காவல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

தாயுமானவன் மதிக்குமார்

விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு
விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள்.
சதுர அடி விற்பனையில்
சமாதியான விளைநிலங்கள் !

ஆவின்பால் ஆக்கிரமிப்பால்
அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் !
பதப்படுத்திய பாலின் ராசியால்
மறந்துபோன சீம்பால் ருசி !

பாதாளத்தில் பல்லாங்குழி
மாயமான தாயம்
உருக்குலைந்த ஊரணி
கட்டடங்களான கண்மாய்
வாழ்விழந்த வறட்டி
கற்பிழந்த கம்பங்கூழ்
குலைந்த கூட்டாஞ்சோறு
அழகிழந்த அம்மிக்கல்
ஆவியான ஆட்டுக்கல்
கிராமங்களில் தொலைந்த
கிராமியம் !

காணாமல் போன கிராமங்களை
கண்டுபிடிக்க முடியாமல்
கவலையோடு நிற்கின்றன
காவல் தெய்வங்கள் !

—————————————————————————-

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *