ஓர் பிறப்பும் இறப்பும் ….

This entry is part 5 of 42 in the series 1 ஜனவரி 2012


 

எங்காகிலும் தட்டுபடுகிறதோ

அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?

நீள் கோடுகளும் அங்காங்கே

புள்ளிகளுமாய்..

அழகின் ஒரு பகுதியை

குத்தகைக்கு எடுத்த பிம்பமென

தாவி தாவிப் பறக்கும் அது …?

 

மனம் கவர்ந்திழுத்த அதன்

நினைவுகளில்

அழுகிப்போன இதயங்களின்

சுவடுகள் ஏதும் பதிப்பிக்க

அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …

 

மெல்லிய இறக்கைகள் விரித்து

பறக்கும் அவைகளில்

கனந்து போன துன்பங்கள்

கரைந்து போக …

மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்

கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்

ஆரம்பமும் …முடிவும் …

ஒருங்கே பிரசவித்தது ….
ஷம்மி முத்துவேல்

Series Navigation‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்
author

ஷம்மி முத்துவேல்

Similar Posts

Comments

  1. Avatar
    Rajesh t says:

    மனம் கவர்ந்திழுத்த அதன்

    நினைவுகளில்

    அழுகிப்போன இதயங்களின்

    சுவடுகள் ஏதும் பதிப்பிக்க

    அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய் இல்லை …

    அருமை .

Leave a Reply to Rajesh t Cancel reply

Your email address will not be published. Required fields are marked *