காகிதத்தின் மீது கடல்

This entry is part 32 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்

ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்

அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு.

ரவிஉதயன் raviuthayan@gmail.com

Series Navigationயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்இருப்பு!
author

ரவி உதயன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    chithra says:

    ”காகிதத்தின் மீது கடல்” — மூழ்கி விட்டதென்பதை ,இவ்வளவு கவிதையாகவும் சொல்ல முடிந்திருக்கிறது !!!

Leave a Reply to சின்னப்பயல் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *