அடிப்படை வாதத்திற்கும் ஹிந்து அடிப்படை வாதத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு அளவுக்கு வித்தியாசம் உள்ளது. ஆனால் நமது கலாசாரம் தத்துவ ஞானம், இறைக்கோட்பாடு ஆகியவற்றில் எவ்வித ஆரம்பக் கல்வியும் பெறாத ஊடக புத்திசாலிகள் கண்டிபிடித்த சொற் பிரயோகம்தான் ஹிந்து அடிப்படை வாதம், காவி பயங்கர வாதம் என்பனவெல்லாம். ஆகவே ஹிந்து அடிப்படை வாதம் என்பது அறியாமையினால் வேறு அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் சரியான நோக்கில் வரவேற்கத் தக்கதே யாகும். காவி பயங்கர வாதம் என்பது ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணான இரு வேறு சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட முட்டாள்தனமான சொற்றொடர் ஆகும். காவியின் குறியீடு இன்னதென்றே அறியாத சிறுபிள்ளத்தனமே காவி பயங்கரவாதம் என்ற பதப் பிரயோகத்தைப் பயன்படுத்தும்.
    -மலர்மன்னன்

  23. Avatar
    மலர்மன்னன் says:

    முகமதியரின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தாலும் அது பாரதத் திற்குப் பெரிய தலைவலி என்று நாஎபதுகளிலேயே அம்பேதகர் எச்சரித்தார். அதைப் பொருட்படுத்தாததன் விளைவை இப்போது அனுபவித்துக் கோண்டிருக்கிறோம். இங்கு செல்லப் பிள்ளைகளாக வலம் வரும் முகமதியர் தாங்கள் ஏதோ உதாசீனப் படுத்டுவதுபோலும், கொடுமைக்குள்ளாவது போலும் நீலிக் கண்ணீர் வடிப்பது ப்ரும் வேடிக்கை. பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும், மலேஷுயாவிலும் ஹிந்துக்கள் படுகிற துன்பங்களைக் கேட்பாரில்லை. நமது மத்திய அரசுக்கு இதை பற்றி ஒரு சிறிதும் அக்கறை இல்லை. இதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக சர்வ்ச தேச அரங்கிற்கு எடுத்துச் செல்லவும் தோன்றுவதே இல்லை. ஏதோ விஸ்வரூபம் என்று சினிமாவும், அதில் காண்பிக்கப்படும் பயங்கரவாதிகள் முகமதியர்களாக இருக்கிறார்களாம். இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்! உலகில் இன்று தங்கள் மதத்தின் பெயரால் பயஙக்ரவாதத்தில் ஈடுபடுவது முகமதியர்கள்தானே? ஆகவே படத்தில் பயங்கரவாதிகளைக் காண்பிக்கும்போது அவர்களை முகமதியராகக் காட்டாமல் வேறு எப்படிக் காட்டுவதாம்? இதற்குப் போய் விஸ்வரூபம் படம் ஓடாது என்று மிரட்டல் போஸ்டர்களை எங்கும் ஒட்டும் அளவுக்குத் துணிச்சல் துளிர்த்துவிட்டது. இதில் நாலாந்தரக் குடி மக்க்கள் என்று புலம்பல் வேறு! புத்திகெட்ட தமிழக அரசும் அதன் சார்பில் வாதாடும் அரசு வழக்கறிஞரும் சட்ட்டம் ஒழுங்கு சீர் குலையும் என்கிற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே தடை விதிக்கப்பட்டது என்று சொல்லாமல், தானும் ஒரு முகமதிய அமைப்பின் வழக்கறிஞர்போல அந்தப் படத்தில் முகமதியர மனதைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன என்பதால் தடை விதிக்கப்பட்டது என்று தடையை நியாயப்படுத்டுகிறார்! இதைவிட வெட்கக் கேடு ற்தும் உண்டா? இனி கமல ஹாசன், என்ற தன் பெயர் ஹிந்துப் பெயர்போல் தோன்றக் கூடாது என்று கமல் ஹசன் என்று ஏற்கனவே மாற்றிக் கொண்டு கமால் ஹசன் என்று நடமாடுவது போதாது என்று வரப் போகும் தனது படங்களில் முகமதியரை ஓகோ எனப் புகழ்வதும் ஹிந்துக்களை ஏளனன் செய்தும் பிராயச்சித்தம் பண்ணுவார்!
    -மலர்மன்னன்

  24. Avatar
    punaipeyaril says:

    கமல்ஹாசன் ஒரு கடைந்தெடுத்த சுயநல வியாபாரி.. எத்தனை தயாரிப்பாளர்களுக்கு ரத்தக் க்ண்ணீர் வரவழைத்திருப்பார். தாணுவிடம் கேட்டால் தெரியும். எம்.எப்.ஹீசைன் மாதிரி இந்த ஹசனும் என்கிறார். பாருங்கள் வார்த்தைப் பிரயோகத்தை…. கமல் என்றோ கமலஹாசன் என்றோ சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிரான படம் , ராமகோபாலன் தான் தடைசெய்ய வேண்டும்.. முஸ்லீம்கள் படம் பார்த்து வருந்தி எனக்கு பிரியாணி போடுவார் என்கிறார். அரசியலில் ஜஸ்ட லைக் தட் இந்த தமிழர்களுக்கு பிடிக்காத ப.சி அடுத்த பிரதமர் என்கிறார்… அப்புறம் என்ன ஜெ கை பூப்பறிக்குமா என்ன… அது தான் தாமரையை பறித்து எறிந்து அதன் கீழ்ப்பக்கம் சகதி என்றது… அஜீத்திற்கு கலைஞர் வரை சென்ற ரஜினி ஒரு வழவழ அறிக்கையோடு ஒதுங்கினார்.. எதை கமல் விதைத்தாரோ அதை அறுவைடை செய்தார்… ஜெ மட்டும் ஒரு முஸ்லீம் குரூப்பை உபயோகிக்கவில்லை.. கமலும் தான்.. கமலின் ஆட்டம் ஜெயிடம் செல்லாது என்று புரிந்தது.. இந்துக்களை கேவலப்படுத்தி தந்தை பெரியார் பக்தன் என்றாரே… ஏன் வீரமணி அறிக்கை வரவில்லை.. கமலின் பன்முக சுயரூபம் இது தான்.. விஸ்வரூபம் எடுப்பவர் ஊதப்பட்ட பலூன் என்று ஜெ புரிய வைத்தார்… ஜெயா டிவிக்கு ரைட்ஸ் சம்பந்தமான விஷயத்திற்கு பழியெனினும் கமலில் பேச்சு அதிகமாயிருந்தது… காஷ்மீர் முதல் என்கிறாரே… தாராளமாக காஷ்மீர் போகலாம்… அமெரிக்க கனடா குடியுரிமை பெறலாம்… அங்கு பத்தோடு பதினொன்றாக பிட்சா கடையில் நின்று சுதந்திரமாக சாப்பிடலாம்.. கமல் தன் நிலை உணர்தல் நன்று… ஆளவந்தானில் தாணு இழந்தது விட கமல் ஒன்றும் இழக்கவில்லை… கமல் ஜாக்கிரதை பணத்தை இழக்காதீர்… ம.ம.: இந்துமதக் கடவுள்களை காதலர்களாக, சில்பான்சுகளாக பாடல் காட்சிகளில் வடிப்பதை நீங்கள் வேண்டுமானால் பொறுக்கலாம்… முஸ்லீம்கள் ரோஷமுடன் இருப்பதில் என்ன தவறு…?

  25. Avatar
    paandiyan says:

    இந்த கூத்தாடிகள் மேட்டர்க்கு திரு மலர்மன்னன் வருவார் என்று நான் எதிபர்கவேயில்லை. நான் இங்கு வந்ததுவ “இந்துத்வ தீவிரவாதத்தை ” என்று தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று உளறியல்தல்தான். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டாம், இப்போ கூத்தாடிகள ரெண்டுபட்டு அடிதுகொள்ளட்டும். மனிதர் மதசார்பற்ற நாட்டுக்கு குடிபோக போகின்றராரம். அப்படி ஒரு நாட்டை இவர் தேடட்டும் முதலில். வினை விதைத்தவன் அறுவடை பண்னுகின்றான்..

  26. Avatar
    paramasivam says:

    Malarmannan”s comments is not commensurate with his age and experience.When the issue is about to be solved through conciliation talks,let him not create fresh problems.

  27. Avatar
    poovannan says:

    மலர் மன்னன் ஐயா

    நேபாளம் என்று ஒரு இந்து நாடு இருந்தது.சில ஆண்டுகளுக்கு முன் தான் ரத்த ஆறு ஓடி அது ஹிந்து என்ற முத்திரையை தூக்கி எரிந்தது
    எந்த விகிதத்தின்படி/வழிமுறைகளின்படி பார்த்தாலும் உலகில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தை வெகு சுலபமாக வாங்கி கொள்ளும் பெருமை அதற்க்கு உரியது .இப்படி கண் எதிரே ஹிந்து தேசம் என்ற எடுத்துகாட்டை வைத்து கொண்டே ஹிந்து என்றால் என்று நீட்டி முழக்குவது சரியா
    சாதிய அடக்குமுறையில் பீகார்,ராஜஸ்தான் எல்லாம் கூட நேபாளத்திடம் பிச்சை வாங்க வேண்டும்
    பெண்ணடிமை தனத்தில் அதே நிலை தான். பெரும்பான்மை ஹிந்து மக்கள்,ஹிந்து நாடு,மகாவிஷ்ணுவின் அவதாரத்தால் ஆளப்படும் பெருமை இருந்த நாட்டை பார்த்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்

  28. Avatar
    ஷாலி says:

    இதே க(லை)ளை வியாபாரி கமல் ஹாசன், மதுரையை ஆண்ட கான் சாகிப் என்ற யூசுப்கான் வரலாற்றை “மருத நாயகம்” என்ற பெயரில் எடுத்து டிரைலர் வரை வந்தார்.அதில் என்ன சொல்லப்போகிறார் என்று எந்த முஸ்லிம்களுக்கும் தெரியாது. தெரியாத ஒன்றை எவரும் எதிர்க்கவில்லை.ஆனால் மருத நாயகம் தலைப்பிற்க்கே கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து கூப்பாடு போட்டவர்கள் எல்லாம், பெரியவர் ம.ம கூறும் “ஜர்வே ஜனா ஸுகினோ பவந்து” ஆட்கள்தாம்.
    கருத்து சுதந்திரத்தை கருத்தரித்து பெற்றவர்கள்,திப்பு சுல்த்தான் தொடருக்கு வா(லை)ளை ஒட்டவைத்துத்தான் ஓட்ட அனுமதித்தார்கள்.
    “எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்குதலுமே ஹிந்து அடிப்படைவாதமாகும்.”என்று பெரியவர் ம.ம சொல்லும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.அய்யா! பெரியவரே! ஆபிரகாமிய உயிர்களை விட்டுத்தள்ளுங்க….அவர்கள் எக்கேடுகெட்டோ போகட்டும். உங்க “சர்வ ஜனா” வை உங்கள் சொந்த தாய் பிள்ளைகள் வசிக்கும் தருமபுரி பக்கம் போய்ச் சொல்லுங்கள்.போற ஊருக்கு புண்ணியமாய்ப் போகும்!
    இந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் நம்ம நாட்டமை அய்யா புனல்பெயரும் குறி பார்த்து கல் எறிகிறார்.//ம.ம.: இந்து மத கடவுள்களை காதலர்களாக சில்பான்சுகலாக பாடல் காட்சிகளில் வடிப்பதை நீங்கள் வேண்டுமானால் பொறுக்கலாம்…முஸ்லிம்கள் ரோசமுடன் இருப்பதில் என்ன தவறு…?// வேண்டாம் அய்யா! படாத எடத்தில் பட்டுடப்போகுது!.

  29. Avatar
    மலர்மன்னன் says:

    என அருமை பூவண்ணன்,
    நேபளாம் பெயரளவில்தான் ஹிந்து தேசமாக இருந்தது. பிரிட்டிஷ் காலனியம் கால் பதிக்காததால் அது ஹிந்து தேசம் என்கிற பாரம்பரிய நாமகரணத்துடன் நீடித்தது, அவ்வளவே. சொல்லப் போனால் அது ஹிந்துஸ்தானத்திற்குள் ரகசியமாகப் புகுவதற்கு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் வசதியான நுழைவிடமாகவே இருந்து வந்தது. கூட இருந்தே குழி பறிக்கும் ஹிந்து துரோகக் குறு நிலமாகத்தான் அது அன்றும் இன்றும் இருந்து வருகிறது. போர்க் காலங்களில் எல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குத் தனது பிரஜைகளைக் கொடுத்து களத்தில் பலி ஆடுகளாக அவர்களை அனுப்பியது! நமது முட்டாள் மத்திய அரசு (எல்லாக் காலத்து மத்திய அரசுகளூம்தான்) நேபாளம் சீனாவின் வசம் போய் விடலாகாது என்பதற்காக அத்ற்கு எல்லா உதவிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் அதன் கள்ளக் காதலனாக சீணாதான் இருந்து வருகிறது! இலங்கை சமாசாரம்தான் இங்கும்! பூவண்ணன், அரைகுறை அறிவு என்றைக்கும் ஆபத்து. எதையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டு விமர்சிக்க ஆரம்பியுங்கள். உடனே இங்கேயும் மாட்டுக் கறி, கோத்திரம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்!
    -மலர்மன்னன்

  30. Avatar
    மலர்மன்னன் says:

    நமது நாட்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ நேபாளத்தின் வழியாகத்தான் அந்தக் கள்ள நோட்டுகளைக் கட்டுக் கட்டாக ஹிந்துஸ்தானத்தில் புழக்கத்தில் விடச் செய்வது வழக்கம். ஹிந்துஸ்தானத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாகவே நேபாளத்திலிருந்து சோதனைக் கட்டாயம் இன்றி எளிதாக இந்தக் கள்ள நோட்டுகள் உள்ளே வருவதற்குச் சான்று உள்ளது. ஒருமுறை தற்செயலாக ஒரு பாக் தூதரக அதிகாரி கள்ள நோட்டுகளுடன் மாட்டிக் கொண்டு உடனடியாக பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். ஹிந்துக்களிடையே தியாகிகளுக்கும் மாவீரர்களுக்கும் எப்படிப் பஞ்சம் இல்லையோ அதேபோல துரோகிகளுக்கும் பஞ்சமே இல்லை. முந்தைய நேபாள அரசு அதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியது. இன்றைய நேபாள அரசு வெளிப்படையாக சீன ஆதரவு காட்டி இந்தியாவிடம் உதவியும் பெற்று வருகிறது. இதுதான் வித்தியாசம். ஹிந்து சமுதாய நல உணர்வை வெளிப்படுத்துவதாக நேபாள அரசு என்றுமே இருந்ததில்லை. காஞ்சி மடத்து பீடாதிபதிக்கு மரியாதை செய்வதாலேயே முந்தைய நேபாள அரச குடும்பத்தை ஹிந்து சமுதாயச் சார்புள்ள ஆட்சி செய்தவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? இந்திரா காந்தியும்கூட அப்படி மரியாதை செய்தவர்தானே!
    பூவண்ணன் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு அதற்குச் சார்பாகப் பாயிண்டுகள் தேடும் வழக்கத்தைவிட்டுவிட்டு திறந்த மனத்துடன் பிரசினைகளை அணுக வேண்டும். நான் ஒன்றும் கண் மூடித்தனமாக முகமதியர்களை துவேஷிப்பவன் அல்ல. கணவனால் கைவிடப்பட்டு நிராதரவாக இருந்த முகமதியப் பெண்ணை வீட்டின் சமையல் பணிக்கு வைத்து ஆதரித்தவன் நான். என் மகளூம் மாப்பிள்ளையும் அதனை மனமுவந்து ஏற்றனர்.
    -மலர்மன்னன்

  31. Avatar
    மலர்மன்னன் says:

    பொதுவான ஹிந்து சமய அடிப்படைக் கோட்படுகளை நான் நினைவூட்டுவது ஹிந்து சமயத் தத்துவ இறைக்கோட்பாடுகளை அறியாத ஹிந்துக்களுக்கும்தான். ஆகவே அவர்களிடம் போய்ச் சொல், இவர்களிடம் போய்ச் சொல் என்று ஷாலி ஆலோசனை சொல்வதைத் தவிர்த்தல் நல்லது.
    -மலர்மன்னன்

  32. Avatar
    பூவண்ணன் says:

    இரண்டு நூற்றாண்டுகளாக நேபாள மன்னர்களின் புண்ணியத்தில் தான் இந்தியா முழுவதும் சில,பல கோவில்களில் பூஜைகள் ஒழுங்காக நடந்து வந்தன.நம்ம சங்கராச்சாரியாரை ராஜகுருவாக கூட கடைசி ராஜா ஆக்கியதாக ஞாபகம் .அவர்கள் பெண் எடுத்தது,கொடுத்தது எல்லாம் இந்தியாவில் உள்ள ராஜ பரமபரையினரோடு தான்.இப்படி அவர்களை அநியாயமாக கை கழுவுவது ஞாயமா ஐயா
    பூரி ஜெகநாதர் கோவிலில் கஸ்துரி மான்களை கொண்டு எடுக்கப்படும் கஸ்தூரியில் தான் அலங்காரம்.மான் வதை இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் நேபாள மன்னர்களின் உதவியால் தடையின்றி பூஜைக்கு கஸ்தூரி கிடைத்து வந்தது .அப்படி உதவிய ஆண்ட பரமபரையை சீன பக்கம்திருப்பி விடுவது,ஆள்காட்டி என்று கூறுவது சரியா

  33. Avatar
    smitha says:

    As malarmannan pointed out, in his future movies, kamal will resort to his favourite topic – hindu bashing. He has been doing it all along, it will only increase.

    Muslims will be muslims – always.

  34. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் பூவண்ணன் அவர்களின் சில பல பெட் டாபிக்குகளில் ஒன்று நேபாளம் எடுத்துக்காட்டான ஹிந்து தேசம் என்று கதை புனைவது.

    யாருக்கு எடுத்துக்காட்டான ஹிந்து தேசம் நேபாளம்?

    எக்காரணம் கொண்டும் ஹிந்துத்வம் பேசும் ஹிந்துத்வவாதிகளுக்கு அல்ல.

    ஹிந்துத்வவாதிகள் என்றுமே நேபாளத்தை எடுத்துக்காட்டான ஹிந்து தேசமாக முன்வைத்ததில்லை.

    கிட்டத்தட்ட எட்டு வருஷம் நேபாள எல்லையில் உத்யோகத்தில் இருந்தவன் நான். ஒரு சாதாரண பாக்கி ஸ்தானி ஹிந்துஸ்தானத்தை வெறுப்பதை விட அதிகம் ஹிந்துஸ்தானத்தை வெறுப்பவன் மாவோ வாதம் என்ற விஷபோதை ஏறிய நேபாளி. அங்கு ராஜ்ஷாஹி (ராஜாவின் ஆட்சி) இருந்த போது ஹிந்துஸ்தான எல்லையில் இருந்தேன். ராஜா இருந்ததால் குடி முழுகிப் போயிற்று மாவோ வாதி வந்தால் தேனும் பாலும் ஓடும் என்று ஹிந்துஸ்தான எல்லையான தராயில் (Terai) மாவோ வாதிகள் பொய் ப்ரசாரம் செய்துள்ளதை கேட்டுள்ளேன். ராஜா குடும்பத்தையானால் போட்டுத் தள்ளியாகி விட்டது. இன்று தேனும் பாலும் ஒண்ணும் ஓடவில்லையே நேபாளத்தில். சீனாவுக்கு நேபாளத்தை எப்படி அடகு வைக்கலாம்; மிச்ச மீதி இருக்கும் நேபாள ஹிந்து கலாசாரத்தை எப்படி பாக்கி ஸ்தான ஜிஹாதிகள் மற்றும் சீனா உபகாரம் பெறும் மாவோ வாதிகள் மூலமாக அழிக்கலாம் என்று மாவோவாதிகள் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

    இந்தக் கூத்தெல்லாம் நிகழ்கையில் நேபாளத்தை ஹிந்துஸ்தானத்துடன் இணைப்பதற்கான வாய்ப்புகளையும் உலக நாடுகள் யோஜித்து வருகின்றன என்பதையும் சொல்ல வேண்டும்.

    கமல்ஹாஸன் வ்யாசமானால் என்ன மைசூர் போண்டா வ்யாசமானால் என்ன பூவண்ணன் சார் பெட் டாபிக் மட்டும் தான் எழுதுவது என்று வ்ரதம் ஏதும் எடுத்துள்ளார் போலும்.

    பூவண்ணன் சார் நேபாளம், மாட்டுக்கறி, கோத்ரம் அதெல்லாம் அந்த விஷயம் பேசும் போது பேசுங்களேன்; இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள உலகநாயகன் பற்றி சொல்லுங்களேன். விஸ்வரூபம் படம் பற்றியும் ஏதாவது விதி விலக்காகத் தான் ஆகட்டும் சொல்லிவிடுங்களேன்.

    கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் விஸ்வரூபம் வரட்டும் வந்து விஸ்வரூபமே எடுக்கட்டும் அல்லது புஸ்வரூபமாக ஆகட்டும் என்பது என் அபிலாஷை. அதே சமயம், நேற்று இன்று நாளை என பொழுதுக்கொரு கருத்து சொல்லும் கருத்து கந்த சாமியான அன்பர் கமல் ஹாஸன் என்ற நாடகமாடி என்னென்னவெல்லாம் கதைக்கிறார் என்பதும் பார்க்கத் தகுந்தது தான். தமிழகம் மதசார்பற்ற இடமில்லையாஞ்சாமி. காஷ்மீரம் முதல் கேரளம் வரை (தமிழகம் விடுத்து) இவர் மதசார்பற்ற இடம் எங்காவது இருக்குதா என்று தேடுவாரம். அப்படியெல்லாம் கிடைக்கவில்லையானால் ஜெனாப் ஷாரூக் கானுக்கு ஜெனாப் ரெஹ்மான் மாலிக் பயங்கரவாதி ஜெனாப் ஹாஃபீஸ் சையீத் போன்றோர் அறிவுரை அளிக்கும் —— பயங்கரவாதி ஜெனாப் முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் —– பாகிஸ் தான் என்று உருவாக்கி —– இன்று Baqi Sthan ஏன்று ஆகிய மதசார்பற்ற தேசத்திற்கு இவர் போவதைப் பற்றியும் யோஜிக்கலாம். பயங்கரவாதி ஜெனாப் ஹாஃபீஸ் சையீதுடன் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டு அடுத்த படத்துக்கு கதை பேசலாமே.

  35. Avatar
    இரத்தம் ஒரே நிறம் says:

    ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார்ஜி அவர்களே, நீங்கள் கேட்கிறீர்கள்:

    —-யாருக்கு எடுத்துக்காட்டான ஹிந்து தேசம் நேபாளம்?

    எக்காரணம் கொண்டும் ஹிந்துத்வம் பேசும் ஹிந்துத்வவாதிகளுக்கு அல்ல—

    என் உத்திரம்:

    நேபாள அரசர் பதவிபறி போகப்போகும் நிலையில் மாவோஸ்டுகளிடமிருந்து தப்பித்து நாக்பூர் ஓடி, ஆர் எஸ் எஸ் பெருந் தலைவர்களைப் பார்த்தாராமே?

    அட்வானிஜியைப் பார்த்தாரமே?

  36. Avatar
    poovannan says:

    திரு மலர்மன்னன்,கிருஷ்ணகுமார் அவர்களுக்கு
    விஸ்வரூபம் படத்தை பற்றிய,இஸ்லாமியரின் மனம் புண்படுகிறது என்ற சொத்தை வாதத்தை எதிர்க்கும் என் பின்னூட்டங்கள் மேலயே உள்ளன .நேபாளத்தில் பெரும்பானமையானோர் ஹிந்துக்கள்.அதனை ஆட்சி செய்தவர்கள் ஹிந்துக்கள்.ஹிந்து மத குருக்களின் கருத்துக்களை தெய்வத்தின் குரலாக ஏற்று கொண்டவர்கள்.செய்ய வேண்டிய பூசைகள்,பலிகளை சிறிதும் தவறாமல் செய்தவர்கள்.அவர்கள் ஆட்சி செய்த நாடு எந்த அழகில் இருக்கிறது என்று பார்த்தால் தான் ஹிந்து நாடு என்று ஆகாததால் நாம் தப்பித்தது புரியும்.பெரும்பான்மையாக ஹிந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை போன்ற கருத்துக்கள் பொய் எனபது புரியும்.நேபாளத்தில் கடவுள் மறுப்பாளர்கள் போராடியதால் பயங்கர சாதி அடக்குமுறைக்கு,பெண் அடிமைதனத்திற்கு துணை நின்ற ஹிந்து அடிப்படை வாதிகளின் ஆட்சியில் இருந்து அவர்களுக்கு வெளியில் வர சிறிய வழி உருவாகி இருக்கிறது
    இந்தியாவின் இன்றைய ஓரளவிற்காவது பரவாயில்லை (அண்டை நாடுகள்,நம்மோடு விடுதலை பெற்ற மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது)நிலைக்கு முக்கிய காரணம் கடவுள் மறுப்பாளர்கள்,ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் தான்.

    1. Avatar
      paandiyan says:

      //இந்தியாவின் இன்றைய ஓரளவிற்காவது பரவாயில்லை (அண்டை நாடுகள்,நம்மோடு விடுதலை பெற்ற மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது)நிலைக்கு முக்கிய காரணம் கடவுள் மறுப்பாளர்கள்,ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் தான்.

      //

      Nice Joke on 2013!!!!

  37. Avatar
    மலர்மன்னன் says:

    என் அன்பார்ந்த பூவண்ணன்,
    நீங்கள் சரியான பார்வை உள்ளவர் என்பதை இந்தச் சினிமா தொடர்பான உங்கள் கருத்துகள் உறுதி செய்வதாலேயே மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு உங்களை விளித்து என் கருத்துகளை எழுதலானேன்.
    படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழி தாங்கள் அறியாததல்ல. அதுபோல் வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கட்டிக் கொண்டு அழுவதால் மட்டுமே ஹிந்து உணர்வுள்ளவர் என்று எப்படி முடிவு கட்டிவிட முடியும்? ஹிந்துஸ்தானம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஹிந்து ராஷ்டிரம்தான். இது காலங் காலமாக நிரூபிக்கப்பட்டுவரும் உண்மை. அதனால்தானே இங்கு பார்ஸிகளும் யூதர்களும் நிம்மதியாகத் தங்கள் கலாசாரத்தைப் பின்பற்றிக்கொண்டு அதே சமயம் உலகியல் ரீதியாக வாழ்க்கையில் பல் வேறு துறைகளிலும் முன்னேறவும் முடிந்திருக்கிறது? எல்லாச் சமயத்தினரும் அவரவர் கோட்பாடுகளை எடுத்துக் கூறவும் தடை இல்லாமல் இருந்து வந்துள்ளது? 1949-ல் உருவான அரசியல் சாசனத்துக்குப் பிறகுதானா ஹிந்துஸ்தானம் மதச் சார்பற்ற கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது? சமயங்களின் அடிப்படையில் அவ்வப்போது இங்கும் சண்டை சச்சரவுகள் நடந்திருக்கலாம்தான். ஆனால் ஹிந்துஸ்தானத்தின் ஆதார ச்ருதியான சர்வ மத சமபாவத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படவில்லையே? எல்லாச் சமூகங்களிலும் எவ்வளவோ காரணங்களுக்காகப் பல பிரிவுகளிடையே சண்டை மூள்வது எங்கும் உள்ளதுதான். சமரசமும் காலப் போக்கில் ஏற்பட்டு சமூகம் முன்போல இணக்கமாக இயங்க ஆரம்பித்துவிடும். யானையின் படத்திற்குக் கீழே பெயர் எழுதினாலும் எழுதாவிடினும் அது யானைதான் என்பதுபோல ஹிந்துஸ்தானம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாவிடினும் ஹிந்துஸ்தானம்தான். அதனால்தான் இங்கு ஹிந்துக்கள் மிகப் பெரும்பான்மையினராக இருந்தும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரைவிடச் சிறப்புச் சலுகைகளுடன் செளகரியமாக வாழ முடிகிறது. சிறுபான்மைச் சமூகப் பிள்ளைகளூக்குப் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் உதவித் தொகை பெரும்பான்மைச் சமூக பிள்ளைகளுக்குக் கிடையாது! சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஹிந்துஸ்தானம் ஹிந்துக்களுக்கே உரித்தான சகிப்புத்தன்மையுடனும் மத அடிப்படையில் துவேஷம் பாராட்டாமலும் வாழப் பழகிவிட்டவர்கள் ஆதலால் இன்றளவும் மதச் சார்பற்ற தேசமாக நீடிக்க முடிகிறது. ஹிந்துக்களின் சகிப்புத் தனமையையும் தீவிர சுய மத வெறியற்ற போக்கையும் கோழைத்தனம், அலட்சியம் என்றெல்லாம் சிறுபான்மை அமைப்புகள் கருதிக் கொண்டு எல்லை மீறி நடந்துகொள்வதால்தான் ஹிந்துஸ்தானத்தை ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள தேசம் என நினைவூட்ட அதை ஹிந்து ராஷ்டிரமாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. நேபாள ராஜா தனது மகுடத்துக்கு ஆபத்து வந்த பிறகு ஹிந்து என்கிற பிரக்ஞை வந்து இங்குள்ள ஹிந்து அரசியல்-சமூக அமைப்புகளிடமோ சமய அமைப்புகளிடமோ வந்து புலம்புவதால் நேபாளம் என்கிற சுண்டைக்காயானது ஹிந்து ராஜ்ஜியம் என்ற யோக்கியதையைப் பெற்றுவிட முடியுமா? அண்டையில் உள்ள ஹிந்துஸ்தானத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு பதிலாக ஹிந்துஸ்தானத்தின் பகைவர்களூக்கு இடமளித்துவரும் நாடுதானே அது, அன்றும் இன்றும்? நேபாளம் ஹிந்துஸ்தானத்துடன் தன்னை இணைத்திருந்தால் இங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கையாவது அதிகரித்திருக்கும். ஆபிரகாமிய மதத்தவர் எண்ணிக்கை பலம் காட்டி ஓட்டுப் பொறுக்கிகளை அடி பணியச் செய்யும் போக்கிற்கு ஓரளவு மாற்று கிடைத்திருக்கும். பெண் அடிமைத்தனம், சாதி அடக்குமுறை என்பனவெல்லாம் ஏதோ ஹிந்து சமுதாயத்திற்கு மட்டுமே உள்ள குறைபாடு என்பதுபோல் பேசுகிறீர்கள். இவை எல்லாச் சமூகங்களிலும் உள்ளவைதான். சாதி என்பது வேண்டுமானால் வேறு ரூபங்களில் தென்படலாம். ஹிந்துஸ்தானத்தில் இன்று சிறிதளவாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் கடவுள் மறுப்பாளர்கள், ஹிந்து மத எதிர்ப்பாளர்கள்தான் என்றெல்லாம் நீங்கள் மனம் போன போக்கில் எழுதுவது வியப்பாக உள்ளது. விவாதத்திற்காக இப்படியெல்லாமா அபத்தமாக எழுதுவது? வீர ஸாவர்க்கருக்கே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்பது உங்களூக்குத் தெரியுமா? ஹிந்து சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் ஒதுக்கப்படுவதில்லை என்பதை அறிவீர்களா? இங்கு சமூக பொருளாதார மாற்றங்களை முன்னெடுத்தவர்கள் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்பதை அறியாதவரா நீங்கள்? ஹிந்து சமூகத்தில் காலத்திற்கேற்ற சீர்திருத்தங்கள் நிகழக் காரணமாக இருந்தவர்கள் அனைவரும் ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? போகிற போக்கைப் பார்த்தால் சுவாமி விவேகானந்தருக்கே ஹிந்து மத எதிர்ப்பாளார் என்று முத்திரை குத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே! விவாதத்தில் இறுதி வார்த்தை தனதாக இருக்க வேண்டும் என்ற அற்ப ஆசையில் இப்படியெல்லாமா வம்பு பேசுவது? ஆழ்ந்து சிந்தித்து சரியான பாதைக்கு வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். உங்களைப்போன்ற பலரை சரியான பாதைக்கு அழைத்து வந்ததோடு விசுவ ஹிந்து பரிஷத்தில் அவர்களைப் பணியாற்றவும் செய்த அனுபவத்தின் அடிப்படையில் உங்களை உரிமையுடன் அழைக்கிறேன். இவ்வளவெல்லாம் பேச முடிகிறவராக நீங்கள் இருப்பதற்குக் காரணமே நீங்கள் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதுதான் என்பது கூடவா உங்களுக்கு விளங்காமல் போய்விடும்?
    -மலர்மன்னன்

  38. Avatar
    Bala says:

    எல்லைக்கோட்டை நகர்த்தி வைத்துக்கொள்வது என்று சொல்வார்கள். அதுபோல நான் எப்போது எதைச் சொன்னாலும் அந்த வரையறைக்குள் வருபவர்தான் `இந்து` என்று மலர்மன்னன் முடிவு செய்துவிட்டால் வெற்றி எப்போதும் மலர்மன்னன் பக்கம்தான்.

    நேபாளம் இந்துநாடுதான் ஆனால் இந்து நாடல்ல (வடிவேலு சொல்வது போல).

    இந்துமதத்தில் சீர்திருத்தம் செய்தவர்கள் இந்துக்களே(பெரியார் உட்பட) எனவே இது இந்துநாடுதான். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகள் இந்துக்கள் அல்லர். அதாவது எனக்குப் பிடித்தவர் இந்து, பிடிக்காதவர் இந்துவல்ல. இதுதான் மலர்மன்னனின் விவாதம்!

  39. Avatar
    paandiyan says:

    நாடாளுமன்ற தேர்தலில் எப்படி ஒரு மாயஜாலம் கொண்டுவரவது என்று குழம்பி கொண்டு இருந்த சிதம்பரம் கருணா மற்றும் அவரது அடிபொடி பத்திரிகை வியாயரிபல் ஒருஅளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லலாம். ஆரம்பதி கமல் வியாபார வெறி அப்பறோம் கமல் vs முஸ்லிம் என்று இருந்த ப்ரோப்ளம் தற்போது இவர்கள் முஸ்லிம் பயம் ஒட்டு வங்கி போன்ற காரணத்தால் ஜெயா vs கமல் என்று ஆகிவிட்டார்கள் . கமல் ஒருநாள் இதற்க்கு எல்லாம் அனுபவித்தா ஆக்கவேண்டும் . இப்படி ஒரு கேவலமான வியாபாரியை நாம் எல்லாம் தூற்ற வேண்டும். இதையும் படியுங்கள்;
    http://www.techsatish.net/2013/02/blog-post_82.html
    http://www.techsatish.net/2013/02/blog-post_1109.html
    கோர்ட் arbitrator முறையில் சமாதானமாக போக முடியுமா என்று சொன்னபோது அரசியல் பத்திரிக்கை சப்போர்ட் இல் குளிர் காயிந்த மனிதர் இப்போ எதற்கு இறங்கி வர வேண்டும். பண வெறி புடிதவன் இங்கு உலக நாயகன்… நல்ல மாநிலம் இது

  40. Avatar
    Venkat Swaminathan says:

    அன்புள்ள பாலா,

    சார்வாகனையும் அனைத்துக்கொண்டது முதல் ஒருவருக்கொருவர் வாதிட்டு வேறுபட்ட ஆசாரியார்களைய்ம் அனைத்துக்கொண்டது, ரமணரையும் வள்ளலாரையும் அனைத்துக்கொண்டது, இப்படி எத்தனை ஆயிரம் பேர் வேண்டும், இந்த நீண்ட வரலாற்றில் வேறுபட்ட பார்வைகள் தரிசனங்கள் கொண்ட எல்லாரையும் தன் அனைப்பில் கொண்டது எல்லைக் கோட்டைத் தள்ளிப்போட்டதாகாது பாலா.இந்து மதத்தைச் சீர்திருத்திய பெரியார் என்றீர்கள். இந்தப் “பெரியாரின்” சிறுமை அத்தனையையும் சகித்துக் கொண்டது தான் இந்து மதத்தவனின் பெருமை.இத்தனை தூரம் தூஷித்த அந்த “பெரியாரின்” சிறுமை இந்து மதம் தந்த பாதுகாப்பிலிருந்து விலகாததும், ஆரம்ப காலத்தில் முஸ்லீம்களையும் சீண்டிப் பார்த்த போது வந்த தாக்குதலைக் கண்டு பயந்து அதன் பின் சாகும் வரை வாய் மூடிக்கிடந்த ஒரு ஜீவன் சிர்திருத்தவாதியோ, பெரியாரோ ஆகமுடியாது, பாலா. நேற்றும் முந்தின நாளும் நடந்த கொடுமைகளைச் சித்தரித்த கமல் ஹாஸனுக்கு “அவரது முஸ்லீம் குடும்பத்தவரே, முஸ்லீம் அன்பர்களே” தரும் வரவேற்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்கள் இல்லையா? அடிப்பது அவரது இனிய முஸ்லீம் சகோதரர்கள் தானே. சந்தோஷமாகப் பெற்றுக்கொள்வார். கதையில் கூட அவருக்கு பெண்டாட்டி பாப்பாத்தியாகத் தான் இருக்க வேண்டும். அவள் கோழி பிரியாணியோ வறுவலோ செய்து கொடுக்க வேண்டும். மதம் மாறாமல் ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்து நல்லெண்ணெய் மணக்கும் புளியோதரை செய்து கொடுக்கச் சாப்பிடலாமே.

    இப்படி பல நாக்குகளோடு சம்யத்துக்கேற்ற வசனங்கள் பேசும் ஜீவன்களையும் இந்து மதம் ஒதுக்கும் வழ்க்கம் கொண்டதல்ல. வள்ளலாரையும் அது போற்றும். அவரை எதிர்த்து வழ்க்காடு மன்றம் சென்ற ஆறுமுக நாவலரையும் போற்றும். யாரையும் தெரு நடுவில் ஊர் முழுதும் கூட்டம் கூடி கல்லால் அடித்து சுவனம் அனுப்ப ஃபட்வா சொல்லும் முல்லாக்கள் இந்துமதத்தில் இல்லை.

  41. Avatar
    மலர்மன்னன் says:

    என் அன்புள்ள ஸ்ரீ பாலா,
    உங்களது நகைச் சுவை உணர்வு நன்கு வெளிப்படும் மறுமொழியை ரசித்துப் படித்து வாய்விட்டுச் சிரித்தேன். விவாதங்கள் இப்படித்தான் எதிராளியும் ரசித்துச் சிரிக்கும்படியாக இருக்க வேண்டும். சட்டசபையில் அண்ணா ஒருமுறை அமைச்சர்களையும் ஏன் காமராஜரையுங்கூடச் சிரிக்க வைத்த சம்பவம்தான் எனக்கு நினைவு வந்தது. வெளியே மேடை போட்டுக் கூவுவதால் என்ன பயன், துணிச்சல் இருந்தால் சட்டசபைக்குள் வந்து பார் என்றீர்கள். சரி என்று உள்ளே வந்தோம். இப்போது சட்டசபையில் ஒரு எதிர்க் கட்சியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்கிறீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் எதிர்க் கட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் காண்பிக்க நீங்களே எதிர்க் கட்சியாக உடகார்ந்து எங்களூக்குக் கற்றுக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே என்று அண்ணா சொன்னபோது ஸி சுப்பிரமணியமும் ஆர். வெங்கட்ராமனும் அடக்க மாட்டாமல் உரக்கச் சிரித்தார்கள்.. எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் காமராஜர்கூட முகத்தில் சிரிப்பைக் காட்டிவிட்டார்! சட்டசபையே ஒரு ஐந்து நிமிடங்களுக்குப் பெருத்த சிரிப்பொலி அலை மோதும் கூடமாக விளங்கியது! 1957-ல் அண்ணா அப்படிச் சொன்னதை 1967-ல் காங்கிரஸ்காரகள் நிரூபித்து விட்டார்கள்! அது போகட்டும், அன்புள்ள ஸ்ரீ பாலா, ராமசாமி என்று பெயர் வைத்துக் கொண்டு நாளெல்லாம் மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச்சந்திரப் பிரபுவைப் பலவாறு இகழ்ந்தும் அவமதித்தும் பேசிக்கொண்டிருந்தவர் ஈவேரா. ராமனுக்கே நான் சாமி என்று விதண்டா வாதம் பேசிவிட்டால் ஆயிற்றா? அதுபோல் ஹிந்து நலனுக்கு விரோதமான செயல்களில் இறங்கியவாறே தன்னை ஹிந்து தேசம் என்று நேபாள தேசம் சொல்லிக் கொண்டதால் என்ன பயன்?
    ஈ.வே.ராமசாமியை ஹிந்து சமயச் சீர்திருத்தவாதி என்று எப்படிக் கூசாமல் சொல்ல முடியும்? வெறும் புராணங்களில் உழன்று கொண்டு கிடந்து ஹிந்து சமயத் தத்துவ ஞானம் பற்றியே எவ்விதப் புரிதலும் இல்லாமல் போனவர் அவர். சமயக் கோட்பாடுகளுக்கும் சமூக நடைமுறைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் குழப்பிக் கொண்டு ஹிந்து மதத்தையே பூண்டோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தவரை ஹிந்து சமய சீர்திருத்தவாதி என்று எப்படி ஏற்க முடியும்? ஆனால் ஒரு வேடிக்கை, காந்தி இறந்தபோது ஹிந்துஸ்தானத்துக்கு காந்தி தேசம் என்றும் ஹிந்து மதத்திற்கு காந்தி மதம் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றும் தமது இரங்கல் செய்தியில் விருப்பம் தெரிவித்தவர் ஈவேரா! ஹிந்துஸ்தானம் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்!
    பெரும்பாலான அரசியல் கட்சிகளையும் முன்னின்று நடத்துபவர்களும் அவற்றில் பெரும்பான்மையாக இருப்பவர்களும் ஹிந்துக்களாயிருந்தும் பதவி ஆசை காரணமாக ஹிந்து நலனுக்கு பாதகம் என்று தெரிந்தே அந்தக் கட்சிகள் சிறுபன்மையினர் வரம்பு மீறி செல்வாக்கு பெறச் செய்வதால்தானே ஓட்டுப் பொறுக்கிகள் என்று அரசியல் கட்சிகளை அழைக்கிறோம்? அரசியல் நிர்ணய சபையில் முகமதிய உறுப்பினர்கள் முகமதியர் என்பதற்காக எங்களுக்குச் சலுகை எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லியும் இல்லையில்லை, சலுகை தருகிறோம் என்று சொன்னவர்கள் ஹிந்து உறுப்பினர்கள்தான்! அப்போதே தொடங்கிவிட்டது ஓட்டுப் பொறுக்கித்தனம்! பதவிக்காக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கிற ஹிந்துக்கள் இருந்ததால்தானே இங்கு அந்நியர் உள்ளே புக முடிந்ததோடு பலவாறான வழிகளில் மக்களை மத மாற்றம் செய்து ஹிந்து சமுதாயத்தைக் கூறு போடவும் முடிந்தது! யானை தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுபோல்தான் ஹிந்து சமயமும் சமூகமும் நடந்துகொள்கின்றன என்பதுதான் கூட்டங்களின்போது எனது பேச்சுகளில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் கருத்து!
    -மலர்மன்னன்

  42. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ பாலா, ஆக ஹிந்துக்களாக இருந்துகொண்டு தெரிந்தே ஹிந்துக்களின் நலனுக்கு விரோதமான போக்கை நேற்கொள்பவர்ளை நீங்களே மிகவும் பொருத்தமாக ஹிந்து ஆனால் ஹிந்து இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? உங்களை வழி மொழிகிறேன்! சரிதானே? நீங்களே பாருங்கள், தமிழ் நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் என்று இல்லாத பலவற்றை வெறும் லெட்டர் ஹெட்டுக்காகவே தமிழக அரசு அங்கீகாரம் செய்து அவர்களையும் கமால் ஹசனையும் தனக்கு முன் அமர்த்தி சமரசப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஜயலலிதாவின் இந்தச் சுயநல சூதாட்டம் விரைவில் தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் இஸ்லாமிய அமைப்புகள் என்ற பெயரால் ஆங்காங்கே சமூகச் விரோதக் கும்பல்கள் வன்முறை வெறியாட்டம் ஆட, காவல் துறை கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கப் போகிறது! ஜயலலிதா கோவில் குளம் என்று போகிறார், யாகம் ஹோமம் என்றெல்லாம் ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஹிந்து நலனுக்கு பாதகமான சூழலை உருவாக்குகிறார். சகிப்புத்தனமையற்ற இஸ்லாமிய நடைமுறையை நமது சகிப்புத் தன்மை மிக்க சமுதாயத்தில் வலிந்து திணிக்கிறார். இவர் ஹிந்து ஆனால் ஹிந்து இல்லைதானே?
    சகிப்புத் தன்மை காட்டிக் கோழைகள் என்று பெயர் எடுப்பது போதும், கடிக்கவே வேண்டாம் ஆனால் சீறவாவது சீறலாம் என்றுதான் நான் சொல்கிறேன். நீ உன் மதக் கோட்பாட்டின்படி என்ன நேர்ந்தாலும் சகித்துக்கொண்டிருக்கக் கடவன் என்று சொல்லி ஏறி மிதித்தலை எத்தனை காலம் பொறுத்திருப்பது?
    இப்படிச் சொல்வதால் என்னையும் ஹிந்து ஆனால் ஹிந்து இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் என வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

  43. Avatar
    மலர்மன்னன் says:

    இந்த லெட்டர்பேடு இஸ்லாமிய அமைப்புகள் எங்களுக்குக் கமால் ஹசனிடம் கேள்வி கேட்கவேண்டும் அதனால் அவரும் நேரில் வர வேண்டும் என்று இப்போதே நிபந்தனை விதிக்க ஆரம்பித்துவிட்டன! இவ்வளவுக்கும் கமால் தன் படத்தை ’’இஸ்லாமியத் தலைவர்கள்’’ பலருக்கும் முன்பே போட்டுக் காட்டி அவர்களிடம் பய பக்தியுடன் ஒப்புதல் வாங்கியும் இருக்கிறார்! நமது அனுதாபத்திற்குச் சிறிதும் தகுதி இல்லாதவர்தான் இப்போது கமால் என்று அறியப்படும் கமல். கணையாழி காலத்தில் அவர் எங்களூக்குக் காட்டிய முகமே வேறு! அப்போது அவர் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார் என்பதுதான் வித்தியாசம்!
    -மலர்மன்னன்

  44. Avatar
    மலர்மன்னன் says:

    கமால் ஹசன் ‘’இஸ்லாமியக் கூட்டமைப்புத் தலைவரக்ள்’’ ஆட்சேபித்த ஒலி ஒளிக் கட்சிகளையெல்லாம் எடுத்துவிடப் பணிவோடு ஒப்புக்கொண்டு விட்டாராம். இதே அடிப்படையில் பிராமணர் சங்கம் தனது ஆட்சேபப் போராட்டத்தைத் தொடங்கி தான் ஆட்சேபகரமானது எனக் கருதும் காட்சி, வசனங்களை நீக்க வலியுறுத்துமா?
    -மலர்மன்னன்.

  45. Avatar
    punaipeyaril says:

    அமீர், ஜவஹருல்லா போன்ற கட்டப்பஞ்சாயத்து இன்று ஜெயித்ததாக தோணலாம். காலம் பதில் சொல்லும். அது சரி, சௌதி அரேபியாவில் தியேட்டரே கிடையாதே, அப்புறம் அமீர் தன் படத்தை அரேபிய முஸ்லீம்களுக்கு எப்படி காட்டுவார். உண்மையான முஸ்லீம் என்றால் சினிமா எடுப்பது ஏன்…

  46. Avatar
    poovannan says:

    மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கியமான இரு மாநிலங்களாக ஆந்திரமும் ,தமிழகமும் 1996 முதல் உள்ளன.1996இல் காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் மண்ணை கவ்வியதால் இங்கு பெரும் வெற்றி பெற்ற தி மு க,த மா க ,தெலுகுதேசம் கட்சிகள் முக்கிய பங்கு வஹித்த UF அரசு ஆட்சியில் இருந்தது

    1998இல் ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல் நடக்கும் போது கோவை குண்டுவெடிப்பு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பலத்த தோல்வி அடைந்த அ தி மு க தலைமையிலான அணிக்கு பெரும்பான்மை இடங்கள்(குண்டு வெடிப்புக்கு முன் தி மு க கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று தான் எல்லா கருதுகணிப்புகளும் தெரிவித்தன ) கிடைக்க உதவி செய்தது .ஆந்திரத்தில் நாய்டு ராஜ்ஜியம் தான்.இந்த இரு கட்சிகளும் NDA அரசை ஆட்டுவிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கின.அடுத்து வந்த 1999 தேர்தலிலும் அ தி மு க போய் தி மு க வந்தது தான் ஒரே மாற்றம்.நாய்டுவும்,தமிழக கட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன

    அடுத்த தேர்தலில் 2004 இல் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த NDA கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு மாநிலங்கள் .தமிழகத்தில் 40 -0,ஆந்திரத்தில் தெலுகு தேசத்திற்கு நான்கு தான் .இதனால் தான் UPA ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவுடன் வர முடிந்தது.இந்த இரண்டு மாநிலங்களில் நிலை மாறியிருந்தால் NDA கூட்டணி தான் ஆட்சியை பிடித்திருக்கும்.

    2009 தேர்தலிலும் இந்த இரண்டு மாநிலங்கள் தான் UPA தொடர முக்கிய காரணம்.இடதுசாரி போய் மம்தா வந்தார்.அதிக இடங்கள் இருக்கும் உத்தர்ப்ரதேசதில் இரண்டு ,மூன்று கட்சிகள் இடங்களை பிரித்து கொள்வதால் ,ஒன்றை ஒன்று ஆட்சியில் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதால் அதன் முக்கியத்துவம் குறைவு தான்.

    பா ஜ கா .காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ஒரு தேர்தல் மாற்றி இன்னொன்றில் ஒரு கட்சி வெற்றி பெறுவதால்(ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் இன்னொன்றில் தோல்வி அடைவதால் எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவது இல்லை.)

    இந்த இரு மாநிலங்களை குறி வைத்து அற்புதமாக காய் நகர்த்துதல் நடைபெறுவது போல தெரிகிறது .ஆந்திரத்தில் திடீரென்று சார்மினார் நான்கு தூண்களில் ஒரு தூணை ஒட்டி ஒரு கோவில்(ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சார்மினார் புகைப்படம் ஹிந்து பத்திரிக்கையில் வந்ததை பார்த்தால் அங்கு ஒரு கோவிலும் கிடையாது),கலவரம்,வழக்கு,இஸ்லாமியர் கட்சி மிரட்டல்,ஆதரவு வாபஸ் மற்றும் பல ஆண்டுகளாக வெற்றி கொண்டான்,ராமகோபாலன் ,தொகாடிய போல பேசி வந்த MIM நிறுவனரின் மகனின் பேச்சு வீடியோக்களை வைத்து இந்தியாவிற்கே ஆபத்து போல நடக்கும் போராட்டங்கள்,பிரசாரங்கள் ஆகியவற்றோடு நம் ஊரில் நடக்கும் (இங்கே சினிமா தானே கோவில்)சினிமா எதிர்ப்பு கோஷங்களோடு பொருத்தி பார்த்தால் சாணக்கிய தந்திரங்கள் தெரிகிறது.

    இரு மாநிலங்களிலும் இஸ்லாமிய இயக்கங்களை தூண்டி விட்டு விட்டு மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவோம் ,சார்மினாரை உடைப்போம் நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று அவர் உருவாக்கிய பொன்வாக்கியங்கலொடு அவர் ரத யாத்திரை நடந்து இந்த மாநிலங்களில் கலவரம் வெடித்தால் ஆகா வோட்டுக்களை அள்ளலாமே

  47. Avatar
    poovannan says:

    பா ஜ கா தலைவரின் ரத யாத்திரைக்கு எதிராக கலவரம் நடந்தால் ,இந்தியா முழுவதும் பா ஜ கா விற்கு உதவியதாகவும் ஆயிற்று.இங்கே திடீரென்று பழைய அம்மாவாக ஏவல்துரையை வைத்து சிலரை போட்டு தள்ளி,லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போல ,முட்டாள் அமைப்புகளில் உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களை கைது செய்து விட்டால் ,ஆகா இரும்பு மனுஷி ,எவ்வளவு தான் பொறுப்பார் என்று இங்கும் வோட்டுக்களை அள்ளி விடலாம் .
    காய் நகர்த்தல்கள் மிகவும் அற்புதமாக நடப்பது போல தெரிகிறது

  48. Avatar
    poovannan says:

    இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஹிந்து மக்களுக்கு பெரியார் பெரியாழ்வார் தான்.மற்ற மாநிலங்களில் உயர் சாதியினரின் ஆதிக்கம் இன்றும் ஜோராக உள்ளது.மத்திய அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டு இடங்களை தங்கள் மக்கள் தொகை சதவீதத்தை(மற்ற மாநிலங்களில் உள்ள BC/SC மக்களோடு ஒப்பிட்டால் ) விட அதிக அளவில் தமிழகத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் பெறுவதற்கு முக்கிய காரணம் இங்கு இட ஒதுக்கீட்டிர்க்க்கு இருக்கும் நீண்ட வரலாறு.அதற்க்கு போராடியவர்களில் யார் எப்படி மறைத்தாலும் மறைக்க முடியாத சூரியன் பெரியார் தான்.தமிழகத்தில் பிராமணர்களை துணைவியாக கொள்ளும் தாழ்த்தப்பட்ட /பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு இருக்கும்.இதற்கும் முக்கிய காரணம் பெரியார் தான்.பிராமண பெண்களின் இந்த துணிச்சலுக்கு.சுயமாக முடிவு எடுக்கும் சக்திக்கு முக்கிய காரணம் பெரியார்.
    தமிழகத்தை சார்ந்த பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் அரசியல்,கல்வி,உயர்பதவிகளில் ஒரளிவிற்கு மேலே வந்ததற்கு காரணம் பெரியார் அல்லாமல் வேறு யார்.
    கமலஹாசன் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்.ஆனால் கடவுள் நம்பிக்கையில் பெரியார் ஆதரவாளர்.அது அவர் விருப்பம். இட ஒதுக்கீடிற்கு எதிரரான கருத்து கொண்டவர் என்பதால் சில பிராமண துவேஷம் கொண்ட தி க ஆட்கள் அவரை வெறுப்பார்கள்,குறை கூறி கொண்டே இருப்பார்கள்.ஆனால் இட ஒதுக்கீடு பெரும் பெரும்பான்மை மக்கள் அவருக்கு இட ஒதுக்கீடு தவறு என்று கருதும் உரிமை உண்டு என்பதை புரிந்து கொண்டு அவரின் ரசிகர்களாக இருப்பார்கள்.யாரையும் ஒரு விஷயத்தில் அடக்கி பார்ப்பது வன்மம் கொண்டவர்களின் பார்வை

    அதே போல தான் கடவுள் நம்பிக்கை உள்ள பெரும்பான்மை இந்துக்களும் பெரியாரை கொண்டாடுவர் .பெரியாரை வெறுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்ல,இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்,சாதி ஆதரவு அடிப்படைவாதிகள் தான்.

  49. Avatar
    மலர்மன்னன் says:

    பூவண்ணன்,
    ஹைதராபாத், எம் ஐ எம் பற்றி எல்லாம் எதுவும் தெரியமலேயே இஷ்டத்துக்கு அடித்து விடுகிறீர்கள். எம் ஐ எம் 1927 -ல் தொடங்கப்பட்ட நிஜாம் ஆதரவு ரஜாக்கர் கட்சி. நீங்கள் என்னடா என்றால் எம்ஐஎம் நிறுவனரின் மகன் என்று ஒரு சின்னப்பையனைக் குறிப்பிடுகிறீர்கள். ஹைதராபாத் முகமதியரின் கோட்டை. அங்கு ஹிந்துக்கள் விஷமம் செய்வார்கள் என்கிறீர்கள். சார்மினார், ஹைதராபாத் எல்லாம் வருமுன் அது பாக்யநகர் என அறியப்பட்டது என்பதை அறிவீர்களா? சார்மினார் புகைப்படம் தி ஹிந்துவில் வந்திருந்தால் ஹிந்து விரோத தி ஹிந்து எந்தக் கோணத்தில் அதை எடுத்திருக்கும் என்று யோசிக்க வேண்டாமா? நீங்கள் எப்ஓதாவது சார்மினார் பக்கம் சென்றதுண்டா? முந்தைய ஹைதராபாத் கலவரங்களைப் பற்றிச் சிறிதளவு புரிதலும் இன்றி உங்கள் கற்பனைக் குதிரையில் பறக்கிறீர்கள். முன்னதாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு அதை நியாயப்படுத்த சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எங்கெல்லாமோ அலைகிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லக் கூடிய ஒரே ஆலோசனை நன்கு ஓய்வெடுத்து எது பற்றிப் பேச விரும்புகிறீர்களோ அதுபற்றிச் சிறிதாவது தெரிந்து கொண்டு அதன் பின் பேசத் தொடங்குங்கள். சில் ஆண்டுகளுக்கு முன் இந்த நிஜாமின் அடியாட்களான Majlis e Ithehadul Muslimeen (MIM) பற்றித் திண்ணையில் மிகவும் விரிவாக எழுதியுள்ளேன். விருப்பம் இருந்தால் தேடிப் பார்த்துப் படியுங்கள். ரஜாக்கர்கள் (எம்ஐஎம்) ஹைதராபாதில் அட்டூழியம் செய்து திரிந்தபோது நான் விவரம் தெரிந்த சிறுவனாக ஹைதராபாதில் இருந்தேன்! உங்களுக்கு மறுமொழி அளிப்பது வெட்டி வேலை என்பது இப்போது புரிகிறது.
    -மலர்மன்னன்

  50. Avatar
    மலர்மன்னன் says:

    ரஜாக்கர் அட்டூழியங்கள் பற்றி செகந்திராபாதில் வசித்த அசோக மித்திரனும் தமது 18 வது அட்சக் கோடு நாவலில் ஓரளவு கோடி காட்டியிருப்பார். ஆனால் உண்மைகளைச் சொல்லிப் பகையைத் தேடிக்கொள்ளாத கெட்டிக்காரர் அவர். நாங்கள்தான் கல்லடிக்கும் ஆசிட் வீச்சக்கும் ஆளாகி தழும்புகளைத் தடவிக்கொண்டு உட்காந்திருக்கிறோம்!
    -மலர்மன்னன்

  51. Avatar
    மலர்மன்னன் says:

    பூவண்ணன், திசை திருப்பிக்கொண்டு போவதற்காகவே நீங்கள் மறுமொழி எழுதுவதாகத் தெரிகிறது. நானும் சரி, நமக்குத் தெரிந்த தகவல்களைச் சொன்னால் இன்றைய தலைமுறையினருக்குப் பயன்படும் என்று சில திண்ணை வாசகர்களின் விருப்பத்திற்காகவே மறுமொழி எழுதுகிறேன். ஆனாலும் இப்படியா, எங்கே தொடங்கி எங்கே வந்துவிட்டீர்கள்! கட்டுரையை அனவரும் மறந்துவிட வேண்டும் என்பதில் எவ்வளவு முனைப்பாகச் செயல்படுகிறீர்கள்? திசை திருப்பும் திலகம் என்று தமிழ்நாட்டு சம்பிரதாயப்படி உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்தாலும் தகும்!
    -மலர்மன்னன்

  52. Avatar
    ஷாலி says:

    மலர் மன்னன்.// இதே அடிப்படையில் பிராமணர் சங்கம் தனது ஆட்சேபப் போராட்டத்தைத் தொடங்கி தான் ஆட்சேபகரமானது எனக்கருதும் காட்சி வசனங்களை நீக்க வலியுறுத்துமா?//
    பெரியவர் ம ம இப்படியெல்லாம் எழுதுவதுதான் ஆட்செபகரமானது.ஹிந்து மதத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு.மூத்த எழுத்தாளர் பெரியவர் திரு.வெங்கட் சாமிநாதன் தன் பின்னூட்டத்தில் இதை தெளிவாக விளக்குகிறார்.
    // “இப்படி பல நாக்குகளோடு சமயத்திற்கேற்ற வசனங்கள் பேசும் ஜீவன்களையும் இந்து மதம் ஒதுக்கும் வழக்கம் கொண்டதல்ல.வள்ளலாரையும் அது போற்றும்.அவரை எதிர்த்து வழக்காடு மன்றம் சென்ற ஆறுமுக நாவலரையும் போற்றும்.//
    இதுபோன்ற பதிலைத்தான் திரு.பூவண்ணனுக்கும் பெரியவர் ம ம கொடுக்கிறார்.// விவாதத்திற்காக இப்படியெல்லாமா அபத்தமாக எழுதுவது? வீர ஸாவர்க்கருக்கே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்பது உங்களுக்குத்தெரியுமா?ஹிந்து சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் ஒதுக்கப்படுவதில்லை என்பதை அறிவீர்களா?// மம உத்தரப்படி கடவுளை நம்பாத வீர ஸாவர்க்கருக்கே ஹிந்து மதம் சாமரம் வீசும்போது தசாவதார விஸ்வரூப கமல் மீது மட்டும் புயல் பாய்ச்சல் ஏன்? திக உறுப்பினராக கூட இல்லாத கமல் மீது பிராமண சங்கத்தை ஏவிவிடுவது முறையா?ம ம வுக்கு இது அபத்தமாக தெரியவில்லையா? சகிப்புத்தன்மையுள்ள ஹிந்து மதத்தில் கமலுக்கும் இடம் உண்டு.ஆனால் ஆபிரகாமிய பார்வையுள்ள ம ம மனதில்தான் இடம் இல்லை.ஹிந்து மதத்திலுமா முல்லாக்கள்?

  53. Avatar
    மலர்மன்னன் says:

    சம்பந்தா சமப்ந்தமில்லாமல் எதை எதனோடு முடிச்சுப் போடுகிறார் ஷாலி என்கிற அனபர்? குறிப்பாகத் திரைப்படங்களில் பலவாறான கேலி கிண்டல்களுக்குத் தொடர்ந்து ஆளாகி வருவது பிராமண சமூகம். ஆனால் பிராமண சமூகம் அதைப் பொருட்படுத்தாமல் சகிப்புத்தன்மையுடன் வாளாவிருக்கிறது. இதன் காரணாமகவே மேலும் மேலும் அது இளக்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் போக்கு அத்துமீறுகிறது. கமாலின் சமீபப் படத்தில் இது வரம்பு மீறியிருப்பதாக அறிகிறேன். அவ்வாறு இருக்குமானால் எதிர்ப்புக் காட்டிய முகமதியர்களுக்கு எப்படி அடிபணிந்து அவர்கள் ஆட்சேபிக்கும் பகுதிகளை அகற்ற அவர் முன் வந்துள்ளாரோ அதுபோல பிராமணர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களை கேலி செய்யும் பகுதியையும் நீக்கிவிட முன்வரலாம் அல்லவா? நியாயமான பகுதிகளையே முகமதியர் எதிர்ப்பின் காரணமாக நீக்க முன்வந்துள்ள பெருந்தன்மை மிக்க கமால் காட்சிகள் முகமதியரை இழிவு படுத்தவில்லை என்ற போதிலும் அவற்றை நீக்கிவிடப் போகும் கமால், பிராமணர்களை அப்பட்டமாக கேலி செய்யும் காட்சிகளை நீக்க முன்வராமலா இருப்பார்? எத்ரிப்புக் காட்டினால் அதற்கு மிகப் பெருந்தன்மையுடன் அவர் முன்வருவார் என்றே நினைக்கிறேன். வடக்கே கமால் ஹசன் என்றுதான் அவரைக் குறிப்பிடுகிறார்கள். எனவே இதற்கும் என்மீது குறை காண வேண்டாம். நீ ஹிந்து ஆகவே உன் மதக் கோட்பாட்டின்படி எத்தனை அட்டூழியங்களுக்கு நீ ஆளானாலும் அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி காலத்திலிருந்தே கேட்டுக் கேட்டு இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் அவர்களது சொந்த தேசத்திலேயேகூ பொறுமையுடன் அடங்கிக் கிடக்க வேண்டும்?
    -மலர்மன்னன்

  54. Avatar
    poovannan says:

    http://en.wikipedia.org/wiki/All_India_Majlis-e-Ittehadul_Muslimeen

    மலர்மன்னன் ஐயா
    ஹைதராபாதில் பணியில் இருந்தவன் நான்.மகன் என்று சொன்னது தவறு தான்.பேரன்,கொள்ளுபேரன்.ஒவைசி குடும்பம் தான் கட்சியை வைத்திருக்கிறது
    அதே போல இங்கு அடிப்படைவாத குழுக்கள் உருவாகும் முயற்சி நடைபெறுகிறதோ என்று தான் எழுதினேன்.பர்தாவில் வந்து செகிண்டேரபாத் கிளப் உள்ளே நவீன உடைகளில் மாறி அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பல நண்பர்கள் எனக்கு உண்டு.
    நம் சாதி தலைவர்களும் அதே போல தான் சாதி கூட்டங்களில் பேசுவார்கள்.ஒரு மணி நேரம் கொடுத்தால் ஒரு ஆதித்ரவிடர்,வன்னியர்,கள்ளர்,பள்ளர் கூட உயிரோடு இருக்க முடியாது,போனால் போகிறது என்று விட்டு வைத்திருக்கிறோம் என்று பேச்சு வராத சாதி கூட்டமே இருக்காது
    பாக்ய நகருக்கு முன்னேயும் அதற்க்கு வரலாறு உண்டா இல்லையா.அங்கு மக்கள் சென்று வழிபடுவதற்கும் ,அங்கு கோவில் எழுப்புவதற்கும் வித்தியாசம் இல்லையா
    இஸ்லாமியர்களை விட தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஹிந்துக்களுக்கு தான் சலுகைகள் அதிகம்.இஸ்லாமியருக்கு அதிக சலுகைகள் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தியது ஹிந்டுத்வர்கள் தான்.

  55. Avatar
    Raghu says:

    வடக்கே கமால் ஹாசன் என்று குறிப்பிட்டதால் தானும் அவ்வாறு குறிப்பிட்டதாக எழுதுவது என்னவொரு மனநிலை? அவா, இவா என்று பேசிக் கொள்வது பிராமணர்களுடைய பாஷை என்றும், அதை திரைப்படங்களில் உபயோகித்தால் இமாலயத்தவறு என்றும் சித்தரிப்பதா? அப்படி என்ன வானத்தில் இருந்து குதித்ததா பிராமணர்களின் சொல் வழக்கு. பிறர் அதை உபயோகிக்கக் கூட தடையா, அது உங்களைக் கிண்டல் செய்வதாய் ஆகி விடுமா? உங்களையெல்லாம் மாற்ற எத்தனை பெரியார் வந்தாலும் போதாது.1

  56. Avatar
    மலர்மன்னன் says:

    சரியான மனநிலைதான். என் முஸ்லிம் குடும்பத்தவர் என்று சொன்ன கமாலை அப்படிக் குறிப்பிடுவதை அவர் விரும்பவே செய்வார். அதற்காகவே கமல என்பதைக் கமல் என்று மாற்றிக்கொண்டவர் அவர். தான் ஹிந்து இல்லை என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு விருப்பம் அதிகம் (இந்த விஷயத்தில் நேரு, வி பி சிங் வகையறாக்களின் வழித் தோன்றல்!).
    1.) நூற்றுக்குத் தொண்ணூறு சத பிராமணர்கள் இன்று அவா இவா என்று பேசுவதில்லை. இருப்பினும் கதாபாத்திரங்கள் அவ்வாறு பேசுவதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
    2. கேலியும் கிண்டலும் செய்வது பேசும் பாஷையில் மட்டுமல்ல.
    நான் திரைப்படங்கள் பார்ப்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்குத் திரைப்படங்களை மிகமிகக் குறைவாகவே பார்க்கிறேன். பழசி ராஜா, உருமி, லைஃப் ஆஃப் பை இவையே நான் சமீபத்தில் பார்த்த படங்கள். சர்வ தேசத் திரைப்படங்கள் காண அழைப்பு வருகிறது என்றாலும் இப்போதெல்லாம் போக முடிவதில்லை. நம்பகமான பலர் சொல்வதைக் கேட்டே பிராமணர்களைத் திரைப்படங்களில் பலவாறு அத்துமீறி இழிவும் கேலியும் செய்கிறார்கள் என அறியலானேன். ஆகவே இது எந்த அளவுக்குச் சரி என்று மற்றவர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும்.
    -மலர்மன்னன்

  57. Avatar
    paandiyan says:

    எனக்கு தெரிந்து இதை எல்லாம் பிராமின் கண்டு கொள்ளவத இல்லை . டெல்லி கணேஷ் இதை செய்தார் ஆரம்பத்தில் அப்பறோம் இந்த மாத்ரி வேடம் நடிப்பது இல்லை என்று முடிவு செய்தார். பாராட்ட வேண்டிய விஷயம் அது . பிராமின் பாஷை ஜெயகாந்தான் கூடத்தான் பேசுவர் யாரு கேலி பண்ணியது . வனத்தில் இருந்து குதித்து இருக்கட்டும் , தேவர் என்பது நீங்கள் வாங்கிய பட்டமா என்ற வசனத்துக்கு உசிலம்பட்டி காலேஜ் இல் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டர இமயம் அதற்க்கு என்ன பதில். எப்படி சர்தார்ஜி ஜோக் விஷயம் அவர்கள் ரசிக்கின்றர்களோ அதைபோலதான் இங்கு பிராமின். sportive mentality உண்டு. மௌன்ட்றோடில் நான்கு நாள் தங்கி கோஷம் போட யாரும் எண்ணவில்லை . எல்லருயும் மாற்ற பெரியார் யாரு ??? அவரு என்ன பண்ணினார் இங்கு முதலில் . எதையும் தாங்கும் என்று ஒருத்தார் சொன்னார் அவரு வாரிச இதயத்தை கிணறில் குதித்து தேடினனர். மாற்றம் பற்றி பேசியரவர்களின் யோக்கியதை பாருங்கள் முதலில்…இணையத்தில் ஒரு விசயம் நடகின்றது,. முஸ்லிம் விஷயம் வரும்போது எல்லாம், ஜாதி ஹிந்துவை விட்டு பிராமின் மட்டும் போட்டு புரட்டி எடுப்பது என்று அதை இங்கு மட்டும் இல்லை எல்லா பிளாக்ளும் தேர்ந்த “அறிவாளிகள்” மிகவும் சாமர்த்தியமாக இதை பண்ணிக்கொண்டு இருகின்றார்கள். எங்கு இருந்து வந்த உத்தரவோ ? என்ன பின்புலமோ?? யாரு கண்டா…
    அது சரி இதுவ ஒரு ஜாதி வெறி இல்லையோ? சோனியா சோனியா பாட்டுக்கு கோர்ட் வரை போனால் புத்திசாலி . பிராமின் பண்ணவ கூடாது, பண்ணினால் கோர்ட் கேட்குமோ இல்லையோ இணயம் மிரட்டும்.. ம்ம் ஜாக்கிரதை….

  58. Avatar
    punaipeyaril says:

    பார்ப்பனப் பெண்களை கதாநாயகியாக போட்டு, பார்ப்பன ஆண்களை கதாநாயகர்களாக போட்டு, பார்ப்பன திறமைசாலிகளை கதா விவாதங்களில் போட்டு அண்டிப்பிழைக்கும் கும்பல் அதே பார்ப்பனர்களை கிண்டல் அடிப்பது ஒரு வித மனநோய். கமலஹாசன், மணிரத்னம், கிருஷ்ணமாச்சாரி ஷிரிகாந்த், பாலசந்தர், இன்போசிஸ் நாறாயணமூர்த்தி போன்றோர் தரமான இமேஜை உலக அளவில் பெற்றுத் தந்தவர்கள். சிவாஜி கணேசன் ஒரு முறை முக்தாவினால் பூணுல் அணிவிக்கப்பட்டு பார்ப்பனர் எனும் மனநிலை கண்டு சந்தோஷித்தவர். என்னவேண்டுமானாலும் ஆகலாம் ஆனால் பார்ப்பனன் ஆக முடியாது என்ற வார்த்தை முத்தைச் சொன்னவர் தேவர் என்ன பட்டமா என்று கேட்ட வேதம் புதிது இயக்குனர். கருணாநிதிக்கு இன்று உடல் நலம் பேண யோகா சொல்வது ஒரு பார்ப்பணரே.. கமல் பார்ப்பனரை தாக்குவது தன் மேல் தாக்குதல் வரக் கூடாது என்று புத்திசாலித்தனமான முட்டாள்தன அப்ரோச்சே.. மீடியாக்களில் புதியதலைமுறையில் கூட பார்ப்பனர்களே அதிகம்… வயிற்றெரிச்சல் படுவதையோ அரேபியர்களுக்கு அடிமையாக இருப்பதையோ செய்யாமல் அறிவால் அவர்களுடன் இணைந்து வாழ்வோம்… ஏன் தமிழ் தமிழ் என்று பிதற்றிய தமிழ்க் குடும்பம் ஒரு கிழக்கு புத்தகலாயம் மாதிரி நடத்த வேண்டியது தானே… முஸ்லீம் என்றால் அமைதிமார்க்கம் என்று கொஞ்ச நஞ்ச பேர் நினைத்ததும் இன்று தகர்ந்தது… நன்றி அதற்கு…

  59. Avatar
    பூவண்ணன் says:

    ஆகமம் என்பதே தமிழ்நாடு மற்றும் அதன் சுற்றுபுரங்களில் தான்
    வடக்கே இருக்கும் பிராமணர்கள் முக்கால்வாசி பேர் கறி சாப்பிடுபவர்கள் தான்
    தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக கருதும் மைதிலி பிராமணர்களின் திருமணங்களில் கூட கோழி,ஆடு இல்லாமல் இருக்காது .உட்டர்க்ஹாந்து ,ஹிமாச்சல மாநில பிராமணர்களும் அசைவம் உண்பவர்களே.மகாராஷ்டிரா பிராமணர்களும் அசைவம் உண்பவர்கள்
    நான்கு வேதம் தெரிந்த சட்டோபாத்யாயா ,மூன்று தேர்ந்த முக்காவ்பாத்யாயா ,பந்தோபாத்யாயா ,பாண்டாக்கள் என்று வங்காளம்,ஒரிசாவில் வாழும் பிராமணர்களும் அசைவம் உண்பவர்கள் தான்
    நேபாள பிராமனர்கள் பலியும் கொடுப்பார்கள்,அசைவதையும் ரசிப்பார்கள்

    அவர்களுக்கும் இதே கோத்திரங்கள் தான்.அங்கு மாமன் மகளை மனம் புரிந்தால் கொலை செய்வார்கள்.அவர்கள் மனம் புண்படும் என்று அப்படி செய்ய கூடாதா,அல்லது படம் எடுக்க கூடாதா .இங்குள்ள பிராமணர்கள் மாமிசம் உண்பதை விட்டு விட்டதும் சில நூட்ட்ராண்டுகள் முன்பு தான்
    கமல் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்.அவரை சாதி பிரஷ்டம் செய்யும் உரிமை இன்று யாருக்காவது உண்டா. தன குடும்பத்தை,சாதியை சார்ந்தவர்களை சிக்கன் சாப்பிடு ,எப்படி இருக்கு என்று சொல்ல உரிமை இல்லையா
    குதிக்கும் இதே குழுக்கள் தான் நீங்கள் கோவில் கட்டி யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக வைத்து கொள்ளுங்கள் என்றும் வாய் கிழிய முழக்குவது தான் வேடிக்கை. மேல்மருவத்தூர் கோவிலில் பெண்கள் பூசை செய்வது எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று கோவிலை மூட சொல்லி போராடலாம்,பெண்களை அர்ச்சகர்களாக காட்டி படம் எடுத்தால் தடை செய்யலாம் .பிராமணன் என்றால் இப்படி தான் என்று யார் முடிவு செய்வது.கமல் தான் உண்மையான பிராமணன் என்று ஒரு கூட்டம் கருதுவதை யார் தடை செய்ய முடியும்.

  60. Avatar
    பூவண்ணன் says:

    பெரியார் இந்து அல்ல என்று கூறும் உரிமை யாருக்காவது இருக்கிறதா.அவர் தான் உண்மையான இந்து, தீட்டு என்று மனிதர்களை ஒதுக்கியவனை விட கடவுளை திட்டி மனிதனை நெறிபடுத்தியவர் தான் உண்மையான தேவதூதர் என்று பல லட்சம் பேர் எண்ணினால் அதில் தவறு எங்கே வருகிறது
    அஹ்மேடியர் இஸ்லாமியர் அல்ல ,பன்றி சாப்பிட்டால் இஸ்லாமியர் அல்ல,முஹம்மது படத்தை வரைந்து விட்டால்,வழிபட்டால் இஸ்லாமியர் அல்ல என்று ஒதுக்கும் அதிகாரம் இஸ்லாமிய மதகுருக்களுக்கு உண்டு. இப்போது இந்து மதத்தில் அந்த அதிகாரம் யாருக்காவது இருக்கிறதா .

    லிங்கத்தின் மீது காலை வைத்து சாமியார் தூங்குவது போல படம் எடுத்தது நாம் தான். அய்யோ ஏன் இப்படி என்று துடிக்கும் போது ,அப்படியானால் நீயே அவன் இல்லாத இடமாக பார்த்து காலை வைத்து விடு என்று சாமியார் பதில் சொல்வதையும் படம் எடுத்தது நாம் தான்.அப்படி செய்ய முடியாததால் தோல்வியை ஒப்பு கொண்டு லிங்கத்தின் மேல் கால் வைத்து உறங்குவதையும் அனுமதித்தது நாம் தான்
    இப்போது ஹிந்டுத்வர்கள் குதிப்பதால் ஹிந்து மதம் மாற்றப்பட வேண்டுமா

  61. Avatar
    பூவண்ணன் says:

    பால் என்ன என்று சைவர்கள் தெரியாதது போல நடிப்பது தான் விந்தை.பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
    குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதர்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டயாமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
    பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்.வெளிநாட்டினர் தான் கோவில்களுக்குள் அனுமதி இல்லை ஆனால் வெளிநாட்டு காளைகள் தான் சினையாக்க முதல் சாய்ஸ் .எவ்வளவு லிட்டர் எனபது தானே முக்கியம்.அங்கு சாதியாவது,ஆகமம் ஆவது
    பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட மாமிசம் சாப்பிடுவது பெரிய பாவமா
    சில ஆண்டுகள் கழித்து கோவிலில் பணிபுரியும் பிராமணர்கள் பால் குடிப்பதை விட்டு விட்டால் ,பாலபிஷேகம் செய்வதை போல படம் எடுத்தால் ,பிராமணர் வீட்டில் டிகிரி காப்பி குடிப்பது போல காட்டினால் மனம் புண்படுகிறது ,தவறாக எங்களை காட்டுகிறார்கள் என்று குதிப்பரோ .நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மாறி வரும் உணவு பழக்கங்களை வைத்து மனம் புண்படுகிறது என்று சொல்வதை விட வேடிக்கை எதுவும் இல்லை

  62. Avatar
    punaipeyaril says:

    பூவண்ணன் அவர்கள் சைவமோ அசைவமோ சாப்பிடட்டும். கேள்வி, உங்களது தீரம் பற்றியது.. எங்கள் ஊரில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் கறுப்புப் பன்னியை விரட்டி கம்பி சுருக்கால் பிடித்து மண்டையில் மடேர் என்று கட்டையை கொண்டு அடித்து முக்கலும் முனகலுமாய் அது இருக்கும் போது அதை அறுத்து உரித்து சமைத்து தின்பார்கள். அந்த சாதி சேர்ந்த கேரக்டரை படமெடுக்கும் போது இக்காட்சியை எடுக்கவோ இல்லை அந்த சாதியின் ஒரிஜினர் பெயர் போட்டு கட்டுரையோ உங்களைப் போன்றவர்கள் செயல்பட முடியுமா..? பார்பானை கிண்டல் செய்பவர்கள் கோழைகளிலும் கீழானவர்கள். ஏன ஜவஹருல்லாவின் முகத்துக்க்கு நேரே… தாலிபான்களிடம் தீவிரவாத செயல் செய்யும் முன் குரான் படிக்காதே என்று சொல்ல அவருக்கு தகிரியம் இருக்கா என்று உங்களால் கேட்க முடியுமா..? நீங்களெல்லாம் காகிதப் புலிகள்.. சிரிப்ப்புத் தான் வருகிறது… இனி உங்கள் ஜம்பம் செல்லாது. இந்த தேசத்தின் ஜனாதிபதி பிறாமணாள், முதல்வர் பிறாமணாள் இதை விட இக்கட்டிலும் சாதிக்கும் அவர்கள் திறமைக்கு சான்றென்ன வேண்டும்…

  63. Avatar
    punaipeyaril says:

    ஒதுக்கும் அதிகாரம் இஸ்லாமிய மதகுருக்களுக்கு உண்டு- மதராஸவில் சேருபவர்களின் அறிவுத்திறன் பற்றி உங்களுக்கே தெரியும். எலேய் மதராஸாவில் சேர்த்து விட்டுருவேன் என்று நல் குடும்பங்களில் சொல்வது ராமநாதபுர முஸ்லீம்களிடம் சகஜமா இல்லையா..?

  64. Avatar
    paandiyan says:

    பூவண்ணன் என்ன சொல்ல வருகின்றார் என்றால் பிராமின் எல்லாம் முஸ்லிம் மாத்ரி மிரட்ட கற்றுகொள்ளவேண்டும் என்று ரேகி விடுகின்றார் . அது சரி ஜாதி ஹிந்து என்றால் ஹிந்து இல்லையா என்ன.. ஹிந்து என்றால் இவார்களுக்கு கிடைத்த இளித்தவாயன் பிராமின் தான் போலும் . எங்க தலித் யை பற்றி இந்த மாத்ரி எடுத்து, தேவர் பற்றி எடுத்து உங்கள் வீரத்தை காட்டுங்கள் நீங்கள் ஆன்மகன இருந்தால்

  65. Avatar
    smitha says:

    Kamal makes fun of brahmins in all his movies & Viswaroopam is also no exception. His wife (supposedly a brahmin) has an illicit affaifr & also eats chicken (this is stated explicitly).

    The reason why kamal does this is – he knows he is disadvantaged because he has been born into a brahmin famaily. So, he thinks (foolishly) he can escape criticism by ridiculing brahmins at the slightest opportnunity.

    Also, to attack hinduism, do it via brahmin. He did that very cleverly in thevar magan.

    But the point is to note what PT leader krishnaswamy said when kamal had named his films as Sandiyar. He said that this clearly shows kamal’s “paarpaneeya” thimir.

    Try as he might, kamal will not be “accepted” wholeheraltedly by non brahnmins. As for brahims, we are not bothered because we do not consider him as one.

  66. Avatar
    poovannan says:

    நண்பர்களே நான் எழுதியது என்ன நீங்கள் சொல்வது என்ன
    கமல் தன விருப்பபடி கதை எழுத,படம் எடுக்க ,இவர்களை இப்படி காட்ட கூடாது என்று சொல்லும் பாத்வா வழங்கும் உரிமை இந்துக்கள்/பிராமணர்களுக்கு இருக்கிறதா
    சக்தியை வழிபட மாட்டேன் ,அவர் தெய்வம் கிடையாது என்று அவரை விட்டு விட்டு சிவனை மட்டும் வழிபட்டு அதனால் சக்தி கோவம் கொண்டு தனியாக செல்வது போல படம் எடுத்தவர்கள் தானே நாம்
    கடவுளே இல்லை என்று கமல் கூறுகிறார்,
    இல்லை கடவுள் இருக்கிறார் என்று வேறு சிலர் கூறுகிறார்கள் .இதில் பின்னவர் தான் இந்து மதம் என்று முடிவு செய்யும் உரிமை சிலருக்கு எப்படி வருகிறது
    கடவுளை திட்டுபவர்களை தான் கடவுள் விரும்புவார்.அவர்கள் தான் உண்மையான கடவுள் பக்தர்கள் என்று ஒரு ஹிந்து கருதினால் ,இல்லை அப்படி கருதுபவன் ஹிந்து இல்லை,இந்து என்றால் குறிப்பிட்ட மாமிசம் சாப்பிட கூடாது,குறிப்பிட்ட சாதியினரை உயர்வாக என்ன வேண்டும் .குறிப்பிட்ட மத,சாதி பழக்கங்களை பழிக்க கூடாது என்று கூறும் அதிகாரம் எந்த அடிப்படையில் சிலருக்கு வருகிறது
    மாமிசம் சாப்பிடுபவன் தான் உண்மையான பிராமணன் என்று கமல் கூற கூடாது என்று கூறும் அதிகாரம் இந்து மதத்தில் யாருக்காவது உண்டா
    அவருக்கு ஆதரவாக,அவர் கருத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கான இந்துக்கள்,பிராமணர்கள் கூட வருவார்கள்.அதை முடிந்தால் தடுங்களேன்

    AIDS நோய்க்கு மருத்துவம் பார்க்க வக்கில்லை,தோல் வியாதிக்கு வைத்தியம் பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று வாதிடுவதற்கு சமம் அந்த சாதியை கேட்டாயா,இந்த மதத்தை கேட்டாயா என்ற கேள்விகள்
    யாரும் யாரையும் தடுக்கவில்லை. யாருக்கு என்ன கேட்க வேண்டும் ,எந்த சாதியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ கேளுங்கள்.
    பிராமணர்களை விட குறைவாக இருக்கும் சாதிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.அவர்களை இழிவு செய்தால் ஒரு குரல் கூட எழும்பாது.நரி குறவர்களை செய்யாத இழிவா.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நரிகுறவர்கள் திருடும் தொழிலில் இப்போது ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டு உண்மையா என்று அந்த அப்பாவிகளிடம் நேரடியாக கேட்கிறார்கள்.நாயர்களை செய்யாத கிண்டலா

    பிராமணர்கள் குறிப்பிட்ட சதவீதம் இருக்கும் உதர்ப்ரதேசதில் முக்கால்வாசி தாதாக்கள் ,சுபாரி கொலை செய்பவர்கள் பிராமணர்கள் தான்.எண்ணிக்கை அதிகம் இருக்கும் போது எல்லா சாதியையும் கொடுங்கோலர்கள் தான்
    மற்ற அண்டை நாடுகளிடம் குதிக்கும் நாம் ,பாகிஸ்தானை அழிக்க வேண்டும்,சுண்டைக்காய் இலங்கை என்று கூக்குரலிடும் நாம் ஏன் சீனா என்றால் பம்மி பதுங்குகிறோம்.பாகிஸ்தானிற்கு முழுக்க முழுக்க உதவி செய்வது சீனா தான் என்று தெரிந்தாலும் ,போர் தொடுத்து அவர்களை அழித்து விடுவோம் என்று எப்போதாவது குரல் ஒலித்திருக்கிறதா. அதே தான் இதுவும்.
    முட்டாள்தனம்,சாதி வெறி ,மதவெறி ,நியாய அநியாயம் பார்க்காமல் சாதி மத அடிப்படையில் குழு மனப்பான்மை உள்ள எண்ணிக்கை அதிகம் உள்ள குழுக்களின் அநியாயங்களை மக்கள் ஆட்சியில் எப்படி மாற்றுவது என்பதற்கு இன்னும் சரியான விடை தெரியவில்லை.

  67. Avatar
    punaipeyaril says:

    பாத்வா வழங்கும் உரிமை இந்துக்கள்/பிராமணர்களுக்கு இருக்கிறதா –> இல்லாத ஒன்றை கற்பனை செய்ய வேண்டாம். அந்த மாதிரி கேடு கெட்ட “பாத்வா” வார்த்தைகள் எங்கள் மதத்திற்கு உரித்தானதல்ல. பகைவனக்கருள்வாய் நன்னஞ்சே என்று வளர்பவர்கள் நாங்கள்.
    பிரமாணர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி காட்டுவதை விட்டு, ஹவாலா பண்ணுவதை விட்டு, கடத்தல் செய்வது விட்டு, மூளையை நல்ல எண்ணங்களிலும் சிந்தனையிலும் சீர்தூக்கி வளருங்கள். வேண்டுமானால் ஏதாவது மடம் சென்றால் யோகா, சூர்யநமஸ்காரம், தியானம் கற்று மனிதனாகுங்கள். போய் தாலிபான்களிடம் அட்வைஸ் பண்ணுங்கள் . இல்லை ஒரு இரு மாதம் பாகிஸ்தானில் சுற்றுலா சென்று வாருங்கள். எங்கள் பூமியின் அருமை புரியும்..

  68. Avatar
    ஷாலி says:

    புனல்பெரியவர் அண்ணாச்சி, கொஞ்சம் பார்த்து எழுதுங்க! ஒரு எழுத்து மாறின அர்த்தம் உல்டாவா அனர்த்தம்மாக போவுது.பூவண்ணன் அண்ணாச்சிக்கு பாய்ன்ட் எடுத்துக்
    கொடுத்ததுபோல் ஆகிவிடும்.
    // கேடு கெட்ட “பாத்வா” வார்த்தைகள் எங்கள் மதத்திற்கு உரித்தானதல்ல. பகைவனக்கருள்வாய் நன்னஞ்சே என்று வளர்பவர்கள் நாங்கள்.//
    “பகைவனுக்கும் அருள்வாய் நன் நெஞ்சே!” நீங்கள் பகைவனுக்கு, எல்லோரும் கொடுக்கிற நல்ல நஞ்சை கொடுப்பதாக தவறுதலாக அடித்து விட்டீர்கள். பரவாயில்லை! விடுங்கள். ஆனைக்கும் அடி சறுக்கும்.”பிறபொக்கும் எல்லா உயிருக்கும்…” என்று சொன்ன நாடு நம் நாடு.”யாதும் ஊரே யாவரும் கேளீர்!” உலக மக்கள் அனைவரையும் உறவினராக மதித்த நாடு. “வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார் வாழ்ந்த நாடு. உணவளித்து உயிர் காக்கும் உத்தமர்களை “பசிப்பிணி போக்கும் மருத்துவர்” எனும் டாக்டர் பட்டமளித்த வள்ளுவன் வாழ் நாடு. பகைவனுக்கும் அருளி “இன்று போய் நாளை வா! என்ற இராமநாடு.

  69. Avatar
    பூவண்ணன் says:

    As for brahims, we are not bothered because we do not consider him as one.
    ஹி ஹி பாரதியாரை இதை விட மோசமாக நடத்தியாக,கருதியது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தானே .இன்று கோவிலுக்குள் எல்லா சாதியினரும் நுழைந்தால் உலகம் அழியும் என்று கூறிய பெரும்பான்மை பிராமணர்களையும்,அவர்களின் அந்த கால தலைவர்களையும் நைசாக மறந்து பாரதியார் எம் குல கவி என்று சொந்தம் கொண்டாடவில்லையா

    ரெட்டிகளை எந்த படத்திலாவது நல்லவர்களாக காட்டி இருக்கிறார்களா .பயங்கரமான வில்லன்கள்,கொடுங்கோலன்கள்,கண்ணில் படும் பெண்களை தூக்கி சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் வில்லன்களாக தான் பெரும்பாலான படங்களில் பல ஆண்டுகளாக காட்டப்படுகிறார்கள்.
    மீதி சாதிகளுக்கு என்று குறிப்பிட்ட குணம் ,பழக்க வழக்கம் கிடையாது.பன்றி சாப்பிடும் வன்னியர்களை காட்டினால் ,வள்ளலார் வழி வந்து பல தலைமுறைகளாக சைவர்களாக இருக்கும் வன்னியர்கள் நாங்கள் ஒஸ்தி என்று பெருமைபடுவார்கள்.ஒரே சாதியை சார்ந்த வேறு மாவட்டத்தில் வசிக்கும் ஏன் உறவினர்களில் ஒரு மாவட்டத்தில் இறந்தவர்களை புதைப்பார்கள்.இன்னொரு மாவட்டத்தில் எரிப்பார்கள்.சென்னைக்கு வந்த இரு மாவட்டத்தை சேர்ந்த உறவினர்களும் எந்த தாக்கும் இன்றி மின்சார சுடுகாட்டுக்கு மாறி விட்டார்கள்

    வேறு சாதிகளில் இருந்து தனித்து தெரியும் அளவிற்கு குறிப்பிட்ட பேச்சு,உடை,பழக்கம் உள்ள சாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    தேவர் மகன் தேவர்களை முட்டாள்களாக,மூர்க்கர்களாக காட்டும் படம்.அதை பெருமையாக எடுத்து கொண்டால் எங்கே சென்று முட்டி கொள்வது.தர்மபுரியை சார்ந்த வன்னியர்கள் வன்கொடுமைகள் செய்வது,குழந்தை திருமணம் செய்வது,காதலிக்கும் பெண்களை கொலை செய்வது போல படம் எடுத்தால் பெருமையாக பார்த்தியா எங்க ஊரில் எல்லாம் இப்படி தான் என்று எடுத்து கொள்ளும் கூட்டத்திற்கு ,அது அவர்களை தவறாக காட்டுகிறது என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு வரவே நாட்களாகும்

  70. Avatar
    பூவண்ணன் says:

    ஹிந்து மதத்தில் பாத்வா கிடையாதா
    இதை என்ன என்று சொல்வீர்கள்.பஞ்சமர் என்ற ஐந்தாவது வர்ணம் உருவானதே பாத்வாவினால் தான்

    http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்

    எம் ஜி ஆரின் தந்தைக்கு அவரின் மனைவியும் குழந்தைகளும்,ஈம சடங்குகள் செய்து முடித்து விட்டனர்.அது எந்த பாட்வாவின் அடிப்படையில்.
    இப்படி தான் இருந்தது இந்து மதம்.அம்பேத்கர்,பெரியார் அடித்த அடியில் பாத்வாக்கள் கொடுப்பவர் கொட்டம் அடங்கியுள்ளது. அதை மறுபடியும் கொண்டு வர ஹிந்துத்வா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்

  71. Avatar
    punaipeyaril says:

    ”வாங்க உரிமையோடு சண்டை போடலாம்” என்று கமல் ஜாலியாக சொல்லிக் கொண்டே உள்ளே போய் அமர்ந்தார். ”நீங்கள் எப்படி நாட்டைவிட்டு போகலாம் என்று சொன்னீர்கள்?” என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டபோது, ”நான் அப்போதுகூட துபாய்தான் போவேன் என்று சொல்லி இருக்கிறேன்” என்று பதில் சொன்னார் கமல். ” —> பேசாம கமல் , முஸ்லீம்களை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்கலாம்… இதெல்லாம் ஒரு பொழப்பு…

  72. Avatar
    smitha says:

    Poovannan,

    U are mistaken. Bharathiyar found little support among brahmins, yes, but even that little support he cpould not get from the non brahmins. In his funeral, even the handful of people present were only brahmins.

    As for Thevar magan, it glorifies the clan thro’ the dialogues of sivaji when he speaks of them joining the army of Subhash Bose & also the opening song. This led to many caste tensions in the southern districts.

  73. Avatar
    Tamil says:

    எழுத்தாளர் மலர்மன்னன் இன்று அதிகாலை 4.45க்கு சென்னையில் காலமானார்.

    தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். எழுத்தாளர், துவக்க கால திராவிட அரசியல் இயக்கங்களில் இருந்தவர். பின்னாளில் ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர் மலர்மன்னன்.

    தகவலுக்கு: 97899 62333

    -From today (10th Feb) Dinamani.

  74. Avatar
    tamilmani says:

    கமல் நடித்த விஸ்வ ரூபம் படத்தை பார்த்து விட்டு விமர்சிப்பது தான் பொருத்தமானது என்று கருதி இக் கருத்தை கூற விரும்புகிறேன் இப்படம் உலகில் தீவிர வாதத்தை ஊக்கு வித்த அமெரிக்காவை பற்றிய கருத்துக்கள் முன் வைக்கப்படவில்லை மேலும் கமல் இப்படத்தின் மூலம் ஹாலிவுட் உலகில் தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவுக்கு அடிவருடியாக மாறி விட்டார் மேடைக்கு மேடை தன்னை பகுத்தறிவு வாதி என்று பீற்றி கொள்ளும் பகுத்தறிவுவதி தீவிர வாதத்தின் பின் நடக்கும் சர்வ தேச நாடுகளை கொள்ளையடிக்கும் லாப வெறியர்களை திறை மறைவில் ஆதரிக்கிரார் போலும் வாழ்க உம்முடைய போலி பகுத்தறிவு

Leave a Reply to பூவண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *