காற்றில்லாத கடற்கரை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 15 in the series 13 மார்ச் 2022

 

ஆதியோகி

 
கடலை வரைந்தாயிற்று
அலையை வரைந்தாயிற்று
காலைத் தழுவிய அலையில்
முகம் சிலிர்த்த சிறுவனின்
உணர்வையும் கூட வரைந்தாயிற்று.
உப்பு நீரின் ஈரம் சுமந்து
வீசும் இந்த காற்றை
எப்படி வரைவது…?
உப்பு நீரின் ஈரம் சுமந்து
வீசும் அந்த காற்றில்லாத
கடற்கரைக்கு யார் வருவார்கள்?
                                 – ஆதியோகி
 
Series Navigationகவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்அன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *