சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்

author
49
0 minutes, 20 seconds Read
This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 nagore-dargah-indian-muslim-heritage-centre-singapore1

முனைவர் எச். முஹம்மது சலீம்

சிங்கப்பூர்

 

 

சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் ,   ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3) இங்கு எழுபதுக்கும் மேற்பட்ட தர்காக்கள் இருந்துவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு முக்கியத்துவம் வாய்ந்த தர்காவாக விளங்கும் பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப்  நூஹ் தர்கா இவற்றுள் ஓன்று. .முயிஸ் எனப்படும் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய மன்றம் கபருகளைச் சுற்றி நிரந்தரமான கட்டமைப்புகளை புதிதாகக் கட்டியெழுப்புவதைத் தடைசெய்துள்ளது. (அப்துல் வஹாப்: 1999-2000/43).

 

தமிழகத்திலிருந்து மலாயா தீபகற்பம் நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களின் வருகை  பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களிலேயே தொடங்கிவிட்டது.  (அரசரத்தினம் : 1987) . இக்காலகட்டத்தில் தமிழகத்தில் நெசவு உள்ளிட்ட கைத்தொழில்கள் நலிவுற்றதாலும் , வேறு தொழில்கள் மற்றும் வணிக வாய்ப்புக்கள் அதிகமாக் வளர்ந்திராததாலும் , வேளாண்மைசார் தொழில்களும் வாழ்வாதாரத்துக்கு பயன்படாச்சூழலில் பிழைப்புதேடி இங்கு வருவோரின் எண்ணிக்கை பெருகியது. சிங்கப்பூரில் குடியேறிய தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகப் பின்புலம் அவர்கள் பெரும்பாலும் அன்றைய மதராஸ்  ராஜதானியின் திருச்சிராப்பள்ளி ,  தஞ்சாவூர், வட ஆற்காடு, தென்னாற்காடு, திருநெல்வேலி , இராமநாதபுரம் , பாண்டிச்சேரி, அருகாமையிலுள்ள கோட்டைகுப்பம் தொடங்கி முத்துப்பேட்டை வரையிலுள்ள பகுதிகளிலிருந்தும் , திருநெல்வேலி அருகாமையிலுள்ள தென்காசி, கடையநல்லூர்,  காயல்பட்டினம், இராமநாதபுரம் , கன்னியாகுமரியின் தக்கலை திருவிதாம்கோடு , கோட்டாறு, சூரங்குடி, திட்டுவிளை , திங்கள் சந்தை, மணலிக்கரை, தொடுவட்டி, ஆகிய ஊர்களிலிருந்தும் இன்னபிற பகுதிகளிலிருந்தும் வந்து நிரந்தரமாகக்  குடியேறி வந்துள்ளமை அறியமுடிகிறது.

 

 

இக்காலகட்டத்தில் தமிழகம் நெடுகிலும் எல்லா ஊர்களிலும் புனிதர்கள் எனப்படும் ஒலியுல்லாக்களின் தர்காக்களும் அவைசார்ந்த நிகழ்வுகளும் , தொடர்புகளும் தமிழ் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்வியல் பண்பாட்டின் கூறாக அமைந்திருந்தன. தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்பு குறித்து சூசன் பெய்லி என்ற ஆய்வறிஞர் மிக விரிவாகவே எழுதியுள்ளார். (1989: 104-50)  ஆயினும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்பு பண்பாடு குறித்த விரிவான ஆய்வு இன்னமும் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்றே  கூறலாம் (டார்ஸ்டன் சாச்சர்: 2006).

 

புலம்பெயர்ந்த சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியத்தினைத் தெரிந்து கொள்ள அவர்களின்  வாழ்க்கைச் சூழல் தொடர்பான இருவகை வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.  முதலாவதாக , தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்துவந்து அங்கு அணுக்கத்தொடர்பினை தொடர்ந்துவந்துகொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம்கள். இரண்டாவது, முன்னோர் புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களாக இருந்தும் சிங்கப்பூர் வாழ்வியல் சூழலில் திருமணம் , குடும்பம் என தமது பூர்விக ஊர்களுக்கு வெளியேயும் மற்றும் மலாய் , சீன முஸ்லிம் குடும்ப பிணைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் பண்பாட்டு பழக்கவழக்கங்களை தமதாக்கிகொண்டும்  வாழ்ந்துவருகின்ற பூர்வீக தமிழ் முஸ்லிம்கள் என  இருவகை உட்குழுக்களை தமிழ் முஸ்லிம்களிடையே காண்கிறோம்.

 

ஒலியுல்லாக்களின் தர்காக்கள் தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமே  இருந்தபோதும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் பலரின் தர்கா பாரம்பரியத் தொர்டர்பில் தொலைதூரங்கள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. .

 

முஹியித்தீன் அப்துல் கதிர் ஜீலானி, காஜா முயீனுதீன் சிஷ்தி, நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை, தக்கலை ஷெய்கு பீர் முஹம்மது ஒலியுல்லா ஆகிய புனிதர்கள் இங்கு தமிழ் முஸ்லிம்களால் போற்றப்பட்டு அவர்களின் பெயரால் நினைவு நாட்களில் புகழ் மாலைகள், தோத்திரப்பாக்கள் இன்னும் பிற நிகழ்வுகள் தொடர்ந்து இன்றளவும் பல்வேறு அமைப்பினரால் சிங்கப்பூரில் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகு பாரம்பரியம் தலைமுறைகள் கடந்து கரிசனத்துடன் தமிழ் முஸ்லிம்களால்  பேணப்பட்டு வருகின்றது.

 

சிங்கப்பூரில் இன்று நாகூர் தர்கா மற்றும் இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் என்று இலங்கிக்கொண்டிருக்கும் ‘நாகூர் தர்கா’ தெலோக் ஆயர் வீதியில் 1828-30 களில் கட்டப்பட்ட நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை நினைவிடமாகும். 1974-ல் தேசிய மரபுடைமை நிலையமாக சிங்கப்பூர் அரசால் .அரசிதழில் பதிவுசெய்யப்பட்ட இந்த நினைவிடம் மறுசீரமைப்புக்குப் பின் 2011-ம் ஆண்டு நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையமாக சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

ஞானமாமேதை ஷெய்கு பீர் முஹம்மது அப்பா ஒலியுல்லாவின் தர்கா தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் கன்னியாகுமரியின் தக்கலையில் அமைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழிலும் ஏற்றமும் கொண்டு திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தின் நடுநகர் நாகர்கோவிலிலிருந்து 10 கல் தொலைவில் அமைந்துள்ளது தக்கலை. தென் திருவாங்கூர் அரசின் தலைநகராய் விளங்கிய பத்மனாபபுரம் அருகே அமைந்துள்ள இச்சிற்றூரில் இசுலாமியத் தமிழ் இலக்கிய வானில் மின்னித் திகழும் மெஞ்ஞான அறிவுச்சுடர் பீர்முஹம்மது சாஹிப் அப்பா அவர்களின் மாண்பார் மறைவிடம் அமைந்துள்ளது. தமிழிலக்கிய உலகினை, குறிப்பாக ஆன்மீக மெஞ்ஞான அறிவொளி பெற்ற ஆன்றோரை உற்று நோக்கச் செய்யும் உயர் தலம் தக்கலை. பீர்முஹம்மது அப்பாவின் பெருமை பெற்ற நிலம்.

 

1939-ல் தோற்றம்கண்ட சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த 75 ஆண்டுகளாக ஞானமேதை பீர் முஹம்மது அப்பாவின் நினைவு நாளான இஸ்லாமிய மாதம் ராஜபு 14- இரவு அப்பாவின் ஞானப்புகழ்ச்சி நன்னூலின் பகுதிகள் பாரம்பரிய இசையில் பயிலப்படும் வழமை இன்று வரை தொடரக் காண்கிறோம். முந்தைய வருடங்களில் ஞானப்புகழ்ச்சி முற்றோதல் இரவு தொடங்கி சுபுஹு வரை நடைபெற்று வந்துள்ளது. . இது தவிர பீர் முஹம்மது அப்பாவின் நூல்களின் சிறப்பு பற்றிய உரை நிகழ்ச்சிகள் அவ்வப்போது சங்கத்தினரால் உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்க அறிஞர்கள், மற்றும் பேராசிரியர்களை அழைத்து நிகழ்த்தப்படுவதுண்டு.

 

தமிழ் முஸ்லிம்களிடையே ஹாஜா முயீனுதீன் சிஷ்தி ஆண்டகை புகழ்மாலை பாராயண மஜ்லீசுகள் மற்றும் சிஷ்தீயா தரீகா சார்ந்தவர்களின் இறை தோத்திர பாராயணக் கூடல்கள் தொடர்ந்து இன்று வரை இங்கு நடைபெறும்   பாரம்பரியமும் காணப்படுகிறது. இவைதவிர காதிரியா தரீகா  முஹிப்பீன்கள், நக்ஷபந்தி தரீகாவினர், ரிபாயீ தரீகாவினர் என பல்வேறு தரீகா சார்ந்த தமிழ் முஸ்லிம் மற்றும் மலாய் முஸ்லிம்களும் ஒலியுல்லாக்களென்னும்  சமயப் புனிதர்கள்பால் தனித்த ஈடுபாடும் அவர்களுடனான ஆன்மீகத் தொடர்பினை தமது இஸ்லாமிய பண்பாட்டு நடைமுறை ஒழுங்கின் பகுதியாக இன்றுவரை பேணிவரக் காண்கிறோம்.

 

மேற்கூறிய ஒலியுல்லாக்கள் தவிர சிங்கப்பூரின்  பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப் நூஹ் ஒலி தர்காவும் தமிழ் முஸ்லிம்கள் பலர் வருகைதரும் இடமாகும். இவைதவிர சிங்கப்பூரில் பிஸ்மில்லா ஒலி தர்கா ( சாங்கி மேற்புறச் சாலை) , முஹம்மது சாலிஹ் ஒலி தர்கா ( ஜாமியா சூலியா பள்ளிவாசலின் உட்புறம் அமைந்துள்ளது) போன்ற தர்காக்களும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் தொடர்புடைய முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்களாகும்.

 

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா பண்பாட்டுத் தொர்டர்பு இன நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் தளமாகவும் அமையக் காண்கிறோம்.. ஒலியுல்லாக்களில் அரபுகள், இந்தியர்கள், தமிழர்கள், மலையாள மொழிபேசுவோர், உர்து மற்றும் பார்சி மொழி சார்ந்த புனிதர்கள் என்று அவர்களின் தோற்றம், வாழ்விடம்  மற்றும் வரலாற்றுப் பின்புலம் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் பால் மாறாத அன்பும், மதிப்பும் , ஈடுபாடும் கொண்டு தமது இஸ்லாமிய சமய வாழ்வியல் நெறியில் பண்பாடு சார்ந்த நெறியாக இத்தகு தர்கா பாரம்பரிய தொடர்பினை சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் பலர் இன்றுவரை பேணி வரக் காண்கிறோம்.

 

எனவே சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் அவர்களிடையே குழு ஒற்றுமையை ஓங்கச் செய்யவும் , மார்க்க நெறிமுறை பேணுதலில் கட்டொழுங்கைக் கடைபிடிக்கவும், குடும்பம் மற்றும் பாரம்பரியப் பண்பாட்டு மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்லவும், சமுதாயத்திலும்,நாட்டிலும் முஸ்லிம் மற்றும் பிற சமயத்தார் மற்றும் இனத்தாருடன் நல்லிணக்கம், ஒற்றுமை, மற்றும் நல்லெண்ணம் வளரவும் அமைதி ஓங்கவும் வழிவகுக்கக் காண்கிறோம்.

 

துணை நூல்:

 

Torsten Tschacher : From Local Practice to Transnational Network-Saints, Shrines and Sufis among Tamil Muslims in Singapore :: Asian Journal of Social ScienceL Vol 34: Issue:2 : 2006

 

 

 

 

Dr. H.M.Saleem M.A., Ph.D
Vice President-I,
Jamiyah Singapore
31.Lorong 12, Geylang, Singapore 399006

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

Similar Posts

49 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //இக்காலகட்டத்தில் தமிழகம் நெடுகிலும் எல்லா ஊர்களிலும் புனிதர்கள் எனப்படும் ஒலியுல்லாக்களின் தர்காக்களும் அவைசார்ந்த நிகழ்வுகளும் , தொடர்புகளும் தமிழ் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்வியல் பண்பாட்டின் கூறாக அமைந்திருந்தன.//

    ஆபிரஹாமிய மதங்களில் இறுதியாக வந்த இஸ்லாமிய மார்க்கத்தை கொச்சைப்படுத்த இன்று ஏராளமானவர்கள் உள்ளனர்.ஆனால் இஸ்லாம், முஸ்லிம் என்ற பெயரில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு முரணான வணக்க வழிபாடுகளை செய்பவர்கள்தான் இந்த ஒலியுல்லா தர்ஹா கூட்டத்தார்.இந்த சமாதி வழிபாடிகள் அநேகமாக எல்லா நாடுகளிலும் இருந்து கொண்டு இஸ்லாத்தை களங்கப்படுத்தி வருகின்றனர்.ஆனால் இஸ்லாம் எழுந்த வளர்ந்த சவூதி அரேபியாவில் மட்டும் தர்ஹா சமாதி வழிபாட்டு இடங்கள் தரை மட்டம் ஆக்கப்பட்டுவிட்டது.

    முஸ்லிம் புரோகித முல்லாக்களின் வயிற்றுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதே இந்த தர்காக்கள்.இறந்த ஒரு நல்ல மனிதருக்கு புனிதப்போர்வையை போர்த்தி உண்டியல் வைத்து உஞ்சவிருத்தி செய்கிறார்கள்.இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை.

    ஒரு காலத்தில் தம் மக்களை காத்த காத்தவராயன்,மதுரைவீரன்,முனிய சாமி,ஐயனார் போன்ற பெரு மக்கள் மறைந்தததற்க்குப் பின் அவர் நினைவாக கோவில் எழுப்பி கும்பிடுவதுபோல் இஸ்லாமிய லேபிளில் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்,மதுரை வீரன் சாமி நின்ற நிலையில் அருள்பாளிக்கிறார். நமது தர்கா புனிதர்கள் அடக்கப்பட்ட நிலையில் ஆன்மீக சேவை செய்கிறார்கள்.

    இறந்த மனிதர்களுக்கு கல்லறை கட்டுவதோ,கட்டடம் கட்டி விழா கொண்டாடுவதோ கூடாது என்று தெளிவாக தடை செய்யப்பட்டு விட்டது.ஆயிரக்கணக்கான புனிதர்கள் வாழ்ந்த அரேபியாவில் ஒருவருக்கு கூட தர்கா இல்லை.இந்தியா,பாகிஸ்தான்,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மட்டும் இந்த தர்காவை கட்டி கல்லாக் கட்டுகின்றனர்.

    இறந்து போன எந்த ஒரு மனிதனிடம் எந்த சக்தியும் இறைவன் கொடுக்கவில்லை.செத்து மடிந்து மண்ணோடு மண்ணாக மாறிய ஒரு சமாதியிடம் கை ஏந்தி பிரார்த்தனை புரிவது அறிவுக்குப் பொருத்தமா? இஸ்லாம் ஒரு மூடர் கூடம் என்று இவர்களைப்பார்த்துதான் கூறப்படுகிறது.

    முனைவர்.முஹம்மது சலீம் அவர்கள் தமது கல்வியை அறிவுப்பூர்வமான இஸ்லாத்தை ஆய்வதில் செலவிடட்டும்.(தர்கா) முட்டுக்கொடுக்க முனைய வேண்டாம்.

  2. Avatar
    Iraiyadiyan says:

    முனைவர்.முஹம்மது சலீம் அவர்கள் தமது கல்வியை அறிவுப்பூர்வமான இஸ்லாத்தை ஆய்வதில் செலவிடட்டும்.(தர்கா) முட்டுக்கொடுக்க முனைய வேண்டாம்.
    நல்ல ஒரு குட்டு, இஸ்லாமிய கொள்கைகளுக்கு கோட்பாட்டிற்கும் ஊரு விளைவிக்கும் கூட்டத்தார்க்கு கொடி பிடிக்கும் முகமாக உள்ளது இந்த கட்டுரை, முனைவர் பட்டம் பெற்றவர் முனைப்புடன் இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடித்து இறையருள் பெற வேண்டுகிறேன்.

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    //ஒரு காலத்தில் தம் மக்களை காத்த காத்தவராயன்,மதுரைவீரன்,முனிய சாமி,ஐயனார் போன்ற பெரு மக்கள் மறைந்தததற்க்குப் பின் அவர் நினைவாக கோவில் எழுப்பி கும்பிடுவதுபோல்…//

    அதென்ன ஒரு காலத்தில்? இன்று அதைவிட ஜோராகப்போகிறது தனிமனித வழிபாடுகள். எம் ஜி ஆருக்கு இராமநாதபுர ஜில்லாவிலும் சென்னையிலும் குஷ்புக்கு திருச்சியிலும் கோயில்கள் கட்டப்பட்டன. எம் ஜீ ஆர் கோயில் இன்னும் இருக்கிறது. போனவாரம் தினகரன் சப்ளிமென்டில் நயன் தாராவுக்குக் கோயில் கட்டுவது பிடிக்கவில்லையென்று எழுதியிருக்கிறார்கள். I was much disappointed. She is my favourite actress. ஜெயலலிதாவுக்கு பெரிய கோயிலே எழுப்பத்தயார். அய்யா வைகுண்டருக்குக் கோயிலை திருச்செந்தூர் பீச்சிலேயே முருகன் கோயிலுக்கருகில் கட்டிவைத்து கூட்டமோ கூட்டம். எப்படி இவர்கள் Minsitry of Environment & Forests க்கு டேக்கா கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. பீச்சில் எந்தக்கட்டிடமும் கட்டக்கூடாது. ஏரல் (திருச்செந்தூரிலிருந்து 25 மைல்) சேர்மன் அருணாசலத்துக்க்கோயில் கட்ட அங்கு ஆண்டு தோறும் நடக்கும் கொடை உத்சவத்துக்கு மும்பாயிலிருந்தெல்லாம் வருகிறார்கள். இவர் ஒரு ஏரல் முனிசிபாலிடி சேர்மன் மட்டுமே. ஆனால் கடவுளாகிவிட்டார். சீரடி சாய்பாபாக்கூட்டம் செய்யும் அலப்பறை தாங்கவில்லை. வட மாநிலன்களில் ஊருக்கு ஊரு கோயில் அவருக்கு. இத்தனைக்கும் அவர் ஒரு மனிதர். கல்கி பகவானுக்கு மும்பாய் மாதுங்காவில் கோயில். கூட்டம் தாங்கவில்லை. அம்மா (not ex CM, but somebody connected with a religious sect) என்ப‌வருக்கு மதுரையில் கோயில். அம்மாவும் கல்கியும் இன்னும் உயிருடன் இருப்பவர்கள். தேவருக்கு அவர் பிறந்த் ஊரில் கோயில்.. அம்மா தங்கககவசம் அளித்த‌ விழா தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது.

    ஆக, மனிதருக்குக் கோயில் கட்டும் சமாச்சாரம் தமிழ்நாட்டு முசுலீம்கள் சில கூட்டங்கள் மட்டும் செய்யவில்லை; மொத்தமாக எல்லாருமே செய்துகொண்டிருக்கிறார்கள். Only one difference though: Islam prohibits worship of humans, whether living or dead. In other cases, no such prohibition. நயன் தாராவுக்குக் கோயில் கட்டினால் தப்பில்லை. We need not wait for her permission. After all, we are going to her temple to worship. Not she!

    1. Avatar
      paandiyan says:

      பின்னூட்டம் qualify : திண்ணை teacher , என் comments. இப்படி ஏன் publish பண்ணவில்லை. தங்கிலிஷ் ஒருவர்க்கு மட்டும் eligible ஆ??

  4. Avatar
    ஒரு அரிசோனன் says:

    எந்த ஒரு சமயமும் காலம் செல்லச் செல்ல, காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மாற்றம் அடைவதே இயற்கை. இதற்கு எந்த மதமும் விலக்கல்ல.

    முனைவர் முகம்மது சலீம் அவர்கள் எழுதியுள்ளதைத் தமிழக முஸ்லீம்களின் பண்பாடு எத்தகையது என்று எடுத்துக்கொண்டு, அந்த வரலாற்றுப் பண்பாடை அறிந்துகொள்வதே சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

    அதைவிடுத்து, எண்ணற்ற முஸ்லீம் உடன்பிறப்புகளின் மனம் புண்படும்படி எழுதவேண்டிய தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

    //முனைவர்.முஹம்மது சலீம் அவர்கள் தமது கல்வியை அறிவுப்பூர்வமான இஸ்லாத்தை ஆய்வதில் செலவிடட்டும்.(தர்கா) முட்டுக்கொடுக்க முனைய வேண்டாம்.//
    //முனைவர் பட்டம் பெற்றவர் முனைப்புடன் இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடித்து இறையருள் பெற வேண்டுகிறேன்.//

    நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவது உங்கள் உரிமையே தவிர, இசுலாமைப் பின்பற்றும் முனைருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு ஏன் போகவேண்டும் என்பதே எனது கருத்து ஆகும்.

    நான் இசுலாமைப் பற்றி நன்கு அறிந்தவன் அல்ல. ஆயினும், எந்த சமயத்தாரின் பழக்கவழக்கங்ககளையும் — அது மற்றவரைப் பாதிக்காதவரை — ஏசுவது நல்ல பண்பு அல்ல என்றே நான் கருதுகிறேன்.

  5. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //அதைவிடுத்து, எண்ணற்ற முஸ்லீம் உடன்பிறப்புகளின் மனம் புண்படும்படி எழுதவேண்டிய தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.//

    அதை விடுத்து, “தர்காக்களில் நம்பிக்கை வைத்திருக்கும் எண்ணற்ற முஸ்லீம் உடன்பிறப்புகளின் மனம் புண்படும்படி கருத்து எழுதவேண்டிய தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.” என்று திருத்திப் படித்துக் கொள்ளுங்கள்.

  6. Avatar
    suvanappiriyan says:

    பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

    குர்ஆன் 72:18

    அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3

    ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

    (ஸஹீஹ் முஸ்லிம்:1662)

    “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அடக்கத் தலத்தை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
    (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)

    ‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
    (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

    இத்தனை எச்சரிக்கைகளுக்குப் பிறகும் எவராவது தர்ஹாக்களை வலம் வரவே செய்வேன் என்று அடம் பிடிப்பாரானால் அவர் இஸ்லாமிய கட்டளைகளுக்கு எந்த மதிப்பும் தராதவராகவே இறைவனால் பார்க்கப்படுவார். எத்தனை பிஹெச்டிக்களை வாங்கினாலும் சரியே!

  7. Avatar
    suvanappiriyan says:

    நீங்கள் மதினாவுக்கு முகமது நபியின் அடக்கத் தலத்துக்குச் சென்றால் அங்கு ஒரு காவலர் எப்போதும் நின்று கொண்டிருப்பார். இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு யாத்திரிகர்கள் முகமது நபியின் அடக்கத்தலத்தில் அழுது கொண்டும், பிரார்த்தனையும் செய்ய முற்படுவர். அப்போது அங்குள்ள காவலர் அவர்களை அன்பாக தடுத்து ‘இங்கு பிரார்த்தனை செய்யக் கூடாது. அருகில் உள்ள பள்ளிக்கு சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்துவார். இதனை நானே நேரில் மதினாவில் பார்துள்ளேன்.

    முகமது நபிக்கே இஸ்லாத்தில் இந்த நிலை எனும் போது நம்மூரில் அடங்கியுள்ளோரை இறைவனுக்கு நிகராக வைத்து பிரார்த்திப்பது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை சம்பந்தப்பட்டவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஜெனாப் முஹம்மத் சலீம் சாஹேப் அவர்கள் மிகச்சுருக்கமாக சிங்கப்பூர் தர்காஹ் ஷெரீஃப் பாரம்பர்யம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அருமை. வாழ்த்துக்கள்.

    தமிழ்ப் பண்பாட்டினை எந்த அளவுக்கு தர்க்கா ஷெரீஃப் பாரம்பர்யமாகப்பட்டது உள்வாங்கியுள்ளது என்ற விஷயத்தை அவர் விஸ்தாரமாகப் பகிர்வதில் தயக்கம் காட்டியுள்ளாரா என்று தோன்றுகிறது.

    அராபியத்தை திணித்து தமிழ்ப் பண்பாட்டினை சுவடின்றி அழிக்க விழையும் பிற்போக்கு வஹாபியம் தமிழகத்தில் தலையெடுத்து வரும் சூழலில் இது போன்ற தமிழ்ப்பண்பாட்டு வேர் உள்ள விஷயங்களை விகஸிதமாகப் பகிர முனைவது என்பது சங்கடமான விஷயம் என்று புரிகிறது.

    வாஸ்தவத்தில் அவர் தொட்டுள்ள வ்யாசத்தின் அறுதியில் பகிர்ந்த விஷயங்கள் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை.

    \\\ பாரம்பரியப் பண்பாட்டு மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்லவும், சமுதாயத்திலும்,நாட்டிலும் முஸ்லிம் மற்றும் பிற சமயத்தார் மற்றும் இனத்தாருடன் நல்லிணக்கம், ஒற்றுமை, மற்றும் நல்லெண்ணம் வளரவும் அமைதி ஓங்கவும் வழிவகுக்கக் காண்கிறோம். \\\

    யதார்த்தமான விஷயங்கள்.

    உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய சஹோதரர்களை…… அராபிய பயங்கரவாத ……….வஹாபிய சுன்னி இஸ்லாத்தின் ப்ரதிகளாக மாற்றும் ………….. மாற்று மதத்தவர்களையும் அவர்களது மத வழிபாட்டு ஸ்தலங்களையும் தகர்த்து நொறுக்கும் பயங்கரவாத வஹாபிய பிற்போக்கு இஸ்லாமிய வாதத்திற்கு……… மிகக் கடுமையான சவால் ஸூஃபி இஸ்லாம்.

    தர்காஹ் ஷெரீஃபுகளை ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் போன்றோர் ஷியா இஸ்லாத்துடன் மட்டிலும் சம்பந்தப்படுத்தி தமிழ் ஹிந்து போன்ற தளங்களில் எழுதியதை வாசித்து நகைத்திருக்கிறேன்.

    பரேல்வி சுன்னி இஸ்லத்தில் தர்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் விலக்கானவை இல்லை.

    தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளின் முக்ய அம்சமான இசை……. மதங்களைக் கடந்து மக்களைக் கவரும் நயத்தைக் கொண்டவை என்றால் மிகையாகாது.

    தக்ஷிண பாரதத்தில்………….. குறிப்பாகத் தமிழகத்தில்……… நாகூரைச் சார்ந்த இசைப்பரம்பரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பரம்பரை. உஸ்தாதுகள் தாவூத் மியான், கவுஸ் மியான், சோட்டு மியான் போன்ற பெரியோர்களுடைய பரம்பரை இன்று வரை தொடர்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நாகூர் தர்க்காஹ் ஷெரீஃபின் ப்ரதான பாடகாரான உஸ்தாத் எஸ்.எம்.ஏ. காதர் சாஹேப் அவர்கள் இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்கள். ஜெனாப் எஸ்.எம்.ஏ காதர் சாஹேப் அவர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்த கீர்த்தனைகளையும் த்யாகராஜ கீர்த்தனைகளையும் பாடியிருக்கிறார். இசையில் நாட்டமுள்ள வாசகர்கள் கேட்டு மகிழத்தக்க இசை காதர் சாஹேப் அவர்களுடைய இசை.

    ஸ்ரீமான் ஷேக் சின்ன மௌலானா சாஹேப் அவர்களும் இங்கு நினைவுக்கு வருகிறார். ஆயின் அவரும் அவரது பரம்பரையினரும் முற்று முழுதாக தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளுடன் ஒருங்கிணைந்தவர்கள் அல்லர். ஷெஹ்னாய் வாத்ய இசைக்கலைஞர் உஸ்தாத் ஸ்ரீ பிஸ்மில்லாஹ் கான் சாஹேப் அவர்களுடைய மித்ரராக இருந்தார் ஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா சாஹேப் அவர்கள். தனியாக ரசித்து அனுபவிக்க வேண்டிய விஷயம் இது.

    தமிழகத்தில் இணையிலா அம்ருத கண்டத்தின் சொந்தக்காரரான அமரர் ஸ்ரீ எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள் தாவூத் மியான் அவர்களிடம் சிக்ஷை எடுத்துக்கொண்டதாக வாசித்திருக்கிறேன்.

    உத்தரபாரதத்தில் ஹிந்துஸ்தானத்துப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிய தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் இசையை ப்ரதானமாகக் கொண்டு மக்களை ஆனந்த அனுபவத்தில் ஆழ்த்துகிறது என்றால் மிகையாகாது.

    மொகலாய இஸ்லாமிய பயங்கரவாத அடக்குமுறைகளில் ஸூஃபி இஸ்லாத்துக்குப் பெரும் பங்கு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ………. அதை விட அதிகமான உண்மை ஹிந்துஸ்தானமுழுதும் ஆஸேது ஹிமாசலம் ………அனைத்து ப்ரதேசங்களின் பண்பாட்டை மெருகு குலையாது தன்னில் உள்வாங்கி ………… அந்தந்த ப்ரதேசங்களின் இசை மற்றும் கலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு……. அதனை இன்றளவுக்கும் போதித்து வரும் மாண்பை உடையது ஸூஃபி இஸ்லாம் என்ற உண்மை.

    அமரர் உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப் ஹிந்துஸ்தானத்து மேற்கெல்லைக் கோட்டுக்கு அப்பால் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர். இவருடைய பந்திஷ்களுக்கு ஹிந்துஸ்தானியர் அனைவரும் ( எல்லகளைக் கடந்து) மிகப்பெரும் ரசிகர்கள்.

    குறிப்பாக அல்லாஹு அல்லாஹு பந்திஷ்.

    யூ ட்யூபில் இருந்து கேழ்க்கலாம்.

    திண்ணை தளத்தில் மோஹ்தர்மா மயதா அல் ஹனவிக்கு அப்புறம்………. இஸ்லாத்தைச் சார்ந்தவர்களின் அருமையான இசை பகிரப்பட்டதாக நினைவிலில்லை. இயலுமானால் இதை வாசிக்கும் அன்பர்களுக்கு விருந்தாக மேற்கண்ட பந்திஷை தள முகப்பில் பதிப்பிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    என்ன ஒரு கோகில கண்டம் என்பது துலங்கும்.

    வாலே குல்முல் என்று துவங்கும் வ்ருத்தம். அதையடுத்து மந்தர ஸ்தாயியில் அல்லாஹு அல்லாஹு என்று ஆரம்பிக்கும் பந்திஷ் எப்படி துரித கதியில் உச்ச ஸ்தாயியில் இவரால் பாடப்படுகிறது என்று ரசிப்பது சுகானுபவம். மொழி, மதம், பாடுபவர் இதையெலாம் மறந்து தக்ஷிண பாரதத்து பஜனையைக் கேழ்ப்பது போன்ற அனுபவத்தை சில கட்டங்களில் கொடுக்கும்.

    ஜெனாப் சலீம் சாஹேப், இறையருள் பெற்ற ஒலியுல்லாக்களின் துஆ உங்களுக்குக் கிட்டுவதாக. காஷ்மீரத்தை விட்டு வெளிப்போந்து வருஷமாகிறது. உங்களது வ்யாசத்தின் வாயிலாக நினைவுகள் அங்கு சென்றது என்றால் மிகையாகாது.

    ஆம்…….. தர்க்காஹ் ஷெரீஃபுகள் மத நல்லிணக்கத்தின் அடையாளங்கள் என்றால் மிகையாகாது. ஹிந்துஸ்தானத்துப் பண்பாட்டின் உறைவிடங்கள் அவை என்பதும் மிகையாகாது. விஸ்தாரமாக இந்தப் பண்பாட்டினைப் பற்றி நீங்கள் நிறைய எழுத வேண்டும்.

    அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே)

  9. Avatar
    அஜீஸ் says:

    இங்கே ஷாலி, சுவனப்பிரியன் போன்ற தீவிரவாதிகளின் எழுத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருப்பதால் எழுதுகிறேன்.
    இவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்கள் யூதர்களால் எழுதி திணிக்கப்பட்டவை. ஆகையால் இவைகளை ஒத்துகொள்ளக்கூடாது.
    பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! குர்ஆன் 72:18
    இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.

    தர்காவுக்கு செல்லும் எந்த முஸ்லீமும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை பார்ப்பதுமில்லை, வணங்குவதுமில்லை. தங்களுக்காக அல்லாவிடம் கேட்டுகொள்வதற்காவே செல்லுகிறார்கள். அது தெரிந்திருந்தும், குழப்பம் செய்வதையே ஒரே தொழிலாக செய்துவரும் ஷாலியும், சுவனப்பிரியனும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை வணங்குகிறார்கள் என்று எழுதுகிறார்கள். இது அவர்கள் எந்த அளவுக்கு அசிங்கமானவர்கள் என்று காட்டுகிறது.

    ” Hz.Rasulullah (s.a.w) has given the good tidings that the Angels say “AMIN” for the prayers which are performed for the brothers and the Awliya and Allahu Teala accepts them (at the exact moment).”Buhari, Edebu’l-Mufred, No:623; Ebu Davud, Vitr, 29.
    ” Visiting the grave is a duty which is performed for Allah’s pleasure and visiting the grave of a father and mother on a Friday is appropriate .”Gazali, Ihya, IV, 711

    “The person who comes solely for the purpose of paying a visit to my grave(grave of Hz.Rasulullah (s.a.w)) , has a right on me that I should intercede for him.” (‘Ilm al-Fiqh, Vol. V).

    “The person who performs Hajj and then visits my Tomb, will be regarded as though he had seen me in my worldly life.” (Baihaqi).

    “And in some parts of the night (also) offer the Salaat (prayer) with it (i.e. recite the Qur’aan in the prayer) as an additional prayer (Tahajjud optional prayer Nawaafil) for you (O Muhammad). It may be that your Lord will raise you to Maqaam Mahmood (a station of praise and glory, i.e., the honour of intercession on the Day of Resurrection)”

    [al-Isra’ 17:79]

    It was narrated that Anas ibn Maalik said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘I will come to the gate of Paradise on the Day of Resurrection and will ask for it to be opened. The gatekeeper will say, “Who are you?” I will say, “Muhammad.” He will say, “I was commanded not to open it for anyone before you.”’” (Narrated by Muslim, 333).

    According to another report narrated by Muslim (332), “I will be the first one to intercede concerning Paradise.”

    மேலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனுக்கு பிரியமானவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சலாம் என்று அல்குரானே அறிவிக்கிறது.

    அடியார்களை பற்றி தெளிவாக அல்குரான் அறிவிக்கும்போது, அவர்கள் தன்னிடம் தன் அனுமதியுடன் பரிந்துரை செய்யலாம் என்று அல்லாஹ் அறிவிக்கிறான்.

    21:28. அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை17 செய்ய மாட்டார்கள்.
    “and they cannot intercede except for him with whom He is pleased”[al-Anbiya’ 21:28]

    2:55.அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? “…whose intercession will avail nothing except after Allaah has given leave for whom He wills and is pleased with”[al-Najm 53:26]

    ஆகவே இந்த ஏமாற்றுக்காரர்களை, தீவிரவாதிகளை, பெட்ரோல் பிணந்திண்ணிகளை அடையாளம் கண்டுகொண்டு அப்புறப்படுத்துங்கள்.

  10. Avatar
    suvanappiriyan says:

    திரு அப்துல் அஜீஸ்!

    //இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

    என்னை தீவிரவாதியாக சித்தரித்தது உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

    //தர்காவுக்கு செல்லும் எந்த முஸ்லீமும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை பார்ப்பதுமில்லை, வணங்குவதுமில்லை. தங்களுக்காக அல்லாவிடம் கேட்டுகொள்வதற்காவே செல்லுகிறார்கள். அது தெரிந்திருந்தும், குழப்பம் செய்வதையே ஒரே தொழிலாக செய்துவரும் ஷாலியும், சுவனப்பிரியனும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை வணங்குகிறார்கள் என்று எழுதுகிறார்கள். இது அவர்கள் எந்த அளவுக்கு அசிங்கமானவர்கள் என்று காட்டுகிறது.//

    ரொம்பவும் உஷ்ணமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இறைவன் என்ன சொல்லுகிறான்?

    அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3

    சிறு பிள்ளைக்கும் விளங்குவதுபோல் இந்த வசனத்தில் இறைவன் மற்றவர்களை துணைக்கழைப்பதை கண்டிக்கும் போது பிஎச்டி பட்டம் வாங்கிய உங்களுக்கு விளங்கவில்லையா? இறைவன் உங்களுக்கு மறுமையில் கடுமையான தீர்ப்பளிப்பதை காணும் பொது இதனை உணர்ந்து கொள்வீர்கள்!

    //இவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்கள் யூதர்களால் எழுதி திணிக்கப்பட்டவை. ஆகையால் இவைகளை ஒத்துகொள்ளக்கூடாது.//

    நான் குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஆதாரபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்பட்டவை. அறிவித்த நபரிலிருந்து முகமது நபி வரை அறிவிப்பாளர் வரிசை எங்கும் பிசகாது சரியாக செல்கிறது. நான் குறிப்பிட்ட நபி மொழி யூதர்களுடையது என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்கவும். இல்லை என்றால் பொய் சொன்னதற்காக இறைவன் முன்னால் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.

    //பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! குர்ஆன் 72:18
    இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

    லாத், மனாத் போன்ற தெய்வங்களை இந்த வசனத்தில் பெயர் குறிப்பிட்டு இறைவன் கூறவில்லையே! மற்ற எவரையும் அழைக்காதீர்கள் என்று பொதுவாகத்தானே கூறுகிறான். அந்த பொதுவில் நாகூர் ஆண்டவரும், ஏர்வாடி இப்றாகிமும், மற்ற தர்காக்களும் வருகிறதே!

    இப்படி நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ! :-)

    //ஆகவே இந்த ஏமாற்றுக்காரர்களை, தீவிரவாதிகளை, பெட்ரோல் பிணந்திண்ணிகளை அடையாளம் கண்டுகொண்டு அப்புறப்படுத்துங்கள்.//

    பிஎச்டி பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதியின் எழுத்தாக இது தெரியவில்லையே! பொய்களை புனைந்து நீங்கள் எழுதிய கட்டுரையின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியதற்காக எங்களை பிணந்திண்ணிகள் என்று கூறும் அளவுக்கு சென்று விட்டீர்கள். கண்டிப்பாக இதற்கான தண்டனையை வாழும் நாட்களிலேயே இறைவன் மூலம் பெற்றுக் கொள்வீர்கள். அந்த தண்டனை உங்களை வந்தடையும் நேரம் நாகூர் ஆண்டவரோ, ஏர்வாடி பாவாவோ, அல்லது நீங்கள் முரீது வாங்கியுள்ள தலைவரோ உதவிக்கு வர மாட்டார். உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

    மேலும் நான் ஒரு அலுவலகத்தில் அக்கவுண்டண்டாக பணி புரிகிறேன். எனது தேவைக்கும் அதிகமாகவே இறைவன் அந்த அலுவலகத்திலிருந்து எனக்கு கொடுக்கிறான். இணையத்தில் எழுதுவதற்கு நான் யாரிடமும் எந்த காலத்திலும் பொருள் உதவி பெற்றதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

    1. Avatar
      தங்கமணி says:

      ஆஹா இன்னொரு நபியை பார்க்கிறோம்.
      என்ன தீர்க்கதரிசனம், நிச்சயம், அப்படியே வஹிதான் இறங்கியிருக்கிறது.
      //கண்டிப்பாக இதற்கான தண்டனையை வாழும் நாட்களிலேயே இறைவன் மூலம் பெற்றுக் கொள்வீர்கள்.//
      அதெப்படி சுபி, இறைவன் உங்களிடம் வந்து சொன்னானா? இவ்வளவு நிச்சயமாக சொல்லுகிறீர்கள் என்றால், வஹிதான் வந்திருக்கவேண்டும்! அடேங்கப்பா!

      //நான் குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஆதாரபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்பட்டவை. அறிவித்த நபரிலிருந்து முகமது நபி வரை அறிவிப்பாளர் வரிசை எங்கும் பிசகாது சரியாக செல்கிறது. நான் குறிப்பிட்ட நபி மொழி யூதர்களுடையது என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்கவும். இல்லை என்றால் பொய் சொன்னதற்காக இறைவன் முன்னால் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.//
      சூப்பர். இப்படி நீங்கள் பிஜேவையே ஆப்படிக்கிறீர்களே. இந்த சாபம் பிஜேவுக்கும் சேர்த்தித்தானா? ஹதீஸ் கலை வல்லுனர்கள் (இது ஒரு வினோதமான கேட்டகிரி!) எல்லோரும் சொன்னாலும், அது குரானுக்கு விரோதமாக இருக்கிறது என்று இவராக ஒரு விளக்கம் கொடுத்து, அந்த சஹி ஹதீஸை சஹி ஹதீஸ் இல்லை என்பாரே. அவருக்கும் அந்த சாபம் உண்டுமா?

      அதே போல, நீங்களே எத்தனையோ புகாரி ஹதீஸ்களை, சஹி ஹதீஸ் இல்லை என்று 700 வருடங்களுக்கு பிறகு சொல்லுகிறீர்களே. அதில் யூதர்கள் நுழைந்து புகுந்து புரப்பட்டு, அல்லாவுக்கே அல்வா கொடுத்துவிட்டார்கள் என்று சொல்லுகிறீர்களே. அந்த சாபம் உங்களுக்கும் உண்டா?

  11. Avatar
    paandiyan says:

    //இங்கே ஷாலி, சுவனப்பிரியன் போன்ற தீவிரவாதிகளின் எழுத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருப்பதால் எழுதுகிறேன்///

    very good. I like this.

    //ஆகவே இந்த ஏமாற்றுக்காரர்களை, தீவிரவாதிகளை, பெட்ரோல் பிணந்திண்ணிகளை அடையாளம் கண்டுகொண்டு அப்புறப்படுத்துங்கள்.//

    very good. I like this..

  12. Avatar
    ஷாலி says:

    அன்பர் அஜீஸ் மீது நமக்கு எந்த வருத்தமும் இல்லை.அவரை வளர்த்தெடுத்த முஸ்லிம் முல்லாக்கள் சொல்வதைத்தான் அவர் கூறுகிறார்.தமிழகத்தில் கிருத்துவத்திற்கு மக்கள் வரும் அளவுக்கு இஸ்லாத்திற்கு வருவதில்லை,காரணம் இந்த மூட முல்லாக்களே!இவர்கள் உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கும் சொல்வதில்லை,பிற மக்களுக்கும் சொல்லுவதில்லை.இஸ்லாத்தில் புரோகிதர்களுக்கு,அதாவது ஆண்டவனுக்கும் அடியானுக்கு இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை.

    ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் வாழ்வில் நடக்கும் எல்லா செயல்களும் புரோகிதர்களை வைத்தே நடைபெறுகிறது.இந்து மதத்தை போட்டா காப்பி எடுத்து அதை அப்படியே இஸ்லாம் லேபிள் ஒட்டி புரோகித முல்லாக்கள் வயிறு வளர்க்கிறார்கள்.
    ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்விப்பது போல் முஸ்லிம் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் கல்யாணம் என்ற பெயரில் ஆண் குறி நுனிதோல் நீக்கும் நிகழ்ச்சியை பெரிய விழாவாக கொண்டாடுவார்கள்.முல்லா புரோகிதர்கள் இதற்கும் ஆசி வழங்கி காசு பார்ப்பார்கள்.

    பெண் குழந்தை வயதுக்கு வந்து விட்டால்,பூப்பு நீராட்டு விழா அங்கும் நடக்கும்,இங்கும் நடக்கும்.பாத்திஹா ஓதி பந்தியில் அமர்ந்து விடுவார்கள்.திருமண நிகழ்ச்சியில் அங்கு சாமி கும்பிட்டு முகூர்த்தக் கால் ஊன்றுவார்கள்.இங்கு முல்லா ஆலிம்சா பாத்திஹா ஓதி பந்தக்கால் நடுவர்.திருமண சடங்கும் அங்கு போலவே இங்கும் இருக்கும்.அங்கு மஞ்சளில் தாலி கட்டப்படும்.இங்கு கருகுமணியில் தாலி கட்டப்படும்.

    புருஷன் செத்தால் தாலி கழட்டப்படும் இங்கு கருகுமணி கழட்டப்படும். மூன்றாம் நாள்,ஏழாம்நாள் காரியம் பார்ப்பதுபோல் இங்கு நாற்பதாம் நாள் காரியம் பார்த்து கத்தம் ஓதி தட்சணை கொடுக்கப்படும்.வருடாந்திர திதி,திவசம் கொடுப்பதுபோல் இங்கும் இறந்தவர்களுக்கு படையல் வைத்து வருஷக் கத்தம் ஓது காசு பார்த்து விடுவார்கள்.

    அங்கு கோவிலில் அலகு குத்தி, காவடி தூக்கி தீக்குண்டத்தில் இறங்கினால், இவர்கள் பஞ்சா தூக்கி முகத்திலும் மார்பிலும் இரும்புச் சங்கிலியால் அடித்துக்கொண்டு பூக்குழி இறங்குவார்கள். அங்கு சாமியை தேரில் வைத்து இழுத்துச் சென்றால்,இவர்கள் அவுலியாக் களுக்கு சந்தனம் பூச சந்தனக்கூடு இழுப்பார்கள்.ஊரில் உள்ள எல்லா சாமியிடமும் அவர்கள் வேண்டுவதுபோல் இவர்களும் இறந்துபோனவர்களின் எல்லா சமாதிகளிலும் கை ஏந்துவார்கள்.

    அன்பர் அஜீஸ் அவர்கள் இந்து மத ஜெராக்ஸ் காப்பி இஸ்லாத்தை, மூட முல்லாக்களின் போதனையால் நடைமுறைப்படுத்தி நியாயப்படுத்துகிறார்.உண்மையில் டாக்டர்.சலீம்,மற்றும் அஜீஸ் அவர்களின் தமிழ் இந்து பாரம்பரிய இஸ்லாத்திற்கு க்ருஷ்ண குமார்.அன்பர் அரி சோனர் போன்றவர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் அரபு நாட்டில் தோன்றிய அசல் இஸ்லாத்தில் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு இடமில்லை.இறுதியாக நபிகள் நாயகம் கூறியதை சொல்லி முடிக்கிறேன்.

    எனக்கு முன்பு வாழ்ந்த யூத சமூதாயம் 71 கூட்டமாக பிரிந்தது.அதில் ஒரு கூட்டமே சுவனம் சென்றது.மீதி அனைத்தும் நரகம் நுழைந்தது.கிறிஸ்த்துவ சமூதாயம் 72, கூட்டமாக பிரிந்தது.அதில் ஒரு கூட்டமே சுவனத்தில் நுழைந்தது.71 கூட்டம் நரகில் விழ்ந்தது.இறுதி சமுதாயமான எனது முஸ்லிம் சமூதாயம் 73 கூட்டங்களாக பிரியும்.அதில் ஒரு கூட்டமே சுவர்க்கம் செல்லும்.72 கூட்டங்கள் நரகில் தள்ளப்படும்.அப்போது,சுவனம் செல்லும் கூட்டம் யார்? என்று கேட்கப்பட்டபோது, இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் நடப்பதுபோல் நடப்பவர்கள்.என்று பதிலளித்தனர்.

    அன்பர் அஜீஸ் கூறும் சமாதி வழிபாடு,செத்த மனிதரின் சிபாரிசு வேண்டுதல் எதையுமே அன்று நபித்தோழர்கள் செய்யவில்லை.”உனது செருப்பின் வாறு அறுந்தாலும் இறைவனிடம் கேள்!” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.நண்பர் திரு.கணபதி ராமன் அவர்களுக்குத் தெரிந்த இஸ்லாம் கூட முஸ்லிம் அன்பர் அஜீசுக்கு தெரியவில்லை.கைசேதம்!

    1. Avatar
      அஜீஸ் says:

      ஷாலி,
      இன்னும் நீட்டிகொண்டே போகலாமே? இந்துக்களுக்கு மூக்கு இருக்கிறது. அதே போல, முஸ்லீம்களுக்கும் மூக்கு இருக்கிறது. இந்துக்கள் காலால் நடக்கிறார்கள். அதே போல தவறான வழி செல்லும் முஸ்லீம்களும் காலால் நடக்கிறார்கள். சுத்த அரபிய இஸ்லாத்தில் நாங்களெல்லாம் தலையால் நடப்போம் என்று விட்டுகொண்டே போகலாமே? அதனால்தான், வஹாபிகள் இப்போதெல்லாம், சவுதி ஸ்டைல் புர்கா, சவுதி ஸ்டைல் ஆண்கள் உடை என்று போட்டுகொண்டு பிலிம் காட்டுகிறீர்களா? வெள்ளை படுதா அணிந்து சென்றவர்கள் இன்று கட்டாயமாக கருப்பு புர்க்கா அணிந்து செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? இது மாதிரி கருப்பு புர்க்கா அணிந்து செல்லவேண்டும் என்று சங்க இலக்கியத்தில் எங்காவது இருந்தால், சுவனப்பிரியன் எடுத்து சொல்லி, அது பழந்தமிழ் கலாச்சாரம்தான் என்றுநிறுவுவார் என்று எதிர்பார்க்கிறேன். அதே போல, வஹாபியர்கள் செய்வது போல, மாற்றுமத கோவில்களை இடிப்பது அந்த பெண்களை பாலுறவு அடிமைகளாக வைத்துகொள்வது, விற்பது எல்லாம் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன, அந்த வஹாபி கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்குகிறோம் என்று சுவனப்பிரியன் என்ற பிணந்திண்ணி சொல்லுவார் என்றும் எதிர்பாக்கிறேன்.

      திரும்ப சொல்லுகிறேன். அது சமாதி வழிபாடு அல்ல. அல்லாவிற்கு பிரியமான இறைநேசர்களை நமக்காக இறைஞ்சும்படி கேட்டுகொள்வது. அதற்கு அனுமதி அல்குரானிலேயே இருக்கிறது என்று காட்டியும், திரும்ப வஹாபி உளறல்கள் எதற்கு?

  13. Avatar
    suvanappiriyan says:

    வஹாபிய இஸ்லாமும் அரபு கலாசாரமும்!

    திரு க்ருஷ்ணகுமார்!

    //அராபியத்தை திணித்து தமிழ்ப் பண்பாட்டினை சுவடின்றி அழிக்க விழையும் பிற்போக்கு வஹாபியம் தமிழகத்தில் தலையெடுத்து வரும் சூழலில் இது போன்ற தமிழ்ப்பண்பாட்டு வேர் உள்ள விஷயங்களை விகஸிதமாகப் பகிர முனைவது என்பது சங்கடமான விஷயம் என்று புரிகிறது.//

    இஸ்லாம் என்பது வேறு! அராபிய கலாசாரம் என்பது வேறு!

    1400 வருடங்களுக்கு முன்பு அராபிய கலாசாரம் என்பது என்ன?

    இஸ்லாம் வருவதற்கு முன் அராபிய தீபகற்பத்தில் 365 சிலைகளை கஃபாவில் வைத்து வழி பட்டு வந்தனர். இறைத் தூதர் ஆப்ரஹாம், அவரது மகன் இஸ்மாயில் போன்றோரின் சிலைகளையும் வைத்து அன்றைய அரபிகள் தினம் ஒரு சிலையை வழிபட்டு வந்தனர்.

    பல வருடங்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானங்களை குடித்து மகிழ்ந்தனர் அன்றைய அரபிகள். யாரிடம் அதிக நாட்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானம் உள்ளதோ அவரே அன்றைய சமூகத்தில் மரியாதையாக பார்க்கப்பட்டார்.

    1400 வருடங்களுக்கு முன்பு அராபியாவில் வட்டி பெரும் தொழிலாக நடந்து வந்தது. முகமது நபியின் சிறிய தகப்பனார் மிகப் பெரிய வட்டி வியாபாரியாக இருந்தார். யூதர்கள் மதினாவில் வட்டி தொழிலில் மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருந்தனர்.

    பெண் குழந்தைகள் பிறந்தால் வறுமைக்கு அஞ்சி உயிருடன் புதைத்து விடும் பழக்கம் அன்றைய அரபு கலாசாரமாக இருந்தது. ஜனாதிபதி உமர் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் தனது பெண் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். பிற்காலங்களில் இதனைச் சொல்லி முகமது நபியிடம் அழுத வரலாறு உண்டு. இது அன்றைய அரபுலக கலாசாரம்.

    விபசாரம் தலைவிரித்தாடியது. பலரும் ஒரு பெண்ணிடம் செல்வார்கள். அந்த பெண் கருவுற்றால் யாரை கை காட்டுகிறாளோ அவன் அந்த குழந்தைக்கு தகப்பனாக பொறுப்பெடுத்துக் கொள்வான். இது அன்றைய அரபு கலாசாரம்.

    இந்த கொடுமைகள் அனைத்தும் இஸ்லாம் வந்தவுடன் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. ஆனால் அன்று அந்த அரபுகள் என்ன செய்தார்களோ அதனை இன்று நாம் நமது நாட்டில் அரங்கேற்றி வருகிறோம்.

    பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து அல்லது அரிசியை திணித்து சேலம், உசிலம்பட்டி போன்ற ஊர்களில் இன்றும் கொன்று வருகிறோம்.

    அன்றைய அரபுகளைப் போல் சாராயத்தை 10ம் வகுப்பு மாணவனுக்கும் ஊற்றிக் கொடுக்கும் கொடுமையை செய்து வருகிறோம். அரசே சாராய கடையை நடத்தி வருடா வருடம் வருமானத்தை கூட்டும் மாவட்டங்களுக்கு அரசே ஊக்கத் தொகை கொடுக்கும் அநியாயத்தை அரங்கேற்றி வருகிறோம்.

    அன்றைய அரபுகளைப் போல் விபசார விடுதிகளை நடத்தி அதற்கு அரசு அனுமதி அளிக்கும் கொடுமையையும் செய்து வருகிறோம். பல பெண்களை பொட்டுக்கட்டி கோவிலுக்கு நேர்ந்து விட்டு அவர்களை தேவரடியார்கள் என்ற புனித பெயரை சூட்டி அவர்களை முடிவில் விபசாரத்தில் தள்ளுகிறோம்.

    அன்றைய அரபுகளைப் போல் வட்டி தொழிலை வங்கிகள் மூலமாக அரசே நடத்துவதை நாம் அங்கீகரிக்கிறோம். அதிலும் ஒரு படி மேலே போய் கந்து வட்டி தொழில் மிக ஜோராக நடக்கும் மாநிலம் நமது மாநிலம் என்றால் அதுவும் மிகையாது.

    இவ்வாறு அன்றைய அரபுகள் எதை எல்லாம் தங்கள் கலாசாரமாக கொண்டிருந்தார்களோ அவை அனைத்தையும் தமிழர்களாகிய நாம் நமது கலாசாரமாகவே மாற்றி விட்டோம்.

    ஆனால் 3000 வருடங்களுக்கு முன்பு உள்ள தமிழனின் கலாசாரம் என்பது என்ன?

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
    -திருமூலர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
    – (புறம்: 129)

    “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
    சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
    நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

    -சிவவாக்கிய சித்தர்

    மேலே நாம் பார்த்த மூன்று பாடல்களின் அடிப்படையில்தான் அன்றைய தமிழகம் இருந்தது. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எவ்வாறு வாழ்ந்தானோ அந்த வாழ்கையைத்தான் இன்றைய இஸ்லாமியர்கள் அதாவது உங்கள் பாஷையில் ‘வஹாபிகள்’ செய்து வருகிறார்கள். எனவே அன்றைய அரேபிய கலாசாரத்தை துடைத்தெறிவதற்காக நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். திருவள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும், சிவ வாக்கிய சித்தரும், திருமூலரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் மலரும் தவ்ஹீத் அதாவது ஓரிறைக் கொள்கை புரட்சியினைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்திருப்பர்.

    மேலும் சொல்கிறேன் கேளுங்கள்…..

    குலப்பெருமை பேசி அன்றைய அரபுகள் பல வருடங்கள் சண்டையிடுவார்கள். கொலைகளும் தாராளமாக நடக்கும். அந்த கொலைக்கு பழி வாங்க அவனது வாரிசுகள் இலக்காக்கப்படுவர். இது பல தலைமுறையாக நடந்து வந்தது. முகமது நபி அந்த மக்களிடம் இஸ்லாத்தை போதித்த பிறகுதான் பழிக்குப் பழி வாங்கும் வழக்கம் விட்டொழிந்தது.

    அன்றைய அரபுகள் எதைச் செய்தார்களோ அதனை இன்று நாம் அரங்கேற்றி வருகிறோம். தருமபுரி போன்ற மாவட்டங்களில் குலப்பெருமை பேசிக் கொண்டு காதலின் பெயரால் குடிசைகளை கொளுத்திக் கொண்டிருக்கிறோம். பலரை உயிரோடு எரிக்கவும் செய்கிறோம்.

    அன்றைய அரபுகளிடம் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது. மனிதர்களை அடிமைகளாக வைத்து மிகப் பெரும் கொடுமையை செய்து வந்தனர். எந்த சம்பளமும் தராமல் வாழ்நாள் முழுக்க முதலாளிக்கு உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். வணக்க வழிபாடுகளில் அவர்களுக்கென்று ஒரு நாளை நியமித்து இறை இல்லங்களுக்குள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்தனர். இஸ்லாம் வந்ததற்கு பிறகு அந்த கஃபாவில் முதன் முதலாக பாங்கொலியை சொன்னவர் பிலால் என்ற ஆப்ரிக்க அடிமை. முகமது நபி இவர்தான் அதற்கு சரியான ஆள் என்று தேர்ந்தெடுத்து அந்த புனிதப்பணியை செய்ய வைத்தனர்.

    அன்று அந்த அரபுகள் எவ்வளவு தீண்டாமை பாராட்டினார்களோ அதற்கு ஒரு படி மேலே போய் காலில் செருப்பணிந்து வந்தாலே குற்றமாக பார்க்கும் மனப்பான்மையை நமது இளைஞர்களிடத்திலே வளர்த்து வைத்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செருப்பணிந்து டீக்குடிக்க வந்ததால் சக மாணவர்களால் எச்சரிக்கப்பட்டு அடியையும் கொடுத்துள்ளனர். தலித் மாணவர்கள் தற்போது காவல் துறையை நாடியுள்ளனர்.

    அதற்கும் மேலாக அந்த தலித்களை கோவில்களுக்குள் அனுமதிக்காமலும், அவர்களோடு திருமண உறவு கொள்ளாமலும் ஒதுக்கியே வைத்துள்ளோம். இன்று வரை அது தொடர்கிறது. அன்றைய அரபுகளுக்கு சற்றும் நாங்கள் குறைந்தவர்களல்ல என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களோடு போட்டி போடுகிறோம்.

    அந்த அரபு கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவே நாங்கள் அதாவது ஏகத்துவவாதிகள் பாடுபடுகிறோம். இது தமிழகத்துக்கு நல்லதா அல்லது தீயதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

  14. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ஆஹா இன்னொரு நபியை பார்க்கிறோம்.
    என்ன தீர்க்கதரிசனம், நிச்சயம், அப்படியே வஹிதான் இறங்கியிருக்கிறது.
    //கண்டிப்பாக இதற்கான தண்டனையை வாழும் நாட்களிலேயே இறைவன் மூலம் பெற்றுக் கொள்வீர்கள்.//
    அதெப்படி சுபி, இறைவன் உங்களிடம் வந்து சொன்னானா? இவ்வளவு நிச்சயமாக சொல்லுகிறீர்கள் என்றால், வஹிதான் வந்திருக்கவேண்டும்! அடேங்கப்பா!//

    என்னை இந்த பதிவில் எந்த காரணமும் இன்றி பிணந்தின்னி என்று அழைத்துள்ளார் அஜீஸ் என்ற இந்த நபர். ஒருவன் மீது அவதூறாக ஒரு குற்றச்சாட்டை வைத்தால் பாதிப்படைந்த அந்த ஒருவன் மனம் வெதும்பி இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனையை இறைவன் உடன் ஏற்றுக் கொள்கிறான். எனவே கண்டிப்பாக எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான். அஜீஸ் என்ற இந்த நபரும் கூடிய விரைவிலேயே உணர்வார்.

    ‘அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமன் நாட்டுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2448)

  15. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //டாக்டர்.சலீம்,மற்றும் அஜீஸ் அவர்களின் தமிழ் இந்து பாரம்பரிய இஸ்லாத்திற்கு க்ருஷ்ண குமார்.அன்பர் அரி சோனர் போன்றவர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். //

    உயர்திரு ஷாலி அவர்களே! நான் எழுதியதற்கும், நீங்கள் குறிப்பிட்டதற்கும் தொடர்பே இல்லை.

    தாங்கள் தேவை இல்லாமல் இந்து சமயத்தைப் பற்றி குறைத்துக் கருத்துப் பதிவு செய்திருக்கிறீர்கள். நான் இசுலாமைப் பற்றி அப்படி ஒரு பதிவும் செய்யவில்லை. //“தர்காக்களில் நம்பிக்கை வைத்திருக்கும் எண்ணற்ற முஸ்லீம் உடன்பிறப்புகளின் மனம் புண்படும்படி கருத்து எழுதவேண்டிய தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.” // என்றும், //நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவது உங்கள் உரிமையே தவிர, இசுலாமைப் பின்பற்றும் முனைருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு ஏன் போகவேண்டும் என்பதே எனது கருத்து ஆகும்.//
    என்றும் இரண்டு கருத்துக்களையே பதிந்திருக்கிறேன்.

    இசுலாமில் பிரிவுகள் இருக்கலாம், அதைப்பற்றி இசுலாமிய சமயப் பெரியவர்கள் என்த்தநியோ கருத்துக்கள் கூறலாம். அது பற்றி நான் அறியேன். அதுபற்றிக் கருத்தும் கூறமாட்டேன். என்னைப் பொறுத்தவரை, அவரவர் நம்பிக்கைகள் — கடவுள் மறுப்பு உள்பட — அவரவரது. அந்த நம்பிக்கை பிறரைப் பாதிக்காதவரை, எனக்கு அந்த நம்பிக்கைகளை இகழவோ, அவர்கள் தாழ்ந்தவர்கள், இவர்கள் உயர்ந்தவர்கள், இவர்கள் எனக்குப்பிடித்தவர்கள், இவர்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் என்று பட்டியல் போடுவதில்லை.

    எனவே, எனக்குப் பிடித்த இசுலாமியர்கள் தமிழ் பாரம்பரிய இசுலாமியர்கள் என்று நீங்கள் எழுதி இருப்பது தேவையற்ற கருத்து. நீங்கள் எந்தவிதமான இசுலாமியத்தை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. நான் எழுதாத ஒன்றை நீங்களே கற்பனை செய்துகொண்டு இம்மாதிரி எழுதுவதில் எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை என்று வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    எனக்கு மாற்றுக் கருத்து எழுதுவது வேறு, என்மீது அச்சுக்குத்துவது வேறு.

    1. Avatar
      ஷாலி says:

      //தாங்கள் தேவை இல்லாமல் இந்து சமயத்தைப் பற்றி குறைத்துக் கருத்துப் பதிவு செய்திருக்கிறீர்கள். நான் இசுலாமைப் பற்றி அப்படி ஒரு பதிவும் செய்யவில்லை//

      அன்பு நண்பர் அரி சோனன் அவர்களே! தாங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.இந்து சமயத்தைப் பற்றி நான் குறைத்து பதிவு செய்ததாக குற்றம் சாற்றிகிறீர்கள்.எந்த மதக் கருத்துக்களையும் குறைத்துப்பேச எவருக்கும் தகுதியில்லை.அஜீஸ்,சலீம் போன்ற பெயர் தாங்கிய முஸ்லிம்கள் இந்துமத சடங்குகளை இஸ்லாம் லேபிளில் கடைப்பிடிக்கிறார்கள் என்றுதான் எழுதியுள்ளேன்.இப்படி எழுதுவதால் நான் இந்து சமயத்தை குறைவு செய்வதாக பொருளல்ல.இஸ்லாம் சமயப்படி அவர்கள் நடக்கவில்லை என்பதே என் கருத்து.

      . //“தர்காக்களில் நம்பிக்கை வைத்திருக்கும் எண்ணற்ற முஸ்லீம் உடன்பிறப்புகளின் மனம் புண்படும்படி கருத்து எழுதவேண்டிய தேவை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.” // என்றும், //நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவது உங்கள் உரிமையே தவிர, இசுலாமைப் பின்பற்றும் முனைருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு ஏன் போகவேண்டும் என்பதே எனது கருத்து ஆகும்.//

      ஒரு தவறை தொடர்ந்து செய்பவருக்கு அதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை, இந்த அறிவுரை அவர் மனதை புண் படுத்தத்தான் செய்யும்.புண் படுவார்கள் என்பதற்காக அவர்களை அத்தவறிலேயே விட்டுவிடுவது நல்ல மனிதர்க்கு அழகல்ல.கருத்தை சொல்வதுதான் நமது கடமை.கட்டாயப்படுத்துவதல்ல.ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய வழியில் செல்லலாம். அவரவர் செயலுக்குத் தகுந்த கூலியையும் அவர்கள் அடைவார்கள்.இதுதான் இஸ்லாம் பூச்சாண்டி? காட்டும் சொர்க்கம்,நரகம்.

  16. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
    சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
    நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”//

    ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே, தங்கள் மேலோட்டமாக எழுதி உள்ளீர்கள். சித்தர்கள் குறிப்பிட்டதன் உட்கருத்து வேறு. சிவதத்துவத்தை உணராது வெறுமனே குப்பிட்டால் பலனில்லை என்பதே அது. கல்லைக் கும்பிடாதே என்று மேலோட்டமாகப் பொருள் செய்துகொள்ளதீர்கள். சைவத்தைப் பற்றிப் பேச சைவப் பெரியார்களிடம் கற்றுக்கொண்டு பேசுங்கள். நான் இசுலாமைப்பற்றிப் பேசவேண்டும் என்றால் தங்களைப்போல இசுலாமை நன்கு கற்று உணர்ந்த இசுலாமியர்களிடம் கற்காமல் பேசமாட்டேன். இசுலாமைப் பின்பற்றாத நான் இசுலாமைப் பற்றியே பேசமாட்டேன்.

  17. Avatar
    தங்கமணி says:

    சுபி,
    //பாதிப்படைந்த அந்த ஒருவன் மனம் வெதும்பி இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனையை இறைவன் உடன் ஏற்றுக் கொள்கிறான். //
    உடன் என்றால் எவ்வளவு சீக்கிரம்?
    பாதிப்படைந்த ஒருவன் இறைவனிடம் பிரார்த்தித்தால்தான் அந்த பாதிப்பை சரி செய்வானா? பாதிப்படைந்தவனுக்கு அவன் பிரார்த்திக்காமலேயே சரி செய்யமாட்டானா? ஏன் இப்படி இறைவனை, சுயமோகம் கொண்டவனாக கற்பனை செய்கிறீர்கள்?

    அது சரி, இதுவரை எந்த பாலஸ்தீனரும் பாதிப்படையவில்லையா? அல்லது எந்த பாலஸ்தீனரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லையா?

    அது சரி, இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது அது அல்லாஹ் என்ற பெயரில் முகம்மது குறிப்பிட்ட மாதிரி பிரார்த்தனை செய்தால்தான் ஏற்றுகொள்வானா? அதே மாதிரி பிரார்த்தனை செய்யவில்லை என்றால் ஏற்றுகொள்ளமாட்டானா?

    இதனை முகம்மது சொன்னதாக எழுதியிருக்கிறீர்களே? அது அவருக்கு எப்படி தெரியும்? அல்லாஹ் வந்து அவரிடம் சொன்னாரா? அவராக இட்டுக்கட்டினாரா?


    அஜீஸ் உங்களை சொன்னது இருக்கட்டும். நீங்களும் உங்களை சேர்ந்த வஹாபிகளும் பண்ணும் அட்டூழியங்களை எல்லாம் இறைவன் பாராட்டுகிறான் என்று நினைத்துகொண்டிருக்கிறீர்களா?

    வஹாபிகளின் வழித்தோன்றல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சிரியாவில் சவுதி அரேபியா, பஹ்ரேன், ஷேக்குகளின் ஆதரவுடன் அங்குள்ள சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா?

    அவர்களுக்கெல்லாம் அநீதி இழைக்கப்படவில்லையா? அல்லது அதெல்லாம் அல்லாவின் வழியில் நடக்கும் ”அறப்போரா”?

    அதெல்லாம் கண்டும் காணாமலுமாக நடந்துகொண்டு, நாங்கள் வஹாபிகள் என்று பெருமை பேசித்திரியும் உங்களைப்போன்றவர்களை அவர் அவ்வாறு அழைத்தது சரிதான் என்று நினைக்கிறேன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சுவனப்பிரியன் இசுலாமியர்களையும் இசுலாமையும் மட்டுமே பேசினால் கட்டுரையின் மையக்கருத்தை விட்டு எல்லாரும் நகரமாட்டார்கள். சுவனப்பிரியன் தடம்புரளுவதை தங்கமணி பயன்படுத்தி விவாதக்களத்தையே மாற்றுகிறார்.

      இக்கட்டுரையின் மையக்கருத்து முசுலீம்கள் இறந்த மஹானகளை இந்துக்களைப்போல வழிபடலாமா? எனபதுவே. வழிபடுகிறார்கள் என்பது உண்மை. அதற்கு அஜீஸ் போன்றவர்கள் வைக்கும் காரணம்: அவர்களை இறைவனுக்கு நிகராக வழிபடவில்லை. வெறுமனவே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் என்று கேட்கமட்டுமே.

      இப்படி அஜீஸ் சொல்லலாம். ஆனால், தர்காவுக்குப்போகும் முசுலீம்கள் அனைவரும் செய்கிறார்களா? ஏனென்றால் இந்தியாவில் ஒரு மஹானை, வெறும் மஹானாக மட்டும் பார்க்கும் பக்குவமில்லை. இருந்திருந்தால், சாய் பாபாக்களுக்குக் கோயில்கள் வந்திருக்கா. சீரடி சாயிபாபா கோயிலில் கூட்டத்தைப் பார்த்தபின் துவாரகா சங்கராச்சாரியார் இவர் ஒரு முஸுலீம் ஃபக்கீர் இந்துக்கள் வணங்கக்கூடாது என்ற சொனனது பிரச்சினையாகிவிட்டது.

      இசுலாம் இறைவன ஒருவனே என்ற அடிப்படையின் மேல் எழுந்த மதம். தர்க்கா வழிபாடு வெறும் வழிபாடாக இல்லாமல், கந்தூரி விழா, காது குத்தல், அலகு குத்தல் என்று போய் கடைசியில் அம்மஹானையே தெய்வமாக்குகிறது. கத்தோலிக்கர்களுக்கும் அந்தோணியும் மரியாளும் தெய்வங்களல்ல. அவர்கள் வெறும் மீடியேட்டர்கள் போல. அதாவது அவர்களிடம் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் என்று வழிபடல் மட்டுமே. ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மக்கள் கூட்டம் உவரி அந்தோணியார் கோயிலில் அலைமோதுகிறது. எல்லோருமே அந்தோணியார் தங்களின் குறைகளை நேரடியாகத்தீர்ப்பார் என்றுதான் போகிறார்கள்.

      எனவேதான், இப்படிப்பட்ட தர்கா வழிபாடு இறுதியில் இசுலாத்திற்கு எதிராக முடியும். அஜீஸ் என்னிடம் பேசலாமே? நான் அவருக்கு விளக்கத்தயார்.

      (இப்பதில் வெளியிடப்படவில்லையென்றால், ‘தீவிரவாதமும் அடிப்படை வாதமும்’// என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை அனுப்புகிறேன்.)

  18. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //வஹாபிகளின் வழித்தோன்றல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சிரியாவில் சவுதி அரேபியா, பஹ்ரேன், ஷேக்குகளின் ஆதரவுடன் அங்குள்ள சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா?
    அவர்களுக்கெல்லாம் அநீதி இழைக்கப்படவில்லையா? அல்லது அதெல்லாம் அல்லாவின் வழியில் நடக்கும் ”அறப்போரா”?//

    இஸ்லாத்தின் பெயரால் யார் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு குர்ஆனின் கட்டளை இருக்க வேண்டும். அது அல்லாமல் தனி மனிதர்கள் செய்யும் எந்த காரியத்துக்கும் இஸ்லாமோ முஸ்லிம்களோ பொருப்பாக மாட்டார்கள்.

    ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே சிஐஏவும், மொஸாத்தும் சேர்ந்து அவர்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள உருவாக்கிய அமைப்புகளே! எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் இத்தனை இடங்களை இவர்களால் எப்படி பிடிக்க முடிந்தது? அதிலும் பல லட்சம் டாலருக்கு பெட்ரோலை விற்கின்றனர் இந்த தீவிரவாத குழுவினர். இதனை வாங்குபவர்கள் யார்? உங்கள் வீட்டில் உங்களையே கண்காணிக்கும் வசதிபடைத்த அமெரிக்காவால் இதனை கண்டுபிடிக்க முடியாதா? சதாம் ஹூசைனை சில வாரங்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். கடாஃபியையும் சில வாரங்களிலேயே ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வர இன்னும் இவர்களால் முடியவில்லையாம். தாலிபான்களை உருவாக்கியதும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். அதே போல் அல்காயிதா, உசாமாபின்லேடன், என்று அனைவரையும் உருவாக்கியது சிஐஏவும் மொசாத்தும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

    அமைதியிழந்த அமெரிக்க ஐரோப்பிய மக்கள் இன்று லட்சக்கணக்கில் இஸ்லாத்தில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இன்றும் 10 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் தேசங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அந்த தேசங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான முதல்படிதான் அல்காயிதா, ஐஎஸஐஎஸ போன்ற அமைப்புகள். இந்த அமைப்பின் பெயரால் அராஜகங்களை அரங்கேற்றினால் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியும். அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அரபு நாடுகளின் பெட்ரோல் வளத்தையும் சுரண்ட முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தற்போது ஆப்கானிஸ்தானத்தில் அந்த நாட்டை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் சென்ற மாதம் அமெரிக்கா புதிதாக பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதை நாம் பத்திரிக்கையில் பார்த்தோம்.

    நமது நாட்டிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற அமைப்பை உளவுத்துறையே உருவாக்கியதாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜூ கூறியதையும் நாம் மறந்து விட முடியாது.

    இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

    SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

    அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

    1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.

    2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.

  19. Avatar
    suvanappiriyan says:

    திரு அரிசோனன்!

    //ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே, தங்கள் மேலோட்டமாக எழுதி உள்ளீர்கள். சித்தர்கள் குறிப்பிட்டதன் உட்கருத்து வேறு. சிவதத்துவத்தை உணராது வெறுமனே குப்பிட்டால் பலனில்லை என்பதே அது. கல்லைக் கும்பிடாதே என்று மேலோட்டமாகப் பொருள் செய்துகொள்ளதீர்கள்.//

    உருவ வழிபாட்டை சித்தர்கள் குறிப்பிடவில்லை என்பது உங்களின் வாதம். சிவ வாக்கிய சித்தரின் பாடல்களிலிருந்து இதற்கு ஆதாரத்தை தாங்கள் சமர்ப்பித்தால் நானும் தெரிந்து கொள்வேன். தருவீர்களா?

  20. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //பாதிப்படைந்த ஒருவன் இறைவனிடம் பிரார்த்தித்தால்தான் அந்த பாதிப்பை சரி செய்வானா? பாதிப்படைந்தவனுக்கு அவன் பிரார்த்திக்காமலேயே சரி செய்யமாட்டானா? ஏன் இப்படி இறைவனை, சுயமோகம் கொண்டவனாக கற்பனை செய்கிறீர்கள்?//

    இந்த உலகத்திலேயே சிலருக்கு தண்டனை உண்டு. இன்னும் சிலருக்கு மறுமையில் நரகத்தில் தண்டனை உண்டு. யாரும் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது.

    //அது சரி, இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது அது அல்லாஹ் என்ற பெயரில் முகம்மது குறிப்பிட்ட மாதிரி பிரார்த்தனை செய்தால்தான் ஏற்றுகொள்வானா? அதே மாதிரி பிரார்த்தனை செய்யவில்லை என்றால் ஏற்றுகொள்ளமாட்டானா?//

    தமிழில் இறைவன். மொழிகள் அனைத்தையும் படைத்தது இறைவன்தானே! நான் ‘இறைவா’ என்றுதான் பிரார்த்திப்பேன்.

    ‘அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.’

    குர்ஆன் 17 :110

    ‘ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி’

    -ரிக் வேதம் 1:164:46

    ‘ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.’

    //இதனை முகம்மது சொன்னதாக எழுதியிருக்கிறீர்களே? அது அவருக்கு எப்படி தெரியும்? அல்லாஹ் வந்து அவரிடம் சொன்னாரா? அவராக இட்டுக்கட்டினாரா?//

    வானவர் ஜிப்ரீல் மூலமாக இறைவன் நபிகள் நாயகத்துக்கு அறிவித்தான். ஏசு நாதருக்கு பரிசுத்த ஆவி மூலம் இறைவன் பேசியதைப் போன்று

  21. Avatar
    ஷாலி says:

    //தர்காவுக்கு செல்லும் எந்த முஸ்லீமும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை பார்ப்பதுமில்லை, வணங்குவதுமில்லை. தங்களுக்காக அல்லாவிடம் கேட்டுகொள்வதற்காவே செல்லுகிறார்கள்.//

    அன்பர் அஜீஸ், முஸ்லிம்கள் தர்காவிற்கு செல்வது தங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்டுக்கொள்வதற்காக அதாவது சிபாரிசு செய்வதற்காக போவதாக குறிப்பிட்டார்.புனித மகான்களாக அடங்கப்பட்டவர்கள் அனைவரும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று எதை வைத்து தீர்மானிப்பது?

    ஒவ்வொரு முஸ்லிமும் நாள்தோறும் ஐந்து வேளை தொழுகையில் தொடர்ந்து ஓதிவரும் ‘அல்ஹம்து” அத்தியாயத்தில் உள்ள “அல்லாஹ்வே! உன்னையே வணக்குகிறேன்! உன்னிடமே உதவி தேடுகின்றேன்!” என்று ஓதி விட்டு சமாதியில் மக்கி மண்ணாகிய மனிதரிடம் சிபாரிசுக்கு போவதன் பொருளென்ன?

    மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்,அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.-அல் குர்ஆன்.50:16.

    இவ்வளவு நெருக்கமாக இருக்கும் படைத்த இறைவனிடம் நேரடியாக கேட்காமல் இறந்த அடியார்?யிடம் சிபாரிசு தேடி ஓடத் தேவையில்லையே?

    //According to another report narrated by Muslim (332), “I will be the first one to intercede concerning Paradise.”
    மேலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனுக்கு பிரியமானவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சலாம் என்று அல்குரானே அறிவிக்கிறது.
    அடியார்களை பற்றி தெளிவாக அல்குரான் அறிவிக்கும்போது, அவர்கள் தன்னிடம் தன் அனுமதியுடன் பரிந்துரை செய்யலாம் என்று அல்லாஹ் அறிவிக்கிறான்.
    21:28. அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை17 செய்ய மாட்டார்கள்.//

    //திரும்ப சொல்லுகிறேன். அது சமாதி வழிபாடு அல்ல. அல்லாவிற்கு பிரியமான இறைநேசர்களை நமக்காக இறைஞ்சும்படி கேட்டுகொள்வது. அதற்கு அனுமதி அல்குரானிலேயே இருக்கிறது என்று காட்டியும், திரும்ப வஹாபி உளறல்கள் எதற்கு?//

    அன்பர் அஜீஸ் குறிப்பிடும் மேற்படி வசனமும் மற்றும் 21:28,2:55,53:26.போன்ற வசனங்களும் இவ்வுலகத்தில் நடைபெறும் சிபாரிசை குறிப்பிடவில்லை. இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின்னர், இறந்த மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு அவரவர்கள் நன்மை தீமை இறைவன் முன்னால் விசாரிக்கப்படும்போது அந்தந்த மனித சமூதாயத்திற்க்காக அனுப்பப்பட்ட நபிமார்கள் என்னும் தீர்க்கதரிசிகள் இறைவனின் அனுமதியோடு சிலருக்கு சிபாரிசு செய்வார்கள். இன்று மண்ணறை மனிதர்களிடம் சிபாரிசுக்கு மன்றாடும் மூட முஸ்லிம்களை இவ்வசனம் குறிக்கவில்லை என்பதை அன்பர் அஜீஸ் அறிவாராக!

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி, ஜெனாப் சுவனப்ரியன்

    இது ஹிந்துஸ்தானம்.

    பாக்கி ஸ்தானம் இல்லை. அதாவது 1947ம் வருஷம் ஹிந்துஸ்தானத்தை இஸ்லாமிய மதவெறியால் இரண்டாகப் பிளந்து…… பின்னர் மொழி வெறியால் பாகிஸ்தானம் என்ற உலகின் இழிவான மதவெறி நிலப்பரப்பு இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டு…… பாக்கியாக உள்ள பாக்கி ஸ்தானம் ………….. மதவெறியால் உருவாகி மொழிவெறியால் உடைக்கப்பட்ட இழிவான நிலப்பரப்பு…….

    தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள் இன்று நேற்று இல்லை……….. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அகண்ட ஹிந்துஸ்தான நிலப்பரப்பு முழுதிலும் செழித்துத் தழைத்து வரும் வழிபாட்டு முறை. கோடிக்கணக்கான இஸ்லாமியர் இந்த வழிபாட்டு முறைப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்கள். இந்த வழிபாட்டு முறை பிற்போக்கு இஸ்லாத்துக்கு ஆப்பு வைக்கும் முற்போக்கு வழிபாட்டு முறை. தமிழகம் மட்டுமென்ன தேசத்தின் அனைத்து ப்ரதேசங்களின் பண்பாட்டினை அடியொற்றிய வழிபாட்டு முறை. தேச விரோதிகளுக்கு ஆப்பு வைக்கும் வழிபாட்டு முறை. மதவெறிக்கருத்துக்கு ஆப்பு வைத்து மதநல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் வழிபாட்டு முறை. மதவெறி சக்திகளும் தேச விரோத சக்திகளும் இந்த வழிபாட்டு முறைக்கு ஏன் விரோதிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான விஷயம்.

    இவர்கள் அல்லாவை நேரடியாகக் கும்பிடுகிறார்களா……….. அல்லது அல்லாவை இறந்து போன ஒலியுல்லாக்கள் மூலம் வழிபடுகிறார்களா……….. அல்லது ஒலியுல்லாக்களையே வழிபடுகிறார்களா………..என்பது வழிபடும் ஒவ்வொரு தனி மனிதனுடைய சட்ட ரீதியான உரிமை. அப்படியான கோடிக்கணக்கான எமது இஸ்லாமிய சஹோதரர்களை இழிவு படுத்துவதற்கு….. அல்லது அவர்களது வழிபாட்டு முறைகளை நிந்திக்க முனைவதற்கு…… முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கிகளுக்கோ அல்லது வஹாபியர்களுக்கோ………. எந்த சட்டரீதியான உரிமையும் இல்லை.

    உலகின் இழிவான மதவெறி நிலப்பரப்பான பாக்கி ஸ்தானத்தில் மட்டிலுமே ஷியா முஸ்லீம்களை குண்டு வைத்து கொலை செய்ய முடியும். பைகம்பர் மஹம்மது நபி சாஹேபின் பிறந்தநாள் ஊர்வலம் கொண்டாடும் பரேல்வி சுன்னி இஸ்லாமிய சமூஹத்தினர் மீது குண்டு வைத்து கொலை செய்ய முடியும். அஹ்மதியாக்களை இஸ்லாமியரே இல்லை என்று சட்டமே போட முடியும்.

    ஹிந்துஸ்தானத்தில் முடியாது.

    முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கிகளாக இருக்கட்டும்…………பிற்போக்கு பயங்கரவாத ஜிஹாதி கொலைவெறியை முன்னிறுத்தும் வஹாபிய ஐஎஸ் ஐஎஸ் ஆதரவாளர்களாக இருக்கட்டும்…………. ஹிந்துஸ்தானத்தில் ஷியாக்களோ அஹ்மதியாக்களோ அல்லது ஸூஃபி முஸல்மாணியரோ இஸ்லாமியர் இல்லை என்று பரப்புரை செய்வது …………. சட்ட விரோதமான செயற்பாடு ஆகும்.

    ஈரான், ஈராக், சிரியா, லெபனான் என உலகில் பல தேசங்களிலேயே ஷியா இஸ்லாம் அந்த தேசத்து மதமாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதை பின்பற்றி வருகின்றனர். ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் ஈரானுக்குப் போய் அங்குள்ள அயதுல்லாக்களிடம் போய் ஷியா இஸ்லாம் என்பது இஸ்லாமே இல்லை என்ற அரும் பெரும் கருத்தை அவர் வாழும் அராபியத்திலிருந்து போய் பரப்பட்டும். ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்ற படிக்கு……….. அஹ்மதியாக்களோ ஸூஃபிகளோ ஷியாக்களோ முனைந்து ஐஎஸ் ஐஎஸ் ஆதரவு வஹாபியத்தை மறுதலிக்கவில்ல என்ற படிக்கு……… உங்களுடைய வஹாபிய மதவெறிக்கருத்தை ஹிந்துஸ்தானத்தில் பரப்புவது மதவிரோதத்துக்கு தீனி போடும் இழிவான செயலாகும்.

    ஓரிறைக்கொள்கையகவே ஆனாலும் சரி, உலகத்தில் மதம் என்பது என்றும் என்றென்றும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி ஆக முடியாது. ஆகவே முடியாது.

    மனிதர்கள் யாரும் தனித்த தீவில் வாழ்வதில்லை. மனிதர்கள் ஒருவருடனொருவர் பழகுகையில் ஒரு கருத்தாக்கத்திலிருந்து இன்னொரு கருத்தாக்கம் கொள்வதும் கொடுப்பதும் தொடர்ந்து மனித சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நிகழ்ந்து வரும் சாதாரண விஷயம்.

    இஸ்லாம் மட்டிலும் என்ன…….. அப்பனான க்றைஸ்தவம் அதன் பாட்டனான யஹூதிய மதம்……….. இவையனைத்திலும் பிரிவுகள் பிரிவுகள் பிரிவுகள் ………….. எண்ண முடியாத பிரிவுகள்.

    சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம்…………. என ஹிந்துஸ்தானத்தின் எந்த சமயத்தை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பிரிவுகள் நிச்சயம் காணக்கிட்டும் என்றால்………. இவை புழங்கும் அதே ஹிந்துஸ்தான நிலப்பரப்பில் புழங்கும் ஆப்ரஹாமிய மதங்களில் ஏன் பிரிவுகள் காணக்கிட்டாது.

    வேறுபாடு. ஹிந்துஸ்தானத்திய மதங்களில் கொலைவெறிக்கருத்தாக்கங்கள் இல்லையென்பதால் பயங்கரவாத பிற்போக்கு வஹாபியம் போன்று வஹாபியமே இஸ்லாம் மற்றைய அனைத்து பிரிவுகளும் இஸ்லாமே இல்லை என்ற அடாவடி அசிங்கங்கள் சைவத்திலோ வைஷ்ணவத்திலோ பௌத்தத்திலோ ஜைனத்திலோ சீக்கியத்திலோ பார்க்க இயலாது.

  23. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஜெனாப் சுவனப்ரியன்

    எப்படிகூசாமல் உங்களால் பொய் சொல்ல முடிகிறது.

    அன்றைய அராபியம் அசிங்கமாம். இன்றைய அராபியத்தில் தேனும் பாலும் ஓடுகிறதாம். வெட்கம். வெட்கம்.

    \\\ மேலே நாம் பார்த்த மூன்று பாடல்களின் அடிப்படையில்தான் அன்றைய தமிழகம் இருந்தது. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எவ்வாறு வாழ்ந்தானோ அந்த வாழ்கையைத்தான் இன்றைய இஸ்லாமியர்கள் அதாவது உங்கள் பாஷையில் ‘வஹாபிகள்’ செய்து வருகிறார்கள். \\\

    இன்றைய அராபிய ஐஎஸ் ஐஎஸ் என்ற வஹாபிய கொலைவெறியர் போன்று தமிழகத்தில் 3000 வருஷம் முன்னர் மாற்றுக்கருத்துள்ள சமயத்தினரை தமிழர்கள் கொலை செய்தனரா.

    தமிழன் ஒரே கடவுளைத் தான் வழிபட்டான் என்று எப்படி கூசாது உங்களால் புளுக முடிகிறது. தமிழ்ச் சங்க நூற்கள் ஐவகை நிலமும் அந்த நிலத்தில் வழிபடும் கடவுட்கள் பற்றியும் கூறுவதை எப்படி நைசாக மறைத்து அல் தக்கியா செய்கிறீர்கள்.

    தமிழர்கள் மாற்று சமயத்தினரின் வழிபாட்டு ஸ்தலங்களை தகர்த்து நொறுக்கினரா? நோயாளிகளுக்கு பணிசெய்யும் அப்பாவிப்பெண்களை வீரமாக பிணையக்கைதிகளாக தமிழன் பிடித்து வைத்தான் என்று புறநானூறு கூறுகிறதா? அகநானூறு கூறுகிறதா? இது போன்ற இழி செயல்கள் அராபிய பிற்போக்கு கொலைவெறி பயங்கரவாத வஹாபியத்துக்கு மட்டிலுமே உரியது. இது போன்ற இழிவான செயல்களில் தமிழன் என்றுமே ஈடுபட்டது கிடையாது.

    3000 வருஷத்துக்கு முந்திய சங்க நூற்கள் பேசும் தமிழனை இன்றைய அராபிய ஜிஹாதி பயங்கரவாத கொலைவெறி பிற்போக்கு அராபிய அசிங்கங்களுடன் ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள்.

    \\\ குலப்பெருமை பேசி அன்றைய அரபுகள் பல வருடங்கள் சண்டையிடுவார்கள். கொலைகளும் தாராளமாக நடக்கும். அந்த கொலைக்கு பழி வாங்க அவனது வாரிசுகள் இலக்காக்கப்படுவர். \\\\

    அடுத்த மனிதரை கொடூரமாக கொலை செய்வது என்பது அராபிய ஜிஹாதி பிற்போக்கு கொலைவெறி வஹாபிய இஸ்லாத்தின் டி என் ஏ வில் உறைந்து போன சமாசாரம். இன்றைக்கு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அரக்கர்கள் அராபியப்பாலவனங்கள் முழுதும் கொலை தானே செய்து வருகிறார்கள். அதைத்தானே நீங்கள் ஆதரிக்கிறீர்கள். அதை தமிழனின் மீது சுமத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது

    \\\\ அன்றைய அரபுகளிடம் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது. மனிதர்களை அடிமைகளாக வைத்து மிகப் பெரும் கொடுமையை செய்து வந்தனர். \\\

    ஏன் உங்கள் குரான்-ஏ-கரீமில் அடிமைகளைப் பற்றிய இழிவான கருத்துக்கள் இல்லை. இன்றைய திகதியில் கூட அராபியத்தில் மாற்று தேசத்து இஸ்லாமியரைக்கூட அராபியர்கள் இழிவாக நடத்துவதில்லை? கூசாமல் பொய் சொல்வதால் பொய்கள் உண்மையாகாது.

    ஆடு நனைகிறதே என்று முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கிகளும் அராபியர்களும் அழவேண்டியதில்லை. தலித் சஹோதரர்கள் இன்றைய திகதியில் எத்தனையோ ஆர்யசமாஜ வேத பாடசாலைகளில், ஆர்ஷ் வித்யா பரிஷதுகளில், ராமக்ருஷ்ண மடங்களில் வேதம் கற்று வருகின்றனர். கற்பித்தும் வருகின்றனர்.

    இன்றைய அராபியம் அசிங்கமான மனிதத்தன்மையற்ற அரக்கத் தனமானது. உலக அமைதிக்கு எதிரானது. உலகில் எங்கெல்லாம் அப்பாவி மக்கள் குண்டு வைத்து கொலை செய்யப்படுகிறார்களோ ……….. அந்த ஒவ்வொரு அரக்கக் கொலைகளுக்கும் பின்னர் அராபியப்பணம் உள்ளது. இந்த அசிங்கம் தமிழகத்துக்கு மட்டிலும் என்ன உலகின் எந்த மூலைக்கும் வேண்டவே வேண்டாம்.

  24. Avatar
    தங்கமணி says:

    //அது சரி, இதுவரை எந்த பாலஸ்தீனரும் பாதிப்படையவில்லையா? அல்லது எந்த பாலஸ்தீனரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லையா? //
    ஏன் இந்த கேள்வியை விட்டுவிட்டீர்கள் என்று தெரியவில்லை.
    நேரமிருந்தால் இந்த பக்கத்தையும் படித்துவிடுங்கள்
    pagaduu. wordpress.com/2012/08/

    //வானவர் ஜிப்ரீல் மூலமாக இறைவன் நபிகள் நாயகத்துக்கு அறிவித்தான். ஏசு நாதருக்கு பரிசுத்த ஆவி மூலம் இறைவன் பேசியதைப் போன்று//
    அது சரி. ஏன் இந்த ஹதீஸ் குரானில் இல்லை? இதுவும் வானவர் ஜிப்ரீல் மூலமாகத்தானே தெரிந்திருக்க வேண்டும்?

    அது சரி ஜிப்ரீல் மூலமாக சொன்னதற்கு என்ன ஆதாரம்? முகம்மது தன்னிடம் ஜிப்ரீல் சொன்னார் என்று அவரே சொல்லிகொண்டதை தவிர?

    அல்லாவுக்கு இது பிடிக்கும். அல்லாவுக்கு அது பிடிக்கும் என்று குரானில் இல்லாத விஷயன்களை எல்லாம் முகம்மது சொன்னதாக ஹதீஸ்களில் பதிந்திருக்கிறதே. அதெல்லாம் ஏன் குரானில் எழுதப்படவில்லை?

    என் நண்பரிடம் கூட இறைவன் பேசினார். “முகம்மதுவிடம் நான் சொன்னதாக அவர் இட்டுக்கட்டி குரான் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதெல்லாம் நம்பாதே” என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இத்தனைக்கும் ஜிப்ரீல் மூலமாகக்கூட சொல்லவில்லை. நேரடியாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறாராம்.தன்னிடம் இறைவன் சொன்னதாக சொல்வதற்கு முகம்மதுவிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதேதான் இந்த நண்பரிடமும் இருக்கிறது.
    இது போல அரேபியாவில் பாகிஸ்தானில் கூட பலரிடம் சொல்லியிருக்கிறாராம். ஆனால் என்ன செய்வது, அப்படி தன்னிடம் இறைவன் பேசினார் என்று சொல்பவர்களை கைது செய்து மனநல காப்பகத்தில் அடைத்துவிடுகிறார்கள். அந்த கால அரபியாவில் அது போன்ற மனநல காப்பகங்கள் இல்லை போலிருக்கிறது.

  25. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //அது சரி, இதுவரை எந்த பாலஸ்தீனரும் பாதிப்படையவில்லையா? அல்லது எந்த பாலஸ்தீனரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லையா? //

    மனிதனுடைய வாழ்வானது இந்த உலகத்தோடு முடிந்து விட்டால் உங்களின் கேள்வி நியாயமானது. அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும். இவ்வுலகத்தில் நிறைவேறா விட்டாலும் மறு உலக வாழ்வில் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பான். ஒருவன் இருபது பேரை கொலை செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த உலகில் தண்டனை கொடுத்தால் ஒரு முறைதான் அவனது உயிரை எடுக்க முடியும். ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன்னால் தண்டிக்கப்பட்டால் அவன் கொன்ற அந்த இருபது பேருக்குமாக இருபது முறை உயிர் கொடுக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டு கொல்லப்படுவான். அதுதான் நியாயமாகவும் இருக்கும். உங்களைப் போன்றவர்களெல்லாம் பிற்காலத்தில் கேலி செய்வீர்கள் என்பதை இறைவன் அறிந்ததால் தனது திருமறையில் கூறுகிறான்.

    ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

    -குர்ஆன் 2:212

    //அது சரி. ஏன் இந்த ஹதீஸ் குரானில் இல்லை? இதுவும் வானவர் ஜிப்ரீல் மூலமாகத்தானே தெரிந்திருக்க வேண்டும்?//

    குர்ஆனில் இல்லை என்று யார் சொன்னது?
    யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் அது தவறாகும். ஏனெனில் அவரே இறைவனின் விருப்பப்படி இந்த குர்ஆனை முஹமதாகிய உமது உள்ளத்தில் இறக்கினார். ‘ இந்த குர்ஆனானது தனக்கு முன் சென்ற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நம்பிக்கைக் கொண்டோருக்கு நேர் வழியாகவும் நற்செய்தியாகவும் உள்ளது’ என்று கூறுவீராக!

    -குர்ஆன் 2:97
    வானவர் ஜிப்ரீல் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வேறு வசனங்கள்:
    16:102, 19:64, 26:193, 53:5

    //அது சரி ஜிப்ரீல் மூலமாக சொன்னதற்கு என்ன ஆதாரம்? முகம்மது தன்னிடம் ஜிப்ரீல் சொன்னார் என்று அவரே சொல்லிகொண்டதை தவிர?//

    குர்ஆனின் நம்பகத்தன்மைதான் பிரதானமான ஆதாரம். அறிவியல், வரலாறு, வானவியல் என்று பல துறைகளை குர்ஆன் தொட்டுச் செல்கிறது. ஆனால் இன்று வரை நிரூபணமாக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் குர்ஆனோடு மோதவில்லை. இது ஒன்றே போதும் இந்த குர்ஆனானது முகமது நபியின் கற்பனை அல்ல. உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனின் வார்த்தைதான்: இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஏதேனும் அறிவியல் குறைகளை கண்டுபிடிக்க நீங்களும்தான் முயற்சித்துப் பாருங்களேன். உங்கள் முயற்சியில் வெற்றிப் பெற்று விட்டால் உங்கள் பக்கம் நான் வந்து விடுகின்றேன். :-)

  26. Avatar
    suvanappiriyan says:

    திரு க்ருஷ்ணகுமார்!

    //தமிழன் ஒரே கடவுளைத் தான் வழிபட்டான் என்று எப்படி கூசாது உங்களால் புளுக முடிகிறது. தமிழ்ச் சங்க நூற்கள் ஐவகை நிலமும் அந்த நிலத்தில் வழிபடும் கடவுட்கள் பற்றியும் கூறுவதை எப்படி நைசாக மறைத்து அல் தக்கியா செய்கிறீர்கள்.//

    ஆதாரம் இல்லாமல் நான் எதனையும் எழுத மாட்டேன். சங்க இலக்கியங்களில் ஏக தெய்வக் கொள்கை பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரங்களை கீழே பாருங்கள்.

    தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

    அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்
    -குறள்: 388

    நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.

    “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
    -“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

    “பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
    -நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

    அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

    இனி இந்து மத வேதங்க ள் ஏக தெய்வ கருத்தை கொண்டிருப்பதை பார்ப்போம்.

    ‘அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமத்தை கைக்கொண்டு தம்முடைய இயல்புகளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்’
    -பகவத் கீதை 7:20

    ‘ஏகம் ஏவம் அத்விதயம்’ – ‘அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை’ – சந்த்க்யோ உபநிஷத் 6:2:1.

    ‘அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன்.எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.’

    -ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20

    ‘அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே’

    ‘எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள்’ -யஜூர் வேதம் 40:9
    ‘நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்’- ரிக் வேதம் 8:1:1-10

    ‘ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்’
    -ரிக்வேதம் 1:164:46

    இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. எனவே நான் பொய் சொல்லுகிறேனா? அல்லது க்ருஷ்ணகுமார் பொய் சொல்லுகிறாரா என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகின்றேன்.

  27. Avatar
    தங்கமணி says:

    //குர்ஆனின் நம்பகத்தன்மைதான் பிரதானமான ஆதாரம். அறிவியல், வரலாறு, வானவியல் என்று பல துறைகளை குர்ஆன் தொட்டுச் செல்கிறது. ஆனால் இன்று வரை நிரூபணமாக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் குர்ஆனோடு மோதவில்லை. //
    காமெடி!
    இந்த குரானில் அறிவியல் டுபாக்கூரை பலரும் கிழித்து போட்டிருக்கிறார்கள்.இருந்தாலும், இந்த வெட்டி வீராப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. எதாவது பதில் சொல்லப்போக, எப்படி குரானில் உலகம் உருண்டை என்று சொல்கிறது என்று சமாளிப்பு திலகங்கள் அளித்த இருநூறு பக்கம் கட் அண்ட் பேஸ்ட் வருமே என்று பயமாக இருக்கிறது.

    குரானுக்கு முந்திய கிரேக்க விஞ்ஞானிகளே, உலகம் உருண்டை என்று சொல்லியிருக்கும்போது, ஒரு இடத்தில் கூட உலகம் உருண்டை என்று நேரடியாக வரி குரானிலிருக்காது. அதே போல எந்த இடத்திலும் சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்று இருக்காது. சூரியன் பூமியைச் சுற்றி ஒருபாதையில் செல்கிறான் என்ற வரியை தடுக்கில் புகுந்து, பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று சமாளிப்பார்கள். பாவம் அல்லாவுக்கே சமாளிக்கிறோமே என்று கொஞ்சம் கூட வெட்கம் இருக்காது.
    இவர்கள் பதில் கூறியதும், உடனே இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவார்களாம்! எப்படி சமாளிப்பது என்றுதானே சிந்திப்பீர்கள்?

    ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

    ஷேக் இப்னு பாஸ் என்ற சவுதி இமாம், உலகம் தட்டை, சூரியனே பூமியை சுற்றுகிறது என்றெல்லாம் பத்வா போட்டிருந்தார். அங்கே போய் சுபி இந்து காபிர்களிடம் சமாளிப்பது மாதிரி சமாளிக்க முயற்சி கூட செய்திருக்கமாட்டார். செய்திருந்தால் தலை போயிருக்கும்.
    சுபி ரொம்ப வெவரம். இப்ப காபிர்களிடம் சமாளிப்பம். அப்புறம் முஸ்லிம் மெஜாரிட்டி வந்ததும், எதித்து ஏதாவது ஐ.ஐ.எம் கணபதி ராமென் மாதிரி ஆளுங்க பேசினா, அவங்க தலையெல்லாம் எடுத்துட மாட்டோமா? என்றுதான் நினைப்பார்.

    இதில் பாவம் சுபி அல்ல, கணபதிராமன் போன்றவர்கள்தான்.


    கட் அண்ட் பேஸ்ட் திலகம் சுபி அவர்களே,
    நான் கேட்டது,
    //சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா? // என்பதுதான்.
    அது சுன்னா இல்லை என்று சொல்லுங்கள். அது நபிவழிதான் என்று காட்டுகிறேன்.

  28. Avatar
    ஷாலி says:

    ///ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.//

    தெய்வ நம்பிக்கையுள்ள,உலகிலுள்ள எல்லா மதங்களும் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என்றே கூறுகின்றன. இஸ்லாமும் இதையே கூறுகிறது.பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் டார்வின் தத்துவம் உலக மதங்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நவீன அறிவியலும் DNA-Gene -மற்றும் Fossil ஆய்வுகளும் பரிணாம தத்துவத்திற்கு மரண அடி கொடுத்து வருகின்றன.

    உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதரிலிருந்து இன்று பிறக்கும் குழந்தை வரை மனிதர்களாகவே பிறக்கின்றனர்.குரங்கும் இன்றுவரை குரங்காகவே பிறக்கிறது.இறக்கிறது.குரங்கு மனிதனாக பரிணாமம் அடைவதில்லை.பன்றி மற்றும் குரங்கின் ஜீன்கள் மனிதனுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் வேற்றுமைகள் ஏராளம் உள்ளது.

    இஸ்லாத்தை கடும் காழ்ப்புணர்ச்சியுடன் வெறுக்கும் திரு.தங்கமணி ஒரு நாத்திகவாதியாக இருப்பதில் யாருக்கும் வருத்தமில்லை.ஆனால் அவர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தால் பிரம்மனின் தலையில் பிராமணன் பிறந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.இந்துவாக இருந்துகொண்டு குரங்கு வாதம் செய்வது அழகல்ல.

  29. Avatar
    தங்கமணி says:

    //நவீன அறிவியலும் DNA-Gene -மற்றும் Fossil ஆய்வுகளும் பரிணாம தத்துவத்திற்கு மரண அடி கொடுத்து வருகின்றன.//
    உருப்பட்டாற்போலத்தான்.

    //.ஆனால் அவர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தால் பிரம்மனின் தலையில் பிராமணன் பிறந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்//
    நீங்கள் முதலில் உங்கள் குரான் என்ன சொல்லுகிறது, அது எப்படி மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது, ஏன் குர்து இன முஸ்லீம் சிறுவன் கூட யாஜிதி (காபிரை) கொல்லுவதை ஆதரிக்கிறான் என்று யோசியுங்கள், பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.

    இவருடைய மதம் என்ன மடத்தனத்தை செய்துகொண்டிருக்கிறதோ அதே மடத்தனத்தைத்தான் எல்லா மதங்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார் போலிருக்கிறது.

    இந்து பாரம்பரியத்தில் ஆறு ஆஸ்திக தரிசனங்களும் நான்கு நாஸ்திக தரிசனங்களும் உண்டு. எதாவது வாயை திறக்கும் முன்னால் படித்துவிட்டு வாயை திறப்பது நல்லது.

  30. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.//

    பரிணாமவியல் டார்வினின் ஒரு கற்பனை கோட்பாடே. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் பல கல்லூரிகளில் பரிணாமவியல் பாடங்களை எடுத்து விட்டார்கள் என்ற செய்தி தங்கமணிக்கு தெரியுமா?

    பரிணாமவியலை நிரூபிக்க அதன் அறிஞர்கள் எத்தகைய மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதற்கு 10க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதை படித்து விட்டு அதன் பிறகு பரிணாவியலுக்கு வக்காலத்து வாங்க வரவும்.
    suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html
    //ஒரு இடத்தில் கூட உலகம் உருண்டை என்று நேரடியாக வரி குரானிலிருக்காது. அதே போல எந்த இடத்திலும் சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்று இருக்காது.//

    ‘அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன்’
    -குர்ஆன் 55:17

    ‘கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்’
    -குர்ஆன் 70:40

    ஒரு பொருள் உருண்டையாக இருந்து சுழலும் போதுதான் இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளும் உருவாக சாத்தியம் உள்ளது.

    ‘அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.’
    -குர்ஆன் 67:15

    பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று ‘பல பகுதிகளிலும்’ மனிதர்கள் செல்ல முடியும்.

    ‘சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.’
    -குர்ஆன் 36:38

    ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல… அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

    தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

    இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

    suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html

    நாம் வாழும் பூமி கோள வடிவமாகவே உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.

    1. Avatar
      தங்கமணி says:

      மதவெறி மனிதர்களை எவ்வளவு படு பயங்கர மடையர்களாக ஆக்கிவிடுகிறது என்பது ஆச்சரியமானது!

  31. Avatar
    ஷாலி says:

    // …குரான் என்ன சொல்லுகிறது, அது எப்படி மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது, ஏன் குர்து இன முஸ்லீம் சிறுவன் கூட யாஜிதி (காபிரை) கொல்லுவதை ஆதரிக்கிறான் என்று யோசியுங்கள், பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.//

    ஆண்டவனுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகரோ புரோகித புரோக்கரரோ எம்மதத்திற்க்கும் தேவையில்லை. ஆனால் இந்த புரோகித புரோக்கர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்த இறைவனுக்கு இடைத்தரகர்களாக மாறி மக்களைச் சுரண்டுகின்றனர்.இப்புரோக்கர்கள் கூறுவதே மதம் என்று அப்பாவி பாமரர்கள் நம்புகின்றனர்.

    முஸ்லிம் மூட முல்லா புரோகித புரோக்கரின் வலையில் விழுந்த முனைவர் சலீமும்,அஜீசும் சமாதி வழி பாட்டை சரி காண்பதுபோல், குர்து இன புரோக்கர் முல்லாவின் துர்ப்போதனையால் சிறுவன் கூட அப்பாவி மக்கள் கொள்வதை ஆதரிக்கலாம். குர் ஆன் இப்படுபாதகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

    2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.

  32. Avatar
    தங்கமணி says:

    //ஆண்டவனுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகரோ புரோகித புரோக்கரரோ எம்மதத்திற்க்கும் தேவையில்லை.//
    அப்புறம் என்னத்துக்கு இறைதூதர்?

    நீங்கள் சொன்னது யூதர்களுக்கு முகம்மது அல்லா சொல்வதாக சொல்வது. முஸ்லீம்களுக்கு சொல்வதல்ல.

    இதுதான் முகம்மது முஸ்லீம்களுக்கு சொல்வது.
    //5. எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் (காபிர்களை) கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு,(அதாவது முஸ்லீமாக ஆனால்) தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்!//

    வேற யாராவது இளிச்சவாய் கிடைப்பார்கள். அங்கே போய் சொல்லுங்கள்

  33. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஜெனாப் சுவனப்ரியன்

    \\ ‘ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்’
    -ரிக்வேதம் 1:164:46 இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. \\

    பலே பலே. நல்ல காபி பேஸ்ட் முயற்சி.

    ஏக இறைவனைப் பற்றி வேதங்களிலும் தமிழ் நூற்களிலும் இல்லை என்று யார் சொன்னார்கள். நான் சொல்லவில்லையே.

    நான் சொல்ல வந்ததெல்லாம் சங்க நூற்கள் தமிழர் தம் வாழ்விடங்களை ஐவகை நிலங்களாகப் பிரித்து அந்த ஐவகை நிலங்களில் ஐந்து கடவுட்களை வழிபட்டதைப் பகிர்ந்தது.

    ஏக இறைவனைப் பற்றித் தெரிந்த ஜெனாப் சுவனப்ரியன் ஐவகை நிலங்களையும் அங்கு வழிபடப்பட்ட ஐந்து கடவுட்களைப் பற்றியும் கூட அறிந்திருக்க வேண்டுமே.

    உங்கள் குரான் பற்றி என்ன வேண்டுமானாலும் அல் தக்கியா செய்து பொய்யுரைகளை புனையுங்கள்.

    தமிழ்ச் சங்க நூற்களில் மிகத் தெளிவாக தமிழர்கள் ஐவகை நிலங்களில் ஐந்து கடவுட்களை வழிபட்டிருக்கிறார்கள் என்ற செய்தி இருக்கும் போது உங்கள் அராபிய வஹாபிய இஸ்லாமிய மதவெறியின் பாற்பட்டு ………..தமிழ்ச் சங்க நூற்களில் பகிரப்பட்ட விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும் போதே………… அதை எப்படி கூசாமல் மறைத்து …….பொய்கள் சொல்ல முடிகிறது உங்களால். ஐவகை நிலங்களும் அங்கு வழிபட்ட ஐந்து கடவுட்களும் என்ன அராபிய நாகரீகத்தைச் சார்ந்தது என்று அரபி மொழியிலா எழுதப்பட்டுள்ளது. தமிழில் தானே எழுதப்பட்டுள்ளது?

    தமிழர் தம் வாழ்வியலின் முக்யமான கூறு பன்மை. ஆப்ரஹாமியத்தின் அரக்கக்கோட்பாடு (இறைக்கோட்பாடு) போதிக்கும் அசிங்கம் மிரட்டும் ஒருமை. அதை நெகிழ்த்தும் தன்மையதானதே தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள். மாற்று மதத்தவருடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கமாக வாழ விழையும் ஒரு கோட்பாடு தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள்.

    பல கோட்பாடுகளை உடைய மக்கள் தங்கள் தங்கள் வழியில் வாழ்க்கையை நடத்தி வருவதை………. அராபிய பிற்போக்கு பயங்கரவாத வஹாபியத்தாலேயோ பரங்கியருக்கு அடிமை ஊழியம் செய்ய வாக்குதத்தம் செய்துள்ள க்றைஸ்தவத்தலேயோ எப்படி பொறுக்க முடியும்?

  34. Avatar
    ஷாலி says:

    //ஆண்டவனுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகரோ புரோகித புரோக்கரரோ எம்மதத்திற்க்கும் தேவையில்லை.//
    அப்புறம் என்னத்துக்கு இறைதூதர்?-தங்கமணி.

    நல்ல கேள்வி! இறைவனுடைய கட்டளைகளை தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கே அம்மக்களிலிருந்து ஓரு தூதர் இறைவனால் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.இவருடைய பணி,இறைச் செய்தியை மக்களிடம் சொல்வது.அதன்படி முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவது.இறைத்தூதர் இடைத் தரகரல்ல. இடைத்தரகர்கள் மக்களிடம் கூலியை எதிர்பார்ப்பார்கள். இறைதூதர்கள் தங்கள் கூலியை இறைவனிடம் மட்டுமே பெற்றுக்கொள்வார்கள்.

    “அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்;எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.இதனை நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளை) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.”-அல் குர்ஆன்.5:92.

    “இறைக்கட்டளைகளை எடுத்துக்கூறுவது அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை.”-5:99.

    இறைச் செய்தியை கொண்டு வந்த தூதர் மரணத்திற்குப்பின் அவரிடம் மன்றாடுவதோ,அல்லது பரிந்துரை சிபாரிசு வேண்டுவதோ கடும் குற்றம்.இந்நிலையில் அட்ரஸ் இல்லாத மரணித்த தர்கா மண்ணறைவாசிகளிடம் இறைவனிடம் எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று வேண்டுவது மூடத்தனம் அல்லவா?இந்த மூடத்தனத்தை செய்யும் முஸ்லிம்கள் மத நல்லிணக்கவாதிகளாக க்ருஷ்ணகுமார் போன்றவர்களால் போற்றப்படுவார்கள்.

  35. Avatar
    தங்கமணி says:

    ஷாலி, சுபி,

    காபிர்களான எங்களிடம் குரானில் அறிவியல் புவியியல் இருக்கிறது என்று அள்ளுவதற்கு முன்னால், சவுதி அரேபிய ஒரிஜினல் முஸ்லீம்களிடம் சென்று, உலகம் சூரியனை சுற்றுவது என்று சொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று சொல்லும் அல் பஜ்வான் போன்றவர்களிடம் சென்று , உங்களது ஜிகர்தண்டா கட் அண்ட் பேஸ்ட் வேலைகளை காண்பித்து அவர்களை கன்வின்ஸ் செய்யுங்கள்.

    எதற்கும் உங்கள் தலை பத்திரம்.

    “Saudi Arabia’s senior cleric Saleh Al-Fawzan says it’s unIslamic to believe the Earth revolves around the Sun”

    tarekfatah.com/saudi-arabias-senior-cleric-saleh-al-fawzan-says-its-unislamic-to-believe-the-earth-revolves-around-the-sun/

    இவ்வளவு கஷ்டப்படுவதற்கு, உங்கள் ஒரிஜினல் இஸ்லாமிய அறிவியல் பூமி மக்களிடம் தலையை காப்பாற்றிகொள்ள, பேசாமல், சூரியனை பூமி சுற்றுவதும் ”நிரூபிக்கப்படாத அறிவியல்“ என்று சொல்லிவிட்டால், கணபதி ராமன் போன்றவர்கள் எல்லோரும் கூட உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

    (இப்போதைக்கு கணபதிராமன் போன்ற ஏமாளிகள், உண்மையிலேயே குரானில் நீங்கள் விடும் பீலா அறிவியல் இருக்கிறது என்று நம்பி இஸ்லாத்தில் இணைந்து கொண்டே சென்று, காஷ்மீர் போல தமிழகத்திலும் முஸ்லீம் மெஜாரிட்டி வந்ததும் அதற்கப்புறம் சூரியனை பூமி சுற்றுகிறது என்று நம்புவது ஹராம் என்று சொல்லி தலையை எடுக்க கிளம்பினால், கணபதிராமன் போன்றவர்கள் வாயை மூடிகொண்டு ஆமாஞ்சாமிபோடுவார்கள். )

  36. Avatar
    தங்கமணி says:

    //இறைவனுடைய கட்டளைகளை தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கே அம்மக்களிலிருந்து ஓரு தூதர் இறைவனால் தேர்ந்தேடுக்கப்படுகிறார்./

    ஏன் நேரடியாக இறைவனாலேயே தெளிவாக எடுத்து சொல்ல முடியாதா?

    //இவருடைய பணி,இறைச் செய்தியை மக்களிடம் சொல்வது.அதன்படி முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவது.இறைத்தூதர் //

    எதற்கு? இது மாதிரி வாழுங்கள் என்று நேரடியாக இறைவனே சொல்லலாமே? எதற்கு நடுவில் ஒரு இறைதூதர்? இதில் என்ன வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது? முகம்மது வாழ்ந்து காட்டியதெல்லாம் காபிர்களுக்கு படு கேவலமாக அல்லவா இருக்கிறது?
    இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதையும் சிந்தித்தால் புரியும். ஒருவர் தன்னைத்தானே இறைதூதர் என்று சொல்லிகொள்கிறார். இறைவன் சொன்னதாக எழுதிவைக்கிறார். நான் வாழ்ந்து காட்டியதெல்லாம் இறைவன் கூறியவழி என்கிறார்.
    எப்படி அதனை நிரூபிப்பீர்கள்?

    யாராவது அதற்கு மாறாக இருக்கிறதே என்று காட்டினால், அதற்கு மாறாக வாழ்ந்து காட்டியதெல்லாம், போலி ஹதீஸ் என்று பின்னால் வந்த பிஜே மாதிரி ஆட்கள் அந்த நபிவழி ஆவணங்களை மறுத்துவிடுவார்கள்.
    எப்பூடி?

    //சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா? // என்பதுதான்.
    அது சுன்னா இல்லை என்று சொல்லுங்கள். அது நபிவழிதான் என்று காட்டுகிறேன்.//
    இதற்கு சுபியும் ஷாலியும் பதில் சொல்லவில்லை என்பதையும் கூறிகொள்கிறேன்.

  37. Avatar
    ஷாலி says:

    ////காபிர்களான எங்களிடம் குரானில் அறிவியல் புவியியல் இருக்கிறது என்று அள்ளுவதற்கு முன்னால், சவுதி அரேபிய ஒரிஜினல் முஸ்லீம்களிடம் சென்று, உலகம் சூரியனை சுற்றுவது என்று சொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று சொல்லும் அல் பஜ்வான் போன்றவர்களிடம் சென்று…..///-தங்கமணி.

    உலக மக்களுக்கு ஒரு அருட்கொடையாக இறக்கப்பட்ட அல் குர்ஆனை விளங்க முடியாத விலங்குத் தன்மை மூடர்கள் ////காபிர்களான// போன்றவர்களிடமும் மட்டுமல்ல அல் பஜ்வான் போன்ற மூட முஸ்லிம்களிடமும் உள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.அறியாமை தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. அது உலகத்திற்கே சொந்தம். இதில் அல் பஜ்வான்,சலீம்,அஜீஸ் போன்ற முஸ்லிம்களும் அடக்கம்.

    “ அந்த காபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு(ஆடு,மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும்,கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாத ( கால்நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும்,ஊமையர்களாகவும்,குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எந்த நற்போதனையையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.” –அல் குர்ஆன்.2:171.

  38. Avatar
    அம்மணி says:

    சூப்பர்.
    மிகவும் அழகான வார்த்தைகளில் முகம்மது காபிர்களை திட்டுகிறார். ஆடுமாடு, செவிடன், குருடன், ஊமை ..

    பாவம் கண்பதிராமன், இப்படியெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு.
    அது சரி, எதுக்கு காபிர்களிடம் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறீர்கள். இவர்கள்தான் ஆடுமாடு, ஊமை, குருடு, செவிடாச்சே.
    உங்கள் சவுதி அரேபிய தூய இஸ்லாமியர்களிடம் போய் அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். பாதிதூரம் வந்துவிட்டார்கள். அல்லாவுக்கும், selfstyle தூதருக்கும் அடிபணிகிறார்கள். மீதம், உலகம் சூரியனை சுத்துதுன்னு ஒத்துக்கணும் அவ்வளவுதான். பாவம், அரபியை தாய்மொழியாக கொண்டவருக்குக்கூட தெரியாததை அரபியை அரைகுறையா கத்துகிட்டு ஒரிஜினல் அரபியில் என்ன எழுதியிருக்குன்னு அவருக்கு நீங்கள் விளக்க வேண்டியிருக்கிறது.

    அரபி மொழி பாவமா, அல்லது அரபியர்கள் பாவமா அல்லது அல்லாவே பாவமான்னு தெரியலை.
    அது என்னமோ, முகம்மது ரொம்ப தெளிவான குரானை எழுதிருக்கிறதா சொல்லியிருக்காரே. அங்கே இருக்கிற அரபி தாய்மொழியாக கொண்டவர்களுக்கே புரியலையா?

    இங்க சவடால் உடுறது இருக்கட்டும். அந்த ஊர்ல போய், அங்க இருக்கிற இமாம்களுக்கு குரானே புரியலைன்னு சொல்லிடாதீங்க. இந்தியாவில காபிர்கள் இருக்கிற மாதிரி, உங்களை பேச வைச்சிகிட்டு இருக்க மாட்டாங்க. ஒரே சீவுதான். apostacy ன்னு தலையை எடுத்துருவாங்க. இங்க இருக்கிற பாகிஸ்தான்ல கூட ஆஸியா பீவின்னு ஒரு கிறிஸ்துவ பொண்ணு முகம்மதை நபியா ஒத்துகலைன்னு மரண தண்டனை கொடுக்கிறாங்களாம். (அப்புறம் ஏன் அவங்க கிறிஸ்துவரா இருக்கணும்? கிறிஸ்துவர்கள் அடிப்படையிலேயே முகம்மதை நபியா ஒத்துக்கலைன்னு தானே அர்த்தமுன்னு கேக்காதீங்க. அது இஸ்லாமிய அறிவியலில் புரிஞ்சிக்கணும்)

    1. Avatar
      ஷாலி says:

      //சூப்பர்! மிகவும் அழகான வார்த்தைகளில் முகம்மது காபிர்களை திட்டுகிறார். ஆடுமாடு, செவிடன், குருடன், ஊமை ..//

      இந்த சித்தர் பாடல்களைப் படித்தால் இன்னும் சூப்பராக இருக்கும்! உங்க சித்தரும் இதைத்தான் சொல்கிறார்.வாய் பேசா ஊமை,மிருகம்….

      ஆமாப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
      அவர்வர் கண்டதை யெல்லாம் சரிதை என்பார்
      ஓமப்பா கல் செம்பைத் தெய்வமேன்றே
      உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
      வாமப்பா யோகமென்று கனி காய் தின்று
      வாய் பேசா ஊமையைப்போல் திருகுவார்கள்
      காமப்பா ஞானமென விண்டு மேலும்
      காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே!

      -வால்மீக சித்தர்-சூத்திர ஞானம்-16

      “ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
      வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
      பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
      ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

      “ பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
      எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
      பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
      ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே”

      “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
      தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
      ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
      பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

      -சிவவாக்கிய சித்தர்.

  39. Avatar
    suvanappiriyan says:

    மதரஸாக்களில் தீவிரவாதம் எனக்கூவியவர்களே!

    அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் இருந்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு காலையில் இருந்து இரு தரப்பாருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது!

    இதுவே ஒரு மதரஸாவில் நடந்து இருந்தால் இந்நேரம் இந்த ஊடகங்கள் எப்படி சொல்லி இருக்கும்? ‘மதரஸா உள்ளே இருந்து தீவிரவாதிகள் வெடிகுண்டு வீச்சு’ ஆனால் இப்போது குண்டு வீசுபவர்கள் சாமியாரின் ஆதரவாளர்களாம்!

    இந்த லட்சணத்தில் மதரஸாக்களை கண்காணிக்க வேண்டும் என சங்பரிவார் குரல் எழுப்புகின்றனர்!

    கண்காணிக்க வேண்டியது பஞ்சத்தில் வாடும் மதரஸா மாணவர்களை அல்ல! மஞ்சத்தில் ஆடும் சாமியார்களை! துறவிகள் எனும் பெயரில் கோடிகோடியாய் சொத்து சேர்த்து வைத்து இருக்கும் ஆசிரமங்களை ! கொலைக்கும் அஞ்சாத மடங்களை! குண்டுவீசி துணைராணுவப் படையை எதிர்க்கின்ற தீவிரவாத ஆதரவாளர்களை !

    செய்யுமா மத்திய காவி அரசு?

    பாபா ராம் தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் கேடு கெட்ட அரசு எப்படி செய்யும்?

    1. Avatar
      paandiyan says:

      //கண்காணிக்க வேண்டியது பஞ்சத்தில் வாடும் மதரஸா மாணவர்களை அல்ல!//
      ooh ok. then why they are keep inside guns????? all are terrorist.. no doubt

    2. Avatar
      nallavan says:

      //இந்த லட்சணத்தில் மதரஸாக்களை கண்காணிக்க வேண்டும் என சங்பரிவார் குரல் எழுப்புகின்றனர்! //

      there are lot of differences between criminals and terrorist. criminal you could see anywhere including so many in Muslim community but Terrorist??????

  40. Avatar
    Rama says:

    Thinnai suffers from schizophrenia. Reluctant to publish my comments that are in English but is happy to publish other English comments. Editorial team needs to see a shrink asap.

Leave a Reply to தங்கமணி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *