இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

author
86
0 minutes, 7 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 நவம்பர் 2012

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

(மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு நன்றி)

2.கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

 

    கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஆவணங்கள் வரலாற்று மனிதரைப் பற்றிக் குறிப்பிடும் எந்த ஆவணங்களோடும் பொருந்திப் போகவில்லை. எனவே நாம் நமது ஆய்வில் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 

இயேசுவின் வரலாற்றுத்தன்மையை கிறிஸ்தவர்கள் நான்கு சுவிசேஷங்களின் அடிப்படையிலேயே நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் அந்தப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் அசல் பிரதிகள் நம்மிடையே இல்லை. நகல்கள் மட்டுமே உள்ளன. அசல்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. இந்தக் கூற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆதி விசுவாசிகள் தங்கள் கவனக்குறைவால் அப்போஸ்தலர்கள் எழுதிய அனைத்து நூற்களையும் இழந்துவிட்டு, அநாமதேயங்களால் எழுதப்பட்ட நகல்களை மட்டும் காவல் காத்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அருட்கிளர்ச்சியால் உந்தப்பட்ட கிறிஸ்தவ அப்போஸ்தலர்களின் நூற்கள் எல்லாம் காணாமற்போனபின் வெறும் எழுத்தர்களால் எழுதப்பட்ட நகல்கள் நிலைத்து நிற்பது ஏன்? மத்தேயுவின் அசல் நூல் காணாமற் போயிருக்கும் நிலையில், வேற்று மொழியில் எழுதப்பட்ட நகல் எப்படி பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது? இயேசு ஒரு வரியாகிலும் எழுதவில்லை. பரவலான நம்பிக்கையின்படி அவர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தும் முக்கியமான பணிக்காக பூமிக்கு வந்தார். ஆனால் அவர் கடவுளின் விருப்பத்தை தமது வாழ்நாளில் எழுத்துகளில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையில் பரலோகத்திலிருந்து யாராவது தேவபோதனையாளராய் வந்திருந்தால் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர் தமது பணியை தவறுகள் செய்யக் கூடிய அநாமதேய எழுத்தாளருக்கு விட்டுச் செல்கிறார். இந்தக் குழப்பமே கிறிஸ்தவத்தை பல பிரிவுகளாகப் பிரித்தது. தமது சீடர்களுக்குப் பதிலாக இயேசுவே தான் கொடுக்க விரும்பிய செய்தியை தெளிவாகவும், எளிமையாகவும் சொல்லிச் சென்றிருந்தால் எத்தனை தண்டனைகள், எத்தனை யுத்தங்கள், கசப்புகள், வெறுப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்?

 

மேலும், இயேசு தான் எதையும் எழுதி வைக்காததோடு தம் அப்போஸ்தலர்கள் எழுதியதைப் பாதுகாக்கவும் முயற்சி எடுக்கவில்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததானால் அவை இது வரையிலும் கண்டறியப்படவில்லை. இது மிக மோசமான விஷயம். நாம் அப்பிரதிகளின் நகலை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யார் அவற்றைப் படியெடுத்தார்கள்? எப்பொழுது அவை நகலெடுக்கப்பட்டன? நாம் எந்த அளவுக்கு இந்த பிரதிகளை நம்ப முடியும்? ஏன் இப்படி பல்லாயிரம் விதமான நகல்கள் இருக்கின்றன? எதன் அடிப்படையில் நாம் ஒரு பிரதியை ஏற்க முடியும்? இயேசுவின் வருகையால் விளைந்தவை அநாமதேய, காலமறியாத நகல் பிரதிகள் தானா? கடவுள் தனது குமாரனை பூவுலகிற்கு அனுப்பி வைத்தது ஏன்? நாம் இப்படி பல நகல்களை ஆராய்ந்து ஏன் கடவுள் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்றும், அவரது குமாரன் என்ன போதித்தார் என்றும் கண்டுபிடிப்பதற்கா?

கிறிஸ்தவ திருச்சபை அசல் கையெழுத்துப் பிரதிகள் அழிந்து போனதற்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் கூற முடியும். அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இறைவனின் எண்ணத்தைக் கொண்டு புனித ஆவியின் அருட்கிளர்வால் எழுதப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஆவணம் திடீரென்று காணாமற் போனால் அதை எழுதிய தெய்வீகத் தன்மை உடையவர் அதைச் சுற்றிலிருந்து நிறுத்திவிட்டார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூற முடியும்? கடவுள் புதிரான, நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் செயல்படுகிறார், என்பதே ஒரு விசுவாசியின் இறுதி வாதமாகும். ஆனால் இந்த வாதத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் வானத்தின் கீழ் எழுந்த எல்லா மதங்களையும், எல்லா இசங்களையும் உண்மை என்று நினைக்க வேண்டியிருக்கும். இஸ்லாமியர்களும், பிற மதத்தவர்களும் விசுவாசத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். விசுவாசத்தால் மறைக்க முடியாத அறிவின் ஒளி எதுவும் இல்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாத விசுவாசம் மூடநம்பிக்கை இல்லையென்றால் மூடநம்பிக்கை என்றால் என்ன? கத்தோலிக்க திருச்சபை புனித சிலுவை, எருசலேமில் உள்ள புனித ஆலயம், இயேசுவின் அங்கி என இன்னும் பலவற்றை கடவுள் பாதுகாத்துள்ளதாக நம்புவது போல் நடிக்கிறது. அந்த நம்பிக்கையினால் சம்பாதிக்கவும் செய்கிறது. ஆனால் கடவுள் அசல் கையெழுத்துப் பிரதிகளை ஏன் பாதுகாக்கவில்லை என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததேயில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். நான் இதைப் பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நகங்களும், எலும்புகளும் கடவுளால் பாதுகாக்கப்பட்டுள்ள போது ஏன் அசல் கையெழுத்துப் பிரதிகள் காணாமற்போயின? அருட்கிளர்வால் எழுதப்பட்ட நூற்கள் காணாமற்போக அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டுப் போக கடவுள் அனுமதிப்பாரா?

 

கிடைத்துள்ள ஆவணங்களையும் நாம் கவனமாக ஆராய்ந்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காணலாம். மத்தேயு கொடுத்துள்ள இயேசுவின் வம்சவரலாறு லூக்கா கொடுத்துள்ள வம்ச வரலாற்றிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் அந்த வம்ச வரலாற்றை நாளாகமங்களில் இருந்தே எடுத்துள்ளார்கள் என்பது தெளிவு. ஒரு சுவிசேஷகர் இயேசு சாலமோனின் பரம்பரையில் வந்தவர் என்கிறார். அதாவது இயேசு கள்ளக் காதலின் மூலம் உருவான வம்சத்தில் வந்தவர் என்கிறார். இன்னொருவர் இயேசு நாத்தானின் பரம்பரையில் வந்தவர் என்கிறார்.

 

லூக்கா யோசேப்பின் தந்தையின் பெயர் ஏலி என்கிறார். மத்தேயு யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என்கிறார். சுவிசேஷகர்கள் யோசேப்பின் சமகாலத்தவர்களாய் இருந்தால் அவர்களால் யாக்கோபின் தந்தையின் பெயரைத் தெளிவாகக கூறியிருக்க முடியும்.

 

    யோசேப்பு இயேசுவின் தந்தையில்லையென்றால் ஏன் இந்த சுவிசேஷகர்கள் யோசேப்பின் வம்ச வரலாற்றைக் கூறுகின்றனர்? மரியாள் தாவீதின் வம்சத்தவள் என்று அவர்கள் வம்ச வரலாற்றின் மூலம் நிரூபித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட தகவல்கள் சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குகின்றன. இயேசு உண்மையில் வாழ்ந்த மனிதராகவும், சுவிசேஷங்களை எழுதியவர்கள் இயேசுவின் சமகாலத் தோழர்களாகவும், அருட்கிளர்வு பெற்றவர்களாகவும் இருந்தால் ஏன் வம்ச வரலாற்றில் முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றன?

 

இயேசு ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை ஒரு நிகழ்வின் மூலமாக எடுத்துக் காட்டலாம். ஞானஸ்நானங்கொடுக்கும் யோவான் பகிரங்கமாக இயேசுவே கிறிஸ்து என்றும், தான் அவர் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதியுடைவன் அல்ல என்றும் கூறுகிறார். சுவிசேஷங்களின் கூற்றுப்படி புனித ஆவி ஒரு புறாவைப் போல் இயேசுவின் மீது வந்திறங்கி, வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் புறப்பட்ட போது யோவானும் உடனிருந்தார்.

 

    சில அத்தியாயங்கள் கழித்து யோவான் தான் கூறியதை அப்படியே மறந்து விட்டு தனது இரண்டு சீடர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் யாரென்று விசாரித்து வரச் சொல்கிறார். இது நிகழக்கூடிய ஒன்றா? இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் முடிவு என்னவென்றால் எழுத்தாளர் தன்னிடமிருந்த இரண்டுவித கற்பனைக் கதைகளையும் ஒன்றாகக் கலந்துவிட்டார் என்பதாகும்.

 

சுவிசேஷ ஆசிரியர்களின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கு இன்னொரு உதாரணம் நான்காம் சுவிசேஷத்தின் முடிவாகும். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். இது ஒரு புராணக் கதையாசிரியரின் கூற்றாக இருக்கலாமேயொழிய சரித்திராசிரியனின் கூற்றாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றைத் தரும் ஒருவரின் மீது நாம் எந்த அளவு நம்பிக்கை வைக்க முடியும்? ஒரு மத ஸ்தாபகரின் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு வருடமே இருந்தது. அவரைப் பற்றி சொல்லப்படாதவை  உலகங்கொள்ளாதவையாம். சொல்லப்பட்டவை சில பக்கங்களாம். இதுவே சுவிசேஷகர்களது கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

 

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயேசுவின் வாழ்க்கை வரலாறு என்று வந்த நூற்கள் இயேசுவும் அவரது சீடர்களும் பேசியதாகக் கூறப்படும் மொழியில் எழுதப்படவில்லை. அவைகளில் எழுதப்பட்ட காலமும் இல்லை. எழுதியவரின் கையெழுத்தும் இல்லை. இயேசுவும் அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் யூதர்கள். ஆனால் சுவிசேஷங்கள் ஏன் கிரேக்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன? அவை எபிரேய மூலங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாயிருப்பின், நாம் மூலங்களை ஒப்பிட்டுப்பார்க்காமல் மொழிபெயர்ப்பு சரியானது என்று எப்படிக் கூற முடியும்? ஏன் சுவிசேஷங்கள் அநாமதேயமாகக் காட்சியளிக்கின்றன? ஏன் அவற்றில் காலம் குறிப்பிடப்படவில்லை? ஆனாலும் நாம் நமக்குக் கிடைத்துள்ள மூலங்களாகக் (சிறு துண்டுகள்) கூறப்படுபவற்றுள் நம் ஆய்வை அடக்கிக் கொள்வோம். பண்டிதர்கள் இத்தகைய பழங்கால சொற்களை வாசிப்பதும், தெளிவில்லாததைப் புரிந்து, முரண்களைக் களைந்து மொழிபெயர்ப்பதுங் கடினம் என்கிறார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால் இறைவனின் வார்த்தைகள் என்று திருச்சபை அழைப்பவை மனிதனின் வார்த்தைகள் என்பது மட்டுமல்ல, தெளிவில்லாத தன்மையுடையதும் ஆகும்.

 

இவ்வாறு, இயேசுவின் மீதான நம்பிக்கை திருத்தப்பட்டதும், மாற்றப்பட்டதுமான இரண்டாம் நிலை ஆவணங்களிலும், காணாமற் போன மூலப்பிரதிகளிலும், சம்பவங்கள் நிகழ்ந்து சில காலங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கைப்பிரதிகளிலும் என ஒன்றுக்கொன்று முரண்படும் ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே சரித்திரப்பூர்வமான இயேசுவின் அடிப்படை. இப்படிப்பட்ட போதாமையே கிறிஸ்தவப் போதகர்களை பொய்யான கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வைத்தது.

 

    இயேசுவைப் பற்றிய போதுமான ஆதாரங்கள் இருந்தால் ஏன் கிறிஸ்தவப் போதகர்கள் பொய்க் கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்? ஆதாரங்களைக் கேட்டவர்களுக்கு பதிலளிக்க முடியாத போதகர்களின் நிலையைப் பற்றியும், அவர்கள் பொயக் கற்பனைகளின் அடிப்படையில் இயங்கியதைப் பற்றியும் கிறிஸ்தவ எழுத்தாளர்களே கூறுகிறார்கள். சபையின் சரித்திர ஆசிரியரான மோஷீம் கூறுகிறார், திருச்சபைப் பிதாக்கள் ஏமாற்றுவதையும், பொய்க்கற்பனைகளையும் புனிதமான செயலாகக் கருதினார்கள்.”

 

    மேலும் அவர் கூறுகிறார், மிகப் பெரியவர்களாகவும், புனிதமானவர்களாகவும் கருதப்பட்ட திருச்சபைப் பிதாக்கள் கூட இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இயேசு சரித்திரப்பூர்வமான மனிதராயிருந்தால் அவரது இருப்பை நிரூபிக்க ஏன் இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி ஒரு விசுவாசி நம்மிடம் கூறமாட்டாரா? இன்னொரு சரித்திராசிரியரான மில்மன் எழுதுகிறார், கிறிஸ்தவத்தின் ஆதிப் போதகர்களால் புனிதமான மோசடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப் எல்லிகாட், அது இலக்கிய மோசடிகளின் காலம் என்று இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தைப் பற்றிக் கூறுகிறார். அதிக அளவிலான புத்தகங்கள் மோசடி வேலைக்காகவே எழுதப்பட்டன” என்று முனைவர் கைல்ஸ் கூறுகிறார். சில பிரிவினர்களின் கோணங்களிலிருந்து ஏகப்பட்ட போலியான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன என்று முனைவர் ராபர்ட்சன் ஸ்மித் கூறுகிறார். இப்பொழுது கிறிஸ்தவ திருச்சபையால் தடைசெய்யபட்ட நூற்கள் ஒரு காலத்தில் அருள்வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. இப்பொழுது நம்பப்படும் நூற்கள் ஒரு காலத்தில் அதிகாரமற்றவையாகக் கருதப்பட்டன. இயேசு சரித்திரப்பூர்வமான நபராயிருந்தால் அவரைச்சுற்றி ஏன் இத்தனை மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இயேசு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் இத்தகைய செப்பிடுவித்தைகள் இயல்பானவையே என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

    இயேசுவின் ஆதிவிசுவாசிகள் இத்தகைய மறுப்பின் தாக்குதலைத் தாங்காமல் மோசடிவித்தைகளில் இறங்கினார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.

 

    கிறிஸ்தவத்தின் துவக்க கால எதிரிகளில் ஒருவர் போர்பிரிரி என்ற சிலை வணக்கக் காரர் ஆவார். ஆனால் ஆதித் திருச்சபைப் பிதாக்கள் அவரது எழுத்துகளிலும் தங்கள் செப்பிடுவித்தையைக் காட்டாமல் விட்டுவைக்கவில்லை. முதலில் இவரது நூற்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள். இறைவாக்கின் தத்துவம், என்று ஒரு கிறிஸ்தவ நூலை எழுதப்பட்டது. அதற்கு எழுத்தாளர் என்று இதே போர்பிரிரியை அறிவித்தார்கள். பரி.அகஸ்டின் இதை போலி என்று சொல்லி மறுதலித்தார். இப்படிப்பட்ட மோசடிவித்தைகளில் இருந்து இயேசுவின் இருப்பை நிரூபிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகளும், தடுக்கப்பட்ட நூற்களும், போலியான ஆவணங்களும் இயேசுவின் இருப்பை நிரூபிப்பதற்கு உதவுகின்றனவா? இப்படிப்பட்ட சந்தேகோபஸ்தமான ஆவணங்களின் மொத்த உற்பத்தியும், பிற மதத்தவரின் இலக்கியங்களை வெறியோடு அழித்ததும் இயேசு கற்பனையல்ல என்று நிரூபிக்க முயற்சித்தவர்களின் செயல்களே. இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உண்மை என்று நிரூபிக்க முயற்சி எடுப்பது எவ்வளவு கடினமானது என்பதைத் தெளிவாக்குகிறது.

3.கன்னியரின் குழந்தைகள்

    கன்னிக்குப் பிறந்த கடவுள்களின் கதைகள் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் காணப்படுகின்றன. எத்தனையோ கன்னித் தாய்மார்கள் புராணங்களில் காணப்படுகிறார்கள். கன்னி மரியாள் தன் குழந்தையுடன் காட்சியளிப்பது ஒரு பழைய புராணத்தின் மொழிபெயர்ப்பு. சீனம், இந்தியா, கிரீஸ், பாபிலோன், எகிப்து, ரோம் முதலிய பிரதேசங்களிலும் கடவுள்கள் தாங்கள் பூமிக்குள் வர ஒரு நல்ல குடும்பப் பெண்ணை தேர்ந்தெடுத்ததாகப் பல கதைகள் உலாவுகின்றன. அவர்கள் தங்கள் மனித அவதாரத்திலும் தங்கள் தெய்வீகத் தன்மையைக் காப்பதற்காக ஒரு தெய்வீகத் தந்தையின் மூலமாக பிறக்கின்றனர். ஜுப்பிட்டர் ஒரு அன்னத்தின் வடிவத்தில் லெடாவை அணுகினார். யெகோவா புறாவின் வடிவில் மரியாளின் மேல் நிழலிட்டார்.

 

    ஒரு நதியில் குளித்துக் கொண்டிருந்த வனதேவதை ஒரு தாமரைச் செடியினால் தொடப்பட்டு தெய்வக் குழந்தையான ஃபோகிக்கு பிறப்பளித்தாள்.

 

    சியாமில் சூரியக்கிரணம் பதிவயதில் இருக்கும் ஒரு பெண்ணை அணைக்கிறது. கோதோம் என்னும் மகான் பிறக்கிறார். புத்தரின் கதையில் புத்தர் தெய்வீகத்தன்மை பொருந்திய ராணியாகிய மாயாதேவியின் கருப்பைக்குள் நுழைந்து உலகினைக் காக்க அவளது வலப்பக்கமாகப் பிறந்தார் என்று கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அப்பொல்லோ ஏதென்சில் உள்ள ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறார். பிளேட்டோ பிறக்கிறார்.

 

    பழங்கால மெக்ஸிகோவிலும், பாபிலோனிலும், இக்கால கொரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கன்னிகள் குழந்தை பெறும் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

 

    இத்தகைய கதைகளுக்கு அடிப்படை எகிப்து நாட்டில் உள்ளது. இயேசு பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டில் லக்ஸரில் உள்ள பெரிய ஆலயம் ஒன்றில் சுவரில் செதுக்கப்பட்ட காட்சிகளில் இதைப் பார்க்கிறோம். அங்கே மூன்றாம் அமென்ஹோதப்  அரசரின் அவதாரத்துக்கான அறிவிப்பும், கருத்தரித்தலும், பிறப்பும் செதுக்கப்பட்டுள்ளன. அவை இயேசுவின் வாழ்க்கைச் சித்திரத்தையே பிரதிபலிக்கின்றன. எகிப்தியர்கள் கத்தோலிக்கரிடம் இருந்து இந்தச் சித்திரக் கதையை கடன் வாங்கினார்கள் என்று நமது கிறிஸ்தவ பாதிரியார்கள் வாதிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! மால்வெர்ட் கூறுகிறார், லூக்காவின் சுவிசேஷத்தின் ஒன்றாம், இரண்டாம் அத்தியாயங்கள் அமென்ஹோதப்பின் பிறப்புக் கதையிலிருந்தே களவாடப்பட்டன.

 

    எகிப்திய புராணக்கதைகளைப் பற்றி கூர்மையான அறிவுடைய ஜி.டபிள்யூ.பூட் தனது  வேதாகமக் காதல் கதைகள் என்றும் நூலில் லக்ஸர் சித்திரங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார், இடப்பக்கத்திலிருந்து முதல் காட்சியில் தாஹ்த என்றும், லோகோஸ் (தெய்வீக வார்த்தை) என்றும் அறியப்படும் எகிப்தியக்கடவுள் கன்னியான அரசி ஒரு குழந்தைக்கு பிறப்பளிக்கப் போவதைப் பற்றி அவளுக்கு அறிவிக்கிறது. இரண்டாவது காட்சியில் க்னேப் கடவுள் (ஹாத்தோர் கடவுளுடன்) அவளுக்குள் ஒரு உயிரைச் செலுத்துகிறது. இதுவே புனித ஆவி அல்லது கருவை உண்டாக்கிய ஆவி எனலாம். அடுத்ததாக இருக்கும் காட்சியில் தாயார் குழந்தை பெற்றுவிட்டாள். ஒரு தாதி குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். நான்காவது காட்சியில் அந்தக் குழந்தை அரியணையில் அமர்ந்திருக்கிறது. கடவுளரிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் பரிசுகளையும், பணிவையும் ஏற்றுக் கொள்கிறது. லக்ஸர் கோயிலில் இருக்கும் இச்சித்திரத்தை பெயரற்ற சுவிசேஷ எழுத்தாளர் தனது சுவிசேஷத்தின் மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவர்கள் எதனிடமிருந்து இக்கதையைக் கடன் பெற்றார்களோ அதை மறைத்து விட்டார்கள்.

 

    கன்னித்தாயின் கதை மட்டுமல்ல. அதிசயங்கள், மாட்டுக் கொட்டிலில் தொட்டில், வழிகாட்டி நட்சத்திரம், குழந்தைகளின் படுகொலை, எகிப்துக்கு ஓடுதல், உயிர்த்தெழுதல், உயிரோடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் போன்ற சம்பவங்களும் கடன் வாங்கப்பட்டவையே.

    ஆக ஆதிக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் கதையையும், தங்களின் பிற நம்பிக்கைகளையும் புற மதத்தவரின் நூற்களில் இருந்து கடன் வாங்கினர் என்று தெளிவாகிறது. எகிப்தியர்களைப் பற்றிய தனது நூலில் ஜெரால்டு மாஸே என்பவர் இயேசுவின் தாயாகிய மரியாளின் கதை ஹோரசின் தாயாகிய ஐசிசின் கதையோடு பொருந்துகிறது என்கிறார். மிகப்பழமையான, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட, புகை படிந்த  கன்னியையும், குழந்தையையும் கொண்ட பைஜாண்டிய ஓவியங்கள் நாசரேத்தில் உள்ள ஒரு மனிதத் தாயைக் காட்டவில்லை. ஐசிசையே காட்டுகின்றன. அறிவியலும், ஆய்வும் இதை உண்மை என்று நிரூபித்து விட்டன. ஒரு பக்கம் அறியாமையும், இன்னொரு பக்கம் ஆர்வமும் மட்டுமே அந்த அநாமதேய, தேதியிடப்படாத ஆவணங்களை அருள் வெளிப்பாடுகள் என்று சொல்ல வைக்கிள்றன. இயேசு செய்ததாக சொல்லி களவாடப்பட்ட அற்;புதங்களையும், கட்டுக்கதைகளையும், அவர் பிற மதங்களின் சாரத்திலிருந்து எடுத்து  உபதேசித்ததாகக் கூறப்பட்டவற்றையும் நீக்கி விட்டால் அவரிடம் என்ன மிச்சமிருக்கும்? அவரது உபதேசங்கள் என்பவை பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டு அவர் கூறியதாக அவர் வாயில் திணிக்கப்பட்டன என்றும், அவரைப் பற்றிய கதைகள் பிற மதங்களின் புராணங்களிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற அறிவும் மட்டுமே மிச்சமிருக்கும்.

 

    கிறிஸ்தவ மதத்தின் எல்லாக் கொள்கைகளும், விழாக்களும் பழைய மதங்களில் இருந்தே களவாடப்பட்டன. உயிர்த்தெழுதல், வானில் ஏறுதல், திருவிருந்து, திருமுழுக்கு, முழங்காற்படியிட்டு வழிபடுதல், மார்பில் கைகட்டிக் கொள்ளுதல், மணியடித்தல், தூபங்காட்டுதல், ஆலயங்களில் உபயோகிக்கப்படும் அங்கிகள், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி, புனித நீர் இவையனைத்துமே பழங்கால மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்தால் களவாடப்பட்ட சடங்குகள். திரியேக தத்துவம் கிறிஸ்தவ மதத்தைப் போல வேறு மதங்களிலும் உள்ளது. கடவுளின் மகன் என்னும் கோட்பாடு மிக மிகப் பழமையானது. எல்லா புராணக்கதைகளிலும் கதிரவனே வானத்தின் மகனாகக் காணப்படுகிறான். கதிரவன் உண்மை அல்லது கடவுளின் மகனாகவும், ஆகாயம் கடவுளாகவும் கூறப்படுகிறது. இயேசுவின் தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும், பிறமதத்தவரின் கடவுளரின் கொம்புகளும், இந்து மதத்தவர் மற்றும் பிறமதத்தவரின் கடவுளரின் தலையிலிருந்து புறப்படும் ஒளிக்கிரணங்களும் கிறிஸ்தவ மதத்தவரின் நம்பிக்கைகள் புதுமையானதல்ல என்று நிரூபிக்கின்றன.

————————————————————-

Series Navigationமனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்
author

Similar Posts

86 Comments

  1. Avatar
    தேமொழி says:

    இக்கட்டுரை நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
    ஆனால் இக்கட்டுரைக்கு வெளியான மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து, பிற மத பகுத்தறிவாளர்களும் (பெரியார் போன்று) தங்கள் மதங்களின் பலவீனங்களை சுட்டிக் காட்டியதையும் வெளியிட்டால் இத்தொடர் கட்டுரைகள் உலக மதங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு பகுதியாக சிறப்புறும்.

    மொழிகளில், இனங்களில், காலாச்சாரத்தில் ஆரம்ப காலத்தில் இருந்த கோட்பாடுகள் காலப் போக்கில் மேலும் உண்மைத் தகவல்கள் கிடைக்கப் பெரும்பொழுது எவ்வாறு மாறுபட்டு தெரிகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

    பொதுவாக துன்பத்தில் உழன்று விடிவு பிறக்காதா என்றிருப்வர்களையும், பேராசையின் விளைவால் பலவீன உள்ளதை உடையவர்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு மத போதனை செய்பவர்கள் தங்கள் சுயநலத்திற்காக சுக வாழ்விற்காக மதப் போர்வையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். காலம் காலமாக இது நிகழ்ந்தாலும் மக்கள் எப்பொழுதும் ஏமாறத் தயாராகவே இருக்கிறர்கள்.

    ஏன்? எப்படி? எதற்காக? என்ற எதிர் கேள்விகள் மேலும் துன்பத்தில் வீழ்த்தும் என்ற மூடநம்பிக்கை சிந்தனையைத் தடை செய்கிறது.

    எதிர்ப்புகளை வெறுப்பவர்களின் அச்சுறுத்தும் நடவடிக்கை பழக்கமானதே. “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என திண்ணை அறிவிப்பு வெளிவரும் நிலையின் அச்சுறுத்தலும் இது போன்ற நடவடிக்கையாக இல்லாதிருந்தால் நல்லது. ஏனெனில் தடங்கலை ஏற்படுத்தியவர்கள் வெளியிட்ட செய்தி குற்றத்தை திசை திருப்பும் விதத்தில், பிற மதத்தவரின் சகோதர உணர்வுகளைக் குலைக்கும் விதமாக திசை திருப்பப் பட்டிருந்தது சந்தேகத்தை விளைவிக்கிறது.
    தேமொழி

  2. Avatar
    K A V Y A says:

    //(மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு நன்றி)//

    நல்ல தன்னிலை விளக்கம். முதலிலேயே செய்திருக்கவேண்டியது. கேட்ட பின் செய்திருக்கிறீர்கள். கேட்காமலிருந்தால் செய்தேயிருக்க மாட்டீர்கள். Better late than never.

    போகட்டும். இம்மொழிபெயர்ப்புக்களை போடுதலின் நோக்கம் கேள்விகளை எழுப்புவதற்காகவே என்றால சரி. நீங்கள் இந்து. இவ்வளவு ஆர்வமாக பிறமதமொன்றைப்பற்றி உள்ளுழைந்து அறியும் உங்களுக்கென சொந்த கருத்துக்களும் கண்டிப்பாக இருக்கும். அக்கருத்துகளை வைத்து அக்கேள்விகளை நீங்களும் எதிர்நோக்கலாமே? நீங்க‌ள் ஏன் வில‌கிக்கொள்கிறீர்க‌ள்? இப்ப‌டி போட்டுவிட்டு இருவ‌ரை மோத‌ விட்டு வில‌கிக்கொள்ப‌வ‌ர்க‌ளை ஆங்கில‌த்தில் agents provocateur என்பார்க‌ள். நீங்க‌ளும் விவாத‌த்தில் க‌ல‌ந்து க‌ருத்துக்க‌ளைச் சொன்னால், அப்ப‌டிய‌ழைக்க‌முடியாது.

  3. Avatar
    A.C.Sankaranarayanan says:

    மிக தெளிவான இக்க்கட்டுரைக்கு நன்றி. ரங்கராஜன் சுந்தரவடிவேல் இன்னுமோர் கேள்விக்கு பதிலா தரவும்.

    ஜீவன் முக்தர்கள் என்ற நிலையில் ஆயிரம் ரிஷிகளும் சித்தர்களும் பாரதத்தில் வாழ்ந்து இருந்திருக்கின்றனர்.
    உதரணத்துக்கு போகர், பதஞ்சலி, திருமூலர் இன்னும் நிறைய….. இயேசு கிறிஸ்து 12 வருஷம் காணாமல் போய் திரும்பிவந்த பிறகு ரிஷி, சித்தர்களுடைய பாணியில் குறிப்பிட தக்க ஏற்பாட்டை நிகழ்த்தி காமித்தது, அவர் காலத்தில் வாழ்ந்த மூர்க்க / முட்டாள் தேசத்தில் விசித்திரமாகவும் , பயமாகவும், ஆச்சர்யமாகி அவர்களது குறுகிய அறிவு புலன்களால் கடவுள் என ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதீத யோகா சக்தி, குண்டலினி எழுச்சி போன்ற சக்திகளால் அடையும் நிலையை இயேசு கிறிஸ்து அடையபெற்றார்.

    இன்றும் நமது இமய தேசத்தில் இயேசு கிறிஸ்து தவம்செய்து ஜீவன் முக்தரான இடத்தினை யோகியர் காட்டுகின்றனர். யோகியர் ஜீவா சமாதியான சிவலயம்களை நிறைய அறிவோம். திருமுலர் என்றுமே யோகி தான். எய்சு கிறிஸ்துவும் என்றுமே யோகிதான்…..

    A.C.SankaraNarayanan.
    sankar_29kw@yahoo.com

  4. Avatar
    Dr.G.Johnson says:

    இந்த கட்டுரைப்படி பார்த்தால் எந்த மதத்தையும் புத்தியைப் பயன்படுத்தும் எந்த மனிதனும் நம்ப முடியாது. காரணம் எல்லா மதத்திலும் இத்தகைய குறைபாடு உள்ளது. ஏசு எதையும் எழுதி வைக்கவில்லைதான். வாய்மொழியாக தரப்பட்டதை பின்னால் வந்தவர்கள் எழுதியதுதான். உலகின் வேறு எந்த மதத்தில் அதை உண்டாகியவரே எழுதி வைத்துள்ளார்? ராமன் கதையை அவரே எழுதினாரா? பகவத் கீதையை கிருஷ்ணன் மகாபாரத போர்களத்தில் தானாக எழுதினாரா? புத்தரின் போதனைகள் அவராலேயே எழுதப்பட்டவையா? முகமது நபி திருக்குரானை தானாகவே எழுதினாரா? இல்லையே! பின் எதை வைத்து மக்கள் இத்தகைய போதனைகளை நம்புகின்றனர்? எவ்வித ஆதாரமும் இல்லாத இவற்றை நம்பி எப்படி நமக்கு போதித்து வெவ்வேறு மதங்களில் சேர்த்துவிட்டனர்?
    இன்று நாம் எப்படி ஒவ்வொருவரும் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறோம்? பிறப்பின் வழியால்தானே? அதன்பின் அதையே விசுவாசிக்கிறோம்.இவ்வாறுதான் எல்லா மதத்தினரும் இன்று வாழ்ந்து வருகிறோம். கட்டுரை ஆசிரியர் ஒரு இந்துவாக இருந்தாலும் எந்த ஆதாரத்தை வைத்து அவரால் இந்து கடவுள்களை உண்மை என நம்பி வழிபட முடிகின்றது? இதுபோன்றுதான் நம் அனைவரின் நிலையும் பகுத்தறிவு பயன்படுத்தி பயப்படாமல் பார்த்தால் இவற்றை நம்புவது சிரமமே! தந்தை பெரியார் கடவுள்கள் பற்றி கூறியுள்ளதே நூற்றுக்கு நூறு உண்மை என்பது புலப்படவில்லையா? தமிழ் நாட்டில் இருந்துகொண்டு பெரியார் சொன்னதயும் நம்பாமல் இப்படி மதங்களைப் பற்றி சர்ச்சை செய்வதால் என்ன பயன்.? எல்லா மதங்களுமே கெட்டிக்கார சில மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான் என்ற உண்மையை என் படித்தவர்கள்கூட நம்ப மறுக்கிறார்கள்? கடவுள் உயிரை எடுத்துவிடுவார் என்ற பயம்தானே?
    ஒன்றை நாம் நினைவு கூறலாம்: பெரியார் நாத்திகர். ராஜாஜி ஆத்திகர். அவரிடம் சவால் விட்டார் பெரியார். யார் முதலில் சாவார்கள் என்று. கடவுள் உள்ளது உண்மை என்றால் என்னை முதலில் கொல்லட்டும் என்றார் பெரியார். சவாலை ஏற்றார் ராஜாஜி. என்ன ஆனது? பெரியார்தான் வென்றார். முதலில் இறந்தவர் ராஜாஜிதான்! இதில் இருந்து என்ன தெரியுது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். ………..டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் காவ்யா,

    இந்த வ்யாசத்தின் ஆசிரியர் ஸ்ரீ ரங்கராஜன் சுந்தரவடிவேல் அவர்களை இந்த வ்யாசமெழுதுமாறு தாங்கள் ப்ரேரணை செய்ததை வாசித்தது நினைவுக்கு வருகிறது. அது மட்டுமின்றி வ்யாசத்தில் பேசப்படும் விஷயங்களுக்கு சொல்லப்பட்ட மாற்றுக்கருத்துக்கள் எவை என்பதையும் எழுத விக்ஞாபித்திருக்கிறீர்கள். நன்றி.

    ஸ்ரீ ரங்கராஜன் சுந்தரவடிவேல், வ்யாசத்தில் பேசப்படும் கருப்பொருள் நான் முன்னமேயே அமரர் ஸ்ரீமான் சீதாராம் கோயல் அவர்களின் புஸ்தகத்தில் வாசித்தது. அதற்கான ஆழமில்லா மேம்போக்கான மறுப்புகளையும் வாசித்துள்ளேன். மங்காசரியான் அவர்கள் வ்யாசத்திற்கு மறுப்புக் கருத்துக்கள் நீங்கள் முன்வைப்பதாகச் சொல்லியுள்ளீர்கள்.

    தாங்கள் (மங்காசரியான்?) சரித்ரத்தில் ஒரு நபர் இருந்திருக்க இயலும் என்றால் அதை எவ்வாறு அணுக வேண்டும் மற்றும் அவர் காலத்தை எப்படி கணிப்பது என்பதற்கு ஆய்வாளர்கள் எடுத்துக்கொள்ளும் அலகீடுகளை கையாண்டுள்ளீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை கோர்வையாக எளிமையாக சொன்ன தங்கள் மொழிபெயர்ப்புக்கு நன்றி.

    மாற்றுக்கருத்துக்கள் முக்யமாக கீழ்க்கண்ட கேழ்விகளுக்கு விடையளிக்குமாயின் சரித்ர நாயகனாக சித்தரிக்கப்படும் ஏசுவைப் பற்றி தெளிவு கிடைக்கலாம்.

    1. ஏசு காலத்தில் அல்லது ஏசு இறந்ததற்கு உடன்பின் எழுதப்பட்ட யஹூதிய மற்றும் பாகனிய நூற்களில் பெத்லஹேமில் பிறந்த ஏசுவைப் பற்றி குறிப்புள்ளதா?

    2. பைபள் புதிய ஏற்பாட்டின் அசல் கிட்டியதில்லை இன்றுள்ளது அனாமதேய நகல்கள் என்று சொல்லியுள்ளீர்கள். புதிய ஏற்பாட்டின் அசல் இதுவரை கிட்டியுள்ளதா. இன்னார் படியெடுத்த நகல் என நகலுக்கு நாமதேயம் ஏதும் கிட்டியுள்ளதா?

    3. ஸ்ரீமான் சீதாராம் கோயல் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்தவர் அல்லர் என்று மட்டிலும் சொன்னதாக நினைவு. நீங்கள் (மங்காசரியான்) ஒருபடி மேலே போய் ஏசு மாத்திரமென்ன அவர் சிஷ்யர்கள் இருந்ததற்கும் ஆதாரம் ஏதுமில்லை அவை வெறும் புனைவுகள். ஊகங்கள் என சொல்லியுள்ளீர்கள். இதை மறுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிட்டியுள்ளதா

    4. வருஷங்களின் நடுவே என்பதற்குப் பதில் மிருகங்களின் நடுவே என இடைச்செருகல் செய்ததாகச் சொல்லியுள்ளீர்கள். வருஷங்களின் நடுவே என்பது மூலநூலில் சொல்லப்பட்டது தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

    5. சுவிசேஷங்களுக்கான அனாமதேய நகல்கள் ஒரே சமயத்தில் கிட்டியவையா? ஒரே மொழியில் எழுதப்பட்டவையா?

    6. பிறப்பு, மரிப்பு மற்றும் உயிர்த்தெழுதல் சம்பந்தமாக சுவிசேஷங்களில் உள்ள முரண்பாடுகளை டயொசீஸ் எப்படி reconcile செய்கிறது?

    நான் இதற்கு முன் வாசித்த மறுப்புக்கள் நேரடியான கேழ்விகளுக்கு மேம்போக்கான பதிலளிக்கும் ஆழமில்லா மறுப்புகளாய் இருந்தன. தாங்கள் வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.

    அன்பார்ந்த ஸ்ரீமான் காவ்யா சில விஷயங்கள்.

    என் கருத்துக்களில் உண்மையை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். இது தான் உண்மை என அறுதியிடவில்லை.

    நான் பைபள் அறிஞனல்ல. என் அணுகல் Methodology and approaches in ascertaining dates of great personalities in history என்ற விஷய அணுகுமுறை சார்ந்தது.

    ஸ்ரீமான் சீதாராம் கோயல் ஆக இருக்கட்டும் அல்லது D.H.Lawrance ஆக இருக்கட்டும் சொல்லப்பட்ட கருத்து என்ன. அதில் ந்யாயம் மற்றும் ஆதாரம் எவ்வளவு உள்ளது என்பதை எடை போடுதல் மட்டும் தான் ஒரு பக்ஷபாதமில்லா ஆய்வாளரின் லக்ஷணம். கருத்துக்களைச் சொன்னவர் ஹிந்துத்வர் அல்லது ஒரு முஸல்மான் – அவருக்கு உள்நோக்கம் உள்ளது என்று சொல்வது பசப்பல்.
    வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்ந்து தகுந்த தர்க்கங்களுடன் ஏற்பது அல்லது மறுதலிப்பது பக்ஷபாதமில்லாத அராய்ச்சியின் லக்ஷணம்.

    உண்மைகளை அவரவர் ஆய்ந்தறியலாம்.

    தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு என் நன்றிகள்.

    ஸ்ரீ ரங்கராஜன் சுந்தரவடிவேல் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    1. Avatar
      K A V Y A says:

      //அன்பார்ந்த ஸ்ரீமான் காவ்யா,

      இந்த வ்யாசத்தின் ஆசிரியர் ஸ்ரீ ரங்கராஜன் சுந்தரவடிவேல் அவர்களை இந்த வ்யாசமெழுதுமாறு தாங்கள் ப்ரேரணை செய்ததை வாசித்தது நினைவுக்கு வருகிறது. அது மட்டுமின்றி வ்யாசத்தில் பேசப்படும் விஷயங்களுக்கு சொல்லப்பட்ட மாற்றுக்கருத்துக்கள் எவை என்பதையும் எழுத விக்ஞாபித்திருக்கிறீர்கள். நன்றி.
      //

      எதற்கு நன்றி? Is there anything personal that I had owed it to u and paid up? or vice versa ?

      வ்யாசம் = கட்டுரை
      ப்ரோரணை = விண்ணப்பம் அல்லது வேண்டுகோள்
      விக்ஞாபித்தல் = கேட்டுக் கொள்ளுதல்
      கேழ்வி என்பதைச் சரியாகக் கேள்வி என்றெழுதவும்.

      //என் கருத்துக்களில் உண்மையை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். இது தான் உண்மை என அறுதியிடவில்லை//

      இரண்டுக்கும் வேறுபாடுல்லை. உண்மையென்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லிக்கொண்டே போங்கள். ஏற்பதும் ஏற்காததும் வாசகர் பிரச்சினை. அதில் தலையிட உரிமையில்லை.

      வரலாற்று ஆய்வு முன்முடிபுகளோடு செய்வதன்று. மங்காசாரன் அப்படிச் செய்யவில்லை. அவருக்கு கிருத்தவர்கள், கிருத்தவ மதம் இவற்றில் காழ்ப்புணர்ச்சியில்லை. எனவேதான் அவர் கருத்துக்களை உதாசீனம் செய்யாமல் கிருத்துவர்களில் மத அறிஞர்கள் பதிலகளை எழுதினார்கள்.

      கோயல் போன்றோர் இந்துத்வா எழுத்தாள பாசறையைச் சேர்ந்தோர். இவர்கள் பிறமத (அதாவது இந்திய மண்ணில் உதிக்காதவை மட்டும்) வெறுப்பைக் கொண்டோர். எனவே முன்முடிபுகள் இல்லாமல் இவர்கள் எழுதினார்கள் என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.

      உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அதிமுக – திமுக வைச்சேர்ந்த சிறந்த மேடைப்பேச்சுக்களைக் கேளுங்கள். ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் வைத்துப் பேசுவார்கள். அவர்கள் முன்முடிபு “எதிரானக் கட்சி முழுக்கமுழக்க மோசமானது. மக்கள் அதை நிராகரிக்கவேண்டும்” என்றுதான். இது வெறும் மேடைப்பேச்சு. அரசியல். எனவே பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவர்களே வரலாற்றாயவாளர்களாக இருந்தால்? எப்படி அவர்களை நீங்கள் அணுகுவீர்களோ அப்படியே கோயல் போன்றோரையும் அணுக வேண்டும். உண்மை, பொய் என்பது அவரவர் அணுகுமுறையைப்பொறுத்ததே. எதையும் திறமையாகத் திரிக்க முடியும் ஒரு தேர்ந்த வழக்குரைஞரால்.

      எழுதுபவரின் உள்ளோக்கம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும். தப்பவே தப்பாது.

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://ancienthistory.about.com/od/churchhistory/qt/121507JesusBirt.htm

    The Star of Bethlehem and the Dating of the Birth of Jesus

    If It’s a Comet, the Star of Bethlehem Can Help Date Jesus’ Birth

    By N.S. Gill, About.com Guide

    Comet
    Clipart.com

    Ads

    Bethlehem Hotelswww.hiexpress.comSmart Hotels in Bethlehem Free Internet & Hot Breakfast Bar!

    Great Toys from Walmart®www.walmart.ca/ToysYour Little One will Love Our Toys. Browse our Collection. Shop Today!

    Christmas DecorationRONA.ca/Holidays_DecorationsHoliday Decorations for Your Home. Get it at RONA Today and Be Ready!

    Ads

    Christmas Story Bookamazon.comThe first Christmas through the eyes of the animals in the stable

    Printable Templatewww.myscrapnook.comCreate Any Templates – Print or Share w/ Friends Free w/ Toolbar!

    When was Jesus born? The question seems to have an obvious answer since our dating system is based on the idea that Jesus was born between the eras we call B.C. and A.D. In addition, those of us who do so celebrate the birth of Jesus near the Winter Solstice, on Christmas or the Epiphany (January 6). Why? The date of Jesus’ birth is not explicitly stated in the Gospels. Assuming Jesus was an historical figure, the Star of Bethlehem is one of the main tools used to calculate when he was born.

    There are many puzzling details about the birth of Jesus, including the season, the year, the Star of Bethlehem, and the census of Augustus. Dates for the birth of Jesus often hover around the period from 7-4 B.C., although the birth could be several years later or possibly earlier. The Star of Bethlehem could be the bright celestial phenomenon shown in planetariums: 2 planets in conjunction, although the Gospel account of Matthew refers to a single star, not a conjunction.

    Now after Jesus was born in Bethlehem in Judea in the days of Herod the king, magi from the east arrived in Jerusalem, saying, “Where is He who has been born King of the Jews? For we saw His star in the east, and have come to worship Him.” (Matt. 2:1-1)
    A good case can be made for a comet. If the right one is picked, it can provide not only the year, but even the season for the birth of Jesus.
    Winter Christmas
    By the 4th century, historians and theologians were celebrating a winter Christmas, but it wasn’t until 525 that the year of Jesus’ birth was fixed. That was when Dionysius Exiguus determined Jesus was born 8 days before a New Year’s day in the year 1 A.D. The Gospels provide us with clues that Dionysius Exiguus was wrong.
    Star of Bethlehem as Comet
    According to Colin J. Humphreys in “The Star of Bethlehem — a Comet in 5 BC — and the Date of the Birth of Christ,” from Quarterly Journal of the Royal Astronomical Society 32, 389-407 (1991), Jesus was probably born in 5 B.C., at the time the Chinese recorded a major, new, slow-moving comet — a “sui-hsing,” or star with a sweeping tail in the Capricorn region of the sky. This is the comet Humphreys believes was called the Star of Bethlehem.
    Magi
    The Star of Bethlehem was first mentioned in Matthew 2:1-12, which was probably written in about A.D. 80 and was based on earlier sources. Matthew tells of the magi coming from the East in response to the star. The magi, who were not called kings until the 6th century, were probably astronomer/astrologers from Mesopotamia or Persia where, because of a sizable Jewish population, they were acquainted with Jewish prophecy about a savior-king.
    Humphreys says it was not uncommon for magi to visit kings. Magi accompanied King Tiridates of Armenia when he paid homage to Nero, but for magi to have visited Jesus, the astronomical sign must have been powerful. This is why Christmas displays at planetariums show the conjunction of Jupiter and Saturn in 7 B.C. Humphreys says this is a powerful astronomical sign, but it doesn’t satisfy the Gospel description of the Star of Bethlehem as a single star or as one standing over the city, as described by contemporary historians. Humphreys says expressions like “‘hung over’ appear to be uniquely applied in ancient literature to describe a comet.” If other evidence emerges showing conjunctions of planets were so described by the ancients, this argument would fail. A New York Times article (based on a National Geographic Channel show on the birth), What Jesus’ Birth May Have Looked Like , cites John Mosley, from the Griffith Observatory, who believes it was a rare conjunction of Venus and Jupiter on June 17, 2 B.C.

    “The two planets had merged into one single gleaming object, one giant star in the sky, in the direction of Jerusalem, as seen from Persia.”
    Determining Which Comet
    Assuming the Star of Bethlehem was a comet, there were 3 possible years, 12, 5, and 4 B.C. By using the one relevant, fixed date in the Gospels, the 15th year of Tiberius Caesar (A.D. 28/29), at which time Jesus is described as “about 30,” 12 B.C. is too early for the date of Jesus’ birth, since by A.D. 28 he would have been 40. Herod the Great is generally assumed to have died in the spring of 4 B.C., but was alive when Jesus was born, which makes 4 B.C. unlikely, although possible. In addition, the Chinese do not describe the comet of 4 B.C. This leaves 5 B.C., the date Humphreys prefers. The Chinese say the comet appeared between March 9 and April 6 and lasted over 70 days.

  7. Avatar
    புனைப்பெயரில் says:

    மேட்டர் ஸ்டார் வந்துச்சா இல்லையா என்பதில் இல்லை.. அந்த ஸ்டார் வந்ததை வைத்து கற்பனை தட்டி விடப்பட்டு இந்த மத ஸ்டார் பிறப்பு என்பது உண்மையா இல்லையா என்பது பற்றியே…. 1766 சனவரி 18ம் தேதி அம்மாவாசை என்று சொல்லி, அன்று தான் குண்டலக்கப்பி பிறந்தார் என்றால், அவர் பிறந்தாரா இல்லையா என்பது விட்டு, அம்மாவாசை சரி பார்க்கப்பட்டு, குண்டலக்கப்பி என்பவர் பிறந்தார் என்று சொல்வது போலிருக்கு நம்ம செயபாரதன் சொல்வது…

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    2000 ஆண்டுக்கு முன்பு குழந்தை ஏசு மேரிக்குப் பிறக்க வில்லை என்று யார் நிரூபித்துள்ளார் ?

    அது போல் வள்ளுவர், ஔவையார், கம்பர், தொல்காப்பியர், இளங்கோவடிகள், ஆண்டாள், கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோர் பிறந்ததாக எந்த நகராண்மையில் பிறப்பு நேரங்கள் எழுதப் பட்டுள்ளன ?

    சி. ஜெயபாரதன்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    அப்படி பார்த்தால் நேற்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு தீபாவளி கொண்டாடினோம் ? நரகாசுரன் இறந்துபோனது நேற்றுதான் என்று எங்கே பதிசெய்யப்பட்டுள்ளது? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு கிருஷ்ண ஜெயந்தியும், விநாயகர் சதுர்த்தியும் இராமர் நவமியும், அம்மனுக்கு மாசி மகமும் கொண்டாடுகிறீர்கள்? ௨௦௦௦ வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்த கதைகளில் பிறந்த நாட்களை யார் பார்த்தது? .ஏசுவின் பிறந்த தேதியை கேள்விகேட்கும் நபர்கள் இதற்கு பதில் கூறுவார்களா? ….. டாக்டர் ஜி. ஜான்சன்.

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \Is there anything personal that I had owed it to u\

    இல்லை ஐயன்மீர். நான் முன்னமே எழுதியுள்ளபடி இவ்விஷயம் சம்பந்தமாக மாற்றுக்கருத்துக்களை யான் ஏற்கனவே வாசித்துள்ளேன். இந்த வ்யாசத்திற்கும் அது போல் மாற்றுக்கருத்து தெரிவிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என் கருத்துக்களில் தெளிவு கிட்டலாமே என்பது என் அபிலாஷை. பாருங்கள் காக்கைக்கு மூக்குல வேர்த்தது என்பார்கள். என் நினைவுக்கேற்ற வண்ணம் காக்கை உட்கார பனம்பழம் விழுதல் போல தாங்கள் ஸ்ரீமான் ர.சு அவர்களை விக்ஞாபித்துள்ளீர்கள். என் நன்றி பனம்பழம் விழக் காரணமாய் இருந்த காக்கையின் செய்கைக்கு. காக்கைக்கு அல்ல. ஆனால் பாருங்கள் காக்கை உட்கார்ந்தால் பனம்பழம் தான் விழும் என்பது எனது மூடநம்பிக்கை போலும். எதெதெல்லாம் விழலாம் :-)

    நன்றிகளைக் காலால் இடறும் உரிமை உங்களுக்கு உண்டுதான் அன்பர் காவ்யா அவர்களே ஆனா பாருங்க எனக்குப் பிடித்த ஒரு செய்கைக்கு க்ருதக்ஞதை தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு என நான் திண்ணமாகக் கருதுகிறேன். மாற்றுக்கருத்து பிறிதொருவருக்கு இருப்பது இயல்பு தானே ஐயன்மீர்@! :-)

    \வ்யாசம் = கட்டுரை
    ப்ரோரணை = விண்ணப்பம் அல்லது வேண்டுகோள்\

    அப்டீங்களா ஐயா?

    \அதன்படி, திருக்குரானில் இயேசுவைப்பற்றிக் குறிப்புள்ளது எனப்து ஒரு வேலிட் போயிண்ட் சார்!\

    \இங்கே தமிழ் இலக்கிய இரசனையாளர்களின் – கருத்தாகும் என்பது திமிர்தானே?

    //யாராயிருந்தால் என்ன, புகழுரைகள் தான் இனிக்கும்.// சுத்த கப்சா.\

    வேலிட் போயிண்ட் சார் – மெய்யான கருத்து ஐயா

    சுத்த கப்சா – தூய பொய்

    எந்தத் திரியாக இருந்தாலும் விவாதமெனும் ரயிலைத் தண்டவாளத்திலிருந்து தள்ளிவிடும் காஷ்டமான உறுதிமொழி எடுத்துள்ள அன்பர் காவ்யா அவர்களிடமிருந்து திரி சம்பந்தமாக விவாதத்திற்கு லவலேசமேனும் சம்பந்தமுள்ள விஷயங்களை எதிர்பார்ப்பது என் தவறு தான்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \2000 ஆண்டுக்கு முன்பு குழந்தை ஏசு மேரிக்குப் பிறக்க வில்லை என்று யார் நிரூபித்துள்ளார் ?

    அது போல் வள்ளுவர், ஔவையார், கம்பர், தொல்காப்பியர், இளங்கோவடிகள், ஆண்டாள், கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோர் பிறந்ததாக எந்த நகராண்மையில் பிறப்பு நேரங்கள் எழுதப் பட்டுள்ளன ? \

    Is that the views of Jayabharathan, the scientist or Jayabharathan, the layman?

    பல நூறு ஆண்டுகளுக்கு முன் நகராண்மை என்ற சமாசாரமே இல்லாத போது பிறப்பு நேரங்கள் எழுதப்பட்டுள்ளனவா என்ற கேள்வியே பிழையானது.

    அப்படி இல்லாததனால் தான் ஐயா சரித்ர ஆராய்ச்சியாளர்கள் திருவள்ளுவர், ஔவையார், தொல்காப்பியர் போன்ற சான்றோர்களின் காலவரையறையை நிர்ணயம் செய்ய ஆராய வேண்டியுள்ளது. நிஷ்பக்ஷமான சொல் காலம் அல்ல கால வரையறை. விக்ஞானியான அன்பர் ஜெயபாரதன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், இது போன்ற ஆராய்ச்சிகளில் ஆராய்ச்சி முடிபு என்பது மிகத்துல்லியமானதாக இருக்காது. வைக்கப்படும் சான்றுகளின் உண்மைத்தன்மை முடிவெடுப்பவரின் சார்பின்மை போன்றவை முடிபுகளை தடம் புரள வைக்கும். ஆனால் தொடர்ந்து செய்யப்படும் ஆராய்ச்சிகளில் உண்மைத்தன்மை இல்லாத சான்றுகள் தோலுரித்து களையெடுக்கப்படும். அதே போலவே mis interpretations கூட தோலுரிக்கப்படும். இது ஒரு நீண்ட process. முதலில் wild guesses, rhetoric, rumours, truth எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உலா வரும். ஆனால் ஆராய்ச்சி தொடரத் தொடர களைகள் எடுக்கப்பட்டு உலகோருக்குப் பயன் படும் பயிர் மட்டும் மிஞ்சும்.

    மிக முக்யமாக இதுவரையிலான உங்கள் உத்தரங்களில் மிகப்பட்டவர்த்தனமாக வெளிப்படுவது விஷயம் பற்றி நீங்கள் கொள்ள வேண்டிய நிலை. அதில் தெளிவில்லாததால் உங்களுடைய உத்தரங்கள் தெளிவின்றி அலை பாய்கிறது.

    ஒரு புறம் இவ்விவாதம் தேவையில்லாத ஒன்று என்ற நிலைப்பாடு மற்றொரு புறம் ஏசு என்ற சரித்ர நாயகனை எப்படி நிரூபணம் செய்வது என்ற ஆதங்கம். முதல் நிலைப்பாடு எடுத்தீர்களானால் உங்கள் உத்தரங்கள் கோர்வையாக அதையொட்டியே இருக்கும்.

    உறுதியான படிக்கு இரண்டாம் நிலைப்பாடு எடுத்தால் சரித்ர நாயகன் ஏசுவை நிரூபிப்பதற்கு சான்றளிக்கும் சான்றுகளை முன் வைப்பது. இப்போது முன் நிலைப்பட்டை விட்டு தாங்கள் இரண்டாம் நிலைப்பாட்டைப் பற்றி சரித்ர நாயகன் ஏசுவை நிரூபணம் செய்ய விழைவதாகத் தோன்றுகிறது. இந்த வ்யாசத்தையும் ஸ்ரீமான் சீதாராம் கோயல் அவர்கள் புஸ்தகத்தையும் வாசித்து என்னளவில் முடிவெடுக்க எனக்குத் தேவையாக ஆறு சான்றுகளை நான் பகிர்ந்து கொண்டேன். தாங்கள் இரண்டாம் நிலைப்பாட்டை எடுக்கும் பக்ஷத்தில் என்புரிதலுக்கு தெளிவு கிட்ட சான்றுகளை முன்வைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

    தாங்கள் 13ம் திகதி இரண்டு மணிக்கூறுக்கு பகிர்ந்த உத்தரத்தை தாங்கள் வெறுமென copy paste மட்டும் செய்துள்ளதாகத் தெரிகிறது.

    \Assuming Jesus was an historical figure, the Star of Bethlehem is one of the main tools used to calculate when he was born.\

    என்ற வாசகத்தை நீங்கள் வாசிக்கவில்லை? ஏசுபிரான் சரித்ர நாயகன் தானா என்பதில் பைபளில் குறிக்கப்பட்ட நாள் நக்ஷத்திராதிகளை முன் வைத்து ஏசுபிரானின் birth chart கணிக்க முயலுபவர் எடுத்த எடுப்பிலேயே ஏசு சரித்ர நாயகனா என்பதைக் க்ள்விக்குறியாக்குகிறார். திண்ணமாய்ச் சொல்லாது “Assuming” என்று சொல்கிறார்.

    அடுத்து நாள் நக்ஷத்திராதிகளை வைத்து சரித்ர நாயகனை கனம் பண்ண விழைபவர் ஆதாரமாக எடுக்கும் ஆவணம் பைபள். அது க்றைஸ்தவர்களின் வேதம் என்பதை நான் மதிக்கிறேன். ஆனால் வ்யாசம் பைபள் என்பது சரித்ர ஆவணமா என்று கேழ்வி எழுப்புகிறது.

    ஆகதாங்கள் முன் வைக்கும் கருத்தை எழுதியவருக்கும் ஏசு சரித்ர நாயகனா என்பதில் திண்ணமில்லை.

    அவர் எடுத்து முன்வைக்கும் ஆவணம் வேதம் அல்லது புராணம் என கருதப்படலாமேயன்றி ஒரு சரித்ர ஆவணம் என கருத முகாந்தரம் இல்லை. ஆக நிரூபிக்க வேண்டிய கூற்றுக்கு இது வலு சேர்க்காது.

    1. Avatar
      K A V Y A says:

      இது போன்ற ஆராய்ச்சிகளில் ஆராய்ச்சி முடிபு என்பது மிகத்துல்லியமானதாக இருக்காது. வைக்கப்படும் சான்றுகளின் உண்மைத்தன்மை முடிவெடுப்பவரின் சார்பின்மை போன்றவை முடிபுகளை தடம் புரள வைக்கும்.//

      சரியாகச் சொன்னீர்கள். முடிவெடுப்பவரின் சார்பின்மை முக்கியம் ஒர் வரலாற்றாராய்ச்சிக்கு. கோயலுக்கு அந்த சார்பின்மையில்லை.

      //ஆராய்ச்சி தொடரத் தொடர களைகள் எடுக்கப்பட்டு உலகோருக்குப் பயன்படும் பயிர் மட்டும் மிஞ்சும்//

      வ‌ர‌லாற்றாராய்ச்சிக‌ளை வைத்து ம‌த‌மில்லை.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ////பல நூறு ஆண்டுகளுக்கு முன் நகராண்மை என்ற சமாசாரமே இல்லாத போது பிறப்பு நேரங்கள் எழுதப்பட்டுள்ளனவா என்ற கேள்வியே பிழையானது.///

      Very good, Krishnakumarji. Now you have discovered the fact. This Message is applicable for Jesus Christ also.
      S. Jayabarathan

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \வரலாற்று ஆய்வு முன்முடிபுகளோடு செய்வதன்று. மங்காசாரன் அப்படிச் செய்யவில்லை. அவருக்கு கிருத்தவர்கள், கிருத்தவ மதம் இவற்றில் காழ்ப்புணர்ச்சியில்லை. எனவேதான் அவர் கருத்துக்களை உதாசீனம் செய்யாமல் கிருத்துவர்களில் மத அறிஞர்கள் பதிலகளை எழுதினார்கள்.

    கோயல் போன்றோர் இந்துத்வா எழுத்தாள பாசறையைச் சேர்ந்தோர். இவர்கள் பிறமத (அதாவது இந்திய மண்ணில் உதிக்காதவை மட்டும்) வெறுப்பைக் கொண்டோர். எனவே முன்முடிபுகள் இல்லாமல் இவர்கள் எழுதினார்கள் என்று சொன்னால் நம்பமாட்டார்கள். \

    அப்பிடீங்களா ஐயன்மீர். கலிலியோவையே உள்நோக்கம் கொண்டவர் என்று தானே முதலில் உதாசீனப்படுத்தினார்கள்.

    ரெவரண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் காவ்யா என்றோ அல்லது திருவாழ்மார்பன் என்றோ அவதாரம் எடுத்தாலும் ஜோ அவர்கள் கருத்தில் உள்நோக்கம் இருக்கலாம் என்று சந்தேகிப்பது தப்பு தானே சார்.

    ஆனாலலும் அவர் கருத்தில் உண்மை உள்ளதா அல்லது இல்லையா என்று தீர்மானிப்பதற்கு அவர் கருத்தை பரிசீலனைக்கு எடுத்து ஆராய்ந்து ஏற்கத்தக்கது அல்லது தவறானது என தர்க்கங்களுடன் முடிபுகளை முன் வைக்க வேண்டுவது விக்ஞான பூர்வமான செயற்பாடு.

    அப்படி இல்லாது கோயல் அவர்களது கருத்து என்ன அதில் சாரம் என்ன அசாரம் என்ன என்று பரிசீலனை கூட செய்யாது உள்நோக்கம் உள்ளது என்று மட்டும் கூறி விலக்குவது என்பது

    என்னை தண்ணியில் போட்டால் படகாக ஆகுவேன்
    எண்ணையில் போட்டால் போண்டாவாக ஆகுவேன்

    என்பதை விட ஹாஸ்யமான விஷயம்.

    \எழுதுபவரின் உள்ளோக்கம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும். தப்பவே தப்பாது.\

    ஐயா சாமி, உள்நோக்கம் என்று ஃபத்வாவெல்லாம் போடுங்கள்.

    உங்கள் செந்தமிழில் வேலிட் போயிண்ட் தானா இல்லையா என்பதற்குத் தரவுகளை வையுங்கள்

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்காங்க ஐயன்மீர்.

    1. Avatar
      K A V Y A says:

      ஒருவருக்கு உள்ளோக்கமிருக்கிறதா என்பதைத் தெரிய திறமை தேவையில்லை. சாதாரணமாகவே அது வெளித்தெரிந்து விடும்.

      ஆராய்ச்சியாளரின் முதல் தகுதி சார்பின்மை. அஃது இல்லாவிட்டால் அவன் ஆராய்ச்சியை பொதுமன்றத்தில் படிக்கலாம். ஆனால் ஒரு கல்விக்கலனாக ஏற்பவர் இருக்கார். இந்துத்வா ஆராய்ச்சியாளர்கள் நூல்களை மோடி பிரதமர் ஆன பின்னர், படிக்கக் கட்டாயப்படுத்தலாம். கட்டாயங்கள் இல்லாப்பட்சத்தில், அவர்களை விரும்பியோர் மட்டும் படிப்பர். ஒரு எ.கா. நீலகண்ட சாஸதிரியும் கோயலும் ஒன்றாக மாட்டார்கள். அவர் கல்வி; இவர் மதக்கட்சி. இந்துதவா எழுத்தாளர்களை உங்களைப்போன்ற இந்துத்வாவினர் மட்டுமே படிக்கிறார்கள் என்பது என் கருத்து.

      இங்கு திண்ணையில் போடப்படும் மதம், கட்சி, ஜாதி இவை பற்றிப்பேசும் கட்டுரைகளுக்கும் உள்ளோக்கம் உண்டு. தெரிந்தேதான் படிக்கிறோம். ஏனென்றால், நாம் திண்ணை வாசகர்கள். அடிக்கடி கிருத்துவம் இசுலாம் பற்றி ஆங்கிலத்தில் எப்போதோ வந்த கட்டுரைகளை மொழிபெயர்த்து – அதிலும் அம்மத எதிர்ப்பாளர்களின் கட்டுரைகளை மட்டும் – வெளியிடுபவர்களுக்கு உள்ளோக்கமுண்டு என்பதை எவருமே அறிவார்கள். அவர்களுக்குப் பதிலாக அம்மதங்களை அம்மதங்களில் வாழ்பவ்ர்கள் எழுதிய கட்டுரைகளை இவர்கள் மொழிபெயர்க்க மாட்டார்கள் என்றும் தெரியும். கோயலின் நூல்களை கிருத்துவ விவிலிய அறிஞர்கள் சட்டை பண்ணினார்களா? என்ன எதிர் பதிலை வைத்தார்கள் என்று கிருஷ்ண்குமாரோ, தேவப்பிரியாவோ சொல்லலாம். ஒரு நேரப்போக்குக்கு படிக்க உதவும்.

      எப்படி மெய்ப்பொருளைக் காணவேண்டுமென்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா? அங்குதானே பிர்ச்சினை? எவரிடம் போய் கேட்பது? கோயலிடம், தேவப்பிரியாவிடமுமா?

  13. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    யோவான் 19:19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேயன் இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.

    இதில் நாசரேயன் என்பதை சுவிசேஷக் கதாசிரியர்கள் நாசரேத்து ஊர்க்காரன் என நம்பி, லூக்காவின் ஏலி மகன் ஜோசப் நாசரேத்துக்காரர்- சென்சஸ் என பெத்லஹெம் சென்றதாகக் கதை.
    மத்தேயுவோ பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் என்றிட, பெத்லஹெம் வாழ்பவரை நாசரேத் வர- நட்சத்திரத்தைக் கண்டு ஜோசியர் சொல்ல- ஏரோது குழந்தை கொல்லல் கதை- பின் ஏரோது மரணத்திற்குப்பிந் யுதேயாவை ஏரோது மகன் ஆர்கிலேயு ஆள்வதால் நாசரேத் வந்ததாகக் கதை. கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகன் அந்திப்பா தான்.

    நாசரேத்து எனும் ஊர் முதல் நூற்றாண்டில் இருந்தது இல்லை.
    http://www.nazarethmyth.info/

    இயேசு சீடரோடு இயங்கிய பெரும்பாலும் கப்பர்நகூமில் தான் இருந்தார்.

  14. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    //கோயல் போன்றோர் இந்துத்வா எழுத்தாள பாசறையைச் சேர்ந்தோர். இவர்கள் பிறமத (அதாவது இந்திய மண்ணில் உதிக்காதவை மட்டும்) வெறுப்பைக் கொண்டோர். எனவே முன்முடிபுகள் இல்லாமல் இவர்கள் எழுதினார்கள் என்று சொன்னால் நம்பமாட்டார்கள். \
    சீதாராம் கொயல் தன் கருத்தைவிட- இயேசு பைபிளியல் பாதிரியார்களால் விமர்சிக்கப்பட்டவிதத்தைத் தொகுத்து தந்தார். அந்நூல் இணைப்பு இதோ.
    Jesus Christ – AnArtifice forAggression by SitaRam Goel.pdf
    http://www.mediafire.com/?55l5zp0j38vejdu

    1. Avatar
      K A V Y A says:

      இராமரைப் பற்றியும்தான் ஏகப்பட்ட விமர்சனங்கள் இந்துக்களாலேயே வைக்கப்பட்டிருக்கிறது. ராம் ஜேத்மலானி சொன்னதற்கு, நேற்று மத்தியபிரதேசத்தில் ஒரு சாமியார் ஜேத்மலானி முகத்தில் எச்சில் துப்பினால் 50 லட்சம் பரிசு தருவேன் என்று சொல்லிவிட்டார். நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பார்க்கவும். ராஜாஜி போன்ற பலர் கடுமையான விமர்சநததை வைத்திருக்கிறார்.

      எல்லா பொது ஆளுமைகளின் மீதும் விமர்சனங்கள் உண்டு. கிருத்துவத்தில் கண்டிப்பாக உண்டு. ஏனெனில் கிருத்துவர்கள் அதைப்பெரிது படுத்துவதில்லை. இதைக் கோயல் சொல்லியா கிருத்துவர்கள் அறிய வேண்டும்? யு மே கோ டு விக்கிப்பீடியா. யு வில் நோ. விக்கிப்பீடியாவை என்ன கோயலகளா நடாத்துகிறார்கள்?

      Criticism on Xianity and Jesus is as old as the origin of this religion.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த டாக்டர் சாஹேப், நரகாசுர வதம், வினாயக சதுர்த்தி இத்யாதி இத்யாதி திருவிழக்களெல்லாம புராணங்கள் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்ட நாட்கள் படி கொண்டாடப்படுகின்றன. நரகாசுரன் மற்றும் வினாயகர் இவர்கள் எங்களுக்கு புராணங்கள் சொல்லியவை. இவர்களை நாங்கள் சரித்ரத்தில் இருந்தவர்களாக சொல்வதில்லையே

    தரைகடலுயிர் வாழ் ஸகலமும் படைத்த தயாபர பிதாவன ஸர்வலோகாதிபனின் குமாரனுக்கு உங்கள் க்றைஸ்தவ மத நூல் சொல்லும் அல்லது அதன் படி உஙகள் டயோசீஸ் முடிவு செய்யும் ஒரு திகதியில் உங்கள் கடவுள் பிறந்த அல்லது மரித்த அல்லது உயிர்த்தெழுந்த நாளை நீங்கள் கொண்டாடுவதை யாரும் கேழ்வி கேட்டிருந்தால் உங்கள் கேழ்வியில் ஞாயம் இருக்கும்.

    க்றைஸ்தவ மத(மாற்ற) போதகர்கள் ஹிந்துக்களிடம் ஜபர்தஸ்தியாக துர்போதனை செய்யும் விஷயம் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்தவர் என்பது. சரித்ரத்தில் வாழ்ந்தவர் என்றால் நிச்சயமாக ஆதாரங்கள் கேழ்க்கப்படும்.

    விக்ஞானி அவர்கள்

    2000 ஆண்டுக்கு முன்பு குழந்தை ஏசு மேரிக்குப் பிறக்க வில்லை என்று யார் நிரூபித்துள்ளார் ?

    என கேழ்க்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன் ஏசு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மங்காசரியான் என்பவர் எழுதிய வ்யாசம் சொல்கிறது என்பதை மொழிபெயர்ப்பாளர் ர.சு. சொல்கிறார். விக்ஞானி அவர்களே வ்யாசத்தின் இரண்டு பாகமும் நீங்கள் வாசித்துவிட்டு யார் நிரூபித்துள்ளார் என்று கேட்டால் அழுவதா சிரிப்பதா என தோன்றவில்லை. அல்லது வ்யாசத்தையே வாசிக்காது நீங்கள் இதை எழுதியுள்ளீர்களா புரியவில்லை.
    மேலதிகமாக ஸ்ரீமான் சீதாராம் கோயல் அவர்களும் வண்டி வண்டியாக ஆதாரங்கள் கொடுத்துள்ளார் என நான் சொல்லியுள்ளேன்.

    இது தான் அறுதியான உண்மை என்று கூட நான் சொல்ல வரவில்லை. இதை மறுக்க வேண்டும் என்றால் ஆராய்ச்சி பூர்வமாக என்ன என்ன நிரூபிக்க வேண்டும் என விவாதத்தில் வைத்துள்ளேன்.

    Solar eclipse is explained by science. If some one come to Scientist Jeyabharathan and say that a snake swallowing sun is the scientific explanation for solar eclipse, would our respected scientist accept that.

    The same sort of frustration I am getting.

    For christ sake, I have nothing to argue about your Jesus Christ, the God of Christians, one among the trinity.

    I am not convinced about the alleged fact that Jesus Christ is a historical person cause the available evidence put forth are not convincing enough.

    If you could put forth any worthy evidence that could dispel the questions raised in the article, you are most welcome.

    Before simply indulging in copy pasting something, just apply your mind in that.

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் சிசு ஒன்று பிறக்கும் போது கால நேரத்தைப் பதிய அந்த நேரத்தில் அவ்விடத்தில் உள்ள கோள்களின் இருப்பும், கோணங்களும் ஜாதக உருவில் எழுதப்படும்.

    கிருஷ்ணக்குமார் தனி மனிதர் தாக்குதலின்றி நாகரீகமாக, கண்ணியமாக, ஆத்திரப் படாமல், அடக்கமாக, அறிவோடு வலையில் எழுத எப்போது கற்றுக் கொள்ளப் போகிறார் ?

    சி. ஜெயபாரதன்.

  17. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    பிறரைக் காரண காரியமின்றி தூஷணை செய்பவன் தன் தூஷணையில் வெளிப்படுத்துவது தன் ப்ரதிபிம்பத்தையே என்பது சான்றோர் வாக்கு.

    \கிருஷ்ணக்குமார் தனி மனிதர் தாக்குதலின்றி நாகரீகமாக, கண்ணியமாக, ஆத்திரப் படாமல், அடக்கமாக, அறிவோடு வலையில் எழுத எப்போது கற்றுக் கொள்ளப் போகிறார் ?\

    முதற்கண் ஸ்ரீமான் ஜெயபாரதன் என்ற வ்யக்தியின் பேரில் எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அது அன்பர் என் மீது காரண காரியமின்றி அளவு கடந்த ஆத்திரத்துடன் செய்த தூஷணையையும் மீறி. விக்ஞானி என்ற ரீதியில் தாங்கள் அணுமின்சக்தி பற்றியோ அல்லது புனல் மின்சக்தி பற்றியோ தங்கள் கருத்துக்களை வாசிக்குங்கால் எனக்கு மிகப்பெருமிதம். இது போன்ற எளிமையான தமிழில் ஒரு அன்பர் எழுதுகிறாரே என்று. மூன்று தசாப்தங்களாக தொலை தூரத்தில் உத்யோகத்தில் இருந்து பல மொழியாளர்களிடம் புழங்கியதில் நான் கற்றது பண்பு. பல மொழிகளின் பரிச்சயம். தாய்மொழியில் பிறமொழிகள் அனிச்சையாக கலப்பதை பிறர் குறையாகச் சொல்கிறார்கள். ஆனால் என்னுடன் பல மாகாணங்களில் இருந்து உத்யோகம் புரியும் பலருக்கும் இதே இயல்பைக் காணுகிறேன். தங்கள் தெளிவு தமிழில் எனக்குப் பெருமிதம் என்பது இதனால் இருக்கலாம்.

    நெருப்பு சுடாது என்று வேதமே சொன்னாலும் ஒப்புக்கொள்ளேன் என்று சொன்ன ஆதிசங்கரரின் வேதாந்தம் கற்கும் மாணவன் என்ற ரீதியில் ஒரு விக்ஞானியின் கருத்தே ஆனாலும் கருத்தில் சாரமில்லையென்றால் அதைப் பகிர்வதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. பின்னும் ஜெயபாரதன் என்ற வ்யக்தி என்னை ப்ரத்யேகமாக தூஷணை செய்த பின்னும் அவர் பேரில் எனக்கு பிணக்கு இல்லாது இருக்கிறது என்பது நான் கற்ற கல்வியில் குறை இல்லை என்பதை எனக்கு காட்டுகிறது.

    நீங்கள் சொல்லவொண்ணா ஆத்திரத்தில் இருக்கிறீர்கள் என்பது தங்களுடைய மேற்கண்ட தூஷணை உள்ளங்கை நெல்லிக்கையென தெளிவாக்குகிறது.

    தாங்கள் என்மீது வைத்த தூஷணைகள் காரண காரியமில்லாதவை. உங்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் அவை தங்களின் இத்திரியில் வைத்த கருத்துக்களைத் தான் ப்ரதிபலிக்கின்றன என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

    தாங்கள் இத்திரியில் சொல்லியுள்ளவை கீழே ஐயன்மீர்,

    \கிருஷ்ணக்குமார் தனி மனிதர் தாக்குதலின்றி நாகரீகமாக, கண்ணியமாக, ………….\

    \புனை பெயரான் கண்ணை மூடிக் கொண்டு சித்திரங்களைப் பார்க்கிறார்.\

    சஹ வாசகரை ஏக வசனத்தில் புனைபெயரான் என்று விளிப்பது தான் நாகரீகம் மற்றும் கண்யம் என்று சாதிக்கிறீர்களா?

    அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே என் பெயராக நான் தளத்தில் வைத்துள்ளது. க்ருஷ்ணகுமார்.

    என் பெயரை தங்கள் ஆத்திரத்திற்கு இரை போட வேண்டி முனந்து “கிருஷ்ணக்குமார்” என்று சாதிப்பது தான் நாகரீகமா? கண்யமா? தனி நபர் தாக்குதலின்மையா? அடக்கத்தின் இலக்கணமா?

    நான் தங்களை விளித்தமை,

    \அன்பர் ஜெயபாரதன் மற்றும் ஜான்சன்…\விக்ஞானி அவர்கள் \ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு\

    தனிநபர் தாக்குதல், நாகரீகம், கண்யம் இவற்றிற்கெல்லாம் தங்களின் சொல்லாடல்கள் அலகீடு என்றால் அன்பார்ந்த மதிப்பிற்குறிய நான் இன்னமும் மதிக்கும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஐயா, நான் தங்கள் அலகீடுகளை ஏற்க முடியாது. நீங்கள் தங்கள் அலகீடுகளின் படி விவாதித்தாலும் நான் என் அலகீடுகளிலிருந்து விலக இயலாது.க்ஷமிக்கவும்.

    விக்ஞானி ஐயா சொன்னது:-

    \மதமே எல்லாவற்றையும் விட உலகத்தில் பல்வேறு மக்களைப் பின்னிப் பிணைக்கும் மிக வலுவான இணைப்புச் சங்கிலி என்று சொல்கிறார். உதாரணம் புத்த மதம் [புத்தர்], கிறித்துவ மதம் [ஏசுநாதர்], இஸ்லாமிய மதம் [முகமது நபி நாயகம்]. இப்படி இந்து மதத்துக்கு ஒரு குரு நாதர் இல்லை. \

    திருமூலர், கருவூர்த்தேவர்,ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர்,க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு, ராமக்ருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், கபீர் தாஸரின் குருவான ஸ்வாமி ராமானந்தர், ஆஸாமின் ஸ்வாமி சங்கர தேவர், ரஸ்கானின் குருவான ஸ்வாமி வல்லபாசார்யாரின் புத்ரனான விட்டல நாதர், ஆதிசங்கரரின் கருத்துக்களை மக்களுக்கு விளக்கிய ஸ்வாமி சிவானந்தர் அவரின் சீடரான ஸ்வாமி சித்பவாநந்தர், மாதா அம்ருதானந்தமயீ இவர்கள் எல்லாம் குருநாதர்களில்லையா. அல்லது ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களில்லையா, அல்லது இவர்கள் மக்களை இணைக்கவில்லையா, ஐயா?

    இத்துணை பெரியவர்களை குருநாதர்களாகத் தாங்கள் கருதாமை அடக்கத்தின் அலகீடா. அறிவுடைமை ஆகுமா?

    ஏசுபிரான் என்ற க்றைஸ்தவ தேவமைந்தனின் சரித்ர இருப்பை நான் விசாரிக்க விழைகிறேன். ஏசுபிரானையோ அல்லது இஸ்லாமிய இறைத்தூதரையோ மிகக் கவனத்துடன் எனக்குத் தெரிந்த வரை மிகச்சரியாக விளிக்க என் உத்தரங்களில் விழைந்துள்ளேன்.

    ஏசுபிரான் சரித்திரத்தில் இருந்தவரா என்பது வ்யாசத்தின் கருப்பொருள். அதை சரித்ர ஆய்வு ரீதியில் விசாரிக்கும் முறையை முதற்கொண்டு நான் பகிர்ந்துள்ளேன். அறிவு சார்ந்த விவாதத்தில் நாட்டம் உள்ள ஒருவர் வ்யாசத்தின் கருப்பொருளில் தன் விவாதங்களை ப்ரதானமாக வைத்து சார்புடைய விஷயங்களைக் குறைவாக வைப்பார். ஏசுபிரானின் ஜாதகக் கணிப்பு சம்பந்தமாக தாங்கள் முழுக்கவனம் செலுத்தாது பதிவு செய்த ஒரு விஷயம் தவிர தங்கள் முனைப்பு முழுவதும் விவாதங்களை கருப்பொருள் சாராது தடம் புரளச்செய்வதில் மட்டும் தானே இருந்துள்ளது ஐயா. இது நாகரீகமா?

    தாங்கள் ஆத்திர மேலீட்டால் விவாதத்தை தடம் புரள வைக்கும் முன் தீர்மானத்தால் வைத்த தங்களின் கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை கண்யம் குறையாது முன் வைத்துள்ளேன்.

    விவாதத்தில் விருப்பமிருந்தால் கண்யத்துடன் விவாதம் சார்ந்த கருப்பொருளை ஏற்குமாறு அல்லது அது தவறு என்று மறுக்கும் வண்ணம் சான்றுகளை முன்வைக்குமாறு பணிவன்புடன் விக்ஞாபிக்கிறேன்.

  18. Avatar
    K A V Y A says:

    //கருப்பொருளை ஏற்குமாறு அல்லது அது தவறு என்று மறுக்கும் வண்ணம் சான்றுகளை முன்வைக்குமாறு பணிவன்புடன் விக்ஞாபிக்கிறேன்.//

    விக்ஞாபித்தல் = விண்ணப்பித்தல்; வேண்டிக்கொள்ளுதல்.

    வேண்டிக்கொள்ளுதல் தவறில்லை. சரியே. ஆனால் தனிநபர் தாக்குதல் ஏன்? ஜெயபாரதன் இங்கே ஒரு விவாத பங்குதாரர் மட்டுமே. அவரின் தொழிலைப்பற்றி ஏன் குறிப்பிட வேண்டும்? என்னைப்பற்றியும் ரெவர்ண்டு என்று ஏன் சொல்லவேண்டும்? நான் என்ன கிருத்துவ பாதிரியா? கிருஸ்ணகுமார் கண்டாரா? தனிநபரைப்பற்றி எழுதும்போது கவனம் தேவை. பொய் சொல்லக்கூடாது. கருத்தைமட்டும் பேசவேண்டும். திரும்பத் திரும்ப விஞ்ஞானி என்ற கிண்டலேன்?

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \Very good, Krishnakumarji. Now you have discovered the fact. This Message is applicable for Jesus Christ also.\

    Respected scientist sir, the replies one write is but a mirror that reflects one’s knowledge or idea about it. You point above just demonstrate the grudge.

    விவாதத்திற்கு சம்பந்தமே இல்லாது கதைத்து விவாதத்தை தடம் புரளச்செய்வது என நீங்கள் கங்கணம் கட்டியுள்ளீர்கள். அந்த மாதிரி முன் முடிவுடன் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ளது மேற்கண்ட கருத்து.

    இருப்பினும் உங்கள் கவனத்துக்கு – நகராண்மைச்சான்றிதழ் இல்லாமலும் கூடஎப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன் இருந்தவர்களின் கால வரையரையை சரித்ர ஆய்வாளர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள் என்பது குறைந்த பக்ஷம் இந்த வ்யாசத்தை அல்லது ஸ்ரீமான் சீதாராம் கோயல் அவர்களின் புஸ்தகத்தை வாசித்தால் தங்களுக்குப் புரியலாம். தயவு செய்து அதற்குப் பின் விவாதத்தில் ஈடுபடவும். The dates of historical personalities are derived by historians by following some methodology and only when you talk something relevant as per such methodology, can there be any meaningful discussion.

    For christ sake, leaving your copy paste venture, you have not contributed a single sentence that would prove or disprove the historicity of Jesus as per methodologies followed by historians world over which are perused by interested readers.

    இந்த சரித்ர இருப்பை ஏற்க அல்லது மறுக்க நான் ஆறு விஷயங்களை 13ம் திகதி உத்தரத்தில் பகிர்ந்துள்ளேன். அதையும் ஒருமுறை வாசியுங்கள். அதில் ஏதும் தவறு இருந்தால் தெரிவிக்கலாம். இது முறையான விவாதத்திற்கு வழி வகுக்கும்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன், சங்கரர், ராமானுஜர், திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார் போன்றோரின் கால வரையரை சரித்ர ஆய்வாளர்களால் பல ஆதாரச்சான்றுகளை வைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட கால வரையரை விவாதங்களுக்கு உட்பட்டது.

    கிடைத்துள்ள சான்றுகள் ஏசு பிரானின் காலவரையர எது என்று நிர்ணயிக்க தோதாக இல்லை மாறாக ஏசுவின் உடன்பின் காலத்திய யஹூதிய மற்றும் பாகனிய சான்றுகள் ஏசு என்ற நபரைப் பற்றி ப்ரஸ்தாபம் கூட செய்யவில்லை. இது தான் ப்ரச்சினையே.

    கொஞ்சமாவது விவாதம் சார்ந்து ஏதும் கருத்துப்பதிய வேண்டும் என்றால் யஹூதிய மற்றும் பாகனிய சான்றுகள் யாவை என வாசியுங்கள்.

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் சிசு ஒன்று பிறக்கும் போது கால நேரத்தைப் பதிய அந்த நேரத்தில் அவ்விடத்தில் உள்ள கோள்களின் இருப்பும், கோணங்களும் ஜாதக உருவில் எழுதப்படும்.\

    இதை யாராவது இங்கு எதிர்க்கிறார்களா?

    விவாதம் ஜாதகம் கணிக்கப்பட்டதைப் பற்றி இல்லை

    விவாதம் நீங்கள் தகவல் நகலெடுத்த அன்பர் “assuming” என்கிறார்.

    ஏசுபிரான் சரித்ர நாயகன் தானா என்பதில் பைபளில் குறிக்கப்பட்ட நாள் நக்ஷத்திராதிகளை முன் வைத்து ஏசுபிரானின் birth chart கணிக்க முயலுபவர் எடுத்த எடுப்பிலேயே ஏசு சரித்ர நாயகனா என்பதைக் க்ள்விக்குறியாக்குகிறார். திண்ணமாய்ச் சொல்லாது “Assuming” என்று சொல்கிறார்.

    அடுத்து நாள் நக்ஷத்திராதிகளை வைத்து சரித்ர நாயகனை கனம் பண்ண விழைபவர் ஆதாரமாக எடுக்கும் ஆவணம் பைபள். அது க்றைஸ்தவர்களின் வேதம் என்பதை நான் மதிக்கிறேன். ஆனால் வ்யாசம் பைபள் என்பது சரித்ர ஆவணமா என்று கேழ்வி எழுப்புகிறது.

    ஆக “தாங்கள் முன் வைக்கும் கருத்தை எழுதியவருக்கும் ஏசு சரித்ர நாயகனா என்பதில் திண்ணமில்லை.

    அவர் எடுத்து முன்வைக்கும் ஆவணமாகிய பைபள் க்றைஸ்தவ வேதம் அல்லது புராணம் என கருதப்படலாமேயன்றி ஒரு சரித்ர ஆவணம் என கருத முகாந்தரம் இல்லை. ஆக நிரூபிக்க வேண்டிய கூற்றுக்கு இது வலு சேர்க்காது.

    ஏசுபிரானின் நீங்கள் கொடுக்கும் ஜாதகம் பைபளிலிருந்து derive செய்யப்பட்டுள்ளது. அதை சரித்ர பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின்,பைபள் ஒரு சரித்ர ஆவணம் என நிரூபிக்க வேண்டும்.

    இது சம்பந்தமாக மங்காசாரியன், சீதாராம் கோயல் இவர்களைத் தவிர வேறு யாரேனும் கூட எழுதியிருக்கலாம். அதைப் பகிர்ந்து கொள்வது கூட விவாதத்திற்கு பயனளிக்கும்.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    //To establish historicity of Jesus, you have to show source documents that are available either at the alleged historical life and times of Jesus or just thereafter. Do you know, when Jesus christ was alleged to be crucified and when Quran-e-sherif was available to the followers of Islam. //

    இதைத்தானே நானும் சொல்கிறேன். இயேசு கற்பனையா உண்மையா என்ற வாதத்துக்கு, எந்த ஆதிகாலக்குறிப்புகள் – பாசிட்டிவாக, அல்லது நெகட்டிவ்வாக – இருந்தாலும் சரி, உதவும். நானும் நீங்களும் ஒரே வழியில்தானே சொல்கிறோம்?

    Is that so, If you so believe, be on track and just concentrate on the facts put forth by both mangasarian and sita ram goel. Before declaring an evidence as false whether that is of mangasarian or goel, critically examine it and agree or disagree putting forth your reasons.

    And dont expect answers from me for any more redherrings.

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    Respected Devapriva Soloman, you might have observed that even educated elite here are in denial mode and are hell bent on derailing the discussion.

    Whereas, I have completely gone through the book of sita ram goel and a good lot of critical reviews agreeing with and rebutting his conclusions, I do esteem your vast knowledge on Holy Bible and biblical interpretations by respected theologians.

    your presence to the discussion is certainly adding value to a meaningful discussion. thank you for the same.

    Still, my suggestion, try to completely ignore redherrings by participants intentionally derailing the discussions.

  23. Avatar
    புனைப்பெயரில் says:

    கருவுறாமல் இயேசு பிறந்ததால் தான், கருக்கலைக்க கத்தலோகிக்க அரசு மறுத்து பெண்களை பரலோகம் அனுப்புகின்றதோ… ஆனால், என்ன ஐரிஷ் லேண்டில் மறுப்பதை இங்கிலாந்தில் கலைக்கலாம் … இது என்னத்தில் சேர்த்தி…

  24. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    புனைபெயரார் என்றொரு புலனாய்வு, திறனாய்வுத் தமிழ் மனிதர் தமிழகத்தில் எங்கு, எப்போது பிறந்தார் ? யாருக்குப் பிறந்தார் ? அப்படி ஒரு நபர் தமிழ்நாட்டில் வாழ வில்லை என்று எதிர்கால வராலாறு கூறப் போவது வருந்தத் தக்க செய்தி.

    நகராண்மையில் புனைபெயரார் பிறந்த பதிவுத் தேதி இருக்காது. திண்ணையில் வெளி வந்த அவரது படைப்புகள்தான் அவருக்கு ஆதாரமாய் பெயரில்லாத அவர் புனைபெயரார் என்று சொல்ல உதவும்.
    சி. ஜெயபாரதன்.

  25. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    //சி. ஜெயபாரதன் says:
    இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் சிசு ஒன்று பிறக்கும் போது கால நேரத்தைப் பதிய அந்த நேரத்தில் அவ்விடத்தில் உள்ள கோள்களின் இருப்பும், கோணங்களும் ஜாதக உருவில் எழுதப்படும்.//

    சிசு ஒன்று பிறக்கும் போது கால நேரத்தைப் பதிய -சுவிசேஷங்களில் முதலில் வரையப்பட்டது 70- 75 மாற்கு. மாற்கில் பிறப்பு பற்றி கதைகள் ஏது கிடையாது. இயேசு காப்பர்நகூம் பகுதியில் வாழ்ந்தவர்.
    இதனை அடிப்படையைக் கொண்டு மீதி மூன்றும் புனையப்பட்டது. 80 – 120 இடையே.

    இதிலும் ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ – லூக்கா முதல் அத்தியாயங்களில் மட்டுமே. குழந்தைப் புனையல்கள் (Infancy Narratives) எனும் இவற்றில் உள்ள எழுத்து நடை மீதமுள்ள நடையினும் மாறுகிறது.

    ஏசுவை நாசரேத் ஊர்க்காரன் – எனவும் – பெத்லஹெமில் பிறப்பு எனக் காட்ட = மத்தேயுபடி பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வாரிசு இயேசு- ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, ஜோசியர் நட்சத்திரக் கதையினால் எகிப்து சென்று நாசரேத் வருவதாகக் கதை- மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹெம் வருவதாகக் கதை.

    நட்சத்திரக் கதை- பெரிய ஏரோது காலத்தில்; மக்கள் தொகை கணக்கெடுப்பு 12- 13 ஆண்டு பின்பு- இதை சற்றே விளக்குங்கள்.

    சுவிசேஷங்களின் கதாசிரியர்கள் எந்த அளவிற்கு உண்மையை சொன்னார்கள்.
    நான்காவது சுவி யோவனின்படி- இயேசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடமும் மேலும் சில நாட்களும், அதிலும் கடைசி 7 – 8 மாதங்கள் யூதேயா – ஜெருசலேமில் தான். (3 பண்டிகைகள் கூடாரம், மறு அர்ப்பணிப்பு, பஸ்கா என செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை). மாற்குபடி, ஏசு சீடரோடு இயங்கிய காலம் 1 வருடத்திற்கும் சில நாட்கள் குறையும், அதிலும் கடைசி 4- 5 நாட்கள் மட்டுமே யூதேயா – ஜெருசலேமில், மீதம் முழுமையும் கலிலேயாவில். இதை மத்தேயு – லூக்கா மாற்றாது தருகின்றனர்.

    இயேசு சீடரோடு இயங்கியது எத்தனை நாள்- எங்கே இயங்கினார் தெரியாது. ஒன்றை ஏற்றால் மற்றது பொய்- அல்லது இரண்டுமே பொய்யா
    ஜெயபாரதன் -காவ்யா அமலன் பெர்நாண்டோ விளக்கட்டுமே

    1. Avatar
      K A V Y A says:

      என் விளக்கம் இதுதான். ஏற்கனவே சொல்லப்பட்டது:

      தேவப்பிரியா சாலமன் தன் வியர்வையையும் உழைப்பையும் வேறு உதவும் விஷயத்தில் செலவிட்டால் தனக்கிருக்கும் ஸ்டாமினாவை நல்வழியில் பயனப்டுத்த்வதாக முடியும்? ஏன் இந்த வாழ்க்கை விரயம்?

      மதங்கள் என்றெடுத்தால், அவை இன்று நேற்று தோன்றியவையல்ல. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் தோன்றியவை. கிருத்துவமும் இசுலாமும் இந்தியாவுக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. இம்மதங்களில் இருப்போர் எண்ணிக்கை கோடிக்கணக்கில். ஆனால் இவர்கள் மூதாதையர் இந்துக்கள்.

      எக்காரணங்களுக்காக இந்து மதத்தைவிட்டு விலகினரோ அவை இன்னும் இருக்கின்றன. மட சேனாவும் சிரிரங்கத்தை ஒரு பார்ப்பனரைப் பல்லக்கில் வைத்து தூக்குவதும், ஆகமங்கள் எங்களைத்தான் பூஜாரிகள் எனச்சொல்கின்றன’; இந்துமதப் போர்வையப் போர்த்திக்கொண்டு தன் ஜாதியை வளர்ப்பதும் போன்று ஏகப்பட்ட பார்ப்பனீய ஏற்றம் இன்னும் அழியாமலிருக்கின்றன. இத்தளத்திலும் அதை வலுப்படுத்தி கட்டுரைகள் இந்துக்களாலேயே போடப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறோம்.

      புராணப் புரட்டுக்கள் என்று எடுத்தால், பார்ப்ப்னர்கள் செய்யதவை மற்றமதப் புரட்டுக்களை புரட்டிப் போட்டுவிடும். கந்தபுராணத்தில், மஹாபாரதத்தில், இராமாயணத்தில் இல்லாதவையா? அவற்றை நாத்திகர் மட்டுமா சொன்னார்? பக்கா இந்துக்களும் சொன்னவர்தானே? இனறும் தமிழ் ஹிந்து காமில் ஜடாயு என்பவர் மனு சுமிர்த்தியைத் தாக்கியும் அரவிந்தன் நீலகண்டன் டிவிட்டரில் மகாபெரியவாளில் ஜாதிப்பற்றைத் தாக்கியும் எழுதுகிறார்களே? வீரமணியா எழுதினார்?

      ஆக, இந்துமதம் இன்னும் தன் அழுக்குக்களைத் துடிக்கவில்லையென்பதை விட, அவற்றைத் துடைக்க அவர்களுக்குள்ளேயே எதிர்ப்பு இருக்கிறதே? அரவிந்தன் நீலகண்டனை விமர்சித்து ஒரு பார்ப்ப்னர் கடுமையான பிளாக் போஸ்டை போன வாரம் எழுதி தமிழமணத்தில் வெளியானதே? பாரதியாரே, ‘கந்தபுராணத்திலில்லா புரட்டா? என்று நக்கலாகக் கேட்கிறார்.

      ஆக, என் இறுதிச் சொல் இதுவே: எல்லா மதங்களுக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று நல்லது; இன்னொன்று கெட்டது. நான் ஹிந்து. நல்லதை ஏற்கிறேன். நல்லவிட்யங்கள் எவரிடமிருந்தாலும் வரவேற்றுப்போற்றி வாழுதல். மத நல்லிணக்கம்.

      என் வீட்டுக்கதவைப் பூட்டிக்கொண்டு நான் வாழ முடியாது. வெளிவந்து பிறருடன் சேர்ந்து வாழத்தான் செய்யவேண்டும். அதுவே இறைவன் கட்டளையுமாகும். அவ்வெளியிருக்கும் கிருத்துவரின் இசுலாமியரின் நம்பிக்கைகளை நான் பகடி பண்ண வாழமுடியுமா? என மதம் எனக்கு. அவர் மதம் அவருக்கு என்பதுதானே வாழ்க்கை?

      அவரிருக்கக் கூடாது? அவர் கடவுளை அவர் நம்பக்கூடாது? அஃதெல்லாம் பொய என்றால் அவரும் நும் கடவுளைப்பற்றியும் அப்படிச்சொன்னால் தவறாகுமா?

      இதை தேவப்பிரியா யோசிக்க வேண்டும்! சுவிசேசிகளோ மிசுநோரிகளோ போலியான வாக்குகளை நம்பிக்கைக்களாகக் கொடுத்து ஏமாற்றினால், அதற்குப்பதில் கிருத்த்வமே ஒரு புரட்டு என்பதா பதில்? அவர் அம்மதத்தை வைத்து மக்களை ஏமாற்றிப்பிழைக்கிறார் என்று சொன்னால் போதுமே?

      1. Avatar
        K A V Y A says:

        அப்படியே கிருத்துவ மதத்தையே போலி என்று வாதங்களை தேவப்பிரியா வைத்தால், ஏன் அவர் அக்கிருத்துவ அறிஞர்களோடு பொது மேடையில் மோதக்கூடாது? அதை தொலைக்காட்சியில் காட்டக்கூடாது? பழங்காலத்தில் மத விவாதங்கள் பொதுவிடங்களில் நடன்தனவென்றும் வென்றவருக்கு அரசனே பரிசுகள் கொடுத்தானென்றும் படிக்கிறோமோ? தேவப்பிரியா ஒரு ப்ரைவேட் ஸ்போன்சோரைப் பிடித்து தொலைக்காட்சியில் கிருத்துவ அறிஞர்களோடு விவாதமேடை அமைக்கட்டும்.

        அண்ணாத்துரை அப்படியொரு மேடையை சென்னைப்பலகலைக்கழகத்தில் இரா பி சேதுப்பிள்ளையோடு வைத்தார். அவ்வாதங்கள் இன்று ‘தீ பரவட்டும்’என்ற நூலாகக் கிடைக்கிறது.

        என்னைப் பொருத்தவரை, தேவப்பிரியா தனக்கு இறைவன் கொடுத்த அரிய வாழ்க்கையை வீணாக்குகிறார். எழுதக்கூடாதென்று சொல்லவில்லை. அதைச்சரியாக, சரியான இடத்தில் செய்யவும் என்றுதான் சொல்கிறேன். குறுக்குத்தனமாக, குறும்புத்தனமாக, எதிரிகளே இல்லாத சபையில் பேசுவது தவறு.

        Be bold. Challenge the Xian international scholars. Release the challenge through internet and other media. Or, take up ur case in the international parliament of Religions or any such international forum. Establish ur case beyond doubt. Then ask all Xians to join your religion. This is straightforward.

        Or just cleanse ur own religion: drive out the casteists and others who abuse the religion for the welfare of their own group. In a demoractic and non-theocratic society, people go anywhere and you cant stop them. Their choice will prevail.

        1. Avatar
          K A V Y A says:

          After browsing certain blog posts in Devapriya’s site, and also, occasionally reading the essays and the comments in Tamilhindu.com, what wells up in me is intense agony for the writers. Full of hatred, animosity, bad words, their writings, they assume, are about God, or defends Hindu religion. U cant defend a religion by offending other religion. If ur religion is truely godly according to u, it shd stand on its own. Why does it need ur crutches ?

  26. Avatar
    Dr.G.Johnson says:

    இன்று உலகமுழுதும் வருடங்களை எப்படி கணக்கில் கொள்கிறோம்? உலக வரலாறுகள் எதை பின்னணியாக காலத்தைக் குறிக்கின்றன? ஏசுவிற்கு முன் எசுவிற்குப் பின் என்றுதானே? இது ஆங்கிலேயேர்களின் ஆதிக்கத்தால் உண்டானது எனக் கூறினாலும், நீங்கள் எல்லாம் இதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்? ஏசு என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை வைத்து வருடங்கள் கூறப்படுவதை எங்களால் ஏற்க முடியாது, இது இந்திய நாடு, நாங்கள் அறிவிலும் ஆராய்ச்சியிலும் குபேரர்கள்,என்று கூறி, வேறு சரித்திரப்பூர்வமான கடவுள்களின் பெயரைப் பயன்படுத்தி ஆண்டுகளைக் கணக்கில் கொள்ளலாமே? இதற்காக ஐக்கிய நாடு சபையிலும் போராடலாமே? அதைச் செய்யாமல் இங்கே வாதிட்டு என்ன பயன்? …டாக்டர் ஜி.ஜான்சன்.

  27. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள ஜான்சன்,
    இப்போது உலகம் கிமு கிபி என்று பயன்படுத்துவதில்லை. bc ce என்று உபயோகப்படுத்துகிறார்கள். அதாவது before common era, common era என்று அர்த்தம்.

    பல மதங்கள் myth களால் உருவானவை. myth என்பது gilgamesh, கில்கமேஷ் போன்ற காப்பியங்களால் உருவானவை. இவை மக்களின் அபிலாஷைகளை அவர்களது புராதன கருத்துக்களுக்கு உருவம் கொடுத்து எழுதப்பட்டவை.

    விவிலியத்தில் யாஹ்வே என்ற யூதர்களது குலதெய்வம் 7000 வருடங்களுக்கு முன்னால் பூமியை படைத்தது என்று யூதர்கள் எழுதி வைத்தார்கள். அவர் உருவாக்கிய முதல் மனிதனிலிருந்து ஆரம்பித்து அவரவர் குழந்தைகளை பட்டியல் போட்டார்கள். அந்த யாஹ்வே மேரி என்ற பெண்ணோடு சேர்ந்து இயேசு என்ற யாஹ்வேயின் மகனை பெற்றெடுத்தார் என்று இயேசுவை வணங்குபவர்கள் எழுதிகொண்டார்கள்.

    இதே போல ஜீயஸ் என்ற கிரேக்க கடவுள் ஒரு மனிதப்பெண்ணோடு சேர்ந்து ஹெர்குலிஸ் என்ற மகனை பெற்றெடுத்தார் என்று கிரேக்கர்கள் நம்பினார்கள் ஹெர்குலிஸுக்கு ஏராளமான கோவில்களை கட்டினார்கள். அந்த கோவில்களை இன்னமும் பார்க்கலாம்.

    கிரேக்கர்கள் நம்மை ஆண்டிருந்தால் நீங்கள் ஹெர்குலிஸை கும்பிட்டிருக்கலாம். மற்ற இந்துக்கள் இதே போல அது ஒரு புராணக்கதை, அதனை உண்மை என்று நம்புகிறீர்களே என்று கேட்கலாம். நீங்கள் இதே போல மறுப்பு எழுதியிருக்கலாம்.

  28. Avatar
    K A V Y A says:

    //கிரேக்கர்கள் நம்மை ஆண்டிருந்தால் நீங்கள் ஹெர்குலிஸை கும்பிட்டிருக்கலாம். மற்ற இந்துக்கள் இதே போல அது ஒரு புராணக்கதை, அதனை உண்மை என்று நம்புகிறீர்களே என்று கேட்கலாம். நீங்கள் இதே போல மறுப்பு எழுதியிருக்கலாம்.//

    குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்து மதத்திலும் புராணப்புரட்டுக்கள் உள என்றும் அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டலாமென்றும் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    இங்கும் புரட்டு; அங்கும் புரட்டு என்றால், ஏன் ஒருவர் சொன்னதை இன்னொருவர் நீர்தான் புரட்டு என்று சொல்வார்? இன்றைய தமிழகத்தில் தி கதான் இந்துமதப்புரட்டுக்களைப்பற்றிப் பேசுகிறது. அவர்களிடம் சென்று பிறமதப்புரட்டுக்களைப்பற்றியும் பேசுங்கள் எனலாம். பொதுக்கிருத்துவரிடம் இசுலாமியரிடம் ஏன் கேட்கிறீர்கள்?

    தங்கமணி இந்துமதத்தைப் புரிந்தவரா என்பது எனக்கு ஐயம். இந்துமதப் பெரியோர்கள் எல்லாரும் புராணங்களை ஏற்பதில்லை. அவைகளில் ஏகப்பட்ட புரட்டுக்கள் உண்டு என்பது நன்கு தெரியும். அவர்கள் சொல்வதென்னவென்றால், இப்புரட்டுகளை வைத்து இந்து மதம் இல்லை. இந்துமதமென்றால் அதையும் மீறி என்று அவற்றை விளக்குகிறார்கள். அதற்காகத்தான் நான் ஹிந்துவாக இருக்கிறேன். அவர்களும் இருக்கிறார்கள். அதே வேளையில், புராண‌ங்க‌ள் முழுக்க‌ புர‌ட்டுக‌ள‌ எனாம‌ல், அவ‌ற்றிலுள்ள‌ வாழ்க்கைக்குத‌வும் உண்மைக‌ளை அவ‌ர்க‌ள் நிராக‌ரிக்க‌வில்லை. த‌ங்க‌ம‌ணி, க‌ண்டிப்பாக‌ திருச்சி க‌லியாண‌ராம‌னின் இராமாய‌ண‌ கதாகால‌ட்சேப‌ங்க‌ளைக் கேட்டால் நான் சொல்வ‌து புரியும். அவ‌ர் இவ்விதிகாச‌க்க‌தைக‌ளைச் சொல்லிவிட்டு அத‌ன் உட்பொருள் என்ன‌ என்றும் விள‌க்கி, அதை எப்ப‌டி நம் வாழ்க்கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ல‌ம்பெற‌ வேண்டுமென்றும் சொல்வார்.

    இந்தப்புரட்டுகளை ஒரு இன்டலுக்சுவலாகவும் பார்க்கலாம். இங்கிலீசில்.

  29. Avatar
    தங்கமணி says:

    கிறிஸ்துவம் ஒரு புரட்டு என்பது தேவப்பிரியா மட்டும் சொல்வதல்ல.
    ஆல்பர்ட் ஸ்வைட்ஸரிலிருந்து ஏராளமானவர்கள் சொன்னதுதான்.

    இப்போதும் கூட பல இணைய தளங்கள் இருக்கின்றன
    http://jesusneverexisted.com/
    இந்த தளம் ஆதாரப்பூர்வமாக இயேசு, அவரது சீடர்கள் ஆகியோர் இருந்திருக்கவே முடியாது என்று கூறுகிறது.

    இயேசு என்பது ஒரு கற்பனைக்கதை என்பதை ஆதாரப்பூர்வமாக R G Price எழுதிய ஆய்வு நூல் நிறுவுகிறது.

    http://rationalrevolution.net/articles/jesus_myth_history.htm

    http://www.lulu.com/shop/rg-price/jesus-a-very-jewish-myth/paperback/product-2079912.html

    இயேசு என்பது கற்பனை கதை என்று ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

    Charles-François Dupuis
    Constantin-François de Volney
    Godfrey Higgins
    Robert Taylor
    Bruno Bauer
    Edwin Johnson
    Thomas Whittaker
    Willem C. Van Manen
    G.J.P.J. Bolland
    G. A. van den Bergh van Eysinga
    Elizabeth Edson Evans
    Albert Kalthoff
    John MacKinnon Robertson
    William Benjamin Smith
    M. M. Mangasarian
    Arthur Drews
    Alfred Jeremias
    Paul-Louis Couchoud
    L. Gordon Rylands
    Edouard Dujardin
    Joseph Wheless
    Alvin Boyd Kuhn
    George Albert Wells
    Alvar Ellegård
    Timothy Freke and Peter Gandy
    Thomas L. Thompson
    Robert Price
    Frank Zindler
    Tom Harpur
    Earl Doherty
    Richard Carrier
    Rene Salm

    எர்ல் டோஹர்ட்டி எழுதிய ஜீஸஸ் பஸ்ஸில் (Jesus Puzzle) என்ற புத்தகம் மிகவும் ஆதாரப்பூர்வமாக இயேசு கதை ஒரு கற்பனை கதை என்று நிறுவுகிறது.
    http://jesuspuzzle.humanists.net/home.htm
    http://www.amazon.com/Jesus-Puzzle-Christianity-Challenging-Historical/dp/096892591X/ref=sr_1_2?s=books&ie=UTF8&qid=1353082264&sr=1-2

      1. Avatar
        K A V Y A says:

        This I shall explain at length if a chance falls on me, taking it from A N Wilson’s Jesus – he not only called the miracles untrue but also, the virgin birth impossible. And after writing the book, he remains steadfast a Xian because, according to him, one can b a Xian w/o believing many things.

        1. Avatar
          தங்கமணி says:

          AN Wilson தான் உங்களது ஆதர்சமா? அவர் என்ன சொன்னாலும் ஏற்றுகொள்வீர்களா? ஒரு கிறிஸ்துவன் அற்புதங்களை மறுத்துவிட்டு எந்த அடிப்படையில் இயேசுவை யூதர்களது யாஹ்வே என்ற குலதெய்வத்தின் மகன் என்று ஏற்றுகொள்ளமுடியும்?

          அப்புறம் ஒரு சாதாரண மனிதனுக்கும் இயேசுவுக்கும் என்ன வித்தியாசம்?

    1. Avatar
      K A V Y A says:

      U have worked hard to keep the list; but the list misses some great names like Russel. He wrote: Why I am not a Christian? Why did u forget him ? And the great philosopher Nietzhe who opined that Chrisitianity is a debilitating religion. U shd include him also.

      1. Avatar
        தங்கமணி says:

        நீட்ஷேவோ ரஸ்ஸலோ இயேசு ஒரு கற்பனை என்று எழுதவில்லை. நீட்ஷே இயேசுவை வெறுத்தார். ரஸ்ஸல் நாத்திகவாதி. இயேசு இருந்திருந்தாலும் அவர் கடவுளல்ல என்று கருதினார்.
        மேலும் இந்த லிஸ்ட் என்னுடையதல்ல. விக்கிபீடியாவிடனுடையது.

        1. Avatar
          K A V Y A says:

          We must thank wikipedia for that. The objective of u, Devapriya, Krishankumar s to say that Xianity is a hoax (as there s no Xianity if there s no Jesus). And further, thereby, to maintain that the religion shd end. Russel and Nietze want the same objective to be realised in their own way. But they dont have further objectives beyond that. They r philosphers and their aim s only to rationalise the abstract ideas; and if they cant b rationlised, to call them hoax.

          Ways differ; objective is same. But I prefer them to u as they dont have any other ulterior motive except being philosophical and they argued interestingly. U dont even know how to write readably.

  30. Avatar
    K A V Y A says:

    As all of us knows quite well, the religions r centuries old esp. Hinduism, Judaism. The societies, in which they appeared and flourished, were utterly primitive. The intellectual development then was inchoate. Rational thinking was feared at. (Even now :-)) People believed in fear and wanted miracles to save them from diseases and natural calamites; and villains to face gory deaths.

    Such soceities will no doubt produce mythologies, glorifying blood, thunder and deaths; and raise the characters therein to Godheads. At the time, it was loved, and believed. People felt safe.

    Now, we stand in an altogether different world millennia away. It is wrong to see the mythologies from our place, perspective and time and to call them foolish and childish and cruel. Take it from me: they served a purpose – which I daresay, – noble mostly. And it will serve the same purpose if only u r mature enough to handle them. R u upto the mark?

  31. Avatar
    தங்கமணி says:

    இந்து மதத்தில் இரண்டு பிரிவு உண்டு. ஒன்று இதிஹாசம். அது வரலாறு. மற்றொன்று புராணம். அது உட்பொருளை விளக்க சொன்ன கதை.
    இதிஹாசங்களில் நம் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடிய விஷயமும் உண்டு. அது இறைவனின் அவதாரமே ஆனாலும் தவறு செய்ததை சொல்லி விமர்சிக்கும் இடம். ஏனெனில் அது நடந்த நிகழ்வு. அதில் கர்ணனுக்கும் ஏகலைவனுக்கும் நிகழ்ந்த சோகமும் சொல்லப்படும். அர்ச்சுனனின் வீரமும் சொல்லப்படும்.

    ஆனால், ஒரு புராணக்கதையை வரலாறு என்று நம்பவைத்து ஏமாற்றி அது யாஹ்வெ என்ற யூதர்களது குலதெய்வத்தின் மகன் என்று ஒருவர் வரலாற்றில் இருந்தார் என்று பிலிம் காட்டினால் அது புரட்டு.

    1. Avatar
      K A V Y A says:

      அவரகள் பிலிம் காட்டுவது புரட்டாகவே இருக்கட்டும்.

      உங்கள் சொற்களின்படி இந்துப்புராணங்களில் புரட்டேயில்லையா?

      இருவகையிருப்பதை நான் சொல்லவில்லை.

      அதைத்தாண்டி புரட்டேயில்லையென்கிறீர்கள். உண்மையாகவேயா ?

      இயேசு மரியாளுக்காவது பிறந்தாளென்று எழுதினார்கள். ஆண்டாள் பிறக்கவேயில்லையென்றுதானே எழுதியிருக்கிறார்கள்?

      அதை விவாதம் செய்யப்போவதில்லை. ஏனென்றால் அஃது அவர்களின் நம்பிக்கை. தலையிட நாம் ஆர்? ஆனால் உங்களிடம் தலையிடலாம். அது புரட்டன்று; இதுவே
      புரட்டென்கிறீர்களே எப்படி தங்கமணி?

      புரட்டு என்ற சொல்லே இங்கு தேவையில்லை. விதவிதமான நம்பிக்கைகள் அவ்வளவுதான் தங்கமணி. ஒருவர் நம்பிக்கையை சரிதான் என்றும் இன்னொருவன் நம்பிக்கையை புரட்டு என்பதையும்தான் நான் உண்மையான புரட்டென்கிறேன்.

  32. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of
    Church History at Oxford
    “The speeches in the Fourth Gospel (even apart
    from the early messianic claim) are so different from
    those in the Syoptics, and so like the comments of
    the Fourth Evangelist both cannot be equally reliable
    as records of what Jesus said : Literary veracity in
    ancient times did forbid, as it does now, the assingment
    of fictitious speeches to historical characters:
    the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
    ————————————
    1. C.J. Cadoux: The Life of Jesus, p. 16.

    அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார். “ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை”- The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork .

    மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின் வருமாறு சொல்லுகிறார்-

    “ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook for the Gentile mission around AD50.- P-25.

    Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின் வருமாறு சொல்லுகிறார்-
    “If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
    4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
    நம்மிடம் மாற்கு சுவி மட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போது மட்டுமே ஜெருசலேம்வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவியோ வேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும் பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச் சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.

    சொன்ன பேராசிரியர்கள் அனைவரும் மழுப்பலாளர்களெ- வாழ்நாள் முழுதும் பைபிளை போதித்தவர்கள்.

    ஜோ அமலன் காவ்யா பெர்னாண்டோ பதில் தரட்டுமே- என் வலைப்பூவில் எவ்வித மட்டுறுத்தலும் இல்லை. அல்லது அவர் தளத்தில் பதிலிற்கும் தயார்.

    கட்டுரைத் தலைப்பிற்கு பேசாது – கோடிக்கணக்கோனர் நம்புவதால் ஏதும் உண்மை ஆகாது, நான் சொல்வதில் தவறு இருப்பின் பைபிள் துணையோடு பதில் தர்வும்- காவ்யா தனிநபர் தாக்குதல் தேவை இல்லை.

      1. Avatar
        தங்கமணி says:

        நோபிள் காலிங் உள்ளவர் இந்த ரிலிஜியஸ் பிக்கரிங்கில் வந்து கூவுவது ஏனோ?

        1. Avatar
          K A V Y A says:

          சிவபெருமான், திருமால், பிள்ளையார், முருகன் போன்றவர்கள் கடவுள்கள். ஆழ்வார், நாயன்மார்க்ள் கடவுளரா? மனிதர்கள்தானே?

          திருநாவுக்கரசர் பாம்பு கடித்து இறந்த குழந்தையை உயிர்ப்பிக்கலாம். இயேசு ஏன் ஒரு இறந்த பெண்ணை உயிரிப்பிக்கக்கூடாது? திருமழிசையாழ்வார் மற்ற ஆழ்வார்களோ ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கக்கூடாது? சம்பந்தருக்கு கடவுள் வந்து முலைப்பால் புகட்டலாம். சம்பந்தரும் நாவுக்கரசரும் மனிதர்கள்தானே? இயேசுவுக்குமட்டும் ஏன் வெர்ஜின் பர்த இருக்கக்கூடாது?

          அவர் கற்பனையென்றவர்கள், ஏன் இவர்களையும் கற்பனையென்று சொல்லவில்லை? இதுதான் என் கேள்வி. ஏனென்றால், நான் இங்குமில்லை; அங்குமில்லை. ஓரவஞ்சனையை மட்டும்தான் காட்டுகிறேன்.

        2. Avatar
          K A V Y A says:

          இரண்டையும் கற்பனையென்று சொல்லல் கூவுவதல் கிடையாது. ஒன்று கற்பனை; மற்றொன்று இல்லையென்பதே கூவுதல். அதை மனசாட்சியே இல்லாமல் நீங்கள் செய்கிறீர்கள். சுட்டுக்காட்டத்தான் விவாதம். You shd b able to distinguish me from others. If a Xian writes on Hinduism calling it nuts full of cock and bull stories aimed at gullible masses, I will ask him: What about ur religion Mr? Is it all true ?

          But you will ask such qn only in r/o Xianity and Islam, completely sweeping under the carpet the dust of your religion. Ppl cant b so easily cheated, at least here, in this forum.

          The brutal fact, Thangamani, is that when it comes to religions, millennia have passed and they have acquired many many accretions. For e.g many Hindus strongly believe that mischief mongers wrote Manusmriti to tarnish Hinduism. Read the great religious scholar alive with us Mr Jadayu in Tamil Hindu com.

          The religions thus become dirty. All religions. Islamists cant claim to be pure. TN has many many graves built for dead persons where the muslims pray. Thus TN muslims violate the corner stone of Islam: Monotheism.

          But the believers dont care. Rational religionists (I am one) can still be in the religion rejecting certain beliefs and accepting what is possible. Because the core remains. We want to be benefited with the core only.

          At the same time, we cant teach others what they shd believe and how they shd. Still we can interfere when brazen cheating goes on in the name of belief and the innocent are robbed of their money and bear physical sufferings – as in Ervadi Durgah, the mentally ill are chained for decades. Someone complained to HR commission and the then Chairman of that Commission Karthikeyan came and saw. Examples in your religion of how to cheat masses are not a few. So also there are instances of Xian priests plundering and pillaging, wining , dining and womanising. Not now. Ever since the schism occurred in 16th century. Devout Xians are complaining,complaining and complaining.

          This being the stark reality, why to single out only one religion as your target? I dont do that; but u call me ‘crying hoarse” kuuvuthal! U r being naughty !

    1. Avatar
      K A V Y A says:

      //நான் சொல்வதில் தவறு இருப்பின் பைபிள் துணையோடு பதில் தர்வும்//

      Direct the question to a Bibilical scholar. I have not read the Bible except in parts for the purpose of English improvement.

      This is the summom bonum of my earlier longish reply to u. Challenge Bibilical scholars. Havent u read that Sir?

  33. Avatar
    தங்கமணி says:

    ஆண்டாள் பற்றிய விவாதத்தை ஆண்டாள் பற்றிய கட்டுரையோடு வைத்துகொள்ளலாம். இது இயேசு பற்றிய கட்டுரை. ஆகவே இயேசுவை விவாதிக்கலாம்.

    //அவரகள் பிலிம் காட்டுவது புரட்டாகவே இருக்கட்டும். //
    ஆமாம் புரட்டுதான்.

    //உங்கள் சொற்களின்படி இந்துப்புராணங்களில் புரட்டேயில்லையா? //
    இந்து புராணம்தான் தன்னை தானே ஒரு கதை என்று சொல்லிக்கொள்கிறதே. பிறகென்ன புரட்டு? சிவகாமியின் சபதத்தில் ஆயனர் என்ற கற்பனை கதாபாத்திரம் வருகிறது. சிவகாமி என்ற பாத்திரமே கற்பனை. ஆனால் பல்லவர் காலத்திய சிலை இருக்கிறதே. பிறகு எப்படி ஆயனரும் சிவகாமியும் கற்பனையாக இருக்கமுடியும் என்பது போன்ற வாதமே இங்கே நடத்தப்படுகிறது.

    //
    இருவகையிருப்பதை நான் சொல்லவில்லை. //

    எல்லாரும் சொல்கிறார்கள்

    //அதைத்தாண்டி புரட்டேயில்லையென்கிறீர்கள். உண்மையாகவேயா ?//

    இதிகாசமும் வரலாறு என்றாலும், அவற்றை எழுதியவர்கள் அதனை காப்பியங்களாகத்தான் வடித்தார்கள். ஆகையால் அவற்றை ஒரு செய்தித்தாள் போல எழுதியிருக்கமுடியாது. ஆனால் நிகழ்வுகள் உண்மை என்றுதான் இந்துக்கள் நம்புகிறார்கள்.

    //இயேசு மரியாளுக்காவது பிறந்தாளென்று எழுதினார்கள். ஆண்டாள் பிறக்கவேயில்லையென்றுதானே எழுதியிருக்கிறார்கள்? //
    அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? சென்ற நூற்றாண்டு கிறிஸ்துவர்கள் போல, விமர்சனம் மாற்று கருத்து சொல்லும் இந்துக்களை நெருப்பில் வைத்து எரிக்கவா வேண்டும்?

    //அதை விவாதம் செய்யப்போவதில்லை. ஏனென்றால் அஃது அவர்களின் நம்பிக்கை. தலையிட நாம் ஆர்? ஆனால் உங்களிடம் தலையிடலாம். அது புரட்டன்று; இதுவே
    புரட்டென்கிறீர்களே எப்படி தங்கமணி?//

    ஏனெனில், யூதர்களின் குலதெய்வமும் அந்த குலதெய்வத்தின் மகன் மட்டுமே உண்மை என்றும் இந்து மதம் பொய் என்றும் தெருத்தெருவாகவும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான பணம் செலவு செய்து கூவுகிறார்கள்.

    //புரட்டு என்ற சொல்லே இங்கு தேவையில்லை. விதவிதமான நம்பிக்கைகள் அவ்வளவுதான் தங்கமணி. ஒருவர் நம்பிக்கையை சரிதான் என்றும் இன்னொருவன் நம்பிக்கையை புரட்டு என்பதையும்தான் நான் உண்மையான புரட்டென்கிறேன்//
    தாராளமாக வைத்துகொள்ளுங்கள். இப்படி காசு கொடுக்காமலேயே புரட்டுகளுக்கு ஆதரவாக கூவுவதைத்தான் நான் புரட்டு என்பேன்.

    1. Avatar
      K A V Y A says:

      ஏனெனில், யூதர்களின் குலதெய்வமும் அந்த குலதெய்வத்தின் மகன் மட்டுமே உண்மை என்றும் இந்து மதம் பொய் என்றும் தெருத்தெருவாகவும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான பணம் செலவு செய்து கூவுகிறார்கள்.//

      Truth. U can point out that. Their mistake is to criticise other religion. It is wrong as already explained by me.

      1. Avatar
        தங்கமணி says:

        அதனைத்தான் இங்கே பாயிண்ட் அவுட பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

        1. Avatar
          K A V Y A says:

          செய்பவர்கள் யார்? திருநாவுக்கரசர் இறந்த பெண்ணை உயிர்ப்பித்தாரே அது கற்பனையா அல்லது உண்மையா என்பதை மறைத்து, இயேசு கற்பனையே என்பதை சாதிக்க நினைக்கும் இந்துத்வாவினர்தானே? தன் பிளாக்கில் பெரியபுராணம் உண்மையென்றும் இயேசு பொய்யென்றும் எழுதும் பிரியாதானே? 64 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் மனிதர்கள். இல்லையா? அவர்களைப்பற்றி ஏன் மறைக்கிறீர்கள்? கிருத்துவரோ, இசுலாமியரோ அவர்களைப்பற்றி கட்டுரை போடமாட்டார்கள். திண்ணையில் அவர்கள் உங்களைவிட பெட்டர். இயேசுவையும் முகமது நபிகளையும் பற்றித்தான் மொழிபெயர்ப்பு கட்டுரைகள். பிரியாவின் பிளாக், கிருஸ்ணகுமாரின் ஹிந்து காமின் பின்னூட்டங்களும், உங்கள் பின்னூட்டங்களும், திருக்குரானை, கூரான் என கிண்டலடித்து எழுதும் புனைப்பெயரில் என்பவரின் நக்கல்களும் எதைக்காட்டுகின்றன? ஆராய்ச்சி என்ற தாஹமா? தமாஸ் பண்ணாதீர்கள் தங்கமணி.

      2. Avatar
        தங்கமணி says:

        கிறிஸ்துவ மதம், இஸ்லாம் ஆகிய ஆபிரஹாமிய மதங்கள், மற்ற மதங்களை பொய் என்று சொல்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும்போது, அதனை பிரச்சாரம்செய்பவர்கள் அதனை சொல்லாமல் எப்படி இருக்கமுடியும்?

        1. Avatar
          K A V Y A says:

          It s wrong to offend other religions to defend urs – as already written here by me.

          But with a rider (also said already). Anyone can cite or interfere when masses are cheated in the name of religions

        2. Avatar
          K A V Y A says:

          நானறிந்தவரை திண்ணையில் இந்துமதம் பொய்யென்று கட்டுரைகள் வரவில்லை. அம்மதத்தையும் தெய்வங்களையும் இழிசொல்லால் கண்டிக்கும் கட்டுரைகள் இல்லை. தற்போது நடக்கும் சுவிசேச கூட்டங்களோ, தமிழன் டிவியில் இரவில் வரும் இசுலாமைப்பற்றிய பிரசங்கங்களோ, இந்துமதத்தூடனை செய்யவில்லை. மிசுநோரிகள் செய்தார்கள். எழுதினார்கள். இன்றில்லை. இன்று அவர்கள் மதத்தையும் விவிலிய வாசங்களுக்கு நீண்ட பொழிப்புரைகளும், இயேசு அதைச்செய்வார்; இதைச்செய்வார் என்று மட்டுமே பேசுகிறார்கள்.

          இந்துமதத்தூடனை நின்று விட்டது. அவர்கள் இப்படிச்செய்வதன் காரணம் வெறும் சட்டம் பாயும் என்பதற்காகன்று: இந்துமதத்தைத் தூடணை பண்ணினால் தம் மதம் மக்களிடம் போய்ச்சேராது என்று நினைத்திருக்கலாம். அஃது உண்மையும் கூட.

          ஒருவர் தன்மதத்தைப் நன்கு புரிந்து ஆழங்கால் பட்டு அம்மதவாழ்க்கையை வாழ்ந்துகாட்டினாலே போதும், அதைப்பற்றி மட்டும் பேசினாலே போதும். தன்னாலே மக்கள் வருவார்கள். இப்படித்தான் அவர்களிருவர் இன்று செய்கிறார்கள்.

          நீங்களோ அம்மதங்களை வெறும் தூடணை, கேலி, கிண்டல் பண்ணிவிட்டால் எல்லாரும் இந்துக்களாகி விடுவார்கள்; அல்லது அம்மதங்கள் காலியாகிவிடும் என தப்புக்கணக்கு போடுகிறீர்கள். 100 வருடங்களுக்கு முன்பு மிசுநோரிகள் செய்த அதே தவறு உங்களைப் பீடித்துக்கொண்டு விட்டது.

          As I have already written here and in Tamilhindu.com, it is a few persons styling themselves as Hindus, are now conspiring to make Hindu religion unpopular among Tamil masses.

    2. Avatar
      K A V Y A says:

      //அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? சென்ற நூற்றாண்டு கிறிஸ்துவர்கள் போல, விமர்சனம் மாற்று கருத்து சொல்லும் இந்துக்களை நெருப்பில் வைத்து எரிக்கவா வேண்டும்?//

      U r evading. Nobody is going to torch any one for blashphemy. But the bleshpmers will be criticized and excommunicated unofficially.

      ஆண்டாள் பிறக்கவேயில்லை என்பது மாற்றுக்கருத்து இல்லை. அதாவது பிறந்தார் என்று ஒரு சாரார் சொல்ல, பிறக்கவில்லையென்று இன்னொரு சாரார் சொன்னால்தா மாற்றுக்கருத்து. ஒரே கருத்து: அவர் பிறக்கவில்லை. பூமாதேவியில் மகளாக பெரியாழ்வார் நந்தவனத்தில் தோன்றி கிடந்தார் என்பது ஒரே நம்பிக்கை. அதாவது வைணவர் அனைவரின் நம்பிக்கை. நீங்கள் எப்படி மாற்றுக்கருத்து எனச்சொல்லலாம். மாற்றுக்கருத்தைக் கொண்டோர் வைணவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தனிஆவர்த்தனம்தான் வாசிக்கவேண்டும். அதற்கும்தான் இந்துமதத்தில் இடமுண்டே? நான் வாசிக்கவில்லையா?

      இதைப்போல ஏகப்பட்டவை உண்டு.

      திருமழியிசையாழ்வாரின் பக்தியை மெச்சி சிவபெருமான் இறங்கி வந்து அவருக்குப் பக்தி சாரர் என்ற பட்டம் கொடுத்தார். திருஞான சம்பந்தருக்கு உமையவள் முலைப்பால் கொடுத்தாள். சுந்தர மூர்த்திநாயனாரின் திருமணத்தை சிவபெருமான் தடுத்தார். சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார். திருமூலர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார். பிள்ளை வெட்டி கறி சமைத்தார் ஒருவர். இறந்த பெண்ணைப் பிழைக்க வைத்தார் திருநாவுக்கரசர். கடலில் போட்டபின்னும் நமச்சிவாயமே என மேலெழுந்தார் நாவுக்கரசர். தூக்குக்கயிற்றை பார்வையாலே எரித்தார் பட்டினத்தார். இறைச்சியை மாயமாக மறைய வைத்தார் கருவூரார். பெரிய புராணத்தையும் கந்த புராணத்தையும் படியுங்கள். இப்படி ஏராளம்.

      The bottom line is that Hindu religion is strong in creating fiction in propagating their religion. But, as I have argued, such fiction is necessary for common folk as it will help them feel more integrated and passionate with their religion. That was why Sekkizhar wrote such incredible fiction for e.g a nayanar cutting into pieces his own child to cook a delicious food for Siva perumal. Sekkizhar thought it would make ppl become passionate Hindus forever. Similarly if the Christian originators had thought, how to single them out only for attack? I wonder.

      1. Avatar
        தங்கமணி says:

        இது திசை திருப்பும் வேலை. காசு கொடுக்காமலேயே இவ்வளவு கூவ வேண்டுமா?
        இந்து மதத்தை அதன் கதைகளான புராணங்களை வைத்து கேவலப்படுத்தும்போது உங்களைப் போன்றவர்கள் வருவதில்லை. அதனை நியாயப்படுத்தவும் முன்னிற்கிறார்கள்.
        ஆனால், அதே போன்ற ஒரு யூதர்களது புராணத்தை புராணம் என்று சொல்லும்போது பொங்கியெழுந்து கூவ வந்துவிடுகிறீர்கள்.

        நாவுக்கரசரும், ஞான சம்பந்தரும் தன் சொந்த வார்த்தைகளாலேயே இவற்றை கூறியுள்ளனர். ஆனால் இயேசு கதை மூன்றாம் நபர்களாலோ நான்காம் நபர்களாலோ அல்லது வெறும் கதையாகவோ கூறப்பட்டது.
        இரண்டையும் எவ்வாறு ஒன்றாக பார்க்கமுடியும்?

        நாயனார் தன் மகனை வெட்டி பலிகொடுத்தது கதை!

        ஆனால், ஆபிரஹாம் தன் மகனை யாஹ்வே என்ற தம் யூத குலதெய்வத்துக்கு படையல் வைத்தது உண்மை!
        //Similarly if the Christian originators had thought, how to single them out only for attack? I wonder.//
        அட்டாக் எல்லாம் ஒன்றும் இல்லை. இங்கே அட்டாக் செய்து யாருக்கும் கஷ்டமும் இல்லை. இதற்கெல்லாம் மேலே ஒரு இம்பீரியல் மதமாக கிறிஸ்துவம் தன் கிளைகளை தொலைக்காட்சிகளிலும், தெருவோரங்களிலும், ஊடகங்களிலும், வாடிகனின் வங்கி கணக்குகளிலும், சவிதா ஹலப்பனவாரின் கொலையிலும் இறுக்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு கூவவும் ஆட்களை தயார் செய்து வைத்திருக்கிறது.

        இந்த உண்மைகள் அந்த கழுத்தை நெறிக்கும் பொய்யின் முன்னால் தூசு.

  34. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
    //ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.//

    எந்த கதைக்கு எந்த சுவி- எப்போது சர்ச் எதை ஏற்கும் எல்லாமே கட்டுக் கதையே என்பதை தெளிவாக்கும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் – நிச்சயிக்கப்பட்ட மேரியோடு வர – விடுதியின்றி மாட்டு தொழுவத்தில் பிரசவம் எனக் கதை. வாட்டிகன் போப்பரசர்- லூக்கா கதை தேவயில்லை என செயல் பட்டார்.
    http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

  35. Avatar
    Needhidevan says:

    The problem with humanity is we have not given due importance to the most revolutionary findings the attentionitdeservedbutsadly lacking. Darwinsnatural selection, evolutionary theory backed irrevocably by fossil and DNA anthropology, as againstintelligentcreation (by GOD) RIchad DAwkins books. UNlike our blind rationalists brutal vehemence against only one caste, he gives irrefutable arguments against religions. All religions will fall apart if intelligent creation , GOd created man is a myth

  36. Avatar
    Dr.G.Johnson says:

    ஏசு வரலாறு பூர்வமாக பெத்லகேம் எனும் சிற்றூரில் ஓர் எளிமையான சத்திரத்தின் மாட்டுத் தொழுவத்தில் இரவு நேரத்தில் பிறந்ததாக வேதத்தின் அடிப்படையிலும் போதனைகளாலும் உலக கிறிஸ்துவர்கள் அனைவருமே பல நூற்றாண்டுகளாக நம்பி டிசம்பர் இருபத்தி ஐந்தாம் நாளை கிறிஸ்துமஸ் பண்டியையாக கொண்டாடுகின்றனர். இதுபோன்ற விதண்டா வாதங்கள் பலவற்றை சந்தித்ததே கிறிஸ்துவ மதம். இருப்பினும் முழுக்க முழுக்க விசுவாசத்தின் பேரில்தான் கிறிஸ்துவம் உலகமுழுதும் இன்னும் பரவி வருகின்றது. பைபிளில் கூறப்பட்டுள்ள நல்ல போதனைகளை வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டியாக ஏற்று கிருஸ்துவர்கள் வாழ முற்படுகின்றனர்.
    முக்கியமாக ” உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக ” என்பது போன்ற பல போதனைகளின்வழி மனித நேயம் அழகாக சொல்லப்படுகின்றது. முழுக்க முழுக்க அன்பையே அடிப்படையாகக் கொண்டது கிறிஸ்துவம். அதனால்தான் அன்பின் அடிப்படையில் ஆதி மிஷனரிமார்கள் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என்பவற்றில் ஈடுபட்டனர். இத்தகைய சேவைகளின் வழியாகவே பலரைக் கவர்ந்தனர். இன்றைய தமிழ்க் கிருஸ்துவர்கள் இவ்வாறுதான் மதம் மாறியவர்கள். இவர்களின் விசுவாசம் உறுதியானது. இதுபோன்ற விதண்டா வாதங்களால் அவர்கள் யாரும் ஏசுவைப் பற்றி சந்தேகம் கொள்ளப் போவதில்லை.
    எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் நெருங்கும் இந்த வேளையிலே நாம் அனைவருமே அவரைப் பற்றி சிந்திக்கும் படி செய்துள்ள அந்த பரம பிதாவுக்கு எனது நன்றியை ஏறெடுக்கிறேன் !…டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      NEEDHIDEVAN says:

      The one and only true christian ever lived is JESUS.H. CHRIST. WHAT ABOUT BURNING AT STAKE THOUSANDS OF WOMEN, INQUISITION, SLAVERY, MASS MURDER MASSACRE IN SOUTHERN FRANCE, ATROCITIES DURING CRUSADES ETC. THE WORLD WARS BETWEEN CHRISTIAN NATIONS?. evolutinary biology is a slap against god created man myth

      1. Avatar
        K A V Y A says:

        இஃதெப்படியா சாத்தியமாகும்? இயேசு இருந்த காலத்தில் கிருத்துவ மதமே இல்லை. அவர் தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை. நினைக்கவுமில்லை. அவர் தன்னைக்கடவுள் என்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

        அவர் வாழ்ந்த சமூகத்தில் இறை நம்பிக்கை அவர் செழுமைப்படுத்த விரும்பினார். செய்தார் அவர் விரும்பிய வழியில். ஏனெனில் அவர் சமூகத்திலிருந்தோர் மதத்தை வைத்து மக்களை ஏமாற்றிப்பிழைத்தனர். இஃதெல்லாம் ஏற்கனவே இருந்த யூதமதத்தை எதிர்ப்பதாக யூதர்கள் சொல்லி மன்னன் அவரைக் கொன்றான். இப்படி கிருத்துவமதமே இல்லையென்னும்போது அவர் எப்படி முதற்கிருத்துவராவார்?

        நான் ஏற்கனவே எழுதியதைப்படித்தால் தெரியவரும். பரிசுத்த அல்லது புனித பவுலே கிருத்துவ மத ஸ்தாபகர். முதற்கிருத்துவர் என்று சொன்னால் பரிசுத்த பவுலைக் குறிக்கலாம்.

  37. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    Sh.Thangamani, thanks for sharing the details of urls which throw light on the issue under discussion.

    \இது திசை திருப்பும் வேலை. காசு கொடுக்காமலேயே இவ்வளவு கூவ வேண்டுமா?\

    Why in this thread, in many threads derailing the main topic is done intentionally by many ill intended deviators.

    The topic under discussion is not acceptable to some of the readers. For them there are three options

    1. Register their disagreement for discussing such a topic in the forum.
    2. Write to the admin to withdraw the particular article
    3. Just ignore the topic and do not participate in the discussion

    The fact that the admin is continuing with displaying discussions in the article is their reasonable wisdom that the issue be discussed among the readers which may add further clarity on the issue among interested readers.

    But the genuine objective is defeated by discussions with the no holds barred deviations by habitual red herring contributors.

    The dirty trick of habitual deviators is that they pick up a silly point of no relevance and deviate from the issue. If someone interested in proper discussion, join the deviated issue, the deviator get boosted and he try to engage the topic oriented people with more and more and more and more deviations so that the deviator see to it that a genuine discussion do not even take place.

    Of late, I am sorry to point out that in thinnai, under many threads, mainstream discussions are exceptional and shouting among the deviators are order of the day. It is pathetic that many of the elites are also joining the bandwagon of the deviators.

    I am writing this to request readers interested in the mainstream discussion to avoid discussion on issues not relevant to the topics.

    And, my request to all the readers not to further discuss about even this request.

    Let us concentrate on the main issue and add value to the discussion.

    Just ignore discussion on deviated issues.

  38. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    @ Devapriya Soloman,

    Not just the place of birth of Jesus Christ and the details on ministry, I have read on the topic of historicity of Jesus that there are differences between the gospels with regard to the genealogy and parentage (which you have already touched upon), the trial for alleged blasphemy by Jesus, the crucifixion and the resurrection.

    It seems like there is hardly any agreement between the gospels on mainly issues which are central to the christian belief. That simply would take a plain reader to conclude that the accounts of the gospels could not be considered as an unblemished yardstick for constructing the life and times of a historical Jesus.

    But that apart, I have read from the opinions of thelogians both who question the historicity of Jesus and those who vehemently oppose raising issue on historicity of Jesus that out and out the gospels can not be taken as a document which recorded history as it is. The latter theologians however say that although the gospels are not altogether historical documents since they primarily deal with religious and philosophical issues, they conclude that gospels also include historical facts.

    I tried to find out what are such facts considered as historical by the latter in the gospel, but in vain.

    Another point is that proper biblical interpretations can always reconcile the contrary accounts put forth by the gospels. But, how such sharp differences on various accounts have been reconciled and whether such reconciliations finally give a picture of clarity about the differences, I could not make out.

    Ofcourse, there can be differing opinions.

    Could you please throw light on historical relevance of gospels and feasibility of reconciliation among contradictory gospels

  39. Avatar
    புனைப்பெயரில் says:

    தங்கமணி, வெள்ளைத் தோலுக்கு வால் பிடித்தால் நீங்க டென்ஷன் ஆகாதீங்க…. அறிவால் வருவது ஒரு மரியாதை.. .அது முடியாததால் காட்டிக் கொடுத்து வந்தேறிகளுக்கு வால் பிடித்து நம்மை வெறுப்பேத்துவது இன்னொரு வகை…

    1. Avatar
      K A V Y A says:

      இவர் வெள்ளைத்தோல் எனக்குறிப்பிடுவது இசுலாமிய, மற்றும் கிருத்துவ மதங்கள். அவை இந்தியமண்ணில் தோன்றியவையல்ல. ம.கி.நாடுகளில் தோன்றியவை. அங்கிருந்து உலகமெங்கும் பரவியவை. எனவே அந்நிய மதங்கள் இந்தியாவுக்கு.
      இந்தியாவுக்கு மட்டுமா; ம கி நாடுகளைத்தவிர எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இவை அந்நிய மதம்தான்.

      இதை எவரோ மறுத்ததாகவும், இவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் ஒரு நாடகம். போகட்டும். இவை எப்போது வந்தன இந்தியாவுக்குள்? ஆயிரமாண்டுக்கு முன்னரே. கிருத்துவத்தைப் பொறுத்தவரை வெள்ளையர் ஆண்ட காலத்தில் மதமாற்றத்தின் விளைவாகப் பல்கிப்பெருகியது. இன்று வெள்ளைக்கார எவாஞ்ஜலிஸ்டுகள் இல்லை. பெரிகமான்ஸும், செல்லத்துரையும்தான். இவர்கள் தமிழர்கள். வெள்ளைத்தோலில்லை.

      இந்துமதம், இவ்விரு மதங்களும் பிறமதங்களும் இருக்கும் இச்சமூகத்தில், தன்னை நிலைநாட்டிக்கொள்கிறதா? என்ற கேள்வியைத்தான் புனைப்பெயரில், மற்றும் அவரின் சகாக்கள் எதிர்நோக்கவேண்டும்? இச்சமூகத்தில் தம்மதம் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அபிலாசை தவறில்லை. ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. இந்தியா தியாக்கிரசியாக மாறி, இந்துமதமே ராஜ்ஜியமதமாக ஆனாலொழிய‌ மற்ற மதங்கள் இருந்தே தீரும்.

      வந்தேறிகள், வெள்ளைத்தோல் என்றெல்லாம் ஒன்றும் நடவாது. மதம் என்பது ஒரு மக்களின் தனிநபர் வாழ்க்கைக்கு. அவர்களுக்கு எது வேண்டுமே அதை எடுத்துக் கொள்வார்கள். இங்கே ஆதங்கத்துக்கு என்ன வேலை என்று எனக்குப் புரியவில்லை.

      மதங்கள் மக்கள் சந்தைக்கு வந்து கிடக்கின்றன. எவருக்கு எது பிடித்தமோ அதை அவர் வாங்குகிறார். சந்தையில் மார்க்கெட்டிங்க் பண்ண முடிந்தால் பண்ணுங்கள் திறமையாக. பதிலை தங்கமணியிடமிருந்தும் கிருஸ்ணகுமாரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். அட்வான்ஸ் தேங்க்ஸ்.

  40. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    யார் வந்தேறிகள் ? 25 வருட ஈழப் போராட்டத்தில்அரை மில்லியன் ஈழத் தமிழர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், ஆஸ்திரேலியாவில் வந்தேறிகளாக கருணை மனுவில் ஒண்டிக் கொண்டிருக்கிறார். 21 நூற்றாண்டில் உலகெங்கும் தமிழர் உட்பட பல இந்தியர் அன்னிய நாடுகளில் பல ஆண்டுகளாய் வந்தேறிகளாகத்தான் பிழைத்து வருகிறார்.

    சி. ஜெயபாரதன்

  41. Avatar
    NEEDHIDEVAN says:

    The origin of homo sapiens is central africa. so as per your logic the entire world belong to bush men as they are original deascendants also JARAVAS.

  42. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    //Dr.G.Johnson says:
    November 17, 2012 at 8:37 am
    ஏசு வரலாறு பூர்வமாக பெத்லகேம் எனும் சிற்றூரில் ஓர் எளிமையான சத்திரத்தின் மாட்டுத் தொழுவத்தில் இரவு நேரத்தில் பிறந்ததாக வேதத்தின் அடிப்படையிலும் போதனைகளாலும் உலக கிறிஸ்துவர்கள் அனைவருமே பல நூற்றாண்டுகளாக நம்பி டிசம்பர் இருபத்தி ஐந்தாம் நாளை கிறிஸ்துமஸ் பண்டியையாக கொண்டாடுகின்றனர்.//

    வாட்டிகன் போப்பரசர்- லூக்கா மாட்டு தொழுவத்தில் பிரசவம் எனக் கதை தேவையில்லை என செயல் பட்டார்.
    http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
    இறந்த மனிதன் ஏசு – பெத்லஹெம் வாழ் யோக்கோபு மகன் ஜோசப் பரம்பரையில் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையா?
    அல்லது-
    நாசரெத் வாழ் ஏலி அகன் ஜோசப் பரம்பரையில் ஆபிரகாமிலிருந்து 47வது தலைமுறையா?

    http://www.simpletoremember.com/vitals/Christmas_TheRealStory.htm

    K A V Y A says://November 18, 2012 at 3:37 pm
    இஃதெப்படியா சாத்தியமாகும்? இயேசு இருந்த காலத்தில் கிருத்துவ மதமே இல்லை. அவர் தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை. நினைக்கவுமில்லை. அவர் தன்னைக்கடவுள் என்றும் சொல்லிக் கொள்ளவில்லை.//
    யோவான் 6:35 இயேசு அவர்களிடம், ‘ வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
    48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

  43. Avatar
    Arulgnanasekaran says:

    இது சுத்த அபத்தமான கட்டுரை மதங்களைப்பற்றிய ஆராய்ச்சியே ஒரு தவறான தேவையற்ற ஒரு புதிய பிரச்சனையைத்தான் உருவாக்கும். ஒரிஜினல் என்று எந்த மதத்திற்க்குமே கிடையாது. ஒரு பாபர் மசூதியை இடித்துவிட்டு ஒவ்வொருவருடமும் . இந்தியா படும் பாடு தெரியாதா. அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிந்த கதை, சமிபத்தில் கூட நபிகள் பற்றிய தவறான திரைப்படக்காட்சிகள் வெளியிட்டதற்காக அமெரிக்காவிற்கு எதிராக கண்டணம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது என்ன தெரியாதா.. இந்த மாதிரியான விசப்பறிச்சை தேவையற்ற செயல். ஜாதிக்கலவரம், இனக்கலவரம், மதக்கலவரம் என்று உலகம் படும் பாட்டில் இப்படி ஒரு புதுப்பிரச்சனை தேவையா !! யேசுகிறிஸ்து உலகமக்கள் அமைதியாகவும், அன்பாகவும், ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யவேண்டும் என்றும், பகையை விட்டு சமாதானமாகவும், ஒருவர் நம் கன்னத்தில் அறைந்தால் மற்றகன்னத்தையும் காட்டவேண்டும் என்றும் அதே செயலை திரும்ப நாமும் செய்யக்கூடாது என்று உலக மக்களுக்கு போதித்தவர். தங்கலால் உலகிற்கு நல்லது செய்யாவிட்டாலும் இது போன்ற புதுப்பிரச்சனைகள் தெவையற்றது.

  44. Avatar
    Sudhakaran says:

    எனக்கு ஒரு சந்தேகம் இந்து மதம் தவிர அனைத்து மதத்திலும் பூமியை தவிர வேறு கோள்கள் இல்லை ஏன்?

  45. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஏசுநாதர் கற்பனை என்றால், இராமனும் கற்பனைதான். கிருஷ்ணனும் கற்பனைதான். வஷிஸ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, சாணக்கியர், புத்தர், அசோகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், ஆண்டாள், ஔவையார், வள்ளுவர் யாவரும் கற்பனைதான்.

    சி. ஜெயபாரதன்

  46. Avatar
    Rama says:

    I have been reading all the responses. The true Christian believers so far haven’t proven the existence of an HISTORICAL Jesus Christ. A lot of red herrings thrown around as Krishnakumar Ji says but no single, primary evidence is shown on the historicity of JC. Whether Rama or Krishna existed is not the question here. Hinduism doesn’t depend on historicity. Even if there was no historical Rama, it would not affect the core beliefs of millions of Hindus. ( so what, they would exclaim). But Christianity DEPENDS ON AN HISTORICAL JESUS CHRIST and that is the difference.All are born sinners except JC and this is their core belief, a dogma. Take away the historical JC and Christianity will be rocked to its foundation and crumble.
    I also read elsewhere that JC is nothing but copy pasted from the Persian god Mithra ( born on 25th, virgin birth, performed miracles, 12 disciples, died and resurfaced after three days, etc) Obviously the true Christians would not have anything with Mithra. They have gone into the offensive countering Mithraism with their, mostly spurious arguments. At the end of the day, there’s no archeological or primary documentary evidences of the existence of an historical Jesus Christ. Period.

    1. Avatar
      BSV says:

      திருமதி இரமா!

      இந்துமதத்தைப்பற்றி நன்கு புரிந்தபின்னரே எழுத வேண்டும். பொத்தாம் பொதுவாக எழுதக்கூடாது. அனைத்து இந்துக்களும் தான் நினைப்பதைப்போலவே நினைப்பார்கள் என்பது அதிகப்பிரசிங்கித்தனம். இந்துமதம், வேதங்கள் -> உபநிடதங்கள் -> ப்ராமணங்கள் –> ஆரணயங்கள் -> மஹாபாரதம் (ஐந்தாவது வேதம்) -> இராமாயணக்காப்பியம்-> சாஸ்திரங்கள் –> புராணங்கள் — என்று காலக்கிரமமாகத் தொடங்கி, தென்னிந்தியாவுக்கு வந்து அதன் நீட்சி தொடர்கிறது அப்படித்தொடரும்போது, சமயக்குரவர்கள், ஆழ்வார்கள், நாயனார்கள் – மேலும் பலபல ஞானிகள் (வடக்கிலும் உண்டு) வாழ்கிறார்கள். இந்நீட்சியில், கடவுளர்கள் (கிருஷ்ணர், இராமர், சீதை, சிவன், பார்வதி, என்பன) இராமாயணக்காப்பியக்காலத்தோடு முடிகிறது. அதற்கு பின் பேசப்பட்டால் அவர்களை வைத்தெழுதப்படும் பிறகாலக்கதைகள் – இக்க்டவுளர்களை இந்துக்கள் உண்மையில் வாழ்ந்தவர்களாகப் பார்க்கவில்லையெனலாம். ஆனால், அப்படிப்பார்ப்பவர்கள் பார்க்காதவர்களையும் விட அதிகம். இல்லாவிட்டால் சுப்பிரமணியம் சுவாமியும் இந்து இயக்கங்களும் இராமர் பாலத்தை இராமர்தான் கட்டினாரென்றும், அயோத்தியில் பாபர் மசூதியிருக்குமிடத்தில்தான் பிறந்தார் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவதேன்? பொய் என்று இரமா நினைத்தால் ஏன் தி மு க அரசு இராமர் என்பது கற்பனை எனவே பாலத்தை இடிக்கலாமென்ற கொள்கையை ஏற்கலாமே? கடவுளர்கள் உண்மையில் வாழ்ந்தார்கள் என்று இந்துக்கள் நம்பவில்லை என்பது பொய் என்று நிரூபணமாகிறது! அவர்கள் போக, தென்னிந்தியாவில் சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாள் உமையம்மை; சுந்தரமூர்த்தியின் மணத்தை நிறுத்தினார் சிவன்; அவ்வையின் ஞானச்செருக்கை அடக்கினான் முருகன், சிவனுக்கு மந்திரம் போதித்தான் முருகன் (கோயிலும் கட்டிவிட்டார்கள்), ஆண்டாளுக்கு இரங்கநாதரைக் கட்டிக்கொடுத்தார் (ஆடிப்பூரவிழாவும் நடக்கிறது) ஆழ்வார் திருமாலையும் திருமகளையும் வழிப்பறி கொள்ளையடித்தார் என்றெல்லாம் எழதியவை பொய்கள் என்று எந்த இந்துவும் தமிழ்நாட்டில் நினைக்கவில்லை. நினைத்தால் எப்படி வணங்க முடியும்? எப்படி இந்துவாக இருக்க முடியும்?

      1. Avatar
        BSV says:

        //ஆனால், அப்படிப்பார்ப்பவர்கள் பார்க்காதவர்களையும் விட அதிகம்.//

        ஆனால், அப்படிப்பார்பவர்களைவிட உண்மையில் இராமரும் கிருண்ஷணரும் வாழ்ந்தார்கள் என்று நம்புவோரே அதிகம் — என்று திருத்தி வாசிக்கவும்.

  47. Avatar
    BSV says:

    //Even if there was no historical Rama, it would not affect the core beliefs of millions of Hindus. ( so what, they would exclaim)//

    You’re also not pukka about the historicity of the Hindu Gods – Your choice of words ”even if…” show how wobbly you are.

    You’ve a narrow understanding of, not only Hindu religion, but other religions also.

    இந்துக்களில் மட்டுமல்ல, கிருத்துவர்களிலும், இயேசு கற்பனையே என்றாலும் —-அதனாலென்ன? — என்று கேட்டுவிட்டுப்போகிறவர்களே எங்கும். அப்படியில்லாதவர்களும் சால்மோன் தேவப்பிரியா என்ற நகைச்சுவையான பெயரில் எழுதும் கிருத்துவமத வெறுப்பாளரின் பக்கங்களையும், கிருஸ்ணகுமார் எழுதுபவைகளையும் வாசித்து விட்டு –” அய்யய்யோ வரலாற்றில் வாழாதாரா இயேசு, உடனே நாம் கிளம்ப வேண்டியதுதான் ! — என்று மூட்டைமுடிச்சுக்களோடு மதத்தைவிட்டு கிளம்புவர்களை எங்காவது பார்த்திருக்கோமா? இல்லை இங்கேயெழுதும் கிருத்துவரான மருத்துவர் ஜாண்சன் இந்துவாகி விடுவாரா?

    இயேசு கற்பனை என்று சொல்வதைக்கேட்டு நம் மதத்தை விமர்ச்சிகிறானே என வருத்தமடையலாம். இராமர் கற்பனை என்று விலாவரியாக விளக்கினால், நாம் வணங்கும் க்டவுள் பொய்யென்கிறானே என இந்துக்களும் வருத்தம்தான் அடைவார்கள். இயேசு கற்பனை என்று கிருத்துவ கூடாரம் காலியாகவில்லை. மஹமது கற்பனையென்று இசுலாமியக்கூடாரம் காலியாகவில்லை.

    எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள். இன்றுதான் புதிதாக எழுதுகிறோம் என்று தே. சால்மோன் கற்பனை பண்ணி மகிழலாம். உண்மை அதுவன்று. என்று தொடங்கியதே அன்றிலிருந்தே மதங்கள் உள்ளிருந்தும் வெளியிருந்தும் விமர்சங்களால் வாழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஏனென்றால், மதவாதிகளில் ஒரே கொள்கை: நம்பினோருக்கு நாராயணன்; நம்பாதவருக்கு கல்லு :-)

    Strong Son of God, immortal Love,
    Whom we, that have not seen thy face,
    By faith, and faith alone, embrace,
    Believing where we cannot prove;

    – Tennyson in his poem In Memoriam

  48. Avatar
    BSV says:

    Here is one from Francis Thomson —

    O WORLD invisible, we view thee,
    O world intangible, we touch thee,
    O world unknowable, we know thee,
    Inapprehensible, we clutch thee!

    இதை நம்பாவிட்டால் இந்துமதத்தில் கூட இருக்க முடியாது நண்பர்களே. இதை நம்பாவிட்டால் இந்துமதத்தில் கூட இருக்க முடியாது நண்பர்களே.

    இயேசு கற்பனை பாத்திரமே என்று சொல்லி ஏராளமான நூல்கள் வந்தகாலத்தில் வாழ்ந்தவர்தான் ஃபிரான்சிஸ் தாம்சன்.

  49. Avatar
    ஷாலி says:

    இயேசு ஒரு கற்பனை பாத்திரம்,உலகில் வாழ்ந்ததற்கு எந்த ஒரு சான்றும் இல்லை.என்று கூறுபவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரமாக இன்றிருப்பது திருக்குர்ஆன்.

    “ நிச்சயமாக,நாம் மூஸாவுக்கு (MOSES) வேதத்தை அருளினோம். மேலும் அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம்.இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் (JESUS CHIRIST) தெளிவான சான்றுகளைக் கொடுத்து அனுப்பினோம்.மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்”.
    –குர்ஆன்.2:87.

    இயேசு இவ்வுலகிற்கு தூதராக அனுப்பப்பட்டதை குர்ஆன் உறுதிப்படுத்துகிறது. “குர் ஆன் இறைவனின் வேதம் இல்லை” என்று மறுப்பதன் மூலம் இயேசுவின் பிறப்பையும் மறுக்கலாம்.ஒரு கல்லில் இரு மாங்காய்!.குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்று மறுக்க எவர் தயார்? 1400 ஆண்டுகளுக்கு முன்பே விடப்பட்ட சவாலை இன்னும் எவரும் மறுக்க முடியவில்லை.ஆகவே இயேசு ஒரு நிஜமான. யூதர்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தீர்க்கதரிசியே!

  50. Avatar
    Robert wilson says:

    மற்ற மதங்களின் நூல்களை இவ்விதம், மூலப்பிரதி, எழுதியவர் இவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள். அவற்றின் அபத்தங்களோடு ஒப்பிடும் போது , இவை ஒன்றுமில்லை. Many of the writer’s claims are false. It has been proved beyond doubt that Jesus is a historical person

Leave a Reply to புனைப்பெயரில் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *