என் நிலை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

 

 

உங்களின் சமூகக் கட்டமைப்புள்
நான் கட்டுப்படவில்லை
என்ற கோபம் உங்களுக்கு..
கட்டமைப்புள் கட்டுப்படாத
பெருமை எனக்கு…
நீங்கள் சரியென நினைப்பவை
அனைத்தும்
அபத்த ரூபத்திலழுத்தும் என்னை…
என் வழியில் நீங்கள்
கடந்து போகலாம் ஆனால்
என்னை

தள்ளிவிட்டுப் போகவோ
அல்லது இழுத்துப் போகவோ
நான் சம்மதிக்கவே மாட்டேன்
உங்களிடம் இருப்பதோ..
என்னிடம் இல்லாததோ
எதுவாயினும்
உங்கள் வழி வந்து
கேட்பதற்குப் பதிலாய்,
என்னிடமிருப்பதைக் கொண்டு
நான் பேரானந்தமடைவேன்
உங்கள் கூண்டுக்குள்
நீங்கள் சுழலுங்கள்,

எந்தன் வெளியில்
நான் பறக்கிறேன்
கீழ் நின்று மேல் நோக்கி
என்னைப் பார்க்கலாம்
உங்களால் இயன்றளவு
கற்களை, சொற்களை வீசலாம்..
கை, வாய் சோர்ந்து நீங்கள்
ஓய்ந்திருக்கும் நேரம்
ஏதாவதொரு மரத்திலமர்ந்து
மேலிருந்துங்களை
கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பேன்
Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *