இவைகள் !

This entry is part 29 of 42 in the series 22 மே 2011

ஒரு பறவையின் நீலச் சிறகு …

இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும்

உன் பார்வை …

அன்னியமாக உருக்காட்டி

மறையும் என்னுருவம் …

தொலைந்த பயணத்தின்

தொடக்க நாட்கள் …

கொஞ்சமும்

இங்கிதமற்ற முறையில்

சலனப்படும் மணம்..

நமக்கு நாமே

எழுதிக்கொண்ட ஓர் இரவு …..

பூட்டிய வீட்டின் முன்

விட்டெறிந்த கடிதம் …

மற்றும்

என் வருகைக்காக

காத்து பதுங்கி

முகம் புதைத்திருக்கும்

கருப்பு நிற நாய்…

இவைகள் .,

இவைகள் மட்டும்தான்

இன்று எனக்கு சொந்தமானவை ….!

 

 

-கவிதா ரவீந்தரன்

 

Series Navigationநம்பிக்கைகை விடப்பட்ட திசைகள்..
author

கவிதா ரவீந்தரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *