தனிமைக் காட்டில்
ஓர் ஆண்கிளி
துணைக்கு வந்தது
பெண்கிளி
கூடின
மசக்கையில்
பெண்கிளி
பிரசவம் பெண்ணுக்கு
வலியோ ஆணுக்கு
முட்டை வந்தது
குஞ்சு வந்தது
ஜனனம் விரிந்தது
கழிவைத் தின்று பின்
கிளியையே தின்றது மரம்
இன்று
ஏராளக் கிளிகள்
ஏராள மரங்கள்
எந்தக் கிளியிலிருந்து
இந்தக் கிளி
எந்த மரத்திலிருந்து
இந்த மரம்
கிளிக்கும் தெரியவில்லை
மரமும் அறியவில்லை
எல்லாமும் அறிந்த
கரு ஒன்றுண்டென்று
மனிதன் அறிவான்
அதற்கு மேல் அறிய
கோடிக்கணக்காய்
தேடல்கள்
தொடர்ந்தது
தொடர்கிறது
தொடரும் தேடல்கள்
கிடைக்குமா
விடை?
அமீதாம்மாள்
- கிளிக் கதை
- உணவு மட்டுமே நம் கையில்
- பயணம்
- ஆதல்….
- சொல்
- ‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்
- ஒரு மழைக் கால இரவு
- சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.
- நிலாச்சோறு
- நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்
- வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்
- கிருதுமால்
- தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.
- மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
- நறுமுகையும் முத்தரசியும்