இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்

This entry is part 1 of 33 in the series 3 மார்ச் 2013

ஹெச்.ஜி.ரசூல்

துனீசிய சிந்தனையாளர் பெதி பென்ஸ்லாமா தனது கப்ரிலா எம். கெல்லர் உடனான நேர்முகத்தில் இஸ்லாமிய உலகமும், உளவியல் பகுப்பாய்வு உலகமும் ஒன்றையொன்று விலக்கி வைத்துள்ளன என்பதாக குறிப்பிடுகிறார்.

கீழைதேய நாட்டினருக்கு சிந்தனை முறையில் உளவியல் பகுப்பாய்வு பெரியஅளவில் நிகழ்ந்திருக்கவில்லை. உளவியல் கல்வி என்பதையே அரபுநாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்படவில்லை. முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்கிறது. இதற்கான காரணத்தை பென்ஸ்லாமா முன்வைக்கிறார்.

முதன்முதலில் விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்ட உளவியல் பகுப்பாய்வை கண்டுபிடித்து முன்வைத்தவர் சிக் மண்டு பிராய்டு. இவர் ஒரு யூதர் எனவே முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை முரண்பாட்டின் காரணமாகவும் அரபுலகம் யூத கோட்பாடுகள் அனைத்தையும் நிராகரிப்பு செய்கின்றன. உளவியல் பகுப்பாய்வு யூதம், இஸ்லாம் என அனைத்து சமயங்களையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. உளவியல் பகுப்பாய்வை இஸ்லாம் நிராகரிப்பதற்கு இது இரண்டாவது காரணமாகும். மேலும் பல முஸ்லிம்கள் உளவியல் பகுப்பாய்வு கடவுள் மறுப்பை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து கீழை நாடுகளின் மனநோய் பெரிதும் வேறுபடுகின்றது. ஒரு ஆளுமைக் கோட்பாடாக மனநோய்க்கு ஜின்களே காரணம் என்பது இஸ்லாத்தில் நம்பப்டுகிறது. எனவேஉளவியல் மருத்துவ சிகிச்சைக்கு பாதிக்கப்படுபவர்களை அழைத்துச் செல்வதில்லை. மாறாக இமாம்களிடத்தில் மந்திர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இது ஒரு வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. மனநோயை ஒரு மருத்துவப் பிரச்சினையாகக் கருதாமல் அதிஇயற்கை நிகழ்வாக கருதுவதே இதற்குகாரணம். ஒரு மருத்துவரால் மட்டுமே மன அழுத்தக் குறைவுக்கு உரிய சிகிச்சை அளிக்கமுடியும்.

பிராயிடின் ஆய்வில் சமயம் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. எனினும் இஸ்லாத்தை அவரது ஆய்வு வெகுவாக பாதிக்கவிக்கவில்லை. கிறிஸ்தவ, யூத சமயங்களுக்கு மாற்றாக ஒரிறைவாத சமயமாக இஸ்லாம் திகழ்வதே இதற்கான காரணமாகும்.

பிராயிடு சமய நம்பிக்கையை ஒரு கற்பிதம், கட்டமைக்கப்பட்டது என்கிறார். இந்த கட்டமைப்பு முற்றிலுமான நம்பிக்கை இழத்தலுக்கு பதிலாக உள்ளது. சமயம் நம்பிக்கை இழத்தலுக்கு மாறாக ஆறுதலையும், விடுதலையையும் வழங்குகிறது. கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீட்சியை உருவாக்கவும் அது முயல்கிறது என்கிறார்.

கடவுள் என்பது லட்சியப்படுத்தப்பட்ட தந்தையின் உருவம். அதுவே எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பையும், பாவங்களிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது எனவே தான் யூதர்கள் கடவுளைத் தந்தையாகவும், கிறிஸ்துவத்தில் கடவுளின் குமாரராகவும் கருதுகிறது. இதிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. கடவுளுக்கும் தந்தையின் உருவத்திற்குமான தொடர்பை குரானில் எங்கும் காணமுடியாது. கடவுளை யாரும் பெற்றதுமில்லை, கடவுள் யாரையும் பெற்றதுமில்லை என்பதான கோட்பாட்டையே குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மனிதப் பிறப்புக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது. பிராயிடின் கருத்தாக்கத்திலிருந்து இஸ்லாம் வேறுபடும் இடமே இது (எனினும் அல்லாவை மனிதமைப்படுத்தும் விதமாகவே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பது போன்ற பல சொல்லாடல்களும், அல்லா ஆதமை படைத்து அதில் தன் உயிரை ஊதினான் என்பதுவும் குர்ஆனில் இடம் பெறும் ஹுவ என்ற சொல் அல்லாவை ஆண் தன்மையோடு அர்த்தப்படுத்துவதாகவும் மாற்று கருத்தோட்டங்களை சில இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைப்பதையும் இங்கே கவனப்படுத்த வேண்டியுள்ளது.)

இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக மனித குலத்தின் உளவியல் தேவைகளோடு இயைந்து செயல்படுகிறது. குழந்தைத் தனமான தேவைகளிலிருந்து மக்கள் தங்களை விடுவித்து கொள்ளவும் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக ஒரு முஸ்லிம்குழந்தை தனது தந்தையையே கடவுளாக கருதுகிறது. ஆனால் இஸ்லாம் குழந்தையின் கடவுள்பற்றிய கருத்தை மறுக்கிறது. அரூபமாக புலன்களால் அறிய முடியாத கருத்துருவம் சார்ந்ததாக மாறுகிறது. மனித குலத்திலிருந்து கடவுள் விலக்கப்பட்டுவிடுகிறது. ஏனெனில் மனித இனத்தின் அடையாளத்தோடு ஒப்பிட முடிவதை நினைத்துப்பார்க்கவே முடியாது.

மிக தூரமான, அரூபமான கடவுள் இந்த பூமியில் தங்களின் தயவுக்கு ஏற்ப விடுதலையை வழங்குகிறது. இந்த விடுதலை ஒருவகையில் முழுமையாக தன்னிச்சையானதாகவும், மறுவகையில் மனித இனத்திற்கான அன்பையும், கருணையையும் வழங்கும் பொறுப்பினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த முதன்மைக் கருத்தே மரபுரீதியாக இஸ்லாத்தின் பிரதான கருத்தாகவும், இதுவே சமய அர்த்தப்படுத்துதல்களை வெளிப்படுத்தவும் வழிவகுக்கிறது. மாதிரியாக சமயத்திற்காக துறவுத்தன்மை மேற்கொள்வதையோ, நம்பிக்கையாளர்களை இவ்வுலக ஆசா பாசங்களிலிருந்து அந்நியப்படுத்தவோ இஸ்லாம் வற்புறுத்தவில்லை.

இரண்டாவது வகையில் அப்பாலைக் கடவுள் கொள்கை முஸ்லிம் உலக கண்ணோட்டத்தை பெரிதாக ஒன்று பாதிப்படையச் செய்வதில்லை. ஐரோப்பாவில் அடிக்கடி சொல்லப்படுவது கடவுளின் இறப்பு பற்றியே ஆகும். நீட்சே இதனை கிறிஸ்துவ பின்புலத்தில் வலியுறுத்துவார். கடவுளை மனிதமைப்படுத்துப்படுவதை இஸ்லாம் மறுக்கும் போது, கடவுள் வரலாற்றின் பகுதியாக மாறாத பொழுது கடவுள் எப்படி இறக்க முடியும். எனவே எங்கும் நிறைந்துள்ள மனித அன்பு மட்டும் இவ்வுலகின் அடிப்படையாக இல்லாமல், ஒவ்வொரு அசைவையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதே முஸ்லிம் உலகின் பிரதான கருத்தாக்கமாகும்.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே முஸ்லிம் உலகம் அதன் அடித்தளத்தையே அசையச்செய்யும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. மரபுக்கும், நவீனமயமாதலுக்குமான இடைவெளியாகவே இது உருவாகியிருந்தது.

மரபு வழி சிந்தனையாளார்கள் புதிதாக எந்தவித விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இப்பிரச்சினையை சமரசப்படுத்தவும்கூட யாரும் முன்வரவும் இல்லை. அரபுநாடுகளில் ஜனநாயக சுதந்திரம் மறுக்கப்பட்டதும் இதற்கு காரணமாகும். அறிவுத்துறையினர் தலையிடமுடியாததும், சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டதும் இதனிடையே இணைவுநிலை உருவாகாமைக்கு காரணமாகும். இந்த இடைவெளியே பெருத்த வேதனைகளை அனுபவமாக்கியது. இது பெரிய எதிர்பார்ப்புகளையும் சமயப்பழமைக்கு திரும்பினார்கள். தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அங்கு தேடினார்கள் இந்த சமயத்திற்கு திரும்புதலே நவீனமான உலகத்துடன் முரண்பாட்டிற்கான தற்காப்பு பதிலாக அமைந்தது. இந்த நிலையற்ற தன்மையே அடிப்படைவாதத்தின் பூர்வீகத்தை நோக்கிய தேடலின் விருப்பமாகவும் மாறியது. நவீனமயத்திலிருந்து தப்பித்தலாகவும் வெளிப்பட்டது.

நவீனமயம் முஸ்லிம்களை சமய எல்லைகளிலிருந்து மீறிச் செல்ல ஊக்குவிக்கிறது என்பதான கருத்தும் உண்டு. மாதிரியாக மிகக் குறைவான அளவு உடையணிந்த பெண்கள் தொலைக்காட்சியில் காண நேரிடுகிறது. இது தங்கள் சமயம் காலங்காலமாக பரிந்துரைத்த உடைவிதிகளுக்கு மாறாக இருக்கிறது என்பதான வெளிப்பாட்டுணர்வைத் தோற்றுவிக்கிறது. நம்பிக்கையாளர்கள், தாங்கள் தடுக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதாக எண்ணுகிறார்கள். இந்த வகை குற்ற உணர்ச்சியின் சுமையால் அழுத்தப்பட்டு அது வலுவாக வளர்கிறது.

பிராய்டு சமயத்தை சமூகவாழ்வுக்கான முக்கியமான அடித்தளமாக கருதுகிறார். ஏனெனில் உணர்வுகளை கட்டுப்படுத்தி மக்களின் பொறுப்புணர்ச்சியை சமயம் ஆட்சிப்படுத்துகிறது.

இவ்வாறாக சமயம் ஒரு சமூகத்தின் இயக்கும் சக்தியாக மாறுகிறது தவறுசெய்தலுக்கான குற்ற உணர்ச்சியை தியாகப்படுத்துதலின் மூலம் சாதகமானதாக முயற்சிக்கிறது.

ஒரு பெண் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதினாலேயே தனது உடல் பாலியல் கவர்ச்சியை உருவாக்குவதாக இருக்கிறது என்கிற எண்ணத்தில் அவள் தனது உடலை திரையிட்டு மறைக்கிறாள். இதன் மூலமாக தனது உடல் ஆசைக்குரிய பொருள் என்பதிலிருந்து

விடுவித்துக் கொள்கிறாள். இதன் தீவிரமான மற்றொரு மாதிரி என்பதே வெடிகுண்டை கட்டிக் கொண்டு சாகும் தற்கொலைப்படை போராளிதன் வாழ்க்கையையே தியாகப்படுத்துதைக் கூறலாம்.

முதன்மை பிரதி :

Tunisian scholar Fethi Benslama,Islam and psychoanalysis,A Tale of mutual Ignorance.

Qantara. de E magazine.

Series Navigationவிண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *