சிலர்

This entry is part 21 of 53 in the series 6 நவம்பர் 2011

சிறிய நைலான் கயிறு போதும்
வாழ்விலிருந்து விடுபட
யாரோ வாங்கிக் கொடுத்த
சேலையிலா விதி முடிய வேண்டும்
வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது
தப்பிப்போவது விடுதலையாகாது
குரல்வளை நெரியும் போது
நினைத்துப் பார்த்தாயல்லவா
வாழ்ந்திருக்கலாமே என்று
மனிதர்கள் மீது நம்பிக்கை
வைத்திருக்கவே வேண்டாம்
உன்னைப் போன்றவர்களுக்காகத்தானே
கடவுள் இருக்கிறார்
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை
சமமாய் பாவிக்க
கற்றுத்தரவில்லையா உனக்கு
வரவிருக்கும் வசந்தகாலத்தை நினைத்து
இலையுதிர்க்கும் மரத்திடம்
கற்றிருக்கலாமே வாழ்க்கைப் பாடத்தை
தற்கொலையின் மூலம்
எந்த மர்மத்தின் முடிச்சை
அவிழ்க்க நினைத்தாய்
இறைவன் வாய்ப்புகள் அளித்தான்
நீ கண் மூடி இருந்தாய்
பரிசாக கிடைத்த வாழ்வை
துச்சமாக மதித்து
தூர எறிந்தாய்
கடைசியாக கடவுள் உன் மீது
வைத்த நம்பிக்கையையும்
நாசமாக்கி மோசம் போனாய்.

Series Navigationஎன் பாட்டிமீண்டும் முத்தத்திலிருந்து
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *