கனவுகள்

This entry is part 19 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அழகான சிறகு முளைத்து
இதயம்
அண்டவெளியில் பறக்கும்…
அருகே ஒரு வானம் உருவாகும்,
உனக்கும் அது பிடிக்கும்…
இந்த வெளிகளெல்லாம் கடந்து
காட்சிகள் புலனாகும்…
மொத்தத்தில்
மனம் தூய்மையாகும்…
காலம் அல்லாத காலம் உருவாகும்…
காகிதமில்லாமல்
புத்தகம் உண்டாகும்…
மரம் செடி கொடிகளில்லாமல்,
உனக்காய் காற்றுக் கூட வரும்
சுவாசிக்க…
உடல் நொந்திடாமல்
தென்றல் வீசிடும்
இதமாக…
மனிதரில் பல ரகம்,
உனக்காய் தனியொரு கிரகம்
உருவாகும்…
உள்ளம் தனி உருவமாக
வெளியே வந்து தோன்றிடுமே…
மொத்தத்தில்
தொல்லையில்லா உலகு ஒன்று
உனக்காய்
தோன்றி வந்திடுமே…
ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigationஇன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்பட்டறிவு – 1
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Comments

  1. Avatar
    rishvan says:

    தொல்லையில்லா உலகு ஒன்று
    உனக்காய்
    தோன்றி வந்திடுமே…

    அழகான ஆழமான வரிகள்… நன்றி பகிர்விற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *